காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

ஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும். காங்கிரஸ், அன்று மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது. இப்போது இந்துக்களை வஞ்சித்து மைனாரிட்டிகளை திருப்தி படுத்துகிறோம் என்று நாட்டை நாசப் படுத்தி வருகிறது. நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான்.. ஓ ஹிந்து சகோதர, சகோதரிகளே இன்னுமா காங்கிரசிர்கு ஒட்டு போட வேண்டும் என்கிறீர்கள்? அப்படி என்றால் நீங்கள் நமது நாடு குழிதோண்டப் படுவது பற்றியும் உங்கள் குழந்தைகளும் உங்களது பேரக்குழந்தைகளும் இரண்டாம்தரக் குடிகளாக வாழ்வதை வரவேற்கிறீர்கள் என்று அர்த்தம்!

View More காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

விவசாயிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு

1,934 கோடி ரூபாய் வட்டி தள்ளுபடிக்குறிய விவரங்கள் அடங்கிய ஆவணங்களைக் கூட வங்கிகள் வைத்திருக்க வில்லை. தள்ளுபடி செய்யப்பட்ட வட்டி, வட்டி சதவீதம் என்ன? எந்த காலத்திற்கு வட்டி கணக்கிடப்பட்டது? மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தின் படி எந்த விவசாயிக்கு வட்டி தள்ளுபடி கிடைக்கும் என்பது பற்றி ஆவணங்கள் கூட சில வங்கிகள் வைத்திருக்க வில்லை. ஆந்திராவில் ஐந்து வங்கிகளில் 25 சதவீத தொகையான ரூ66.16 லட்சத்திற்குறிய அதாவது 75 சதவீதம் கட்ட வேண்டிய விவசாயி கட்டாமலே, வங்கி கட்டியதாக காட்டி மத்திய அரசிடமிருந்து 25 சதவீத தொகையை பெற்றுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

முறையான வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கியும், நபர்டு வங்கியும் அவ்வப்போது அனைத்து வங்கிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் இந்த நெறிமுறைகளுக்கு புறம்பாக விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதாவது 31.3.1997க்கு முன் கடன் பெற்ற விவசாயிகள், 31.3.1997 முதல் 31.3.2007ந் தேதி வரை தான் செலுத்த வேண்டிய அசல் தொகை மற்றும் வட்டியை கட்டாதவர்கள், மற்றும் பல முறை நினைவுட்டு செய்யப்பட்ட பின்னும், 29.2.2008ந் தேதி வரை கட்டாமல் ஓவர் டியூ வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் படி தள்ளுபடி கிடைக்கும். ஆனால் 25 மாநிலங்களில் குறிப்பாக கர்நாடகா, மத்திய பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்கள் போன்ற மாநிலங்களில் 1.4.1997க்கு பின்னர் கடன் பெற்ற விவசாயிகளுக்கும் , வழிகாட்டு நெறிமுறைகளை மீறி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதற்காகவே மத்திய அரசாங்கம் 31.3.2007ந் தேதி 2004 மற்றும் 2006-ல் கடன் பெற்றவர்களுக்கும் சில சலுகைகள் கிடைக்கும் விதமாக சிறப்புத் திட்டத்தை அறிவித்தது. இந்த சிறப்புத் திட்டத்திலும் வராத விவசாயிகளுக்கு விதி முறைகளை மீறி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்து. கர்நாடக மாநிலத்தில் மட்டும் 2,879 விவசாயிகளின் கடன் தொகையான ரூ8,85,76,567 விதி முறைகளுக்கு மாறாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 1,050விவசாயிகளின் கடன் தொகையான ரூ2,05,32,186 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது ( ஆதாரங்கள் தணிக்கை அறிக்கை பக்கம் எண்19, இணைப்பு பக்கம் எண்9, 4வது இணைப்பு) இதன் காரணமாக தணிக்கை துறை கொடுத்துள்ள பரிந்துரை தவறு செய்த அதிகாரிகள் மீது குறிப்பாக தணிக்கை செய்ய வேண்டிய தணிக்கையாளர்கள், மத்திய தணிக்கையாளர்கள், தவறான சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

