சிரியாவிலும் ஈராக்கிலும் கிலாபத்தை நிறுவும் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. கிலாபத் கனவுகள் பழமையானவை. கிறிஸ்தவம் கனவு கண்ட புனித ரோமானிய சாம்ராஜ்ஜியம் – Holy Roman Empire போல. துருக்கியின் ஒட்டாமான் பேரரசு உலக இஸ்லாமிய மேன்மைவாத அரசியலின் லட்சிய கனவுகளில் ஒன்று. ஐரோப்பிய காலனியம் பரவிய போது ஏற்கனவே அதை விட நுண்ணிய ஒரு காலனிய பேரரசை இஸ்லாம் ஆசியாவில் படர விட்டிருந்தது. தன்னை சுல்தானாக அறிவிக்க வேண்டி திப்பு அன்றைய துருக்கி காலீப்பிடம் கேட்டுக் கொண்ட கடிதங்கள் இதற்கு சான்று. ஆனால் ஒட்டோமான் காலத்தின் பலத்தையும் சாம்ராஜ்ஜியங்களையும் இழந்துவிட்ட துருக்கிய காலிபேத் என்கிற கிலாபத் ஒன்றாம் உலகப்போரை ஒட்டி ஒரு முடிவுக்கு வந்தது. அப்போது உருவாகி வந்த இஸ்லாமிய அரசியலுக்கு இது ஒரு நம்பிக்கை துரோகமாகவே விளங்கியது. ஏனெனில் 1857-க்குப் பிறகு இஸ்லாமியரிடம் பிரிட்டிஷார் தனி கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தனர். பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து கொண்டிருந்த இந்திய தேசிய இயக்கம் இந்துக்களால் நிரம்பியிருந்தது. எனவே இஸ்லாமியரிடம் பிரிட்டிஷார் அதீத அக்கறை கொண்டது இயல்பானது. அப்போதுதான் உருவாகி வந்த இஸ்லாமிய அரசியலுக்கும் இது சரியாக இருந்தது. என்ன இருந்தாலும் பிரிட்டிஷார் இந்துக்களை போல காஃபிர்கள் இல்லை. அவர்கள் ‘இறை வேதமான’ விவிலியம் அருளப்பட்டவர்கள். பிரிட்டிஷாருக்கும் முஸ்லீம்கள் இந்துக்களை போல விக்கிரக வழிபாடு செய்யும் விநோத ஜந்துக்கள் அல்ல. உருவமற்ற இறைவனை வணங்குகிறவர்கள். துல்லியமான அரசியல் காரணங்களுக்கு அப்பால் இந்த மத காரணங்களும் பிரிட்டிஷ் பாரபட்சத்தின் அடியாழத்தில் இருந்தன. இதனை பின்னாட்களில் சர்ச்சிலின் எழுத்துகளில் காணலாம்.
Doxycycline 100 online at walmart.com is available for sale in different doses. Food and drug administration for the treatment of http://pdmbhind.org/btc-d-el-ed/ bacterial infections in cats and dogs. Iron, iron supplements, iron-folic acid product-clomid, pct.
Cheap generic nexium (generic nexium) nexium (generic nexium) 100mg free shipping no prescription. Priligy online eczane kostkowa w cheap clomid polsce, znane dzisiaj na żywo z katolickich kierownicach. Clomid online pharmacy are now offering clomid as well as other drugs from an online.
Buy generic clomid 50mg generic clomid clomid 50 mg clomid 100 mg clomid 100mg clomid 200mg clomid 200mg clomid 50mg clomid 50mg generic clomid clomid 50mg clomid pct clomid pct clomid pct clomid pct. Ok, i have been on the orlistat for about 3 months and i am not satisfied buy phenergan 25mg tablets Voúla with it. This video is for people like you who have dogs that need to be taken outside to go potty.
