மூலம்: நிதின் ஸ்ரீதர் எழுதிய ஆங்கிலக் கட்டுரை
Siya Ke Ram: Distortions, lies, and mockery of Ramayana, By Nithin Sridhar
This study reports that ivermectin used in human immunodeficiency virus (hiv) infections leads to a rise in hiv-1 dna levels and cd4 t-cell depletion, especially in subjects with cd4 t-cell counts above 300/ml. Dapoxetine 60 mg price in india - the most important point about dapoxetine 60 Nijkerk mg price in india is that it is a non-nausea medicine and it is the most effective medicine available in india. I'm not a doctor or any sort of expert in any medical matter.
We offer a range of services to our residents to ensure your stay will be as comfortable and memorable as possible. In the usa, postmenopausal women with early-stage breast buy clomid tablets Melilla cancer are currently offered adjuvant endocrine therapy with either tamoxifen or the selective estrogen receptor modulator tamoxifen plus ovarian suppression with ovarian function suppression agents (such as letrozole). If these drugs are ineffective or not tolerated, you will need to try other drugs.
In an open-label study, ivermectin was given once for scabies in humans (brennan et al. Generic brands are cheaper because there are fewer manufacturing processes involved, so you are able to get a drug at a much lower price, but you will https://3drevolutions.com/broken_toilet_seat/ not get all of the benefits of a brand-name drug. It is also a drug to treat and relieve the itching of insect bites in adults.
தமிழில்: டி.எஸ்.கிருஷ்ணன்
போன மாதம், ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி ராமபிரானைப் பற்றிய ஒரு புதிய தொடர் ஒன்றை பெரும் விளம்பரங்களுடன் தொடங்கியது. ‘சியா கே ராம்’ என்று பெயர்சூட்டப்பட்ட அந்தத் தொடர், ராமாயணத்தை ‘சீதையின் பார்வையிலிருந்து’ சித்தரிக்கப் போவதாக சொல்லப்பட்டது. அதன் தயாரிப்பாளர் நிதின் சின்ஹா அந்தத் தொடர் மூலத்தொடரை ஒட்டியே அமைந்தது என்று கூறியிருந்தார். ஆனால், ஒரு மாதத்திற்குப் பின், இந்தத் தொடர் தன்னிச்சையாக ஒரு பாதையில் பயணிக்கத் தொடங்கி, வால்மீகி ராமாயணத்தின் மூலத்திலிருந்து முற்றிலும் விலகிவிட்டது. அதுதவிர, அதிகமாக விளம்பரப்படுத்தப்பட்ட சீதாவின் பார்வை என்பது இன்னும் காணக்கிடைக்கவில்லை.
(இப்போது இதே தொடரின் தமிழ் வடிவம் விஜய் டிவியில் “சீதையின் ராமன்” என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது)
தொடக்கத்தில் இந்த எழுத்தாளரை தொடரின் VFX (படக் காட்சிகள்) வசீகரித்து, எதிர்பார்ப்புகளை அதிகரித்தது. ஆனால், போகப் போக, படக் காட்சிகள் மட்டும்தான் இந்தத் தொடரில் உள்ளது என்றும் மற்றபடி பாராட்டி எழுதுவதற்கு ஏற்ற கருத்துக்கள் ஏதும் இத்தொடரில் இல்லை என்றும் தெரியவந்தது. இத்தொடர், மூலக் கதையை திரித்தது மட்டும் இல்லாமல், நவீன “மதச்சார்பற்ற” “முற்போக்கு” கருத்துக்களையும் அதன் மேல் திணிக்க முயற்சி செய்து, ஹிந்துக்களின் பண்டைய வரலாற்றின் ஒரு பகுதியாக, இதிகாசமாகவும் புனித நூலாகவும் கருதப்படும் ராமாயணத்தை கேலி செய்வது போல் அமைந்துள்ளது.
தொடரின் முதல் பகுதியே அரசர் தசரதரையும் அரசி கௌசல்யாவையும் அழுமூஞ்சிகளாக சித்தரித்தது. தசரதர் எப்போதும் அவருடைய மைந்தர்களைப் பற்றிக் கவலைப் பட்டுக் கொண்டிருந்தார். முதலில் ராமனைப் பற்றியும் பிறகு அவருடைய பிரிந்து சென்ற மகளான சாந்தாவைப் பற்றியும் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். வால்மீகி ராமாயணத்தை ஒரு முறை வாசித்தாலே தசரதரும் சரி அரசியும் சரி அழுமூஞ்சிகளாக சித்தரிக்கப்படுவதில்லை என்பது புரியும்.