View More விவசாயிகளின் வயிற்றில் அடித்த மத்திய அரசு

காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்

கருணாவின் கட்சியை காங்கிரஸ் ப்யூரோ ஆஃப் இண்டெலிஜென்ஸை அதாவது சில நேரங்களில் அதை சி.பி.ஐ என்றும் அழைக்கப்படும் (அ) நம்பப்படும் ஒரு கும்பலை வைத்து திருக்குவளை முன்னேற்ற கழகத்தின் அனைத்து காய்களையும் நாசுக்காக கம்பி எண்ண வைத்தது நினைவிருக்கலாம். அத்தகைய நயவஞ்சக நண்பனான அந்நிய காங்கிரஸிற்கு தன் ஆதரவு கரத்தை மீண்டும் துடைத்து கொண்டு நீட்டி தன் விசுவாசத்தை குட்டிக்கரணம் அடித்து நிருபித்திருக்கிறார் அண்ணன் கருணா. அவரின் ராஜதந்திரத்தை மன்னிக்க “இராச தந்திர”, “இன மான” உணர்வு மிக்க நகர்வை , மக்களை ஒடுக்க வந்த ஆரிய நச்சுக்களும், பார்ப்பன பதர்களும் ,மவுண்ட் ரோடு மகா விஷ்ணு வகையறாக்களும் விமர்சிக்கின்றன.

View More காங்கிரஸை ஆதரிக்க கருணாவின் காரணங்கள்

தமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை

கருணாநிதியிடம் இருந்து தட்டிப்பறித்த ”தமிழினத் தலைவர்” பட்டத்தைத் தக்க வைக்க மேலும் மேலும் தவறு செய்கிறார். ராஜீவ் கொலையாளிகளுக்கு ஆதரவாக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்; இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை எதிர்க்கிறார்… தமிழக அரசின் நடவடிக்கைகளை தங்களுக்கான ஆதரவாக எடுத்துக்கொள்ளும் புலி ஆதரவாளர்கள் வரம்பு மீறுகின்றனர்… 80-களின் இறுதியில் தமிழகத்தில் நிலவிய பயங்கரத்தை நாம் மறந்துவிடக்கூடாது… சிங்களர்களுக்கு எதிரான வெறுப்புணர்வை தமிழகத்தில் வளர்ப்பது இலங்கை வாழ் தமிழர்களை மேலும் பாதிக்கவே செய்யும்.

View More தமிழக அரசின் இலங்கை எதிர்ப்பு – ஒரு பார்வை

ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?

அன்று ஸ்பெக்ட்ரம் ஊழல் (ரூ. 1.76 லட்சம் கோடி) குறித்து சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த ஆ.ராசாவை பதவி விலகச் செய்த காங்கிரஸ் கட்சி, அதே போன்ற நிலக்கரி சுரங்க ஊழலை (ரூ. 1.86 லட்சம் கோடி) சி.ஏ.ஜி அம்பலப் படுத்தியவுடன் அதற்கு பொறுப்பாக இருந்த மன்மோகன் சிங்கை நீக்குவது தானே முறை? தொலைதொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் ஊழலுக்காக பதவி விலகுவது கட்டாயம் என்றால், நிலக்கரித் துறையை 2005 முதல் 2009 வரை தன்வசம் வைத்திருந்த மன்மோகன் சிங் நிலக்கரி ஊழலுக்காக பதவி விலகுவது தானே சரியானது? இதில் உச்சபட்ச நகைச்சுவை, பாஜகவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாக சோனியா அம்மையார் முழங்கி இருப்பது தான். அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பல்வேறு தருணங்களில் காங்கிரஸ் எம்.பி.க்கள் எவ்வாறெல்லாம் அமளியில் ஈடுபட்டார்கள் என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

View More ஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா?

ஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…

அண்ணா ஹசாரே ஜன லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக் கோரியும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய அமைச்சர்கள் மீதான விரைவான விசாரணை கோரியும், நேற்று (ஜூலை 29) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளார். திருட்டில் தொடர்புடைய ஒருவரிடம் இருந்து நேர்மையான விளக்கத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது. அதுவும் நாட்டையே திவாலாக்கும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் தன்னிலை விளக்கம் அளிப்பர் என்று எதிர்பார்ப்பது பரிதாபமானது. இதைவிடப் பரிதாபம், இன்னமும், அண்ணா ஹசாரே, ‘’மன்மோகன் சிங் நல்லவர் தான்’’ என்று ஓயாமல் பேசிக் கொண்டிருப்பது. இதையே காங்கிரஸ் ஆதரவு ஊடகங்கள் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ஹசாரே மீது நம்பிக்கையின்மை ஏற்படும்படியான செய்திகளை வெளியிடுகின்றன. சுதந்திர இந்தியாவில் இருந்த அரசுகளிலேயே மிகவும் ஊழல்மயமான அரசு என்று பெயர் பெற்றுவிட்ட மன்மோகன் சிங் அரசு இப்போது ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜியை முன்னிறுத்தி வென்றிருக்கிறது. அவர் மீதும் குற்றம் சாட்டி இருக்கின்றனர் ஹசாரே குழுவினர். இதுதான் இப்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

