பிரிவினையைத் தொடர்ந்து நடந்த அந்த மிகப்பெரிய நிகழ்வு மக்கள் இடப்பெயர்வு. இதை குறித்து பேசியதுமே நினைவுக்கு வருவது பஞ்சாபில் நடந்த அந்த அகதிகள் வரவுதான். ஆனால் வங்கத்தின் கதை என்ன? ஏன் பஞ்சாபிலிருந்து சிந்துவிலிருந்து வந்தது போல வங்கத்திலிருந்து அகதிகள் வரவில்லை? இல்லை. வந்தார்கள். ஆனால் அப்படி ஒரு அகதிகள் இருப்பதே வங்கத்துக்கு வெளியே தெரியவில்லை. தெரியவிடப்படவில்லை. எப்படி ஈழத்தமிழர்களின் அகதி நிலை தமிழ்நாட்டுக்கு வெளியே தெரிவதில்லையோ அதை போல. இந்த அதிசயத்தை நிகழ்த்தியவர் நம் முதல் பிரதம மந்திரி ஆசிய ஜோதி, மனிதருள் மாணிக்கம், ரோஜாவின் ராஜா, சாச்சா ஜவஹர்லால் நேரு அவர்கள்தான்.
It is effective in the treatment of hot flashes and night sweats. Male ross 308 broiler chickens (1) were individually Konnagar housed in a well-ventilated room in the poultry facility. Tamoxifen is the only oestrogen-containing drug to be used in the treatment of both breast and endometrial cancer.
The risk can be increased if the mother is receiving treatment for a thyroid problem while pregnant. Caveat emptor - or buyer beware - is an clomid online prescription old saying. Include the following tips when choosing a fucidin 15g cena and consider the following information:
I found someone else who also needed it and i had to wait for the drug. A daily dose price for clomiphene citrate of celexa provides relief for men and women experiencing anxiety when used in an extended-release formulation. The drug is usually taken by mouth as a tablet, usually in the morning.
பிரிவினையால் மிகவும் கஷ்டமடைந்தவர்கள் இந்துக்கள். முஸ்லீம்களுக்கு அவர்களுக்கு என்று பாகிஸ்தான் ஜனித்திருந்தது. ஆனால் இந்துக்களுக்கு பாகிஸ்தானில் (கிழக்கு & மேற்கு) எவ்வித வாழ்க்கை நிச்சயமும் இல்லை. அகதிகளாக இந்தியா வந்தால் அங்கும் வாழ்க்கை நிச்சயமில்லை. நேருவிய அரசு அவர்கள் வாழ்க்கை எத்தனை அவமானகரமாக்க முடியுமோ அத்தனை அவமானகரமான ஒன்றாக மாற்றியிருந்தது. இதனுடைய உச்ச கட்டம்தான் 1971 இனப்படுகொலை. அதில் வங்க தேச இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டார்கள். ஆனால் மதரீதியில் பாகிஸ்தானிய இராணுவத்தால் வேட்டையாடப்பட்டவர்கள் இந்துக்கள்தான். 1971 இனப்படுகொலையின் போது பாகிஸ்தானிய ராணுவம் ஒரு வங்காளி இந்துவா இல்லையா என சோதிக்கும் புகைப்படம் அங்கு வாழும் இந்துக்களின் நிலை என்ன என்பதை காட்டும்.
இந்த சூழலில் இந்துக்களை வாழ வைத்து அவர்களை அவமானப் படுத்தி மடிய வைக்கும் ஆரம்பத்தை ஆணவத்துடன் உருவாக்கியவர் ஜனாப் ஜவஹர்லால் நேருவேதான். அதை அன்றே பல தலைவர்கள் உணர்ந்தனர். எனவேதான் ஒட்டுமொத்த இந்து தலைவர்களுக்கு ஜவஹர்லால் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மை இருந்தது.
