Hello my name is larry and im currently on a 5 week treatment for worms. The rash that is caused by an antibiotic clomid cost usually appears in three or four days. Sildenafil dapoxetine tablets online, viagra for sale online, generic viagra without prescription, sildenafil dapoxetine online, sildenafil 100mg.
She does not have allergies and she did not complain of any symptoms. It is not clear whether the cheap amoxicillin drug interaction is a cause of or a consequence of the side effects. Goodrx has been used in research studies to assess the effects of a range of compounds, both natural and synthetic, on several protein targets (such as tyrosine kinases, cytochrome p450, etc.) that regulate the activity of several enzymes (such as ptp1b, p-glycoprotein, and glucocorticoid-inhibited.
Buy priligy in the world buy priligy in the world. The majority of patients have reported amoxicillin out of pocket cost excellent results with doxycycline hyclate. It is also a good option if the symptoms don't get better or if the pain and discomfort persists or worsens.
1. 300 ராமாயண வ்யாசத்தில் ஸ்ரீ ராமானுஜன் சொல்லும் முக்யமான சர்வ சம்மதமான விஷயம் என்ன?
வாசிப்புகளை ICONIC, INDEXICAL மற்றும் SYMBOLIC என்று ஸ்ரீ ராமானுஜன் வகைப்படுத்துகிறார். இதை முறையே மறுவாசிப்பு, மாற்று வாசிப்பு மற்றும் மறுப்பு வாசிப்பு என்ற படிக்கு வ்யாசத் தொடரின் முந்தைய பகுதியில் எளிமைப் படுத்த விழைந்தோம். ஒரு ராமாயண வாசிப்பின் மையக்கருத்தை அறியும் படிக்கு அதை வகைப்படுத்த முனைதல் மிகவும் அவச்யமானது. ஸ்ரீ ராமானுஜன் அவர்களது வ்யாசம் இதனை முதன்மைப்படுத்தி மேற்கொண்டு விவாதத்தினை தொடர்ந்துள்ளார். வ்யாசத்தின் தலைப்பிலும் இது தெளிவுபடுத்துள்ளது ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
2. 300 ராமாயண வ்யாசத்தில் ஸ்ரீ ராமானுஜன் சொல்லும் விஷயங்களில் ஏற்றுக்கொள்ளவியலா விஷயம் என்ன?
a. “I have come to prefer the word tellings to the usual terms versions or variants because the latter terms can and typically do imply that there is an invariant, an original Ur-text” (134)
b.”…no text is original, yet no telling is a mere retelling – and the story has no closure, although it may be enclosed in the text.”
அ. ஒவ்வொரு ராமாயண நூலையும் ஒரு தனிவாசிப்பு என்று கருத வேண்டுமே (telling) அல்லாது பாடாந்தரம் என்றோ மாறுபட்ட வாசிப்பு என்றோ அவதானிக்கலாகாது. அவ்வாறு அவதானிக்க விழைவது இப்படிப்பட்ட தனிவாசிப்புகளுக்கெல்லாம் ஏதோ ஒரு நூல் மூல நூல் (Ur-Ramayana) என்று எந்த நூலையாவது உருவகிக்கச் செய்யும். (அஃதாகப்பட்டது மூல நூல் (Ur-Text) என்ற கருத்தாக்கத்தை முற்றிலுமாக மறுக்க விழைகிறார்.
ஆ. வெவ்வேறு ராமாயண காவ்யம் சொல்லும் வாசிப்புகளும் தனிவாசிப்புகள் என்று கருதப்படவேண்டுமேயன்றி மறுவாசிப்புக்களல்ல ( Version or Variant)
இ. அசல் படைப்பு (original) என்று எந்த ஒரு படைப்பையும் சொல்லலாகாது. ஒவ்வொறு ராமாயணக் கதையையும் தனிக்கதையாகப் பார்க்க வேண்டுமேயன்றி மறுவாசிப்பாகப் பார்க்கலாகாது. ஒரு ராமாயணக்கதை பகிரும் ஒரு கதை அதில் முடிவு பெற்றாலும் கூட ராமாயண கதை இன்னது தான் என்று முடிவு பெற்ற கதையும் கிடையாது. (எதிர்காலத்திலும் பல ராமாயணக்கதைகள் சொல்லப்படக்கூடும்.)
மனித சமுதாயத்துக்கு ராமாயண கதை என்ற பெயரில் முதன் முதலில் கிட்டும் ஒரு கதைத் தொகுப்பு ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்பதில் யாருக்கும் வேறு கருத்து இருக்க முடியாது. வால்மீகி ராமாயணம் இயற்றப்படுவதற்கு முன்னர் இந்தக் கதை பாணர்களால் பாடல்களாகப் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று இந்த நூலை படைப்பாய்வுக்கு உட்படுத்திய இந்தியவியலாளர்கள் அபிப்ராயப்படுகின்றனர். ஆனால் அப்படி வால்மீகி ராமாயணத்துக்கு முன்னால் பாடப்பட்ட எந்த ஒரு பாடற் தொகுப்பும் மறுதலிக்கவியலா ஆதாரங்களின் பாற்பட்டு கிடைக்கவில்லை என்பதும் நிதர்சனம். ஆகையால் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற நூல் மூல ராமாயணம் என்பது கிட்டத் தட்ட நூறாண்டுகளுக்கு மேற்பட்டு இந்த நூலை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தி அதன்பாற்பட்டு ஆய்வாளர்களால் எட்டப்பட்ட ஆய்வு பூர்வமான முடிபு.
ஸ்ரீ ராமானுஜன் அவர்களின் வ்யாசம் இப்படிப்பட்ட ஒரு ஆய்வுபூர்வமான முடிபினை மறு ஆய்வுக்கு உட்படுத்தி முறையான ஆய்வுக்கூறுகள் அவற்றினை நிறுவ வேண்டிய விளக்கங்கள் அதன் மூலம் எட்டிய முடிபுகள் என்ற படிக்கு செயற்படாது வெறும் அபிப்ராயமாக மூல ராமாயணம் என்ற கருத்தாக்கத்தை புறந்தள்ளுவது அறவே மறுதலிக்கப்பட வேண்டிய விஷயம். ஆய்வு மூலம் எட்டப்படாத ஒரு தனிநபரின் விருப்பு வெறுப்பு சார்ந்த ஒரு அபிப்ராயம் என்று சுட்டப்பட வேண்டிய விஷயம். ஆகையால் புறந்தள்ளப்பட வேண்டிய விஷயம்.
3. வ்யாசத்தில் காணப்படும் சுய முரண்பாடு என்ன?
300 ராமாயண வ்யாசம் வெவ்வேறு வாசிப்புகளை அதன் மையக்கருத்தை அறியுமுகமாக வகைத்தொகைப் படுத்தியுள்ளது. அதனில் ஒரு வகை ஏற்கனவே அறிமுகமாகி உள்ள நூலிலிருக்கும் கதைக்களனையும் கதாபாத்ரங்களையும் உள்வாங்கி ஆனால் முற்றிலும் முரணான ஒரு கதையை முன்வைக்க விழைவது.
பின்னால் எழுந்த நூல் காலத்தினாற் பின்பட்டது என்றும் அதன் நோக்கம் முந்தைய நூலினை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக மறுதலிக்க விழைவது என்று தெரிந்தும், அது அடையாளப் படுத்தப்பட்ட பின்னரும், முந்தைய நூலையும் பிந்தைய நூலையும் ஒரே தராசில் ஒருசேர நிறுப்பது மதிஹீனமல்லவா?
