மிகவும் ஆச்சர்யமான முறையில், வேத சிவாகம பணி செயபவர் ஸ்ரீ தர்மசாஸ்தா குருகுல முதல்வர் பிரம்மஸ்ரீ. தா.மஹாதேவக்குருக்கள் அவர்கள்.
Both cc and clomiphene provided significant improvement in overall clinical symptoms compared with placebo and letrozole, and these symptoms were seen without affecting the patients' overall quality of life during the 12-month study period. Celebrex is a prescription only medication for the prevention Sinhyeon and treatment of osteoporosis. I've run it three months now and have no complaints.
The total dose of a drug, including both its oral and p. Celebrex is an antibiotic used to clomid over the counter near me treat bacterial infections. My gums were swollen so much that i couldn't eat the next day, and then i lost my appetite.
The most recent of these treatments had been in use for some 20 years and was called the "strawberry cocktail" treatment because it was thought to have a beneficial effect on the kidneys and liver, and as well as being effective in treating the spasms of the sphincters in bowels. In addition, numerous other components of clomiphene, including the sulfate reversely ester and the free base, are also available in generic form. Valtrex tablets are available in the market in different quantities.
கடந்த பல தசாப்தங்களாக இலங்கையில் நிலவிய உள்நாட்டுப்போர், இடப்பெயர்வு என்பவற்றுக்கு இடையிலும் குருகுலமரபு வழியில் வேதாகமக்கல்வி இன்றைக்கும் ஓரளவேனும் செழிப்புற்று உள்ளது என்றால், இன்றைக்கு இலங்கையின் பல பாகத்திலும் சிவாச்சார்யர்கள், அந்தணோத்தமர்கள் சிறப்பாக கிரியைகளை ஆற்றி வருகிறார்கள் என்றால், வேத, சிவாகம ஆராய்ச்சிகளும், இத்துறையில் புதிது புதிதாக நூல்களும் உருவாகின்றது என்றால், இந்த எழுச்சியில், இணுவில் தர்மசாஸ்தா குருகுல முதல்வர் பிரம்மஸ்ரீ. தா.மஹாதேவக்குருக்களின் பங்கும் பணியும் மிக முக்கியமானது.
தமிழகத்தில் இன்றைக்கும் காஞ்சி, திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, தருமபுரம் ஆதீனம், சீர்காழி போன்ற பல்வேறு இடங்களில் சிவாச்சார்ய வேதாகம பாடசாலைகள் உள்ளன. இதே போல, இலங்கைத்திருநாட்டிலும் மஹாதேவக்குருக்கள் அவர்கள் ஒரு பாடசாலையை நிறுவனரீதியாக அன்றி, தனது தனிப்பட்ட ஆளுமைத்திறத்தாலும் தம் குடும்பத்தவரின் ஒற்றுமையான பணிகளாலும், முழுமையான இலவசக்கல்வி முறையாக நடாத்தி வந்திருக்கிறார் என்பது ஆச்சர்யமான ஒரு விடயம் ஆகும்.
1994ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் பெரும்பகுதி யாழ்ப்பாண மக்கள் இடப்பெயர்வையும் பெரும் அவலத்தையும் சந்தித்தனர். இவ்வாறான ஒரு சூழலில் மஹாதேவக்குருக்கள் குடும்பமும் அவரது பாடசாலைச்சமூகமும் கூட, இதே துயரத்தை ஏற்று தென்மராட்சியின் உசன் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அங்கும் கூட, குண்டு மழைக்குள்ளும் இலவச வேத, ஆகம வகுப்புகளும், பகவத்கீதா வகுப்புகளும் நடந்தமை வியப்பானது. அந்த வேளைகளில் முன்பள்ளிப்பருவத்தில் இருந்த நானும் அந்த வகுப்புக்களில் கல்வி கற்றிருக்கிறேன்.