பால காண்டத்தை (11.2) எடுத்துக் கொண்டோமானால், தசரதர் நேர்மையானவராக, உண்மையானவராக, சிறந்தவராக சித்தரிக்கப் படுகிறார். எனவே, அழுமூஞ்சித் தோற்றத்திற்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை. இந்தத் தொடர், தசரதரின் மைந்தர்கள் குருகுலக் கல்வி பயிலச் சென்றபோது, அவர் பிரிவுத் துயரால் ஆழ்ந்ததாகவும் அதனால் வருந்துவதாகவும் காட்டுகிறது. ஆனால், இளவரசர்கள், குருகுலத்திற்குச் செல்ல வாய்ப்பேயில்லை, அவர்கள் அரண்மனையிலேயே கல்வி பயின்றிருக்க வேண்டும். வால்மீகி ராமாயணத்தில் அவர்களைக் குருகுலத்திற்கு அனுப்பியதாக குறிப்புகள் இல்லை. பதிலாக, ராமனும் மற்ற இளவரசர்களும் வேதங்களிலும், வில்வித்தையிலும் திறமையானவர்களாகவும் தந்தைக்கு அவர்களுடைய சேவைகளை அளிததாகவும் கூறப்படுகிறது. (1.18.27,28, 36,37)
இப்போது, சாந்தாவைப் பற்றிய கௌசல்யாவினுடைய கவலைக்கு வருவோம். வால்மீகி ராமாயணத்தில் அரசி கௌசல்யா அவரது மகளைப் பற்றி வருந்தியதாக ஏதேனும் குறிப்புகள் இருக்கிறதா என்று இந்த எழுத்தாளர் வலைவீசித் தேடினார். அதைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு கூடக் கண்ணில் படவில்லை.
இந்தத் தொடர் சாந்தாவை தசரதர் மற்றும் கௌசல்யாவினுடைய மகளாகக் காட்டுகிறது. ராமனையும் மற்ற இளவரசர்களையும் பெற்றெடுக்க புத்திரகாமேஷ்டி யாகம் செய்யத் தீர்மானித்து, அதற்காக ரிஷ்யசிருங்கரை வரவழைக்க திட்டமிடப்படுகிறது. அவரை மயக்கி மணந்துகொள்வதற்காக சாந்தா அனுப்பப்படுகிறாள். இப்படியாக, தசரதர் தன் மகளை, மகன்களைப் பெறுவதற்காக தியாகம் செய்கிறார். இதுதவிர சாந்தா பலவித திறமைகள் படைத்தவளாகக் காட்டப்படுகிறாள். ஆனாலும் தசரதர் அதிலெல்லாம் திருப்தியில்லாமல் ஒரு மகனைப் பெற்றெடுக்கவே விரும்புகிறார். இந்தக் காரணத்தால், சாந்தா அரண்மனை வாழ்க்கையைத் தியாகம் செய்து காட்டில் ரிஷ்யசிருங்கருடன் வாழும் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். இந்த விஷயம் ராமனிடமிருந்தும் மற்ற இளவரசர்களிடமிருந்தும் மறைக்கப்படுவதாக தொடரில் காட்டப்படுகிறது.
