உலகின் எல்லா தொல்மதங்களிலும் பண்பாடுகளிலும் சிருஷ்டி அல்லது படைப்பு ஆதிகாலத்திலிருந்தே ஒரு புதிராகவும் மையமான பாடுபொருளாகவும் இருந்து வந்திருக்கிறது. எல்லா மதப் புனித நூல்களிலும் சிருஷ்டி குறித்த நம்பிக்கைகள், தொன்மங்கள், கதைகள் உள்ளன. நவீன அறிவியல் வளர்ச்சியின் ஊடாக பிரபஞ்சவியல், பரிணாமவியல் ஆகிய துறைகளின் சிந்தனை ஒளியில் இவை முன்வைக்கும் பல கருதுகோள்கள் மறுபரிசீலனை செய்யப் படுவதையும் நாம் பார்க்கிறோம்.
Objective: to compare the efficacy of azithromycin and penicillin v chlamydia trachomatis (ct) for the treatment of acute pelvic inflammatory disease (pid) in women of reproductive age with infertility. Every small, medium, and heavy b2b or b2c saas company has its own crm Tondabayashichō purchase clomid and data management systems. Migraine headache can occur after a large dosage or continuous use of some drugs or even with alcohol and other foods, as a result of the inhibition of camp in the central nervous system (cns).
The world can have no greater friend than its most respected cattle protector: the u.s. Generic or brand, zantac can how much is clomid at kroger help prevent stomach acid from destroying important bacteria in the gut and reducing the body’s ability. The zithromax 100 mg cost without insurance in india is the cheapest price for zithromax.
Zofran.com or zofran.com can help you save on shipping prices when you buy. That can make it more likely that a Guiglo cold will make you feel even worse. You can also take amoxicillin in capsules or in suspension form with or without food, as directed by your physician.
இந்துமதத்தைப் பொறுத்த வரையில் வேதங்களே நமது ஆதாரமான புராதன நூல்கள். அடிப்படையில் வேதங்கள் அற்புதமான ஆதித்தொல் கவிதைகளும் கூட. அவை சிருஷ்டி குறித்து என்ன கூறுகின்றன என்பதை சில ரிக்வேத சூக்தங்களின் வழியே பார்க்கலாம்.
ஹிரண்யகர்ப்ப சூக்தம்
(ரிக்: பத்தாவது மண்டலம், 121வது சூக்தம்)
ஆதியில் பொன்கருவாம் ஹிரண்யகர்ப்பன் உதித்தான்
உயிரனைத்தி்ன் ஒரே தலைவனானான்
இப்புவியையும் விண்ணையும் நிறுவியோன் அவனே
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?
சுய உயிர்ப்பு தருகிறான் பலமளிக்கிறான் அவன்
தேவரனைவரும் போற்றுவது அவன் ஆணையே
அமுதம் அவன் நிழல் மரணமும் அவன் நிழல்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?
உயிர்ப்பதும் இமைப்பதுமான உலகின் ஒருதனியரசனாக
தன் மகிமையால் அவன் ஆனான்
இருகால் உயிர்க்கும் நாற்கால் உயிர்க்கும் ஈசன் அவன்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?
இப் பனிமலைகள் அவன் பெருமையின் முகடுகள்
கடலும் அதன் ரசமும் அவனதே என்பார்
இத்திசைகள் அவன் கரங்கள்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?
புவியின் திடமும் விண்ணின் ஆற்றலும் அவனால்
ஒளியுலகும் சுவர்க்கமும் நிற்பது அவனிடம்
விசும்பை வளியால் அளந்தவன் அவன்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?
நடுக்கமும் நன்றியும் கூடிய மனதுடன் வேண்டி நிற்கின்றன
அவன் சக்தியில் நிலைத்திருக்கும் விண்ணும் மண்ணும்
அவற்றி்ன் மீது பேரொளியுடன் எழுகிறான் கதிரோன்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?
பாரெங்கும் நீர்கள் படர்ந்து மூடி
கருச்சுமந்து பெற்றன அக்னியை
பிறகு ஆங்கே பிறந்தது தேவர்களின் சுவாசம்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?
