பாரதத்தின் ஆஸ்தீக சமயங்கள் யாவும் வேதத்தை ஏற்றுப் போற்றுவன. அவற்றுள் சிலவற்றுக்குச் சிறப்பான பிரமாண நூல்கள் சில இருந்தாலும் அவை பொதுப்பிரமாணமாக வேதத்தையே கொள்கின்றன. இவ்வகையில் சைவசமயமும் சிறப்புநூலாக சைவாகமங்களைக் கைக்கொண்டாலும் பொதுப்பிரமாணமாக வேதத்தையே குறிப்பிடுகின்றது. இதனால், இச்சமயத்தை ‘வைதீக சைவம்’ என்று சான்றோர்கள் கொண்டாடுவர்.
In the case of acute upper respiratory tract infection, the child may develop signs of lower respiratory tract infection that. Two of them are the two cyclooxygenase-2 inhibitors in this mile group, ibuprofen and naproxen. And it is going to come out and it's going to say, this is going to cost and if you don't have the , then you can't afford it.
Amoxicillin himox 500 mg capsule price is the lowest price in uk, us, canada. So Hajdúszoboszló clomid price singapore what happens if you decide to go the doxycycline drug regimen? However, it is important that you consult with your doctor before taking doxycycline.
These can be easily managed, but may include nausea, diarrhea, stomach pain, increased urination, and changes in the sex hormones. This is a discussion on clomid over the counter within Mecca the online forums, part of the online public license discussion group, part of the forum. The cheapest cialis for sale without prescription in the world is cialis 20 mg 30 pills.
இன்னும் ‘வேதாகமோக்த சைவசித்தாந்தம்’ என்று ஒரு வழக்கும் இருக்கிறது. சைவசித்தாந்தம் வேத சிரசு என்ற உபநிடதங்களில் முகிழ்த்து, சைவாகமத்தின் சிரசான ஞானபாதத்தில் ‘திரிபதார்த்த விவேகம்’ என்ற முப்பொருள் (பதி, பசு, பாசம்) ஆய்வாக உயர்ந்து மணம் பரப்பி, சந்தான குரவர் என்று கொண்டாடும் மெய்கண்டதேவர், அருணந்தி சிவம், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவம் என்ற நால்வரும் இன்னும் சித்தாந்த நூலாசிரியர்களும் தந்த செந்தமிழ் நூல்களில் சைவசித்தாந்தமாக காய்த்துக் கனிந்தது.
இன்றைக்கு சில தசாப்தங்களாக ஆரிய-திராவிட வாதப்பிரச்சினைகளோடு ஒட்டியதாய், ஏற்பட்ட நாஸ்தீக இயக்கங்களின் வளர்ச்சியை ஒட்டி சில சமயாபிமானச் சைவர்கள் “புரட்டாஸ்தாந்து” (Protestant) சைவத்தை உருவாக்க முயன்றனர். மேலைத்தே சத்தவர்களின் கிறிஸ்துவமயமாக்கல் பெருந்தோல்வி அடைந்த பின்னணியில், இந்த சமயப்பிரிவினை மேலைநாட்டாரால், மேன்மேலும் ஊக்குவிக்கப்படலானது. இத்தரப்பார் வேதம் வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, எங்களுக்கு திருமுறைகள் உள்ள போது, வேறென்ன வேண்டும் என்று வினவத் தொடங்கியுள்ளனர்.
தமிழ் வேதம் என்று போற்றுகின்ற திருமுறைகளிலேயே வேதாகமங்கள் போற்றப்படுகின்றனவே என்று யாரேனும் கேட்டால், அதெல்லாம் முன்பு தமிழில் இருந்த வேதங்களும் ஆகமங்களும் தான். அவைகள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. அல்லது அழிந்து விட்டன என்று ஆராய்ச்சிகளும் வெளியிட்டார்கள். எங்கள் திருமூலர் தந்த திருமந்திரம் இருக்க, புரிதல் இல்லாத வேறு மொழியில் மந்திரங்கள் ஏன்? என்றும் வினவி வருகிறார்கள்.
