வன்முறையே வரலாறாய்…- 33

ஒரு முஸ்லிம் அவனால் கைப்பற்றப்பட்ட எந்தவொரு காஃபிர் அடிமைப் பெண்ணுடனும் உடலுறவு கொள்ளலாம். அவள் திருமணமானவளாக இருந்தாலும் கூட.. நம்பிக்கையாளன் அடிமைகளைப் பிடிக்கவும், அவர்களை அடிமைகளாக வைத்துக் கொள்ளவும் அல்லா அவனுக்கு அளவற்ற சுதந்திரத்தை வழங்குகிறான்… 1070-ஆம் வருடம் பஞ்சாபின் மீது படையெடுத்த இன்னொரு கஜ்னாவி சுல்தானான இப்ராஹிம் ஏராளமான செல்வங்களைக் கொள்ளையிட்டதுடன், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட அடிமைகளைப் பிடித்து அவர்களை கஜினிக்குக் கொண்டு சென்றான் என தாரிக்-இ-அல்ஃபி மற்றும் தபாகத்-இ-அக்பாரி புகழ்ந்துரைக்கிறது… 1398ம் வருடத்திய தில்லிப் படையெடுப்பைத் தொடர்ந்து தைமூரின் படைகள் வட இந்தியா முழுவதும் கொலை வெறியாட்டமிட்டன.. தைமூர் ஏறக்குறைய 25 இலட்சம் வரையிலான இந்து அடிமைப் பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து மத்திய ஆசியாவிற்குக் கொண்டு சென்றான் என்று வரலாற்று ஆசிரியர்கள் மதிப்பிடுகிறார்கள்..

View More வன்முறையே வரலாறாய்…- 33

வன்முறையே வரலாறாய்… – 2

இந்திய ஹிந்துக்கள் ஒருபோதும் இஸ்லாமிய மதத்தின் மீது எந்தவிதமான மதிப்போ அல்லது மரியாதையோ உடையவர்களாக இருந்ததில்லை என்பதனையே காட்டுகிறது. தங்களால் இயன்ற அளவிற்கு இஸ்லாமிய மதத்திலிருந்து வெளியேறி ஹிந்துக்களாக மாறவே அவர்கள் பெருவிருப்பம் கொண்டிருந்தனர். இடைக்கிடையே மதவெறி குறைந்த இஸ்லாமிய ஆட்சியாளர்கள் வருகையில், இஸ்லாம் இந்தியாவில் தாழ்ந்தும், ஹிந்துமதம் மேலோங்கியும் இருப்பதையே வரலாற்றின் பக்கங்களில் காணலாம். இந்த உண்மை இஸ்லாமிய வரலாற்றாசிரியர்களாலேயே கூட கசப்புடன் ஒப்புக் கொள்ளப்படுவதனையும் காணலாம். “காஷ்மீரில் நடந்த கட்டாய மதமாற்றங்கள் காரணமாக ஏறக்குறைய 95 சதவீத ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்கள் தங்களின் பழைய ஹிந்து மத பழக்க வழக்கங்களையே தொடர்ந்து பின்பற்றி நடந்து வந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் கூட, கஷ்மீரின் பெருவாரியான முஸ்லிம்கள தாங்கள் மீண்டும் ஹிந்து மதத்திற்குத் திரும்ப விருப்பமுடையவர்களாக இருப்பதாக அவர்களின் ஹிந்து அரசரிடம் கேட்டுக் கொண்டனர்” என்று எழுதுகிறார் ஜவஹர்லால் நேரு.

View More வன்முறையே வரலாறாய்… – 2

வன்முறையே வரலாறாய்… – 1

“அமைதி மார்கமென” அறியப்படுகிற இஸ்லாம் பரவியது அமைதிவழியிலா அல்லது வாள் முனையிலா என்பது என்றும் நிலவும் ஒரு விவாதக் கருப்பொருள். M.A. Khan அவர்கள் இஸ்லாம் பரவியது வாள் முனையிலேயே என்று தகுந்த ஆதாரங்களுடன் நிருபிப்பதுடன், கலாச்சாரத்திலும், கல்வியிலும், செல்வத்திலும் மிக, மிக முன்னேறி இருந்த இந்தியா போன்ற நாடுகள் எவ்வாறு இஸ்லாமியர்களால் சின்னாபின்னப்படுத்தப்பட்டன், படுத்தப்பட்டுக் கொண்டிருகின்றன என்பதனைவும் மிக விளக்கமாக அவரது புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். இஸ்லாமிய ஆக்கிரமிப்புகளின் போது, இந்திய மக்கள் மிக மிக அபூர்வமாகவே, விருப்பத்துடன் தங்களை இஸ்லாமியர்களுடன் இணைத்துக் கொண்டார்கள் என்பதே உண்மை. தொடர்ந்து ஹிந்து ஆண்கள் போரிட்டு மடிய, அவர்களின் பெண்களும், குழந்தைகளும் அடிமைகளாகப் பிடிக்கப்படுவதுவே தொடர்ந்து நடந்து வந்தது. சிற்சில இடங்களை முஸ்லிம் படைகள் எளிதாகக் கைப்பற்றியதற்கான காரணம், இவர்களின் ஈரமற்ற, காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டு அருவருப்புற்று, போரிடுவதைத் தவிர்த்ததாலேயே நிகழ்ந்தது.

View More வன்முறையே வரலாறாய்… – 1