
“திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் தன்னுடைய குறட்பாக்களில் ஒவ்வோர் அதிகாரத்திலும், தான் எடுத்துக்கொண்டுள்ள கருத்துப்பொருட்களை விளக்கும்போது, உபதேசங்களாகச் சொல்லிக் கடைசியில் தன் கருத்தை ஆணையாக இடுவார். சம்ஸ்க்ருதத்தில் “உபதேஷா” மற்றும் “ஆதேஷா” என்று கூறுவர். அதாவது குருவானவர், தன் சீடர்களுக்கு நல்லமுறையில் உபதேசங்களைக் கூறிவிட்டுக் அவர்கள் கேட்காத நிலையில் கண்டிக்கும் விதமாக உத்தரவிடுவதைப் போல, திருவள்ளுவர் நமக்குப் பல கருத்துகளைத் தன் குறட்பாக்கள் மூலம் விளக்கியுள்ளார்” என்று கவிமாமணியும் விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் முதல்வருமான பேராசிரியர் வ.வெ.சுப்பிரமணியம் கூறினார்.
The most common drugs taken as a part of the levitra cost of cost of. I have had an clomid price in india online Elizabeth City allergic reaction and my sinus has been runny with mucus and redness. In other countries it must be obtained by prescription.
So, you can take in the best movie the world can offer with the imax® experience at the imax® experience! Vibramycin cost is an additional therapy prescribed price for clomiphene citrate to patients afflicted with bacterial infections, such as pneumonia, urinary tract infection and endocarditis. The dapoxetine 60 price in india effects of the drug are usually mild and short-lived.
Q.how come i’m allergic to the medication given to me by my doctor. In march 2008, researchers found that the dopamine agonists, which are usually prescribed for parkinson’s patients, did https://upstagetheatre.com/manage not increase the risk of suicidal thoughts in this group. It is very important to use an easy to use test for screening patients with diabetes and high blood pressure.
வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூலைப் பற்றிய கருத்தரங்கு சென்ற 08-01-2018 திங்கட்கிழமை அன்று, மயிலை பாரடிய வித்யா பவன் சிற்றரங்கில் நடந்தது. அந்தக் கருத்தரங்கில் மேற்கண்டவாறு தலைமை உரையாற்றிப் பேசினார் பேராசிரியர் வ.வெ.சு.
அவர் மேலும் பேசுகையில், “திருக்குறளில் கூறப்பட்டிருப்பது வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்திரங்களின் கருத்துக்கள் தான் என்பதைச் சொல்லத் தைரியம் வேண்டும்; அதை நூலாகவும் கொண்டுவரக் கூடுதல் தைரியம் வேண்டும். அது டாக்டர் நாகஸ்வாமியிடம் இருக்கின்றது. அறத்துப்பால் குறட்பாக்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களை, பிரம்மச்சாரி விரதம், கிரஹஸ்த விரதம், சன்யாஸம் என்று மூன்று வகையாகப் பிரித்திருப்பது அருமையான வகைப்படுத்தல். மேலும், ‘அகர முதல எழுத்தெல்லாம்…’ என்று ஆரம்பிக்கும் கடவுள் வாழ்த்து அதிகாரத்தை “அக்ஷராப்யாசம்” என்று வகைப்படுத்தியிருப்பது அற்புதம். பிரம்மச்சரிய விரதம் அக்ஷராப்யாஸத்தில் தான் ஆரம்பிக்கிறது.”
