சங்கராபுரம் அருகே கோவில் தேர் எரிப்பு: கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கி சூடு; 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது
It may be time to switch to the more expensive treatment, such as accutane, to prevent cancer. Is nizagara fda approved in the us is a clomid over the counter Pacora problem, with me nizagara fda approved. A: this article provides an overview of the pharmacological, pharmacokinetic and pharmacodynamic properties of doxycycline, as well as its various clinical uses.
But only a few options are actually safe, proven treatments for acne. Orchids in the genus orchis are dioecious, with male and Vyāra doxycycline monohydrate goodrx female flowers on separate plants. An antibacterial drug that is used to treat certain types of bacterial infections.
It is a simple chemical formula with a complex molecular. Generic clomid for sale has a similar action as clomid, does not require regular Mariquita monitoring, and no known side effects. It may be used to treat breast cancer, prostate cancer, and ovarian cancer.
ஆகஸ்டு 17: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது சேஷசமுத்திரம் கிராமம். இங்கு காலனி பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த தேர்திருவிழாவின் போது ஊர் தரப்பு மக்கள் தங்கள் பகுதி வழியாக தேர் வரக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருபிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தேர்திருவிழா கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டு தேர் திருவிழா நடத்த காலனி மக்கள் முடிவு செய்தனர். இதையறிந்த ஊர் மக்கள் தங்கள் தெரு பகுதியில் தேர் வரக்கூடாது என்று கூறி மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இவர்களிடையே சமாதான பேச்சுவார்த்தை சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் பிரச்சினைக்கு உரிய பகுதியில் தேரை கொண்டு செல்லாமல் விழாவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதைதொடர்ந்து கடந்த 14-ந் தேதி மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது. அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை அங்கு தேர் திருவிழா நடக்க இருந்தது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் இரவு காலனி பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கோவில் முன்பு தேரோட்டத்துக்காக அலங்கரித்து நிறுத்தப்பட்டிருந்த தேர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் தேர் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது. காலனி பகுதியில் உள்ள வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 8 வீடுகள் தீப்பற்றி எரிந்தன. தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் மீது கற்களும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன. மேலும் போலீசாரின் 5 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன…
– தினத்தந்தி, ஆகஸ்டு 17. முழுமையான செய்தி இங்கே.
இந்த சம்பவத்தில் அம்மனின் புனிதமான தேரை எரித்து, ஏழை மக்களின் குடிசைகளைக் கொளுத்தி வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறியர்களுக்கு எதிராகத் தமிழ்ஹிந்து தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறது. கலவரக் காரர்களை அரசும் காவல்துறையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும். இந்து இயக்கங்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் உடனடியாக கிராம மக்களை சமாதானமடையச் செய்து அமைதியையும் நல்லிணைப்பையும் உருவாக்கிட வேண்டும்.
இது குறித்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப் பட்ட சில கருத்துக்கள்:
நடிகை நீட்டி அமர்ந்த காலில்
போலி பகுத்தறிவு
திராவிடவாதியின் நாக்கில்
வர்த்தக சினிமா
உலக நாயக போலித்தனத்தில்…
இவற்றிலெல்லாம் என் தர்மத்தின் மானம் போய்விட்டதாக பொங்கினேன்.
அறியாமையையும் ஆபாசத்தையும்
மலின அரசியலையும் கடந்தது
தர்மத்தின் பெருமிதம் என்று சொன்னாள்
தேசமுத்துமாரி
ஆனால்
ஒட்டுமொத்தமாக
எரிந்து கிடக்கும்
என் தர்மத்தின் மானம்
என்று எனக்கு அன்று தெரிந்திருக்கவில்லை…
கரித்துண்டுகளாக
நேற்று தர்மபுரியில்
இன்று சேஷசமுத்திரத்தில்
அந்த கரி துண்டுகளின் குவியலில்
மாரியம்மனின் தேர் துண்டுகளையும்
தேடி பொறுக்குவேன் என்று
நானெங்கு கண்டேன்…
இன்று நின்று எரிக்கிறது மிச்சம் மீந்த
என் உயிர் உணர்வை
காவியின் மௌனம்.
******
விழுப்புரம் மாவட்டம் சேஷசமுத்திரம் கிராமத்தில் நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் தமிழ் இந்துக்கள் அனைவருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தும் ஒன்று. இது உருவாக்கியுள்ள காயங்களுக்கும் ரணங்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கப் பட வேண்டும். தற்போதைய சூழலில், அதற்கான பொறுப்பும் தார்மீக உரிமையும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத் தலைவர் தவத்திரு பங்காரு அடிகளாரைச் சேர்ந்தது என்று நான் கருதுகிறேன்.
பங்காரு அடிகளாரின் இயக்கம் அந்தப் பகுதியில் வேர்கொண்டு தமிழகம் முழுவதும் 1980களில் பிரபலமடைந்தது (அதன் வளர்ச்சியில் இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்கள் ஆற்றிய பங்கும் மிக முக்கியமானது). அனைத்து சாதியினரும், குறிப்பாக பெண்களும் நேரடியாக சக்தி வழிபாடும், பூஜைகளும், சடங்குகளும் செய்யும் ஏற்பாட்டின் மூலமாக எளிய மக்களிடையே ஆன்மீக மறுமலர்ச்சியையும் சமுதாய சமத்துவத்தையும் அவரது இயக்கம் வலியுறுத்தி வந்திருக்கிறது. அந்தப் பகுதியில் கல்வி, மருத்துவ மையங்களையும் நடத்தி வருகிறது.
