இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!

இந்து என்ற சொல்லில் மனிதநேயத்தின் அத்தனை கூறுகளும் அடங்கியுள்ளன. இந்த மனித நேயமே இந்து ஒவ்வொருவருக்கும் பெருமையளிப்பது. ஆனால், இந்த “இந்து” என்ற சொல்லை போலி-செக்யூலர் வியாதிகளும் இந்து விரோத சக்திகளும் ஒரு தீண்டத்தாகத வார்த்தையாக மாற்றிவிட்ட ஒரு பெரும் அவலம் இப்போது நிலவுகிறது. இந்த அவல நிலை புற்று நோய்போல் எல்லா இந்தியர்களையும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் சுயநல லாபத்திற்காகவும் ஆட்டிப்படைக்கிறது.

View More இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!

சுதேசி: புதிய தமிழ் வார இதழ்!

இந்திய தேசிய, கலாசாரத் தன்மையைத் தன் பெயரிலேயே தாங்கி “சுதேசி” என்ற புதிய தமிழ் வார இதழ் தொடங்கப் பட்டுள்ளது..அரசியல், ஆன்மீகம், அழகு, ஆரோக்கியம், கலாசாரம், தேசியம், உலகம், வெள்ளித்திரை, சின்னத்திரை, புத்தகம், இசை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, தொடர்கதை, சிறுகதை, சித்தம், மருத்துவம்…. செப்டம்பர் 8 முதல்…தமிழகம் முழுவதும்…ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்..

View More சுதேசி: புதிய தமிழ் வார இதழ்!

சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

ஜெயலலிதாவைக் கேள்வி கேட்ட ரஜினி, ஒட்டுமொத்த திரையுலகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துகொண்டிருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றி ஏன் இன்னும் எதுவும் கேட்காமல் இருக்கிறார்? தன் வணிகம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவா?… இதே ரசிகர்கள் பாலாபிஷேகம், பீராபிஷேகம் எல்லாம் செய்திருக்கிறார்கள். இன்று சன் டிவி அதற்குத் தரும் அங்கீகாரம் அதன் எல்லையை மிகவும் விரிவாக்கி, தமிழர்களே இப்படியெல்லாம் நடந்துகொள்ளும் முண்டங்கள்தான் என்னும் பிம்பத்தை ஏற்படுத்தி வருகிறது….

View More சன் டிவி – எந்திரன் – தொடரும் குமட்டல்

ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி

மறைந்தவர்களின் அஸ்தி கங்கையில் கரைக்கபட்டால் அவர் மோட்சம் அடைவார் என்பதும் அந்த காரியத்தை செய்தவர்கள் புண்னியம் செய்தவர்கள் என்பது இந்துகளின் நம்பிக்கை. முன்பின் அறியாத ஒரு தனிமனிதனின் மத உனர்வுகளை மதித்து 63 ஆண்டுகள் அவரது அஸ்தியை பாதுகாத்த ஆஸ்திரேலியர் திருமதி ஆலிஸ்கெய்ட் குடுமபத்தினர் தான் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள்…

View More ஆஸ்திரேலியாவிலிலிருந்து வந்த அஸ்தி

இந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்

ஓரினச் சேர்க்கைக்கு மாணவனை அழைத்த சர்ச் பங்கு தந்தையை போலீசார் கைது செய்தனர். இதுவரை எந்த யோக்கியமான தொலைக்காட்சியாவது இந்த விஷயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதா?…திருப்பதி சேவா டிக்கெட் விற்பனை ஊழலுக்குக் காரணமானவர்கள் அரசியல் ரீதியாக பணியமர்த்தப்பட்டவர்கள்…ஆலய நிர்வாகம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அதில் மத நம்பிக்கை உள்ளவர்கள்தான் மனச்சாட்சியோடு பணியாற்ற முடியும். சில ஆசாமிகள் ஆலயங்களை குறுக்கு வழியில் சம்பாதிக்கப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது….