“அதைப் போலவே அடுத்ததாக “வான்சிறப்பு” அதிகாரர்த்தை “பிக்ஷாவந்தனம்” என்று விளக்கியிருப்பது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இவ்விடத்தில் தைத்ரிய உபனிஷத் சொல்வதைச் சுட்டிக் காட்டி அதையே வள்ளுவரும் கூறுவதை உறுதி செய்கிறார் நாகஸ்வாமி. அதாவது பிரம்மச்சரிய விரதத்தில் கல்வி கற்க ஆரம்பித்தவுடன், உணவின் முக்கியத்துவமும் மாணவனுக்குக் கற்றுவிக்கப்படுகிறது. அவன் குருகுல வாழ்வில் ஆசிரியருடன் இருந்தாலும், தன்னுடைய உணவுக்காகப் பிக்ஷைக்குத்தான் போக வேண்டும். ஆகவே அன்னம் என்றால் என்ன, அது எவ்வாறு உண்டாகின்றது, போன்றவற்றை அவன் தன் அனுபவித்திலேயே உணர்ந்துகொள்கிறான். அன்னம் உருவாக நீர் காரணமாகின்றது. நீரை மழை தருகின்றது. பிரம்மச்சரிய விரதத்தில் கல்வியுடன் கூடவே நீர், அன்னம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவன் அறிந்துகொள்ள வேண்டும் என்பதால், அக்ஷராப்யாசத்துக்கு அடுத்ததாக பிக்ஷாவந்தனம் கூறப்படுகிறது. அதையே வள்ளுவரும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான்சிறப்பு என்று வைத்தார்.”
“அதைப்போலவே தான் அடுத்த அதிகாரமான நீத்தார் பெருமையும். இங்கே உலகத்தைத் துறந்தவர்கள் என்பதைவிட, ஒழுக்கத்தின்பாற் தங்களை ஈந்தவர் என்கிற வகையில் ‘ஒழுக்கத்து நீத்தார்’ என்று கொள்வதே சரி. ஆகவே, நீத்தார் பெருமை என்கிற அதிகாரத்தை ஆசாரமாகக் கொண்டு, பிரம்மச்சரிய விரதம் மேற்கொள்பவர்கள் தங்களை ஒழுக்கத்தின்பாற் அளித்திட வேண்டும் என்று உறுதி செய்கிறார்.”
இவ்வாறாக, வேதங்களிலும் தர்ம சாஸ்திரங்களிலும் கூறப்பட்ட கருத்துப் பொருட்களின் சாரங்களைப் பிழிந்து திருக்குறளில் திருவள்ளுவர் கொடுத்துள்ளதை நன்றாக ஆய்வு செய்து, திறம்பட எழுதியுள்ளார் டாக்டர் நாகஸ்வாமி. இந்நூலைப் படித்து, இதன் கருத்துக்களை தமிழ் கூறும் நல்லுலகிற்கு எடுத்துச் செல்வது நம் கடமையாகும்” என்று கூறித் தன் தலைமை உரையை நிறைவு செய்தார் பேராசிரியர் வ.வெ.சு.

முன்னதாக அறிமுக உரை வழங்கிய டாக்டர் நாகஸ்வாமி, பின்வருமாறு பேசினார்.
“நமது வேத கலாச்சாரத்தின் சாரத்தைத் தருகின்ற நூலாக ஒரு புரட்சிகரமான பார்வையுடன் திருக்குறளை அணுகி எழுதப்பட்டுள்ள நூல் இது. நமது தர்ம சாஸ்த்திரம், அர்த்த சாஸ்த்திரம், நாட்டிய சாஸ்த்திரம், காம சாஸ்த்திரம் ஆகியவற்றின் கருத்துப் பொருட்கள் திருக்குறள் எங்கும் நெடுக உள்ளன. நமது ஹிந்து தர்மத்தின் அடிப்படைகளான நான்கு புருஷார்த்தங்களாகிய தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் ஆகியவற்றில் முதல் மூன்றான தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை “த்ரிவர்கம்” என்கிற ஒற்றைக் கோட்பாடாகக்கருதி முறையே அறம், பொருள் ம்ற்றும் காமம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது”
“வள்ளுவரின் குறள் நமது வர்ணாஸ்ரமத் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிராம்மண, க்ஷத்ரிய, வைஸ்ய மற்றும் சூத்திர வர்ணத்தவரின் வாழ்க்கை முறை, மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றைப் பற்றிப் பல குறட்பாக்களில் பேசும் திருவள்ளுவர், நான்கு ஆஸ்ரம தர்மங்களான பிரம்மச்சர்யம், கிரஹஸ்தம், வானப்ரஸ்தம், சன்யாஸம் ஆகியவற்றைப் பற்றியும் முதல் தொகுதியான அறத்துப்பாலில் பேசுகிறார். தேவர்கள், ரிஷிகள் மற்றும் பித்ருக்களுக்குச் செய்யும் தர்ப்பணம் பற்றியும், பஞ்ச மஹா யக்யங்கள் என்று சொல்லப்படுகின்ற ஐந்து வகையான யாகங்கள் பற்றியும் பேசுகிறார்.”
