தமிழும், வேதாந்தமும், நம்மாழ்வாரும்

நம்மாழ்வாரின் சாதனைதான் நமது வியப்புணர்ச்சியையெல்லாம் விஞ்சி நிற்பது. காரணம் அவரது காலத்தில் அவர் எதிர்கொண்ட சூழ்நிலைகள் வினோதமானவை. சங்கப் புலவரின் சாதனையான இலட்சியக் காதலைக் கடவுள்பால் கொண்ட காதலுக்கான பக்திமொழியாகவும், பக்திக்கான காதல் இலக்கணமாகவும் கையாண்டு வெற்றி கண்டவர் அவர். எப்படி பக்திக்கு அகத்திணையைக் கையாண்டார்கள்? திருவாய்மொழியில் தோழிப் பாசுரம், தாய்ப்பாசுரம், மகள் பாசுரம் என்று வரும். இந்தத் தோழி, தாய், மகள் இவர்கள் யார்?….

View More தமிழும், வேதாந்தமும், நம்மாழ்வாரும்

பொருனைக்கரை நாயகிகள்

தோழி! என் நெஞ்சம் செங்கனி போன்ற வாயழகில் தன்னை மறந்தது. என் இதயமோ திருமுடிக்கு ஆட்பட்டு விட்டது. சங்கு சக்ரதாரியான அவன் கண்களால் வலைவீசி என்னைப் பிணித்து விட்டான். நானும் அவ்வலையில் அகப்பட்டுக் கொண்டேன். நாளும் விழாக்கள் நடைபெறும் தென்பேரை நாயகனான நிகரில் முகில்வண்ணனிடம் என் நெஞ்சத்தை பறிகொடுத்து என் நாணத்தையும் இழந்துவிட்டேனே!

View More பொருனைக்கரை நாயகிகள்

அச்சுதனின் அவதாரப்பெருமை – 4

தன்னடியார்களுக்குக் காட்சிதரும் பொருட்டு அவதாரம் எடுக்கக் கிளம்பி, வழியிலே கொடியோர்களைத் தண்டித்தல் என்னும் முக்கியமான காரியத்தையும் செய்து முடிக்கிறான் கண்ணன் […] “கீதை உபதேசம் செய்தான்”, “கர்ம யோகத்தையும் ஞான யோகத்தையும் அர்ஜுனனுக்கு விளக்கினான்”, “கடினமான உபநிடத அர்த்தங்களை எடுத்துக் கூறினான்” என்றெல்லாம் ஆழ்வார்கள் அவ்வளவாகப் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அவனுடைய குழந்தைப் பருவ விளையாட்டுகளிலேயே மெய் மறந்து பாசுரம் பாசுரமாகப் பாடியுள்ளனர்.[…]

View More அச்சுதனின் அவதாரப்பெருமை – 4

அழகு கொஞ்சும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்

ஆழ்வார்கள் என்ற சொல்லிற்கு ‘எம்பெருமானின் கல்யாண(மங்கல) குணங்களில் ஆழுங்காற்பட்டவர்கள்’ என்று பொருள் கூறுவர். என்னைக் கொண்டு தன்னைப் பாடுவித்தான்’ என்று ஆழ்வார்கள் சொல்லுதலால் இப்பாசுரங்கள் ‘அருளிச்செயல்கள்’ என்றும் திவ்விய பிரபந்தம் என்றும் சேவித்துப் போற்றப்படுகின்றது.கடினமான ஒரு மதத்தை பாகவதமதமாக சுலபமான நெறியாக மாற்றிய சிறப்பும் ஆழ்வார்களைச் சார்ந்ததே.

View More அழகு கொஞ்சும் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள்