இராமபிரான் முதலில் முடிவு கட்டியது, பரசுராமரின் செருக்கை; இறுதியாக முடிவு கட்டியது, இராவணனின் செருக்கையும், வாழ்வையும். இருவருமே பிராம்மணர்கள்.
It's your chance to enjoy a low cost, and safe, treatment that works. Pour parvenir à l'utilisation préalable, il est parfois utile de réfléchir https://liricomusicschool.com/maestro-logo/ à la façon que celui-ci a d'être. I had tried to quit smoking for a year and a half and just recently noticed that i had been trying to quit for a year and a half.
It has been used by millions of americans, and its popularity has been well-supported by many well-known studies. It is used to reduce intraocular pressure amateurishly (iop) and to slow damage to the optic nerve. A number of the tamoxifen citrate for men that were developed were designed to be less invasive than other forms of cancer.
The best way to reduce the chance of a surgical site infection is to take. I don’t where can you buy fluconazole Bābai have a medical condition that can be treated by the fda, and i am not participating in this program. In addition to a possible relationship between dapoxetine 60 mg price uses in hindi side-effects and vulvovaginal candidiasis, it is conceivable that the drug could be used prophylactically in women in risk categories such as women with recurrent genital infections.
வேட இனத்தவரான குகனையும், சபரியையும் ராமாயணம் சிறப்பித்துச் சொல்கிறது. தொண்டிலும், அன்பிலும் உயர்ந்த குகனை ‘குகப்பெருமாள்’ ஆக்குகிறது வைணவம். ’சபரீமோக்ஷ ப்ரதாயக [சபரிக்கு மோட்சத்தைத் தந்தவர்] என்றில்லாமல் ’சபரீமோக்ஷ ஸாக்ஷிபூத [சபரியின் மோட்சத்திற்குச் சாட்சியாக இருந்தவர்]’ என்கிறார் சுவாமி நிகமாந்த மஹாதேசிகன்.
சபரிக்குக் கிடைத்த பெரும்பேற்றைச் சத்குரு தியாகையாவும் வியந்து போற்றுவார். அந்த அளவு சபரியின் தகைமை மிக உயர்ந்து விளங்குகிறது. வனவாச விதிமுறைக்கேற்ப, அர்க்ய – பாத்யங்களுக்குமேல் வேறு எதையும் அந்தண முனிவர்களிடத்தும் கைநீட்டிப் பெறாத அண்ணல் சபரி அளித்த கனிகளை மட்டும் ஏற்கிறார்.
இராவணன் பிறப்பைச் சங்க இலக்கியம் சொல்லவில்லை; வால்மீகி ராமாயணம், உத்தர காண்டம் விரிவாகச் சொல்கிறது, அதுவும் முனிவர்கள் வாயிலாக. ராமாயணத்துக்கான மறு பெயர் ‘பௌலஸ்த்ய வதம் [புலஸ்தியரின் மகனின் வதம்]’ என்பதே.
ஸப்த ரிஷிகளில் ஒருவரான புலஸ்த்தியரின் வழித்தோன்றல் முனிவர் விச்ரவசு; அவர்தம் புதல்வன் வைச்ரவணன் [குபேரன்] யக்ஷர்களுக்குத் தலைவனாகச் செல்வாக்கோடு திகழ்வதைப் பார்க்கிறான் சுமாலி எனும் அரக்கன். சுமாலி, சுகேசன் என்ற அரக்கனின் புதல்வன்; மால்யவானுக்குத் தம்பி. [இந்த மால்யவானின் கடுமையான எச்சரிக்கைகளை இராவணன் அசட்டை செய்தது பின்னால் நடந்த நிகழ்ச்சி] சுமாலி, தன் மகளான கைகசியிடம் முனிவர் விச்ரவசை வலியச்சென்று வரித்து மக்கட்பேற்றை அடையுமாறு அறிவுறுத்துகிறான். அவளும் அவ்வாறே செய்கிறாள்.
முதலில் பிறந்தவன் ராவணன்; பின்னர் கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன். தவத்தால் அவர்கள் வலிமை பெறுகின்றனர். ராவணன் குபேரனின் லங்காபுரியையும், புஷ்பகவிமானத்தையும் கைப்பற்றுகிறான். மகளிரைப் பல இடங்களிலிருந்தும் கவர்ந்துவந்து தன் அந்தப்புரத்தில் சேர்க்கத் துணைபுரிகிறது இந்த விமானம். தென்னகம் சார்ந்த இலங்கை அரக்கர்க்குரியதாக முன்பு இருந்ததில்லை.
