ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10

இயக்கம் என்றாலே வெளிப்படுவது, அல்லது சக்தியின் தொழில் என்றாகிவிடுகிறது. அதனால் சக்தியிடம் சரண் புகுவதே சரியான வழி. சரணடைந்ததால் சக்தி போல் ஆகி ‘சித்’தாகிய இறைவனை அடைந்து, பேரின்பப் பெருவெள்ளமாகிய ஆனந்தத்தை அறிவுடன் இருக்கும் நிலையில் உணரலாம்… அருள் தரும் பராசக்தி ஒன்றே என்றாலும் காணப்படும் இயற்கைத் தோற்றங்களை ஒட்டி, பெண் தெய்வங்களையும் அந்த முனிவர்கள் கண்டார்கள். தன்னை அறிவதே அறியப்படும் அனைத்திலும் முதன்மையானது என்பதால் அறிவை வழங்கும் பரம்பொருளாகச் சரஸ்வதியைக் கருதினார்கள்…

View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 10

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9

“மனமற்ற நித்திரையில் தினம் அனுபவிக்கும் சுபாவமான அச்சுகம்” என்று ரமணர் குறிப்பிடுவது சோமனின் துளிகள் பெருகி வெள்ளமாக நம்முள் ஓடும் அந்த நிலையைத் தான். தினந்தோறும் அது நம்முள் ஓடுவதை நாம் அறியாவிட்டாலும், அதை நன்கு அனுபவித்துக்கொண்டு சுகமாக உறங்கிக்கொண்டிருக்கிறோம். அதை ஏன் அப்போது மட்டுமே நாம் அனுபவிக்கிறோம் என்றால், அந்த நிலையில் மட்டுமே நாம் மனம் அற்று இருக்கிறோம். அதாவது எந்த விதமான எண்ணங்களின் குறுக்கீடுகளும் இல்லாமல், இருப்பதை அது இருக்கும்விதமாக மட்டுமே அனுபவித்து, ஆனந்தமாகத் தூங்குகிறோம். அப்போது ‘நான்’ என்றோ ‘எனது’ என்றோ எண்ண வைக்கும் அகங்காரம் நமக்கில்லை. அதனால் ‘பிறர்’ என்ற வேறுபாடும் கிடையாது. அந்த நிலையில், இருக்கும் பிரம்மமான ஒன்றை உள்ளூற உணர்வதால், சோம வெள்ளம் பிரவாகமாக ஓடி நம்மை ஆனந்த நிலையில் அப்போதைக்கு நிறுத்திவைக்கிறது….

View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 9

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8

ஞானக் கண்ணால் மட்டுமே உணரக் கூடிய ஞானச் சூரியன், மற்றும் ஊனக் கண்ணால் காணக் கூடிய ஊனச் சூரியன் இரண்டையும், அவைகளின் தன்மைகளைக்கொண்டு, சூரியனின் இருவேறு முகங்களாக ரிக் வேதம் வர்ணிக்கிறது. ஊனச் சூரியன் உதிப்பதால் உலகின் பல வளங்கள் செழிப்பதற்குக் காரணமாய் இருப்பதாலும், அது இன்னார்க்குத்தான் என்றில்லாமல் எவர்க்குமே தன் சக்தியை அளிப்பதாலும், அதை அனைவரின் ஆப்த நண்பனாக உருவகித்து மித்ரன் என்றழைத்தனர். ஞான சூரியன் உதிக்கும்போது, அது அனைவர்க்கும் பரம ஆனந்தத்தை அளிப்பதுடன், ஓர் உயிருடன் வேறு உயிர்களைப் பிரித்துப் பார்க்கும் தன்மையையும் களைந்தெடுத்து, சீவராசிகள் அனைத்தும் பரவலான ஓரினமே என்று காட்டுவதால் அதை வருணன் என்றழைத்தனர்…

View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 8

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7

இந்திரன் என்ற சொல்லில் இருந்து வந்ததுதான் இந்திரியங்கள் என்ற சொல்லாடலும். நமது பஞ்ச இந்திரியங்கள் வெளிமுகமாக நோக்கினால், நாம் உலகியலில் ஈடுபடுவோம். அவ்வாறான வெளிப்புற நோக்கை அடக்கி, அதை உண்முக நோக்கிற்கு அதனைப் பழக்கப் பழக்க, உலகைப் பற்றிய உண்மைகளும் தெரியவரும். மனத்தின் உண்மை சொரூபமும் தெரியவரும். .. நம் உலகியல் சிந்தனைகளும், அதையொட்டி நடக்கும் செயல்களும் மனத்தின் கண் குவிந்துள்ள வாசனைகளால் உந்தப்பட்டு நடைபெறுவதால், அவை அனைத்துமே நம் உண்மை சொரூபம் பற்றிய அறியாமையால் விளைந்தவை ஆகும். அந்த அறியாமையைப் போக்க இந்திர சக்தியால் வளரும் ஆன்ம அறிவு ஒன்றால் மட்டுமே முடியும். ..