உணர்வைச் சுமந்து வேள்வியைப் பெற்றன நீர்கள்
அவற்றையும் தன் மகிமையால் ஆள்வோன் அவன்
தேவர்கட்கெல்லாம் மேலான தேவன்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?
தொல்புவியைப் பிறப்பித்தோன்
நம்மைத் துன்புறுத்தாதிருக்கட்டும்
விண்ணைப் படைத்தவன்
இருப்பே தன் இயல்பானவன்
தண்புனல் நீர்களைப் படைத்தவன் அவன்
எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?
பிரஜாபதியே வேறு யாருமல்ல நீயே
இங்கு உதித்தவற்றுக்கெல்லாம் இருப்பை அருளியவன்
யாம் விருப்புற்று வேள்வியில் வேண்டுவதனைத்தும்
எமதாகுக
செல்வங்கள் எம்மை வந்தடைக.
சிருஷ்டிக் கடவுளான பிரஜாபதி ஹிரண்யகர்ப்பன் என்று இப்பாடலில் தொடக்கத்தில் அழைக்கப் படுகிறார். அதன் நேரடிப் பொருள் “பொன் கரு” என்பதாம். இங்கு பொன் (ஹிரண்யம்) என்பதை சிருஷ்டியின் அனைத்து உயிர்ச்சக்திகளையும் அழகுகளையும் செழுமைகளையும் புலப்படுத்தும் குறியீடாகக் கொள்ளலாம். அந்தச் சொல்லை ஹி+ரண்யம் எனப் பகுத்தால், ”மறைத்து வைக்கப் பட்ட ஆனந்தத்தின் கரு” என்ற இன்னும் நுட்பமான பொருள் தருகிறது. சிருஷ்டியின் விகசிப்பு முழுவதும் ”ஆனந்தம்” என்ற இறுதி உயர்நிலையை ஒவ்வொரு உயிரும் அடைவதற்காகவே என்ற கருத்தை இந்தச் சொல்லே தேக்கி வைத்துள்ளது என்ற விளக்கம் கிடைக்கிறது.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் – எங்கள்
இறைவா இறைவா இறைவா
சித்தினை அசித்துடன் இணைத்தாய் – அங்கு
சேரும் ஐம்பூதத்து வியனுல கமைத்தாய்
அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியம்
ஆகப் பல நல்லழகுகள் சமைத்தாய்
என்று பாரதியார் பாடுவதை இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.
யஸ்யேமே ஹிமவந்தோ மஹித்வா – இப் பனிமலைகள் அவன் பெருமையின் முகடுகள்
யஸ்ய ஸமுத்³ரம் ரஸயா ஸஹாஹு:– கடலும் அதன் ரசமும் அவனதே என்பார்
தன் முன் சிருஷ்டியின் அழகுகளாக விரிந்து கிடக்கும் பேரியற்கையைப் பாடும் வேத ரிஷி, ஹிமாலயம் முதல் சமுத்திரம் வரை அவன் புகழே என்று பரவசப் படுகிறார். வரலாற்றின் புலரியில், கதிரொளியின் இளஞ்சூடு பரவி வரும் பனிபடர்ந்த ஓர் வைகறைப் பொழுதில், சரஸ்வதி நதி தீரத்திலோ அல்லது இமயச் சாரலிலோ நின்று கொண்டு, பாரத புண்ணிய பூமி என்னும் மாபெரும் சத்தியத்தை, அதன் முழு தரிசனத்தையே தனது ஞான திருஷ்டியில் அந்தக் கவிமனம் கண்டு விட்டது போலும்!
இப்பாடலில் இயற்கைச் சக்திகள் அனைத்தையும் உருவாக்கியவராக பிரஜாபதி சித்தரிக்கப் படுகிறார். கடைசிப் பாடல் தெளிவாக பிரஜாபதியைக் குறிப்பிட்டுப் போற்றுகிறது. ஆனால் அதற்கு முந்தைய ஒவ்வொரு பாடலிலும் இறுதி அடியாக வரும் தொடர் ”கஸ்மை தே³வாய ஹவிஷா க்⁴ருதேம” (எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்) என்பதாகும். கவிதை ஒருமை கருதி, இதனை ஒரு கேள்வி வடிவில் நான் மொழிபெயர்த்துள்ளேன். ஆனால் வேத சம்ஸ்கிருத இலக்கணத்தின் படி இந்த வரியை கேள்வியாகவும், உடன்பாட்டு வாசகமாகவும் இரண்டு வகையிலும் பொருள் கொள்ளலாம். ஆங்கிலத்தில் சொல்வதானால்,
Who is the God to whom we offer our sacrifices?
