முந்தைய கட்டுரை: அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
(தொடர்ச்சி…)
வேதம் கூறும் பிரபஞ்சவியலில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும், ஒன்றையடுத்து ஒன்றாகவும் முடிவில்லாமல் (infinity) பலப்பல உலகங்கள் (Universes) வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன என்று பார்த்தோம். இவற்றில் எப்பொழுதுமே கால் பங்கு, தோற்றம் கொண்டவையாகவும் (manifest) மீதி முக்கால் பங்கு, தோற்றம் இல்லா நிலையிலும் (unmanifest) இருப்பதை நடராஜரின் தாண்டவம் எப்படிக் காட்டுகிறது என்றும் பார்த்தோம்.
இந்த அமைப்பில் மும்மூர்த்திகளும் ஓய்வு ஒழிவில்லாது இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தையும் தாங்கியும், ஊடுருவியும் இருக்கும் முழு முதல் பரப் பிரம்மம் நாராயணன் எனப்படுகிறான் என்று பிரமாண நூல்கள் கூறுகின்றன என்றும் பார்த்தோம். இந்த நூல்கள் உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்பவை என்று அனைத்து ஆசார்ய புருஷர்களும் கூறியுள்ளனர். இவை constitution of India போன்றவை. இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் இந்து மதத்தின் எல்லா வழிகளும், வழக்கங்களும் எழுந்துள்ளன.
கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.
முக்தி பெற சிவனை வணங்கினால் என்ன, விஷ்ணுவை வணங்கினால் என்ன, இதில் என்ன பேதம் இருக்கிறது என்று எண்ணலாம். அப்படி அல்ல, இந்தக் கடவுளை வணங்கினால்தான் முக்தி, அந்தக் கடவுளை வணங்கினால் முக்தி கிடைக்காது என்றும் எண்ணலாம். இதன் விளைவாக எந்தக் கடவுள் பெரியவர் என்ற சர்ச்சையும் பல காலம் நடந்து வந்திருக்கிறது. பல காலம் என்றேன், அப்படி என்றால் பல காலத்துக்கு முன், அந்த நாளில் இந்தச் சர்ச்சை இல்லையா என்றால், இல்லை என்று சொல்லலாம். காரணம், இவை குறித்த கருத்துகளை அந்த நாளில் தெளிவாக அறிந்திருந்தனர். அதற்கும் காரணம், பிரமாண நூல்கள் சொல்லும் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தனர்.
எனவே பிரமாண நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
இந்த மூன்று நூல்களுள், பிரம்ம சூத்திரம் முழுவதுமே, பிறக்கும் உயிர்களின் நிலை, பரம் பொருள் என்னும் பரப் பிரம்மத்தின் நிலை, அந்தப் பரம் பொருளை அடையும் விதம் ஆகியவை பற்றி ரிஷிகள் கூறியுள்ள விஷயங்களை சூத்திரங்களாகக் கொண்டுள்ளது. அந்த நாளிலும் எழுந்துள்ள பல எதிர் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் அவை உள்ளன.
அவை கூறுவது என்னவென்றால், பரப் பிரம்மனையே தியானித்து வந்தால், அந்த பிரம்ம நிலையை ஒருவன் அடைவான். பிரம்மம் என்பதற்கு எளிமையான விளக்கம் ‘சத்யம், ஞானம் அனந்தம் (எல்லை இல்லாதவன்)’ என்பதே. இந்த மூன்று குணங்களைக் கொண்டவனாக இறைவனை எந்நேரமும் நினைத்து வந்தால், முக்தி கிடைக்கும்.
இவை எல்லாம் சொல்வதற்கு நன்றாக இருக்கும். பரப் பிரம்மனது ரூபம் என்ன? நான் சிவனை வாங்குகிறேன். அவனை பிரம்மமாக தியானித்தால், எனக்கு முக்தி கிடைக்காதா? அல்லது ராமனை வணங்கும் நான் அவனைப் பிரம்மமாக நினைத்து தியானம் செய்தால் முக்தி கிடைக்காதா? நாராயணனை மட்டுமே தியானம் செய்தால்தான் முக்தி கிடைக்குமா? அப்படி என்றால், சிவனடியார்கள் பலரும் முக்தி அடைந்ததாக நூல்கள் கூறியுள்ளனவே, அவை பொய் என்று ஆகாதா? மேலும் எந்த ஒரு தெய்வ உருவையும் அல்லாது ஞான வடிவாகப் பல சித்தர்கள் தியானித்து பரம நிலை அடைந்துள்ளனரே, அது எப்படி? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேரிடையான பதில் ஜோதிடத்தில் உள்ளது.