பங்காரு அடிகளார் இந்தக் கிராமத்திற்கு உடனடியாக விஜயம் செய்ய வேண்டும். இரு தரப்பினரும் அவர் முன்னிலையில் கூட வேண்டும். அம்மனின் தேரை எரித்து, ஏழை மக்களின் குடிசைகளை எரித்த ஆதிக்க சாதியினர் அவர் முன்னிலையில் தாங்கள் செய்த பெரும் பாவத்திற்கு தலித் குடும்பங்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். எரிந்த குடிசைகளை மீண்டும் கட்டித் தருவதும் தேரை மீண்டும் செப்பனிட்டு கோலாகலமாக அம்மனை ஊரின் அனைத்துத் தெருக்களிலும் பவனி வரச்செய்வதுமே இதற்கான பிராயச்சித்தம் என்று அடிகளார் அறிவிக்க வேண்டும். இந்த பிராயச்சித்தத்தை செய்யாத பட்சத்தில், அம்மனின் கோபம் அந்த வன்கொடுமை செய்தவர்களின் குடும்பங்களையும் அவர்களது தலைமுறைகளையும் சென்று தாக்கும் என்ற விஷயம் உறுதியாக ஆதிக்க சாதிக்காரர்களிடம், குறிப்பாக அந்தக் குடும்பத்துப் பெண்களிடம் சொல்லப் பட வேண்டும். இதற்கான நிதியுதவியின் ஒரு பங்கை ஆதிபராசக்தி பீடமும் இந்து இயக்கங்களும் இணைந்து வழங்கலாம். தேர்த்திருவிழாவிலும் அடிகளார் பங்குகொண்டு ஆசியளிக்க வேண்டும்.
இந்த ஏற்பாட்டை உடனடியாக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து இயக்கங்கள் செய்ய வேண்டும். உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை உடைத்தெறிந்ததில் அவர்களது பங்கு சிறப்பானதாக இருந்திருக்கிறது. அதே உத்வேகத்துடன் இந்தப் பிரசினையிலும் செயல்பட வேண்டும். காலம் தாழ்த்துதல் கூடாது.
(பி.கு: இந்தச் சம்பவம் நடந்த சங்கராபுரம் கிராமப் பகுதியுடன் எனக்கு தனிப்பட்ட அளவில் ஒரு தொடர்பு உண்டு. எனது மாமனாரின் பூர்வீக ஊரான மேலகரம் அங்கு தான் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு விசேஷத்திற்காக அங்கு போயிருக்கிறேன். அவரது குடும்ப அங்கத்தினர்கள் பெரும்பாலர் ஊரிலிருந்து சென்னை போன்ற பெருநகரங்களுப் பெயர்ந்து விட்டனர்).
– ஜடாயு
******
சேஷசமுத்திரம் வன்முறையில் தலித்துக்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். கோவில் தேர் எரித்து நாசமாக்கப்பட்டிருக்கிறது.
செய்ததது சோ கால்டு சாதி இந்துக்களே தான். அதுவும் புர்ச்சிகர கட்சிகளான திமுக, திக மற்றும் தேமுதிக, அதிமுக கட்சிகளில் இருப்பவர்கள். கவனிங்க சோகால்டு பாமக வன்னிய சாதி வெறியர்கள் ஏதும் செய்யலியாம். செஞ்சது எல்லாம் மத்த கட்சி சாதிவெறியர்களே.
அவர்கள் அதுவும் மேடை போட்டு இது டந்தை டரியார் பிறந்த மண் இங்கே இந்துத்துவா தலையெடுக்கமுடியாது என முழங்குபவர்கள்.
அவர்கள் எல்லாம் அப்போ புர்ச்சிகர பொங்கலாளிகளாக இருப்பவர்கள் இப்போ மட்டும் சாதி இந்துக்கள் ஆகிவிடுகிறார்கள்.
தேர்தல் வந்தா மட்டும் இங்கே இந்து இயக்கங்களை உள்ளே விடமாட்டோம். இந்துத்துவா காலூன்ற விடமாட்டோம் என கூவும் டுபாக்கூருகள் இப்போ இந்து இயக்கங்கள் என்ன செய்தன என கேட்கிறார்கள்.
இதை இந்து இயக்கங்கள் வாய்ப்பாக சவாலாக எடுத்துக்கொண்டு அங்கே எரிக்கப்பட்ட தேர் மீண்டும் ஓடவும் திருவிழா சிறப்பாக நடக்கவும் ஏற்பாடு செய்து இந்த மானங்கெட்ட த்ராவிட த்ராபைகள் மீதும் புர்ச்சி பொங்கலாளிகள் மீதும் கரியை பூசவேண்டும்.
தேர் இழுப்பு, சாமி ஊர்வலம் எல்லாம் வயதானவர்கள், முடியாதவர்கள், கர்ப்பிணிகள் போன்றோர் கடவுளை கும்பிட கோவிலுக்கு வரவேண்டியதில்லை கடவுளே வீடு தேடி போய் அருளுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நடப்பவை.
அதை எரிக்கும் கபோதிகளுக்கு கடும் தண்டனை தரப்படவேண்டும். இந்துத்துவ இயக்கங்கள் முன்நின்று அதை நடத்திக்காட்டவேண்டும்.
*****