அமுதாவின் எங்கும் பதிவுசெய்யப்படாத எண்ணங்கள்
The medicine acts to reduce the number of adult nematodes, but does not kill them. I was taking a drug for my breast cancer Penn Hills called tamoxifen for 10 months. Order prednisone (0.5 mg to 4 mg per dose), which will be given in addition to the other treatment prescribed.
Gabapentin is an anticonvulsant drug which is taken for reducing the intensity or duration of seizures. It can take a few weeks to https://okangatrumpeters.com/protests-rock-ondo-over-evacuation-of-fulani-herdsmen/ a few months for dapoxetine tablets in india to show up in the urine, depending on a patient's body chemistry. If you do, and it shows that it is pregnant, the chances of having a healthy baby are about 50/50.
Some of the side effects of this medicine can be severe and may require medical attention. S32 ixgbevf_stm_channel_enable(struct ixgbe_adapter *adapter, lackadaisically u32 channel) This is the best alternative to conventional medicine.
செல்வி நல்லா படிக்குற பொண்ணுதேன். நல்ல பொண்ணு. அவ இப்படி பண்ணுவான்னு நான் நெனக்கலை. நான் என்ன, இங்கிட்டு ஆருமே நெனச்சுருக்க மாட்டாய்ங்க. ஸ்கூலுலேயே அவதான் பஷ்ட் மார்க் வாங்குவா. எங்க நைனா கூட, அவளும் படிக்கா நீயும் படிக்க ஆனா அவ எப்படி நல்லா படிக்கா பாத்தியான்னு கேட்டு வைவாரு. அவரு வைதாப்பில எனக்கு கொஞ்சம் வருத்தமாத்தான் இருக்கும். ஆனா செல்வியை பாத்தா வருத்தமெல்லாம் போயிரும். அவ எப்பவும் சிரிச்சு கிட்டே இருப்பா. தீபாவளி மத்தாப்பு போல சிரிச்சு கிட்டே இருப்பா. அதோட அவ கூட இருந்தாலே என்ன கவலைன்னாலும் எனக்கும் சிரிப்பு வந்துரும். ஆனா இனி அவள நெனக்கும் போதெல்லாம் அழுவைதான் வருற மாதிரி செஞ்சிட்டு போயிட்டா. அவளுக்கு காதல் இருந்துச்சான்னு அன்னைக்கு ஏதோ டிவிலயோ ஜூனியர் திலகமோ ஏதோ ஒரு பத்திரிகைல இருந்தோ வந்து கேட்டான். எனக்கு அவனை அப்படியே உதைக்கணும் போல இருந்துச்சி. அடக்கி கிட்டு அவ அப்படி பட்ட பிள்ளை இல்லைன்னேன்.
ஆனா ஒண்ணு இருக்கு. அவள நான் கடைசியா பாத்தப்ப அவ முகம் இருந்தது என் மனச விட்டு நீங்கவே நீங்காது. செல்வி ஏன் தூக்கில தொங்கினா… எல்லாம் அந்த ஒரு பொம்பளை வந்ததுலருந்துதான் ஆரம்பமாச்சு.
அன்னைக்கு ஸ்கூலுக்கு அந்த பொம்பள வந்திச்சு. பொம்பளன்னு சொல்ல முடியாது. பாக்க காலேஜ் படிக்கிற அக்கா மாதிரிதான் இருந்துச்சி. நல்லா சேப்பா இருந்துச்சி. சுடிதார் போட்டுகிட்டு அழகா ஸ்டைலா முடி வெட்டி பாக்கவே சினிமா ஷ்டார் மாதிரிதான் இருந்திச்சி. எங்க ஸ்கூல் முதல்வர் அம்மாகிட்ட ரூம்ல உக்காந்து ரொம்ப நேரம் பேசிட்டு இருந்திச்சி. எங்க முதல்வர் அம்மா ரொம்ப சிடுமூஞ்சி. எங்க வூட்ல இருந்தெல்லாம் எங்கம்மால்லாம் எதுக்கினாச்சிம் வந்தா உக்காரெல்லாம் சொல்ல மாட்டாங்க. கத்து கத்துன்னு கத்துவாங்க, ஆனா இந்த பொம்பளை கிட்ட நல்லா பேசினாங்க. பியூன் மாணிக்கம் அண்ணங்கிட்ட சொல்லி டீ பிஸ்கட்டெல்லாம்கூட கொண்டாந்து கொடுக்க சொன்னாங்க. அப்புறந்தேன் செல்வியை கூப்பிட்டார சொன்னாங்க.