“தர்ம சாஸ்த்திரங்களைக் கருத்துப் பொருளாக மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக வரிசைப்படுத்தியும் எழுதியுள்ளார் திருவள்ளுவர். பொருட்பாலில் அந்தணர் நூலாகிய வேதங்களைப் பற்றியும் தர்ம சாஸ்த்திரங்களைப் பற்றியும் குறிப்பிட்டு, மன்னர்கள் அவற்றைப் பின்பற்றுவதே கடமை என்று சொல்லும் விதத்தில்,
‘அந்தணர் நூலுக்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்’
என்றும்,
‘ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூற்மறப்பர்
காவலன் காவான் எனின்’
என்றும் திருவள்ளுவர் தெளிவாக அறுதொழில் புரியும் அறவோரான அந்தணர்களின் நூல்களான வேதங்கள் மற்றும் தர்ம சாஸ்த்திரங்கள் சொல்படி செங்கோல் செலுத்துவதே மன்னரின் கடமை என்று நிலைநிறுத்துகிறார். இதையே தான் புறநானூறு (35) ‘அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறை’ என்று கூறுகிறது.”
“மன்னரைப் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் தர்ம சாஸ்த்திரங்களைக் குறிப்பிடும் திருவள்ளுவர், கருணை, தயை, உறுதி, அறம் என்று மனு நீதியின் ராஜ தர்மத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து நற்பண்புகளின் மொத்த உருவமாக மன்னனைக் காட்சிப்படுத்துகிறார். ‘அமைச்சர்’ பற்றி அவர் விவரிப்பது நமக்கு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்க மன்னர்களின் செப்புப் பட்டயங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல அமைச்சர்களை நினைவூட்டுகிறது.”
“காமத்துப்பால் தொகுதியில் திருவள்ளுவர் களவு மற்றும் கற்பு என்று இருவகையாகப் பிரித்துக்கொண்டு, நாட்டிய சஸ்த்திரம் மற்றும் வாத்ஸ்யாயனரின் காம சூத்திரம் ஆகியவற்றிலிருந்து குறிப்புகளை எடுத்தாள்கிறார். தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், த.பொ.மீனாட்சிசுந்தரம், டாக்டர்.மு.வரதராசனார், ஆகியோர் காமத்துப் பால் தொகுதியை ‘நாடக வழக்கு’ என்றே குறிப்பிடுகின்றனர்.”
“பிராகிருத மொழியில் தம்மபதா என்று ஒரு நூல் உள்ளது. இது புத்தரின் உபதேசங்களை உள்ளடக்கியது, பௌத்த தர்மத்தைப் பின்பற்றுபவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றிப் பேசும் நூல். இதையும் இந்நூலில் காட்டியுள்ளேன். மேலும் புத்தர் பிராம்மணர்களுக்கு உயர்ந்த நிலையைக் கொடுத்து உபதேசித்துள்ள ‘பாம்மண வக்கோ’ (பிராம்மண வர்கம்) பற்றியும் ஒரு அத்தியாயத்தைச் சேர்த்துள்ளேன். ஆனால், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் பிராம்மணர்கள் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்தப் பிராம்மண துவேஷத்தின் அர்த்தமற்ற தன்மையை தம்மபதா பற்றிய அத்தியாயத்தைப் படிக்கையில் புரிந்து கொள்ளலாம். ஜி.யு.போப், லஸாரஸ், போன்றவர்களின் மொழியாகத்தையும் ஆங்காங்கே குறிப்பிட்டு, அவை எவ்வளவு பற்றாக்குறையுடன் இருக்கின்றன என்பதைப் பரிமேலழகரின் உரையுடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன்.”