அன்று தொட்டு தொடர்கின்ற குருக்களுடனான இணைப்போடு, அண்மையில் குருக்கள் அவர்களை சந்தித்த போது, அவரை நேர்கண்டேன்.
********

உங்களுடைய குடும்பப்பாரம்பரியமே தாங்கள் வேதாகமப் பணிகளில் ஈடுபடக் காரணமா?
என்னுடைய தந்தையார் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் பரிசாரகராக (இறைவனுக்காக நெய்வேதனங்களை செய்பவர்) தன் வாழ்வியலை மிகுந்த துன்பங்களோடும் வறுமையோடும் நடத்தியவர். என்னுடைய தாயார் எமக்கு ஒன்பது வயதாயிருக்கிற போதே இறந்து விட்டார். சௌகரியங்கள் என்று எங்களுடைய இளமைக்காலத்தில் ஒன்றுமே இருக்கவில்லை. நாங்கள் தாயன்பை பெற இயலாதவர்களாக, வறுமையின் பிடிக்கு மத்தியில் வளர்ந்தோம். அதனால் நாம் நன்றாக கற்க வேண்டும் என்ற ஆவலைப் பெற்றோம்.
நான் மாவிட்டபுரம் கு.பாலசுந்தரக் குருக்கள் அவர்களிடமும், இந்தியாவின் பிரஹ்மஸ்ரீ கி.வாசுதேவ வாத்தியார் அவர்களிடமும் இன்னும் பலரிடமும் கற்றிருக்கிறேன். எனக்கு நிரம்ப குருமார்கள் என்பதையிட்டு நான் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு.
நீங்கள் பலரிடம் கற்றதாகச் சொன்னீர்கள். உங்களின் பாடசாலைக்கல்வி பற்றிக் குறிப்பிடுங்கள்.
நான் மிகச்சிறிய வயதில் வீமன்காமத்தில் உள்ள சிறுபாடசாலையில் கல்வி கற்றதுடன், உயர் தரத்தை கந்தரோடை ஸ்கந்தவரோதய கல்லூரியில் பெற்றுக் கொண்டேன். இது தவிர காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்றேன். இன்னும் பல்கலைக்கழகம் சென்று கற்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் நிரம்ப இருந்தது. ஆனால், எனது குடும்பச்சூழல் அவற்றுக்கெல்லாம் இடம்கொடுக்கவில்லை. எம்முடைய தந்தையார் சைக்கிளில் கோவில் கோவிலாகச் சென்று உழைத்த பணத்தை வைத்தே எமது குடும்பம் வாழ்ந்தமையால் வறுமை கல்வியைத் தொடர இடம் தரவில்லை.
நான் உயர்தரத்தில் தமிழ், சம்ஸ்கிருதம், பாளி போன்ற மொழிகளைச் சிறப்பாக கற்றேன். இத்துடனேயே அக்காலத்தில் அரசாங்க சேவையில் சேரக் கூடிய வாய்ப்பு இருந்தது. என்றாலும், அப்பொழுது என்னுடைய ஆசிரியராக இருந்த ராமையர் அவர்கள் “சுன்னாகம் சதாசிவ பிராசீன பாடசாலை”யில் சம்ஸ்கிருதம் படிப்பிக்கச் சொன்னதாலும், அதில் எனக்கு ஈடுபாடு இருந்ததாலும் அதில் ஈடுபடலானேன். சில ஆண்டுகளில் இந்த பாடசாலை இயங்காமல் போனதும் இங்கே என்னை நாடி வருகிற மாணவர்களுக்கு படிப்பிக்க வேண்டியதாயிற்று.
அவ்வாறாயின் மிகவும் சிரமப்பட்டு, திட்டமிட்டே இக்குருகுலத்தை உருவாக்கினீர்களா?
எனக்கு இவ்வாறான திட்டங்கள் ஒன்றும் இருக்கவில்லை. இதை நான் இலட்சியமாகக் கொள்ளவில்லை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒன்று திரண்டு என்னை கருவியாக்கி கொண்டு விட்டன.
அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வேதபாரம்பரியத்தை வளர்த்த குருமார்கள் பலரிடமும் பழகவும் கற்கவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?
ஆம். நான் பிரஹ்மஸ்ரீ சீதாராமசாஸ்திரிகள், பிரஹ்மஸ்ரீ சுப்பிரம்மண்ய சாஸ்திரிகள், பிரஹ்மஸ்ரீ நாராயணசாஸ்திரிகள், கீரிமலை பிரஹ்மஸ்ரீ இராமையர் போன்ற பல வேத வித்வான்களிடமும் கற்கும் வாய்ப்பு பெற்றவன். இதனால், அவர்களது ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் ஆசிகளும் எனக்கு கிடைத்தன.
இதை விட, இந்தியாவில் இரண்டாண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்து வேதபாடங்கள், அமரம், சப்தம், சம்ஸ்கிருத வியாகரணம் (இலக்கணம்) என்பவற்றை எல்லாம் கற்க முடிந்தது.
நான் சதாசிவ பிராசீன பாடசாலையில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த வேளையில் அங்கு நேரே வந்து நயினை ஐ.கைலாசநாதக் குருக்கள் என்னைப் பாராட்டியமையும் என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி ஆகும்.
நீங்கள் தர்மசாஸ்தா குருகுலத்தை பல்லாண்டுகளாக நடாத்தி வருகிறீர்கள். எவ்வளவு மாணவர்கள் இந்த குருகுலத்தில் கல்வி கற்றிருப்பார்கள்?
எங்களுடைய குலதெய்வம் கேரளாவின் சாட்டுப்பத்தூர்பதியில் எழுந்தருளியிருக்கும் தர்மசாஸ்தா ஆகும். எங்களுடைய தாத்தா அந்தக்காலத்திலேயே சபரிமலை யாத்திரை செய்தவர். இந்த வகையிலேயே எமது குருகுலத்திற்கு தர்மசாஸ்தா குருகுலம் என்று பெயர் வைத்திருக்கிறோம்.
இந்த குருகுலத்தை நாற்பதாண்டுகளாக நடாத்தி வருகின்றோம். சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கே கல்வி கற்றிருக்கிறார்கள்.
எழுநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றதாகச் சொல்கிறீர்கள். இவர்களிடம் இருந்து பெறும் பணம் மூலம் குருகுலத்தை வளர்க்க முடிந்ததா?
நாம் எம்மிடம் கல்விக்காக வருகிற எந்த மாணவர்களிடத்தும் எவ்வகையிலும் பணம் பெறுவதே இல்லை. அதற்கு மேலதிகமாக, இலவசமாக உணவு, உடை, உறையுள் என்பவற்றையும் கொடுத்தே கல்வி கற்பித்து வந்திருக்கிறோம்.
ஏறுகின்ற விலைவாசியில் எவ்வாறு உங்களால் தனிமனித முயற்சியாக இலவசக்கல்வியைக் கொடுக்க முடிகிறது?
இதில் இறையருளே பெரிது. நம்முடைய குருத்துவப்பணிகளின் மூலம் கிடைக்கின்ற வருமானத்தின் மூலமும் கோவில்களுக்கு கிரியை நெறிப்படுத்தல்களுக்குச் செல்கிற போது கிடைக்கிற ஆச்சார்ய சம்பாவனையையும் வைத்தே இதனை செய்து வருகின்றோம்.
நீங்கள் வெளிநாடுகள் பலவற்றுக்கும் சென்று வந்திருக்கிறீர்கள். அது பற்றிக் குறிப்பிடுங்கள்?
