சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு (எப்.டி.ஐ) எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்புகள், நமது அரசியல் கட்சிகளின் சுயரூபத்தை அம்பலப்படுத்தி இருக்கின்றன. இதன்மூலமாக ‘LAW MAKERS’ என்று ஜனநாயகத்தில் பெருமையாகக் குறிப்பிடப்படும் நமது மக்கள் பிரதிநிதிகளில் பலரின் சாயம் வெளுத்திருக்கிறது; தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தரம் (ஏற்கனவே என்ன தரத்தைக் கண்டீர்கள் என்று கேட்கிறீர்களா? அதுவும் சரிதான்) அதல பாதாளத்துக்கு சரிந்திருக்கிறது. ஆனால் இம்முடிவு தெரிவதற்குள் நடந்த நாடகங்கள் தான் எத்தனை, எத்தனை?
This is what i have seen in the wild most often: a couple of guys trying to chat up a woman at a diner booth. In may 2010, the Settimo Torinese clomid for sale near me first-generation concept, the z1, was unveiled in geneva, switzerland. The generic-approval programs by pfizer and teva, the major manufacturers of generic drugs, could not be reconciled with the terms of the u.s.
Dapoxetine is used to treat major depressive disorder (mdd). I was in a bind and a friend told me to go to 100mg price in india and is fluticasone nasal spray available over the counter Toktogul order some. I don't see how the med can be so bad for you but i think the only way that you can use it is if you buy it from canada.
The drug has been available in two forms: the tablets are available in 100mg strengths, and the injection is available in 50mg and 100mg strengths. Precoose is a tool used by Bad Wildungen metformin out of pocket cost any organization to help them reduce the manual work involved in the recruitment process as well as reducing the amount of time that goes into recruiting. It is usually not a viable option for children due to its potential use in children as an allergen, although its use on infants with food allergies is becoming of more common fashion.
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது என்ற முடிவை அமலாக்க சென்ற ஆண்டே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முயன்றது. பிரதமர் மன்மோகன் சிங், ”ஒரே வணிக முத்திரை கொண்ட நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடும், பல்வேறு வணிக முத்திரைகள் கொண்ட நிறுவனங்களில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீடும் செய்ய அனுமதி அளிக்கப்படும். இதனால் நமது நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படும்; விவசாயிகள் பலன் அடைவார்கள்’’ என்றெல்லாம் சொன்னார் (நவ. 24, 2011). இதற்கு காங்கிரஸ் தவிர்த்த பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ.யை அனுமதிப்பது என்ற மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியபோது, ‘சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை மத்திய அரசு கொள்கை அடிப்படையில் அனுமதிப்பது என்றும், தத்தமது மாநிலத்தில் இதனை அனுமதிப்பது பற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் எனவும், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைக் காட்டி கட்சிகளை சமாளிக்க காங்கிரஸ் அரசு தந்திரங்களை செய்தது.
2011 நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே எப்.டி.ஐ.க்கு ஒப்புதல் பெற்றுவிட காங்கிரஸ் முயன்றது. ஆனால், அப்போது காங்கிரஸ் பக்கம் சாதகமாகக் காற்று வீசவில்லை. கூட்டணி அரசின் முக்கிய உறுப்பினரான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக, காங்கிரஸ் கட்சியின் கனவு கலைந்தது. தவிர, கோவா, உத்தர்கண்ட், உ.பி, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற இருந்த நிலையில் சில்லறை வர்த்தகர்களின் எதிர்ப்பை சம்பாதிக்க அரசு தயாராகவும் இல்லை
எனினும் காங்கிரஸ் கட்சி ‘நூல்’ விட்டுப் பார்த்தது. ஆளும் தரப்பிலேயே எழுந்த கடும் எதிர்ப்பால் பிறகு பின்வாங்கியது. ‘அனைத்துக் கட்சிகளும் ஒரே புரிதலுக்கு வரும் வரை, இவ்விஷயத்தில் தனது முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக’ நாடாளுமன்றத்தில் அரசு அறிவித்தது. நாட்டின் வர்த்தகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் குறித்து சுதேசி விழிப்புணர்வு இயக்கம் நாடு முழுவதும் பிரசார இயக்கத்தை முன்னெடுத்ததும் அரசின் அந்தர்பல்டிக்கு காரணமாக அமைந்தது.