“இறுதியாக, வேத, உபநிடத, தர்ம சாஸ்த்திரங்களின் சாரங்களைத் தமிழில் குறட்பாக்களாகத் தொகுத்து வழங்கும் திருவள்ளுவர், மனு, யாக்யவல்கியர், கௌதமர், ஆபஸ்தம்பர், போதாயனர், பராசரர், வசிஷ்டர் போன்ற மஹரிஷிகள் வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் ஆவார். திருவள்ளுவர் வைதீக தர்ம மார்க்கத்தைத் தமிழில் எளிமையாக வழங்கியுள்ளதே திருக்குறள் என்கிற உண்மை எழுகின்றது. திருக்குறளைத் தொடர்ந்து வாசிக்கும் அன்பர்களின் திருக்குறள் பற்றிய பார்வையை இந்நூல் மாற்றும் என்று பரிபூரணமாக நம்புகிறேன்”
பேராசிரியர் வ.வெ.சுவைத் தொடர்ந்து அகில இந்திய வானொலியின் சென்னை மையத்தின் முன்னாள் இயக்குனர் கலைமாமணி டாக்டர் சேயோன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திருவள்ளுவரைப் போற்றும் விதமாக ஒரு பாடலுடன் தன் உரையைத் தொடங்கிய டாக்டர் சேயோன், தாம் நடத்திவரும் மயிலைத் திருவள்ளுவர் சங்கத்தின் பல ஆண்டுகால சேவைகளைப் பற்றிய சிறு அறிமுகத்தையும் கொடுத்தார்.
அவர் தன்னுடைய உரையில், “டாக்டர் நாகஸ்வாமி அவர்களின் இப்பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது. திருக்குறளில் திருவள்ளுவர் நமது வேத, தர்ம சாஸ்த்திரங்களின் கருத்துப்பொருட்களைக் கையாண்டுள்ளார் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத் தெளிவாகவே தொகுத்தளித்துள்ளார் டாக்டர் நாகஸ்வாமி. குறிப்பாகப் பொருட்பாலில், மன்னரின் அட்சி முறைப் பற்றியும் செங்கோல் பற்றியும் பேசுமிடங்களில் எல்லாம் திருவள்ளுவர் அர்த்த சாஸ்த்திரத்தையும் தர்ம சாஸ்த்திரங்களையும் குறிப்பிட்டே பேசுகிறார். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் தமிழ் இலக்கிய உலகில் இந்நூல் நிச்சயம் ஒரு தாக்கத்தை உண்டாக்கும். இதன் மூலம் திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றிய ஆய்வும் விவாதங்களும் மேலும் தொடரும். தமிழ் இலக்கிய உலகு நன்மை பெறும்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் பேசினார். தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மாநிலத் தலைவரும் ‘ஹிந்து மித்திரன்’ பத்திரிகையின் ஆசிரியருமான திரு.ஆர்.எஸ்.நாராயணஸ்வாமி அவர்கள் கடைசி நேரத்தில் கருத்தரங்கில் கலந்துகொள்ள இயலாத காரணங்களால் அவர் சார்பாகக் கலந்து கொண்டார் பி.ஆர்.ஹரன். அவர் தன்னுடைய வழ்த்துரையில், டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் நுலில், திருக்குறளை கிறிஸ்தவ மயமாக்கும் காலனிய முயற்சியைப் பற்றி ஒரு அத்தியாயம் எழுதியுள்ளதைக் குறிப்பிட்டு, கிறிஸ்தவ மிஷனரிகள் தமிழகத்துள் நுழைந்த 15-ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழகத்தைக் கிறிஸ்தவ மயமாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டார்கள் என்றார். அவர்கள் மதமாற்றம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு, மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காகவே தமிழ் மொழியையும் கற்றுக்கொண்டனர்; தமிழ் இலக்கியங்களைத் தங்களுடைய கிறிஸ்தவ இலக்கிய கருத்தாக்கங்களுக்கு ஏற்றவாறு மொழியாக்கம் செய்தனர்; மேலும் கலாச்சாரக்களவு (Inculturation) மூலம் பெரிதும் மதமாறத்தில் ஈடுபட்டனர்; என்று கூறினார்.
