கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

ஷா ஆலம் (மலேசியா) பகுதியில் குழுமியிருந்த அந்தக் கூட்டத்தினர் மதவெறி கோஷங்களை எழுப்ப தலைவரான ஹாஜி சொன்னார் – “கோயில் கட்டுமானம் மட்டும் தொடர்ந்தால் இங்கே ரத்த ஆறு ஓடும்” … தாங்கள் ஒரு குற்றமும் செய்யாதபோதும், கோயம்புத்தூர் முதல் கோலாலம்பூர் வரை, காட்மாண்டு முதல் ஜெட்டா வரை ஏன் எல்லா இடங்களிலும் கொத்துக் கொத்தாக இந்துக்கள் படுகொலைக்கு எளிய இலக்காகின்றனர்? இந்துக்கள் படும் காயங்கள் பல துறைகளிலும் செல்வாக்குள்ள தலைவர்களாக உள்ள இந்துக்களாலேயே கண்டுகொள்ளாமல் ஒதுக்கப் படுகின்றன. ஏன்? (மூலம்: தருண் விஜய், தமிழில்: ஜடாயு)

View More கைவிடப்பட்டவர்களா இந்துக்கள்?

ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே (இறுதி)

ஓஷோ சொல்கிறார் – “இந்த போப் வெறும் அரசியல்வாதி…ஹிந்துக்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்களுடைய மதம் கிறுத்துவத்தைவிட மிக மிக வளமையானது. போப் வெறும் ஏழை ஆண்டி. அவரை எதிர்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. அவரை எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள் ….

View More ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே (இறுதி)

நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்

அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் நிலங்களின் உரிமையாளர்களாகக் கிருத்துவ அமைப்புக்கள் இருக்கின்றன. ஆனால், அது நமக்குத் தெரியாது… திடீரென்று சிகப்பு இந்தியப் பழங்குடிகள் மிகக் கொடூரமான தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்டு தாங்களாகவே அழிந்து போயினர். ஏசுவின் நற்செய்தியை பரப்ப முடிவு செய்த பாதிரிகள் அந்தப் போர்வைகளில் இந்த தொற்று வியாதிக் கிருமிகளைத் தடவி இருந்தது பின்னால் தெரிய வந்தது.

View More நற்செய்திகளுக்கு நடுவே சில வெறும் தகவல்கள்

மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்

மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியபோது அவர்களுக்கு போலிஸ், NSG-யின் நடமாட்டம் உடனுக்குடன் செல்ஃபோனில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாதிகளிடம் பத்து இந்திய ‘இதோ சூழ்ந்துவிட்டார்கள், இந்த போலிஸ்காரர்கள் இப்போது பின்வாசல் வழியே நுழையலாமா என்று நினைக்கிறார்கள்’ என்றெல்லாம் உயிரைக் கொடுத்துக் கத்த அந்தக் காலத்தில் ஒரு பர்க்கா தத் இல்லை. அந்த கட்டடத்தின் வரைபடமோ, அதனைச் சுற்றி எங்கெங்கு போலிஸ் நிற்கிறார்கள் என்பதைக் குறித்து விளக்கும் ஒரு கிராஃபிக்ஸ் வரைபடமோ இருந்திருக்கவில்லை…

View More மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்

அந்த அடக்குமுறையாளர்கள் !

மூலம்: தருண் விஜய், மொழியாக்கம்: ஸ்ரீநிவாசன் ராஜகோபாலன்
நல்ல நோக்கங்களுடைய நமது அன்பிற்குரிய பல ஹிந்துக்கள், சிறிதும் வெட்கமில்லாமல், தாங்கள் ஒரு கிருத்துவ பள்ளியில் படித்திருந்தாலும், கிருத்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று பல முறை பீற்றிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட மேன்மையாளர்களின் பட்டியலில் எனது பேரையும் நான் சேர்க்கச் சொல்லவா? நான் ஒரு கிருத்துவப் பள்ளியில்தான் படித்தேன். எனது ஆசிரியர்களான ஜேக்கப் சார், மற்றும் ஃபாதர் பெஞ்சமின் மீது அன்பு கொண்டுள்ளேன். ஆனால், அவ்வன்பு, “சார், ஒரு ஹிந்துவாக, நான் மதிக்கிற, நீங்கள் சார்ந்துள்ள மதத்தின் பெயரால் சிலர் செய்யும் செயல்களுடன் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறுவதைத் தடுக்கலாமா?ஜனநாயகமும் பன்மையும் இணைந்து நமது நரம்பில் ஓடும்போது, அந்த ஒரு சிலரின் அடக்குமுறையை எதிர்க்க நாம் ஏன் தயங்குகிறோம்?

View More அந்த அடக்குமுறையாளர்கள் !

காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்

[மூலம்: தருண் விஜய்] காஷ்மீருக்காகப் போராடி உயிர்நீத்த படைவீரனின் மனைவியையும், தாயையும் கேட்டுப்பாருங்கள் – அவர்கள் வெறும் ஊதியத்துக்காகத் தான் அந்தத் தியாகம் செய்தார்களா என்று. காஷ்மீரின் பிரிக்க முடியாத அங்கமாக இருந்தும், பொட்டுவைத்துக் கொண்டதற்காகவும், “சிவ சிவ” என்று தங்கள் இறைவனின் பெயரைச் சொல்லி வழிபட்டதற்காகவுமே, முஸ்லிம் ஜிகாதிகளால் துரத்தியடிக்கப் பட்ட காஷ்மீரி இந்துக்களைக் கேட்டுப்பாருங்கள் – அவர்களைத் தாக்கி விரட்டியவர்களிடமே காஷ்மீரைக் கொடுத்துவிடலாமா என்று… ஜம்முவிலிருந்து இதனை எழுதுகிறேன். இங்கே மக்கள் இந்திய வழியில் தேசபக்தி என்றால் என்ன என்று காஷ்மீரின் முஸ்லிம்களுக்குக் காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். சாலைகளும், தெருக்களுக்கும் வெறிச்சோடிக் கிடக்கின்றன, ஊரே அடங்கி விடுகிறது – எதிர்ப்பு ஊர்வலம் இல்லாத நேரங்களில் மட்டும்!

View More காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்

அக அழகும், முக அழகும் – 2

போலி அழகோடு வரும் சூர்ப்பனகையின் வருகையைப் போலி எழுத்துகளால் சித்தரிக்கும் விதம் கம்பனுக்கே உரியது…. சிற்பி சிலை வடிக்கும் பொழுது வேண்டாத பகுதிகளை வெட்டி எடுக்க எடுக்க அழகிய சிற்பம் உருவாவதைப் போல மனதில் உள்ள கோபம், பொறாமை, அகங்காரம், ஆணவம், ஈகோ போன்ற வேண்டாத பகுதிகளை நீக்கினாலே உள்ளம் அழகு பெறும். உள்ளம் அழகானால் முகம் தானே அழகு பெறும்?

View More அக அழகும், முக அழகும் – 2