இத்தகைய சூழலில்தான் துருக்கி கிலாபத் கவிழ்ந்தது. பிரிட்டிஷார் மீது இந்திய இஸ்லாமிய அரசியலுக்கு ஒரு கடும் ஆத்திரம் ஏற்பட்டது. நம்பிக்கை துரோகத்தினால் உருவான ஆத்திரம். ஆனால் அன்று எழுந்து வந்த தலைவரான காந்தி இதை இந்திய விடுதலைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என நினைத்தார். இந்தியாவில் கிலாபத் இயக்கம் எழுந்தது. இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து பிரிட்டிஷாரை எதிர்த்தனர். இந்துக்கள் இந்தியாவின் விடுதலைக்காக எதிர்த்தார்கள். இஸ்லாமியர்கள் துருக்கியில் கிலாபத்தை மீண்டும் நிறுவுவதற்காக எதிர்த்தார்கள். பிரச்சார பேச்சுகளில் கனல் பறந்தது. ‘ஆப்கானிஸ்தானின் அமிர் இந்தியா மீது படையெடுத்தால் அதை ஆதரிக்க வேண்டும்’ என்றெல்லாம் முழங்கப்பட்டது. காந்தி எழுதினார், “அமிர் இந்தியா மீது படையெடுத்து வரும் பட்சத்தில் நான் இந்திய மக்கள் பிரிட்டிஷ் இந்திய அரசை ஆதரிக்கக் கூடாது என வெளிப்படையாக சொல்வேன்.” (யங் இந்தியா, 4 மே 1921). கிலாபத் ஒரு ஆதர்ச அரசு என்றார் காந்தி. தான் விரும்பும் ஆட்சி அதுதான் என்று மேடைகளில் கூறினார். “ஹைதராபாத் நிஜாம் இந்தியாவின் பேரரசரானால் அது நூறுசதவிகித சுவராஜ்ஜியம் என்றே நான் கருதுவேன்.” என்று முழங்கினார் மகாத்மா. உண்மையில் பிரிட்டிஷார் ஊட்டி வளர்த்த இஸ்லாமிய அரசியல் என்பது மேல்தட்டைச் சார்ந்து இருந்தது. ஆனால் காங்கிரஸ்தான் அதை இஸ்லாமிய சமுதாயம் முழுமைக்குமாக கொண்டு சேர்த்தது. இந்த காலகட்டத்தில் துருக்கியில் அட்டாதுர்க் கமால் பாஷா எனும் மதச்சார்பற்ற புரட்சியாளர் எழுந்தார். துருக்கி மதச்சார்பற்ற நாடாகியது. கிலாபத்துக்கு பெரிய அடி.
காந்தி பிரிட்டிஷாரை எச்சரித்தார், “சாத்வீகமான ஒத்துழையாமை இயக்கம் தோற்றுப் போய்விட்டால், அப்புறம் இஸ்லாமியர்கள் அவர்களது மதம் சொல்லும் முறைகளில் செயல்பட உரிமை உடையவர்களாகிறார்கள்.” இஸ்லாமியர்களும் பொறுமை இழந்தார்கள். கிலாபத் அங்கே போனால் அதை இங்கே நிறுவ முடியாதா என்ன? கேரளத்தின் மலபார் பகுதிகளில் கிலாபத் இயக்கம் தூய இஸ்லாமிய காலிபேத் ஒன்றை உருவாக்க முடிவு செய்தது. டாக்டர் அன்னி பெசண்ட், டாக்டர். அம்பேத்கர் அனைவருமே மாப்ளா கலவரங்களின் கொடூரங்களை தெளிவாக பதிவு செய்திருக்கிறார்கள். தலைகள் வெட்டப்பட்ட இந்துக்கள், இந்துக்களின் சடலங்களாலும் குற்றுயிருடன் சாகாத உடல்களாலும் நிரம்பிய கிணறுகள். குடும்பத்தினர் முன்னால் வயது வேறுபாடின்றி வன்புணரப்பட்ட பெண்கள். 