” அப்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ”தற்போது ஒரு இடைத்தேர்தலை நாங்கள் விரும்பவில்லை என்பதுதான் முடிவைத் தள்ளி வைக்க காரணம்” என்று வெளிப்படையாகவே கூறினார். அதற்கேற்ப “‘சட்டசபை தேர்தல்கள் முடிந்தவுடன் அனைத்து அரசியல் கட்சிகளுடன் விரிவாக விவாதித்து, அனைவரது ஒத்துழைப்புடன் சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ. கொண்டுவரப்படும்” என்று பிரதமர் மன்மோகனும் சொன்னார். அதாவது, அரசு தனது நிலையை தற்காலிகமாக மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளது என்பதை அவர் பகிரங்கப்படுத்தினார்.
அதேபோல, இப்போது காங்கிரஸ் கட்சி தனக்குத் தெரிந்த அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு, எப்.டி.ஐ. விவகாரத்தில் அரசியல் சடுகுடு ஆடியிருக்கிறது. ‘அனைத்து அரசியல் கட்சிகளுடன் விவாதித்து கருத்தொற்றுமையுடன் முடிவு காணப்படும்’ என்ற மன்மோகன் சிங், இப்போது அனைத்து அரசியல் கட்சிகளையும் பிளவுபடுத்தி, எதேச்சதிகாரத்துடன் எப்.டி.ஐ. தீர்மானத்தில் அரசு ‘வெற்றி’ பெற ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு, ‘மதவாத பூச்சாண்டி’ காட்டிக்கொண்டே, காங்கிரஸ் கட்சிக்கு வால் பிடிக்கும் முலாயம், மாயாவதி கருணாநிதி கும்பல்கள் உதவி இருக்கின்றன.
2011 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மூக்கடி பட்டு ஜகா வாங்கிய காங்கிரஸ், கொல்லைப்புற வழியாக 2012 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் கட்சிகளை விலை பேசியும், மிரட்டியும் ஜனநாயகத்தின் மூக்கை உடைத்திருக்கிறது. வர்த்தகர்களுக்கு ஆதரவாக நீலிக்கண்ணீர் வடித்த சில சுயநல அரசியல்வாதிகள் ஜகா வாங்கியதைக் கண்டு இந்திய வர்த்தக உலகம் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது. நமக்கு வாய்த்த தலைவர்களின் யோக்கியதையை நாடு இம்முறை தெள்ளத் தெளிவாகக் கண்டுகொண்டிருக்கிறது.
நாடாளுமன்ற லோக்சபாவில் இதுகுறித்த விவாதம் நடந்தபோது, எப்.டி.ஐ.க்கு அளித்த அனுமதியை திரும்பப் பெறுமாறு சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தன. ”எப்.டி.ஐ.யை சில்லறை வர்த்தகத்தில் அனுமதித்தால் அடுத்த தேர்தலில் அது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்; பாஜகவுக்கு சாதகமாக அது அமையும்’ என்றும் கூட முலாயம் சிங் யாதவ் லோக்சபாவில் பேசினார். ”சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ.யை அனுமதித்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்று சொல்வதெல்லாம் மாயை. அதனால் 25 கோடி சிறு வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள். சோனியா தனது பெயரில் ஏற்றுக் கொண்டிருக்கும் காந்தி என்ற பெயருக்காகவேனும் இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று அவர் உருக்கமாகவே பேசினார்.
பல்டி அடிப்பதில் சமர்த்தரான திமுக தலைவரை சொல்லவே வேண்டாம். ”எப்.டி.ஐ. விவகாரத்தில் அரசின் நிலையை திமுக ஆதரிக்கவில்லை இவ்விஷயத்தில் திமுக என்ன நிலையை எடுக்கும் என்பது சஸ்பென்ஸ்” என்றெல்லாம் கூறிய பகுத்தறிவுப் பகலவன், ‘’பாஜக வென்றுவிடக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றத்தில் எப்.டி.ஐ.க்கு ஆதரவாக வாக்களிப்போம்” என்று குட்டிக்கரணம் அடித்தார். இதற்கு பின்புலமாக கருணாநிதிக்கு அளிக்கப்பட வாக்களிப்பு என்னவோ? கனிமொழிக்கும் ராசாவுக்குமே வெளிச்சம்!