ஏசுபிரானின் சரித்ரம் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் சுவிசேஷிகளால் பகிரப்படுகிறது. அதில் பல முரண்கள் காணப்படுகிறது என்பதனை பைபிளியல் அறிஞர்களின் ஆய்வுகளினை அடியொற்றி ஸ்ரீ சீதாராம் கோயல் அவர்கள் ஏசு கிறிஸ்து: ஒரு ஆதிக்கத்தின் கருவி (Jesus Christ: An Artifice of Aggression) என்ற நூலில் விவரிக்கிறார். ஏசுபிரானின் வாழ்க்கை சரிதம் சிற்சில மாறுபாடுகளுடன் குரான்-ஏ-கரீமிலும் காணப்படுகிறது. ஹிந்துமஹாசபையின் ஸ்ரீ பாபுராவ் சாவர்க்கர் அவர்கள் எழுதிய நூலான க்றிஸ்துவின் பரிச்சயம் என்ற நூல் ஏசுபிரானை ஹிந்துஸ்தானத்திற்கு வந்தவராகவும் யோக முறைகள் பயின்றவராகவும் சிவபெருமானை வழிபட்டவராகவும் காண்பிக்கிறது.
ஏசுபிரான் என்ற ஒரு நபர் சரித்ரத்தில் வாழ்ந்து மறைந்தாரா என்பது சரித்ர வல்லுனர்களால் விவாதிக்கப்பட்டு மறுதலிக்கப்பட்டுள்ளது. அக்கருத்தாக்கத்தை ஒருபுறம் ஒதுக்கி ஏசுபிரானின் சரித்ரம் பகிரும் விவிலியத்தையும் குரான்-ஏ-கரீமையும் ஸ்ரீ பாபுராவ் சாவர்க்கரின் நூலையும் ஸ்ரீ ராமானுஜனின் வாசிப்பு அலகீடுகளின் படி நிறுக்க முனைவோம். இவைகளில் குரான்-ஏ-கரீம் ஏசுபிரானின் வாழ்க்கை சரிதம் பற்றி ஒரு மாற்று வாசிப்பு கொடுப்பதையும் ஸ்ரீ பாபுராவ் சாவர்க்கர் அவர்களது நூல் கிட்டத்தட்ட ஒரு மறுப்பு வாசிப்பு அளிப்பதையும் வாசகர்கள் எளிதில் அவதானிக்கலாம். ஸ்ரீ ராமானுஜன் அவர்கள் கோட்பாடு சார்ந்து பார்ப்போமானால் விவிலியம் என்பது ஏசுபிரானின் சரித்ரம் பகிரும் மூல நூல் என்று ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது. அது மட்டிலுமல்ல ஏசுபிரானின் வாழ்க்கை சரிதத்தைப் பகிரும் நூற்களில் விவிலியமும் குரான்-ஏ-கரீமும் ஸ்ரீ பாபுராவ் சாவர்க்கர் அவர்களது நூலும் ஒரேதராசில் நிறுக்கப்பட வேண்டும் என்பது நகைப்புக்குறிய வாதமாகத் தென்படவில்லை? அது மட்டுமல்ல, “no text is original, yet no telling is a mere retelling – and the story has no closure, although it may be enclosed in the text” என்ற அவர் கூற்றின் படி இது போன்ற கதையளப்புகளுக்கு முடிவும் கூட கிடையாது. தொடர்ந்து எப்படி வேண்டுமானாலும் திடீரெக்ஸ் நூற்கள் எதிர்காலத்திலும் எழுதப்படலாம். திடீரெக்ஸ் மஹிஷாசுர கதையளப்புக்களின் பாற்பட்டு நாளைக்கு வேறொரு அன்பர் ஏசுபிரான் சிவபெருமானை வழிபட்ட அன்பர் என்று மட்டிலும் உருவகிக்காது, உலகத்திலே க்றைஸ்தவ மதத்தை வேரும் வேரடி மண்ணுமாக சிதைக்க விழையும் ஒரு சான்றோராக உருவகப்படுத்திக் கூட ஒரு நூலை எழுத முனையலாம் தான். அப்படிப்பட்ட ஒரு நூலையும் விவிலியத்தையும் ராமானுஜன் கோட்பாடு சார்ந்து ஒரே தராசில் நிறுவ முனைவது நகைப்புக்குறியதாக அறியப்படுமா இல்லையா?
4. மூல நூல் (Ur-Ramayana) ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்றால் அதற்குப் பின்னால் எழுந்த நூற்கள் தரத்தில் தாழ்ந்தவையா அல்லது மாற்றுக்குறைந்தவையா?