View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 7

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6

வெளியுலகில் அக்னி வளர்த்து செய்யப்படும் ஹோம யக்ஞங்கள், நம் உள்ளத்தளவில் புத்தியின் மூலம் நம்மையே தியாகம் செய்யும் அளவுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிய ஒரு குறியீடுதான். அதில் முதன்மையானது உலகியலில் “நான்” என்னும் எண்ணம் அழியும் வகையில் நமது சிந்தனை-சொல்-செயல் மூன்றும் ஒன்றாகச் செயல்படுவது. அப்போது மட்டுமே, “தான்” எனும் தெய்வீக உணர்வு எஞ்சி நிற்கும். அந்த நிலை கிட்டினால் மட்டுமே, நம்மைச் சுற்றியுள்ள எதுவும் வேறுபட்டதல்ல, அனைத்தும் ஒன்றே என்ற உண்மை உணரப்படும்… அவ்வாறு உணர்ந்ததாலேயே, இதை விளக்கிக் கூறிய ரிஷி, அந்த நிலையில் தான் “அனைத்து உலகின் நண்பன்” என்ற அர்த்தம் தரும் வகையில், விஸ்வாமித்திரர் என்று தன் பெயரை வைத்துக்கொண்டார்…

View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 6

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5

அதாவது கடவுள் எனும் தத்துவம் எங்கோ மறைந்து, காணமுடியாத இடத்தில் இருப்பதாகவோ, ஏதோ சில ரிஷிகளின் கற்பனையில் உதித்த உருவகங்களாகவோ எண்ணுவது தவறானது. அவை அனைத்துமே நமது தினசரி அனுபவங்களின் அடிப்படையிலும், இயற்கையில் காணப்படுபவைகளையும் ஒட்டியே உருவானவைகள்… ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ள நான்கு கடவுட்களும், இருக்கும் ஒரு பிரம்மத்தின் நான்கு முகங்களே என்பதால் பிரம்மனுக்கு நான்முகன் என்றொரு பெயரும் உண்டு. அவை அனைத்தும் ஒன்றா என்று கேட்டால் அதுவும் சரியே எனலாம்…

View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 5

ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4

இருளில் இருந்து ஒருவன் விழித்து எழும் தருணமான அதிகாலை வேளையை அவர்கள் “உஷஸ்” என்று குறிப்பிட்டு, அதற்கு ஒரு தனி மகத்துவத்தையும் அளித்தனர். ஏனென்றால் அனைத்து உயிர்களும் அறியாமையில் மூழ்கி இருந்தாலும், வேற்றுமையை மறந்து அப்போது அவர்கள் அனைவரும் ஒரே நிலையில் இருக்கும் அந்த உறக்க நிலையில் இருந்து மாறி, உலக இயல்பின் படி தங்களின் வேற்றுமைகளை விழிப்பு நிலையில் காணப் போவதன் முதல் படி அது. அப்படி என்றால் நமது உண்மை நிலை எது? அனைத்தும் ஒன்றே என்று பார்ப்பதா? அல்லது வேற்றுமைகளைக் காண்பதா? ….

View More ரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4

இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்

இரண்டுமே பொய் என்றால், முதலில் சொன்னது போல இரமணரின் வழிக்கு சேதமில்லை, ஆனால் கிறித்துவம் குப்பையில் சேரும். இரண்டுமே உண்மை என்றால், இந்த அற்புதம் கிறித்துவத்துக்கு மட்டுமே உரித்தது அல்ல, ஆக கிறித்துவின் வழி மட்டுமே வீடு பெற வழி என்னும் கிறித்துவ வாதம் பெரும் பொய் என்று ஆகும்… கிறித்துவத்திற்கு என்று சொந்தமாக எந்த தத்துவமோ, கிரியை, சரியை, யோகம் சார்ந்த கலைகள் என்றோ எதுவும் கிடையாது. எல்லாமே பிறரிடம் சுரண்டிய சரக்கு தான். ஏன்  கிறிஸ்துமஸ் கூட திருடிய கொண்டாட்டம் தான். ‘பாவிகளே’ என்று எல்லோரையும் கூறுவது மட்டுமே சொந்த சரக்கு. ஆக, முழுதும் இயேசுவின் அதிசய பிறப்பு இறப்பு மீட்பு என்பதை மட்டுமே சார்ந்த மதம். அது அவருக்கு மட்டுமே உரித்தான தனிப்பட்ட அதிசயம் இல்லை என்றானால் ‘டப்பா டான்ஸ் ஆடிவிடும்’, ஆகவே தான் இளையராஜாவின் அந்த பதிலுக்கு இத்தனை எதிர்ப்பு…

View More இளையராஜாவின் இரமண அனுபவங்களும் இரு மரணஅனுபவங்களும்

இயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே

இயேசு உயிர்த்தெழவில்லை என்று சமீபத்தில் இளையராஜா அறிவித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. …

View More இயேசு உயிர்த்தெழவில்லை: இளையராஜா சொன்னது சரியே

இளையராஜா @ கூகிள்

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகிள் நிறுவனத்தின் தலைமையகத்தில் அண்மையில் இளையராஜா பங்குபெற்ற நேர்காணல் & கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. ஜீசஸ் வாழ்வில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உயிர்த்தெழுதல் என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை என்று பல ஆய்வுகளும் குறிப்பிடுவதை Youtube டாகுமென்டரிகளில் பார்த்ததாக ராஜா கூறினார். இரண்டாயிரம் வருடமாக கிறிஸ்தவ மதத்தின் ஆதாரமாக இருந்த இந்த விஷயம் நடக்கவேயில்லை என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. ஆனால், சமீபகாலத்தில் ஸ்ரீரமண மகரிஷி வாழ்வில் அவர் 15 வயது சிறுவனாக இருந்தபோது மரண அனுபவத்தைப் பெற்று அதன்பின் உயிர்த்தெழுந்தார், அதைக் கடந்து மரணத்தை வெல்லும் ஞானநிலையை அடைந்தார் என்றார். அங்கங்கு கறிவேப்பிலை போல சில ஆங்கில வாக்கியங்கள் தவிர்த்து நிகழ்ச்சி முழுவதும் இளையராஜா தமிழிலேயே பேசினார்….

View More இளையராஜா @ கூகிள்