அந்த பொம்பிளை செல்வி கிட்ட நல்லா பேசிகிட்டிருந்திச்சு. நாங்கெல்லாம் ஜென்னல் வழியா பாத்துட்டிருந்தோம். அப்றம் அந்த பொம்பிளையோட பேரை நான் செல்வி கிட்ட கேட்டேன். ரொம்ப வித்தியாசமான பேரா இருந்துச்சி. ரீனா மணிமேகலையோ குண்டல்கேசியோ தமிழ்ல படிப்போமே அந்த மாதிரி ஒரு பேர்ல.. அப்படீன்னு ஏதோ ஒண்ணு. நம்ம சமுதாயத்தில ரொம்ப புத்திசாலியான பொண்ணு வேணும்னு அவுங்க தேடுறாங்களாம். அவுங்க அமெரிக்காவில உள்ள சமூக சேவை ஒண்ணு கிட்ட சொல்லி இப்படி எங்கள மாதிரி தாழ்ந்த மக்களுக்க நல்லா படிக்கிறவங்களுக்கு அமெரிக்காவுக்கே போய் படிக்க உதவுவாங்களாம். செல்விய கூட்டிகிட்டு போறதுக்கு முன்னாடி அவளப் பத்தியும் அவ குடும்பத்த பத்தியும் நல்லா தெரிஞ்சிக்க போறாங்களாம். இத கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சி. கூடவே கொஞ்ச பொறாமையா கூட இருந்துச்சி. நான் பொறாம பட்டதாலதான் இப்படி ஆயிருச்சோ தெரியலை. ஆனா நான் பொறாம பட்டதுல என்ன அர்த்தம் இருக்கு? எங்க ஸ்கூலேயே இங்கிலீஸு புக்கெல்லாம் படிக்கிற அளவுக்கு மூளை அவகிட்ட மட்டும்தானே இருந்துச்சி.
அப்புறம் அடிக்கடி அந்தம்மா– இல்லை அக்கான்னு சொல்லணுமா தெரியலை- செல்வி வூட்டுக்கு போவும். அவ கிட்ட பேசும். கூடவே ஒரு அண்ணன்- நிக்கர் போட்டுகிட்டு பனியன் போட்டுகிட்டு- அவுங்க கூடவே போகும். அந்த அண்ணன் கைல ஒரு காமிரா வைச்சுகிட்டு எல்லாத்தையும் போட்டோ பிடிச்சுகிட்டே இருக்கும். அது போட்டோ இல்லை வீடியோன்னு செல்வி சொல்லிச்சு. செல்வி சடங்கான மஞ்சத்தண்ணி விழா வீடியோல்லாம் கூட அந்தம்மா வாங்கிட்டு போச்சி, செல்வியோட அம்மாண்டை ரொம்ப நேரம் பேசிச்சி. செல்விக்கு சின்னவயசில ஜூரம் வந்திருச்சி அவ இப்படி செஞ்சிக்கிறதுக்கு முன்னாடி யாரோ ஒரு அம்மா இங்க வந்திச்சி. போலீஸ்காட அம்மா. அந்தம்மா எங்க சமுதாயம்தானாம். படிச்சி ஐ.பி.எஸ் ஆயிட்டாங்களாம். அவிங்க கிட்ட எல்லா போலீஸ்காரங்களும் சல்யூட் அடிக்கிறத பாத்தப்ப சந்தோசமா இருந்துச்சி. அந்தம்மா ஸ்கூலுக்கெல்லாம் வரலை. நேரா செல்வி வீட்டுக்கு வந்துச்சி. ஜீப்பை எங்காளுங்க காலனிக்கு வெளியையே நிறுத்திட்டு அவுங்க மட்டும் வந்தாய்ங்க. வந்து செல்வி வீட்டுக்குள்ளயே போயி அவகிட்ட என்னவோ பேசிகிட்டு அவ கிட்ட ஒரு புக்கை கொடுத்தாங்க. அந்த அட்டையை மட்டும் நான் பாத்தேன். அதில செல்வி படம் இருந்திச்சு. அந்த அக்காதான் எழுதியிருந்தாங்களாம். இங்கிலீசு. செல்விக்குதான் புரியும். ஆனா செல்வி முகம் அந்த புக் அட்டைல ரொம்ப அழுவாச்சியாத்தான் இருந்திச்சு. அப்படி நிக்க சொல்லி அந்த போட்டோவ அந்த அக்கா அந்த அண்ணனை வைச்சி எடுத்தது எனக்கு நியாபவத்துல இருக்கு. செல்வி கூட அதை என்கிட்ட சொல்லிச்சி. ”சிரிக்காம நில்லு அழுவுற மாதிரி மூஞ்சி வைச்சிக்க. ரொம்ப வருத்தமா எதையாவது நெனச்சிக்க” அப்படீன்னு அந்த அக்கா சொல்லுது அமுதா. ஆனா அந்தக்கா சொல்லக்க சொல்லக்க எனக்கு சிரிப்பாணியா வருது”