இராமாவதாரம் என்ற கம்பநாட்டாழ்வாரின் நூல் ஆதிகவி வால்மீகியின் ராமாயண நூலை அடியொற்றி எழுதப்படும் நூல் என்று கம்பநாட்டாழ்வார் தனது நூலின் வாயிலாகவே தன்னுடைய அபிப்ராயமாகவே வெளிப்படுத்துகிறார் என்று பார்த்தோம் இல்லையா?
இதனை ஸ்ரீமான் ஜடாயு அவர்கள் தனது கீழ்க்கண்ட விளக்கங்களால் மேலும் அழகாகத் தெளிவு படுத்துகிறார் –
“கம்பர் மட்டுமின்றி காளிதாஸன், பவபூதி போன்ற பலரும் வால்மீகி முனிபுங்கவரின் ராமாயணத்தை அடியொற்றி எழுதுவதால் வால்மீகி முனிவரின் நூலுடைய தரத்துக்கு ஒருமாற்று குறைந்தது இவர்களுடைய படைப்புகள் என்பது யாருடைய வாதமும் கிடையாது. இந்த அனைத்துப் புலவர் பெருமக்களும் அவர்களுடைய கவிதா மேதாவிலாஸத்துக்கும் காவியம் படைக்கும் அவர்களது கற்பனைத்திறனுக்கும் ராமாயண காவ்யத்தினை தங்களது திறமையால் அழகாக தனித்துவத்துடன் வடித்த மாண்பிற்கும் போற்றப்பட வேண்டும். இவர்களெல்லோரும் வால்மீகி முனிவரை அடியொற்றுபவர்களாகப் பார்க்க வேண்டுமேயல்லாது அவருடைய போட்டியாளர்களாகப் பார்க்க விழைவது பிழையான புரிதல்.
ராமாயண நூற்களின் புராதனம் மற்றும் நம்பகத்தன்மை சார்ந்த முதல் கதைத் தொகுப்பு என்ற வினாவின் பாற்பட்டு இந்த விஷயத்தை அணுகமுனைந்தால் ஹிந்துஸ்தானத்தின் சரித்ரம், பண்பாடு, சமூஹவியல் போன்ற நோக்குகள் சார்ந்து ஆதிகவி வால்மீகி இயற்றிய வால்மீகி ராமாயணமே மூத்த மற்றும் மூல ராமாயணம் என்று அறியப்பட வேண்டும். ஏனெனில் ராமாயணக் கதை பகிரும் மற்றைய அனைத்து நூற்களும் காலத்தால் இதற்குப் பிந்தியவை என்பது மறுதலிக்கப்பட முடியாது என்பதால் என்ற கருத்து ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய கருத்து.
ஆகவே பிற்காலத்திய படைப்பாளர்கள் வால்மீகியின் விவரணைகளிலிருந்து மாறுபடுவது என்பது தங்களது காலத்திய சூழலையும் அறநெறிகளையும் தங்களது படைப்பில் வடிக்க முனையும் முயற்சியாகத் தான் கருதப்படவேண்டும். வால்மீகி முனிவரின் ஆதிகாவ்யத்தில் காணப்பட்ட பிழைகளையும் தவறுகளையும் களையும் படிக்கு பிற்காலப் படைப்பாளர்கள் தங்களது படைப்பினை சமைத்தார்கள் என்று சில அறைகுறை அறிஞர்கள் கருத்துப் பகிர்வது நகைமுரணான கருத்து என்று புறந்தள்ளப்படவேண்டிய கருத்து”
எனது கூடுதல் விளக்கம்:
ஹிந்துஸ்தானத்தில் ராமாயணத்தை வெவ்வேறு பாஷைகளில் காவியச்சுவை மிளிர படைத்த எண்ணிறந்த கவிஞர்களும் தாங்கள் வால்மீகி முனிவரை அடியொற்றுவதாக அவர்கள் தரப்பிலிருந்தே அதைப் பகிருகிறார்களே அன்றி அவர்கள் அப்படியொரு கருத்தைச் சொல்லுவதாக ஆதாரமின்றி அப்படி ஒரு கருத்து அவர்கள் மீது சுமத்தப்படவில்லை என்பது நோக்கத் தக்கது. சதாவதானி டாக்டர் ஆர் கணேஷ் வால்மீகி அவர்களை ஆதி கவி என்று சுட்டும் அதே வேளையில் வேறெந்த கவிஞரையும் மாற்றுக்குறைவாக தனது வ்யாசத்தில் சுட்டவில்லை என்பது அழுத்தம் திருத்தமாகச் சுட்டப்பட வேண்டிய விஷயம்.
