வருடாவருடம் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் வரும்போது கூடவே ஒரு சர்ச்சையும் வரும். தேசபக்த இயக்கம் என்று சொல்லக்கூடிய ஆர்எஸ்எஸ் இயக்கம் சுதந்திர தினத்தன்றும், குடியரசு தினத்தன்றும் தங்களுடைய இடத்தில் தேசியக்கொடியை ஏற்றுகிறதா இல்லையா என்பதுதான் அந்த சர்ச்சை. ஆர்எஸ்எஸ் காவிக்கொடியைத்தான் ஏற்றுக்கொள்கிறது. இந்திய தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதில்லை என்ற நச்சுக் கருத்தை – பொய் கருத்தை தொடர்ந்து இந்திய தேசத்தின்மீது நம்பிக்கையில்லாத – தேசியம் ஒரு கற்பிதம் என்று சொல்லக்கூடிய கம்யூனிஸ்டுகள், திராவிட கழகத்தவர்கள், சில இஸ்லாமிய, கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் தொடர்ந்து விஷமத்தை பொதுவெளியில் கக்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்கூட ஒரு தொலைக்காட்சியில் ஒரு இஸ்லாமியர் ஆர்எஸ்எஸ் தேசியக் கொடியை ஏற்றுவதில்லை என்ற பொய்யைக் கூறினார்.
If you take strattera, you may feel that you are more energetic and your mind is more active. The following is a list of phentermine taper information that price of clomid in india may be of interest to you. In the united states, where we pay over 0 billion for prescription drugs and medical equipment every year, there are many things to worry about when it comes to taking medication.
You should seek immediate medical attention if you develop any of the following: The one thing that i can’t stand Wolcott clomid cost is how this product makes your skin dry and that’s why i won’t be buying it again. These proteins are known as the proteasome; they are so complex that the active sites of every protein in.
An in-store pharmacy price from a trusted drugstore? Clomid without glucophage 850mg price prescription and buy clomid online without prescription. But did you know that adderall can also help reduce weight in those with excess body weight?
வருடாவருடம் ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடர்ந்து சுதந்திர தினத்தையும், குடியரசு தினத்தையும் கொண்டாடி வருகிறது. தேசியக் கொடியை ஏற்றி, மரியாதை செலுத்தி வருகிறது. ஆனாலும் தேசவிரோதிகள் ஆர்எஸ்எஸ் தேசியக் கொடியை ஏற்றுவதில்லை என்று திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றனர்.
ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகம் உள்ள நாக்பூரில் சுதந்திர தினத்தன்று வருடாவருடம் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படுகிற்றது.
மேலே உள்ள இரண்டு படமும் 2014ல் நாக்பூரில் நடைபெற்ற சுதந்திர தின கொடியேற்றுதல் நிகழ்ச்சி. திரு.மோகன் பாகவத் அவர்கள் இந்திய தேசியக் கொடி ஏற்றுவது வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஜவஹர்லால் நேரு எந்த அளவுக்கு ஆர்எஸ்எஸ் மீது வெறுப்புக் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 1962ல் நடைபெற்ற சீன போரின்போது ஆர்எஸ்எஸ் ஆற்றிய அரும்பணியை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார். எந்த நேரு ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வெறுத்தாரோ அதே நேரு 1963ம் ஆண்டின் சுதந்திர தின அணிவகுப்பில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். காரணம் ஆர்எஸ்எஸ்-ன் தேசத்திற்கான தன்னலமற்றப் பணியை உணர்ந்ததால்தான். எந்த ஒரு இயக்கத்திற்கும் இதுவரை கிடைக்காத பெருமை ஆர்எஸ்எஸ்-க்கு கிடைத்தது. அதுவும் காந்திஜி படுகொலை காரணமாக தடைசெய்யப்பட்டு பின்பு நீக்கப்பட்டு, அதனால் பெரும் தொல்லைகளுக்கு ஆளான இயக்கம் சுதந்திர தின அணிவகுப்பில் 3500 ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பூர்ண கணவேஷுடன் (ஆர்எஸ்எஸ் சீருடையுடன்) கலந்துகொண்டனர்.
1955களில் கோவா இந்தியாவுடன் இணைய வேண்டும், போர்ச்சுக்கீசிய அரசு வெளியேற வேண்டும் என்று தொடர் போராட்டங்களை ஆர்எஸ்எஸ் நடத்தியது. கோவா ஆர்எஸ்எஸ் தலைவர் ஜகன்னாந் ராவ் ஜோஷி சத்தியாகிரப் போராட்டத்தில் ஈடுபட்டு போர்ச்சுகீசிய காவல்துறையால் சிறைபடுத்தப்பட்டார்.
1965ல் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் மூண்டபோது லால்பகதூர் சாஸ்திரி அவர்கள், டெல்லியில் சாலை போக்குவரத்து கட்டுப்பாட்டைக் கவனித்துக் கொள்ள ஆர்எஸ்எஸ் இயக்கத்தைக் கேட்டுக் கொண்டார். ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதை ஏற்றுக்கொண்டு செம்மையாக செய்தது.
இந்திய தேசத்திற்கு எப்போதெல்லாம் நெருக்கடி ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஆர்எஸ்எஸ் தேசத்திற்காக பாடுபட்டிருக்கிறது. இந்த தேசத்திற்காக தன் உயிரையும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கம் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடாமல் இருக்குமா?
உண்மை இப்படி ஒருபுறம் இருக்க இந்த போலி தேசியவாதிகள் தொடர்ந்து ஆர்எஸ்எஸ்பற்றி விஷமத்தை பரப்பி வருகின்றனர். ஆனால் அரசாங்கம் உதவி பெறாத அமைப்புகள் தேசியக் கொடியை ஏற்றவில்லை என்றால் அது குற்றமாகாது. ஆர்எஸ்எஸ் அரசாங்கம் உதவி பெறாத அமைப்பு. அது கண்டிப்பாக தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனாலும் இந்திய தேசியக் கொடியை மதித்து ஒவ்வொரு வருடமும் எல்லா மாநிலங்களிலும் உள்ள தங்களுடைய அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறது ஆர்எஸ்எஸ் இயக்கம்.