ஆயினும், இன்னும் வேதாகம முறையில் வழிபாடுகள் எந்த இடையூறுமின்றி தொடர்ந்து நடந்து வருவதை இவர்களால் தடுக்க இயலாதிருக்கிறது. இன்னும் சிலருக்கு தமிழிலுள்ள திருமுறைகளிலேயே ஆகமம், நால்வேதம், அந்தணர், மந்திரம், ஆகுதி, வேள்வி என்று பலவும் இருப்பதைக் காண்கிற போது அதற்கு விபரீதமாகப் பொருள் சொல்லி விபரிப்பதில் கடந்த பல ஆண்டுகளாகவே அலாதி ஆர்வம் இருக்கிறது.
ஆனால், இவர்களில் பலருக்கும் கூட திருமுறைகள் ஒழுங்காகத் தெரியாது. தெரிய வருகிற போது, ‘கூர்மத்தை நம்பிக் குடி கெட்டேனே’ என்று வைணவர் போல வருந்துவர். இன்னும் சிலர் ஓஹோ திருமுறையும் ஆரிய மாயை தான் என்று பகுத்தறிவு என்ற பேரில் சுயமரியாதை பேசத் தொடங்கி விடுவர். இவற்றை நாம் பல்லாண்டுகளாகவே கண்டு வருகிறோம்.
ஆக, திருமுறைகள் இருக்கு முதலிய இன்றுமுள்ள வேதங்களை பெயர் சுட்டிக் குறிப்பிடுவதும் அவை விதித்த கருமங்களை செய்யுமாறு பணிப்பதும் பல இடங்களில் காணலாம்.
அந்த வகையில் சைவத்தின் சிறப்பு நூலான ஆகமங்களின் கருத்துக்கள் பலவற்றை திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரத்தில் பரக்கக் காணலாம். சேக்கிழார் பெருமான் அருளிய பெரிய புராணமும் இவ்வாறே ஆகம வழிபாட்டின் சீர்மையை விளக்கிக் கூறுகின்றது.
திருமூலர் வரலாற்றைச் சொல்லப் புகுந்த தெய்வச்சேக்கிழார்,
‘தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை
மண்ணின் மிசைத்திருமூலர் திருவாக்கால் தமிழ்வகுப்ப’
என்று கூறியதன் மூலம் இறைவன் வடமொழியில் அருளிச்செய்த ஆகமங்களின் பொருளை தமிழில் தரவே, திருமூலரைத் திருவருள் தந்தது என்று விளக்குகிறார். திருமூலரும் இதனையே,
‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’
என்று குறிப்பிடுகின்றார்.
இருவர் வாக்கிலும் ஒரே அமைப்பில் தமிழ் வகுப்ப என்றும் தமிழ் செய்யுமாறே என்றும் மொழியின் பெயர் குறிப்பிடுவதற்கு காரணம் என்ன?
மேலும், ஆகமங்களின் பெயரையும், அவற்றின் தொகையையும், அவற்றைத் தாம் பெற்ற முறைமையையும், அவற்றில் கூறப்படும் பொருளையும் திருமூலநாயனார் குறிப்பாயும் வெளிப்படையாயும் உணர்த்துகின்றார்.
காமிகம் போன்ற ஆகமங்களில் ஆகமங்களின் வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சுதாசிவ பரமேஸ்வர மூர்த்தியின் ஈசான முகத்திலிருந்து பிரணவர் முதலிய சிவாம்சமுள்ள முப்பதின்மர் கேட்டறிந்தவை பத்து ஆகமங்கள் என்றும் ருத்திராம்சமுள்ள அநாதிருத்திரர் முதலிய முப்பத்தறுவர் கேட்டது பதினெட்டு ஆகமங்கள் என்றும் இவ்வரலாறுகளில் குறிப்பிடப்படுகின்றது.