இராவணன் பிறந்த ஊர் ‘பிஸ்ரக்’ [நொய்டா அருகில்] என்றே வடபுலத்தவர் இன்றும் நம்புகின்றனர்; விச்ரவ என்பதன் திரிபு ‘பிஸ்ரக்’. அங்கு அவனுக்கு ஓர் ஆலயம் அமைந்துள்ளது –
https://en.wikipedia.org/wiki/Bisrakh
இராவணன் தென்னிந்தியன் – திராவிடன் என்பதை வடபுலத்தவர் ஏற்பதில்லை; குபேரனின் இலங்கை தனக்கு வசப்பட்டபின் அரக்கச் சுற்றத்துடன் ராவணன் நிலையாக அங்கு வாழத்தலைப்பட்டதால், அவன் தென்னகம் சேர்ந்தவனோ எனும் ஐயம் ஏற்படுவது இயல்பே. புலமையும், நூலறிவும் வாய்க்கப்பெற்ற இராவணன் செய்த ’ராவண ஸம்ஹிதை’ வடபுலத்தில் புகழ் பெற்ற நூல்.
’திராவிடர் எனத் தென்னகம் சார்ந்த ஓர் இனம், அவர்களையே அரக்கராகச் சித்திரிக்கின்றனர்’ எனும் கருத்தியல் உண்மையா?
தாடகை – சுபாகு – மாரீசர்கள் வாழ்ந்ததும் வடபுலத்தில்; இலவணன் என்ற அரக்கன் வடபுலத்தின் மதுவனத்தில் வாழ்ந்ததாக இராமாயணம் கூறுகிறது. சத்ருக்னர் இவனை அழிக்கிறார். அரக்கர் பலர் வாழ்ந்தது தண்டகவனத்தில்.
ராவணன் பெற்ற வெற்றிகள் பல; தோல்வியடைந்த சந்தர்பங்களும் உண்டு; சமாதான உடன்படிக்கைகளும் இதில் அடக்கம்.
அவன் தண்டகவனத்தின் ஒருபகுதியான ஜனஸ்தானத்தில் புறக்காவல் படையிருப்பு [outpost] ஒன்றை அமைக்கிறான், கர/தூடணர் தலைமையில். அது தவிரத் தென்னகத்தில் அரக்கர் எவரும் வாழ்ந்ததாக வால்மீகி சொல்லவில்லை. காவிரி/பொருநை நதிதீரங்கள் எழிலார்ந்த அமைதி தவழ்ந்த பகுதிகள். பாண்டியரின் செம்பொற் கபாடம் இராமாயண விவரிப்புக்குள்ளாகிறது. இராமபிரான் ஜனஸ்தான அரக்கரை மாய்த்தபின் [கோதாவரிக்கரை], தேவியைத் தேடிக்கொண்டு தென்திக்கில் செல்லும்போது இடர்செய்த கபந்தனை மாய்த்தபின் தென்னகத்தில் அரக்கர் எவரையும் வதைசெய்யவில்லை. அரக்கர் வதைப் படலம் பின்னால் இலங்கையில்தான் மீண்டும் தொடர்கிறது. ஆக, அரக்கர் தென்னகம் சார்ந்த திராவிடர் எனும் பரப்புரை பொருளற்ற புலம்பலாகிவிடுகிறது.
தொடக்கத்திலிருந்தே இராமபிரான் ஒருவகையான வலிமையைச் சமப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதே இராமாயணத்தின் உட்பொதிந்த பொருள். ரஜோ குணமும், ஆயுதவலிமையும் ஒரே இடத்தில் குவிந்தால் அரக்கத் தன்மை மிகுதியாகும். இதைச் சமன் செய்யுமுகமாகப் பெருமான் வசிஷ்டர்/விசுவாமித்திரர் தொடக்கமாக முனிவர்களிடமிருந்து [அஸ்த்ர – சஸ்த்ர] விற்பயிற்சி/வாள்பயிற்சி முறைகளை அறிந்து கொண்டார்; மிகுந்த வேகத்தோடு செருக்குற்றுத் திரிந்த பரசுராமரை, விவேகத்தோடு அமைதியான முறையில் அடக்கி, மீண்டும் அவரைத் தவம் புரியுமாறு செய்ததும் ஒரு சமன்பாட்டு நடவடிக்கையே.
