பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்

வீர சாவர்க்கரின் “பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்” – ஓர் அறிமுகம்

“பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்” – வீர சாவர்க்கர், தமிழில் பத்மன். இந்த…

View More வீர சாவர்க்கரின் “பாரத வரலாற்றின் ஆறு பொற்காலங்கள்” – ஓர் அறிமுகம்

நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]

“இல்லை. தன்முனைப்பு என்பது பெருமை கொள்வதோ, கர்வமாக நடப்பதோ, சுயநலத்துடன் இருப்பதோ அல்ல. ‘நானே நினைப்பவன்; நானே செய்பவன்; நானே அனுபவிப்பவன்’ போன்ற எண்ணம் தான் தன்முனைப்பு என்பது. உன்னைப்பற்றி நீயே தவறாக அனுமானித்துக்கொள்வதுதான் தன்முனைப்பு (EGO)”. “நான் என்னைப்பற்றி இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கிறேன் என்று சற்று முன்பு சொன்னதெல்லாம் தான் தன்முனைப்பு என்கிறீர்களா?”… “நிச்சயமாக. நம்முடைய சேர்க்கையானது எப்போதுமே பொருட்கள், மக்கள் மற்றும் இடங்கள் போன்றவையுடன் தான் இருந்துவருகிறது. பொருட்கள், உறவுகள், செல்வம், ஆரோக்கியம், உடல், அறிவு என்று எல்லாமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். மாற்றதிற்குள்ளாகும் விஷயங்களுடன் தான் நம்முடைய சேர்க்கை எப்போதும் இருக்கிறது. மாற்றத்திற்குள்ளாகும் விஷயங்களைப் பற்றிக்கொண்டு அவை மாற்றமில்லாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதுதான் முரண்பாடு”…

View More நம்பிக்கை – 12: உண்மையில் நான் யார்? [நிறைவு]

நம்பிக்கை – 11: தியானம்

“நமது ஆள் வேலையாளிடம் தன்னை வீட்டிற்குக் கொண்டு செல்ல ஒரு வண்டியைத் தயார் செய்யச் சொன்னான்.; அதையும் உடனடியாக அவன் செய்து முடித்தான். அந்த வண்டியில் ஏறிக்கொண்டே, வீட்டுத் தோட்டத்தில் உள்ள புற்களையெல்லாம் வெட்டி, சுத்தம் செய்து, செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடச் சொன்னான். வேலையாள் வேலை செய்யத் தோட்டத்திற்குப் போனவுடன் வண்டியை ஓட்டிக்கொண்டு தன்னுடைய குருநாதர் வீட்டுக்குச் சென்றான்”. “ஒளிந்துகொள்ளவா போனான்?” என்று சிரித்தபடியே கேட்டாள் ஸ்நேஹா… “ஜபத்தைப் பயிற்சி செய்யும்போது, நீங்கள் மந்திரத்தின் மீதும் உச்சாடனம் செய்யும் எண்ணிக்கை மீதும் கவனமாக இருப்பீர்கள். வழக்கமாக 108 முறை அல்லது 1008 முறை என்று செய்வீர்கள். போதுமன நேரம் இல்லதபோது 32 முறை மட்டுமே செவீர்கள்”. “ஆமாம்” என்றார் சங்கர். “அங்கே முழு கவனமும் மந்திரத்தின் மீதும் எண்ணிக்கையின் மீதும் இருக்கும்”. “ஆமாம்” என்றாள் சௌம்யா. “அடுத்தடுத்து வரும் மந்திர உச்சாடனங்களுக்கு இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துவது தான் அடுத்த படி. மனதை அமைதிப்படுத்தி, சாந்தி நிலையை அடைந்த பிறகு, ஜபம் செய்யும்போது, மந்திரத்தின் மீதோ அல்லது எண்ணிக்கையின் மீதோ கவனம் செலுத்தாமல், இரண்டு மந்திரங்களுக்கும் இடையேயுள்ள மௌனத்தின் மீது கவனம் செலுத்துங்கள். அந்த மௌனத்தை அதிகப்படுத்தி அங்கேயே நிலைத்திருங்கள்”….

View More நம்பிக்கை – 11: தியானம்

நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்

இந்தப் பிராணாயாமத்தில் கபாலபாதி பிராணாயாமம் என்று ஒரு வகை உள்ளது. அதைச் செய்வதற்குத் தினமும் காலை நேரத்தில் சில நிமிடங்கள் போதும். இரண்டு டம்ப்ளர்கள் தண்ணீர் குடித்துவிட்டுச் செய்யலாம். (காலை எழுந்ததும் பல் துலக்கி, முகம், கை கால்கள் கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அரை லிட்டர் தண்ணீர் குடித்துவிட்டு, காற்றோட்டம் உள்ள இடத்தில் சௌகரியமாக சம்மணம் இட்டு உட்கார்ந்துகொள்ள வேண்டும். முதுகை நேராக வைத்துக்கொண்டு நிமிர்ந்து உட்கார வேண்டும். வயிறு வரை மூச்சை உள்ளே இழுக்க வேண்டும்; பிறகு சைக்கிளுக்குக் காற்றடிக்கும் பம்பைப் போல வயிறை அழுத்திகொண்டு மூச்சை வெளியேற்ற வேண்டும். இதை 20 முறை செய்ய வேண்டும். இதற்கு இரண்டு நிமிடங்கள் பிடிக்கும்). “அவ்வளவு தானா?” “ஆமாம். உண்மை தான். வலிமையையும் சக்தியையும் அதிகரிக்கச் செய்ய மிகவும் பயனளிக்கக் கூடிய பயிற்சியாகும் இது”…

