மூலம்: ரிச்சர்ட் ஷேனிக் (Richard Schoenig)
தமிழில்: ஆர்.கோபால்
This page provides the best place to buy amoxicillin online from us at best prices. How is it Lynn a problem if the number of words i write and use isn?t really that big. In addition to that mox 500 tablet is available with the lowest price in the market.
By blocking the testosterone from being effective, the testicles get no testosterone to work with which then leads to the testosterone levels dropping significantly. Averaged 3.2 cents per kilowatt hour in january, slightly less than the buy amoxicillin no prescription Liaozhong 4.6-cent average price for january of 2011. This medicine is prescribed to treat certain chronic bacterial infections like pneumonia, bronchitis, sinusitis, and meningitis.
We conducted a double-blind study to assess the efficacy of per os bid (900 mg bid) given for 6 days in the treatment of *pseudomonas aeruginosa*infection in hiv-infected patients as compared with oral ciprofloxacin (cip, 400 mg) therapy. It features a buy clomid pct australia longest compact and robust design that is suitable for a variety of applications. Cough and fever are two of the most common symptoms of pneumonia.
“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 1
(தொடர்ச்சி…)
3.2.1.1 இயற்கைக்கு முந்தைய கொடை சமாளிப்புக்கான பதில்கள்
(1) கத்தோலிக்க என்சைக்ளோபீடியாவுக்கு மாறாக, ஓர் அரசர் விசுவாசமில்லாத ஜமீந்தாரைத் தண்டிப்பது என்பது, யாஹ்வே தெய்வம் முதல் பாவத்துக்காக தண்டிப்பதற்குச் சரியான ஒப்பீடாகக் கருத முடியாது. இந்த உவமையில் இருக்கும் பிரச்சினைகள் கீழே:
ஒரு கொடையைக் கொடுத்துவிட்டு மீண்டும் எடுத்துகொள்வதன் மூலம் பெரிய தீங்கு விளையுமென்றால், அந்த கொடையை மீண்டும் எடுத்துகொள்வது ஒழுக்கக்கேடான விஷயம். உதாரணமாக நான் யாருக்காவது கிட்னி தானமாக கொடுத்துவிட்டு கிட்னியை பெற்றுக்கொண்டவர் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை என்பதற்காக கிட்னியை திருப்பிக்கொடு என்று கேட்பது ஒழுக்கக்கேடான விஷயம். பொருளாதார ரீதியில் வறிய நிலையில் இருக்கும் தாய்மார்களுக்கு செலவுக்குப் பணத்தை கொடுத்துவிட்டு அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது அதற்கு பதிலாக ஃபார்முலா பால்தான் கொடுக்க வேண்டும் என்று கோருவது போன்றது. மீறி தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களிடமிருந்து கொடுத்த பணத்தைப் பிடுங்குவது என்பது ஒழுக்கக்கேடானது ஏனெனில் அது குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கும்.
முதல் பாவத்துக்கான யாஹ்வே தெய்வத்தின் தண்டனை என்பது ஆதாம் ஏவாள், இன்னும் அவர்களது பல கோடிக்கணக்கான சந்ததியினர், இன்னும் மிருகங்களின் சந்ததியினர் ஆகியோருக்குக் கொடுத்திருந்த கொடைகளை நீக்குவதன் மூலம் உயிர், கை, கால், வாழ்க்கை அனைத்தையும் பாதிக்கும்படி செய்துவிட்டது. ஆகவே கொடுத்த கொடைகளை நீக்குவது தார்மீக நிலைப்படி தவறானது. அரசர் தனது பட்டாவை விலக்கிகொள்வது என்பது இப்படிப்பட்ட மாபெரும் அழிவையும் துயரத்தையும் ஜமீந்தாரரின் சந்ததிகளுக்கு கொடுக்கவில்லை. ஆகவே அரசர் தனது பட்டாவை விலக்கிக்கொள்வதை ஒழுக்கக்கேடு என்று சொல்லமுடியாது.