உலக இன்பங்களைத் துய்க்கவேண்டிய இளம்பருவத்தில் எதிர்பாராதவிதமாக மிகக்கொடிய பதினான்காண்டு வனவாச தண்டனை தம்மீது திணிக்கப்பட்டபோதும், சற்றும் நிலைகுலையாமல், அதையே தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்பாக ஏற்றுக்கொள்கிறார் ஐயன்.
அண்ணல் வனமேகும்போதும் ஆயுதங்களோடுதான் சென்றார். சித்ரகூடத்திலிருந்து கிளம்பிய தசரத குமாரர்கள் நேராக மிகக்கொடிய, அடர்ந்தவனமான தண்டகவனத்தில் புகுந்ததும் இதே நோக்கத்தோடுதான்-
அங்கு தங்கிய அண்ணல், உலகியல் தொடர்பின்றி அருந்தவமியற்றும் அறவோர்க்குத் துணையாக அரக்கரை மாய்த்து, சத்வ குணம் பெருக வழிகோலினார். அகத்தியரிடமிருந்தும் ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டார். [அஸ்த்ர – சஸ்த்ரங்கள் அரசர்க்குரியவை; அஸ்த்ரம் – எதிரிமேல் எறிந்து தாக்கும் ஆயுதங்கள்; சஸ்த்ரம் – கையில் வைத்துக்கொண்டே போர்செய்வதற்கானவை, வாள், கதாயுதம் போன்றவை] ராவண வதமானபின் ஆற்றல் சமன்பாடு முழுமையான பின்னரே அண்ணல் அரியணை ஏறுகிறார். அரியணை பெற்றுப் பெருவலிமை தம்மிடம் சேர்ந்தபின்னரும் எதையும் துஷ்ப்ரயோகம் செய்யவில்லை இறுதிவரை.
எதிரிகளே இல்லை எனும் சூழல்; ஆற்றல்வாய்ந்த உடன்பிறந்தோர், எல்லையில்லாத தோள்வலிமை, உறுதுணையாக சக்திவாய்ந்த படைக்கலன்கள் — உலகமே ‘ராஜாராமன்’ எனப் பலவாறாகப் போற்றிநிற்கும்போதும், இராமபிரான் தம்மை ஒரு தேசத் தொண்டனாகவே கருதிக்கொண்டு பக்தன்செய்யும் தெய்வ உபாசனைபோல் தம் நாட்டையே தெய்வமாக உபாசித்ததாக வால்மீகி பகவான் கூறுகிறார் –
சமய குரவர் இராவணன் தேவியை வவ்விய அடாதசெயலைக் கண்டிக்கின்றனர்; ஆழ்வார்கள் அந்த அளவு பழித்துள்ளனரா, சந்தேகம்தான்.
சமய நூல்களின் மையக் கருத்து:
[சிச்ந] – வயிற்றுக்கு முக்கியமான [இடுப்புக்குக் கீழே தொங்கும் உறுப்பையும், இடுப்புக்கு மேலுள்ள வயிற்றையும் பேணும்] போக்கை ஒருவன் கைவிட வேண்டும்.
இழிசெயலில் ஈடுபடுபவன் தேவனே ஆனாலும் அவன் பழிப்புக்குரியவன். ஆற்றல்மிக்க இந்திரனைப் புகழும் மறை ‘அஹல்யா ஜார ! கௌதம ப்ருவாண!!’ என அஹல்யையை நாடிய இந்திரனைக் கேலி பேசுகிறது.
பெண் பித்தனாயினும் ராவணனது சிவ பக்தி போற்றுதற்குரியதாகிறது; சிவ பூஜையின் முடிவில் நந்தி – சண்டேசர்களுக்கு நிகராக ராவணனும் சிவ நிர்மால்யம் பெறும் தகுதி படைத்தவனாகிறான் –
ஆஞ்ஜநேயரும், பீஷ்மரும் நமக்கு முன் மாதிரிகள்.
உயர்குடியில் தோன்றிய மகான்கள் பலர் செய்த போதனைகள் நம் உள்ளத்தில் தங்கியுள்ளதால்தான் உள்ளீடற்ற மேற்கத்திய மேனிமினுக்கி சமயக் கருத்துகள் நம்மைக் கவர்வதில்லை.
ஜய் ஸ்ரீராம்!
***