இதையே திருமூலரும்,
அஞ்சன முனி அரிவையோர் பாகத்தன்
அஞ்சோ டிருபத்து மூன்றுள ஆகமம்
அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே’ (1)
என்றும்,
நந்தி இணையடி நான்தலை மேற்கொண்டு
புந்தியி னுள்ளே புகப்பெய்து போற்றி செய்து
ஆந்தி மதிபுனை அரன்அடி நாடொறும்
சிந்தைசெய்து ஆகமஞ் செப்பலுற் றேனே’ (2)
என்றும்,
‘நவவாகமம் எங்கள் நந்தி பெற்றானே’ (3)
என்றும்,
‘நந்தியருள் பெற்ற நாதரை நாடிடின்
நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்கிரர்
என்றிவர் என்றோ டெண்மரு மாமே’ (4)
என்றும்,
‘பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தும் வாதுளம்
மற்றவ் (வி)யாமளம் ஆகுங் காலோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே’ (5)
என்றும் பலவாறு குறிப்பிடுகின்றார். இவற்றை யாழ்ப்பாணத்து கோப்பாயில் இற்றைக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த பண்டிதர். ச.பஞ்சாட்சரசர்மா அவர்கள் பட்டியலிட்டு விளக்கியிருக்கிறார்கள்.
அதே ஊரில் தொண்டைமண்டலாதீனத்தால் ‘சித்தாந்தபானு’ என்று சிறப்பிக்கப்பட்ட காரணம் முதலிய ஆகமங்களை நன்கு கற்ற ஆகமவித்துவானாகிய சிவஸ்ரீ. சோ.சுப்பிரம்மண்யக்குருக்கள் என்ற பெரியவரும் இக்காலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் திருமந்திரப்பாடல்கள் சிலவற்றுக்கு அதே பொருள் காட்டும் ஆகம ஸ்லோகங்களை குறிப்பிட்டிருக்கிறார்கள். அவை மிகவும் வியப்புக்குரியதாயுள்ளன.
திருமந்திரத்தில் ஆதித்தன் நிலை, அண்டாதித்தன் என்ற பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. அதில் ஐந்தாவது பாடல் ஒன்று உள்ளது.
‘வலைய முக் கோணம் வட்டம் அறுகோணந்
துலையிரு வட்டந் துய்ய விதமெட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈரெட்டிதழாம்
அலைவற் றுதித்தனன் ஆதித்த னாமே’
இது தான் பாடல். படித்தால் ஒன்றும் விளங்கவில்லை. சரி, இதற்கு கையிலுள்ள திருமந்திர மொழிபெயர்ப்புகளை புரட்டினாலும் ஒரு புரிதலும் இல்லை. இது விசுத்தியில் சூரியன் உதிக்கும் நிலை கூறியது என்று தந்திருக்கிறார்கள். பாடல் படித்ததை காட்டிலும் இதைப் படிக்கிற போது இன்னமும் புரிதலில்லாது போகிறது.
ஆனால், இதை மேற்சொன்ன குருக்கள் அவர்கள், சூரியனுக்குரிய யந்திரம் என்று கூறுகிறார். அதாவது ஸெளரசக்ரம் என்கிறார். சூட்சுமாகமத்தில் அதற்கான ஸ்லோகத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
‘வ்ருத்தம் த்ர்யஶ்ரம் புனர்வ்ருத்தம்
ஷட³ஶ்ரம் வ்ருத்த யுக்³மகம்
அஷ்டாஶ்ரஞ்ச கலாஶ்ரஞ்ச
ஸெளர சக்ரம் ப்ரகீர்த்யதே’
சிவாகமங்களில் காணப்படுவன என்று அறியப்படாதனவாயுள்ள, சாக்த ஆகமத் தொடர்புடைய பல விடயங்களையும் திருமூலர் அழகாகக் குறிப்பிடுகின்றார்.
திருமந்திரத்தின் நான்காம் தந்திரத்திலுள்ள நவாக்கரி சக்கரம், புவனாபதி சக்கரம், வயிரவி மந்திரம் என்ற தலைப்புகளுக்குள் உள்ள பல பாடல்கள் சாக்த ஆகமத்தொடர்புடையன.