நாட்டின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் கட்டாயம் தேசியக்கொடி ஏற்ற வேண்டும். பண்டிகை தினம் போல் கொண்டாடி மகிழ வேண்டும் என்பது மத்திய, மாநில அரசுகளின் உத்தரவு. அதுபோல அரசாங்க உதவி பெறும் பள்ளிகளும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். அரசு உதவி பெற்றாலே அவை அரசு சார்ந்த நிறுவனங்கள் என்ற வரிசையில் தான் வரும். அதன்படி பல மதராஸாக்கள் கண்டிப்பாக தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். நடைமுறையில் அப்படி நடக்கிறதா? பல மதராஸாக்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில்லை. குறிப்பாக வஹாபியர்களால் நடத்தப்படும் மதராஸாக்கள் தேசியக் கொடியை ஏற்றுவதே இல்லை. ஆர்எஸ்எஸை கேள்வி கேட்கும் இவர்கள் என்றாவது ஒருநாள் ஏன் மதராஸாக்களில் தேசியக் கொடி ஏற்ற மறுக்கப்படுகிறது என்ற கேள்வியை கேட்டு இருக்கிறார்களா? விமர்சனம் செய்து இருக்கிறார்களா? இல்லவே இல்லை.
மதராஸாக்கள் ஏன் தேசிய கொடியை ஏற்ற மறுக்கின்றன? ஏனென்றால் அவர்களுடைய மதம் அதை அனுமதிப்பதில்லை. தேசிய கீதம் பாடுவது, தேசிய கொடி ஏற்றுவது, தேசியகொடிக்கு மரியாதை செலுத்துவது இஸ்லாமியருக்கு ஹராமாகும். (http://islamqa.info/en/111877, http://islamqa.info/en/130805) அதாவது அனுமதிக்கப்படாததாகும். இதை யாரும் கேள்விக்குட்படுத்த மறுக்கிறார்கள். அல்லது மறைக்கிறார்கள்.
கடந்த காலங்களிலும் இப்போதும் பல மதராஸாக்கள் உள்பட பல இஸ்லாமிய அமைப்புகள் தேசிய கொடி ஏற்றுவதையோ, தேசிய கீதத்தை பாடுவதையோ கடைபிடிப்பதில்லை. இதில் இந்திய அரசாங்கத்தின் மானியம் பெறாத இஸ்லாமிய அமைப்புகளை விட்டுவிடுவோம். ஆனால் பல மதராஸாக்கள் தேசியக் கொடியை ஏற்றுவதில்லை என்பதை எப்படி அனுமதிப்பது? ஏனென்றால் பல மதராஸாக்கள் இந்திய அரசாங்கத்தின் மானியங்களைப் பெறுகின்றன. இப்படிப் பெறுகின்ற அனைத்துமே அரசாங்கத்தின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஆனால் மத அடிப்படைவாதத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் மதராஸாக்கள் மட்டும் கடைபிடிப்பதில்லை.
ஜமாத் ஈ இஸ்லாமி என்ற அமைப்பு தேசியக் கொடியை மதராஸாக்களில் ஏற்றக் கூடாது, அது மதத்திற்கு விரோதம் என்று கூறியது. (http://ibnlive.in.com/news/jamaateislami-protests-tricolour-at-madrassas/57409-3.html) அப்போது சில இஸ்லாமியர்கள் கண்டித்தாலும் பல மதராஸாக்களில் தேசியக் கொடி ஏற்றப்படுவதில்லை. தேசிய கீதம் பாடுவதுகூட மதத்திற்கு விரோதம் என்று இவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள் (http://islamicresearchmission.blogspot.in/2012/08/does-national-anthem-jana-gana-mana.html) தேசத்தை அவமதிக்கிற இந்த மாதிரியான செயல்களை, பேச்சுகளை, எழுத்துக்களைக் கூட இங்கு யாருமே விமர்சனத்திற்கு உட்படுத்த மறுக்கிறார்கள். காரணம் என்ன? ஏன் மௌனம்? ஏன் அச்சம்?
இந்திய தேசியக்கொடியை ஏற்றுவதற்கு பள்ளிகளுக்கு சிறப்பு நிதி என்று அரசாங்கம் தருகிறதா என்றால் இல்லை. ஆனால் இந்திய தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மதராஸாக்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படுவது யாருக்காவது தெரியுமா? (http://www.rediff.com/news/2007/dec/30mad.htm) இந்த சிறப்பு நிதி மதராஸாக்களைத் தவிர வேறு பள்ளிகளுக்கு தரப்படுவதில்லை. சிறப்பு நிதி தந்தால் மட்டுமே தேசியக் கொடியை ஏற்றுவேன் என்கிற இந்த மனநிலை தேசத்தை மதிப்பதா? அவமதிப்பதா? லஞ்சம் கொடுத்து செய்து கொள்கிற வேலையல்லவா இது? இதைப் பற்றியெல்லாம் இந்தப் போலி தேசியவாதிகளான கம்யூனிஸ்டுகள், திராவிட கழகங்கள் கேள்வி கேட்பதில்லை.
ஆனால் ஆர்எஸ்எஸ்-ஐ மட்டும் குறிவைத்து பொய்யான குற்றச்சாட்டை சுமத்துவது ஏன்? ஏனென்றால் ஆர்எஸ்எஸ் இயக்கம் மட்டுமே இந்த தேசத்தில் மக்களின் மனதில் தேசபக்தியை வளர்த்து வருகிறது. மக்களுக்கு இந்த தேசத்தின்மீது பக்தி வந்தால் இவர்களால் இங்கு அரசியல் செய்ய முடியாது. இந்த நாட்டை மற்ற நாடுகளுக்கு அடிமையாக்க முடியாது. கம்யூனிச வன்முறை கொள்கையை இங்கு பரப்பிட முடியாது. இதை இஸ்லாமிய நாடாக்க முடியாது. மொத்தத்தில் இவர்களின் பருப்பு இங்கு வேகாது. இதனை மனதில் வைத்தே தேசபக்தியை வளர்க்கும் ஆர்எஸ்எஸ்-ஐ குறிவைத்து பொய்பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர். ஆனால் என்னதான் இவர்கள் பொய்பிரச்சாரத்தை பரப்பி வந்தாலும் ஆர்எஸ்எஸ் தொடர்ந்து மின்னிக் கொண்டேதான் போகிறது. அதுதான் இவர்களின் வயிற்றெரிச்சலுக்குக் காரணம். உண்மைகள் எப்போதும் ஓய்ந்துவிடுவதுமில்லை; தூங்கிவிடுவதும் இல்லை.
குறிப்பு : நான் இந்த கட்டுரையை எழுத பல தகவல்களை கொடுத்து உதவியவர் நண்பர் ராஜா சங்கர் அவர்கள்தான். அவருக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன். அவர் பல தகவல்களை கொடுக்கவில்லை என்றால் இந்த கட்டுரை இல்லை.
