பூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு

பூமி, உன்னிடமிருந்து எதைத் தோண்டினாலும் அது விரைவில் வளரட்டும்.
உனது இதயத்தையும், மர்மஸ்தானங்களையும் நாங்கள் சேதப் படுத்தாதிருப்போமாக…
ஆழ்ந்த கவித்துவமும், ஆன்மிகமும் ததும்பும் மொழியில், இன்றைக்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், புவிநேசர்களும் கூறும் சூழலியல் கருத்தாக்கங்களுடன் இயைவதாக வேத ரிஷிகளின் இந்தக் கவிதை விளங்குகிறது என்றே சொல்லலாம்.

View More பூமி சூக்தம் – பூமிக்கு வேதத்தின் பாட்டு

புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!

இங்கிலாந்தில் பலர் தங்களது வீடுகளுக்கு வெளியே பறவைகள் உண்ண தான்யங்களை கொடுக்கும் பறவை உணவுக் கூடுகளை (bird-feeders) வைத்திருக்கிறார்கள். இந்த வழக்கம் புதிய பறவை இனங்களை தோற்றுவித்திருக்கிறது என்று அறியலாய்வாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்… இந்து மதத்தின் ஆன்மீகம் அறிவியலுக்கு எதிரானதல்ல. தாவரங்கள், விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியவற்றுக்கும் பொதுவாக நமது ஆன்மீகம் இருக்கிறது. நாம் வந்த பாதை நீண்ட நெடியது.

View More புதிய பறவை இனம் – பரிணாமவியலின் இன்னொரு வெற்றி!

சோமபானம் என்னும் மர்மம்

இந்திய ஆன்மிக அனுபவம் என்பதை போதை என்பதாக மட்டுமே காணும் ஐரோப்பிய இனமையப் பார்வையையும் இங்கு காணலாம். மேலும் ஆரிய-படையெடுப்புக் கோட்பாட்டாளர்களுக்கு இந்தியாவுக்கு முழுக்க முழுக்க அன்னியமானதான ஒரு தாவரத்தைக் கண்டடைய வேண்டிய அவசியமும் இருக்கிறதென்பது விஷயத்தை இன்னும் சிக்கலாக்குகிறது…. ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டுக்கு நவீன ஆராய்ச்சி அளித்துள்ள மற்றொரு அடி.

View More சோமபானம் என்னும் மர்மம்

பச்சை பச்சையாகச் சில விஷயங்கள்

நமக்குப் பொதுவாக கிடைக்கும் சித்திரம் உலகெங்கும் பரவிய மேற்கத்திய நாகரிகத்தின் பிரதிநிதிகள் ஆங்காங்குள்ள செடிகொடிகள் விலங்குகளை ஆராய்ந்து அவற்றினை ஒரு அறிவியல் முறைப்படிப் பாகுபடுத்தி அந்த வகைப்படுத்தல் அறிவியலை உலகெங்கும் பரப்பினர் என்பதுதானே? … அறிவியல் வரலாற்றாசிரியர் க்ரூவின் கணிப்புப்படி தாவரவியல் ஆராய்ச்சியாளர் லின்னயஸ் இந்தியப் பகுப்பு முறையின் அடிப்படையிலேயே ஏறக்குறைய 240 தாவரங்களை தனித்தனியான தாவர இனங்களாக பாகுபடுத்த முடிந்தது… ஒவ்வொரு தாவரத்தையும் குறித்த தகவல்கள் அவற்றின் மருத்துவப் பயன்பாடுகள் செய்யுள் வடிவத்தில் மலபார் பகுதி ஈழவர்களால் தெரிவிக்கப்பட்டன. இவற்றுள் சில செய்திகள் மிகத் தொன்மையான பழஞ்சுவடிகளிலிருந்து வந்தவையாக இருந்தன. இந்தத் தாவரத் தொகுப்பியல் ஐரோப்பாவில் வெகுவாகப் பரவியது… “தாவரவியலின் இலக்கணம் குறித்து எழுதிய ஜான் ரே (John Ray) வான் ரீட்டினை வாசித்திருந்தார் என்ற போதிலும் உயிரினம் (species) குறித்த அறிவினை அவரிடம் சேர்த்த ஈழவர்களின் பங்களிப்புக்கு அவர் முக்கியத்துவமும் அளிக்கவில்லை…”

View More பச்சை பச்சையாகச் சில விஷயங்கள்