தன்னை ரோமானிய பிராம்மணர் என்று சொல்லிக்கொண்ட ரோமானியப் பாதிரி ராபர்ட்-டி-நொபிலி, இத்தாலிய முனிவர் என்று சொல்லிக்கொண்ட கான்ஸ்டண்டைன் ஜோஸப் பெஸ்கி என்கிற வீரமாமுனிவர், ஜெர்மானிய ஐயர் என்று சொல்லிக்கொண்ட பார்த்தலோமியோ ஸீகன்பால்கு, ஜி.யு.போப் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகள் எவ்வாறு தமிழ் மொழியையும், சில தமிழ் நூல்களையும் கற்றுக்கொண்டு அதன் மூலம் விவிலியத்தைத் தமிழில் கொண்டுவந்துப் பெரிதும் மதமாறத்தில் ஈடுபட்டனர் என்றும், தாமஸ் கட்டுக்கதையை உருவாக்கி எவ்வாறு திருவள்ளுவரைக் கிறிஸ்தவர் ஆக்கவும், திருக்குறளைக் கிறிஸ்தவ நூலாக ஆக்கவும் முயன்றனர் என்றும், அம்முயற்சி இன்றும் தொடர்வதைப் பற்றியும் விவரித்துப் பேசினார். டாக்டர் நாகஸ்வாமியின் உழைப்பும் பங்களிப்பும் போற்றப்பட வேண்டும் என்று கூறிய பி.ஆர்.ஹரன், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைவருக்கும், குறிப்பாக அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தொல்லியல் அறிஞரும் இந்திய தொல்லியல் துறையின் முன்னாள் கண்காணிப்பாளருமான டாக்டர் சத்தியமூர்த்தி அவர்கள், தன்னுடைய வாழ்த்துரையில், டாக்டர் நாகஸ்வாமியுடனான தன்னுடைய துறை ரீதியான தொடர்பைக் குறிப்பிட்டுச் சிலாகித்துப் பேசினார். தன்னுடைய தொல்லியல் அனுபவத்தையும், தமிழ், சம்ஸ்க்ருதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தனக்குள்ள ஆளுமையையும் நன்றாகப் பயன்படுத்தி இந்நூலை அவர் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டார். அவர் மேலும், தொழில்நுட்பம் அசுரத்தனமாக வளர்ந்து வரும் இக்காலத்தில் அடுத்த தலைமுறையினருக்கு மற்ற நெடிய இலக்கியங்களை விட, குறுந்தகவல் (SMS) போன்று விளங்கும் திருக்குறளை எளிதாகக் கொண்டு செல்ல முடியும். அந்த விதத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்நூல் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், திருக்குறள் போன்ற ஒரு தமிழ் இலக்கியத்தின் மீது அவர்களுடைய ஈடுபாட்டை அதிகரிக்கும் விதத்திலும் இருக்கும், என்றார்.

இறுதியாக, எதிர்பாராமல் எழுந்தருளிய ஊரன் அடிகள் அவர்களுடைய அருளாசியுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. சொந்த வேலையாக பாரதிய வித்யா பவனுக்கு வந்தபோது, டாக்டர் சேயோன் மூலம் நிகழ்ச்சி பற்றி அறிந்து கலந்துகொண்டதாகக் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய ஆசியுரையில், தமிழகத்தில் சம்ஸ்க்ருதம் எவ்வாறு அவமதிக்கப்படுகிறது என்பதையும், அன்னியர்கள் தமிழ் பங்களிப்பு செய்திருந்தாலும் அவர்களின் நோக்கம் மதமாற்றம் தான் என்பதையும் விளக்கிப் பேசினார். இன்றைய காலகட்டத்தில் டாக்டர் நாகஸ்வாமியின் இந்த நூல் மிகவும் தேவையானது என்று கூறினார்.