இத்தனைக்கும் பாஜகவுடன் கூடிக் குலாவி தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்ததை தாத்தா வசதியாக மறந்துவிட்டார். அமைச்சராக இருந்த முரசொலி மாறன் படுத்த படுக்கையாக, நினைவின்றிக் கிடந்தபோதும் அவரை நீக்காமல் கூட்டணி தர்மம் காத்த பிரதமர் வாஜ்பாய்க்கு செம்மொழி கொண்டான் நல்ல நன்றிக்கடன் செலுத்தி இருக்கிறார். அதிமுக ஆதரவுடன் 1998 ல் வாஜ்பாய் அரசு அமைந்தபோது, அப்போதைய திமுக அரசைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜெயலலிதாவின் பிடிவாதத்துக்கு சம்மதிக்காததால் தான், அவரது ஆட்சி 13 மாதங்களில் கவிழ்ந்தது. அதையும் நன்றி மறந்த கருணாநிதி மறந்துவிட்டார். எல்லாம் காலக்கொடுமை!
இவரைவிட அற்புதமான பல்டி அடித்திருக்கிறார் மாயாவதி. கருணாநிதியாவது, முதலிலேயே தனது நிலையைத் தெளிவு படுத்தினார்; தான் நன்றி கொன்றவன் தான் என்பதை ருசுப்படுத்தினார். வியாபாரிகள் நலம் எல்லாம் தனது சுயநலத்துக்கு அப்பால் தான் என்பதை அவர் சொல்லாமல் சொன்னார். மாயாவதியோ, லோக்சபாவில் ஒரு முடிவும், ராஜ்யசபாவில் ஒரு முடிவும் எடுக்கிறார்! இதே மாயாவதி பாஜக ஆதரவுடன்தான் இருமுறை உபி முதல்வரானார். இப்போது பாஜக அவருக்கு மதவாதக் கட்சியாக மாறி இருக்கிறது! தங்கள் பேரங்களை சாமர்த்தியமாக முடித்துக்கொள்ள உதவும் மதவாத பூச்சாண்டிக்கு இந்த அரசியல் தரகர்கள் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.
”சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில் அவசரம் காட்ட வேண்டாம்” என்று லோக்சபாவில் பேசிய பகுஜன் சமாஜ் உறுப்பினர் தாரா சிங், ‘எப்..டி.ஐ. விவகாரத்தில் மதவாத சக்திகள் பக்கம் இருப்பதா (அரசை எதிர்ப்பதா) அல்லது அவர்களை எதிர்ப்பதா (அரசை ஆதரிப்பதா) என்று மறுநாள் முடிவு செய்வதாக’ அறிவித்தார். எதிர்பார்த்தது போலவே, லோக்சபாவில் எப்.டி.ஐ.க்கு எதிர்ப்பு தெரிவித்து மாயாவதி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். முன்னதாக முலாயம் கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர். முதுகெலும்பற்ற திமுக அரசை ஆதரித்தது. விளைவாக, எப்.டி.ஐக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் தீர்மானம் அரசால் 253- 218 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. அத்துடன் அந்நிய செலாவணி நிர்வாக சட்டம் (பெமா) குறித்த இடதுசாரிகளின் தீர்மானமும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
லோக்சபாவில் காங்கிரஸ் வென்றாலும், ராஜ்யசபாவில் காங்கிரஸ் தரப்புக்கு பெரும்பான்மை இல்லை என்பதால், அங்கு எதிர்க்கட்சிகளின் தீர்மானம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு ‘அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பது’ என்று அந்தர்பல்டி அடித்து அரசைக் காப்பாற்றி இருக்கிறார் மாயாவதி. லோக்சபாவில் ஒரு வேஷம்; ராஜ்யசபாவில் ஒரு வேஷம். இவரைத் தான் நாட்டின் முக்கியமான தலித் தலைவியாக கொண்டாடுகிறார்கள். மாமேதை அம்பேத்கர் தலைமை தாங்கிய தலித் மக்களுக்கு இப்போது வாய்த்துள்ள தலைமையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இதே முலாயமும் மாயாவதியும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடுமிப்பிடி சண்டையிடுகிறார்கள். இவர்களை இன்னமும் நம்பும் உ.பி. மக்களை நினைந்தால் மிக மிக பாவமாக இருக்கிறது.