இந்த சூழலில்தான் இந்து சிவில் சட்ட முன்வரைவு அருமையான ஒரு வாய்ப்பாக கிடைத்தது ஜவஹருக்கு. அதை கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கியவர் டாக்டர் அம்பேத்கர். பாபா சாகேப் அம்பேத்கரின் எதிர்பார்ப்பு வேறு. ஜவஹரின் சிந்தனை வேறு. ஒரு ஆரோக்கியமான ஜனநாயகத் தன்மை கொண்ட இந்து சிவில் சட்டம் என்பது இந்து சமுதாயத்தை முன்னேற்ற பாதையில் செலுத்தும் என்பது பாபா சாகேப் அவர்களின் எண்ணம். இந்தியா இந்துக்களுக்கான பாதுகாப்பான தேசமாக இருக்க இது அவசியம் என்பது அவர் எண்ணம். நாளைக்கு இதுவே இந்தியாவின் பொது சிவில் சட்டமாக வேண்டும் என்பது அவர் எதிர்பார்ப்பு. அவருடைய வார்த்தைகளை அப்படியே கூறினால் இன்றைய போலி-மதச்சார்பின்மைவாதிகள் ’பெரும்பான்மை வகுப்புவாதம்’ என்றும் பாசிசம் என்றும் கூச்சலிடுவார்கள். பாபா சாகேப் கூறினார் (11-ஜனவரி-1950):
(இந்து சிவில் சட்ட) முன்வரைவு முற்போக்கானது. இந்திய சட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்கும் ஒரே சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சி இது. சட்டம் இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.
இந்த சட்டம் மேற்கத்திய இறக்குமதி அல்ல என்பதையும் இந்து சாஸ்திரங்களின் அடிப்படையிலானது என்பதையும் கவனிக்கவும். தொடர்ந்து ஒரு செயல்திட்டத்தின் முன்னோடி என்பதையும் அந்த செயல்திட்டம் அனைத்து பாரதியர்களுக்குமான ஒரு பொது சிவில் சட்டம் என்பதையும் அந்த பொது சிவில் சட்டத்தின் முதல் அடிப்படையாக இந்து சிவில் சட்டத்தை பாபா சாகேப் அம்பேத்கர் முன்வைப்பதையும் கவனிக்கவும். பாபா சாகேப் அம்பேத்கருக்கு இது ஆரோக்கியமான இந்து சமுதாயத்தை உருவாக்கும் ஒரு பெரிய வாய்ப்பு. அதன் மூலம் இந்தியாவில் இந்துக்களை ஒரு பலமான ஜனநாயக சமுதாயமாக மாற்றுவது அவர் இலக்கு. நேருவின் கணக்குகள் வேறு. இதன் மூலம் எப்படியும் தம்மை இந்து ஆச்சாரவாதிகள் எதிர்ப்பார்கள். அதனை வைத்து அவர்களை பிற்போக்குவாதிகளாக காட்டிவிட முடியும். எனவே இந்து ஆச்சாரவாதிகள் மனதில் இந்த சட்டம் ஏதோ நேருவால் இந்து மதத்துக்கு எதிராக கொண்டு வரப்படுவது போன்ற உணர்வு திட்டமிட்டு பரப்பப்பட்டது. நேருவை எப்போதுமே பாஸிடிவ்வான கேலிச்சித்திரங்கள் மூலம் விதந்தோதும் ’சங்கர் வீக்லி’ போன்றவை துரிதமான பிரச்சாரத்தில் இறங்கின.
துரதிர்ஷ்டவசமாக இந்து தலைவர்கள் நேருவின் இந்த தந்திர வலையில் வீழ்ந்தனர். இது இந்துத்துவம் நழுவவிட்ட ஒரு வரலாற்று வாய்ப்பு. நேருவின் மீதான ஐயப்பாட்டால் பாபா சாகேப் அம்பேத்கரின் ஈடியணைற்ற ஒரு சாதனையை போற்றி வரவேற்காமல் அவரை காயப்படுத்திவிட்டனர். இதில் வீர சாவர்க்கர் மட்டுமே விதிவிலக்கு. ஆனால் அப்போது அவரும் பிரதான அரசியல் குரலாக இல்லை. இதுவே பாபா சாகேப் அம்பேத்கரையும் அவர் தள்ளிப்போட்டிருந்த பௌத்த மதமாற்றத்தை நோக்கி நகர்த்தியது. ஜவஹர் எதிர்பார்த்தது நடந்தது. ஹிந்துத்துவர்களை ஒட்டுமொத்தமாக ஹிந்து ஆச்சாரவாதிகள் என முத்திரை குத்தி ஒதுக்க முடிந்தது. அத்துடன் ஹிந்துக்களை பாதுகாப்பது என்பதையே ஹிந்து வகுப்புவாதமென அவரால் பேசமுடிந்தது.