யாஹ்வே தெய்வம் தனது கொடைகளை விலக்கிக்கொண்டதன் மூலம் ஆதாம் ஏவாளுக்கு மிகப்பெரிய துன்பம் நேர்ந்தது என்பதையும், இவற்றோடு அரசர் தனது பட்டாவை விலக்கிக்கொண்டதை ஒப்பிடமுடியது என்பதையும் பார்த்தோம். எந்தக் குற்றத்துக்காக யாஹ்வே தெய்வம் தனது கொடைகளை நீக்கிக்கொண்டதோ அந்தக் குற்றம், ஓர் அரசர் பட்டாவை நீக்கிகொள்ளத் தூண்டிய குற்றத்தைவிட மிக மிகக் குறைவான குற்றம் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும். ஓர் அரசர் ஓர் அமைப்புக்குள் வேலை செய்கிறார். அந்த அமைப்பில் ஒருவரை ஜமீந்தாராக ஆக்கி பிறகு அவர் விசுவாசமில்லாமல் போய்விட்டால், அந்த அரசருக்கும், அந்த அரசுக்கும் பெரும் கேடு விளையும். ஆனால், ஆதாம் ஏவாள் விஷயத்தில் அவர்களது விசுவாசமின்மை காரணமாக எந்த ஒரு பெரிய கேடும் நடந்துவிடப்போவதில்லை. அவர்கள் கனியை உண்டதால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை.
(2) இயற்கைக்கு முந்தைய கொடை சமாளிப்பில், ஆதாம் ஏவாளைப் பொருத்தமட்டில் எது இயற்கைக்கு முந்தைய கொடை, எது இயற்கையான குணாம்சம் என்ற வித்தியாசம் சமாளிப்பாகத்தான் இருக்கிறது. ஏனெனில், இந்த வேறுபாடு ஆதியாகமக் கதைகளில் எங்கேயும் இல்லை. இதன் ஒரே வேலை, யாஹ்வே தெய்வம் முதல் பாவத்துக்குக் கொடுத்த தண்டனையைச் சமாளிப்பதுதான்.
(3) யாஹ்வே தெய்வம் முழுமையான நல்லது பொருந்திய தெய்வம் என்ற கொள்கைக்கு இயற்கைக்கு முந்தைய கொடை சமாளிப்பு ஆப்படிக்கிறது. முன்னரே குறிப்பிட்டதுபோல, இந்தச் சமாளிப்பு ஆதாம் ஏவாளும் பாவம் செய்தபோது அவர்களது சந்ததியினர் ஆதாம் ஏவாளின் இயற்கை குணாம்சங்களை வழிவழியாகப் பெற்றார்கள். ஆனால், இயற்கைக்கு முந்தைய கொடைகளைப் பெறவில்லை. ஆனால், இந்தக் குணாம்சங்களால், மனிதர்கள் பிறக்கும்போதே யாஹ்வே தெய்வத்திற்குப் பிடிக்காதவர்களாகப் பிறக்கிறார்கள் என்று கிறிஸ்துவ மதம் கூறுகிறது. முதல் பாவத்தை ஞானஸ்நானம் செய்து போக்கிக்கொள்ளாமல் இறக்கிறவர்களுக்கு நடுநரகம் (perdition) காத்திருக்கிறது என்று அது கூறுகிறது. ஒரு குழந்தை உருவாகிறபோதே அதன் மனித இயற்கையால் (அவர்கள் என்ன நல்லது கெட்டது செய்தாலும்) யாஹ்வே தெய்வத்திற்குப் பிடிக்காததாக இருக்கிறது. விட்டேத்தியாக இந்த யாஹ்வே தெய்வம் இருந்தால்கூடப் பரவாயில்லை; ஆனால் அவர்களை விரோதியாகவே கருதும் ஒரு யாஹ்வே தெய்வத்தைத்தான் கிறிஸ்துவம் காட்டுகிறது. ஒன்றும் செய்யவில்லை என்றாலோ, அல்லது ஞானஸ்நானம் கொடுப்பதற்கு முன்னால் மரித்துவிட்டாலோ அவர்களுக்கு நடுநரகம்தான். சுயமாக யாஹ்வேயை மதிக்க சொந்தமாக முடிவெடுக்கும் முன்னாலேயே அவர்களுடன் வீம்புக்கு என்று சண்டைக்குப் போகும் ஒரு தெய்வமாகத்தான் கிறிஸ்துவ தெய்வத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இயற்கைக்கு முந்தைய கொடை என்ற இந்தக் கருத்துருவாக்கம், மிகவும் நல்ல, எல்லோரையும் அன்பு செலுத்தும் ஒரு தெய்வத்தைக் காட்டாமல் வீம்புச் சண்டை போடும் தெய்வத்தைத்தான் காட்டுகிறது.