இப்போது வால்மீகி ராமாயணம் சாந்தாவைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம். சாந்தா அங்க நாட்டரசரும் தசரதரின் நெருங்கிய நண்பருமான ரோமபாதருக்கு தத்துக் கொடுக்கப்படுகிறாள். இது சாந்தா சிறு குழந்தையாக இருக்கும்போதே நடந்திருக்கவேண்டும். தத்தெடுத்தலின் போது அவளின் வயது குறிப்பிடப்படவில்லை. ரோமபாதரின் அரசு கடும் பஞ்சத்தால் தவித்ததாகவும், அதைத் தீர்ப்பதற்காக ரிஷ்யசிருங்கரை தனது நாட்டிற்கு வரவழைக்க அவர் தனது அரசவை நர்த்தகிகளை அனுப்பியதாகவும் வால்மீகி ராமாயணம் குறிப்பிடுகிறது (1.10.7)
அந்த ரிஷி வந்தவுடன், நாட்டில் மழை பொழிந்ததாகவும் பின்னர் ரோமபாதர் சாந்தாவை ரிஷிக்கு மணமுடித்ததாகவும் கூறப்படுகிறது (1.10.29-32). திருமணத்திற்குப் பிறகு ரிஷ்யசிருங்கரும் சாந்தாவும் அங்க நாட்டிலேயே வாழ்ந்ததனரேயன்றிக் காட்டில் வாழவில்லை (1.10.33). அதன் பின், மைந்தர்களைப் பெறுவதற்காக தசரதர், ரோமபாதரிடம் அவரது மாப்பிள்ளையான ரிஷ்யசிருங்கரை புத்திர காமெஷ்டி யாகம் செய்ய அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
எனவே, வால்மீகி ராமாயணத்தின் படி, சாந்தா அக்கால வழிமுறைகளின் படியே மணமுடிக்கப்பட்டாள் என்பதும் எந்தவித வற்புறுத்தாலோ தியாகமோ அவளின் திருமணத்தில் இல்லை என்பதும் மணத்திற்குப் பிறகு அவள் எந்தவிதத் துன்பத்திற்கும் ஆளாகவில்லை என்பதும் தெளிவாகிறது. மேலும், மகாபாரதம் கூறுவதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், சாந்தாவும் ரிஷ்யசிருங்கரும் நள-தமயந்தி போலவும் வசிஷ்டர் அருந்ததி போலவும் காதல் வாழ்வு வாழ்ந்தனர் என்று தெரிகிறது.
முக்கியமாக, சாந்தா, தசரதர் மகன்களைப் பெறுவதற்கான முயற்சியில் ரிஷ்ய சிருங்கரை மயக்குவதற்கு அனுப்பப்படவில்லை என்பது தெளிவு. மேலும் சாந்தா ரிஷ்யசிருங்கரை மணந்ததற்கும் ரிஷ்யசிருங்கர் தசரதருக்கு மைந்தர்களைப் பெறுவதில் உதவி செய்ததற்கும் சம்பந்தமேயில்லை.
ஆக, ஏன் இந்தத் தொடர் இப்படி உண்மைகளைத் திரித்து ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் எடுத்துக்காட்டுகிறது என்ற கேள்வி எழுகிறது. சாந்தா ஏன் அதனால் பாதிக்கப்பட்டவளாகக் காண்பிக்கப்படுகிறாள்? மூல நூலில் இவை எல்லாம் இல்லாத போதிலும், பெண்கள் ஓரவஞ்சனை செய்யப்படுகிறார்கள் என்பதற்கான கருவியாக, பெண்கள தியாகம் செய்வதற்காகவே பிறந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காக சாந்தா ஏன் பயன்படுத்தப்பட்டிருக்கிறாள் ?
ஆணாதிக்கம், பெண்ணாடிமைத்தனம், பெண்களுக்கு எதிரான ஓரவஞ்சனை ஆகியவை தற்கால சமூகத்தில் காணப்படும் சில போக்குகளாகும். முக்கியமாக, இடதுசாரி -முற்போக்காளர்களால் எடுத்துக் காட்டப்படும் சமூகத்தின் கூறுகள் இவை. அதே சமயம், அனைத்தையும் உள்ளடக்கிய அறம் -கடமை மற்றும் நேர்மை- என்னும் கருத்தாக்கமே இந்தியாவின் அடிநாதமாகும். சமூகக் கூறுகள் – அவை நல்லதாக இருந்தாலும் சரி தீயவையாக இருந்தாலும் சரி – அறத்தின் அடிப்படையிலேதான் ஆராயப்படும். ஆனால், இந்தத் தொடர் அறத்தின் அடிப்படையிலான ராமாயணத்தின் மூலக் கருத்தாக்கத்தைத் திரித்து, தற்போதைய சமூகக் கேடுகளையும் இடதுசாரி-முற்போக்குக் கருத்தாக்கங்களையும் ராமாயணத்தில் திணிக்க முற்படுவது, அதன் தயாரிப்பாளர்களின் நோக்கங்களையும் தொழில்தர்மத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது
மேலும், இதுபோன்ற திரிபுகளும் இடதுசாரி முற்போக்கு திணிப்புகளும் சாந்தாவின் கதையில் மட்டும் இல்லை. தொடரில் வரும் அஸ்வமேத யாகத்தை எடுத்துக்கொள்வோம். தொடரில் தசரதர் அஸ்வமேத யாகத்தை நடத்தும் போது, முதலில் சீதை, யாகக் குதிரையை வழிமறித்து நிறுத்துகிறாள். அதன்பின் ராமன், அந்தக் குதிரை கொல்லப்படக்கூடாது என்றும் ஒரு தங்கக் குதிரைச் சிலையை வைத்து யாகத்தை நிறைவு செய்யவேண்டும் என்றும் கூறுகிறான். விலங்குகளின் உரிமையைப் பற்றியும் மரபுகளை உடைப்பதைப் பற்றியும் ஒரு சொற்பொழிவும் நிகழ்த்துகிறான் ராமன்.