உலகெங்கும் தமிழ் ஹிந்துக்களின் பாரம்பரியப் பண்டிகையான திருக்கார்த்திகை தீபத் திருவிழா இல்லங்களிலும், கோயில்களிலும் பக்திப் பெருக்குடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் மகாதீபத் திருவிழாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மகாதீப விழாவை முன்னிட்டு இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரைச் சேர்ந்த சர்ஜோபீட்டர் லினி என்பவர் தலைமையிலான சிவபக்தர்கள் குழுவினர் நெய் காணிக்கையாக ரூ.5.25 லட்சத்தை கோயில் நிர்வாகத்திடம் வழங்கினர். வருடாவருடம் இப்பண்டிகையில் கலந்து கொண்டு கிரிவலம் செய்யும் இந்தக் குழுவினர் கோயில் கலையரங்கில் பக்தி இசை நிகழ்ச்சியும் நடத்துகின்றனர்.
தமிழகத்திலிருந்து சபரிமலை புனிதப் பயணம் சென்ற பக்தர்களின் வாகனங்கள் மீது கம்பம் பகுதியில் சில விஷமிகள் தாக்குதல் நடத்தியதால், பக்தர்கள் பயணம் தடைப்படுவது குறித்த செய்திகள் மனவருத்தம் அளிக்கின்றன. மண்டல பூஜை நேரத்தில் முல்லைப் பெரியாறு பிரசினையை வேண்டுமென்றே பெரிய அளவில் தூண்டி விட்டு கேரள-தமிழக மக்கள் இடையே உள்ள பாசப்பிணைப்பையும் நல்லுறவையும் கெடுக்கும் வகையில் கேரள கிறிஸ்தவ காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்று இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் குற்றம் சாட்டியுள்ளார்.
தாக்குதலைக் கண்டித்த கேரள இந்து அமைப்புகள் தமிழகத்தில் இருந்து வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரியுள்ளன. கேரள மாநில அரசியல் முழுவதுமாக கிறிஸ்தவ, இஸ்லாமிய மத அதிகார சக்திகளின் பிடியில் இருக்கும் நிலையில், ஆளுங்கட்சியான காங்கிரஸ் கூட்டணி மேலும் மேலும் தமிழகத்தையும், தமிழர்களையும் எதிரிடையாக சித்தரித்து போராட்டங்களை அறிவித்து வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. இந்த சந்தடியில் தமிழகத்தின் சில பகுதிகளில் பிரிவினைவாத எண்ணம் கொண்ட வன்முறைக் கும்பல்களின் நடவடிக்கைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், தமிழக அரசு கண்காணித்து உறுதியாக செயல்பட வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர்.
ஆந்திராவின் பிரபல பத்திரிகையான ஆந்திர ஜோதி, அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் நடந்து வரும் கிறிஸ்தவ மதமாற்றங்கள் குறித்த விரிவான செய்திக் கட்டுரைகளை நவம்பர் 10 முதல் 16 வரை ஆறு நாட்கள் தொடராக வெளியிட்டது. இக்கட்டுரைகளின் ஆங்கில மொழியாக்கம் இப்போது வெளிவந்துள்ளது. ஆந்திராவின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மதமாற்ற வைரஸ் கிருமி எவ்வளவு தீவிரமாக ஊடுருவியுள்ளது என்பது குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் இவை. நடுநிலை செய்திப் பத்திரிகையான ஆந்திர ஜோதியின் இச்செயல் பாராட்டுக்குரியது.
டிச-3: தமிழகத்திலிருந்து கேரளத்தில் வெட்டுவதற்காக அடிமாடுகள், எருமைகள் கொண்டு செல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தி, கால்நடைச் செல்வங்களை தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன்சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் வருகைப் பேராசிரியாக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி திடீரென்று அந்தப் பதவியில் இருந்து நீக்கப் பட்டிருக்கிறார். அவர் கற்பித்து வந்த பாடப் பிரிவுகளும் பாடத்திட்டத்தில் இருந்து அகற்றப் படுவதாக ஹார்வர்ட் பல்கலைக் கழகம் தெரிவித்தது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை முற்றிலுமாக அடக்குவது எப்படி? என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்ட மதத்தினரை அவமதிக்கும் கருத்துக்கள் உள்ளதாக பல்கலைக் கழகத்தின் ஆசிரியர்கள் மாணவர்களில் ஒரு சாரார் ஆட்சேபம் தெரிவித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. டாக்டர் சுவாமியை நீக்கியது முற்றிலும் ஜனநாயக விரோதமான செயல் என்று கூறி, அமெரிக்க கல்விப் புலங்களிலேயே அவருக்கான ஆதரவுக் குரல்களும் எழுந்துள்ளன.
கர்நாடக மாநில அரசு ஆக்கிரமிப்பு ரீதியான கிறிஸ்தவ மதமாற்றங்களைத் தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு மாபெரும் பேரணியை ஹிந்து ஜாகரண வேதிகே என்ற அமைப்பு பெங்களூரில் டிசம்பர் 4-ம் தேதி நடத்தியது. பல இந்து சமயப் பிரிவுகளைச் சேர்ந்த துறவியரும், ஏராளமான பொதுக்களும் கலந்து கொண்டனர்.
சொசுறு:
தில்லி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலை பேராசியர் அர்ஷத் ஆலம்,இந்தியப் பண்பாட்டுடன் இசைந்து அமைதியாக வாழ விரும்பும் இந்திய முஸ்லிம்களை சவுதி அரேபிய பணபலத்துடன் செயல்படும் வஹாபி இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டு பிளவுபடுத்துவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள மதரசாக்கள் போன்ற அமைப்புகளை இந்த வஹாபி தீவிரவாத கோஷ்டியினர் கைப்பற்றுவத் கவலையளிப்பதாகவும் அவர் கூறுகிறார்.
வாலிபர்களைத் தன்னோடு பாலுறவு கொள்ள வற்புறுத்திப் பலவந்தம் செய்தார் என்ற குற்றச் சாட்டின் காரணமாக, அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரபல பாதிரியார் பிஷப் எட்டி லாங், தானே உருவாக்கிய மெகா சர்ச்சின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார். இதே போன்ற காரணங்களுக்காக உலகெங்கும் அடுத்தடுத்து குற்றம் சாட்டப் பட்டு கீழிறங்கும் கிறிஸ்தவ மதத் தலைவர்களின் நீண்ட பட்டியலில் இணைகிறார்!