“Who” is the God to whom we offer our sacrifices.
இப்படி இரு வகைகளிலும் பொருள் கொள்வது ஒருவகையான நவீன வாசிப்பு அல்ல. புராதன வேத விளக்கவுரையாளரான யாஸ்கரும் ”க: ப்ராஜபதி” (”யார்” என்கிற பிரஜாபதி) என்றே குறிப்பிடுகிறார். சிருஷ்டி உண்மையில் எப்படி உண்டாயிற்று, யார் அதனை உருவாக்கிய கடவுள் என்ற ஆதிக் கேள்வியையே இந்தப் பாடல் போற்றுகிறது என்று வேத இலக்கியம் குறித்து எழுதிய நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். இந்திய சிந்தனை மரபில் ஐயவாதம் (skepticism) என்பதன் தொடக்கப் புள்ளியாக இதனை அவர்கள் காண்கின்றனர், ஜாபாலி மதம் (ராமாயணம், அயோத்யா காண்டம்) சார்வாகம் (மகாபாரதம் சாந்தி பர்வம்), லோகாயதம், ஆஜீவகம் போன்ற நாத்திக தரிசனங்களின் ஊற்றுமுகமாகவும் இத்தகைய வேத சூக்தங்களை அவர்கள் அடையாளம் காட்டுகின்றனர்.
மாறாக, சடங்குகளை மையப் படுத்திய பூர்வ மீமாம்சகர்கள், இறுதி மறைமொழியான வேதம் ஒருபோதும் ஐயங்களை வெளிப்படுத்துவதில்லை என்ற கருத்துக் கொண்டவர்கள். மாபெரும் மொழியியல் அறிஞர்களாகவும் விளங்கியவர்கள் மீமாம்சகர்கள். எனவே க: என்பதற்கு இலக்கணத்தை ஒடித்து வளைத்து வேறு ஒரு பொருள் அளித்து ”க: பிரஜாபதி” தெளிவாக வரையறை செய்யப் பட்ட ஒரு தேவதை என்று பொருள் கொண்டு அவருக்கான வேள்விகள், சடங்குகள், பலிகள் என்று அமைத்துக் கொண்டு சென்றார்கள். பிற்காலத்திய பிராமணங்களில் இதற்கான சான்றுகளைக் காண்கிறோம்.
எப்படியாயினும் இது ஒரு மகத்தான பாடல். “அமுதம் அவன் நிழல் மரணமும் அவன் நிழல்” என்ற வரி மெய்யுணர்வில் திளைத்த ஒரு மகா ஞானியின் வாய்மொழி அன்றி வேறு என்ன?
அடுத்த பாடலையும் பார்த்து விட்டு ஐயவாதம் பற்றிய கருத்துக்கு வருவோம்.
நாஸதீய சூக்தம்
(ரிக்: பத்தாவது மண்டலம் 129வது சூக்தம்)
அப்போது அசத் இருக்கவில்லை
சத் இருக்கவில்லை
உலகமிருக்கவில்லை
அப்பாலான வானும் இருக்கவில்லை
எது மூடியிருந்தது? எங்கு?
யாருடைய ஆணையில்?