அந்த போட்டோதான் அந்த புக் அட்டைல இருந்திச்சி. அத எடுத்திட்டு செல்வி வூட்டுக்குள்ள போனா. அப்பத்தான் அவ முகம் ரொம்ப இருண்டு இருந்திச்சு. அதுதான் நான் கடேசியா பாத்தது. அந்த புக்கிலதான் இவ தற்கொலை பண்ணிகிட்டதுக்கு காரணம் இருக்கி. ஆனா அதை நான் ஆருகிட்ட சொல்லமுடியும். எனக்கு இங்கிலீசு தெரியாது. அதனால நான் அப்படி சொன்னா எல்லாரும் சிரிப்பாய்ங்க. நான் ஆருகிட்ட என்ன சொல்லுவேன்?
-0-
பெண்ணிய ஆவண ஆராய்ச்சியாளர் ரீனா சிந்தாமணி எழுதியதும் புக்கர் பரிசு பெற்றதுமான ”வெல்லம் அம்மன் ஒரு பாலியல் சடங்கின் ஆவணம்” (Mappletown University Press, 2010) எனும் ஆங்கில நூலிலிருந்து. :
‘வெல்லம் அம்மன்’ என்கிற இந்த இந்துப் பெண் தெய்வம், எப்படி பொதுவாக இந்துக்களில் பெண்தெய்வம் கூட தலித் பெண்களை ஆண் சமுதாயம் சுரண்ட வழி வகுத்துக் கொடுக்கிறது என்பதை நன்றாகக் காட்டுகிறது. இந்தத் தலித் சமுதாயத்தில் சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக ஒரு பெண் குழந்தை, வெல்லம் அம்மனுக்கு நேர்ந்து விடப்படும் பழக்கம் உள்ளது. இப்படி நேர்ந்துவிடப்படும் பெண்களுக்கு ‘வெல்லம்மா’ எனப் பெயர் மாற்றப்படும். இப்பெண்கள் சமுதாயத்தின் பொதுச் சொத்தாக கருதப்படுவர். இந்த முறை புழக்கத்தில் இருப்பதைக் குறித்து மதுரை பகுதிகளில் இந்த தலித் சமுதாயத்தில் மத ஊழியம் செய்த சாமுவேல் சோரெட் குறிப்பிட்டுள்ளார். இதனைக் குறித்து விரிவாக இதுவரை எவரும் ஆராய்ச்சியோ ஆவணமோ செய்யவில்லை. இத்தகைய முறை எதுவும் இல்லை என்றும் அது காலனிய மதப் பிரசாரகர்களின் தவறான பிரசாரம் என்றும் இந்தத் தலித் சமுதாய அமைப்புகளின் ஆண் தலைவர்கள் கூறுகிறார்கள். இந்து சமுதாய அமைப்பில் பெண்களுக்குத்தான் எவ்வித தனித்துவக் குரலும் இல்லை என்பதால் ஆண்கள் கூறியதைப் போலவே பெண்களும் சொல்கிறார்கள். இத்தகைய வெல்லம் அம்மன் ஆக்கப்படும் பெண்கள் ஆண்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதாலும் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாலும் இந்தச் சமுதாய மக்கள் தங்களைக் குறித்துக் கூறும் கருத்துகளை ஓர் ஆராய்ச்சியாளர் அப்படியே உண்மையென்று எடுத்துக்கொள்ள முடியாது. எனவே நான் இந்தச் சமுதாயத்தில் வெல்லம் அம்மனாக்கப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது என முடிவு செய்தேன்….
