அதர்வ வேதம் 12.1.
He/she will then test for heart valve diseases, including tricuspid regurgitation (see below). Crusted scabies treatment ivermectin for scabies and http://blog.bitsense.com.ar/2020/07/07/ventajas-tecnologia-voip/voip-tec/ other bacterial infection and. This combination is used in patients who are also being treated with other drugs.
Viagra, ciala, levitra, stendra - viagra has been widely used to treat male impotence. Canadian pharmacy stores that http://johndanatailoring.co.uk/product-category/uncategorized stock generic and brand-name products. When i began to see a psychiatrist i discovered that.
Jak najlepszym firmie, które przyjmujemy, jest przyjmowane w zamian zbierając informacje na temat niektórych aspektów. If you have an allergy to azithromycin cvs over the counter Altay the ingredients in your medicine, seek out other brand names or generic drugs instead. It is a combination of the antibiotics erythromycin and clindamycin.
சத்தியம், மகத்தானதும் மாறாததுமான முடிவில்லாத பிரபஞ்ச லயம்,
புனிதம், தவம், தெய்வீக ஆற்றல், வேள்வி
இவையே பூமியைத் தாங்குகின்றன.
கடந்தவைகளுக்கும் வருபவைகளுக்கும் அரசியான அவள்
நமக்காக, வாழும் உலகமாய்ப் பரந்திடுக. (1)
உச்சிகளும், சரிவுகளும்
மனிதர்களைப் பிணைக்கும் பல சமவெளிகளும் கொண்ட பூமி
பல்வேறு சக்திகள் பொருந்திய மூலிகைகளைத் தாங்கும் பூமி
நமக்காகப் பரந்து வளம் பொருந்தியதாகுக. (2)
நாற்திசைகளுக்கும் பேரரசியான எவளிடத்தில்
அன்னமும் பயிர்களும் பிறக்கின்றனவோ,
எவள் பற்பல அசையும் உயிர்களையும் தன்மீது தாங்குகிறாளோ,
அந்த பூமி பசுக்களையும், அன்னத்தையும் நமக்கு வாரி வழங்கிடுக. (4)
ஆதியில் அவள் ஆழ்கடலின் நீருள் இருந்தாள்
மெய்யுணர்ந்த ரிஷிகள் தம் அற்புத சக்திகளால் அவளை நாடினர்
அமுதமயமான அழிவற்ற சத்தியத்தால் மூடப்பட்டு
அவள் இதயம் அப்பால் உள்ள ஆகாயவெளியில் இருந்தது.
அந்த பூமி நமக்கு உன்னதமான தேசத்தையும்,
அதில் ஒளியையும், வலிமையும் அளித்திடுக.
சமநிலை தவறாமல், இரவு பகல் விடாமல்
வளைந்தோடிப் பாய்கின்றன அவளது நீர்ப் பெருக்குகள்.
எப்போதும் நிரம்பிய தாரையாகிய அந்த பூமி
நம் மீது பாலைப் பொழிக.
நம்மை ஒளியில் நனைத்திடுக. (8-9)
ஓ பூமி,
உனது மலைகளும், பனிபடர்ந்த சிகரங்களும்,
உனது காடுகளும் எப்போதும் இனியதாகுக.
பழுப்பும், கருப்பும், சிவப்பும், பலவண்ணங்களும் ஆனவள்
இந்திரன் காக்கும் இறுகிய பூமி.
இந்தப் பூமி மீது நான் நிற்கிறேன் –
வெல்லப் படாதவனாக, அழிக்கப் படாதவனாக, குறையாதவனாக.
உன் மையத்தில் உள்ளதையும்
உன் கொப்பூழில் உதித்ததையும்
உன் உடலில் விளையும் ஊணையும் தருக.
எம்மைப் புனிதமாக்குக.
பூமி தாய்; நான் புவியின் மகன்.
