எழுமின் விழிமின் – 26

இந்த பாரதத்தில் எப்பொழுதும் அதே பழைய சிவபிரான் உடுக்கையை ஒலித்துக்கொண்டே இருப்பார். அன்னை காளி மிருக பலியுடன் வழி படப்படுவாள். அன்பிக்கினிய கிருஷ்ணன் புல்லாங்குழலை வாசித்தே வருவான். கிறிஸ்தவ பாதிரியோ, வேறு பாதிரியோ என்னதான் முயன்றாலும் அவர்களை அகற்ற முடியாது. அவர்களை உங்களால் சகிக்க முடிய வில்லை என்றால் தொலைந்து போங்கள்… பாரதத்தின் மேல் வகுப்பு மக்களே! உங்களுக்கு உயிர் இருக்கிறதா? நீங்கள் சிந்திக்கிறீர்களா? பதினாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய மம்மி சவம் போல் இருக்கிறீர்கள். ‘நடமாடும் அழுகல் சவங்கள்’ என்று உங்கள் மூதாதையர்கள் வெறுத்து ஒதுக்கினார்களே, அப்படிப்பட்ட மக்களிடையேதான்…

View More எழுமின் விழிமின் – 26

வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்

அமெரிக்காவின் சிக்காகோ நகரிலுள்ள சிக்காகோ ஆர்ட் இன்ஸ்டியூட் உலகின் மிக பெரிய கலைக்கூடங்களில் ஒன்று. 1893ல் சுவாமி விவேகானந்தர் “அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என்ற வரலாற்று சிறப்பு வாய்ந்த சொற்பொழிவை நிகழ்த்தியது இந்த இடத்தில் தான்… முதல் படியில் துவங்கும் முதல் வரியின் வார்த்தைகளை படித்து கொண்டே ஏறும் நாம் இரண்டாம் தளம் அடையும் போது முழு உரையையும் படித்து முடிக்கிறோம்… “அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்…”

View More வரலாற்று வாசகங்களை சொல்லிய வாசற்படிகள்

நரேந்திரர் வழியில் நாளைய இந்தியா

எனது கனவு பதவியோ அதிகாரமோ அல்ல, பாரதத்தை மீண்டும் உலகின் குருவாக ஆக்கிட வேண்டும் என்ற சுவாமிஜியின் கனவே என் கனவும்… விவேகானந்தரை வைத்து மோடி அரசியல் செய்கிறார் என்று புலம்புகிறார்கள் ஒரு சாரார். அதில் என்ன தவறு?…. கடந்த பத்தாண்டுகளில் 80,000 புதிய வகுப்பறைகளையும், 22000 கம்ப்யூட்டர் பரிசோதனை சாலைகளையும் அரசுப் பள்ளிகளில் குஜராத் மாநில அரசு நிறுவியுள்ளது. ..காங்கிரஸ் காரர்கள் நரேந்திர மோடி மீது வைக்கும் அதிக பட்ச ஊழல் ’குற்றச் சாட்டு’ அவரிடம் 200க்கும் மேற்பட்ட ’குர்தா’க்கள் இருக்கின்றன என்பது தான்… அம்மாநில உழவர்களின் பூரித்த முகங்களும், தரிசு நிலமாகக் காய்ந்து கிடந்த கட்ச் பாலைவனம் முழுதும் இன்று சாலைகளின் இருமருங்கிலும் அலையடிக்கும் பசுமையுமே…

View More நரேந்திரர் வழியில் நாளைய இந்தியா

எழுமின் விழிமின் – 24

கிறிஸ்து இன்றி கிறிஸ்தவ சமயமும், முகம்மது நபியின்றி முகம்மதிய சமயமும், புத்தரின்றி புத்த சமயமும் நிற்க முடியாது. ஆனால் ஹிந்து சமயம் எந்த ஒரு மனிதனையும் சாராமல் சுதந்திரமாக நிற்கிறது… முகம்மதிய ஆட்சியின் போது வடபாரதத்தில் தோன்றிய இயக்கங்களெல்லாம், படையெடுத்து வென்ற ஆக்கிரமிப்பாளரின் சமயத்தைப் பொதுமக்கள் கைக்கொள்ளாதபடி அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற பொதுவான ஒரே லட்சியத்துடன் எழுந்தவையே ஆகும்… மராட்டியர் அல்லது சீக்கியர் இவர்களின் சாம்ராஜ்யத்துக்கு முன்னோடியாக எழுந்த ஆன்மிக அபிலாஷையானது எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது…