View More ஊழல் நோய்க்கு உண்ணாவிரத மருந்து…

பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2

சர்க்கரை, எத்தனால் தயாரிப்புக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து சுத்திகரிக்கப் பட்ட சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தியை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். சர்க்கரை விற்பனை கட்டுப்பாடுகள், ஏற்றுமதி கட்டுப்பாடுகள் ஆகியவற்றில் இருந்து முழுவிலக்கு அளித்து ,சர்க்கரை துறைகளுக்கும், எத்தனால் உற்பத்தி, விநியோகம், ஆகியவற்றிற்கு தேவையான ஆய்வு நடவடிக்ககள், மேம்பாடு இவற்றை கவனித்து மேலாண்மை செய்யவும், விவசாயிகளின் நலன் காக்கவும், ஊக்குவிக்கவும் ஒரு தனியான தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஆணையத்தை ட்ராய், பிரசார்பாரதி போல அமைத்து அதன் நடவடிக்கைகளை ஆய்வு செய்து மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாம்….

View More பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2

பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1

லிட்டருக்கு 100 கிலோமீட்டர் போகும் பெட்ரோலின் விலை 50 ரூபாய், விவசாயிகளுக்கு பெருமளவு லாபம் கிடைக்கும், கழிவு மறு சுழற்சி ஏற்படும், வளிமண்டலத்தில் கார்பன் மாசின் அளவு அதிகரிப்பது குறையும்,மிக அதிகமாக அந்நிய செலாவணி மிச்சமாகும், நாட்டில் புதிய வேலை வாய்ப்பு உருவாகும், விவசாயம் சார்ந்த பொருள் ஆனாதால் பெருவாரியான மக்களுக்கு நேரடியாக பயன் தரும்.காய்கறிகள் விலை குறையும், ஸ்கூல் பஸ் கட்டணம் குறையும், ரூபாயின் மதிப்பு உயரும். முற்றிலும் சுதேசி தயாரிப்பு, யாரிடமும் கையேந்த வேண்டாம். பெட்ரோலிய பொருட்களின் விலை குறைவால் அனைத்து பொருட்களின் விலையும் குறையும்,விவசாயிக்கு உரிய விலை கிடைக்கும்.அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.இத்தனையையும் தாண்டி எரிபொருள் தீர்ந்து போய்விட்டால் என்ன என்பது போன்ற கவலைகளை ஒதுக்கி வைத்து விட்டு மக்கள் நலனில், நல்வாழ்வில் வேறு ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடலாம். இது போன்ற நல்லதெல்லாம் இந்திய மக்களுக்கு ஏற்படும் அப்படினு தெரிஞ்சாலே ,மக்கள் நல்லாயிருந்துடுவாங்க அப்படிங்கற ஒரு கருதுகோள் போதுமே காங்கிரஸ் அரசு இதை தடுத்து நிறுத்த…

View More பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 1

2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?

நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய அனைத்து மீறல்களும் மத்திய அமைச்சரவையில் இருந்த அனைவருக்கும் தெரிந்தது. இந்த மீறல்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக மீடியாவில் போட்டு உடைக்கப்பட்டவை. இந்த மீறல்கள் சம்பந்தமாக 2007ம் ஆண்டு கடைசி மூன்று மாதங்களான அக்டோபர் நவம்பர் டிசம்பர் முதல் 2008ம் ஆண்டு ஜனவரி பிப்ரவரி மார்ச் மாதங்கள் வரை பாராளுமன்றத்தில் அமளி துமளியாக்கப்பட்டன. இது பற்றிய அனைத்து விவகாரங்களும் பிரதமருக்கும் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கும் தெரிந்தும், இதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கூறிய பின்னும் பிரதம மந்திரி மௌன குருவாக காட்சியளிக்க வேண்டிய அவசியம் என்ன?

View More 2ஜி உச்ச நீதி மன்ற தீர்ப்பு – பதில் சொல்லுவாரா பிரதமர்?

இந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்

இந்திய சமூக, பொருளாதார, கலாச்சார யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு இப்பிரசினையை அணுக வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தால் ஏற்படும் அபாயங்கள் குறித்து ஹம்ஸா குரூப் தொழில் நிறுவனத் தலைவர் சேகர் சுவாமி ஒரு அருமையான பிரசண்டேஷனை உருவாக்கியுள்ளார். அதன் தமிழ் வடிவத்தை வாசகர்களுக்கு வழங்குகிறோம்… கோடிக்கணக்கான சாமானிய இந்தியர்களின் வாழ்க்கையை பாதிக்கும் இந்த பிரசினையில் தேச நலனை முன்வைத்து பா.ஜ.க எடுத்திருக்கும் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் பாஜவுக்கு ஆதரவாக நின்று….

View More இந்திய சில்லறை வியாபாரத்தில் நேரடி அன்னிய முதலீடு – பெரும் அபாயம்