செல்வி எனும் பெயரில் வெல்லம் அம்மன் பெண் ஒருத்தி மேல்நிலைப்பள்ளியில் படிப்பதை மிகவும் சிரமப்பட்டுக் கண்டுபிடித்தேன். அவளிடம் நட்பை வளர்த்துக் கொண்டேன். அந்தப் பெண் தன்னை கோயிலில் ஆடையின்றி விடப்பட்டது குறித்தும் பூசாரி தனக்கு தாலி கட்டியது குறித்தும் என்னிடம் கூறும்போது அழுதுவிட்டார். அந்தப் பெண்ணைச் சுற்றி கவலை ஒரு சிறு கருமேகம் போல் வட்டமிட்டுக் கொண்டிருப்பதை மற்றொரு பெண்ணால்தான் உணரமுடியும். அதிலிருந்து தப்பவே, தான் அதிக உற்சாகமாக இருப்பது போல அவள் காண்பித்துக் கொண்டாள். அவளது தாயாரிடம் (மாதங்கி வயது 48) நான் பேசிய போது அவர் இப்போதெல்லாம் கோயிலில் விட்ட பெண்களையும் படிக்க வைக்க வேண்டும் என்றும் என்ன படித்தாலும் மீண்டும் கோயிலில் விட்டுவிடுவோம் என்றும் அது அந்த தலித் சாதி (மேல்சாதியினருக்கும், தெய்வத்துக்கும், தன் சாதி ஆண்களுக்கும்) காட்டும் நன்றி என்றும் கூறினார். இது குறித்து காணப்பட்ட பேட்டியின் முக்கியமான பகுதிகள் பின் சேர்க்கையில் அளிக்கப்பட்டுள்ளன. (பக். 78-79)
பரமேசுவரி ஐபிஎஸ் சமர்ப்பித்த அறிக்கையிலிருந்து:
[செல்வி தற்கொலை தொடர்பாக பரமேசுவரி ஐபிஎஸ் காவல்துறை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். தனது இடமாற்றத்துக்குப் பின்னர் ’புதிய தாவாங்கி’ எனும் தலித் பத்திரிகையில் இது வெளியானது. பின்னர் இந்தக் குறிப்பிட்ட தலித் சமுதாய அமைப்பான விடுதலை முன்னணியின் தலைவர் கருணாளன் இந்த முழு அறிக்கையை ஒரு சிறு பிரசுரமாக வெளியிட்டார். அந்த அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டவை:]
இந்த நூலில் வந்திருக்கும் பல தரவுகள் திரிக்கப்பட்டவை. ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் பண்பாட்டு அம்சத்தை கீழ்மையாகச் சித்தரித்து, தன்னை சர்வதேச அரங்கில் ஒரு சமூகப்போராளியாக முன்னிறுத்தி, புகழும் இன்னபிற ஆதாயங்களும் பெறவேண்டும் என்னும் ஒரே எண்ணத்துடன் உருவாக்கப்பட்டவை. இதற்குச் சிறந்த உதாரணமாக கீழ் கண்ட பேட்டியைச் சொல்லலாம். இந்த பேட்டி செல்வியின் அம்மாவிடம் எடுக்கப்பட்டது. இதன் மூலவடிவம் இந்த நூலின் முதல் வடிவை மொழிச் சீர்மை (language editing) செய்ய கொடுத்த நிறுவனத்தாரிடம் (Your First Draft to Best seller- Editors Pvt. Inc. Chennai) இருந்து கிடைத்த ஆவணங்களிலிருந்து பெறப்பட்டது.
“என் பொண்ணுக்கு ஏழு வயசு இருக்கும் போது மாறாத இருமல் வந்திருச்சு. அதுக்கு முன்னாடி இரண்டு பொண்ணுங்க தங்கலைங்க. அப்ப எங்க குல வழக்கப்படி இந்த பொண்ணாவது தங்கணும்னு வெல்லம் அம்மன் கிட்ட எடுத்துகிட்டு போய் பூசாரிகிட்ட கொடுத்து தாயத்து கட்டி, உடுத்திருந்த பாவாடையை அவுத்துட்டு, வேப்பிலை பாவாடை கட்டி ஒரு வாரம் கோயிலிலேயே விட்டுட்டோங்க. ஒவ்வொரு நாளும் கோயிலுக்கு போயி அங்கனயே படுத்து அவளுக்கு ஒவ்வொருநாளும் மஞ்ச தண்ணி ஊத்தி வேப்பிலை பாவாடை புதுசா கட்டி கற்பூரம் புகை காட்டி வைச்சிருந்தேனுங்க. அப்புறம்தான் அவ நல்லானா. இன்னைக்கும் அவளுக்கு மூளை அதிகம்னு எல்லாரும் சொல்லுதாங்க. அவ டீச்சர் கூட ‘செல்வி வளந்து படிச்சி டாக்டராவணும் கலக்டராவோணும்’ அப்படீன்னு சொல்லுறாங்களாம். இங்கிலீசு புக்கெல்லாம் கூட அது படிக்குதுங்க. எல்லாம் தேவி கொடுத்த வரங்க. அவ நல்லா வந்தா, படிச்சு டாக்டர் கலெக்டர் ஆனா என்னங்க,. என்ன ஆனாலும் திரும்ப அவ சன்னிதிக்கு போய் பொங்கல் எடுப்பமுங்க. நன்றி மறக்ககூடாதில்லீங்களா… நம்ம சாதிலயே நன்றி மறக்கிறது கொஞ்சம் கூட கிடையாதுங்க.”