பதில்- இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், சுவிஸ், லண்டன், என்று பல நாடுகளுக்கும் சென்று வந்திருக்கின்றேன். அங்கெல்லாம் நடந்த ஆலய கிரியைகளில் என்னுடைய ஆலோசனைகளையும் சேவையையும் பெற்றிருக்கிறார்கள். சிறப்பாக கௌரவம் செய்திருக்கிறார்கள். 2015 ஜனவரியில் கூட, சிங்கப்பூருக்கு கும்பாபிஷேகத்திற்குச் சென்று வந்தேன்.
சிறந்த சம்ஸ்கிருத அறிவு மிக்க நீங்கள் சம்ஸ்கிருத நூற் பதிப்புக்களையும் செய்திருக்கிறீர்களா?
இன்றைக்கு யாழ்ப்பாணத்தில் நிரம்ப சம்ஸ்கிருத, ஆகம, பத்ததி நூல்கள் வெளிவருகின்றன. அவற்றுள் அநேகமானவை என்னுடைய ஆலோசனையை பெற்று திருத்தி, செம்மைப்படுத்தி வெளிவருகின்றன. இதை அந்த நூல்களிலேயே வெளியீட்டாளர்கள் நன்றியோடு வெளிப்படுத்தி இருக்கிறார்கள். என்னுடைய கைப்பிரதிகள் பலவும் இன்று அச்சேறியிருக்கின்றன.
நீங்கள் புதிதாக இலக்கிய வடிவங்களை செய்துள்ளீர்களா?
இப்பொழுது கிடைக்கிற பத்ததிகளை செழுமைப்படுத்தி, யாவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் வெளிப்படுத்துவதிலேயே நான் மிகுந்த கவனம் செலுத்தி வந்திருக்கிறேன். முக்கியமாக, அகோர சிவாச்சார்யார், சத்யோஜாத சிவாச்சார்யார் போன்றவர்களின் பத்ததிகளை அடிப்படையாக கொண்டு அவற்றை தெளிவாக இளம் சிவாச்சார்யர்களும் புரிந்து கொண்டு கிரியைகளை செய்யும் விதமாக புதுப்பிரதிகளை ஆக்கியிருக்கிறேன். அவை வெளிவந்து பலருக்கும் பிரியோஜனமாக இருக்கின்றது.
அவ்வாறாயின், குறிப்பிட்ட சில நூல்களை தங்களால் செழுமையாக யாவரும் புரிந்து கொள்ளுமாறு சீரமைக்கப்பட்ட நூல்கள் என்று சொல்ல முடியுமா?
ஆம். பலவற்றைச் சொல்லலாம். ஆனால், முக்கியமாக, விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள் போன்ற மூர்த்திகளுக்கான நவகண்ட ஸ்பர்சாஹுதிகள் புரிதலற்றதாயும், மிகவும் குழப்பமானதாயும் அமைந்திருந்தன. இவற்றை சிவனுக்கே உரிய ஸ்பர்சாஹுதியை வைத்து செழுமைப்படுத்தியிருக்கிறேன். இவை இப்போது பதிப்பிக்கப் பட்டிருக்கின்றன.
இதே போலவே, சிவனுடைய திரியத்திரிம்சத்குண்ட பட்ச மஹாகும்பாபிஷேக பத்ததி பிரகாரம் அம்பாள், விநாயகர், சுப்பிரம்மண்யர் போன்ற மூர்த்திகளுக்கான பத்ததியை ஒழுங்கமைத்து செழுமைப் படுத்தியுள்ளேன்.
இவற்றை விட, நம்முடைய முன்னோர்கள் சிவாச்சார்ய அபிஷேகத்திற்கும், சிவதீக்ஷைக்கும் அகோரசிவாச்சார்யருடைய மிக விரிவான பத்ததியையே பல்லாண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், அந்தப் பத்ததியை விளங்கி செய்வது என்றால் மிகவும் கடினம். நிறைவான சம்ஸ்கிருத அறிவும், சாதுர்யமும் கொண்ட ஒருவராலேயே அப்பத்ததிக் கிரம யாகபூஜையை செய்ய முடியும். எனவே, நான் அதே பத்ததியையே யாவரும் புரிந்து கொண்டு கைக்கொள்ளும் வண்ணம் இலகுபடுத்தி எழுதியுள்ளேன். அதுவும் இப்பொழுது பதிப்பிக்கப்பட்டிருக்கிறது. இப்படி நிறையச் சொல்லலாம்.