20-ஆகஸ்ட்-1921 இல் தொடங்கி 22-பிப்ரவரி-1922 வரை நீடித்த இந்த வெறியாட்டத்தினை உள்ளூர் காங்கிரஸ் கமிட்டியில் ஆரம்பித்து தேசிய தலைவர்கள் வரை பலரும் ஆவணப்படுத்திய கொடூரங்கள்… ஆனால் விரைவில் தொடங்கியது இந்த மானுடத்தன்மையற்ற கொடூரங்களுக்கான சால்ஜாப்புகள்… பொருளாதார காரணங்கள், நிலவுடமை சமுதாய அநீதிகள் உண்மையில் இது நிலவுடமையாளர்களுக்கும் நிலமற்ற ஏழை தொழிலாளிகளுக்குமான வர்க்க போராட்டமேதான்… பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்தான் அதற்கு வகுப்புவாத முலாம் பூசிவிட்டது… இத்தகைய அக்மார்க் மார்க்ஸிய வெள்ளையடிப்புகளை இந்துக்களின் பிணக்குவியல்களின் மீது செய்ய ஆரம்பித்தனர் அறிவுஜீவிகள். மாப்ளா கொலைகாரர்களுக்கு அரசு உதவி பணம் அளித்தது. திரைப்படங்களில் அவர்கள் விதந்தோதப்பட்டனர். குமாரனாசான் 1923 இல் அவர் எழுதிய ’துரவஸ்தா’வில் இஸ்லாமிய பாசிசம் இந்துக்களுக்கு செய்த கொடுமைகளை இலக்கிய ஆவணப்படுத்தியிருக்கிறார். ஸ்ரீ நாராயணகுரு பாரம்பரியத்தில் வந்த அவர் வகுப்புவாதி அல்ல. மதம் மாற மறுத்த தலித் இந்துக்கள் இஸ்லாமிய வெறியர்களால் கொல்லப்பட்டனர் என்பதும் மாப்ளா கலவரம் என்பது விவசாய கூலிகளுக்கும் நிலவுடமையாளர்களுக்கும் இடையில் நடந்த ஒரு வர்க்க போரன்றி வேறில்லை என்பதை பொய்யாக்குகிறது.
இப்படியெல்லாம் நடந்திருக்குமா? இவையெல்லாம் வகுப்புவாத கற்பனைகளா என கேட்பவர்களுக்காக இந்த கொடுமைகள் இப்போது மீண்டும் நடந்தேறுகின்றன. சிரியாவிலும் ஈராக்கிலும். மீண்டும் கிலாபத் கனவுகள். இம்முறை வெட்டி எடுக்கப்படும் தலைகள் காஃபிர் இந்துக்களுடையவை அல்ல. ஷியா முஸ்லீம்களுடையது. பாலியல் வன்கொடுமைகளுக்கு வயது வேறுபாடின்றி இரக்கம் இன்றி ஆட்படுத்தப்படும் பெண்கள் விக்கிரவழிபாடு செய்யும் காஃபிர்களின் வீட்டு பெண்களல்ல. ஷியா முஸ்லீம் பெண்கள் பலியாகின்றனர். எல்லையற்ற கருணையாளனின் இகவுலக அரசு உருவாக்கப்பட இத்தனை ரத்தம் சிந்தப்படும் போது இத்தனை மானுடம் பலி கொடுக்கப்படும் போது இந்தியாவின் இஸ்லாமிய மேன்மைவாத அரசியல் இயக்கம் சும்மா இருக்க முடியுமா?