காஞ்சி பரமாச்சாரியார் ஸ்ரத்தாஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
கருத்தரங்கு நடந்த அன்று (08-01-18 – மார்கசிர கிருஷ்ணபக்ஷ துவாதசி) மாலை, பாரதிய வித்யா பவனும் வேத பாட நிதி அறக்கட்டளையும் இணைந்து, காஞ்சி முனிவர் பரமாச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு, அவரது ஆராதனை தினத்தை முன்னிட்டு, பாரதிய வித்யா பவனின் பிரதான அரங்கில் “ஸ்ரத்தாஞ்சலி” நிகழ்ச்சி நடத்தின. காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் முன்னின்று ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சியை நடத்தினார்.
மாலை 5.30க்குச் சரியாகத் தொடங்கிய நிகழ்ச்சியில், வேத பண்டிதர்களின் வேதபாராயணத்துடன் காஞ்சி பரமாச்சாரியாரின் திருவுருவப் படத்திற்குப் பூஜை செய்யப்பட்டு, தீப ஆராதனை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வரலாற்று ஆசிரியரும், தொல்லியல் ஆய்வாளரும், இலக்கிய எழுத்தாளருமான முன்னாள் தமிழகத் தொல்லியல் துறையின் இயக்குனர் டாக்டர் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “THIRUKKURAL – An Abridgment of Sastras” என்கிற நூலும், அவருடைய மகன் திரு.மோகன் நாகஸ்வாமி அவர்கள் எழுதியுள்ள “Samadarsan” என்கிற நூலும், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அருளாசிகளுடன், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டன.
நூல் வெளியீடு, தேவாரத் திருப்பதிகப் பாடலுடன் தொடங்கியது. ஆச்சாரிய ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு, வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசிய டாக்டர் நாகஸ்வாமி அவர்கள், வெளியிடவிருக்கின்ற இரு நூல்களைப்பற்றியும் அறிமுக உரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஆச்சார்ய ஸ்வாமிகள் இரு நூல்களையும் வெளியிட, முதல் பிரதிகளை ‘கிரி டிரேடர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர் பெற்றுக்கொண்டார்.
அடுத்ததாக, தமிழ்நடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனர் தலைவர் திரு, வேதாந்தம் ஜி அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில், டாக்டர் நாகசாமியின் புத்தகத்தைக் குறித்துப் பாராட்டிப் பேசினார். அவர் பேசுகையில், “டாக்டர் நாகசாமி அவர்கள் தன்னுடைய ‘திருக்குறள் வேத சாரம்’ என்ற புத்தகத்தைத் தமிழ்நாட்டின் இன்றைய சூழ்நிலையில் துணிவோடு வெளியிடுவதற்கான காரணம் அவரிடம் இருந்த ஆதாரங்களே ஆகும். தமிழும் சமஸ்கிருதமும் நம் நாட்டில் இணைந்தே இருந்து வந்துள்ளன. இப்பொழுது நிலவும் பிரிவினைகள் எல்லாம் ஆங்கிலேயர்கள் செய்த சதி. ஆதலால், இப்படியான மாயையிலிருந்து விலக இந்தப் புத்தகம் உதவும். இந்தப் புத்தகத்தை மிகவும் பாடுபட்டுக் கொண்டு வந்துள்ள டாக்டர் நாகசாமிக்கு நன்றியும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறித் தன் உரையை முடித்தார்.