ஆனால் பாபா சாகேப் அம்பேத்கர் இதனால் நேருவின் மதச்சார்பின்மை எனும் மாயவலையில் விழவில்லை. பாபா சாகேப் முன்வைத்த மதச்சார்பின்மை என்பது கோஷமல்ல. இந்துக்களின் நன்மையை பாதுகாப்பை அரசு காப்பாற்றுவதென்பது என்பது வேறு இந்து மத மேன்மையை அரசு தூக்கி பிடிப்பதென்பது வேறு. இதில் பாபா சாகேப் தெளிவாக இருந்தார். கம்யூனிச சீனாவும் இஸ்லாமிய நாடுகளும் மதமாற்ற சக்திகளும் செயல்படும் சூழலில் இந்துக்களின் பாதுகாப்பு என்பது இந்தியாவின் கடமை என்பதில் பாபா சாகேப் தெளிவாக இருந்தார். நேருவிய மதச்சார்பின்மை என்பது கோஷமும் வேஷமும் மட்டும் நிரம்பியது. ரோசாவின் ராசாவே அப்படிப்பட்ட நிலைபாடுடையவர்தான். ஹஜ் யாத்திரைக்கு மான்யமும், காஷ்மீருக்கு தனி அந்தஸ்தும் என மதச்சார்பின்மைக்கு புது விளக்கம் கொடுத்தவர் மனிதருள் மாணிக்கம். எனவேதான் ஆசியஜோதியின் அமைச்சரவையிலிருந்து பதவிவிலகிய போது சமர்ப்பித்த ராஜினாமா கடிதத்தில் பாபா சாகேப் அம்பேத்கர் சுட்டிக்காட்டினார்:
பாகிஸ்தானுடனான நம் உறவில் பிரச்சனை அளிக்கும் இரு அம்சங்கள் உள்ளன. ஒன்று காஷ்மிர் மற்றொன்று கிழக்கு வங்கத்தில் நம் மக்களின் நிலை. நாம் காஷ்மீரை விட கிழக்கு வங்கத்தில் நிலவும் சூழல் குறித்தே அதிக கவலைப்பட வேண்டும். ஏனென்றால் கிடைக்கும் எல்லா செய்திதாள்களின் படியும் காஷ்மீரைக் காட்டிலும் நம் மக்களின் நிலை அங்கு தான் சகிக்க முடியாததாக உள்ளது. அதெல்லாம் குறித்து
கவலைப்படாமல் நாம் காஷ்மீர் குறித்தே அனைத்து கவனத்தையும் செலுத்துகிறோம். இங்கு கூட நாம் உண்மையற்ற விஷயத்தில்தான் அக்கறை செலுத்துகிறோம். யார் செய்தது சரி தவறு என்பதல்ல எதை செய்வது சரி என்பதுதான் கவனம் செலுத்த வேண்டிய உண்மையான விஷயம். இந்த முக்கியமான விஷயத்தில் என்னுடைய பார்வை எப்போதுமே காஷ்மீரை பிரிவினை செய்துவிட வேண்டும் என்பதுதான். ஹிந்து – பௌத்த பகுதிகள் இந்தியாவுக்கும் முஸ்லீம் பகுதி பாகிஸ்தானும் அளிக்கப்பட்டு விடவேண்டும். நமக்கு காஷ்மீரின் முஸ்லீம் பகுதி குறித்து கவலையில்லை. அது பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் முஸ்லீம்களுக்குமான பிரச்சனை. அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்களோ அதை செய்துவிட்டு போகட்டும். அல்லது உங்களுக்கு வேண்டுமென்றால் அதை மூன்றாக பிரியுங்கள். போர்-நிறுத்த பகுதி, சமவெளி பகுதி, ஜம்மு-லடாக் பகுதி. இதில் விருப்பத்துக்கான தேர்தல் (நேரு வாக்களித்த -’proposed plebiscite’) சமவெளி பகுதியில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். ஆனால் (நேருவின் வாக்குறுதிப்படி ) அனைத்து பகுதிகளுக்கும் இணைத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் காஷ்மீரின் ஹிந்துக்களும் பௌத்தர்களும் அவர்கள் விருப்பத்துக்கு எதிராக பாகிஸ்தானுக்கு இழுத்துச் செல்லப்படுவர். நாம் மீண்டும் கிழக்கு வங்காளத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
ஏன் நம் ஆசியஜோதி கிழக்கு வங்க அகதிகளை குறித்து கவலை கொள்ளவில்லை? பிரிவினை குறித்த வரலாற்றாசிரியர் ஒருவர் விளக்குகிறார்:
இன்றைக்கு யோசிக்கும் போது ஆச்சரியமளிப்பதாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் மத்திய அரசோ பிராந்திய அரசோ ஹிந்து சிறுபான்மையினர் கிழக்கு வங்காளத்திலிருந்து பெருமளவுக்கு குடி பெயர்ந்து பாரதத்துக்கு வருவார்கள் என கருதவில்லை. …. இறுதியாக தயங்கி தயங்கி அரசாங்கம் அகதிகளை ஒரு யதார்த்தமாக கணக்கில் எடுக்க தொடங்கிய போது கூட அவர்களின் முக்கிய நோக்கம் அகதிகளை எப்படியாவது தடியை பயன்படுத்தியோ அல்லது சில சலுகைகளை காட்டியோ எங்காவது விரட்டி விடுவதாகவே இருந்தது. இவையெல்லாம் அகதிகளாக வந்தவர்களின் முகத்தில் அறைவதாக இருந்தது….