ஜோதிடம் காட்டும் முக்தி
ஜோதிடமா, அது புரட்டு, என்று சொல்லும் முன், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஜோதிடம் என்றால் ‘ஒளியியல்’ (Science of Light) – ஜ்யோதி-இஷா என்று அர்த்தம். அந்தப் பரம் பொருள் கோடி சூர்ய ஒளி உடையவன். விராட புருஷனாக பிரபஞ்சத்தில் வியாபித்துள்ள அவன் உருவம் நட்சத்திரங்களின் உருவம் – “நட்சத்த்ராணி ரூபம்’ என்று புருஷ சூக்தம் சொல்கிறது. அதாவது அந்தப் பரம புருஷன் நக்ஷத்திர ரூபத்தில் உள்ளான்.
‘நக்ஷ்’ என்னும் வடமொழி வேர்ச் சொல்லிலிருந்து நக்ஷத்ரம் என்னும் சொல் உண்டானது. நக்ஷ் என்றால் அடைதல் என்று பொருள். (to attain) எதை அடைய வேண்டுமோ அது நக்ஷத்ரம். மேலும் இது ‘ந- க்ஷீயதே’ – குறையாதது என்றும் பொருள்படும். குறையாததும், குறைவில்லாததும் அடையப்பட வேண்டியதும் பிரம்மம், எனவே நக்ஷத்ரம் அவன் ரூபமாகிறது.
அவனிலிருந்துதான் நாம் வந்தோம், அவனில்தான் முடிவில் ஐக்கியமாவோம் என்னும்படி, கண்ணுக்குத் தெரியும் நக்ஷத்திரமான சூரியனிலிருந்துதான் நம் பூமி வந்தது. முடிவில் சூரியனைத்தான் அது அடையப் போகிறது. ஒவ்வொரு நக்ஷத்திரமும் அது வந்த ஜ்யோதியில்தான் கடைசியில் ஐக்கியமாகப் போகின்றன.
நக்ஷத்ரங்களின் ஒளி இயல்தான் ஜ்யோதிஷம் – எவ்வாறு என்றால், சூரியன் காலை இதமாகக் காய்கிறான். மதியம் உஷ்ணமாகக் காய்கிறான். பின்மதியம், அவன் உக்ரம் தாங்க முடிவதில்லை. ஆனால் மாலை மிதமாகி, இரவில் நம் இயக்கத்தையே குறைத்து விடுகிறான். மேல்சொன்ன ஒவ்வொரு பொழுதிலும், கோடிக்கணக்கான விஷயங்கள் நடக்கின்றன. தாவரங்கள் உணவு உண்டாக்குவதிலிருந்து, கிருமிகள் அழிவதும், நீர் மேகம் உண்டாவதும், என்று பல செயல்களுக்கு அந்தச் சூரியன் காரணமாகிறான். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
அவனா செய்கிறான்? அவன் எங்கோ நிலையாக இருக்கிறான். நாம்தான் – இந்த பூமிதான் சுழன்று சுழன்று, அவனிடமிருந்து வேறு வேறான பலனை, வேறு வேறான நிலையில், வேறு வேறான நேரத்தில் பெற்றுக் கொள்கிறோம். சூரியன் இருந்த இடத்தை விட்டு அசைவதில்லை. தனியாக ஒன்றும் செய்வதில்லை. அதே போல்தான் இந்த zodiac எனப்படும் வான் வெளி மண்டலத்தை நாம்தான் வெவ்வேறு நேர- கால- நிலையிலிருந்து பார்த்து, சூரியனிடமிருந்து வெவ்வேறான கிரணங்களை அனுபவித்தது போல, நம் நிலைக்கு ஏற்ப, வெவ்வேறான பலன்களை அனுபவிக்கிறோம். அவை என்னென்ன என்று சொல்வதுதான் ஒளியியல் எனப்படும் ஜ்யோதி- இஷம்.