View More நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்

நம்பிக்கை – 9: மௌனம்

“ஒருவர் தனக்குள் அமைதியாக இருக்கும் நிலை, அன்பின் மூலமாக மட்டும்தான் பெறக்கூடியதா?” என்று கேட்டார் சங்கர். “உன்னைச் சுற்றி இருக்கும் அனைத்திடமும் அன்பு செலுத்தாமல் உன்னால் அமைதியாக இருக்க முடியாது. மிகச் சிறிய உறுத்தல் கூட உன்னை அமைதி இழக்கச் செய்யும். இதைச் சார்ந்துதான் அல்லது இதைச் சுற்றித்தான் சாந்தி என்பது உள்ளது. தனக்குள்ளும் தன் சுற்றுப்புறச் சூழலுடனும் அமைதியாக இருக்கும் நிலையை அன்பின் மூலமாகத்தான் சாதிக்க முடியும்”… “மௌனத்தை ஏன் மிகவும் உயர்ந்த படிநிலையில் வைத்தீர்கள்?” என்று கேட்டார் சௌம்யா. “அந்நிலையை அவ்வளவு சுலபமாக அடைய முடியாது. நீங்கள் சிறந்த மகான்கள் பலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களில் முக்கியமானவர் ரமண மஹரிஷி. அவருடைய உபதேச முறையே மௌனம் தான். அவருடைய உபதேசமே மௌனம். அவர் மக்களை மௌனமாக இருக்கத் தூண்டினார். அந்த மௌனத்தில் அனைத்தும் புலப்பட்டன. அவ்வாறு புலப்பட்டதாகப் பலர் கூறியுள்ளனர்”…

View More நம்பிக்கை – 9: மௌனம்

நம்பிக்கை – 8: பக்தி

“பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் தரும் அடித்தளச் செய்தியே ‘தீயதைச் சகித்துக்கொள்ளாதே’ என்பது தான். ஒரு போர் வீரன் செய்ய வேண்டிய காரியமான போர் புரிதலைக் கைவிட்டு ஓட முயன்ற அர்ஜுனனை, அவனுடைய கடமையான போர் புரிதலை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறார் கிருஷ்ணர். உண்மையில், தன் கடமையிலிருந்து நழுவப்பார்க்கும் அர்ஜுனனைப் பரிகசிக்கிறார். தீயவர்களைக் கொல்லுமாறு அர்ஜுனனை உந்துகிறார்; அது வெறுப்பினால் அல்ல; தீமைகளை, தீய செயல்களைத் தடுப்பதற்காகவே!”… “கிருஷ்ணர் இருந்தார் என்பதை நாம் எப்படித் தெரிந்துகொள்வது? கீதை வயதானவர்களுக்காகத்தான் என்று தான் நான் எப்போதும் நினைத்திருந்தேன்”. என்றான் கௌசிக்…

View More நம்பிக்கை – 8: பக்தி

நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்

நாம் ஈடுபடும் எந்த வேலையாக இருந்தாலும், புத்தக அலமாரியைச் சுத்தம் செய்வது, அறையை மெழுகிச் சுத்தம் செய்வது, சமைப்பது, தோட்ட வேலை, படிப்பது, என்று எந்த வேலையாக இருந்தாலும், அதை ஆண்டவனுக்குச் செய்யும் ஒரு அர்ப்பணிப்பாகக் கருதிச் செய்வதாக இருந்தால், அதைச் சரியாகவும், சுத்தமாகவும், எந்தக் குறையுமின்றி நிறைவாகச் செய்வதற்கும் அதிகப்படியான அக்கறை எடுத்துக்கொள்வாயா, இல்லையா?.. வெற்றி என்பது வேறு. உன் முழுத்திறமையையும் வெளிப்படுத்துவது என்பது வேறு. நம் யாராலும் வாழ்வின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. ஆனால், விளைவுகளைப் பற்றிக் கவலையில்லாமல், நம்மால் நம் முழுத்திறமையையும் கண்டிப்பாகக் காட்ட முடியும். என்ன, ஒத்துக்கொள்கிறாயா?…

View More நம்பிக்கை – 7: பணியில் சிறப்பதும், விடா முயற்சியும்

நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக?