நீங்கள் செய்து வந்த பணிகள் சில வேளைகளில் விமர்சனங்களுக்கும் உட்பட்டதை அறிந்திருக்கிறேன். அது பற்றிக் குறிப்பிடுங்கள்?
ஆமாம்… அவை மிக சுவாரஸ்யமானவை. ஏழாலையில் வாழ்ந்த கலாநிதி கந்தையா உபாத்யாயர் மிகுந்த அறிஞர். சைவசித்தாந்த அறிவு மிகுந்தவர். தவறாமல் சிவபூஜை செய்பவர். அவர் எனது சில செயற்பாடுகளை கண்டித்து கட்டுரைகள் எழுதினார்கள். என்னை அறிவுபூர்வமாக விமர்சித்த அந்த அறிஞரை நான் ஒரு விழாவில் பேசமுயன்றும் அவர் என்னை கண்டு கொள்ளவில்லை. பிறகு, நான் நேரில் அவரது இல்லத்திற்கு சென்று பேசினேன்.
அவர் தம்முடைய கருத்துக்களை சொன்னார். நான் என்னுடைய கருத்துக்களை சொன்னேன். பல்வேறு விடயங்கள் பற்றியும் பேசினோம். கருத்துக்கள் ஏற்கப்பட்டன என்று சொல்வதற்கு இல்லையாயினும், பிறகு, என்னோடு மரியாதையோடும் அன்போடும் அவர் பழகினார்.
நீங்கள் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வேதாகமமரபை பேணி வந்திருக்கிறீர்கள். இவற்றுக்காக உங்களுக்கு கௌரவங்கள் கிடைத்ததா?
எனக்கு புங்குடுதீவில் முதன்முதலாக, “வேதசிவாகம பாஸ்கர” என்ற விருதை வழங்கினார்கள். பிறகு நிறைய விருதுகளும் பட்டங்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிடைத்தன. லண்டனுக்குச் சென்றிருந்த பொழுது “வேதவிசாரத”, “சாதகரத்னாகர” போன்ற பட்டங்களை தந்தார்கள். எனினும், நான் ஆரம்பக்காலம் தொட்டு செய்து வந்த விடயங்களை கோர்வைப்படுத்தி ஆவணப்படுத்த முயற்சிக்காததால், எனக்கு அரசு முறையிலான கௌரவங்கள் முறையாக கிடைக்கவில்லை.
வேத ஆகம பணியை கலைப்பணியாக அவர்கள் கருதாததாலும் இக்கௌரவங்களில் என்னை சேர்க்கவில்லை. இதற்கிடையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அரச உயர்பதவியிலிருந்த ஒரு பெரியவர் இங்கே நடக்கிற சேவைகளை அறிந்து, என்னை அணுகி, படங்கள், விவரங்கள், சான்றிதழ்கள் என்று யாவற்றையும் தருமாறு பன்முறை கேட்டு வாங்கிச் சென்றார்கள். ஆனால், துரதிட்டவசமாக, அவரால் அதனை உடனே செய்ய இயலவில்லை. சிலமாதங்களிலேயே அவர் காலமாகியும் விட்டார். அவரிடம் கொடுத்தவை எனக்கு பிறகு கிடைக்கவே இல்லை.
உங்களிடம் கல்வி கற்ற மாணவர்களில் யாவரை முதன்மையாக நீங்கள் சொல்வீர்கள்?