View More எழுமின் விழிமின் – 24

எழுமின் விழிமின் – 22

“ஒவ்வோர் இயக்கமும் தனக்கே உரிய ஒரு சிறப்புத் தன்மையினால் வெற்றி அடைகிறது. அது வீழ்ச்சி அடையும் போதே பெருமைக் குரிய அதே சிறப்புத் தன்மை அதனுடைய பலவீனத்துக்கும் முக்கியமான காரணமாக ஆகி விடுகிறது. புத்த பகவான் – மாந்தருள் மாணிக்கம், அசாதாரணமான ஒற்றுமை நிர்மாண சக்தி வாய்ந்தவர். இதன் மூலம் அவர் உலகமே தம்மைப் பின்பற்றும் படி செய்தார். ஆனால் அவரது சமயம் மடாலயத் துறவு வாழ்க்கை நிலையை அடிப்படையாகக் கொண்ட சமயமாகும். ஆகையால் இந்த சமயத்தில் பிக்ஷுவின் ஆடையைக் கூட மதித்துப் போற்றும் ஒரு தீய விளைவு ஏற்பட்டது. மடாலயங்களில் துறவியர் கூட்டம் கூட்டமாகக் கலந்து வாழும் முறையை முதன்முதலில் புத்தரே ஏற்படுத்தினார். ஆனால் அந்த மடங்களில் ஆண்களை விட பெண்களுக்குத் தாழ்ந்த நிலை தராமலிருக்க அவரால் முடியவில்லை. மடத்துத் தலைவிகள் எவ்வளவு உயர்ந்தவரானாலும் சில ஆண்தலைவர்களது அனுமதியின்றி எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஏற்பாடு தற்காலிகமாக புத்த சமயத்தின் ஒற்றுமையை உறுதிப் படுத்தியது என்றாலும் அதன் நீண்ட கால விளைவுகள் குறை கூறிக் கண்டிக்கத் தக்கதாகி விட்டன!”

View More எழுமின் விழிமின் – 22

எழுமின் விழிமின் – 21

”சுவாமிஜி! இவர்கள் எந்த ஜாதியினரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்?” என்று நான் துணிந்து கேட்டேன். ”நம் மதத்தில் மீண்டும் சேருகிறவர்கள் தங்கள் சொந்த ஜாதியையே பெறுவார்கள். புதியவர்கள் தங்களுக்குரிய ஜாதிகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்” …எங்கே உனது நம்பிக்கை? எங்கே உனது தேச பக்தி? கிறிஸ்தவப் பாதிரிகள் உங்கள் கண்ணெதிரிலேயே ஹிந்து மதத்தைத் தூற்றுகிறார்கள். அப்படியிருப்பினும் உங்களில் எத்தனை பேர்களுக்கு அந்த அநீதி சகியாமல் இரத்தம் கொதிக்கிறது? எத்தனை பேர் அதனைப் பாதுகாப்பதற்காக வரிந்து கட்டி நிற்கப் போகிறீர்கள்?….

View More எழுமின் விழிமின் – 21

எழுமின் விழிமின் – 19

கடந்த ஆயிரம் ஆண்டுகளாக எவை எவை நம் இனத்தைப் பலவீனப்படுத்துமோ அவற்றுக்கெல்லாம் நாம் இடங்கொடுத்து விட்டோம்… நாம் வேண்டுவது சக்தி. சக்தி, ஒவ்வொரு முறையும் சக்தியே வேண்டும். உபநிடதங்கள் சக்திக்குப் பெரும் சுரங்கமாகும். உலகம் முழுவதற்கும் வீரம் அளிக்கப் போதுமான அளவு சக்தி இதற்கு உண்டு… தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உலகியல் செல்வம் வேண்டுமென்றால் அத்வைதத்தின் மூலம் வேலை செய்யுங்கள். அது உங்களை வந்து அடையும். நீங்கள் அறிவிற் சிறந்த மேதாவியாக ஆக விரும்பினால் அத்வைதத்தை அறிவுத் துறையில் உபயோகியுங்கள். அறிவிற் சிறந்த மேதையாவீர்கள்…