பள்ளிக்கூடத்துக்கும் தியேட்டருக்கும் வருபவர்கள் ஒரே நோக்கத்துடன் வருகிறார்கள். அவர்கள் அனைவரின் கவனமும் ஒரே இடத்தில் குவிந்திருக்கும். ஆகவே, அவ்விடங்களுக்கும் நமக்கும் ஒருவிதமான தொடர்பு இருக்கின்ற உணர்வு ஏற்படும்; நம்முடைய கவனம் சிதறுவது குறைவாக இருக்கும்; அந்த இடங்கள் அளவில் மிகவும் பெரியதாக, குறிப்பிட்ட நோக்கத்துக்காக வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன், நம்முடைய கவனம் அதிகமாகக் குவிகின்ற இடங்களாக இருக்கும். அங்கு வருகின்ற அனைவரும் சேர்ந்து இருக்கின்றபோது, நம் செயல்பாடு ஒரு குழுமச் செயல்பாடாக, மகிழ்ச்சி தரும் அனுபவமாக இருக்கும்… உண்மையில் அந்த அதியுயர்ந்த சக்திக்குப் பெயரோ உருவமோ கிடையாது. இந்தப் பெயரற்ற, உருவமற்ற, அதியுயர்ந்த சக்தியைக் கண்கள் மூடிய நிலையில் உன்னால் சில நிமிடங்களாவது நினைத்துப்பார்க்க முடியுமா?..

View More நம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக?

நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்?

நான் ஆரம்பத்திலிருந்தே, எப்போதும், பிரார்த்தனை என்பது ஒரு பயனைப் பெறுவதற்கு என்று நம்பியிருந்தால்? அதை நான் எப்படி மாற்றிக்கொள்வது?… நல்ல கேள்வி. நீ தேடியது கிடைப்பதற்கு உனக்குப் பிரார்த்தனை உதவியதா என்கிற கேள்வியை நீ உன்னிடத்திலேயே கேட்டுக்கொள்ள வேண்டும். அவ்வாறு சில முறை நடந்திருக்கலாம். அனால் எப்போதும் அப்படி நடந்திருக்காது. விதிவிலக்கை விதியாக்க முடியாது. உண்மியிலேயே கடவுள் நீ கேட்கும் பயன்களையெல்லாம் தந்துகொண்டிருந்தால் இவ்வுலகில் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரிந்தது தானே! ப்ரூஸ் அல்மைட்டி (Bruce Almighty) திரைப்படம் ஞாபகம் இருக்கிறதல்லவா?…. “அண்ணா! இந்தக் காலத்துக் குழந்தைகள் எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கிறார்கள். நான் எப்படிப் பதில் சொல்வது?” என்று தன் கவலையைத் தெரிவித்தாள் சௌம்யா. இந்த நவீன காலத்துக் குழந்தைகள் தான் ஆதாரம் கேட்கின்றன என்று நீ உண்மையிலேயே நினைக்கிறாயா? பண்டையகாலம் தொன்றுதொட்டு, மனித இனம் கேள்வி கேட்க ஆரம்பித்ததிலிருந்து, இதே கதைதான். உண்மையில் சொல்லப்போனால், நம்முடைய சமய / ஆன்மிக நூல்களில் பெரும்பான்மையானவை குருவுக்கும் சீடனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் போலவும், கேள்வி பதில் பகுதிகளாகவும் தான் இருக்கின்றன…

View More நம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்?

நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன?

ஒரு செடியைக் கற்பனை செய்துகொள். தான் வளர்வதற்கும், வலிமை பெறுவதற்கும், உயரமாக நிற்பதற்கும், அது சூரியனைச் சார்ந்து இருக்கின்றது. அது எவ்வளவு அதிகமாக சூரியனைச் சார்ந்து இருக்கிறதோ, அவ்வளவு வலிமையாக வளர்கிறது. செடி வலிமையாக வளர்வதில் சூரியனுக்குத் தானாக எந்த ஈடுபாடும் கிடையாது. ஆனால், சூரியன் கொடுக்கும் ஒளியையும் சக்தியையும் வேண்டி, அந்தச் செடியானது சூரியனைத் தீவிரமாகச் சார்ந்து இருக்கும்போது, பெரிதும் வளர்ந்து மரமாகின்றது. ஒளியும், சக்தியும் கொடுக்கும் நற்பண்பின் மூலம் சூரியன் தன்னுடைய சக்தியைக் குறைத்துக்கொள்வதில்லை… அது விளக்கெண்ணை என்று உனக்குத் தெரியாது. தேன் என்று நினைத்தாய். குடித்த பிறகு உன் எதிர்வினையானது, நீ அதை என்னவென்று நம்பினாயோ அந்த நம்பிக்கையைச் சார்ந்ததா, அல்லது, விளக்கெண்ணை தனது வேலையைக் காண்பித்துவிட்டு வெளியே வந்ததா?…

View More நம்பிக்கை – 4: பிரார்த்தனை என்பது என்ன?