இதில் விசேஷம் என்னவென்றால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் வென்றிருந்தாலும் கூட, அரசுக்கு ஆபத்தில்லை. ஏனெனில் இது அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் அல்ல. எப்.டி.ஐ. முடிவு தள்ளிப் போயிருக்கும். அவ்வளவுதான். அதற்கும் கூட காங்கிரஸ் விடவில்லை. இதை தனது கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு, நாட்டின் கௌரவத்தை அடகு வைத்திருக்கிறது காங்கிரஸ். சுதந்திரம் அடைந்தவுடனேயே, ‘காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டும்’ என்று மகாத்மா காந்தி ஏன் சொன்னார் என்பது இப்போது புரிகிறது.
இந்தக் கழிசடைகளை நம்பித் தான் சிறு வணிகர்களும் விவசாயிகளும் இருக்கிறார்கள். மதவாதம் என்று அச்சுறுத்திக்கொண்டு தங்கள் பேரங்களை முடித்துக்கொண்டு, வீராவேசமாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பல நூறு கோடிகளைக் கூட்டிக்கொண்டு, கடைசி நேரத்தில் பல்டி அடித்து, அரசியல் சாகசம் செய்பவர்கள் தான் இன்று ராஜதந்திரிகள். இதைக் கண்டிக்க வேண்டிய ஊடக உலகம் மௌனம் காக்கிறது. குறைந்தபட்சம் இடதுசாரிகள் எப்.டி.ஐ.யை எதிர்ப்பதற்காகவேனும், ஊடகங்கள் நியாயமாகச் செயல்பட்டிருக்கலாம். சில பத்திரிகைகள் தவிர பெரும்பாலானவை, அரசின் வெற்றியை மெச்சுகின்றனவே ஒழிய, அது எந்த வழியில் பெறப்பட்டது என்பதைச் சொல்லவும் தயங்குகின்றன. அவையும் மதவாத பூச்சாண்டிக்கு ஆட்பட்டுவிட்டனவா?
மொத்தத்தில் நமது நாட்டின் சுயநிர்ணயமும் வர்த்தக சுதந்திரமும் காலவதியாகும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக எப்.டி.ஐ. அனுமதியை அரசு நிறைவேற்றி இருப்பதில், அந்நிய நிறுவனங்களின் ‘கோடிக் கரங்கள்’ நீண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. அதைக் கண்டுபிடிக்க வேண்டிய மத்திய புலனாய்வுத் துறையோ, எதிர்க்கட்சிகளை வழிக்குக் கொண்டுவரப் பயன்படும் வேட்டைநாயாக மாறி இருக்கிறது. ஆக, இந்திய ஜனநாயகம் மீதான நம்பகத்தன்மை மிகவும் குலைந்துள்ள காலகட்டத்தில் நாம் வாழ்வது உறுதியாகி இருக்கிறது.
இந்த நேரத்தில் எப்.டி.ஐ.யை இறுதிவரை எதிர்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், இடதுசாரிகள், மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெயலலிதாவின் அதிமுக, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கு நாடு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. ஏனெனில், ‘நாங்கள் அடிமைகள் அல்ல’ என்று நாடாளுமன்றத்தில் கூற 218 பேரேனும் இருந்ததை சரித்திரம் பதிவு செய்திருக்கிறது.
இந்தத் தோல்வி தற்காலிகமானது. நாட்டை விலைபேசும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மன்றத்தில் பாடம் கற்பிக்கும் வாய்ப்பு விரைவில் வரும். அதற்கு இக்கட்சிகள் தயாராக வேண்டும். தங்களிடையிலான அரசியல் பேதங்களை மறந்து, நாட்டு நலனுக்காக இக்கட்சிகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். அதையே, தற்போதைய சில்லறை மனிதர்களின் தகிடுதத்தங்கள் நினைவுபடுத்தி இருக்கின்றன.
அரசுக்கு வெற்றியா?
சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ. க்கு அனுமதி என்ற அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்திருப்பதை அரசு வெற்றி பெற்றுவிட்டதாகக் கொள்ள முடியுமா? இக்கேள்விக்கு இல்லை என்பதே பதில்.