தனியே இன்னொரு வார்த்தை- கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியாவின் இந்தக் கட்டுரையில் கடைசிவரி குறிப்பிடத்தகுந்தது.
“The doctrine of the Church supposes no sensible or afflictive punishment in the next world for children who die with nothing but original sin on their souls, but only the privation of the sight of God.”
“முதல் பாவத்தை மட்டுமே சுமந்து இறக்கும் குழந்தைகளுக்கு (அதாவது ஞானஸ்நானம் செய்யாமல் இறந்துவிடும் குழந்தைகளுக்கு) அறிவுக்குப் பொருந்தாத கொடூரமான தண்டனை வழங்கப்படாது; ஆனால், யாஹ்வே தெய்வத்தின் பார்வை மட்டும் விழாது என்பதே சர்ச்சின் கொள்கை.”
ஞானஸ்நானம் செய்யாமல் இறந்துவிட்ட குழந்தைகளுக்கு என்ன விதி என்று கிறிஸ்துவ மதம் கூறுவதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமே மிஞ்சுகிறது. யாஹ்வே தெய்வத்தின் கண்பார்வை விழுவதையே ரொம்பப் பெரிய விஷயமாக சொல்லிக்கொள்ளும் கிறிஸ்துவ மதத்தில் அது கிடைக்காது என்பதை அது ஏதோ பெரிய விஷயம் இல்லை என்பதுபோல சும்மா, “ஆனால்” (but only) போட்டுத் தாண்டிப்போய்விட்டார்கள். இரண்டாவது, ஞானஸ்நானம் செய்யப்படாமல் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்ட குழந்தைகளுக்கு இந்த மாபெரிய யாஹ்வே தெய்வத்தின் பார்வை கிட்டாது என்பது ஆதாம் ஏவாளின் சந்ததிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனை மாதிரி அநீதியான தண்டனை இல்லையா? யாஹ்வே தெய்வத்தின் கண்பார்வையை அவ்வளவு பெரிய விஷயமாக வைத்துகொண்டு, இந்த ஞானஸ்நானம் செய்யாத குழந்தைகளுக்கு அது கிடையாது என்பதன்மூலம் இந்தக் குழந்தைகள் பொறுப்பேற்க முடியாத ஒரு விஷயத்துக்குப் பழிவாங்குகிறது கிறிஸ்துவக் கொள்கை. [8]
3.2.2 முதல் பாவக் கொள்கையில் ஒழுக்க நடத்தைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதைச் சமாளிக்க உதவும் “உருவாக்கியவர் உரிமை” நிலைப்பாடு
“உருவாக்கியர் உரிமை” (Creator Card) என்ற கொள்கையை முன்வைப்பவர்கள் யாஹ்வே தெய்வம் உலகத்தை உருவாக்கியது என்ற காரணத்தால், உயிர்களுக்கு எந்த இயற்கையைக் கொடுக்கவேண்டும், கொடுக்க வேண்டாம், கொடுத்த எந்த உரிமையை எடுத்துகொள்ளலாம் என்கிற முழு உரிமை உண்டு; அதே நேரத்தில் அதனால் அவரை எந்தவிதமான ஒழுக்க கேட்டுக்குள்ளும் அடைக்கமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.
3.2.2.1 “உருவாக்குபவர் உரிமை” சமாளிப்புக்கு பதில்
உருவாக்குபவர் என்ற ஒரே காரணத்துக்காக, ஒருவர் தான் உருவாக்கும் உயிர்களுக்கு வலி, துயரம், சாவு ஆகியவற்றைக் கொடுக்க எந்த முகாந்திரமும் இல்லை. ஒழுக்கத்தின் உறைவிடமாக சொல்லிக்கொள்ளக் கூடிய யாஹ்வே இந்த ஒழுக்கரீதியில் தவறான தண்டனைகளைக் கொடுக்க என்ன நியாயம் இருக்கிறது? எந்த அளவுக்கு முதல் பாவத்தின் காரணமாக யாஹ்வே தெய்வம் செய்கிறதோ அதன்படியே இது ஒழுக்கக்கேடு.