அடியற்ற ஆழமுடைய நீர்வெளி இருந்ததோ? (1)
அப்போது மரணம் இருக்கவில்லை
அமுதம் இருக்கவில்லை
இரவு பகல்களின் அடையாளங்கள்
இருக்கவில்லை
ஒன்றேயான அது
தன் அகச்சத்தியால்
காற்றின்றி மூச்சுவிட்டது
அப்பால்
அதுவன்றி வேறேதும்
இருக்கவில்லை. (2)
இருளை இருள் மறைத்திருந்தது ஆதியில்
பிரித்தறிய முடியாதபடி இவை எங்கும்
நீராக இருந்தது
வடிவற்ற வெறுமையே எங்குமிருந்தது
அதிலிருந்து
மகத்தான தவத்தால்
அந்த ஒன்று பிறந்தது. (3)
ஆதியில் அதில் காமம் எழுந்தது
மனத்தின் முதல் பீஜம் அது தான்
இதயங்களில் தேடுகின்ற ரிஷிகள்
தங்கள் மேதமையால்
அசத்தில் சத்தைக் கண்டனர். (4)
அவற்றின் ஒளிக்கதிர்கள் ஊடுருவிச் சென்றன
மேலிருந்தது என்ன? கீழிருந்தது என்ன?
பிறப்பிப்பவை இருந்தன
மகத்தான சக்திகள் இருந்தன
ஆற்றல் கீழிருந்தது
வேகம் மேலிருந்தது. (5)
உண்மையில் யாரறிவார்?
யார் அதைச் சொல்ல முடியும்?
எங்கிருந்து தோன்றியது சிருஷ்டி?
எங்கிருந்து?
தேவர்களோ படைப்பிற்குப்
பின்வந்தவர்கள்
அப்படியானால் அது எப்படி உருவாயிற்று?
யாரறிவார்? (6)
இந்த சிருஷ்டியின் தோற்றம்
யார் அதை உண்டுபண்ணினார்கள்
அல்லது உண்டுபண்ணவில்லை?
அப்பாலான ஆகாயமாக
இதைக் கண்காணிக்கும்
அவனே அறிவான்
அல்லது அவனும் அறியான். (7)
ஞானத் தேடல் கொண்டு வேத இலக்கியத்தை அணுகும் ஒவ்வொரு வாசகனையும் வசீகரிக்கும், சிலிர்க்க வைக்கும் மகத்தான கவிதை இது. பிற்காலத்தில் வளர்ந்து செழித்த இந்திய தத்துவ ஞானப் பிரிவுகள் அனைத்தும் எழுப்பிய அடிப்படைக் கேள்விகளின் ஆரம்பப் புள்ளி இந்தக் கவிதையே என்றால் அது மிகையாது. இந்த அடிப்படைக் கருத்தாக்கங்களே பின்னர் உபநிஷதங்களிலும், சாங்கியம் முதல் வேதாந்தம் வரையிலான ஆறு தரிசனங்களிலும் மிக விரிவாக வளர்த்தெடுக்கப் படுகின்றன. உபநிஷதங்கள் வேத சம்ஹிதைகளின் நீட்சியே அன்றி அவற்றிலிருந்து துண்டிக்கப் பட்டவை அல்ல என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சிறந்த திறவுகோலாக இந்த சூக்தம் அமைகிறது.
ஏழு மந்திரங்கள் கொண்ட இந்த சூக்தத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டால் இதன் பொருளை உணர்வது எளிதாகும். முதல் இரண்டு மந்திரங்கள் சிருஷ்டி குறித்த வியப்பையும் கேள்விகளையும் எழுப்பி சில ஊகங்களை வைக்கின்றன. 3,4,5 வது மந்திரங்கள் ”அதுவன்றி வேறேதும் இல்லாத ஒன்று” சிருஷ்டியாக வெளிப்பட்டதை விளக்குகின்றன. கடைசி இரண்டு மந்திரங்கள் அந்த ஒன்றைப் பற்றிய கேள்விகளையும் வியப்புகளையும் வைத்து முடிகின்றன.
அசத் = இன்மை. சத் = உண்மை.
”அசதோ மா ஸத்³ க³மய, தமஸோ மா ஜ்யோதிர் க³மய, ம்ருத்யோர் மா அம்ருதம் க³மய”
இன்மையிலிருந்து உண்மைக்கு, இருளிலிருந்து ஒளிக்கு, மரணத்திலிருந்து அமுதத்திற்கு எம்மை இட்டுச் செல்க.