இதைப் பற்றி முதன் முதலில் கூறியவர் நான்முகப் பிரமன். அவர் உபதேசித்த கருத்துகள் ‘பிரம்ம ரிஷி சம்வாதம்’ என்று சமஸ்க்ருதத்தில் இருக்கின்றது. சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு. ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் பெயரில் தற்சமயம் கிடைக்கிறது. அவரையும் சேர்த்து, 18 மகரிஷிகள் ‘ஜோதிட ப்ரவர்தகர்கள்’, (ஜோதிட சாத்திரத்தைத் தோற்றுவித்தவர்கள்) என்று சொல்லப்படுகிறார்கள். இவர்கள் தத்தமது பெயரால் உருவாக்கிய சமிஹிதைகளில் சொன்ன கருத்துகளைப் பல புராணங்களிலும் காணலாம்.
முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல பல கடவுளர்களும் தத்தமக்கென்று கொண்டுள்ள பணிகளை (jurisdiction or portfolio) தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஜோதிடம் உதவுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தையும், அதை இயக்கிக் கொண்டிருக்கும் கடவுளர்களைப் பற்றியும் சொல்வதாலும், ஜோதிடம் என்பது ‘வேத புருஷனின் கண்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஜோதிடத்தின் பயனைப் பற்றிய இந்த முன்னுரையுடன், நான்முகப் பிரமன் கூறும் முக்தி பற்றிய கருத்து என்ன என்று பார்ப்போம். அவர் தந்துள்ள ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் உபதேசத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், 73 யோகங்களைச் சொல்லி அவற்றுக்கான முன் பிறவிக் காரணத்தையும் கூறுகிறார். என்ன செயல் செய்தால் மறு பிறவியில் என்ன பயன் கிட்டும் என்று இவை தெளிவாக்குகின்றன. மும்மூர்த்திகள், அவர்தம் தேவியர் ஆகியோரை வணங்குவதால் என்ன பயன் என்றும் பிரம்மா சொல்கிறார்.
அவற்றுள் மும்மூர்த்தி பற்றிய குறிப்புகள், முக்தி பற்றி விவரிக்கின்றன. அவரது கூற்றுப்படி மும்மூர்த்திகளுமே முக்தியைத் தரக் கூடியவர்கள்.
மும்மூர்த்திகளும் முக்திக்கு சாதனம்
சீகண்ட யோகம்
ஒருவன் சிவனடியார்களைத் துதித்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்து உபசாரங்களையும் செய்து வந்தால், மறு பிறவியில், சீகண்ட யோகத்தில் பிறந்து, ருத்ராக்ஷம் தரித்து, திருநீறு பூசி, அனவரதமும் சிவத் தியானத்தைச் செய்து, சைவ சித்தாந்தப்படி விரதங்களை அனுஷ்டித்து, சாதுக்களை உபசரித்து, சிவனையே முழுமுதல் கடவுளாகக் கொண்டு, மக்களால் மகாத்மா என்று துதிக்கப்பட்டு, மறு ஜன்மம் இல்லாத சிவபதம் அடைவான்.
லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது சீகண்ட யோகம் ஆகும்.
ஸ்ரீநாத யோகம்
ஒருவன் நாராயணனையே முழு முதல் கடவுளாகக் கொண்டு, வைணவ அடியார்களை நன்கு உபசரித்து, அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்து வந்தால் மறு பிறவியில் ஸ்ரீ நாத யோகத்தில் பிறந்து, நாராயணின் திருச் சின்னங்களைத் தரித்து, நாராயணன் ஒருவனையே தியானித்து, நல்ல குடும்பம், மனைவி, மக்கள், செல்வம் பெற்று அனைவராலும் கொண்டாடப் பட்டு, மறு ஜன்மம் இல்லாத பரமபதம் அடைவான்.
களத்ரகாரகனான சுக்கிரனும், பாகியாதிபதியான 9 -ஆம் வீட்டு அதிபதியும், புத்திர காரனான புதனும் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது ஸ்ரீ நாத யோகம் ஆகும்.
விருஞ்சி யோகம்
ஒருவன் வேதம் கற்ற பிராமணர்களைப் போஷித்து, வைதீக காரியங்களுக்கு உறுதுணையாக இருந்தால், மறு பிறவியில் விருஞ்சி யோகத்தில் பிறந்து, பிரம்ம ஞானமும், அறிவும் பெற்று, நல்ல குடும்பம், மனைவி, குழந்தைகளைப் பெற்று, சிறந்த சீடர்களைப் பெற்று, ச்ரேஷ்டன் என்று பெயர் பெற்று, பிரம்ம தேஜசுடன் ஜொலித்து, மறு ஜன்மம் இல்லாத பிரம்ம லோகம் அடைவான்.
குரு, சனி, லக்னாதிபதி ஆகியோர் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது விருஞ்சி யோகம் ஆகும்.