View More எழுமின் விழிமின் – 19

[பாகம் 13] திருப்பராய்த்துறை வருகை

ஊட்டி மக்கள் சிறு சிறு ஹட்டிகளில் வசித்து வந்தார்கள். சுவாமி எல்லா ஹட்டிகளுக்கும் சென்று சிறு சிறு கதைகளைக் கூறி அம்மக்களுக்கு அருளுரை கூறி வந்தார். சிலநேரங்களில் பகவத் கீதை வகுப்பு நடத்தினார். அந்த கால கட்டத்தில் பேருந்து வசதி, மின்விளக்கு வசதிகள் கிடையாது. ஹட்டி மக்கள் பகலில் தோட்ட வேலைக்கு சென்று விடுவார்கள். அவர்கள் தோட்ட வேலைக்கு செல்வதற்கு முன்பு அவர்களுக்கு அருளுரைகள் சென்று சேர வேண்டும். ஆகையால் கடுங்குளிரில் காலை 4 மணிக்கே கால்நடையாக மலையின் ஏற்ற இறக்கங்களையயல்லாம் கடந்து சென்று ஹட்டி மக்களுக்கு அருளுரை ஆற்றி வந்தார். தமிழ்நாட்டில் மூலை முடுக்கு எங்கும் ஸ்ரீராமகிருஷ்ண இயக்கம் பரவ வேண்டும் என்ற எண்ணத்தை சுவாமி சித்பவானந்தர் உள் வாங்கிக் கொண்டார். ஆகவே இந்தப் பணியைச் செய்ய ஓர் இடத்தில் ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க வேண்டும் என்று ஆழ்ந்து ஆலோசிக்கலானார். பிறகு வழக்கம் போல் தவத்தில் ஈடுபடலானார். தாம் எண்ணியபடி ஒரு ஸ்தாபனம் அமைக்கத் தகுந்த இடம் அவர் கண்களில் பட்டது. அதுதான் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மணிவாசகர் ஆகிய மூவரால் பாடப்பட்ட, தாருகாவன ரிஷிகள் தவம் செய்த இடமான திருப்பராய்த்துறை ஆகும். காவிரியின் தென்கரையில் இவ்வூர் இருந்தது..

View More [பாகம் 13] திருப்பராய்த்துறை வருகை

எழுமின் விழிமின் – 17

முதன்முதலில் நமது இளைஞர்கள் பலம் உடையவர்கள் ஆக வேண்டும். சமய உணர்ச்சி அதற்கு பிறகு வரும். எனது வாலிப நண்பர்களே! பலம் உள்ளவர்களாக இருங்கள். நான் அளிக்கக் கூடிய புத்திமதி இதுதான். நீங்கள் கீதையைப் படிப்பதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். நான் தைரியமாகவே கூறுகிறேன். உங்களுக்கு இவற்றைச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது; ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன். உங்களது கைகால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால் கீதை உங்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும். உங்கள் உதிரத்தில் சக்தி இருந்தால் ஸ்ரீகிருஷ்ணனுடைய பலமிக்க மேதாவிலாசத்தையும், பராக்கிரமத்தையும் உங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உங்கள் உடை உங்களது கால்களின் மீது உறுதியாக நிமிர்ந்து நிற்க நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படும் போது உபநிடதங்களின் தத்துவங்களையும் ஆத்மாவின் மகத்துவத்தையும் நன்றாக அறிந்துணர முடியும்.

View More எழுமின் விழிமின் – 17

எழுமின் விழிமின் – 16

பாரதத்தின் ஜனத் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு முஸ்லீம்களாகி விட்டார்கள். ஏற்கனவே கிறிஸ்தவர்கள் ஜனத் தொகை பத்து லட்சத்துக்கும் அதிகமாகி விட்டது. யாருடைய குற்றம் இது?… நம் தேசிய வாழ்க்கையாகிற உடல் பலவீனப்படும் பொழுது தான் பலவித நோய்க் கிருமிகளான கருத்துகள் நமது மக்களினத்தின் அரசியல் துறையில், சமூகத் துறையில், அறிவுத் துறையில் பெருங்கூட்டமாக நுழைந்து நோயை உண்டாக்குகின்றன… நமது சமயம் சமையலறை மதமாகி விடக்கூடிய அபாயம் இருக்கிறது… குறைபாடுகளை எவ்வளவு விரைவில் ஒழிக்கிறோமோ அவ்வளவுக்கு நமது கொள்கைகள் அதிகமான பிரகாசத்துடன் ஜொலிக்கும்…

View More எழுமின் விழிமின் – 16