5. நாட்டார்வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் பற்றிய சர்ச்சை.
இந்த விவாதத்தை தனது பக்கத்தில் அறிமுகம் செய்யப்புகும் போது ஸ்ரீ ஜடாயு அவர்கள் நாட்டார்வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகள் பலவற்றையும் தேடித் தொகுத்து அவற்றை ஆவணப்படுத்த முனைந்த ஸ்ரீ ஏ. கே. ராமானுஜன் அவர்களது முயற்சியை விதந்தோதுகிறார்.
மேற்கொண்டு விவாதத்தில் இப்படிப்பட்ட நாட்டார்வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகள் பற்றி ஸ்ரீ ஜடாயு அவர்கள் பகிரும் கருத்துக்களைப் பார்ப்போம்.
மகேஷ் சங்கர் என்ற அன்பர் விவாதத்தின் போது பற்பல நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகள் மூல நூலாகிய ராமாயணக் கதைக் களனை தாறுமாறாக்கி கவிழ்க்கும் தன்மையவை என்ற கருத்தினை முன்வைக்கிறார். (கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று கோஷமிட விழையும் விடலைகள் சிலர் நாட்டார்வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகளின்ன் தொன்மையைப் பற்றியும் கூட கூசாது கதைக்க முயலுவதை கூர்ந்து அவதானிக்க வேண்டும் – என் விளக்கம்)
அதனை ஸ்ரீ ஜடாயு மறுதலிக்கும் கருத்துக்கள் கருத்தாழம் பொதிந்தவை –
“தொன்மையான நாட்டார் வழக்கு ராமாயணக் கதைகள் என்று பரப்புரை செய்யப்படும் கதைகளுடைய தொன்மையின் உண்மைத்தன்மை எத்தகையது என்பது முதற்கண் நோக்கத் தக்கது. எந்த வடிவத்தில் இவையெல்லாம் ஸ்ரீ ராமானுஜன் போன்ற அன்பர்களால் படியெடுக்கப்பட்டனவோ அதை அவதானித்து இவையெல்லாம் அதிக பக்ஷமாக 200 வருஷங்களுக்கு முற்படாத காலத்தில் சமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது துலங்கும்.