வயிரவி மந்திரம் என்ற பகுதியிலுள்ள 20ஆம் பாடல் –
‘வருத்த மிரண்டுஞ் சிறுவிரல் மாறிப்
பொருத்தி யணிவிரற் சுட்டிப் பிடித்து
நெறித்தொன் றவைத்து நெடிது நடுவே
பெருத்த விரலிரண் டுள்புக்குப் பேசே’
இது யோனி முத்திரை மற்றும் சூலமுத்திரையை காட்டுவதாக திருமந்திர உரையாசிரியர்கள் பதிவு செய்கிறார்கள்.

ஆனால், இது யோனிமுத்திரையையே காட்டுவதாக மேற்குறிப்பிட்ட சித்தாந்தபானு குருக்கள் குறிப்பிடுவதுடன், பரசுராம கல்ப சூத்திரத்திலிருந்து ஒரு ஸ்லோகமும் காட்டுகிறார்.
‘மித: கநிஷ்டி²கே ப³த்⁴வா – தர்ஜநீப்⁴யாம் அநாமிகே
அநாமிகோர்த்⁴வ ஸம்ஸ்ருஷ்ட – தீ³ர்க⁴ மத்⁴யமயோரத:
அங்குஷ்டா²க்³ர த்³வயம் ந்யஸ்த்வா – யோநிமுத்³ரேயம் ஈரிதா’
இந்த முத்திராவிதி கூறும் ஸ்லோகமும் திருமந்திரப்பாடலும் ஒரே பொருள் கொண்டு விளங்குகின்றன.
இனி, புவனாபதிச்சக்கரம் என்ற பகுதியிலுள்ள முதற்பாடல்
“ககாராதி யோரைந்தும் காணிய பொன்மை
அகாராதி யோரா றரத்தமே போலும்
சகாராதி யோர்நான்கும் தான்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே”
நன்றாக இதை படித்துப் பாருங்கள்… ககாராதி ஐந்தும், அகாராதி ஆறும், சகாராதி நான்கும் என்றெல்லாம் உள்ளது. இப்படி எல்லாம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் உள்ளனவா..? இது பிரசித்தி பெற்ற பஞ்சதசாக்ஷரி என்ற ஸ்ரீ வித்யா உபாசனையின் மஹாமந்திரமே ஆகும். இதில் அகாராதி என்பது மந்த்ரத்தில் ஹகாரமாகப் பிரயோகிக்கப்பெறுகின்றது.
ஐந்தாம் பாடல்..
“ஏதும் பலமாக மியந்திர ராசனடி
ஓதிக் குருவின் உபதேசம் உட்கொண்டு
நீதங்கும் அங்க நியாசந் தனைப்பண்ணிச்
சாதங் கெடச் செம்பிற் சட்கோணந் தானிடே”
இந்தப் பாடலுக்கு உரையாசிரியர்கள் இந்து ராசன் என்று பாட பேதம் செய்து சந்திர மண்டலத்துக்கு அதிபதி என்று பொருள் கொள்கிறார்கள். ஆனால், இது இயந்திரராசன் என்பதே சரி என்றும், அந்த யந்த்ரராஜம் என்பது ஸ்ரீ சக்கரத்தையே குறிக்கும் என்றும் அறியக்கிடக்கிறது.
மேலும் திருமந்திரத்தின் அசபை என்ற பகுதியில் ‘ஆனந்தம் அம்- ஹ்ரீம்- அம்- க்ஷம்- ஆம்- ஆகுமே’ என்றும், ‘செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரீயும்’ என்றும் திருமூலர் வடமொழி எழுத்துக்களை- பீஜாக்ஷரங்களை மாற்றாமல் அப்படியே பாவித்திருக்கிறார்.