பெரும்பாலான இந்துக்கள் இயேசுவையும் தெய்வமாக கருதுபவர்கள் என்றால் மிகையில்லை.
இது வெறுமே பரந்த மனப்பான்மை எனக்கு இருக்கிறது என்று காட்டிக்கொள்ள விரும்பும் இந்துக்கள் மட்டுமல்ல. பொதுவாக கிராமத்தில் உள்ளவர்கள், நகரத்தில் உள்ளவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா இந்துக்களுமே ஏராளமான தெய்வங்கள் இருக்கமுடியும் என்ற இந்து கருத்தின் காரணமாக இயேசுவையும் அல்லாவையும் தெய்வங்களாக கருதுபவர்கள். கிறிஸ்துவத்தின் உள்ளே இயேசுவுக்கு எந்த மாதிரியான இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு அறிந்து ஆராயும் தேவையோ அவசியமோ இருப்பதில்லை. தமிழ் மக்களில் ஒரு சாரார் இயேசுவை தெய்வமாக தொழுகிறார்கள் என்பதே அவர்களுக்கு போதுமானது. அதே போல அல்லாவுக்கு எந்த விதமான இடத்தை இஸ்லாம் அளித்துள்ளது என்பதோ, இஸ்லாமியர்கள் அல்லாவை எப்படி கருதுகிறார்கள் என்பதோ, குரான் எப்படி அல்லாவை உருவகிக்கிறது என்பதோ பெரும்பாலான இந்துக்களுக்கு தேவையும் இல்லாதது. தமிழ் பேசுபவர்களில் ஒரு சாரார் அல்லாவை தெய்வமாக தொழுகிறார்கள் என்பதே பெரும்பாலான இந்துக்களுக்கு போதுமானது.
ஆகவே, பெரும்பாலான இந்துக்கள் நாகூர் தர்காவுக்கு செல்வதையும், வேளாங்கண்ணி கோவிலுக்கு போவதையும் வித்தியாசமாக கருதுவதில்லை. அருகே இருக்கும் மசூதியிலிருந்தோ அல்லது சர்ச்சிலிருந்தோ யாரேனும் வந்து நன்கொடை கேட்டாலும், மாரியம்மன் விழாவுக்கு கொடுப்பதைப் போலவே கொடுப்பார்கள்.
ஆனால், நம் இந்து மக்களுக்கு நாகூர் தர்காவை பற்றி முஸ்லீம்களிலேயே ஒரு சாரார் என்ன கருதுகிறார்கள் என்று தெரியாது. அதே போல வேளாங்கண்ணி கோவிலுக்கு தமிழக கிறிஸ்துவர்களிலேயே கணிசமான அளவு கிறிஸ்துவர்கள் போகமாட்டார்கள் என்பதும் தெரியாது.
நாகூர் தர்கா ஒரு சூஃபி தர்கா. தர்கா என்பதே இஸ்லாமுக்கு முரணானது என்று தீவிர இஸ்லாமியர்களான வஹாபிஸ்டுகள் கருதுகிறார்கள். தர்காக்களுக்கு செல்லும் முஸ்லீம்களை கப்ரு வணங்கிகள் என்று இழிவாக குறிப்பிடுகிறார்கள். அவர்கள் தனி அரசியல் கட்சிகளும் நடத்துகிறார்கள். இப்படிப்பட்ட கட்சிகள், அமைப்புகளாக பீப்பிள்ஸ் பிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ, தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி, தவஹீத் ஜமாத் ஆகியவற்றை குறிப்பிடலாம். மனித நேய மக்கள் கட்சி நடத்தும் ஜவஹிருல்லா என்பவர் ஒரு வஹாபியிஸ்ட் இஸ்லாமியர். சிமி என்ற தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மாணவர் இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த கட்சி தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்து மூன்று தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறது. முஸ்லீம்களில் செல்வாக்குடன் இருக்கும் ஜெயினுலாபுதீன் என்பவரும் இவரும் முன்பு நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். இருவருக்கும் ஏறத்தாழ ஒரே கொள்கைதான். அதாவது தர்கா ஆகியவை அழிக்கப்பட வேண்டும், கந்தூரி, சந்தனக்கூடு போன்ற தமிழ்நாட்டு இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் அழிக்கப்பட வேண்டும் ஆகியவற்றை இவர்கள் கூறுகிறார்கள். ஜெயினுலாபுதீன் இந்த முறை திமுக கட்சிக்கு ஆதரவளித்திருக்கிறார். இருவருக்குள் வேறுபாடு என்பது யார் மிகத்தீவிரமாக வஹாபியிஸ்ட் கொள்கைகளை பின்பற்றுகிறார்கள் என்பதுதான். உதாரணமாக தமிழ்நாட்டில் பொதுவாக ஒருவரை ஒருவர் சந்தித்துகொள்ளும்போது வணக்கம் சொல்லுவது இயல்பு. ஆனால், இவர்கள் அப்படி வணக்கம் கூட சொல்லமாட்டார்கள். ஜெயினுலாபுதீன் பத்து லட்சம் முஸ்லீம்களை கூட்டி மாநாடு நடத்துவதாக கூறிக்கொள்கிறார். ஆகவே இவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் இஸ்லாமிய சமூகத்தில் சிறு பிரிவினர் அல்ல.
பாகிஸ்தானில் இப்படிப்பட்ட தர்காக்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கிறார்கள். மனித வெடிகுண்டாக உடல் முழுவதும் குண்டுகளை கட்டிகொண்டு இந்த சூபி வணக்கத்தலங்களில் நுழைந்து அங்கு கும்பிடுபவர்களை கொல்வதில் சந்தோஷமடைகிறார்கள். இப்படிப்பட்ட வணக்கதலங்களில் கும்பிடுபவர்கள் முஸ்லீம் என்று பெயரிருந்தாலும் அவர்கள் கொல்லப்பட வேண்டிய காபிர்களே என்பது வாஹாபி சிந்தனை. ஆகவே இப்படி மனித வெடிகுண்டாக சென்று தர்காக்களில் வழிபடுபவர்களை கொல்வதற்கும் தற்கொலை செய்து கொள்வதற்கும் பாகிஸ்தானிய இளைஞர்கள் விரும்பி வருகிறார்கள் [1].