இடதுசாரி அறிவுசீவிகளாலும் போலி மதச்சார்பின்மைவாதிகளின் வாக்கு வங்கி அரசியலாலும் சீராட்டி பாராட்டி வளர்க்கப்பட்ட உயிரினமல்லவா அது! குறைந்தது இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் சென்னை கல்லூரி மாணவர்கள் சிரியாவில் கிலாபத்தை உருவாக்கும் ஜிகாதி அமைப்புகளில் பங்கேற்று பயிற்சி பெறுவதாக உளவுத்துறை தகவல்கள் கூறுகின்றன. சிங்கப்பூரில் விசாரணை செய்யப்பட்ட கடலூரை சார்ந்த குலம் மரைக்காயர் சிங்கப்பூர் அதிகாரிகளிடம் இந்த விஷயங்களை கூறியிருக்கிறார். இவ்வாறு பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நபர் ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி. இவர் 2007 இல் கடலூரில் பயிற்சி ஒன்றுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. கடலூர்? நினைவிருக்கலாம் 2004 இல் கடலூரில்தான் மனிதநீதி பாசறையின் அடிப்படைவாத முகாம்களை காவல்துறை வெளிக்கொண்டு வந்தது. (பார்க்க, ‘”Fundamentalist outfit busted at Nellikuppam”, Hindu, October 29, 2004). சென்னை கல்லூரி இளைஞர்கள் கிலாபத் கனவுகளுடன் மூளை சலவை செய்து வெளிநாட்டு ஜிகாத்களுக்கு அனுப்பப்படுவதும் அவர்கள் பயிற்சி பெற்ற ‘முஜாகிதீன்களாக’ இந்தியா திரும்பி இங்கே ஜிகாதி கிலாபத் வைரஸ்களை பரப்புவதும் மிகவும் சீரான நெடுநாள் திட்டத்தின் பகுதியாகும். சில மாதங்களுக்கு முன்னால் இஸ்லாமியர் கணிசமாக வாழும் சென்னை பகுதிகளில் இந்த சுவரொட்டி தோன்றியதை கவனித்திருக்கலாம்.
2004 இல் காவல்துறை வெளிக்கொணர்ந்த அடிப்படைவாத அமைப்பு… 2007 இல் அந்த பகுதிக்கு மார்க்க பயிற்சிக்காக வந்த சிங்கப்பூர் இளைஞர்… 2014 இல் சென்னையில் தோன்றும் கிலாபத் பிரச்சார சுவரொட்டிகள் … இப்போது சென்னை -கடலூர்-சிங்கப்பூர் என விரியும் வலைப்பின்னலின் பின்னணியில் சென்னை கல்லூரி இளைஞர்கள் சிரியா-ஈராக் ஜிகாதில். கழுத்துகளை வெட்டி ரத்தம் சிந்த ஏக இறைவனுக்கு மகிமை என வெற்றிக்குரல் எழுப்பும் காணொளிகள் எங்கோ நடக்கும் விபரீதம் என எண்ணாதிருங்கள்… அந்த அபாயம் நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் அருகாமையில் இருக்கலாம். ஆனால் ஒன்று இந்தியாவில் வாழும் அக்மதியாக்களும், ஷியாக்களும் ஏன் தர்கா மரபினை பேணும் பாரம்பரிய சுன்னி முஸ்லீம்கள் கூட ஒரு விஷயத்தை உணர்ந்திருக்கலாம்… இந்த கொடிய வன்முறை அழிவிலிருந்து இவர்களையும் காப்பாற்றுவது இந்த மண்ணின் இறை பன்மை பேணும் பண்பாட்டுத் தன்மை – அதன் ஒட்டுமொத்த பெயர் ஹிந்துத்துவம். எனவே அன்புள்ள மதச்சிறுபான்மை சோதரரே நீங்கள் பத்திரமாக கிளைகளில் அமர்ந்திருக்கும் இப்பெருமரத்தின் வேர்களை அந்நிய பண உதவியுடனான மதமாற்றம் எனும் கோடாலியால் வெட்டாமல் இருங்கள்… உங்கள் வருங்கால சந்ததிகளுக்காகவேனும்…