‘ஐம்பதெழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பதெழுத்தே அனைத்து ஆகமங்களும்’
என்றும்
“ஓதும் எழுத்தோடுயிர்க் கலை மூவைஞ்சும்,
ஆதி யெழுந்தவை ஐம்பதோ டொன்றென்பர்’
என்றும் திருமூலர் குறிப்பிடும் ஐம்பது. ஐம்பத்தொன்று என்ற எண்ணிக்கை கொண்ட எழுத்துக்கள் எவை என்பதற்கு தொல்காப்பியத்திலோ, நன்னூலிலோ, வீரசோழியத்திலோ எந்த விளக்கமும் காணப்படவில்லை.
சிவாச்சார்யர்கள் தினமும் சிவபூஜையின் போது ஓதும் ‘க்ஷித்ராதி³ குடிலா ப்⁴ராந்த…’ என்று தொடங்கும் ஆகம ஸ்லோகமான மிக நீண்ட சதாசிவத்யானத்தை திருமூலர் அப்படியே சதாசிவலிங்கம் என்ற பகுதியில் மொழிபெயர்த்துள்ளார்.
‘த⁴வளேஶான வத³னம், பீதம் தத்புருஷாநநம்
க்ருஷ்ணாகோ⁴ ர முகோ²பேதம், ரக்தாபோ⁴த்தர வக்த்ரகம்
ஸுஶ்வேதம் பஶ்சிமாஸ்யேகம், ஸத்³யோஜாதம் ஸமூர்த்திகம்…”
என்பதை
நடுவு கிழக்குத் தெற்குத் தரமேற்கு
நடுவு படிகநற் குங்கும வண்ணம்
அடையுள வஞ்சனஞ் செவ்வரத்தம் பால்
அடியேற் கருளிய முகமிவை யஞ்சே
என்று தமிழில் ஆக்கித் தந்துள்ளார்.
மேலும்,
பத்³மாஸநஸ்தம்² பஞ்சாஸ்யம், ப்ரதிவக்த்ரம் த்ரிலோசனம்
என்பதை
‘அஞ்சுமுகமுள ஐம்மூன்று கண்ணுள’
என்றும்
ஜடாக³ண்டேந்து³ மண்டி³தம்
என்பதை
‘சுருளார்ந்தசெஞ்சடைச் சோதிப்பிறையும்’
என்றும் ஆக்கியுள்ளார். இவ்வாறு இந்த நீண்ட ஸ்லோகத்தையே இரண்டு பாடல்களில் மூலர்பிரான் சுருக்கிப்பாடியுள்ளார்.
“தத் த்வம் அசி” என்ற உபநிடத மஹாவாக்கியத்தை மூலர் “தற்பதம் தொம்(துவம்)பதம் அசிபதம்’ என்பார்.
“தற்பதம் தொம்பதம் தானாமசிபதம்,
தொற்பத மூன்றும் துரியத்துத் தோற்றவே…”
இப்படி ஏழு பாடல்கள் உபநிடத மஹாவாக்கியங்களைக் கூறுவனவாயுள்ளன.
ஆகவே, சிவாகம ஆய்வுகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆகமங்கள் குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றே அறியலாம். ஒரு சில ஆகமங்கள் தவிர இன்னும் பல அச்சேறவில்லை. அச்சேறிய ஆகம நூல்களிலும் இருக்கிற பாடபேதம், பிற்சேர்க்கை, விளக்க குறைவு, பொருந்தாத சொற்கள் என்று நீண்ட ஆய்வுகள் நடந்ததாக அறிய முடியவில்லை.
இவ்வாறு ஆகம ஆய்வுகள் நடைபெறுவதுடன், திருமந்திரம் பற்றிய விரிவான ஆய்வுகள் நடப்பதும் உண்மையை உலகுக்கு உரைப்பதாகவும் பலவித நன்மைகளைத் தருவதாயும் அமையும்.
இவற்றுக்கெல்லாம் சக்தி பின்னமிலா எங்கள் பிரானும், தமிழ்மந்திரம் படைத்த தவமுனிவரான திருமூலர் பிரானும் அருள் புரிய பிரார்த்திப்போமாக.