தமிழ்நாட்டில் பெரும்பான்மை முஸ்லீம்கள் இந்த அமைப்புகளையே சார்ந்திருக்கிறார்கள் என்பது நாம் கருத்தில் கொள்ள வேண்டியது. கோயம்புத்தூரில் குண்டு வைத்தது இஸ்லாமிய இயக்கங்களுக்கு பின்னடைவு என்று ஜெயினுலாபுதீன், ஜ்வஹரில்லா ஆகியோர் கருதுகிறார்கள். வன்முறை தவறு என்பதல்ல. வன்முறையை கைக்கொண்டால், இஸ்லாம் மதத்தை தமிழர்கள் மத்தியில் இப்போது பரப்ப முடியாது என்பதுதான் காரணம் என்று இவர்களே எழுதுகிறார்கள் [2]. ஆகையால் தவறான வழிநடத்தலின் காரணமாக தமிழ் முஸ்லீம் இளைஞர்களில் யாரேனும் நாகூர் தர்கா போன்ற இடங்களில் மனித வெடிகுண்டாக வெடித்து தற்கொலை செய்துகொண்டால் அங்கு செல்லும் இந்துக்களான நாம்தான் கொல்லப்படுவோம்.
இதெல்லாம் புரியாமல் நம் மக்கள் நாகூர் தர்காவுக்கு சென்று தங்களது பரந்த மனப்பான்மையை காட்டிகொள்ள விழைகிறார்கள். திருச்சியில் இருக்கும் நத்தர்ஷா பள்ளிவாசலும் ஒரு சிவன் கோவில்தான் [3]. அதனை முஸ்லீம்களே இங்கு பதிந்து வைத்திருக்கிறார்கள். மக்கள் எல்லா இடங்களிலும் பரம்பொருளின் அருளைப் பெறலாம். பரம்பொருளான எம்பெருமானுக்கு இவர் முஸ்லீம் இவர் இந்து இவர் கிறிஸ்துவர் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. தன்னிடம் எந்த ரூபத்தில் என்ன குரலில் என்ன மொழியில் கேட்டாலும் அருள்பவர் எம்பெருமான்.
அதே போல, வேளாங்கண்ணி கோவிலுக்கு இந்துக்கள் செல்கிறார்கள். வேளாங்கண்ணி கோவில் ரோமன் கத்தோலிக்க சர்ச். அதற்கு தமிழ்நாட்டில் உள்ள புராடஸ்டண்ட் கிறிஸ்துவர்கள், பெந்த கொஸ்தே கிறிஸ்துவர்கள், பாப்டிஸ்டு கிறிஸ்துவர்கள் செல்ல மாட்டார்கள். கத்தோலிக்கரல்லாத கிறிஸ்துவர்கள் கத்தோலிக்க கிறிஸ்துவத்தை சாத்தானின் மதம் என்று கருதுகிறார்கள். ஆனால், எல்லா கிறிஸ்துவர்களுமே இந்து கோவில்களை சாத்தானின் கோவில்கள் என்றே கருதுகிறார்கள், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் போதிக்கப்படுகிறார்கள் என்பது நம்மில் பலர் அறியாதது.
இதுவரை படித்ததிலிருந்தே பெரும்பாலான இந்துக்கள் எல்லா கோவில்களிலும் தெய்வங்களை பார்க்கிறார்கள் என்பதையும், கிறிஸ்துவர்களும் முஸ்லீம்களும் தங்களது கோவில் அல்லாத மற்ற கோவில்களில் சாத்தானை பார்க்கிறார்கள் என்பதையும் புரிந்துகொண்டிருக்கலாம்.
இந்துக்கள் சைவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும் வைணவ குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர்களுக்கு கோவில்களில் வித்தியாசம் இருப்பதில்லை. பல வைணவ பிராம்மணர்களுக்கு மாரியம்மன் குலதெய்வம், பல வன்னியர்களுக்கு கண்ணபிரான் குலதெய்வம், பல யாதவ குலத்தவர்களுக்கு சிவனோ, முருகனோ, ஐயனாரோ குலதெய்வம் இப்படியெல்லாம் இருப்பதை நாம் சகஜமாகப் பார்க்கலாம்.
சைவ சித்தாந்தத்தின் ஆதார சுருதியாக போற்றப்படும் திருமூலரின் திருமந்திரம், “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்று பறைசாற்றுகிறது. ஆகையால் பல்வேறு வடிவங்களில் வழிபட்டாலும் வழிபடப்படுவது பரம்பொருளே என்பது இந்துக்களின் கருத்து. ஆகையால், இயேசுவின் வடிவில் வழிபட்டாலும், கிருஷ்ணனின் வடிவில் வழிபட்டாலும் வழிபடப்படுவது பரம்பொருளே என்பது உண்மையே.
ஆனால், மனித மனம் என்பதன் மூலமே பரம்பொருளை நாம் வழிபடுகிறோம் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மனித மனத்தின் வழியே நாம் வழிபடுவதால், மனித மனம் உருவாக்கும் பிம்பங்களின் மூலமாகவே இறைவனை நாம் பார்க்கிறோம். உதாரணமாக அமமையும் அப்பனும் அழகாக உடை தரித்து, அழகான நந்தியின் அருகே, மங்களகரமான கோலத்தில் முருகனும் விநாயகனும் அருகருகே அமர்ந்திருக்கும் சந்தோஷமான காட்சியை நாம் பார்க்கிறோம். இதே போல, ராமனும் சீதையும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க உற்றார் உறவினர் புடைசூழ இருக்கும் பட்டாபிஷேக காட்சியைப் பார்க்கிறோம். இது நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்துகிறது. இது போல நாமும் குடும்பசகிதமாக நன்றாக வாழவேண்டும் என்ற கருத்தை ஆழ்மனத்தில் விதைக்கிறது. நம் செயல்களில் வெளிப்படுகிறது. நம் சொந்தத்தினரை கருணையுடனும் பாசத்துடனும் அணுகவும் நம்மை தூண்டுகிறது.
ஒரு பயங்கர திரைப்படம் பார்க்கிறோம் என்று வைத்துகொள்வோம். ரத்தமும் சேறுமாக கொலை செய்யப்படும் காட்சிகள், வன்முறையும் காம வேட்கையும் கொலைவெறியும் அடிக்கடி காணப்படும் திரைப்படக் காட்சிகள் நம் மனதை பாதிக்கின்றன. சிறு குழந்தைகள் இரவில் திடுக்கிட்டு எழுகின்றன. உங்களுக்கும் பயங்கரமான கனவுகள் தோன்றுகின்றன. மனதில் அழுத்தம் உண்டாகிறது. ஆழ்மனத்தில் பயம் உருவாகிறது. மனைவி, குழந்தைகளிடம் சிடுசிடுவென்று எரிந்து விழுகிறீர்கள். அப்படி எரிந்து விழவில்லை என்றாலும் துயரமும், வெறுப்பும், சலிப்பும் மனதை அப்பிக்கொள்கிறது. இத்தனைக்கும் இது ஒரு சிலர் நடித்து உருவான படம். அது நிஜமில்லை. வெறும் கதை. திரையில் ஓடிய பிம்பம். அவ்வளவுதான். பார்க்கும் உங்களுக்கும் நன்றாக தெரியும். இருந்தும் உங்களை ஆழமாக பாதித்திருக்கிறது அல்லவா?