3.3 முதல் பாவக் கொள்கையின் அறிதல் பிரச்சினை
யாஹ்வே அனைத்தும் அறிந்ததாக இருந்தால், ஆதாமும் ஏவாளும் பரிசோதனையில் தோற்றுப்போவார்கள் என்று அறிந்திருக்க வேண்டும். நல்ல, கருணை நிறைந்ததாகச் சொல்லப்படும் இந்தத் தெய்வம் ஏன் தண்டனையே விளையும்படியும் அந்த தண்டனையின்படி பல கோடி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் வலி, துயரம், பட்டினி, சாவு என்று இந்த நாடகத்தை நடத்தவேண்டும், அதுவும் இதற்கு மாற்றாக பல நல்ல முடிவுகள் இருக்கும்போது?
யாஹ்வே தெய்வம் எல்லாம் அறிந்ததாக கற்பனை செய்யப்படுவதால், இதுவரை நடந்ததையும், இனி நடக்கப்போவதையும் அறிந்திருக்க வேண்டும். பல கிறிஸ்துவத் தத்துவவியலாளர்கள், [9] மனிதனுக்குக் கொடுத்த சுதந்திரத்தின் விளைவுகளையும் (counterfactuals of freedom) அறிந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதாவது ஒரு மனிதனின் சுதந்திர எண்ணம் மூலம் எடுக்கும் செயல்களின் விளைவுகளையும், அந்தச் செயல்களை செய்யாமலிருப்பதன் விளைவுகளையும் யாஹ்வே தெய்வம் அறிந்திருக்க வேண்டும். ஒரு செயல் நடந்திருக்கக்கூடிய, நடக்காதிருக்கக்கூடிய எல்லா விளைவுகளையும் அறிந்திருக்கும் இது நடு அறிவு (middle knowledge) என்று அறியப்படுகிறது. அதாவது, ஆப்ரஹாம் லிங்கன் காலை உணவை ஆர்டர் செய்தால், என்ன ஆர்டர் செய்வார் என்பதையும் யாஹ்வே அறிந்திருக்கவேண்டும்.
முதல் பாவக் கொள்கையைப் பொருத்தமட்டில், ஆதாமும் ஏவாளும் எப்படியும் தோற்றிருக்கக்கூடிய ஓர் உலகத்தை யாஹ்வே படைத்திருக்க வேண்டாம். பதிலாக, அவரது நடு அறிவைப் பயன்படுத்தி, ஆதாமும் ஏவாளும் பரிசோதனையில் வெற்றிபெற்றிருக்கக்கூடியதோர் உலகத்தைப் படைத்திருக்கலாம். அதன் மூலம் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் அவர்தம் பல கோடி சந்ததியினருக்கும் பல கோடி மிருகங்களுக்கும் அத்தனை வலி, துயரம், சாவு அனைத்தையும் தவிர்த்திருக்கலாம். யாஹ்வேக்கு, ஆதாமும் ஏவாளும், எப்படிப்பட்ட உலகத்தைத் தோற்றுவித்தாலும், பரிசோதனையில் தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்திருக்கும் என்று ஒருவர் பதில் சொல்லலாம். அப்படியென்றால், அவர் வேறொரு ஆதாம் ஏவாளை- பரிசோதனையில் வெற்றிபெற்றிருக்கக்கூடிய ஆதாம் ஏவாளை- உருவாக்கியிருக்கவேண்டும். மற்றொருவர் எல்லா ஆதாம்-ஏவாள்களும் பரிசோதனையில் தோற்றிருப்பார்கள் என்று சொல்லலாம். அப்படியென்றால், மனிதர்களை உருவாக்கும் வடிவமைப்பிலேயே தவறு இருக்கிறது என்பதே பொருள். கருணையும் நன்மையுமே பொங்கித்ததும்பும் இந்த யாஹ்வே தெய்வம் ஒன்று பரிசோதனையை மாற்றியிருக்க வேண்டும் அல்லது மனிதர்களையே உருவாக்கியிருக்கக்கூடாது.
ஆகவே இப்படிப்பட்ட தவறான “முதல் பாவ”க் கொள்கையோடு கிறிஸ்துவ மதம் இருக்க முடியாது என்று முடிக்கிறேன்.
