போதிசத்வரின் இந்துத்துவம் – 1

பாபா சாகேப் அம்பேத்கரை ஒரு இந்துத்துவ சார்புடையவராக சொல்வது போல கடும் கண்டனத்துக்கு ஆளாகக் கூடிய விசயம் வேறெதுவும் ‘மதச்சார்பற்ற’ இந்தியாவில் இருக்க முடியாது… அந்த கண்டனங்களுக்கு அப்பால், அம்பேத்கரின் ஒட்டுமொத்த சமூக-தத்துவ சிந்தனைகளின் அடிப்படையில், அவரது மனமண்டலத்தில் இந்துத்துவம் குறித்த கருத்துகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எப்படி அறிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காண்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்… ’பிரதியெடுக்க இயலாத பண்பாட்டு ஒற்றுமை’ என பாரதத்தின் பண்பாட்டு ஒருமையை அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.. இந்து சீர்திருத்த போராளிகளான வீர சாவர்க்கர், சுவாமி சிரத்தானந்தர் ஆகியோரிடம் மிக்க அன்பும் வெளிப்படையாக பாராட்டும் மனமும் கொண்டிருந்தார் பாபா சாகேப்…. ”இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்துக்கோ மதம் மாறுவது ஒடுக்கப்பட்ட மக்களை தேசியத்தன்மை இழக்க வைத்துவிடும்” என்கிறார். அம்பேத்கர் ஹிந்து சிவில் சட்டத்தின் வரைவில் இந்துக்களை வரையறை செய்யும் போது வீர சாவர்க்கரின் வரையறையின் தாக்கத்தையே அதில் காண்கிறோம்…

View More போதிசத்வரின் இந்துத்துவம் – 1

கானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்

இந்தக் கோவிலில் பிராத்தனை பாடல் பாடி வழிபாட்டுக்காகக் காத்திருப்பவர்களில் யாரும் இந்தியர் இல்லை. அவர்களுக்கு இந்திய மொழி எதுவும் தெரியாது. அதுமட்டுமில்லை அவர்களில் பலர் இந்தியாவையயே பார்த்ததில்லை. பின் எப்படி இந்த கோவில்?

View More கானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்

மதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை

இவருக்கு ஓய்வு என்பதில்லை. ஒரு சினிமாவுக்கு, ஒரு டிராமாவுக்கு, ஒரு விளையாட்டுக்கு, ஒரு சுற்றுலாவுக்கு என்று எங்குமே இவரால் போக முடியாது. மதுரையை விட்டு ஒரு நாள் கூட தன் சொந்த வேலைகளுக்காக நேரம் செலவழிக்க இயலாது. 24 மணி நேரமும், 365 நாட்களும் ஓய்வின்றி எந்தவித ஒப்பந்தமும் இல்லாத ஒரு கடமைக்கு, ஆதரவற்ற சமூகத்தின் ஒரு சேவைக்காகத் தன் இளமை, வருமானம், நேரம், மகிழ்ச்சி, குடும்பம் என்று அனைத்தையுமே இந்த இளைஞர் தியாகம் செய்துள்ளார். உலகம் முழுவதும் சுற்றி வரும் திறமையான படிப்புப் பெற்றும் உள்ளூரில் சேவை செய்யும் உன்னதமான ஒரு தியாகத்தை தன் வாழ்க்கைப் பணியாகத் தேர்வு செய்துள்ளார்.

View More மதுரையிலும்கூட மலரும் மனித மல்லிகை

இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!

இந்து என்ற சொல்லில் மனிதநேயத்தின் அத்தனை கூறுகளும் அடங்கியுள்ளன. இந்த மனித நேயமே இந்து ஒவ்வொருவருக்கும் பெருமையளிப்பது. ஆனால், இந்த “இந்து” என்ற சொல்லை போலி-செக்யூலர் வியாதிகளும் இந்து விரோத சக்திகளும் ஒரு தீண்டத்தாகத வார்த்தையாக மாற்றிவிட்ட ஒரு பெரும் அவலம் இப்போது நிலவுகிறது. இந்த அவல நிலை புற்று நோய்போல் எல்லா இந்தியர்களையும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் சுயநல லாபத்திற்காகவும் ஆட்டிப்படைக்கிறது.

View More இந்து என்று சொல்லடா !! தலை நிமிர்ந்து செல்லடா !!!

அலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து

அமெரிக்க இசை கலைஞரும் சனாதன தருமத்தின் ஆன்மிக இசை பாரம்பரியத்தின் மூலமும் நாடு, இன மத பேதமின்றி உலக அமைதிக்காக உழைத்தவருமான இந்த பெண் கலைஞரினை உலக நன்மைக்கு உழைத்த இந்துக்கள் வரிசையில் தன் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் தமிழ்இந்து.காம் பெருமை அடைகிறது.

View More அலைஸ் கால்ட்ரோன் – உலக அமைதிக்காக உழைத்த இந்து