புழக்கத்தில் இருந்துள்ள நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக்கதைகளுக்கு மூல நூலாகிய வால்மீகி ராமாயணம் என்ற நூலைப் பற்றி ஒரு அறிமுகம் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை என்பது முக்யமாக அவதானிக்கத் தக்க விஷயம். அப்படியிருக்கையில் மூல நூலான வால்மீகி ராமாயணத்தை தாறுமாறாக்கி அவை கவிழ்ப்பதற்கு முயற்சி செய்தன என்பது நகை முரணான விஷயம். தாங்கள் அறியக்கூட இல்லாத ஒரு நூலை தாறுமாறாக்கி அவற்றை கவிழ்ப்பதற்கு இவர்கள் முனைந்தார்களா 🙂
நாட்டார் வழக்குக் கதைகள் பலவும் அந்தந்த உள்ளூர் / க்ராமத்து கற்பனைகளை உள்ளடக்கியவை. பற்பல சிந்தனைகளை உள்ளடக்கியவை அப்படிப்பட்ட கற்பனைகள். மிக உயர்வான சிந்தனைகளும், அதோடு வக்ரமான மற்றும் கோணலான சிந்தனைகளும் கூட இப்படிப்பட்ட கதைகளில் காணக்கிட்டுகின்றன என்பதை மறுக்க இயலாது. உள்ளூர்களில் சொல்லப்படும் கதைச் சொற்பொழிவுகளிலிருந்தும் நாட்டிய நிகழ்ச்சிகளிலிருந்தும் சிற்பங்களிலிருந்தும் ராமாயணங்கள் என்று தாங்கள் புரிந்து கொண்ட ஒரு கதை /பல கதைகளின் மீது தங்கள் கற்பனையின் பாற்பட்ட புரிதல்களை சுமத்தி அதனையொட்டி சமைக்கப்பட்டவை இப்படிப்பட்ட உள்ளூர் நாட்டார் வழக்கு வாய்வழி ராமயணக் கதைகள். இவ்வாறான புதிய சேர்த்தல்கள் காலப்போக்கில் இப்படிப்பட்ட கதைகளுடன் தொடர்ந்து இணைந்து கொண்டு வந்தன. ஸ்ரீ ஏ.கே.ராமானுஜன் போன்ற ஒருவர் இவற்றைத் தொகுக்கும் காலத்தில், மூல வடிவத்திலான ராமாயணக்கதையுடன் சேர்த்து, உயர்வான, கோணலான மற்றும் வக்ரமான உள்ளூர் கற்பனைகளைக் கலந்து வடிக்கப்பட்ட ஒரு கலவையாகவே நாட்டார் வழக்கு வாய்வழி ராமாயணக் கதைகள் இருந்தன. காலக்கணிப்பின் பாற்பட்டு 200 வருஷங்களுக்கு முற்படாத ஒரு கலவை இது என்று கருதுவதற்கே இடமுள்ளது”.
(சதாவதானி டாக்டர் ஆர்.கணேஷ் அவர்கள் இப்படிப்பட்ட ராமாயணக்கதைகளை இலக்கிய வடிவம், மொழியியல் மற்றும் குரிப்பிட்ட பாஷாசைலிகளைச் சார்ந்து தனது வ்யாசத்தில் காலக்கணக்கின் அதிக பக்ஷத்தை 500 வருஷங்களுக்கு முன் வைக்கிறார் – என் விளக்கம்)
6. மூல நூல் வால்மீகி ராமாயணம் என்றால் கம்ப ராமாயணம் மற்றும் தாய்லாந்திய ராமாயணம் போன்ற பிந்தைய நூல்களின் தனித்தன்மை, நம்பகத்தன்மை , காவிய / இலக்கியச் சிறப்பு (தனித்துவம் ) போன்றவை குறைத்து மதிப்பிடப்பட வேண்டுமா?
நாலாவது வினாவில் ஸ்ரீ ஜடாயு அவர்களால் இந்த விஷயம் முன்னமேயே தர்க்க பூர்வமாகத் தெளிவு படுத்தப்பட்டுள்ளது. பின்னிட்டும் மேற்கொண்டு அவர் பகிரும் சில தகவல்கள் –
“வால்மீகி ராமாயணத்துக்கும் கம்ப ராமாயணத்துக்கும் ஏதோ பிணக்குகள் இருப்பது போன்ற ஒரு சித்திரத்தைக் கட்டமைக்க விழைவது சரியில்லாதது. ஏனெனில் கம்பர் ஆதிகவி வால்மீகி முனியின் அடியொற்றித் தனது காலகட்டத்து சூழலையும் அறநெறிகளையும் அதன் வடிவத்தில் புகுத்தி அதற்கு ஒரு வடிவம் தந்தார் என்பது நிதர்சனம்.