ஆனால் இந்தப் பேட்டி நூலில் இப்படித் திரிக்கப்பட்டுள்ளது:
“என் பொண்ணுக்கு ஏழு வயசு இருக்கும் போது… எங்க குல வழக்கப்படி… வெல்லம் அம்மன் கிட்ட எடுத்துகிட்டு போய் பூசாரிகிட்ட கொடுத்து தாலி கட்டி, உடுத்திருந்த பாவாடையை அவுத்துட்டு… ஒரு வாரம் கோயிலிலேயே விட்டுட்டோங்க… இன்னைக்கும் அவளுக்கு வளர்ச்சி அதிகம்னு எல்லாரும் சொல்லுதாங்க… அவ நல்லா… படிச்சு என்ன… என்ன ஆனாலும் திரும்ப அவ சன்னிதிக்கு போய் விடணுங்க… நன்றி மறக்ககூடாதில்லீங்களா… நம்ம சாதிலயே நன்றி மறக்கிறது கொஞ்சம் கூட கிடையாதுங்க.”
இதில் தடிமனாகக் கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைகள் மட்டும் மாற்றப்பட்டு பல வாக்கியங்கள் நீக்கப்பட்டு அந்தப் பெண் கோயில் விபசாரத்துக்கு அப்பெண்ணின் தாயாராலேயே தள்ளிவிடப்பட்டது போல அருவெறுக்கத்தக்க வகையில் ஒரு பிம்பம் எழுப்பப்பட்டுள்ளது. இந்தச் செல்வி எனும் பெண்ணுக்கு நன்றாக ஆங்கிலம் தெரியும். அவள் ஒரு மேதை என்று எண்ணவே இடமிருக்கிறது. அதனால் அவள் இந்த நூலைப் படித்து அதில் அவள் நம்பிய ஒருவர் அவளை இப்படி மோசமாக சித்தரித்ததைத் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். எனவே ரீனா சிந்தாமணியை, பொய் ஆவணங்கள் உருவாக்கியது, தலித் சமுதாயத்தை மோசமாகச் சித்தரித்தது, எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பெண் குழந்தையை மன உளைச்சல் ஏற்படுத்தி தற்கொலைக்கு ஆளாக்கியது ஆகியவற்றுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த அறிக்கை கோருகிறது.
விடுதலை முன்னணி கருணாளன் வெளியிட்ட ‘வெல்லம் அம்மன் விபசாரத் தெய்வமா?” எனும் பிரசுரத்திலிருந்து:
ஒரு காலத்தில் இந்தப் பழக்கம் ஏதோ சில இடங்களில் மோசமாகத் திரிந்து விபசாரமாக அல்லது பாலியல் சுரண்டலாக ஆனது என்னவோ உண்மைதான். ஆனால் பெரும்பாலும் எங்கள் சமுதாயத்தில் இது தொல் தமிழர்கள் மரபெச்சங்களாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. வெல்லம் அம்மனின் மிகப் பழமையான வடிவத்தை வேட்டுவப் பெண் வெறி கொண்டு ஆடும் பழங்குடி சடங்குகளில் காணமுடியும். வெல்லம் அம்மன் கோயிலில் குழந்தைகளுக்குக் காப்புக்கட்டும் சடங்கும் பழந்தமிழர் சடங்குகளில் ஒன்றே. ஆனால் ரீனா சிந்தாமணி இந்த நீண்ட மரபுத்தொடர்ச்சியை மறைத்துவிட்டு காலனிய மானுடவியல் நோக்கில் இதனை ஆராய்ச்சி செய்கிறார். அதற்கு உள்நோக்கம் உண்டு என்பதை நம் சமுதாய மக்களும் பொதுவாக தமிழக மக்களும் உணர வேண்டும். நாளைக்கு இதே நிலை உங்கள் தெய்வங்களுக்கும் வரலாம் என்பதை தலித் அல்லாத தமிழ் மக்கள் உணர வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு முடி எடுப்பதையும் காது குத்துவதையும் கூட சர்வதேச அரங்குகளில் நீங்கள் உங்கள் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வதாக எவரேனும் ஆவணப்படுத்தக்கூடும்.
