சுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்

துறவிகள் அன்பை மட்டுமே போதிப்பார்கள். ஆனால், சுவாமிஜி அன்பை மட்டுமின்றி வீரத்தையும் அறிவுறுத்துவார்… புற சமயத்தவர்களின் மதமாற்றம் என்பது ஹிந்து மதத்திற்குப் பெரும் சவாலாக இருக்கிறது… காதலித்தால், அங்கு ஹிந்து மதத்தைச் சார்ந்தவர் மட்டுமே கட்டாயமாக மதம் மாற்றப்படுகிறார்… ஒரு ஹிந்து தெரிந்திருக்க வேண்டியவை தொகுக்கப்பட்டு ஐந்து நிலை கொண்ட பாடத்திட்டத்தினை உருவாக்கினோம்… கோயில் திருவிழா என்றால், ஆடல், பாடல் என பெரும் தொகை வீணடிக்கப்பட்டு வந்தது… மீண்டும் தாய்மதம் திருப்பும் பணியையும் செய்து வருகிறோம்…

View More சுவாமி சைதன்யாநந்தருடன் ஒரு நேர்காணல்

[பாகம் 2] குதி. நீந்தி வா !

சுவாமியிடம் பெற்ற வைராக்கிய உணர்வினால்தான் திண்டுக்கல்லில் ஒரு மில்லாக இருந்த செளந்தரராஜா மில்லை 6 மில்களாக உயர்வடையச் செய்ய என்னால் முடிந்தது. சாதாரண ஆபீஸ் பையனாக உள்ளே வந்த நான் முதலாளிக்கே Special Advisor -ஆக முடிந்தது.

View More [பாகம் 2] குதி. நீந்தி வா !

வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1

காலதாமதமாக வந்தார் ஒரு பிரதம விருந்தாளி. வந்தவர் சாதாரணமானவர் அல்ல. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சித்பவானந்த சுவாமியோ நேரத்தை மிக முக்கியமானதாகக் கருதுபவர். எதையும் யாருக்காகவும் கொஞ்சம்கூட விட்டுக்கொடுக்காத உறுதிப்பாடு உடையவர். எம்.ஜி.ஆர். வந்தவுடன் மேடையில் எல்லார் முன்னிலையிலும் வைத்தே கேட்டு விட்டார் [..]

View More வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன் – 1

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08

சமூக சமத்துவம் மதமாற்றத்தின் மூலம் சுலபமாகப் பெறப்படும்… துர்பாக்கியவசமாக இந்நாட்டில் மற்ற மதங்களிலும் ஜாதி அமைப்பு ஊடுருவிவிட்டது உண்மைதான்… இந்தியாவில் இருந்து சீக்கியர்களாகவும் முஸ்லீம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் உள்ளவர்களில் பெரும்பான்மையினர் முன்னாள் இந்துக்களே… மதத்தில் எந்த உள்ளார்ந்த பொருளும் இல்லை என்றால், விலகப் போகிற மதம் குறித்தும் சேரப் போகிற மதம் குறித்தும் அவர்கள் ஏன் வீணாக வாதிட வேண்டும்?… தீண்டாமை, முன்னேற்ற பாதைக்கு ஒரு நிரந்திரமான தடைக்கல்… என்னைப் பொருத்தவரை, நான் முடிவெடுத்து விட்டேன். நான் மதம் மாறப்போவது நிச்சயம்…

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 08

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 07

தீண்டத்தகாதவர்களிடையே நிலவும் இந்தக் கொடுமையான உள்ஜாதியத்திற்கு அதைக் கற்பித்தவர்களே பொறுப்பேற்க வேண்டுமே தவிர, கற்றுக் கொண்டவர்கள் அல்ல… முதலில் அவர்கள் வெற்றிலை, பாக்கு, பீடி, சிகரெட், பழங்கள் ஆகியவற்றைப் பரிமாறிக் கொண்டிருப்பார்கள். பின்பு… அன்றிருந்த சூழலை ஆராயும்போது கட்டாயத்தின் பெயரிலேயே நமது முன்னோர்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பது தெரிகிறது… இந்துசமூகத்தைச் சீர்திருத்துவது நமது நோக்கமல்ல. நமது நோக்கம் நமது விடுதலை மட்டுமே. சமூகவிடுதலையை மதமாற்றமல்லாமல் வென்று எடுக்க முடியாது.

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 07

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 06

மக்கள் மீது எது ஆளுமை செலுத்துகிறதோ, அதுவே மதம்… நீதிமன்றத்தில் உங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றோ, காவல் நிலையத்தில் சரியாக நடந்து கொள்ளுவார்கள் என்றோ நீங்கள் நம்புகிறீர்களா?… நீங்கள் தீண்டத்தகாதவர்களாகவும் சரிசமம் அற்றவர்களாகவும் கருதப்படுவது நீங்கள் இந்துவாக இருக்கும்போதுதான்… உங்கள் நோக்கங்களை நீங்களே நிறைவேற்றிக் கொள்ளும் சுதந்திரம் உண்டா? உங்களுக்கு உரிமையில்லை என்பது மட்டுமல்ல அடிமையை விடவும் கேவலமான நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள்… இத்தகைய வெட்கங் கெட்ட சூழலில் இருந்து நீங்க வேண்டுமானால் உங்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைத்தெறிய வேண்டுமானால் வாழ்வை கவுரமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரே வழி இந்து மதத்தையும், இந்த சமுதாயத்தையும் தொலைத்து தலை முழுகுவதுதான்…

View More புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்? – 06

சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை

பிறப்படிப்படையிலான எவ்விதக் கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் வேதங்களில் எவ்வித ஆதாரமும் இல்லை… நமது நாடு அந்நியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த பிறகு நம் ஜனநாயகத்தில் நம் அரசியல் சக்திகள் சாதியத்தை தங்கள் ஓட்டுவங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ளன… ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா மானுட சுயமரியாதையையும் சமூக சமரசத்தையும் பேணி வளர்ப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது.

View More சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை

சுவாமி சகஜானந்தர்: தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

1947 ஏப்ரலில் அவரது கனவு நனவாகியது. அனைவரும் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவரும் அவரது மாணவர்களும் ஆனந்த நடராஜனை ஆலயத்திற்குச் சென்று கண்ணாரக் கண்டு கண்ணீர் விட்டு அழுதனர். அன்று ஆனந்தத் தாண்டவம் ஆடியது நடராஜர் மட்டுமல்ல, 40 வருடங்களாக ஏங்கிய சகஜானந்தரது உள்ளமும்கூட.

View More சுவாமி சகஜானந்தர்: தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்