தந்தை வடிவான வானம் நம்மை நிறைத்திடுக. (11-12)
பூமிக்குள் அக்னி உறைகிறது
செடிகளில் அக்னி உள்ளது
நீர் அக்னியைச் சுமந்து செல்கிறது
கல்லில் அக்னி உள்ளது
மனிதருக்குள்ளும் அக்னி உள்ளது
மாடுகளிலும், குதிரைகளிலும் அக்னி உறைகிறது.
அக்னி விண்ணில் சுடர்கிறது
வான்வெளியில் தெய்வீக அக்னியே நிரம்பியுள்ளது
மனிதர் மூட்டுகிற அந்த அக்னியே
நெய்யை விரும்பி உண்டு, அவிகளைச் சுமந்து செல்கிறது
அக்னியை ஆடையாக உடுத்த
கருங்கால்கள் கொண்ட பூமி
என்னைச் சுடர்விடச் செய்க.
எனது ஒளியைத் தீட்டுக. ( 19 – 21)
பூமி, உன்னிடம் உதித்த நறுமணத்தை
செடிகளும், நதிகளும் சுமந்து செல்கின்றன.
கந்தர்வர்களும், அப்சரஸ்களும்
அந்த நறுமணம் உடையோராகின்றனர்.
அந்த நறுமணத்தால் என்னை இனிமையாக்கு.
யாரும் என்னை வெறுக்காதிருக்கட்டும்.
உனது அந்த நறுமணம் தாமரையில் பிரவேசித்தது
அமரர்கள் முன்பு அதனை சூரியனின் திருமணத்திற்காகக் கொண்டுவந்தார்கள்
அந்த நறுமணத்தால் என்னை இனிமையாக்கு.
யாரும் என்னை வெறுக்காதிருக்கட்டும்.
ஆண்களிலும், பெண்களிலும் உள்ள உனது நறுமணம் எதுவோ
இளைஞனின் ஒளியும், கம்பீரமும் எதுவோ
வீரர்களிலும், புரவிகளிலும் உள்ளது எதுவோ
வனமிருகங்களிலும், யானைகளிலும் உள்ளது எதுவோ
கன்னிப் பெண்ணின் இளமை ஒளி எதுவோ
ஓ பூமி, இவற்றுடன் எம்மை ஒன்றுகூட்டுவாய்
யாரும் என்னை வெறுக்காதிருக்கட்டும். (23-25)
பாறைகளும், மணலும் கொண்ட பூமி
கற்களும், துகள்களும் கொண்டு ஒன்றாய்ச் சேர்ந்து இறுகிய பூமி
பொன்முலையாளான அந்த பூமியைப் போற்றுவோம்.
மரங்களும், பெரும் காடுகளும் எதன் மீது உறுதியாக நிற்கின்றனவோ
அந்த அனைத்துலகையும் தாங்கும் பூமியைப் போற்றுவோம்.
எழுதலிலும் அமர்தலிலும்
நிற்கையிலும் உலவுகையிலும்
வலது காலாலும், இடது காலாலும்
பூமியில் உதைக்காமல் இருப்போம் (26-28)
பூமி, உனது கிழக்குப் பிரதேசங்களும்
வடக்கும், தெற்கும், மேற்கும்
நான் செல்வதற்கு இனியவையாகுக.
இவ்வுலகில் நான் இடறி விழாமலிருக்கட்டும் (31)
பூமி, உன்னிடமிருந்து எதைத் தோண்டினாலும்
அது விரைவில் வளரட்டும்.
உனது இதயத்தையும், மர்மஸ்தானங்களையும்
நாங்கள் சேதப் படுத்தாதிருப்போமாக.
எங்கு உலகைச் சமைத்த எமது முன்னோர்
புனித மொழிகளை ஓதினரோ,
ஏழு ரிஷிகள் காலம் தோறும்
வேள்வியும், தவமும் புரிந்தனரோ
அந்த பூமி நாம் விரும்பும் செல்வத்தை நமக்கு அளிக்கட்டும்.
