மூலம்: பல்பீர் புஞ்ச் எழுதிய கட்டுரை (இந்தியன் எக்ஸ்பிரஸ் 18.10.2014)
தமிழில்: எஸ்.ராமன்
இந்தியாவையும், அதன் ஆணி வேரான இந்துத்துவத்தையும், வெகு காலமாகத் தனக்கே உரிய காமாலைக் கண்ணோட்டத்தில் கவனித்துக் கொண்டிருக்கும் மேலை நாடுகளின் ஓரகப் பார்வை மட்டும் தவிர்க்கப்பட்டிருந்தால், அமைதிக்கான இந்த வருடத்தின் நோபல் பரிசுத் தேர்வுகள் அவை பற்றி ஆவலுடன் கேட்க விரும்பும் ஆர்வலர்கள் அனைவரது உள்ளங்களையும் குளிர வைத்திருக்கும்.
En realidad se trata de un medicamento específico para ponerle a un paciente al tratamiento, porque en el más allá de las dosis quedan tratamientos de control, es decir, de mantener sin infierno el pulmón y el sistema. This is also Châlons-en-Champagne clomid online a popular medicine to treat an infection in children of all ages. Clomid costco is the name for the drug clomiphene citrate when taken in a regimen with ovulatory doses and the medicine clomid to treat women with infertility as well as men with sexual dysfunction.
There are no prescription requirements to purchase the drug, however. I usually start by telling the reader about how a good agent knows the best deal, how to prepare for a home search, how to prepare the home for selling in the event of a downturns in the clomiphene citrate price in india economy and what to do if you do find a home you love. You can buy nolvadex online and get the best deal at our pharmacy and get the same effects without any side effects.
How to buy clomid cheap; buy clomid from a doctor without prescription; buy clomid no prescription no prescription. Je hoeft hem niet te vertellen furosemide tablets 40 mg for sale dat zijn raketen niet goed gef. Patients with known allergy to ciprofloxacin should also receive cefpodoxime proxetil.
விஞ்ஞானத்துக்கான நோபல் பரிசுகளை தீர்மானிக்கும் ஒரு குழு தீர்மானிக்காது, அமைதிக்கான பரிசை நார்வே நாட்டின் பாராளுமன்றக் குழு ஒன்று தேர்வு செய்கிறது. அதனால் அந்தத் தேர்வில் அரசியல் சாயமும், உணர்ச்சிகளும் கலப்பது இயற்கை என்பது எழுதாத விதி போலத் தெரிகிறது. கிடைத்தற்கரிய அந்தப் பரிசைப் பெறுவதற்கு, அது கிடைக்கப் பெற்றவர்கள் எல்லா விதத்திலும் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. ஆனால் பரிசுத் தேர்வுக்காக நார்வே குழு அறிவித்துள்ள காரணத்தை ஒத்துக்கொள்வதில் தான் பிரச்சினை இருக்கிறது. “கல்விக்கான ஆதரவையும், வன்முறைக்கான எதிர்ப்பையும் திரட்டுவதில் ஓர் இந்து முஸ்லீம் உடனும், ஓர் இந்தியன் பாகிஸ்தானியனுடனும் சேர்ந்து போராடுவது முக்கியம் என்று இந்தக் குழு கருதுகிறது” என்று அறிவிக்கும் அந்தக் குறிப்புதான் உறுத்துகிறது.
பாரதத்தையும் பாகிஸ்தானையும் ஒரே தட்டில் சரி சமமாக வைத்து, காலம்காலமாக சிறிதும் மாறாத அந்த ஓரகப் பார்வை பார்க்கும் மேலை நாடுகள் தவிர வேறெந்த நாடுகளும் கல்வி விஷயங்களிலோ, குழந்தைகள் நலன் காப்பதிலோ இவ்விரு நாடுகளின் பங்களிப்பை ஒருசேரப் பார்ப்பது கிடையாது. இந்தியாவின் அரசியல் சட்டப்படி கல்வி கற்பதற்கான உரிமை குழந்தைகளுக்கு இருக்கிறது; மேலும் அரசியல் உரிமைச் சட்டப்படி குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதிலும் தடை இருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண்கள் கல்வி பெறுவது 80 விழுக்காடையும் தாண்டி, சில இடங்களில் 100 விழுக்காடையும் எட்டியிருக்கிறது.
குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவதில் நடைமுறையில் பல இடங்களில் குறை இருக்கிறது. அது தவிர, ஒரு குடும்பத்தின் பரிதாபகரமான ஏழ்மை நிலையால் குழந்தைகளை பணிக்கு அனுப்பாமல் இருப்பதற்கு பெற்றோர்களாலும் முடிவதில்லை. இதற்கான தீர்வு சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவதிலும், குழந்தைகளின் கல்வி உரிமையை நன்கு நிலைநாட்டச் செய்வதிலும் தான் இருக்கின்றன. அவ்வாறு அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதிலும், இரகசியமாகச் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படுவதைப் பலரும் அறியும் வண்ணம் வெளியே கொண்டுவருவதிலும் நோபல் பரிசு பெற்ற இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி தொடர்ந்து தொண்டாற்றி வருகிறார்.
அவருடையது போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சேவையால் இந்திய அரசாங்க நிர்வாகத்தின் வலிமை நன்கு கூடி வருகிறது. தற்போது கிடைத்துள்ள நோபல் பரிசு தரும் வளத்தால் அந்த வலிமை மேலும் கூடி, சட்ட திட்டங்கள் 100 விழுக்காடு அளவும் அமல்படுத்தப்பட்டு, கல்வி உரிமையும் நிலைநாட்டப்பட்டு பெருமளவிற்கு நன்மை விளையும் என்பது நிச்சயம். இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படியும், இந்தியச் சட்ட அமலாக்க முறைப்படியும் நாம் ஆண்களையும், பெண்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. மேலும் கல்வி பயிலும் விஷயத்தில் பல தலைமுறைகளாகப் பெண்களுக்கு இருந்த அநீதிகளை நீக்கும் பொருட்டு, பல மாநிலங்களில் பெற்றோர்களுக்குப் பல விதமான விசேஷமான வசதிகள் செய்து தரப்பட்டு, அவர்கள் தங்கள் பெண்களைப் படிக்க அனுப்பி வைப்பதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டிருக்கிரார்கள்.
அவ்வாறான நிலைமை பாகிஸ்தானில் இல்லை. பதினைந்தே வயதான மாலாலா யூசுப்ஸை பாகிஸ்தானியப் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடிய போது, பெண் கல்வியை முஸ்லிம் மதக் கொள்கை ஏற்காது என்ற காரணத்தால் அவளைக் கொல்வதற்காக முஸ்லீம் தீவிரவாதிகளான தாலிபான் துப்பாக்கியால் சுட்டார்கள். அவள் சாகாமல் உயிர் தப்பிப் பிழைத்ததற்கு, அவள் உடனே பாகிஸ்தானில் இருந்து சிகிச்சைக்காக லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டதே காரணம். அவளைக் கொல்வதற்குத் தாலிபான் பயங்கரவாதிகள் இன்னமும் பாகிஸ்தானில் காத்துக் கொண்டிருப்பதால் அவள் அங்கு செல்ல முடியாது லண்டனிலேயே தங்கி வேலை செய்கிறாள். இஸ்லாமிய சட்டமுறையை முஸ்லீம் மத குருமார்கள் இவ்வாறு அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளதால் அவர்கள் மாலாலாவின் பெண் கல்வி உரிமைக்கான போராட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். மத குருமார்களின் இந்த எதிர்ப்பு பயங்கரவாதிகளின் எதிர்ப்புக்கு ஆதரவாக இருக்கிறது.