இந்த மூன்று யோகங்களும், மூன்று மூர்த்திகளைப் பரப் பிரம்மமாக வழிபடுவதால், அவ்வாறு வழிபட்டவர் பிறவாமை என்னும் முக்தி நிலையை அடைவர் என்று காட்டுகின்றன. இதைச் சொன்னவர் நான்முகப் பிரமனே.மேலும் முக்திக்கு சாதனமாக ஒருவன் செய்ய வேண்டியதையும் இந்த யோகங்கள் காட்டுகின்றன.
சிவன் – விஷ்ணுவில் யார் பெரியவர்?
இந்த யோகங்கள் காட்டும் மற்றொரு விளக்கம் யார் பெரியவர் என்ற பேதம் சிவன், விஷ்ணுவுக்கு இருக்கிறதா என்பது. அது எப்படி என்று பார்ப்போம்.
எந்தக் கடவுளைப் பரப் பிரம்மம் என்று வணங்குகிறோமோ, அந்தக் கடவுள் மீதே உடல், பொருள், ஆவி என்று அனைத்து செயல், எண்ணங்களைச் செலுத்த வேண்டும். அப்படி, இப்படி என்று கவனச் சிதறல் இல்லாமல், முழு முனைப்புடன், இரவு பகலாக தியானம் இருக்க வேண்டும். எனவே ஒரு கடவுளை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒருவன், வேறு கடவுள் என்று கவனம் சிதறாமல் இருக்க அந்தந்தக் கடவுளே முக்கியம், அவனே உயர்ந்தவன் என்றெல்லாம் சொல்லி கவனம் கொள்ள வைத்துக் கொள்ளும் பொருட்டு பெரியோர் கூறியிருக்கின்றனர்.
சிவனை வணங்குபவர்கள், அவனையே ஒரே கடவுள் என்று கவனம் செலுத்தி பரம்பொருளாக வணங்குங்கள் என்று ஊக்குவித்திருக்கிரார்கள். அதேபோல் விஷ்ணுவே ஒரே கடவுள் என்று அவனை வணங்குபவர்கள், வேறு கடவுளர் என்று கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். நடுவில் இந்தக் கடவுளை வேண்டிக்கொண்டேன், அந்தக் கடவுளை வேண்டிக் கொண்டேன் என்றால், அந்தந்தக் கடவுளர் தரும் நன்மைகளில் நாட்டம் வருகிறது என்றும் அல்லது, பரப் பிரம்மனையே அடைய வேண்டும் என்ற சிந்தையிலிருந்து விலகி, தோன்றும் உலகிலுள்ள பிற பயன்களை மனம் நாடுகிறது என்றும் ஆகி, தீவீர வழிபாட்டை நீர்க்கச் செய்து விடும். இந்தக் கோட்பாடுகள், முக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்குத் தேவை.
முக்தியில் நாட்டம் இல்லாதவர்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றபடி, எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த பலன்களுக்கு தேவதையோ, அந்தந்த தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம். அல்லது மனம் விரும்பும் தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம்.
இந்த விஷயத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ‘மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்’. அவர்கள் தீவீர முக்தி சிந்தனையைக் கொள்கையாகக் கொள்கிறவர்கள். இன்றைக்கு அவர்கள் எல்லோருமே அப்படி என்று சொல்ல முடியாது, ஆயினும், முக்தி மார்க்கத்தை நாடுபவர்கள், இன்னும் இருக்கிறார்கள். ‘நாராயணனே நமக்கு’ என்று தீவீர நாட்டம் கொள்வதால், அவர்கள் கொள்கை தவறல்ல. அவர்கள் பிற கோயில்களுக்குப் போகாததால், அவர்களுக்கு துவேஷம் என்று சொல்வது சரியல்ல. அதேபோல், ‘சர்வம் சிவ மயம்’ என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி பெற விரும்புகிறானோ, அவன் பிற தெய்வங்களை நாடக் கூடாது.
அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே? அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும்? அப்படி அவை குறைந்தவை என்று சொன்னால், இவன் முழு முதல் என்று வணங்கும் அந்தத் தெய்வமும் குறைந்தது என்றாகுமே?
இதைச் சுட்டிக் காட்டும் வண்ணம் கீதையில் கண்ணன் கூறுகிறான். (7-16).
நான்கு விதமானவர்கள் இறைவனை வழிபடுகின்றனர்.
- செல்வத்தை வேண்டி வழிபடுகின்றனர்.