பகன் செயலை அருளட்டும், இந்திரன் வழிகாட்டிச் செல்லட்டும். (35-37)
பூமி மீது மானிடர் பல்வேறு மொழிகள் பேசிப் பாடி ஆடுகின்றனர்.
துந்துபி ஒலிக்க, போர்முழக்கம் எழ, யுத்தங்களில் மோதுகின்றனர்.
அந்த பூமி நம் எதிரிகளை விரட்டிடுக.
என்னைப் பகைவன் இல்லாதவனாய்ச் செய்க. (41)
உனது பாதைகளில் பல மனிதர் பயணிக்கின்றர்.
ரதங்களும், வண்டிகளும் போகின்றன.
நல்லோர், தீயோர் ஆகிய இருவருமே ஒன்றாக நடக்கின்றனர்.
நாம் அப்பாதைகளுக்குத் தலைவர்களாவோம்.
திருடர்களையும், பகையையும் துரத்துவோம்.
பூமி கனவானையும், முட்டாளையும் சுமக்கிறாள்.
நல்லோர், தீயோர் இருவரின் மரணத்தையும் கடந்து செல்கிறாள்.
பூமி வீரியமிக்க வராகத்துடன் நட்பாக இருக்கிறாள்.
தெருப்பன்றிகளும் அவள்மீது தன்னிச்சையாகத் திரிகின்றன. (47-48)
கருமையும் வெண்மையும் இணைந்து
இரவு பகல்களாக பூமி மீது படர்கின்றன.
மழை அவளைத் திரையிட்டு மூடுகிறது.
ஒவ்வொரு அன்பு ததும்பும் வீட்டிலும்
பூமியாகிய அவள் நமக்கு இன்பம் அளிக்கட்டும். (52)
பூமி மீது
கிராமங்களிலும் காடுகளிலும்
சபைகளிலும் குழுக்களிலும் கூட்டங்களிலும்
உனக்கு இனியதையே பேசுவோம்.
தான் பிறந்தது முதல்
பூமி நிலத்தில் வாழும் மக்களை (பல்வேறு இடங்களிலும்) சிதறச் செய்தாள்
குதிரை தன் காலால் புழுதியைச் சிதறடிப்பது போல.
பின் அவள் மகிழ்ச்சியுடன் விரைந்தாள்.
உலகைக் காப்பவள்
காட்டு மரங்களையும், செடிகளையும் அரவணைப்பவள். (56-57)
அமைதியும் நறுமணமும் இனிமையும்,
நிறைந்த பாலும், அமுதம் சுரக்கும் மார்பகமும் உடையவள் பூமி.
அவள் தன் பாலைப் பொழிந்து என்னை ஆசிர்வதிக்கட்டும்.
அவள் வான்வெளியின் கடலின் ஒளியில் புகுந்திருந்தாள்.
ஆகுதியுடன் விஸ்வகர்மன் அவளை நாடினான்.
அன்னையை வேண்டி நின்றவர்களுக்கு அமுதூட்டி வளர்க்க
மறைந்திருந்த அந்த மகத்தான பாத்திரம் வெளிப்பட்டது.
நீயே அந்தப் பாத்திரம்,
அனைவருக்கும் அன்னையாகிய அதிதி.
அனைவரின் ஆசைகளையும் நிறைவேற்றும் காமதேனு.
அதற்கும் மேலானவள்.
உன்னிடத்தில் குறைபவை அனைத்தையும்
பிரபஞ்ச லயத்தில் முதன்முதலில் பிறந்த பிரஜாபதி
இட்டு நிரப்புகிறார்.
ஓ பூமி, உன்னில் பிறப்பவை அனைத்தும்
எங்களுக்கு நலமளிப்பவையாக இருக்கட்டும்.
நோயுறாமலும், வீணாகாமலும் இருக்கட்டும்.
