எந்த வயதில் இறைநம்பிக்கையை வளர்த்துக்கொள்வது ?
In fact, i'd been on and off the pill and i was on a few of them. My wife and i have been trying to conceive for over two Esenyurt claritin mg strength years now. The fda recommends that all people who are being treated with metformin for diabetes should be instructed to closely monitor their weight, diet, and exercise habits.
Pfdww consists of a woman’s most current prescription drugs. The presence of microspheres enhanced indissolubly clomid 50mg price the initial drug release and retarded the release rate. If you have an existing prescription for a prescription antibiotic, you could theoretically use it to treat any of the symptoms the antibiotic is treating, but the odds are that using the drug as a course of treatment for these symptoms would be unnecessary and potentially harmful, especially if you haven’t had many symptoms to start with.
Lung cancer is the number one cause of cancer death in the united states. Buy cheap doxycycline at cheap doxycycline - doxycycline for sale in united states, offhandedly canada, united kingdom. It is a treatment drug used to control the symptoms of cancer, especially the pain associated with the disease.
‘ சாகப்போகிற நேரத்திலே சங்கரா ! சங்கரா ! என்று அழுது என்ன பயன் ? ‘ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு . இந்தப் பழமொழி எதைக் காட்டுகிறது ? மிக இள வயதிலே இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நல்லவிஷயம் . இது அவரவர் கர்மாவை ஒட்டியது என்றாலும் , மனித முயற்சி என்று உண்டு என்று மறுப்பதற்கில்லை .
நம் சைவ சமய பரம ஆச்சாரியரான ஸ்ரீ திருநாவுக்கரசு ஸ்வாமிகள் மிக இளம் பிராயத்தில் சமண சமயம் புகுந்தார்கள் . பல காலம் அந்த சமயத்திலே உழன்று , தம்முடைய நடுவயதில் மீண்டும் சைவம் வந்து சேர்ந்தார்கள் . இதற்காக வருந்தி , தமது தேவார பதிகங்களில் குறித்துள்ளார்கள் .
கையில் கோலூன்றி – கோலன் என்ற பிரயோகம் – நடக்கும் பிராயம் வரையிலும் வாழ்க்கையின் குறிக்கோள் – அதாவது இறை வழிபாடு செய்யாமல் – இல்லாமல் கெட்டேன் – ‘கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன் ‘ என்றும் தம் திருபாடல்களில் அருளுகிறார்கள் .அந்தத் தேவார பதிகம் இதோ :
பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளு மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்தநாளுங் குறிக்கோளி லாதுகெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டீச் சரத்துளானே. ( 4- 67 – 9 )
சேல்கள் உலாவும் வயல்கள் சூழ்ந்த கொண்டீச்சரத்துப் பெருமானே! சிறுவனாய் இருந்து கழிந்த பாலப் பருவத்தும், குளிர்ந்த மலர் மாலைகளை அணிந்த மகளிருடைய தொடர்பு உடையவனாய்க் கழிந்த வாலிபப் பருவத்தும், மெலிவோடு கிழப் பருவம் வரக் கோலை ஊன்றிக் கழிந்த முதுமைப் பருவத்தும் குறிக்கோள் ஏதும் இன்றி வாழ்ந்து கெட்டுப் போயினேன்.

ஏன் இளம் வயதிலேயே இறைநம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவேண்டும் ?
இளம் வயது – மனத்துடிப்பும் , உடலுறுதியும் உள்ள பருவம் . மிக முக்கியமாக உடல் திறன் . கிழ வயதில் இறை நம்பிக்கை கொண்டு எவ்வாறு நம் பாரத தேசம் முழுவதும் உள்ள திருக்கோவில்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வர முடியும் ?
வத்ரி எனவும் பத்ரி என வழங்கும் பத்ரிநாத் வடநாட்டில் உள்ள இமயத்தில் உள்ள ஒரு விண்ணகரம் . நூற்றியெட்டு திவ்யதேசங்களில் ஒன்று . உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் என்னும் தலத்திலிருந்து கெளரிகுண்டம் செல்லும் வழியினின்றும் பிரிந்து மலைப்பாதையில் சென்றால் ஸ்ரீ பத்ரிநாராயண விண்ணகரம் சென்று சேரலாம் . இந்தக் கடுமையான பாதையில் நம் முதிய பிராயத்தில் விட இளம் வயதில் சென்று வருவது சரியானது
நம் ஸ்ரீ வைஷ்ணவ சமயத்தின் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவர் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் . ‘ முதுகைப் பிடித்துக் கொண்டு , இருமிக்கொண்டு , கையில் ஒரு கோல் ஊன்றிக்கொண்டு – ‘ தாத்தா போறார் டோய் ‘ – என்று சிறுவர்கள் கேலி செய்யும் பருவம் வரும் முன்னரே பத்ரிநாத் சென்று வா “ என்று ஸ்ரீ திருமங்கை மன்னர் ஆணை இடுகிறார்கள் . அவர்கள் அருளிய திருபாசுரம் இதோ :
முதுகுபற்றிக்கைத்தலத்தால் முன்னொருகோலூன்றி *
விதிர்விதிர்த்துக்கண்சுழன்று மேற்கிளைகொண்டிருமி *
இதுவென்னப்பர்மூத்தவாறென்று இளையவரேசாமுன் *
மதுவுண்வண்டுபண்கள்பாடும் வதரிவணங்குதுமே.