ஒட்டுமொத்த கதையும் தொடரை உருவாக்கியவர்களுக்கு ஹிந்து சடங்குகளில் இருக்கும் அறியாமையைக் காட்டுவது மட்டுமல்லாது, விலங்குகளின் உரிமைகள் போன்ற நவீன கருத்துகளை ஹிந்துக்களின் நடைமுறைகள் மேல் திணிக்கும் அவர்களது அஜெண்டாவையும் தெளிவாக்குகிறது
விலங்குகளின் நலனைப் பற்றிக் கருதாது இருப்பது அறவழியல்ல. ஹிந்து நீதிநூல்கள் விலங்குகளுக்கு சேவை செய்வதை குடும்பஸ்தர்களின் கடமைகளின் ஒன்றாக எடுத்துரைக்கின்றன. (பூத யக்ஞம்). ஹிந்து நூல்கள் விலங்குகளை பிரபஞ்சத்தின் பிரிக்க இயலாத ஒரு அங்கமாக உணர்ந்து மக்களுக்கு அகிம்சையை போதிக்கின்றன (துன்புறுத்தாமல் இருத்தல்). மனு ஸ்மிருதி (5.53) மாமிசம் உண்பதை விட்டவன் 100 அஸ்வமேத யாகங்களைச் செய்த பலனை அடைவான் என்று கூறுகிறது.
அதே சமயம் அஸ்வமேத யாகம், மனித குலத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக – உலகநன்மைக்காக, ஆன்மிக, சுற்றுச் சூழல் நலன்களுக்காகச் செய்யப்படுவது. அரசரிடமிருந்த செல்வத்தை ஏழைகளுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கச்செய்யும் ஒரு கருவியாக அது இருந்தது. குடிமக்கள், அவர்களுக்கு எந்தத் தேவை இருந்தாலும், அதைத் தானமாகப் பெற்றனர். நிலமில்லாதவர்கள் நிலத்தையும், வீடில்லாதவர்கள் வீட்டையும், பொன்னை விரும்பியவர்கள் பொன்னையும் பெற்றனர். அந்த யாகத்தினால் ஏற்பட்ட ஆன்மிகப் பலன்கள் எல்லை இல்லாதவை, அவை சமூகத்தின் ஆன்மிகச் சூழலை மேம்படுத்தப் பயன்பட்டன. இந்தக் காரணங்களாலேயே, விலங்குகளை யாகங்களில் பலியிடுவது ‘ஹிம்சை’யாகப் பார்க்கப்படவில்லை, ஏனெனில் இதனால் விலங்குகளும் நன்மையடைந்தன.
எனவே ஹிந்து சமயத்தைப் பொறுத்தவரை யாகத்தில் விலங்குகளைப் பலியிடுவது, பலியிடப்படும் விலங்குகளுக்கும் நன்மையளிப்பதால் அறமாகக் கருதப்பட்டது. அதே நேரத்தில், தோலுக்காகவும், மற்ற உபயோகங்களுக்காகவும் விலங்குகளை வளர்த்து பின் அவைகளைக் கொல்வது அதர்மமாகவே கருதப்பட்டது. ஏனென்றால் அதனால் விலங்குகளுக்கு எந்த நன்மையும் இல்லை.
முதலாவதாக, தொடரில் காட்டப்படுவது போல் வால்மீகி ராமாயணத்தில் அஸ்வமேத யாகம் நடைபெறவே இல்லை. வால்மீகியில் தசரதர் புத்திரர்களைப் பெறுவதற்காக புத்திரகாமேஷ்டி யாகத்துடன் அஸ்வமேத யாகத்தை செய்வதாக மட்டுமே உள்ளது. ஆனால் அவருக்கு புத்திரர்கள் பிறந்தபின் எந்த அஸ்வமேத யாகத்தையும் அவர் செய்யவில்லை.
இரண்டாவது, ராமன் பிறப்பதற்கு முன்னாள் தசரதர் செய்த அஸ்வமேத யாகத்தில் உண்மையான குதிரை பலி கொடுக்கப்படுகிறதே தவிர (1.14.32-36) குதிரையின் சிலை அல்ல.