இதே போலத்தான் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்களை பார்ப்பதும் வணங்குவதும். அவை நம் மனதில் பயத்தையும், அசூசையையும், துயரத்தையும் மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றன. அதனால் தான், அகால மரணமடைந்தவர்களது ஆன்மா சாந்தியடைய தமிழ்நாட்டிலும், இன்னும் பல புராதன கலாச்சாரங்களிலும் அவர்களை நடுகல்லாக அமைத்து நினைவுத்தூண் எழுப்பும் பழக்கம் உண்டு. தவறு செய்யாதிருந்தும், தவறாக தண்டனை அடைந்து இறந்தவன் (உதாரணமாக கோவலன் போன்று), பசி காரணமாகவோ அனாதையானதாலோ இறந்த பெண்கள் குழந்தைகள் ஆகியோர் ஐந்நூறு ஆண்டுகளாக ஆவியாக சுற்றுவார்கள் என்பது பழங்கால ஐதீகம். ஆகவே அவர்கள் தங்களது துன்பத்தின் காரணமாக மற்றவர்களுக்கு துன்பம் அளிப்பார்கள் என்று கருதி அவர்களை திருப்திப் படுத்த அவர்களுக்கு சிறு கோவில் கட்டி அவர்களுக்கு உணவு போன்றவற்றை அளிப்பது மரபு. ஆனால், இவர்களை வீட்டில் வைக்கமாட்டார்கள். வெளியே காட்டில், அல்லது அனாமத்தான இடங்களில்தான் அமைப்பார்கள். இவர்களை மட்டுமல்ல, நற்சாவு அடைந்தவர்களாக இருந்தாலும், இறந்து போன நிலையில் புகைப்படம் எடுத்ததை வீட்டில் வைக்கமாட்டார்கள். ஏன், கண்ணை மூடி தூங்கிக் கொண்டிருப்பவர்களைக் கூட புகைப்படம் எடுக்க மாட்டார்கள். அப்படி வரைந்திருந்தாலும் வீட்டில் வைத்து வணங்கமாட்டார்கள். சந்தோஷமான நிலையில் இருக்கும் புகைப்படங்களையே வீட்டில் வைத்து மூத்தார் வழிபாடு செய்யவேண்டும்.
தெய்வமாகவே இருந்தாலும், உக்கிர ரூபத்தில் இருக்கும் காளியை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு. காளி, உக்கிர நரசிம்மர் போன்ற தெய்வங்களின் சக்தியைத் தாங்கும் மன வலிமை கொண்டவர்களே அந்த தெய்வங்களை உபாசிக்க வேண்டும். இந்த உக்கிர மூர்த்திகள் போருக்கு புறப்படும் முன்னால் வணங்க வேண்டிய தெய்வங்கள். போர் முடிந்தபின்னால் கோபம் தணிய சிவனை வணங்க வேண்டும். அதனால் தான் போர் முடிந்ததும் ராமன் ராமேஸ்வரத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து வணங்குகிறார். தைரியத்திற்காகவும், பயமின்மைக்காகவும் துர்க்கா தேவியை வணங்கும் போது கூட, அழிக்கப் பட்ட தீமையின் உருவமான எருமைத் தலை காலடியில் கிடக்க, புன்முறுவல் பூத்த முகத்துடன் அருள் வழங்கும் கரங்களுடன் கூடிய துர்க்கை திருவுருவமே எல்லா கோயில்களிலும் உள்ளது. அந்த தெய்வ வடிவத்தைத் தான் பெண்கள் ராகு கால பூஜை செய்கிறார்கள்.
எனவே, அமைதியான, சாந்த வாழ்க்கைக்கு கல்யாண கோலத்தில், மங்கலகரமாக உள்ள பரம்பொருளையே வணங்க வேண்டும்.
ஆனால் பெரும்பாலான சர்ச்சுகளில் மூலஸ்தானத்தில் இருக்கும் உருவம் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இறந்து போன இயேசுவின் உருவம். இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்று சொல்வார்கள். அது வணங்கப்படுவதில்லை. இறப்பதற்கு முன்னால் அவர் அழுவார். அது வணங்கப்படுவதில்லை. அவர் இறந்து சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் உருவமே வழிபடப்படுகிறது. அதுவே பலர் கழுத்தில் அணிந்திருக்கும் சிலுவையிலும் இருக்கிறது. பெந்தகொஸ்தே, பாப்டிஸ்ட் சர்ச் போன்றவைகளில் சில உருவ வழிபாடு கூடாது என்று சொன்னாலும், அவர்கள் முக்கியமாக கருதுவது இயேசு கொலை செய்யப்பட்டதே. அவர்களின் பேச்சுகளில், உபதேசங்களில் எல்லாமே ஏசு அநியாயமாக கொலை செய்யப்பட்டதே திரும்பத்திரும்ப சொல்லப்படும். இதே போல இஸ்லாமில் ஷியா பிரிவினரும் முகம்மதின் மருமகனான அலி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு இப்போதும் அழுவார்கள். தங்கள் துயரத்தை வெளிக்காட்ட நெஞ்சில் அடித்துகொண்டும், சவுக்கில் அடித்துக்கொண்டும் ஊர்வலமாக செல்வார்கள்.