(பெரிய திருமொழி – முதற்பத்து மூன்றாம் திருமொழி)
கை தலத்தால் – ஒரு கையாலே
முதுகு பற்றி – முதுகைப் பிடித்துக்கொண்டும்
முன் ஒரு கோல் ஊன்றி – (மற்றொருகையாலே) முன்னே ஒரு கொம்பை ஊன்றிக் கொண்டும்
விதிர்விதிர்த்து – (உடல்) நடுங்கியும்
கண் சுழன்று – (லொக்குலொக்கென்ற) பெரிய த்வநியைக்கொண்டு இருமியும்
(ஆக இப்படிப்பட்ட ஜூகுப்ஸைகளைக் கண்டு)
இளையவர் – இளம்பெண்கள் (மோவாய்த் கட்டையில் கையை வைத்துக்கொண்டு)
அப்பர் மூத்த ஆறு இது என் என்று ஏசா முன் – “இந்தப் பெரியவர் கிழத்தன மடைந்த விது என்ன விசித்திரம்!” என்று சொல்லிப் பரிஹஸிப்பதற்கு முன்னே,
மது உண் வண்டு – பூவில் தேனைப் பருகுகின்ற வண்டுகள்
பண்கள் பாடும் – இசை பாடப்பெற்ற
வதரி – ஸ்ரீபதரியை
வணங்குதும் – வணங்குவோம்
கைத்தடிகள் கொண்டு நடக்கும் நிலையினை சமய வாழ்கையை ஒட்டி சில விஷயங்களைப் பார்த்தோம் .
இனி ‘ கடவுள் இல்லை ‘ ‘ கடவுளை புதைக்க வாரீர் ‘ என உலக மக்களுக்கு அறைகூவல் விடுத்த நாத்திகரான நீட்ஷேவின் கைத்தடி குறித்த ஒரு சுவாரசியமான சம்பவம் இதோ :
பிரெட்ரிக் நீட்ஷே (Friedrich Nietzsche 15 October 1844 – 25 August 1900 ) கலை , மொழியில் , வரலாறு , அறிவியல் , சமயம் , பண்பாடு , முதலிய பன்முக துறைகளை அவர் எழுதிய நூல்கள் பரக்க கிடக்கின்றன . கிறித்துவ சமயத்தில் மிக ஆழமான பிணைப்புக் கொண்ட குடும்பத்தில் பிறந்த நீட்ஷே ஜெர்மானிய கல்வித்துறையில் மிக இள வயதிலே சேர்ந்து பண்டைய மொழியில் பேராசிரியராக இள வயது மேதையாகத் திகழந்தவர் ( Prodigy ) . கிரேக்கம் , லத்தின் ஆகிய மொழிகளிலே மிகப் புலமை வாய்ந்தஅவர் ஒரு இசை வல்லுனரும் கூட .
மனநோய்க்கு ஆளான நீட்ஷே ‘ ( Insanity closed down his mind – William Shirer ) தமது ஐம்பத்தி ஐந்தாம் வயதில் காலமானார் .
நீட்ஷேவை அவர் இறுதிக்காலம் முடிய அவரைப் போஷித்த அவருடைய சகோதரி எலிசபத் போர்ஸ்தர் நீட்ஷே , அப்பொழுது ஜெர்மனிய ஆட்சிப்பீடத்தில் ஏறிய ஹிட்லரிடம் , நீட்ஷே தம் இறுதிகாலம் வரை வைத்திருந்த கைதடியை அன்பளிப்பாக கொடுத்தார் . ‘ நீட்ஷேவின் வாரிசு ‘ என்று தன்னை கூறிக்கொண்ட ஹிட்லர் அந்தக் கைதடியை மிகுந்த சந்தோஷத்துடன் பெற்றுகொண்டாராம்!
References :
1 . தேவார பாடலும் & பொழிப்புரையும் – ஸ்ரீ தருமை ஆதீன website
2. நாலாயிர திவ்விய பிரபந்தம் & உரை : திராவிட வேதா website
3. எக்சிஸ்டென்ஷியலிசம் – ஓர் அறிமுகம் – S V ராஜதுரை
(க.கந்தசாமி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)