மூன்றாவது, குதிரையை நிறுத்தி, கட்டிப்போடுபவர்கள் போர் தொடுக்க வேண்டும் என்ற நியதி தெரியாமல், சீதை குதிரையை நிறுத்துவதாகக் காட்டப்படுகிறது. இருந்தாலும், சீதையை ஒரு போராளியாக காண்பிக்கவேண்டும் என்பதற்காக இந்தக் காட்சி, தொடரில் புகுத்தப்பட்டுள்ளது.
நான்காவது, வால்மீகி ராமாயணம் ராமனை அறவழி நடப்பவனாக, அறத்தின் உருவாகக் கூறுகிறது. எனவே ராமனுக்கு குதிரையை யாகத்தில் பலியிடுவது, ஹிம்ஸையாக கருதப்படாது என்பது நான்கு தெரிந்திருக்கும். எனவே உண்மையான குதிரைக்குப் பதிலாக குதிரையின் சிலையை மாற்ற ராமன் ஆணையிடுவதாகக் கூறப்படுவது அடிப்படை இல்லாத விதண்டாவாதம். இந்த உண்மைகள் அறியாமல், இந்தத் தொடர் இடதுசாரி கருத்தாக்கங்களின் படி விலங்குகளின் உரிமைகளைப் பற்றிய சொற்பொழிவுகளை நிகழ்த்துகிறது !
ஐந்தாவது, இந்தத் தொடர் வசிஷ்ட முனிவர் அஸ்வமேத யாகத்தை நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு சடங்கு (‘பிரதா’) என்று கூறுவதாக சித்தரிக்கிறது. ஆனால், உண்மையில் அஸ்வமேத யாகம் ஒரு ‘பிரதா’ அல்ல. அது வேதங்களில் உள்ள, தர்மத்தின் அடிப்படையிலான ஒரு சடங்கு. எனவே அது ஒரு எளிய நம்பிக்கை என்று ஒதுக்க முடியாத ஒன்று. அரசர்கள் நாட்டு மக்களின் நன்மைக்குச் செய்யவேண்டிய கடமைகளில் ஒன்று அது. ஆனால், சில அற நூல்களைப் பொறுத்தவரை, கலியுகத்தில் விலங்குகளை யாகத்தில் பலியிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில், யாகங்களை முறைப்படி நடத்தி விலங்குகளை மேலான பிறவிகள் அடையச் செய்யக்கூடிய திறனாளர்கள் இன்று இல்லை. இருந்தாலும் ராமன் கலியுகத்தில் பிறக்கவில்லை. அவன் திரேதா யுகத்தைச் சேர்ந்தவன். அக்காலத்தில் வசிஷ்டர், ரிஷ்யசிருங்கர் போன்ற சிறந்த தவசீலர்கள் இருந்தனர். அவர்கள் கடினமான யாகங்களை உலக நன்மைக்காகச் செய்வதில் வல்லவர்கள்.
மொத்தத்தில், அஸ்வமேத யாகத்தைப் பற்றி தொடரில் காண்பிக்கப்படும் நிகழ்வுகள் ஹிந்து சடங்குகளை திரிப்பதற்காகவும் விலங்குகளின் உரிமைகளைப் பற்றிய இடதுசாரி முற்போக்குக் கருத்துகளை திணிப்பதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இங்கே கவனிக்க வேண்டியது, இடதுசாரி விலங்குரிமைக் கருத்துக்கள் ஹிந்து சடங்குகளின் போது மட்டும் எழுப்பப்படுகிறது மற்ற சமயங்களில் அல்ல என்பதை. (பீப் பார்ட்டிகள் ஞாபகம் இருக்கிறதா?)
அதன்பின், பிருகதாரண்ய உபநிஷத்தில் யாஞ்யவல்கியருக்கும் கர்கிக்கும் இடையேயான பிரம்மத்தைப் பற்றிய உரையாடல், இங்கே காதலைப் பற்றிய விவாதமாகக் காட்டப்படுகிறது. அதுபோல், கர்கியும் அவளைப் பற்றி சுநயனா (ஜனகருடைய மனைவி) பேசுவதும் கர்கிக்கு அக்காலத்தில் இருந்த மரியாதைக்கு நேர்மாறாக உள்ளது. அடுத்து ராட்சதர்கள், பழங்குடி மக்களாகக் காட்டப்படுகிறார்கள். இது காலனியாட்சியின்போது சில மேல்நாட்டு அறிஞர்களால் பரப்பப்பட்ட கருத்தாகும். ஹிந்து மரபுப்படி ராட்சதர்கள் மனிதர்களிடமிருந்து மாறுபட்டவர்கள். எனினும், ராம -லட்சுமணர்களுக்கும் மாரீசன்- சுபாகு தலைமையிலான ராட்சதர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தம், அரசர்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையே நடைபெறுவதாகக் காட்டப்படுகிறது ! இந்தத் தொடரை உருவாக்கியவர்களுக்கு ஆரியப் படையெடுப்பு தொடர்பான கதைகளின் தாக்கம் அதிகம் இருந்திருக்கும் போல!