இதற்கு முற்றிலும் நேர் மாறாக, இந்திய அமைப்புச் சட்டம் எந்தவொரு மதத்தையும் வேறுபடுத்தி ஆதரிக்கவில்லை. குறிப்பிட்ட மதங்களின்படி வந்த வழிமுறைகளும், அதன் சம்பிரதாயங்களும் எதுவானாலும், அனைத்துக்கும் பொதுவான சட்டத்தின்படியே நீதித்துறை செயல்படுகிறது. அதனால் இந்த இரண்டு தேசங்களுக்கும் இடையே உள்ள அடிப்படையான வேற்றுமைகளை நோபல் பரிசுக் குழு அறியாது இருப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
மேலும் நோபல் பரிசு பெற்ற அந்த இரண்டு நபர்களின் போராட்டங்களுக்கு இடையே எந்தவொரு ஒற்றுமையும் கிடையாது. இந்திய அரசியல் அமைப்பு அளித்துள்ள உரிமைகளையும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களையும் அமல்படுத்த வேண்டி சத்யார்த்தி போராடினார். ஆனால் பாகிஸ்தான் பெண்ணோ, அவர்களது மதமும், அந்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகளும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து மறுக்கும் பெண்களின் கல்வி உரிமைக்காகப் போராடினார். சத்யார்த்தி தனது தாய் நாடான இந்தியாவில் இருந்துகொண்டு போராடுகிறார். மாலாலாவோ தன் தாய் நாட்டில் தங்கியிருக்க முடியாது, பாதுகாப்பு வேண்டி அடைக்கலம் புகுந்து இங்கிலாந்து போன்ற நாட்டில் தங்கிச் சேவை செய்யும் நிலையில் தான் இருக்கிறாள். இது தவிர, இந்தியாவோ பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுகிறது. ஆனால் பாகிஸ்தானோ பயங்கரவாதத்தைத் தன் மண்ணில் ஊக்குவித்து வளர்த்து, அதைத் தன் நாட்டில் உள்ள சிறுபான்மையோர் மீதும், அண்டை நாட்டின், முக்கியமாக இந்தியா, மீது கட்டவிழ்த்து விடுவதை ஓர் ஆயுதம் போலப் பயன்படுத்துவதில் அதன் நிர்வாகமே பங்கு வகிக்கிறது.
இந்திய அரசியல் அமைப்பு வரையறுத்துள்ள “சிறுவர்களைப் பணியில் அமர்த்துவதைத் தடுக்கும்” சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்கிற போது, அதன் வேறோர் கோணத்தை நாம் கவனிக்காது இருந்து விடக் கூடாது. நாம் விவாதிக்கப் போகிற அந்த அம்சம் ஒரு சிறுவனின் மதத்தையோ, குலத்தையோ சம்பந்தப்படுத்திச் சொல்லப்படுவது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கல்வி கேள்விகளுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்து படிப்பறிவைப் பரவலாக்கும் நம் முயற்சியில், தச்சு வேலை, இயந்திரத் தொழில், கட்டுமான வேலை, உலோக வார்ப்புத் தொழில், நுணுக்கமான பொற்கொல்லன் வேலை போன்ற பட்டறிவை வளர்க்கும் கைவினைப் பணிகளில் ஒருவன் தேர்ச்சி அடையும் மகிமையை அனைவரும் உணர வேண்டிய பொறுப்பை நாம் மங்கச் செய்துவிட்டோம். அதன் விளைவாக, ஒருவன் படித்திருந்தாலும் அவன் உருப்படியானதொரு வேலை செய்யத் தெரியாத நிலையை உண்டாக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கி விட்டதோடு, கைவினைப் பணியாளர்களை வளர்க்கவும் தவறி விட்டோம்.
பண்டைய வழக்கப்படி குடும்பத் தொழில் ஒன்று அவரவர் கைவினையால் சந்ததி சந்ததியாக வரும் வழிகள் அடைக்கப்பட்டு விட்டதால், இன்று கைவினைப் பணியாளர்களே தங்கள் பிள்ளைகள் தாங்கள் செய்யும் பணிகளைத் தொடராமல் அலுவலகம் சென்று ஆபீசராக வேலை பார்க்கப் போவதையே ஊக்குவிக்கின்றனர். இந்த இமாலயத் தவறை நன்கு உணர்ந்த கல்வியாளர்கள் நடுநிலைப் பள்ளிக் கல்விக்குப் பிறகு தொழில் கல்வி ஒன்றை ஒருவன் தொடரவும், மேல்நிலைப் பள்ளிக் கல்விக்குப் பின்பு அது போன்றவற்றில் சிறப்புத் தகுதி பெறவும் வழி வகுத்திருக்கின்றனர்.
பள்ளிக்குச் செல்ல வேண்டிய சிறுவர்கள் வேலைக்குச் செல்வது தகாது என்னும்போது, அந்தச் சிறுவர்கள் தங்களது பெற்றோர்களுடன் இருந்து கூடமாட வேலை செய்து பரம்பரைத் தொழிலையும் கற்க முடிவதில்லை; அவர்களது ஏழ்மையால் படிப்பறிவுக் கல்வியையும் கற்க முடியவில்லை. அதைத் தீர்க்கும் முகமாக மேல்நிலைப் பள்ளி வரை ஒருவன் கற்பதற்கு கல்வியை குறைந்த செலவில் அளிக்க அரசு வழி வகை செய்திருந்தாலும், தொழில் கல்வித் திறனைப் பற்றிய சமூகத்தின் பார்வையை மாற்றிச் சரி செய்வதற்கு நாம் இன்னமும் அடியெடுத்து வைக்கவில்லை.