4. “முதல் பாவ”க் கொள்கை இல்லாமலும் இருக்கமுடியாது
துரதிர்ஷ்டவசமாக, ஒரு சிலரது விருப்பத்துக்கு மாறாக, கிறிஸ்துவர்களால் முதல் பாவம் இல்லாமலும் இருக்கமுடியாது. கிறிஸ்துவக் கடையின் மாடியில் உட்கார்ந்திருக்கும் கிறுக்குப் பிடித்த கிழவியைத் துரத்த முடியாது. ஏனெனில் அவளின் பெயரில்தான் சொத்துப்பத்திரம் இருக்கிறது. உதாரணமாக, “முதல் பாவம்” இல்லாமல் கிறிஸ்துவத்தின் முதன்மைக் கோரிக்கைகள் பிரச்சினைக்குள்ளாகும். அதாவது எல்லா மக்களுமே பாவத்தில் இருக்கிறார்கள் என்ற கொள்கையும், எல்லா மக்களுமே குறைகள் மிகுந்த மனித இயற்கை காரணமாக மேலும் மேலும் பாவங்கள் செய்யவே முயல்வார்கள் என்ற கொள்கையும், அவர்களது குறைகள் மிகுந்த மனித இயற்கை காரணமாக அவர்களது குறைகளிலிருந்தும் பாவங்களிலிருந்தும் தானாகவே மீண்டெழச் சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள் என்ற கொள்கையும், இந்தப் பாவங்கள், அவர்களுக்குக் கடுமையான மறுமை தண்டனையைத் தரும் என்ற கொள்கையும் கிறிஸ்துவக் கடைக்கு மிக மிக முக்கியமானவை. இந்தக் கொள்கைகளின் காரணமாகவே இயேசு பிறப்பெடுத்தது, அடிவாங்கியது, செத்தது, மீண்டும் உயிர்த்தெழுந்தது எல்லாம்.
அப்போஸ்தலர் பவுல் ரோமன்ஸ் 5:18-19– இல் கூறுகிறார்..
Therefore, as by the offense [original sin] of one [Adam] judgment came upon all men to condemnation; even so by the righteousness of one the free gift came upon all men unto justification of life. For as by one man’s disobedience many were made sinners, so by the obedience of one shall many be made righteous.
18 ஆகவே ஒரே ஒருவனின் குற்றம் எல்லா மனிதர்க்கும் தண்டனைத் தீர்ப்பாய் முடிந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதர்க்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் மலர்ந்தது.
19 ஏனெனில், ஒரு மனிதனின் கீழ்ப்படியாமையால் அனைவரும் பாவிகளானது போல், ஒருவரின் கீழ்ப்படிதலால் அனைவரும் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
ஆகவே முதல் பாவத்தை நீக்கினால், இயேசுவின் அவதாரம், அவர் அடிவாங்கியது, அவரது தியாகம், அவரது மீண்டும் உயிர்தெழுப்புதல் ஆகியவை அனைத்தும் ஏன் தேவை என்று விளக்குவது மிகவும் கடினம். எல்லோர் மேலும் வியாபித்திருக்கும், பலவீனமடையச்செய்யும், தீர்க்கவே முடியாத பாவத்தில் உலக மக்கள் அனைவரும் இருப்பதாகச் சொல்வது முதல் பாவம் இல்லாமல் முடியாத விஷயம் என்பதைக் கீழே பார்ப்போம்.
4.1 உலக மக்கள் எல்லோரும் பாவிகள் அல்ல
முதல் பாவக் கொள்கை இல்லாமல் எல்லோரும் பாவிகள் என்று சொல்வது முடியாத காரியம். விவரம் அறிவதற்கு முன்னால் இறந்துவிடுபவர்கள் (தங்கள் காரியங்களுக்குப் பொறுப்பேற்கும் திறமும், அறிவும், முதிர்ச்சியும் அடையாத சிறுவ சிறுமிகள்) நிச்சயம் பாவிகள் அல்லர். எந்தக் காலத்திலும் தங்களது செயல்களுக்குப் பொறுப்பேற்க முடியாத நிலையிலுள்ள மூளைவளர்ச்சி குன்றியவர்களை முதல் பாவக் கொள்கை இல்லாமல் பாவிகள் என்றும் சொல்லமுடியாது. கரு உருவான சமயத்திலேயே அவர் முழு மனிதருக்கு ஒப்பானவர் என்ற கிறிஸ்துவப் பார்வையை எடுத்துகொண்டோமானால், தானாகவோ, செயற்கையாகவோ கலைந்துவிடும் கருக்கள் அனைத்தும், முதல் பாவக் கொள்கை இல்லையேல், பாவங்கள் செய்யாதவை. சமீபத்திய ஆய்வுகளில், கரு உருவாகி பின்னர் 31 சதவீத கருக்கள் மட்டுமே முழுக் குழந்தையாக வளர்ச்சியடைந்து பிறக்கின்றன என்று தெரியவந்துள்ளது. [10] மேலும், மேற்கண்ட லிஸ்டில் இல்லாமலேயே, பாவங்கள் செய்யாதவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள் என்று அனுபவம் கூறுகிறது. துறவிகள், சாந்த சொரூபிகள், இன்னும் விபரம் அறியும் வயது வந்த பின்னர் பாவங்கள் செய்ய வாய்ப்பில்லாமலோ, வாய்ப்பிருந்தும் செய்யாமலோ, இறந்துவிட்டவர்கள் ஆகியோரைச் சொல்லலாம். மேலே சொல்லப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் எடுத்துப் பார்த்தால், உலகத்து மக்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினரே பாவிகள் என்று கிறிஸ்துவர்களால் சொல்லவே முடியும்.