இந்த உபநிஷத மந்திரம் கோடிக்கணக்கான இந்துக்கள் அன்றாடம் கூறும் பொது பிரார்த்தனையாக உள்ளது. இதில் உள்ள இன்மை/உண்மை, இருள்/ஒளி, மரணம்/அமுதம் ஆகியவை மேற்கண்ட சிருஷ்டி கீதத்திலும் உள்ளன என்பதைக் கவனியுங்கள். இந்தப் பிரார்த்தனை லௌகீகமானது அல்ல, முற்றிலும் ஆன்மீக மயமானது. பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சிருஷ்டி தத்துவத்தின் தியானமாக உள்ள இந்தப் பிரார்த்தனை, ஒவ்வொரு கணமும் மனிதன் தன்னைப் புதிதாக சிருஷ்டித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையே உணர்த்துகிறது.
“ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்… ” (திருவாசகம்)
“காணலும் ஆகான் உளன் அல்லன் இல்லை அல்லன்…” (திருவாய்மொழி)
போன்ற பக்தி இலக்கியப் பனுவல்களிலும் சிருஷ்டி கீதத்தின் இந்த சுருதி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
இருளிலும் (தமஸ்) அடியற்ற ஆழமுள்ள நீர்வெளியிலும் (அப்ரகேதம் ஸலிலம்) மறைந்து கிடந்த சிருஷ்டி பின்னர் வெளிப்பட்டது என்பது தத்துவார்த்த ரீதியாக மட்டுமல்ல, அறிவியல் ரீதியாகவும் ஆழமான பொருளை அளிக்கக் கூடியது. தபஸஸ் தன்மஹினா ஜாயதைகம் – ”மகத்தான தவத்தால் அந்த ஒன்று பிறந்தது” என்பதில், தபஸ் என்ற சொல்லுக்கு சூடு என்றும் நேரடிப் பொருள் கொள்ளலாம். (”சுடச் சுடரும் பொன்போல் ஒளிரும், துன்பம் சுடச் சுட நோற்கிற்பவற்கு” என்று தவம் குறித்து எழுதிய வள்ளுவர் சம்ஸ்கிருத சொற்பொருளில் ஆழ்ந்த புலமை கொண்டவர் என்றே நாம் கருதவேண்டியிருக்கிறது). காரிருள், நீர்வெளி, அதைத் தொடர்ந்த பெரும் வெப்பம் என்பதை இணைத்துப் பார்த்தால், நவீன அறிவியலாளர்கள் பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்பது பற்றி இன்று கூறும் கோட்பாடுகளுடன் முற்றிலும் ஒத்திசைவு கொண்டதாக இது உள்ளது.
தம ஆஸீத் தமஸா கூ³ட⁴மக்ரே – ’இருளை இருள் மறைத்திருந்தது’ என்ற வரியின் நுட்பம் கவனிக்கத் தக்கது. ஒரு உரையில் சுவாமி விவேகானந்தர் மிக அழகாக இது பற்றிப் பேசுகிறார் –
“வேதத்தின் சம்ஹிதைப் பகுதியை நீங்கள் படிப்பீர்களானால், அழகு கொஞ்சித் ததும்பும் வியக்கத் தக்க பகுதிகளைக் காண்பீர்கள்… ஐரோப்பாவில் முற்காலத்தில் தோன்றிய மில்டன், தாந்தே போன்ற கவிஞர்களும் சரி, தற்காலக் கவிஞர்களும் சரி, எல்லையற்ற அழகை எவ்வாறு வர்ணிக்கின்றனர்? மனிதனின் தசை நார்கள் மூலமே. எல்லையற்ற ஒன்றை எல்லைக்கு உட்படுத்தி தசைகளிலும் நரம்புகளிலும் வடித்துக் காட்டுவதில் மட்டுமே. சம்ஹிதைகளிலும் அந்த வர்ணனைகளைக் காணலாம். ஆனால் அங்கு அவை உலகில் வேறு எங்கும் காண முடியாத வகையில் வடிக்கப் பட்டிருப்பதை நீங்கள் காணலாம்…