ஜனகருக்கும் அவர் மனைவிக்கும் சீதையின் கல்வியைப் பற்றிய உரையாடல் ஒன்று நடைபெறுகிறது. அதில் சீதைக்குக் கல்வி அளிப்பதைப் பற்றி அவள் அன்னை மிகுந்த கவலை கொள்கிறாள். சீதை கல்வி கற்றால், திருமணத்திற்குப் பிறகு பல துன்பங்களை சந்திக்க நேரிடும் என்று கூறுகிறாள். இதுவும் தற்கால பெண்கல்வியைப் பற்றிய கருத்தாக்கங்களை ராமாயணத்தில் திணிக்கும் ஒரு முயற்சி.
இங்கே தரப்பட்டுள்ள நிகழ்வுகள் ஒரு மாதிரிதான். இது போன்று பல நிகழ்வுகளும் காட்சிகளும் தொடரில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை தற்கால சமூக விழுமியங்களை ராமாயணத்தில் திணிப்பது, உண்மைகளைத் திரிப்பது, பொய்களை ஜோடிப்பது.
மொத்தத்தில், ‘சீதையின் ராமன்’ ராமாயணத்தையும் ஹிந்து சடங்குகளையும் ஒட்டுமொத்தமாகக் கேலி செய்கிறது. ஆனால், அது இந்தத் திரிபுகளுக்கும் கேலிகளுக்கும் தார்மீகப் பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குரியது.
இந்தத் தொடர், மத நம்பிக்கைகளை புண்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதல்ல என்ற பொறுப்புத் துறப்புடன் தொடங்குகிறது. ஆனால், தொடர் செய்வது அதைத்தான். வால்மீகி ராமாயணத்தின் கூறப்பட்டுள்ளவற்றை மாற்றுவது, அதில் இல்லாத நிகழ்வுகளைப் புகுத்துவது மற்றும் முக்கியமாக ஹிந்து சடங்குகளை சிறுமைப் படுத்தி இடதுசாரி-முற்போக்குக் கருத்தாக்கங்களை ராமாயணத்தில் புகுத்துவது போன்றவற்றை செய்கிறது இத்தொடர்.
தொடரை உருவாக்கியவர்களின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால், தற்போதைய பிரச்சனைகளுக்கு சில தீர்வுகளை போதிக்க அவர்கள் விரும்பினால் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ போன்ற ஒரு புதிய புராணக்கதையை அவர்கள் தயாரித்திருக்கலாம். ஆனால், மீண்டும் மீண்டும், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் குறுக்கு வழியில் சென்று வரலாறு அல்லது புராணப் பாத்திரங்களின் அடிப்படையில் டிஆர்பிக்காக தொடர்களை உருவாக்குகின்றனர். அவற்றில் மருந்துக்குக் கூட வரலாறு அல்லது புராண உண்மைகள் இருப்பதில்லை. இது ஏற்கனவே ஜோதா அக்பர் தொடரில் நிகழ்ந்தது. இப்போது ‘சியா கே ராம்’ தொடரில் நிகழ்கிறது.
வால்மீகி ராமாயணத்தில் பொதிந்திருக்கும் அறக் கோட்பாடுகளைக் கற்றுத் தரும் ஒரு நல்ல முயற்சியாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டிருக்கலாம். அது பொது மக்களுக்கு பேருதவி புரிந்திருக்கும். ஆனால், தொடரின் தயாரிப்பாளர்கள் ஹிந்து மதத்தை சிறுமைப் படுத்தவும் நவீன இடதுசாரி-முற்போக்குக் கருத்துகளை பரப்பவும் இதைப் பயன்படுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள் போலும்.
இது ராமாயணத்தையும் ஹிந்து சமயத்தையும் கேலி செய்வதில்லை என்றால், வேறு எது?