4.2 மனித இயற்கையின் பாவ நிலை அளவுக்கு மீறியது என்பதும், மனிதர்கள் தாங்களாக பாவ நிலையிலிருந்து மீளமுடியாது என்று கிறிஸ்துவர்கள் சொல்வதும் மிகைப்படுத்தல்
அளவுக்கு மீறிய, தாங்களாக மீட்டுக்கொள்ளமுடியாத நிரந்தரப் பாவநிலையில் உலகம் இருக்கிறது என்ற கிறிஸ்துவப் பிரசாரத்தை முதல் பாவக் கொள்கை இல்லாமல் உருவாக்குவது கடினமானது. பெரும்பாலான மக்களின் பாவ நிலை மிகவும் சாதாரணமானது என்று நம் அனுபவம் சொல்லுகிறது. அடால்ப் ஹிட்லர், ஜோஸப் ஸ்டாலின் போல்போட், ஜாக் தி ரிப்பர் போன்ற கொடூரர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலும், கெட்டவர்களைத் தடுப்பதற்காக எண்ணற்ற பலர் தங்களுடைய உடல், பொருள், உயிர், சொத்து ஆகியவற்றைத் தியாகம் செய்திருக்கிறார்கள் என்பதை அறிவோம். அப்படித் தியாகம் செய்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவர்கள் மட்டுமே அல்ல என்பதையும் அறிவோம். உலகத்தில் உள்ள மற்றவர்களுடைய துன்பம், வலி, அகால மரணம் ஆகியவற்றைக் குறைக்க ஏராளமானவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பதையும் அறிவோம். கிறிஸ்துவ மதம் சொல்வது போல உலகம் முழுமையாக பாவ நிலையில் இல்லை என்பதையும், ஓரளவுக்கு மணிக் கோடு (bell curve) மாதிரி ஒரு பக்கம் மிகவும் தீவிரமான கொடூரமான செயல்களைச் செய்பவர்கள் மிகக்குறைவாக இருக்கிறார்கள். ஆனால், நடுவில் மிகச்சிறிய ஒழுக்கக்கேடுகளைச் செய்தாலும் பெரும்பாலும் நேர்மையான ஒழுக்கம் உள்ளவர்களாக பெரும்பான்மையினர் வாழ்கிறார்கள்.