நீண்ட ஆயுளுடனும், அறிவு விழிப்புடனும்
உனக்குக் காணிக்கை அளிப்பவர்களாக நாங்கள் இருப்போம்.
ஓ பூமி, தாயே
விண்ணுடன் ஒன்றுகூட்டி
(மண்ணில்) என்னை நிலைநிறுத்திக் காத்து இன்பம் அளித்திடுக.
ஓ கவியாகிய ரிஷியே,
எனக்கு அருளும் ஒளியும் தருக. (59-63)
********
அதர்வ வேதத்தின் பன்னிரண்டாவது காண்டத்தின் முதல் சூக்தமாக 63 பாடல்கள் அடங்கிய பூமி சூக்தம் உள்ளது (மேலே, அடைப்புக்குறிக்குள் உள்ளவை பாடல் எண்கள்). ஆழ்ந்த கவித்துவமும், ஆன்மிகமும் ததும்பும் மொழியில் நாம் வாழும் பூமியை அன்னையாக, தெய்வமாகப் போற்றிப் பாடும் அதர்வான் என்ற வேத ரிஷியின் பாடல் இது.
பூமியை புவீ ஈர்ப்பு போன்ற பௌதிக சக்திகள் மட்டுமல்ல, சத்தியமும், தவமும் தாங்குகின்றன என்று முதல் பாடல் பகர்கின்றது.
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அஃதின்றேல்
மண்புக்கு மாய்வது மன்
என்ற திருக்குறள் கருத்துடன் இது இயைந்துள்ளது. புராணங்களில் அரக்கர்களின் கொடுமை தாங்காமல் பூமி பாரமுற்று தெய்வீக சக்திகளை வேண்ட, அவதாரங்கள் தோன்றி பூமியைக் காப்பாற்றும் கதைகளைக் காண்கிறோம்.
பூமியைப் பெண்ணாக, தாயாக, பாலைப் பொழியும் பசுவாக இந்தப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இந்த உருவகம் இந்துப் பண்பாட்டில் இன்று வரை உயிர்த்துடிப்புடன் உள்ளது. வாசலில் கோலமிட்டு பூமித் தாயை அழகு செய்யும் மரபும், விதை விதைப்பதானாலும், வீடு கட்டுவதானாலும் முதலில் பூமியைப் பூஜை செய்து அனுமதி பெறும் பழங்குடிச் சடங்குகளும் இன்றும் நம் வாழ்வின் அங்கமாக உள்ளன. ”பூமி தாய்; நான் புவியின் மகன்” (பாடல் 12) என்ற உணர்வே தாய் மண், தாய் நாடு என்ற பாச உணர்வாகப் பின்னர் பரிணமித்திருக்கிறது. தேசத்தைத் தாயாகக் கருதிப் போற்றும் “வந்தே மாதரம்” என்ற இந்திய தேசியப் பாடலும் இந்த உணர்வினையே எதிரொலிக்கிறது.
********
பூமி முழுவதும் ஆதியில் கடலாகவே இருந்தது (8வது பாடல்) என்ற கருத்து அறிவியல்பூர்வமானது. இயற்கைச் சக்திகளும், மனிதனும், பிரபஞ்சமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற கருத்தும் பல பாடல்களில் தென்படுகிறது. இன்றைக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், புவிநேசர்களும் கூறும் சூழலியல் கருத்தாக்கங்களுடன் இயைவதாக வேத ரிஷியின் இந்தக் கவிதை விளங்குகிறது என்றே சொல்லலாம்.
பூமி என்பது உயிரற்ற ஜடப் பொருள் என்று சில பத்தாண்டுகள் முன்பு வரை நவீன அறிவியல் கருதி வந்தது. ஆனால் தற்போது பூமியை ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒரு மாபெரும் உயிர்ப் பிணைப்பாகக் காணவேண்டும் என்பது போன்ற சூழலியல் சித்தாந்தக் கருத்துக்கள் அறிவியல் தளத்திலும் செவிமடுக்கப் படுகின்றன.