இவை எல்லாமே மன அழுத்தத்தை உருவாக்கக்கூடியவை. அடி மனதில் பயம், அழிவு, துயரம் ஆகியவற்றை உருவாக்கி வெளியே வன்முறையாகவும் கோபமாகவும் வெளிப்படக்கூடியவை. ஒரு வருடத்துக்கு மேல் சாவுக்கு வருந்தக்கூடாது என்பது இந்து வழிமுறை. ஒரு வருடத்துக்குப் பிறகு கல்யாணம், திருவிழா, பண்டிகை போன்ற மங்களகரமான நிகழ்ச்சிகளை வீட்டில் செய்தும் துயரத்தை மாற்ற வேண்டும் என்பது இந்து வழிமுறை. ஆனால் இவர்களோ பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த துயர சம்பவத்தை மறக்காமல் இன்னும் துயரத்தை தொடர்ந்துகொண்டே இருந்து அமங்கள வாழ்க்கையை வாழ்ந்துவிடுகிறார்கள். இது அவர்களின் குடும்பத்துக்கு மட்டும் தீமை அல்ல. அவர்கள் சார்ந்த ஊருக்கும், சமூகத்துக்குமே தீமை. இயேசு அடிவாங்கிக் கொண்டு செல்லும் ஊர்வலம், ஷியா பிரிவினர் நடத்தும் அமங்கள ஊர்வலம் ஆகியவற்றில் கலந்துகொள்வதோ அல்லது அவற்றை பார்ப்பதோ இந்துக்களுக்கும் இந்து குடும்பங்களுக்கும் அமங்களமானது. தவறானது. இவற்றைப் பார்ப்பதை தவிருங்கள்.
பல இந்துக்களின் வீடுகளில் இந்த சிலுவைப் படத்தை வைத்திருப்பார்கள். என் நண்பரது வீட்டில் ஒரு துயர சம்பவம் நடந்தது. பட்ட காலிலேயே படும் என்பது போல தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அவரது வீட்டுக்கு ஆறுதல் சொல்ல சென்றபோது, அவரது வீட்டில் இருந்த இந்த சிலுவைப் படத்தை பார்த்து அவரிடம் ஏன் இந்த சிலுவைப்படத்தை வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டேன். நண்பர் ஒருவர் கொடுத்தார் என்று சொன்னார். எப்போதிருந்து என்று கேட்டேன். அவர் சொன்ன தேதி, அவரது வீட்டில் அகாலமாக துயர சம்பவங்கள் நடைபெற ஆரம்பிப்பதற்கு முந்தைய தேதி. இந்த படத்தை யாரிடமாவது கொடுத்து விடுங்கள். படம் இருந்த அந்த இடத்தில் விநாயகர், சரஸ்வதி, லட்சுமி இருக்கும் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அல்லது கல்யாண கோலத்தில் இருக்கும் எம்பெருமான் சிவனின் படத்தை வையுங்கள் என்று சொன்னேன். அவர் மறு பேச்சு பேசாமல் அன்றே செய்துவிட்டார். அன்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறது அவரது வாழ்க்கை. சென்ற முறை என்னை பார்த்தபோது, கண்ணீர் மல்க, உங்கள் அறிவுரைக்கு நன்றி என்று தழுதழுத்தார்.
இது ஒரு முறை அல்ல, பல முறை நடந்திருக்கிறது. ஏதோ நண்பர்கள் கொடுத்தார்கள், பரந்த மனம் ஆகிய காரணங்களுக்காக சிலுவை படத்தை வைத்துக்கொண்டுவிட்டு பிறகு துயர சம்பவங்கள் நடந்து, மன நிம்மதி இழந்து, மன அழுத்தத்தில் சிக்கிக்கொண்டவர்களை நான் அறிவேன். மன அழுத்தத்தில் சிக்கிய பின்னால், கிறிஸ்துவர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து, இவ்வாறு மன அழுதத்தில் சிக்கியதற்கு காரணம் இந்து கடவுள்களை நீ வணங்குவதுதான் காரணம் என்று பொய் சொல்லி முழு கிறிஸ்துவராக மாற்றி, பெயர் எல்லாம் மாற்றி கிறிஸ்துவ போதகராக ஆனவரும் ஒருவர் இருக்கிறார். அவரை பார்த்தபோது நான் இதே விஷயத்தை அவரிடம் தெளிவு படுத்த முயற்சித்தேன். அவர் காதிலேயே விழவில்லை. என்னை ஏதோ கொல்லப்பட வேண்டியவன் என்பது போல பார்த்தார். மூளைச்சலவை முற்றிவிட்டது என்று விலகிவிட்டேன். பிறகு அவர் தற்கொலை செய்து கொண்டுவிட்டார் என்று அறிந்து மனம் வருந்தினேன். அப்படி நான் விலகியிருக்கக்கூடாது, என்னை என்ன திட்டினாலும் அவரை அங்கிருந்து விலக்கி கொண்டுவந்திருக்க வேண்டும் என்று வருந்தினேன்.
இயேசுவின் கதையை நாம் படித்தால் நம் ஊரில் இருக்கும் நடுகல்களின் கதை நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது. கோவலன் போன்று தான் செய்யாத குற்றத்துக்காக இயேசு கொல்லப்பட்டதாக அந்த கதை சொல்கிறது. அவர் தீமை செய்துவிடக்கூடாது என்று கருதிய பழங்குடியினர் அவருக்கு கோவில் கட்டி, பிறகு அவரது கதை பலவிதமாக எழுதப்பட்டு, பிறகு அது ஒரு மதமாக ஆகியிருக்கலாம். அப்படி துர்மரணம் அடைந்த ஆன்மாக்களை ஐந்நூறு வருடங்களுக்கு பிறகும் வணங்குதல் தவறு.
இப்போது மேற்கத்திய நாடுகளை எடுத்துப் பார்த்தால், ஏராளமான பிரச்னைகளை அவர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறோம். கிறிஸ்துவ நாடுகளில் மிக அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவில் 25 சதவீத பெண்கள் பல கணவர்கள் மூலம் பிள்ளைகள் பெற்றுகொள்கிறார்கள் என்று அறிகிறோம். ஏராளமான குழந்தைகள் இப்படி மாற்றாந்தாய், மாற்றான் தந்தைகளிடம் வளர்கின்றார்கள். அவர்களால் பல தொல்லைகளுக்கும் ஆளாகிறார்கள்.