அடுத்ததாக, நாடாளுமன்றத்தின் மாநிலங்கள் அவை உறுப்பினர் திரு இல கணேசன் அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில், “இன்று ஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் நினைவு தின நிகழ்ச்சி அதில் வள்ளுவர் பற்றிய புத்தக வெளியீட்டு விழா. இருவருக்கும் என்ன சம்பந்தம் என்றால் இருவருமே வைகாசி அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தவர்கள். இது பல ஆராய்ச்சிகளின் வாயிலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நாம் தேசம் முழுவதும் வேறுபட்டாலும் அனைத்து மொழிகளிலும் ஒற்றுமை இருக்கிறது. அதனால் இந்த ‘அகர’ என்ற சொல்லே பாரத தேசத்திற்குத் தான் பொருந்தும், இந்தப் புத்தகம் கடுமையான விமர்சனங்களைப் பெறும் என்று திரு. வேதாந்தம்ஜி அவர்கள் கூறியதை நானும் வழிமொழிகிறேன். ஆனால் அந்த விமர்சனத்தாலேயே இந்தப் புத்தகம் அமோகமாக விற்பனை ஆகும் என்று கூறி அனைவருக்கும் நன்றி பாராட்டி ஸ்ரீ பெரியவாளுக்கு நமஸ்காரத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தன் உரையை முடித்தார்.
அடுத்ததாக, முன்னாள் IG திரு. C.L.ராமகிருஷ்ணன் IPS அவர்கள் ‘சமதரிசனம்’ என்ற புத்தகத்தைக் குறித்துப் பேசினார். அவர் தன் உரையில், “நிறைய தமிழ் புத்தகத்திலிருந்தும், வேதம் மற்றும் வேதாந்தம், உபநிஷத் போன்றவற்றிலிருந்தும் மேற்கோள்கள்களை எடுத்துக்காட்டி அவற்றுக்கு விளக்கம் கொடுத்து இருக்கும் ஒரு விரிவான புத்தகம் இது. இந்தப் புத்தகத்தை ஒரு முறை படித்தால் போதாது; பல முறைகள் படித்தால் தான் நமக்கு லாவகம் கிடைக்கும்” என்று கூறி தன் உரையை முடித்தார்.
அடுத்ததாக வாழ்த்துரை வழங்கிய தமிழக ஆளுனரின் முன்னாள் செயலாளர் திருமதி கரியாலி IAS அவர்கள், “திருக்குறளுக்கு டாக்டர் நாகசாமி ஒரு புதிய கண்ணோட்டத்தைக் கொடுத்துள்ளார். அவர் நிறைய ஆதாரங்களுடன் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். அவர் மகன் மோகன் நாகஸ்வாமி எழுதியுள்ள சமதரிசனம் என்ற புத்தகத்த்தின் சாரமானது, கடவுள் என்பவர் எப்படி அனைவரையும் ஒன்று போல் பார்க்கிறாரோ, அது போல் நாமும் அனைத்தையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்பதாகும், என்று நான் புரிந்து கொண்டுள்ளேன்” என்று கூறிப் பாராட்டித் தன் உரையை நிறைவு செய்தார்.
அடுத்ததாக, வேத பாட நிதி அறகட்டளையின் அறங்காவலர் திரு.சரபேஸ்வரன் அவர்கள், “இந்த வேத பாட நிதி டிரஸ்ட் 1983ல் பரமாச்சார்யாரால் ஆரம்பிக்கப்பட்டது. திரு.நானி பல்கிவாலா அவர்கள் இந்த டிரஸ்டின் முதல் சேர்மனாக இருந்தார். இந்த டிரஸ்ட்டின் நிறுவனர் TVS group லேட். T.சந்தானம் என்பவர். இந்த டிரஸ்ட்டின் நோக்கம் ஏதாவது ஒரு வேத சாகையை அத்யயனம் செய்து கொண்டு நமது புராதன கலாச்சாரத்தைப் பின்பற்றி வாழ்ந்து வரும் வேத பண்டிதர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு நன்மதிப்பு கொடுத்து மரியாதை செய்து வருவதாகும். அதன்படியே, அவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிதியுதவி செய்து வருகிறோம். 60வயதிற்கு மேற்பட்ட 150க்கும் மேற்பட்ட வேத பண்டிதர்களுக்கு நிதியுதவி செய்து வருகிறோம். இப்படிப்பட்ட வேத பண்டிதர்கள் இறந்து விட்டால் அவர்களின் அந்திம காரியங்களான 13 நாட்கள் காரியங்களுக்கும் உடனடியாக நிதியுதவி செய்து வருகிறோம். இதற்கு எங்களுக்கு பாரதிய வித்யா பவனும் மிகவும் உடந்தையாக இருந்து உதவுகிறது.” என்றார்.