1970களில் ஜேம்ஸ் லவ்லாக் மற்றும் லின் மார்குலிஸ் ஆகிய உயிரியலாளர்களால் கையா கோட்பாடு (Gaia Theory) முன்வைக்கப் பட்டது. கையா (Gaia) என்பது கிரேக்க பூமி தெய்வத்தின் பெயர். பூமியில் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் போன்ற உயிர்-வேதியியல் செயல்பாடுகள் தொடர்பற்றவை அல்ல. மாறாக ஒரு பிரக்ஞைபூர்வமான, சீரான, உயிர்த்துடிப்புள்ள ஒழுங்குமுறையில் (homeostasis) நடைபெறுபவை என்பது இந்தக் கோட்பாட்டின் மையக் கருத்தாகும். கையா என்பது ஒரு ஒற்றைப்படையான சக்தி அல்ல, மாறாக அது பல முனைகளில் செயல்படும் ஒரு அலைவரிசைத் தன்மையிலானது (spectrum) என்று இந்தக் கருதுகோள் பின்னர் வளர்த்தெடுக்கப் பட்டது. தொடக்கத்தில் இது ஒரு தத்துவமே அன்றி அறிவியல் அல்ல என்ற விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் பல பரிசோதனைகள் புவி நிகழ்வுகள் உயிரோட்டத்துடன் நடைபெறுபவை என்ற கூற்றுக்கு ஆதாரம் சேர்த்தன. 2006ம் ஆண்டு தான் எழுதிய The Revenge of Gaia என்ற நூலில் காடுகள் அழிப்பு, கட்டற்ற தொழில்மயமாக்கலால் ஏற்படும் சூழல் மாற்றங்கள் ஆகியற்றை நாம் கண்டுகொள்ளாமல் விட்டதால் என்னென்ன சீரழிவுகளை உலகம் ஏற்கனவே சந்தித்துக் கொண்டிருக்கிறது என்பது பற்றி லவ்லாக் எழுதினார்.
வேத காலத்திலேயே இயற்கையை நேசத்துடன் பாதுகாத்துப் பயன்படுத்துவது பற்றி இந்தியப் பண்பாடு பேசியது என்பது குறித்து நாம் உண்மையிலேயே பெருமிதம் கொள்ளலாம். ஆனால் தற்போதைய நிலைமையை வைத்துப் பார்க்கையில், நடைமுறையில் நமது நதிகளையும், சிற்றாறுகளையும், ஓடைகளையும், காடுகளையும் மற்ற இயற்கை வளங்களையும் நாம் வேகவேகமாக சீரழித்துக் கொண்டிருக்கிறோம் என்ற பெரும் உண்மை முகத்தில் அறைவதைத் தடுக்க முடியவில்லை. ‘நடந்தாய் வாழி காவேரி’ (தி.ஜானகிராமன் & சிட்டி) என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட பயண நூலில் காவிரியின் கரைகள் நெடுக நீரில் குளித்துக் கொண்டும், கும்மாளமிட்டுக் கொண்டும் சென்ற கோஷ்டிகளைப் பற்றிப் படித்து விட்டு, அந்த இடங்களை இப்போது சென்று பார்த்தால் அதெல்லாம் உண்மையில் அப்படி இருந்ததா என்றே சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
நகரமயமாக்கலுக்கும், மக்கள்தொகைப் பெருக்கத்திற்கும், தொழில் வளர்ச்சிக்கும் நாம் கொடுக்கும் விலை காமதேனுவையே கொஞ்சம் கொஞ்சமாகக் கசாப்புக் கடைக்கு அனுப்புவதற்கு ஈடாக இருக்கிறது.
வேதரிஷி பாடிய பூமி சூக்தம் அது பற்றிய பிரக்ஞையை அவரது சந்ததியினரிடம் கொண்டுவரட்டும்!