அந்த ஒரு வரியைக் கவனியுங்கள் – ’இருளை இருள் மூடியிருந்தது’. மூன்று கவிகள் இருளை எவ்வாறு வர்ணிக்கின்றனர் என்று பாருங்கள். நமது காளிதாசனை எடுத்துக் கொள்வோம் – ’ஊசி நுனி நுழைந்து ஊடுருவும் இருள்’ என்கிறார். மில்டன் ’ஒளியில்லை இருளே காட்சி தந்தது’ என்கிறார். இப்போது வேத சம்ஹிதையைப் பாருங்கள் – ‘இருளை இருள் மூடியிருந்தது’. வெப்ப நாட்டில் வாழும் நாமே இதை நன்றாக அறிய முடியும். பருவ காலத்தில் வானில் திடீரென்று கூட்டம் கூட்டமாக மேகங்கள் தோன்றுவதும் கருமேகங்கள் சுருண்டு சுருண்டு ஒன்றையொன்று மூடுவதும் இங்கே தான் காணக் கூடிய ஒன்று. எனவே சம்ஹிதை இவ்வாறு வர்ணிக்கிறது. ஆனாலும் இவையனைத்தும் புற அழகு தான்…
… அவர்கள் அவ்வளவில் நிற்கவில்லை. மனிதனின் அக இயல்பை ஆராய்ந்தார்கள்; தங்கள் ஆன்மாவிடமே விடைகாண விரும்பினார்கள். அகக் கண்கண்டு தேடினார்கள்… ஒளிபடைத்த மனித ஆன்மாவை நோக்கினார்கள்; விடை கண்டார்கள்.“
– வேதாந்தமும் அதன் சகல அம்சங்களும் (விவேகானந்தரின் ஞானதீபம், சுடர் 5)
இந்த சூக்தம் இறுதியாக ”அவனே அறிவான் அல்லது அவனும் அறியான்” (He knows indeed or He knows not) என்று முடிகிறது . சிருஷ்டியை ஒரு பிரபஞ்சப் பெரு வியப்பாக, பிரம்மம் அல்லது கடவுள் என்ற கருத்தாக்கத்தால் கூட முழுமையாக விடைசொல்ல முடியாத மாபெரும் கேள்வியாக, ஐயமாக முன்வைத்து நின்று விடுகிறது; அதுவே இதனை ஒரு மகத்தான கவிதையாக ஆக்குகிறது என்பது பல நவீன அறிஞர்களின் பொதுக் கருத்தாகும். இதன் மூலம் ஐயவாதமும், நாத்திகமும் கூட வேத ஞானத்தின் ஒரு பகுதியாக, இந்துமதத்தின் உட்பிரிவாகக் கருதத் தக்கது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இதை அப்படியே ஏற்க வேண்டும் என்பதில்லை. இந்து ஞான மரபு குறித்து ஆழ்ந்த புரிதல் கொண்டிருந்த டாக்டர் ஆனந்த குமார சுவாமி இந்த சூக்தம் எந்த வகையிலும் ஐயத்தை வெளிப்படுத்தவில்லை என்று கருதுகிறார். விதிவிலக்காக, அவர் இந்த வரியை வேறு விதமாக மொழிபெயர்க்கிறார் – “அவன் அறிவான், அறியாமலுமிருப்பான்” (He knows and He knows not). இந்தப் பாடலின் முதல் வரியான “அசத் இருக்கவில்லை; சத் இருக்கவில்லை” என்பதன் தொடர்ச்சியாகவே இந்தக் கடைசி வரியும் உள்ளது; இது சிருஷ்டியின் வெளிப்பாட்டைக் குறித்த ஐயத்தை அல்ல, எல்லா இருமைகளையும் தன்னுள் அடக்கிய அதன் ஒட்டுமொத்த முழுமையை, பூரணத்துவத்தையே வெளிப்படுத்துகிறது என்று அவர் விளக்கமளிக்கிறார்.
சிருஷ்டியின் விஸ்தாரங்களை மேலும் விரிவாக விவரிக்கும் புருஷ சூக்தம், விஸ்வகர்ம சூக்தம் ஆகியவற்றை அடுத்துப் பார்க்கலாம்.
(தொடரும்)