திரு. நாகசாமி அவர்கள் வருகைப்புரிந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடைகள் போர்த்தி மரியாதை செய்தார்.
நிறைவாக அனுக்ரஹம் செய்த காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், தன்னுடைய அருளாசியில், “மார்கசிர கிருஷ்ணபக்ஷ துவாதசி அன்று ஸ்ரீ மஹாபெரியவாளின் ஆராதனையைப் பக்தி பூர்வமாகவும், வைதீக முறைப்படியும் பல இடங்களில் நடத்தி வருகிறார்கள். பலவிதமான சேவைக் காரியங்களும் அவர் அருளால் நாடு முழுவதும் நடந்து வருகின்றன. அந்தச் சேவைக் காரியங்களும் தொடரவேண்டும்; அவருடைய ஆராதனையும் தொடரவேண்டும். ஆச்சார்யாளின் அனுக்ரஹத்துடன் அனைத்தும் நடந்தேற வேண்டும்” என்றார்.
அவர் மேலும், “ஸ்ரீ மஹாபெரியவா, சாஸ்திரங்களையும், சரித்திரத்தையும் காப்பாற்றி சரித்திரம் படைத்தவர். திருக்குறளின் பெருமைகளைப் பற்றியும் அவர்கள் தன்னுடைய உபன்யாசங்களில் சொல்லி இருக்கிறார்கள். 100 ஆண்டுகளுக்கும் மேலாக, தர்மத்திற்கு அரணாக விளங்கி, தர்மசாஸ்திரத்தில், உள்ள சந்தேகங்களை நீக்கி அனைவருடைய பார்வையிலும் தர்மசாஸ்திரத்தை விளக்கி, வெளி நாட்டவர்களுக்கும் அருள் புரிந்து அனுகிரகித்துள்ளார். இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் ஆசியும், பெரிவாளின் அனுக்கிரஹமும் கிடைக்கட்டும்” என்று கூறி பக்தர்களுக்கு அனுக்கிரஹ பாஷணம் அருளி, பிரசாதமும் வழங்கினார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, திருவள்ளுவரை அனைத்து விதமான அரசியலிலும் ஈடுபடுத்துகின்றனர். அவரை சமணர் என்றும் கிறிஸ்தவர் என்றும் முத்திரை குத்தும் முயற்சியில் மத அரசியலிலும், அவருடைய பிறப்பை ஆய்வு செய்கின்ற முயற்சியில் ஜாதி அரசியலிலும், அவருடைய பிறந்த தினத்தைக் குறித்துப் பொது அரசியலிலும் ஈடுபடுத்துகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆட்சியாளர்களாக இருந்துகொண்டிருக்கும் திராவிட இயக்கத்தினர், தமிழ் என்கிற பெயரில் திருவள்ளுவரை வெற்று அரசியலுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கின்றனர் என்பது கசப்பான உண்மை. இவர்களால் திருவள்ளுவருக்கோ, திருக்குறளுக்கோ, தமிழக மக்களுக்கோ எந்தப் பயனும் கிட்டவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை. மேலும் பிராம்மண துவேஷத்தையும் சம்ஸ்க்ருத வெறுப்பையும், வேத தர்ம சாஸ்த்திர மறுப்பையும் கொள்கைகளாகக் கொண்டுள்ள திராவிட இயக்கம் திருவள்ளுவரையும் திருக்குறளையும் தொடர்ந்து சீரழிக்க முயன்று வரும் காலகட்டத்தில் டாக்டர் நாகஸ்வாமியின் இந்தப் புத்தகம் மகத்தான சேவை என்பதில் ஐயமில்லை.
இப்புத்தகம் அவசியம் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு, இதில் உள்ள விஷயங்கள் அனைத்தும் தமிழ் கூறும் நல்லுலகில் பரப்பப்பட வேண்டும் என்பதே நமது அவா.