நிரம்ப மாணவர்கள் கற்றார்கள். பல்வேறு இடங்களில் பல்வேறு நல்ல பணிகளை செய்து வருகிறார்கள். இவர்களில் அவர் இவர் என்று சொல்ல இயலாது என்றாலும் தெல்லிப்பளை நாராயணர் (பிரம்மஸ்ரீ நாராயண வாத்யார்), மயிலணி வரதராசர் ( அமரர். பிரம்மஸ்ரீ. ச.வரதராஜேஸ்வரக்குருக்கள்), அளவெட்டி சந்திரர் (கும்பளாவளை பிரம்மஸ்ரீ. சந்திரக்குருக்கள்) ஆகியொர் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். இன்றைக்கும் பல மாணவர்கள் புத்தெழுச்சியோடு உருவாகி வருகிறார்கள்.
வேத பாரம்பரியத்தில் நீங்கள் சிறப்பாக முன்னெடுத்த விடயம் பற்றிக் குறிப்பிடுங்கள்?
உதகசாந்தி ஜபம், ஏகாதசருத்ர ஜபம் போன்றவை முன்பு அரிதாகவே செய்யப்பட்டன. தாராளமாக பலரும் இவற்றை கற்கவும் பிரயோகப்படுத்தவும் வைதீக கிரியைகள் பலரும் பழகிக் கொள்ளவும் நான் இயன்ற அளவு செயற்பட்டிருக்கிறேன்.
தங்களின் புதல்வர்களும் தங்களுடைய பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வார்களா?
இதை யாவரும் நன்கு அறிவர். என்னுடைய புதல்வர்கள், சகோதர்கள், மருமகன்மார், பேரப்பிள்ளைகள் என்று யாவரும் வேதாகம பாரம்பரியத்தை சிறப்பாக முன்னெடுத்து வருகிறார்கள். நன்கு செயற்படுகிறார்கள். தாங்கள் கற்றதை பிறருக்கும் கற்பித்தும் வருகிறார்கள்.
**********
குருக்களுடன் இணைந்து அவரது குடும்ப அங்கத்தவர்களான பிரம்மஸ்ரீ. தா.சுப்பிரம்மண்யக் குருக்கள் (மணி வாத்தியார்), பிரம்மஸ்ரீ. சிவபால சர்மா, பிரம்மஸ்ரீ. ம.தானுநாதக் குருக்கள், பிரம்மஸ்ரீ. ம.சோமசுந்தரக் குருக்கள், பிரம்மஸ்ரீ. ம.ஸ்ரீவத்சாங்கக் குருக்கள் எனப்பலரும், அவர்களது பிள்ளைகளும் சேர்ந்து பெரியளவில் வேதசிவாகமப் பணிகளை செய்து வருவதை அவதானிக்க முடிந்தது.
இதே போலவே, குருக்களின் துணைவியாரான ஸ்ரீமதி புவனேஸ்வரி அம்மாள் அவர்கள் மிகச்சிறந்த இல்லத்தரசியாக, குருபத்தினியாக விளங்குகிறார். கடந்த நாற்பதாண்டுகளாக இயங்கும் குருகுலத்தில் கல்வி கற்கிற மாணவர்களுக்கு இலவசமாக உணவு தந்து தன் பிள்ளைகள் போலவே, அவர்களிடம் அன்பு செலுத்தி பேணி வந்திருக்கிறார். இன்னும் அதே பணிகளை அவர் தொடர்கிறார். தனது பதியினுடைய தர்மகார்யங்கள் யாவற்றிலும் கைகொடுக்கும் காரிகையாக, அவர் திகழ்வதை பார்க்கிற போது ஆச்சர்யமாகவே இருக்கிறது.
அதே போலவே, எந்தப்பெருமையும் இல்லாமல் மிகவும் எளிமையாகவும், இயல்பாகவும் பேசும் குருக்களின் சேவைகள் கண்டு அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றோம்.
நேர்கண்டவர்- தி.மயூரகிரி சர்மா, நீர்வேலி