சிறிது சிந்தியுங்கள். வெல்லம்மா என பெயரிட்டால் அந்தப் பெண் சமுதாய ஆண்களின் பொது சொத்தாம். அப்படியானால் வெல்லப்பன் என்று எங்கள் சமுதாயத்தில் எத்தனையோ ஆண்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அவர்களெல்லாம் பொதுசொத்தா?
வெளிவராத ஒரு டெலிபோன் உரையாடலின் ஒரு பகுதி: [ஆண் குரல் மட்டும்]
[இரவு 8:15] ஓ சொல்லுங்க ரீனா எப்படி இருக்கீங்க… என்ன விஷயம் விஷயம் இல்லாம போன் பண்ண மாட்டீங்களே…
[8:18] ஓ கங்கிராஜுலேஷன்ஸ்
[8:19] என்ன என்ன பிரச்சனை
[8:30] ஓ..
[8:35] சரி அந்த ஜனங்க வாயை அடைக்கிறது பிரச்சனை இல்லை. கொஞ்சம் செலவாகும். என்ன ஒரு அஞ்சு லட்சம்.
[8:42] ஓ அதுதான் கொஞ்சம் கஷ்டம்
[8:50] ஸீ ஒண்ணு பண்ணலாம். மைனாரிட்டி அமைப்புகள் மூலமா பிரஷர் கொடுத்து பரமேஸ்வரி ஐபிஎஸ்ஸை இடமாற்றம் செய்றது பிரச்சனை இல்லை. மினிஸ்டர் சைன் பண்ணணும்.
[8:53] ஆமா உங்களுக்கு தெரிஞ்சவர்தான். உங்களையும் தெரிஞ்சவர்தான்… ஹி ஹி
[8:55] கரெக்ட்! ஜொள்ளு பார்ட்டிதான். அதுனால இது உங்க கைலதான் இருக்கு…
[9:00] யோசியுங்க. உங்களுக்கு இது கரீயர் பிரச்சனை.
[9:05] குட் அப்ப நான் மினிஸ்டர் கிட்ட சொல்லிடறேன். கவலைப்படாதீங்க காதும் காதும் வைச்ச மாதிரி முடிச்சிடலாம்.
[9:12] ஓ அந்த ஆளா? அது கவலைப்படாதீங்க. தேசியப் பாதுகாப்புச் சட்டம் எதுக்கு இருக்கு? நம்மையெல்லாம் பாதுகாக்கத்தானே.. உள்ள தள்ளிடுவோம். ஒரு ஆறுமாசம் ஆள் இருக்கிற இடமே தெரியாம செஞ்சிடலாம்.
வெள்ளைத் தோலும் தடித்த உடலும் கொண்ட சீமான்கள் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்துகொண்டு இந்தியக் குழந்தைகளுக்காகவும் அவர்களை விபசாரிகளாக்கும் கலாசாரத்துக்கு எதிராகவும் அறச்சீற்றம் கொண்டார்கள். கொழுத்த காசோலைகள் சலசலத்தன. பெண் ஐபிஎஸ் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் சமர்ப்பித்த அறிக்கை ஓர் இதழில் வந்தபோது தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். பிரசுரம் வெளியிட்ட தலித் தலைவர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
வெல்லம் அம்மன் விபசாரத்தின் சின்னமானாள்.
மனித உரிமைத் தொழில் செய்து பிழைக்கும் பெண்ணியப் போராளி ரீனா சிந்தாமணி சர்வதேச அரங்குகளில் போற்றப்பட்டார்.
பூவாக மலர்ந்திருந்த செல்வி, தன்னைத் துண்டுக் கயிற்றில் சுருக்கி அழித்துக் கொண்டாள்.
என்றேனும் அவள் எழுந்து வரலாம் செல்லியம்மனாக.
[இங்கு கூறப்பட்டவை அனைத்தும் பெரும்பாலும் கற்பனைகளாக இருக்கவே வாய்ப்பிருக்கின்றன.]