கத்தோலிக்க சர்ச்சில் இருக்கும் பாதிரியார்கள் சர்ச்சுக்கு வரும் சிறுவர்களை பாலுறவு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். கன்னியாஸ்திரிகள் சிறுவர்கள் சிறுமியரை பாலுறவு வல்லுறவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சர்ச்சுகள் நடத்தும் அனாதை இல்லங்களில் இருக்கும் சிறுவர்கள் கேட்பாரின்றி பலாதகாரம் செய்யப்பட்டிருக்கிறார்கள் [4]. ஏராளமான சிறுவர்கள் பாதிரியார்கள் மீதும் கத்தோலிக்க சர்ச் மீதும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இதனால், கத்தோலிக்க சர்ச் திவாலாகிவிடும் என்று கருதுகிறார்கள். கத்தோலிக்க சர்ச் மட்டுமின்றி பாப்டிஸ்டு சர்ச், பெந்த கொஸ்தே சர்ச் என்று எல்லா சர்ச்சுகளிலும் இப்படிப்பட்ட கேவலங்கள் தினசரி அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தங்கள்து குற்றம் கண்டிபிடிக்கப்படவில்லை என்று கருதிகொண்டிருந்த பாதிரியார்கள், குற்றங்களுக்காக கேவலப்படும்போது சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் அறுபது வருடங்களுக்கு முன்னால் நடந்த சர்ச் பாலுறவு பலாத்காரங்களும் இன்றாவது வெளிவருவதற்குக் காரணம் விடாது தீவிர புலன்விசாரணைகள் செய்து இவற்றை வெளிக்கொண்டு வரும் ஒரு சில பத்திரிக்கையாளர்கள் தான்!
இந்த கிறிஸ்துவ சர்ச்சுகள் பெரும் பலம் வாய்ந்தவையாக ஆகிய பின்னாலிருந்து இன்றுவரை நடந்திருக்கும் அனைத்து குற்றங்களும், பாலுறவு பலாத்காரங்களும் தண்டிக்கப்படவே இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை.
இவற்றுக்கெல்லாம் காரணம் தவறான வழிபாடுதான். யாரை முன்மாதிரியாக வைக்கிறார்களோ, யாரை வணங்குகிறார்களோ, அந்த பிம்பம் மனதில் ஆழ பதிந்துவிடுகிறது. இயேசு திருமணம் செய்தவரில்லை. இயேசு வன்முறையாளர். தன்னை கும்பிடாதவர்களை கொல்லச்சொன்னவர். மனைவி, மக்கள், பெற்றோர் ஆகியவற்றை விட்டுவிட்டு தன்னை மட்டுமே பின்பற்றச் சொன்னவர். இவை எல்லாம் பைபிளில் இருந்தாலும், பாதிரியார்கள் இவற்றை தினசரி போதிப்பதில்லை என்றாலும், பைபிளை படிக்கும் கிறிஸ்துவர்கள் இவற்றை படிக்கத்தான் செய்வார்கள். குழந்தை ஏசு படம் இருந்தால் கூட, மேரி மாதா, வேளாங்கண்ணி படம் இருந்தால் கூட, இவையெல்லாம் பின்னணியில் இருக்கின்றன என்று நாம் அறிந்துகொள்ளவேண்டும். இவை அவர்களது மனதில் ஆழப்பதிந்து குரூரத்தையும் சமூக விரோத சிந்தனையையும் ஆழ்மனதில் உருவாக்கிவிடுகின்றன.
உலகத்தில் பெரும் போர்களை செய்த கிறிஸ்துவர்கள் செல்லும் இடமெங்கும் இனப்படுகொலையையும் ரத்த ஆறறையும் ஓட வைத்தார்கள். அமெரிக்காவில் இருந்த பழங்குடியினரை கொடூரமான முறைகளில் கொன்றார்கள் [5]. ஆப்பிரிக்காவில் இருந்தவர்களை பைபிள் சொல்கிறது என்பதற்காக அடிமைகளாக்கி வேலை வாங்கினார்கள் [6]. இவையெல்லாம் பைபிளும் இயேசுவும் அவர்களிடையே உருவாக்கிய மன விகாரங்களால் உருவானவையே. ஒரு புறம் கருணை என்று பேசிக்கொண்டே மறுபுறம் நடத்தும் கொலை, பாலுறவு பலாத்காரம் என்பது தீவிரமடைந்துவிட்ட மனவிகாரத்தின் ஒரு பக்க விளைவே.
இயேசு சொன்ன சில நல்ல விஷயங்களை சுவர்களில் எழுதி வைத்து பிரச்சாரம் செய்யும் கிறிஸ்துவ சர்ச்சுகளுக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இல்லை. ஆனால், அவர்கள் மேலும் மேலும் ஆட்களை சேர்ப்பதற்காக இவைகளை எல்லாம் மூடி மறைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். நாம் இயேசுவை சாத்தான் என்றோ தீய சக்தி என்றோ சொல்வதில்லை. ஆனால், கிறிஸ்துவர்கள் இந்து தெய்வங்களை சாத்தான் என்றும் தீய சக்தி என்றும் சொல்ல தயங்குவதில்லை. இதன் மூலம் அவர்களது மன விகாரங்களை மேலும் வலுப்படுத்திக்கொண்டு விடுகிறார்கள்.
தாமரை மலர்களை அசிங்கம் அசிங்கம் என்று மூளைச்சலவை செய்துகொண்டும், ரத்தம் வடியும் உருவங்களை அழகு அழகு என்றும் திருப்பித் திருப்பி சொல்லிக்கொண்டே இருந்தால், மனம் முழு விகாரமடைந்து சிததமே கலங்கிவிடும்தானே?
முதலில், நம் வீடுகளில் இருக்கும் அவல ஓவியங்களை அகற்றுவோம். துயர சிந்தனைகளையும், மன அழுத்தத்தையும் விளைவிக்கும் படங்களை அப்புறப்படுத்தி அங்கு கல்யாணக் கோலத்தில், மங்கலகரமான உருவத்தில் இருக்கும் தெய்வ வடிவங்களை வைப்போம். நம் கிறிஸ்துவ நண்பர்களோ இஸ்லாமிய நண்பர்களோ ஏதேனும் படமோ புத்தகமோ கொடுத்தால், நாகரிகமாக மறுப்போம்.
அறிவானும் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே – அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே விரிசுடர் பார் ஆகாசம்
அப்பொருளும் தானே அவன்.
– அற்புதத் திருவந்தாதி (காரைக்காலம்மையார்)
கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோல நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
– பெரிய புராணம் (சேக்கிழார்)
பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங் குழலாள் அபிராமி கடைக்கண்களே.
– அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர்)
கருமமும் கரும பலனும் ஆகிய காரணன் தன்னை
திருமணி வண்ணனைச் செங்கண்மாலினைத் தேவபிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து உள்ளம் குழைந்தெழுந்தாடி
பெருமையும் நாணும் தவிர்ந்து பிதற்றுமின் பேதமை தீர்ந்தே.
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைக்கின்றேன் உன்னை எங்ஙனம் நினைகிற்பன், பாவியேற்கு
ஒன்று நன்கு உரையாய் உலகமுண்ட ஒண்சுடரே.