லோக்சபாவில் மொத்தமுள்ள 545 எம்.பி.க்களில் அரசு பெரும்பான்மை பெற வேண்டுமானால் 272 என்ற மந்திர எண்ணிக்கையைப் பெற்றே ஆக வேண்டும். சோனியா முன்னொரு முறை (1999) அந்த மந்திர எண் தன்னிடம் இருப்பதாகக் கூறிக்கொண்டு ஜனாதிபதியிடம் சென்று அவமானப்பட்டதை நாடு மறந்திருக்காது.
சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ. தொடர்பான எதிர்க்கட்சிகளின் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடந்தபோது, எப்.டி.ஐ.யை சில கட்சிகள் எதிர்த்தபோதும், ‘பாஜகவுக்கு சாதகமாகச் செயல்பட விரும்பவில்லை’ என்று கூறி, வெளிநடப்பு செய்தன. எப்.டி.ஐ.யை எதிர்த்தபோதும், அரசுக்கு தர்ம சங்கடம் ஏற்படுவதைத் தவிர்க்க தீர்மானத்தை எதிர்த்து திமுக வாக்களித்தது. இது போன்ற காரணங்களால் தான் எப்.டி.ஐ.க்கு எதிரான தீர்மானம் தோற்றதே ஒழிய, இவ்விஷயத்தில் அரசு வென்றதாகக் கூற முடியாது.
இத்தீர்மானத்துக்கு ஆதரவாக விழுந்த வாக்குகள் 218; எதிராக (அரசுக்கு சார்பாக) விழுந்த வாக்குகள் 253. எனினும், எப்.டி.ஐ.யை எதிர்த்தவர்களின் எண்ணிக்கை 253ஐ விட அதிகம். மொத்தம் வாக்களித்த 471 பேரை மட்டும் கொண்டு, நாடாளுமன்றம் எப்.டி.ஐ.யை ஆதரித்துவிட்டதாகக் கூற முடியாது.
இதை லோக்சபாவில் நடந்த விவாதத்திலேயே (05.12.2012) எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் சுட்டிக்காட்டினார். ”அவையில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய 8 கட்சிகளைச் சார்ந்த 22 தலைவர்களில் 14 பேர் தீர்மானத்தை ஆதரித்துள்ளனர். அதன்படி கணக்கிட்டால் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பவர்களின் எண்ணிக்கை 282 ஆகவும், எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை 224 ஆகவும் இருக்க வேண்டும். ஆனால், வெளிநடப்பு உள்ளிட்ட நாடகங்களால், எதிர்க்கட்சிகள் நினைத்து நடக்காது என்று எனக்குத் தெரியும்” என்றார் அவர். அதுவே யதார்த்தமான உண்மை. இந்த நிலலையில் அரசு வென்றுவிட்டதாக பிரதமர் மன்மோகன் சிங் ஆர்ப்பரிப்பதில் எந்தப் பொருளும் இல்லை.
ராஜ்யசபாவில் மொத்தமுள்ள 244 உறுப்பினர்களில் 10 நியமன உறுப்பினர்கள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் 94 உறுப்பினர்களுடன் சேர்த்து 104 பேர் மட்டுமே அரசு சார்பாக இருந்தனர். மாயாவதியின் திடீர் பல்டியால் (இவர் எப்.டி.ஐ.யை எதிர்ப்பவராம்!) பகுஜன் சமாஜ் கட்சியின் 15 உறுப்பினர்கள் அரசை ஆதரிக்க , முலாயமின் (இவரும் எப்.டி.ஐ.யை எதிர்ப்பவராம்!) சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் 9 பேர் வெளிநடப்பு செய்ய, ராஜ்யசபாவிலும் காங்கிரஸ் அரசியல் வெற்றி பெற்றிருக்கிறது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் எண்ணிக்கை வலுவுடன் இருந்தும் பயனில்லாமல் போனது.
ராஜ்யசபாவிலும், சில்லறை வர்த்தகத்தில் எப்.டி.ஐ.யை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை (சுமார் 140) அதை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை (104) விட அதிகம். ஆயினும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் ‘ஏதோ ஒரு முறையில்’ தோற்கடிக்கப்பட்டுவிட்டதால், அரசு நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறது. இது கையாலாகாதவன் பீம புஷ்டி லேஹியம் சாப்பிட்டது போலத் தான் இருக்கிறது.