மூல நூலான வால்மீகி ராமாயணத்தின் அடியொற்றி கால கதியில் அதன் சூழலையும் அறநெறிகளையும் பின்னர் வடிக்கப்பட்ட நூற்களில் புகுத்திய படிக்கு பிந்தைய நூற்கள் அனைத்தும் அதன் தனித்துவம் மற்றும் நம்பகத்தன்மையை தன் வசம் கொண்டவை என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் கிடையாது. தாய்லந்திய அறிஞர்கள் வால்மீகி ராமாயணத்தின் மூலத்தன்மையை / அதன் புராதன மேன்மையை வெகுவாகக் கொண்டாடுபவர்கள் என்பதில் எந்த சம்சயமும் இல்லை. சாரமற்ற இடதுசாரிக்கயமைக் கருத்துக்களை தாய்லாந்திய அறிஞர்கள் புறந்தள்ளுவதால் தான் ஹிந்துஸ்தானத்தின் மேன்மையான ராமாயண அறிஞர் பெருமக்களை தங்களது ராமாயண நூல் விளக்க விவாதக் களன்களுக்கு அவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து ஹிந்துஸ்தானத்து ராமாயண அறிஞர் பெருமக்களது விளக்கங்களை ஆர்வமுடன் கேழ்க்கிறார்கள்”.
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் என்ற ஒரு நூல் ஹிந்துஸ்தானத்திலும் உலகின் மற்றைய பகுதிகளிலும் புழங்கும் நூற்கள் அனைத்துக்கும் மூல நூலானது என்றும் மற்றவை அனைத்தும் அதன் அடியொற்றி அதனின்று இணங்கியும் மாறுபட்டும் சமைக்கப்பட்ட நூற்கள் என்ற தர்க்கத்தின் பாற்பட்ட ஒரு பார்வையை மறுதலிக்க விழையும் இடதுசாரிக்கயமைத் தனத்தினை உருவகித்துக் கட்டமைக்கப்பட்ட கருத்தானது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒரு கருத்து.
எந்தவொரு மையக்கருத்தோ அச்சோ இல்லாமல் பற்பல மக்களால் பற்பல ப்ரதேசங்களில் பற்பல விதத்தில் சொல்லப்படும் பற்பல கதைக்களன்களால் அறியப்படும் அனைத்து விதமான ராமாயணங்களும் ஒரே தராசில் ஒரு சேர நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து இடதுசாரிக் கயமைக்காரர்களது. இது தர்க்கத்திற்கும் யதார்த்தத்திற்கும் நிதர்சனத்துக்கும் மாறுபட்டது.
1980-90 களில் முன்னெடுக்கப்பட்ட ஸ்ரீ ராமஜன்மபூமி இயக்கத்தை நீர்க்கச் செய்ய இதுபோன்ற உளுத்துப்போன வாதங்களை முன்வைக்க விழைந்தனர் இடதுசாரிக் கயமையாளர்கள் என்பது கவனிக்கத் தக்கது. புராதன காலத்திலிருந்து இன்றுவரை ஹிந்துஸ்தானத்து கலாசாரம், பண்பாடு மற்றும் சரித்ரத்தில் ராமபிரான் மற்றும் ராமாயண நூலினைப் பற்றித் தொடரும் ஒரு மதிப்பினை அழித்தொழிக்கவும் அதனை இழிவு செய்யுமுகமாகவும் தான் இடதுசாரிச் சதி மற்றும் கயமைத்தனத்தை ஒட்டிய இப்படிப்பட்ட நிலைப்பாடுகள் எடுக்கப்படுகின்றன. இதில் தர்க்கபூர்வமான அல்லது அறிவுபூர்வமான நிலைப்பாடுகள் ஏதுமில்லை என்பது கவனிக்கத் தக்கது.
இது போன்ற தீயதான சாரமற்ற இடது சாரி வாதங்கள் தர்க்கபூர்வமாக முற்றிலுமாக மறுதலிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பலவித இந்து விரோத கும்பல்கள் அறிவுஜீவிகள் என்ற போர்வையில் இந்த உளுத்துப்போன வாதங்களை மீண்டும் தூசிதட்டி எடுத்து ஹிந்துஸ்தான அறிவியக்கத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். அதனால் தான் ராமாயணத்தை இழிவு செய்யும் பல சாரமற்ற கூச்சல்களும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன என்பது கவனிக்கப்பட வேண்டியது.
(முற்றும்)