பருவ வாயிலில் இருக்கும் ஒரு சிறுவன் மோட்டார் மெக்கானிக்காக இருக்கும் ஒருவரிடம் சென்று தொழில் செய்யுக் கற்றுக்கொள்ளப் போனால், அவன் வளர்ந்து பெரியவன் ஆகும் சமயம் தன் காலில் தானே நிற்கும் தகுதி அடைவதோடு, வேறோர் இடத்தில் நல்ல வேலை கிடைக்கும் லாபத்தையும் அடைகிறான். ஆனால் அதே கால அளவிற்குப் பள்ளி சென்று படித்து விட்டு வரும் 18-வயதை உடைய ஒருவன் குறிப்பிடத் தக்க தகுதியை அடையாதது மட்டும் இன்றி, தன்னால் என்ன தொழில் செய்ய முடியும் என்றும் தெரியாது இருக்கிறான். அதனால் சிறுவர்களைப் பணியில் அமர்த்துவது நல்லது என்ற கருத்து இங்கே வைக்கப்படவில்லை; மாறாக செய்தொழில் திறனை வளர்ப்பதும், அந்த வழியில் தொடர்ந்து கற்பவர்களும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குபவர்களைப் போலவே மதிக்கப்பட வேண்டும் என்றுதான் இங்கே வலியுறுத்தப்படுகிறது. அவ்வாறு செய்யப்பட்டால் நமது கல்வித் திட்டத்தில் உள்ள குறைகளை நீக்கியவாறும் இருக்கும்; நம் சமுதாயத்தில் தொழில் தொடர்பாக உணரப்படும் ஏற்றத் தாழ்வுகளைப் போக்கியவாறும் இருக்கும்.
சிறுவர்கள் பள்ளிக்கும் செல்ல வேண்டும். அதற்கும் மேலாக, தங்களது முந்தைய பணிகளால் நன்கு பெயர் வாங்கி, ஏற்றுமதி மார்க்கெட்டிலும் நல்ல புகழ் பெற்றவர்களிடம் தொழில் செய்து, அவர்களிடம் இயற்கையாகவே படிந்துள்ள பல விதமான திறன்களைக் கற்றுக்கொள்ளவும் வேண்டும். அத்தகைய சிறுவர்கள் சட்டத்திற்குப் புறம்பாகத் தொழிலில் ஈடுபடுத்தப்படுபவர்கள் என்ற கருத்து நீங்கி, மாறாகத் தங்களது கடின உழைப்பால் நுண்ணிய திறன்களை வளர்த்துக்கொண்டு, பொருளாதாரத்திற்கும் தங்களாலான சேவையை அளிக்கிறார்கள் என்ற கருத்து வளர வேண்டும். அவ்வாறான நிலையில் வேலை செய்யும் திறமை கொண்டவர்களும் வளர்வார்கள்; வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் ஒரு தீர்வு கிடைக்கும். தொழிற்சாலையில் வேலை செய்தால் தான் தொழிற் பயிற்சி பெறுவதாக அங்கீகரிக்கப்படும் நமது சட்டங்கள் சீர்திருத்தப்பட்டு, ஏற்கனவே புகழ் பெற்றுள்ள தொழில் கலைஞர்கள், மற்றும் மூத்தோர்களிடம் எடுத்துக் கொள்ளப்படும் பயிற்சியும் அவ்வாறே அங்கீகரிக்கப்பட வேண்டும்.
ஒரு போலீஸ் கான்ஸ்டபில் ஆவதற்கும், தகுதி ஏதுமே இல்லாது ஓர் ஆசிரியர் ஆவதற்கும் எவரிடம் கையூட்டு கொடுக்கலாம் என்று அலையும் ஒரு கும்பல் இருக்கும் நாடாக இல்லாமல், இந்தியா பல வகையான திறங்கள் கொண்ட பலதரப்பட்ட மக்கள் இருக்கும் ஒரு பரந்து, விரிந்த தொழில் சந்தையாக மாறவேண்டும். அவ்வாறான ஒரு சீர்திருத்தத்தை, எந்த விதமான இடையூறுகள் இருந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி வந்து, நிறைவேற்றும் அத்தகைய மாமனிதர்களில் ஒருவருக்கு அடுத்த நோபல் பரிசு கிடைக்க வேண்டும்.