இந்த மிக மோசமான அதிகாரபூர்வ அரசு நிலைபாட்டில் பாதி பங்கு டெல்லியில் உள்ள நேரு அரசாங்கத்தினுடையது. அகதிகள் மறுவாழ்வு என்பது மத்திய அரசின் தற்காலிக அதிகாரத்துக்குள் வருவதாக ஆக்கப்பட்டிருந்தது. எனவே மேற்கு வங்காள அரசு அகதிகளுக்கான நிவாரண நிதியளிக்கும் வழிகாட்டுதலுக்கும் மத்திய அரசையே நம்ப வேண்டியதாக இருந்தது. பல ஆண்டுகளுக்கு மத்திய அரசு கிழக்கு வங்காளத்திலிருந்து அகதிகள் வருகிறார்கள் என்பதையே ஏற்கவில்லை. நெருவே கிழக்கு வங்காளத்திலிருக்கும் சூழ்நிலை ஒன்றும் அங்குள்ள ஹிந்து சிறுபான்மையினர் கவலைப்பட்டு ஓடிவர வேண்டிய அளவுக்கு மோசமானதாக இல்லை என்று கருதிக் கொண்டிருந்தார். ஹிந்துக்கள் அகதிகளாக ஓடிவருவதற்கு காரணம் தேவையற்ற அச்சம், வதந்திகள்தானே தவிர இந்துக்களின் உயிருக்கோ உடமைகளுக்கோ எவ்வித ஆபத்தும் உண்மையில் இல்லை என உறுதியாக இருந்தார். …
ஆனால் 1950 இல் தெள்ளத் தெளிவாக புறக்கணிக்க முடியாத அளவு இந்து சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை வெடித்த போது நேரு- லியாகத் ஒப்பந்தத்தை நேரு கையெழுத்திட்டார்… நேருவின் முக்கிய முதன்மை நோக்கம் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து அகதிகள் பாரதத்துக்குள் வருவதை தவிர்ப்பதுதான். அது நல்ல நோக்கம். ஆனால் அந்த திட்டத்தையே அவர் பிடித்துக் கொண்டிருந்தது இந்திய அரசாங்கம் வங்க அகதிகளுக்கு நிலமைக்கும் நேரத்துக்கும் தகுந்த ஒரு நிவாரணத்தை அளிப்பதிலிருந்து தடுத்துவிட்டது. (நேருவின்) டெல்லி அரசாங்கம் கிழக்கு வங்காளத்திலிருந்து வரும் (ஹிந்து-பௌத்த) அகதிகளின் மறுவாழ்வு என்பது தேவையற்றது என்றும் தீவிரமாக தவிர்க்கப்பட வேண்டியது என்றும் வலியுறுத்தி வந்தது.
– ஜோயா சாட்டர்ஜி, The Spoils of Partition, Cambridge University Press, 2010, பக்.128-31
அப்போது வங்க முதல்வராக இருந்த பிரபுல்ல சந்திர கோஷ் கிழக்கு வங்க அகதிகளுக்கு ஆதரவளித்தார் என்ற காரணத்துக்காக சாச்சா நேரு அவரை பதவியிறக்கினார். பின்னர் மேற்கு வங்காளத்தின் முதல்வரான டாக்டர் பிதன் சந்திர ராய்க்கு ஆசிய ஜோதி மனிதருள் மாணிக்கம் ஒரு எச்சரிக்கை கடிதம் எழுதுகிறார்:
கிழக்கு வங்காளத்திலிருந்து (அதாவது பாகிஸ்தானிலிருந்து) ஹிந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் வருவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்பதில் நான் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருக்கிறேன்… அங்கே போரே ஏற்பட்டாலும் கூட அப்படி (இந்துக்கள்) இடம் பெயர்வதை நான் தடுப்பேன்.