பெரும்பாலான மக்கள் செய்யும் சிறிய ஒழுக்கக்கேடுகள் குறைவானவை என்பது மட்டுமல்ல, (கிறிஸ்துவர்கள் சொல்வதற்கு மாறாக) தனிமனித ஒழுக்கத்தை மீட்டெடுக்கும் சக்தி பெரும்பாலான மக்களுக்கு எந்தவிதமான தெய்வீகத் துணையும் இல்லாமல் சாத்தியமானதாகவே இருக்கிறது. உதாரணமாக, ஸ்டீவன் மோஹ்ர் எழுதிய சமீபத்திய கட்டுரையில், பெரும்பாலான குடிநோய் கொண்டவர்கள் (alcoholics) தாங்களாகவே அந்தக் குடிப்பழக்கத்திலிருந்து மீள்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களை ஒப்பிட்டு நோக்கும்போது, மத அடையாளம் ஒட்டிய அல்கஹாலிக்ஸ் அனானிமஸ் (AA) அமைப்பின் மூலம் குடிப்பழக்கத்தை விட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. [11]
மோஹ்ரின்படி, “1995-இல் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் குடிநோய் கொண்டவர்கள் தாங்களாகவே குடிப்பழக்கத்தை விட்டிருக்கிறார்கள் என்று அறிவித்தது. 1995 அக்டோபரில், ஹார்வர்ட் மெண்டல் ஹெல்த் கடிதத்தில், “சமீபத்திய ஆய்வின் மூலம் அறியப்பட்டது என்னவென்றால், 80 சதவீதக் குடிநோயாளர்கள் ஒருவருடத்துக்குள்ளாகவே தாங்களாகவே அந்த நோயிலிருந்து மீண்டுள்ளார்கள். இதில் ஒரு சிலர் நோய்க்கான மருத்துவ உதவியாலும் கைவிடப்பட்டவர்கள்,” என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். [12]
மேலும், கடவுள் இல்லை என்று சொல்லும் நாஸ்திகர்களும், கடவுளைப் பற்றி கவலை இல்லை என்று சொல்லும் அக்னோஸ்டிக்குகளும், ஒழுக்க ரீதியான தார்மீக வாழ்வு வாழ்ந்தவர்களில் பெரும்பான்மையினர். [13]
4.3 சூழ்நிலைகளை மாற்றுவதன் மூலம் பாவ நிலையின் அளவை மாற்றவோ குறைக்கவோ முடியும்
“முதல் பாவ”க் கொள்கை இல்லையேல், தெய்வீக உதவி இல்லாமலேயே சில மனிதர்கள் சில வேளைகளில் சமூகத்தைச் சீர்திருத்தி ஒழுக்க ரீதியில் சிறப்பானதாக ஆக்கினார்கள் என்பதை மறுக்கமுடியாது. வறுமை, அறியாமை, கல்வியின்மை, பஞ்சம், துரதிர்ஷ்டம், பாதுகாப்பின்மை, உடல் ரீதியான குறைபாடுகள், உள்ளக் குறைபாடுகள் ஆகிய சூழல்கள், குற்றங்களுக்குத் (பாவ காரியங்கள்) தூண்டுதலாக இருக்கின்றன என்பதை பெரும்பாலான சமூகவியலாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். [14] சமீப காலத்தில் மதச் சார்பற்ற நாடுகளான மேற்கத்திய நாடுகளும் இன்னும் பல மதச் சார்பற்ற நாடுகளும் கல்வி, சுகாதாரம், மருத்துவ உதவி, வேலைகள், பாதுகாப்பான வாழ்க்கை, முன்னேற சந்தர்ப்பங்கள் போன்றவற்றை அளித்து, எந்தவிதமான தெய்வீகப் பிரார்த்தனையின் உதவியும் இல்லாமலேயே குற்றங்களைக் குறைத்துள்ளன என்பதையும் அறிவோம். [15]
ஜான் 16:3-இல் யாஹ்வே மனிதர்களை மிகவும் நேசித்தது என்றும், அவர்களைப் பாவங்களிலிருந்து காப்பாற்ற விரும்பியது என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், தார்மீக ரீதியிலும் நடைமுறையிலும் யாஹ்வே செய்ததை விட சிறப்பான வழிகளில் அதே விஷயத்தைச் சாதித்திருக்கலாம். உதாரணமாக, ஓர் அப்பாவியை கொடூரமாகக் கொலை செய்வதை விட, இந்த யாஹ்வே, மக்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருக்கலாம். அதே போல, மக்கள் பாவம் செய்யத் தூண்டும் வறுமை, அறியாமை போன்ற சுற்றுச்சூழல் விஷயங்களை மாற்றி அவர்களைப் பாவம் குறைவாக செய்பவர்களாகவோ செய்யவே வாய்ப்பில்லாதவர்களாகவோ ஆக்கியிருக்கலாம். இந்த அணுகுமுறை, தனது சொந்த மகன் என்று சொல்லப்படுபவரை, கொடூரமாகக் கொலை செய்யாமலேயே, மனிதர்களின் சுதந்திர எண்ணத்தை எந்த விதத்திலும் பாதிக்காமலேயே, யாஹ்வே தனது மக்களுக்கு அன்பு செலுத்துபவராகவும் பாவங்களைக் குறைப்பவராகவும், பாவம் குறைந்தவர்களை ஊக்குவிப்பவர்களாகவும் ஆக்கியிருக்கும்.