View More இந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்

இரு பெண்களின் கதை

ஜூலியா ராபர்ட்ஸ்களின் பேட்டிகளில் போகிறபோக்கில் அவர்கள் காட்டும் ஒரு வரி அங்கீகாரங்களால் அல்ல; ஊடக ஒளிவட்டங்கள் விழாத பல இலட்சம் பங்காரம்மாக்கள் அறத்துக்காகப் படும் வேதனைகளாலும் கண்ணீர் வெள்ளங்களாலும் தான் ஹிந்து தர்மம் வாழ்ந்து கொண்டிருக்கிறது…. படித்த ஹிந்துக்கள், ஹிந்து உணர்வாளர்கள், அத்தகைய ஹிந்துக்களாக நாம் இருக்கிறோமா என்பதை அறிந்திட காலம் உருவாக்கிய ஒரு முரண் சோதனைதான் ஜூலியா ராபர்ட்ஸின் பேட்டியும் பங்காரம்மாவின் போராட்டமும்.

View More இரு பெண்களின் கதை

நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 03

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நாட்டின் பிரதமரிடம் தொடங்கி கடைத்தட்டு குடிமகன் வரை குடிகொண்டுள்ள அலட்சியமும், நேர்மையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், பேராசையும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது………இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

View More நம்மை உண்மையில் ஆள்வது யார்? – 03

மீண்டும் ஒரு சிறுமி எரிக்கப்பட்டாள்

(மூலம்: தருண் விஜய்) இந்த ஏழைகளுக்கு ஏதாவது போடு” என்று உங்களை உதாசீனம் செய்யும் நிலையில் ஒரே ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள். அலுவலகங்களில் வேலை மந்தமாக நடப்பதற்குக் காரணம் காட்டப்படுபவர்களாகவும் முட்டாள்களாகவும் மற்றவர் போடும் பிச்சையில் வாழ்பவர்களாகவும் நீங்கள் வாழ்ந்து பாருங்கள். அதன் பின்னால், வால்மீகியாக வாழ்வது என்றால் என்ன என்று…

View More மீண்டும் ஒரு சிறுமி எரிக்கப்பட்டாள்

நவம்பர் 26 – ஓராண்டுக்குப் பின்

பயங்கரவாதத்தை வேரறுப்பதில் இஸ்ரேலியர்களிடம் பாடம் கற்கவேண்டும் இந்தியா. பாலஸ்தீனியர்கள் கல்லெறிந்தால் இஸ்ரேலியர்கள் குண்டுமழை பொழிவார்கள். அப்படிப்பட்ட அநியாயமான பதிலடி கொடுக்காவிட்டாலும், வாங்கிய அடிக்குக் கூட திருப்பி அடிக்க மாட்டேன் என்பது என்ன வகையான ராஜதந்திரமோ?

View More நவம்பர் 26 – ஓராண்டுக்குப் பின்

வயநாட்டுச் சிங்கம் பழசி ராஜா – ஒரு மாபெரும் சினிமா

காட்சி பூர்வமாகவும், தொழில் நுட்ப நேர்த்தியிலும், நடிப்பிலும், இசையிலும், கதை சொல்லப் பட்ட உத்தியிலும், நடிப்பிலும், வரலாற்றை நேர்த்தியாகவும் உண்மையாகவும் சொன்ன விதத்திலும், கலை நேர்த்தியிலும், உன்னதமான இயக்கத்திலும், ஒருங்கிணைப்பிலும் இன்னும் எண்ணற்ற விதங்களிலும் இந்த பழசி ராஜாவின் வரலாறு ஒரு உன்னதமான சினிமா அனுபவமாக உருவெடுத்துள்ளது. இது போன்ற சினிமாக்கள் ஒரு நூற்றாண்டில் ஒரு முறையே உருவாகும் அபூர்வமான கலைப் படைப்புக்கள்.

View More வயநாட்டுச் சிங்கம் பழசி ராஜா – ஒரு மாபெரும் சினிமா