1951 இறுதியில் இத்தனை அவமானங்களை இந்திய அரசு அவர்கள் முகங்களில் விட்டெறிந்து ஜனாப் ஜவஹர் தன் காலால் இந்துக்களை உதைத்த பிறகும் 25 இலட்சம் இந்துக்கள் இந்துக்கள் அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்களென்றால் கிழக்கு வங்கத்தில் (பாகிஸ்தானில்) நிலை எப்படி இருந்திருக்க வேண்டும்? (அதே காலகட்டத்தில் மேற்கு பஞ்சாபிலிருந்து வந்த இந்து-சீக்கிய அகதிகளின் எண்ணிக்கை 24 இலட்சம்).
ஆக ஜவஹர்லால் நேருவிடம் வெளிப்படுவது மனித நேயம் அல்ல. மதச்சார்பின்மை அல்ல. இங்கு வெளிப்படுவது அப்பட்டமான வெறுப்பு. இந்துக்கள் மீதான வெறுப்பு. தப்பிக்கும் யூதர்களை பிடித்து வதை முகாம்களில் அடைத்த நாசிகளின் வெறுப்புதான் துல்லியமாக நேருவிடமும் வெளிப்பட்டது. எவ்வளவுக்கு எவ்வளவு இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதுதானே. சாகிற இந்துக்களுக்காக சங்கடப்பட வேண்டிய அளவுக்கு அவர்கள் மனிதர்களே அல்ல. ஹிட்லரும் ஸ்டாலினும் மாவோவும் மக்கள் உயிர்களை குறித்த அலட்சியத்தை வெளிப்படையாக பேசினார்கள். ஆனால் ஆசிய ஜோதி புத்திசாலி. அவர் இனிமை நிரம்பிய வார்த்தைகளால் ஜனநாயக லட்சார்ச்சனையும் மகாத்மா அஷ்டோத்திரமும் சொல்லியபடியே இந்துக்களை பாகிஸ்தானிய வதை முகாம்களில் தள்ளுவதில் கவனமாக இருந்தார்.
1971 இல் பாகிஸ்தானிய ராணுவம் கிழக்கு வங்காளத்தில் ‘எத்தனை இந்துக்களை இன்று நீ கொன்றாய்?’ என அப்பட்டமாக கேள்வி கேட்டு ராணுவ அதிகாரிகளை முடக்கிவிட்டு இனப்படுகொலை நடத்திய போது நேரு உயிருடன் இருந்திருந்தால்?
அதை நடத்திய பாகிஸ்தானிய ராணுவ தளபதி யாஹியாகானுக்கு ஒரு இந்திய ரசிகர் கிடைத்திருப்பார். யாஹியாகான்- ஜவஹர் ஒப்பந்தம் இந்திய அமைதி விரும்பிகளுக்கு ஒரு சாதனையாக அமைந்திருக்கும். கொல்லப்பட்ட இந்து குழந்தைகளின் ரத்ததில் நேரு மாமாவின் ரோசா இன்னும் சிவந்திருக்கும்.
மீண்டும் தேநீருடன் நாளை காலையில் சந்திப்போம்.
ஜோகேந்திரநாத் மண்டல் சுதந்திரப் போராட்டக் காலங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடியவர். பொதுவான ஹிந்து சமூகத்திற்கே உரித்தான் நன்னம்பிக்கை மனநிலையில் முஸ்லீம் சமூகத்தோடு ஹிந்து சமூகம் நல்லிணக்கத்தோடு வாழமுடியும் என்று நம்பியவர். பாகிஸ்தான் உருவாகக் காரணமான முகம்மது அலி ஜின்னாவின் நண்பர். பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்று பேசியவர்.
ஆனால் பிரிவினைக்குப் பிறகு உருவான இஸ்லாமிய கிழக்கு பாகிஸ்தானில் நாமதாரிகள் போன்ற தலித் சமூகங்கள் உட்பட எல்லா இந்துக்களுக்கும் கொல்லப்பட்டு அழிக்கப்பட்டு அல்லது துரத்தப் படுவதே விதியாகி விட்டதை நேரடியாகக் கண்டு தவித்தார் அவர். நன்னம்பிக்கை சிதறிப்போய், பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அப்போது அவர் எழுதிய உணர்ச்சி மிகுந்த, துரோகத்தின் வலி சுமக்கும் அந்த ராஜினாமா கடிதத்தின் மொழி பெயர்ப்பு தமிழ்ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளது. அன்றைய கிழக்கு பாகிஸ்தானில் இந்துக்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிய ஒரு முக்கிய ஆவணமாக இது உள்ளது.
கடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்