இங்கே கிறிஸ்துவ மதம் “முதல் பாவ”க் கொள்கையைக் கைவிட்டுவிட்டு இருக்கவும் முடியாது என்று இங்கே முடிக்கிறேன். யாஹ்வே தெய்வம் மனிதர்கள், விலங்குகள் மீது சாபம் கொடுத்ததால்தான் அவர்கள் மீது முதல் பாவம் படிந்திருக்கிறதாம். அந்த முதல் பாவத்தைத் தீர்க்கத்தான், இயேசு என்ற தன் மகனை அனுப்பி அவரை அடி வாங்க வைத்து, அவரைச் சாவடித்து, அவரை மீண்டும் உயிர்த்தெழ வைத்தாராம். இப்படி கிறிஸ்துவ மதத்துக்கு முதல் பாவம் தேவைப்படுவதால், இந்தக் கொள்கை இல்லாமல் கிறிஸ்துவ மதமே பரிதாபமான நிலையைத்தான் அடையும்.
5. முடிவுரை
கிறிஸ்துவ மதத்துக்கு, தீவிரப் பிரச்சினை இருக்கிறது என்று இங்கே வாதிட்டுள்ளேன். “முதல் பாவ”க் கொள்கையை நம்பகத்தன்மையுடன் கிறிஸ்துவத்தால் காப்பாற்றிக்கொள்ளவும் முடியாது; அதனை விட்டுவிட்டு, கிறிஸ்துவத்தை நம்பகத்தன்மையுடன் பிரசாரம் செய்யவும் முடியாது.
மேற்குறித்த தரவுகள்
[8] This argument is developed in my “The Argument from Unfairness” in the International Journal for Philosophy of Religion Vol. 25, No. 2, pp. 115-128 (April 1999).
[9] William Lane Craig, Alvin Plantinga, Terrance Tiessen, and Thomas Flint are examples.
[10] Kathleen Stassen Berger, The Developing Person through Childhood and Adolescence (6th ed) (New York, NY: Macmillan, 2003), p. 94.
[11] Steven Mohr, “Exposing the Myth of Alcoholics Anonymous,” Free Inquiry April/May 2009, pp. 42-48.
[12] Ibid., p. 44.
[13] The Secular Web page “On Average, Are Atheists as Moral as Theists?” provides an excellent bibliography on atheism and morality.
[14] For example, see:
Adrian Raine, Patricia Brennan, Birgitte Mednick, and Sarnoff A. Mednick, “High Rates of Violence, Crime, Academic Problems, and Behavioral Problems in Males With Both Early Neuromotor Deficits and Unstable Family Environments,” Archives of General Psychiatry Vol. 53, No. 6, pp. 544-549 (1996). Bruce P. Kennedy, Ichiro Kawachi, Deborah Prothrow-Stith, Kimberly Lochner, and Vanita Gupta, “Social Capital, Income Inequality, and Firearm Violent Crime,” Social Science & Medicine, Vol. 47, Issue 1, pp. 7-17 (July 1, 1998). “Tackling the Underlying Causes of Crime: A Partnership Approach,” Submission to the (Irish) National Crime Council by the Combat Poverty Agency of Ireland (2002)
[15] Gregory S. Paul, “The Big Religion Questions Finally Solved,” Free Inquiry December 2008/January 2009, pp. 24-36. See especially Figs. 6, 7, and 8.
மொழிபெயர்ப்பாளர் பின்குறிப்பு
கிறிஸ்துவர்களோ முஸ்லீம்களோ ஆதாம் ஏவாளை பிரசாரம் செய்யும்போது இதற்கெல்லாம் என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்று நாகரிகத்தின் பொருட்டு நாம் கேட்பதில்லை. ஆனால் அவர்களோ தங்களது பிரசாரத்தை மறுத்து யாரும் பேசமுடியவில்லை என்பதே அவர்கள் கூறுவது உண்மை என்பதற்கு நிரூபணம் என்று எடுத்துகொள்கிறார்கள். ஆகையால், அவர்களைத் தேடிப்போய் நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். ஆனால் யாராவது உங்களை பாவிகள் என்று அழைத்தாலோ, அல்லது உங்களிடம் வந்து ஆதாம் ஏவாள், முதல் பாவம் என்று யூதர்களின் புராணக்கதையை பேசினாலோ இந்தக் கட்டுரையை அச்சடித்து வைத்துகொண்டு, அவர்களிடம் கொடுத்து, படிக்கச்சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.)
சுவாமி விவேகானந்தர் உரை (சுட்டி)
‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!’ ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே! ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள்.
முற்றும்.