- துன்பத்திலிருந்து விடுபடவேண்டி வழிபடுகின்றனர்.
- வேறு சிலர் இந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்று ஆச்சர்யப்பட்டு அவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டு வழிபடுகின்றனர். (அப்படிப்பட்டவரை ஜின்ஞாசு என்பர்.)
- மெய்ஞானம் பெற்ற ஞானியும் வழிபடுகிறான்.
இப்படிச் சொல்லிவிட்டு, கண்ணன் சொல்கிறான், இவர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் என்றாலும், இவர்களுள் ஞானிதான் எனக்குப் பிரியமானவன். ஏனென்றால், என்னுடைய உண்மையான சொரூபம் இவனுக்குத்தான் தெரியும். “வாசுதேவம் சர்வம் இதி’ – எல்லாவற்றுக்குள்ளும் வசிப்பவன் வாசுதேவன் என்னும் நானே என்று என் சுய ரூபத்தை இவன் அறிவான், அதனால் இவனும் என் ரூபத்தில் இருக்கிறான் என்று கண்ணன் சொல்லும் கீதை நமக்குப் பிரமாண நூல்.
எந்த ரூபத்தை ஒருவன் முக்தி மார்க்கத்தில் வணங்கினாலும், அந்த ரூபத்தில் உள்ள பரம் பொருள்தான் அனைத்து தெய்வங்களிலும், அண்ட சராசரங்களிலும் உள்ளான் என்று ஆத்ம பூர்வமாக உணர்வதே சரியான மார்க்கம். இந்த மார்க்கத்தில் ஒருவன் நிலைத்திருக்கும்போது, கவனச் சிதறல் கூடாது என்ற நோக்கத்தில் பெரியோர் சொன்னவை, சமயச் சண்டைகளுக்கு வழிகோலி விட்டன.
முக்தியில் நாட்டமுள்ளவர்களானாலும் சரி, அப்படிப்பட்ட நாட்டமில்லாதர்களும் சரி, பிற தெய்வங்களைக் குறைத்துச் சொல்லுதல் என்பது – ஜோதிட பாஷையில் சொல்வதானால் – பாவ கர்மாவை உண்டு பண்ணும். அப்படிப்பட்ட கதைகளைப் பற்றிப் பேச ஒருவர் விரும்பினால், கவனமாகக் கையாள வேண்டும். அதனால் வரக்கூடிய பிற தெய்வ நிந்தனையும், அதனால் புண்படும் பக்தனின் அவதியும், கர்மாவை உண்டு பண்ணக்கூடியவை. அன்றைக்கு அவர்கள் சொல்லவில்லையா என்றால், முக்தி மார்க்கத்திற்குச் சொன்னார்கள். முக்தியில் நிலை பெற்றவன் அப்படிப் பேசலாமே என்றால், உண்மையிலேயே முக்தியில் நிலைபெற்றவன், பரம் பொருளின் சொரூபத்தை உணர்ந்திருப்பான். அவன் அப்படிப் பேச மாட்டான்.
நான்முகப் பிரமன் தரும் முக்தி
முக்தி மார்க்கத்திற்கு சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு கடவுளர்களையும் எவ்வாறு வழிபட வேண்டும் என்று மேற்சொன்ன யோகங்கள் காட்டுகின்றன. ஆனால் நான்முகப் பிரமன் விஷயம் அப்படிச் சொல்லப்படவில்லை. இருப்பதிலேயே, நான்முகன் பக்திதான் எளிதானது. வேதத்தைப் போற்றுதலும், வேதம் ஓதுதலை வளர்த்தலும், வேதம் ஒதுவோரை நன்முறையில் காத்தலும், அவர்களுக்குச் சேவை புரிதலும் பிரமனுக்குச் செய்யும் பக்தி என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்பத்திலும் வேதத்தை நினைவுக்குக் கொண்டு வந்து உலகைப் படைத்து, வேதத்தை நிலை நிறுத்துபவன், நான்முகப் பிரமனாக இருக்கவே, வேதத்தைப் போஷித்தலே முக்திக்கு வழி என்றாகிறது. நான்முகப் பிரமனே வேத உருக் கொண்டவன் என்றும் ஆகிறது. அதனாலும் அவனுக்கென்று தனிக் கோயில் இல்லாமல் இருக்கலாம். அதனாலும், ஒவ்வொரு உற்சவத்திலும், முதலில் வேத கோஷம் செய்துகொண்டு கற்றோர் செல்லவேண்டும். அவர்களைப் பின்தொடர்ந்து தான் மற்றோர் செல்வர்.
வேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரமனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ அவன் முக்தி அடைவான். வேதத்தையும், அது பரப்ப உதவும் சமஸ்க்ருதத்தையும் வெறுக்கும் திராவிடத் தலைவர்கள் எப்பேர்பட்ட அறிவிலிகள் என்று இதிலிருந்து தெரிகிறது. இவ்வளவு எளிய வழியை அழித்துவிட்டார்களே!
தோன்றும் பிரபஞ்சத்தில் முக்தன் நிலை
மும்மூர்த்திகள் மூலமும் முக்தி கிடைக்கும் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் பல முக்தர்கள், சித்தர்கள் வரலாறுகள் இருக்கின்றன.
முக்தி பெற்ற இவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
இதைப் பற்றி ஜைமினி, பாதராயணர் போன்றோர் விவாதித்த கருத்துகள் பிரம்ம சூத்திரங்களாக உள்ளன. மறு பிறவி என்னும் கர்மப் பிணைப்பிலிருந்து இந்த முக்தர்கள் விடுபட்டு விடுகிறார்கள். ஆனால் நான்முகப் பிரமனின் 100 வருட ஆயுளாக இருக்கும் இந்தத் தோன்றும் பிரபஞ்சத்தின் கால் பகுதியைவிட்டு இவர்களால் வெளியேற முடியாது என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. நான்முகப் பிரமன் இருக்கும் பிரம்ம லோகத்தில் இவர்கள் நிலை பெற்று, அந்த நான்முகனின் ஆயுள் முடியும்போது அவனுடன், இந்தச் சக்கரத்தை விட்டு வெளியேறி, பிரபஞ்சத்தையே தன் கருவில் தாங்கும் பரம் பொருள் என்னும் அந்தப் பிரம்மனிடம் (Supreme Brahman) லயிப்பர்.
இந்தக் கால் பகுதி பிரபஞ்சத்தில் முக்தி அடைந்த உயிர்கள், எங்கு வேண்டுமானாலும் சஞ்சரிக்கலாம், எதை நினைத்தாலும் சாதிக்கலாம். படைத்தல் தொழில் தவிர, பரம் பொருள் செய்யும் எந்தச் செயலையும் செய்யக்கூடிய நிலையையும் ஆற்றலையும் அவர்கள் பெறுகிறார்கள்.
இதோ வேதம் காட்டும் பிரபஞ்சத்தைப்பாருங்கள்…

நாம் பயணிக்கும் பிரபஞ்சம் இது
முக்தர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றால் என்ன அர்த்தம்? பல்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய அகத்தியரால் எப்படி அப்படித் தோன்ற முடிந்தது என்று இது காட்டுகிறது அல்லவா? அவர் என்றோ முக்தி அல்லது சித்தி அடைந்திருப்பார். வெவ்வேறு யுகங்களில் தேவை ஏற்படும்போது, அப்பொழுதே அப்படியே அவரால் தோன்ற முடியும். கருவில் பிறந்து, வளர்ந்து வர வேண்டிய அவசியமில்லை. எங்கெங்கு தேவையோ, அங்கங்கு தோன்றி, செய்ய வந்த செயலைச் செய்திருப்பார். ஆனால் கர்மப் பிணைப்பு அவருக்கு ஏற்படாது. அதுதான் இந்த முக்தி தரும் விசேஷச் சலுகை.
இறைவன் திடீரென்று தோன்றி ஆட்கொண்டான் என்றெல்லாம் புராணங்கள் சொல்கின்றனவே, அவை கட்டுக்கதை அல்ல என்றும் இது காட்டுகிறது. முக்தர்களாலேயே, இஷ்டப்படி வந்து போக முடியும் என்றால், இறைவன் வருவதில் என்ன அதிசயம்? அது எப்படி கட்டுக் கதையாக இருக்கும்?
அவ்வாறே, நாரதரும் வந்து போய்க் கொண்டு இருக்கிறார். பல ரிஷிகளும், பெரியோரும் நம் கண்ணில் பட முடியும் – நாம் அந்த அளவு ஆத்ம சாதனை கொண்டிருந்தால். இதன்படி ஆதி சங்கரரோ, அல்லது இராமானுஜரோ மீண்டும் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. கர்ம வினையால் அவர்கள் பிறக்க மாட்டார்கள். உலக நன்மைக்காக, ஆண்டவன் ஆஞ்ஞையால் அவர்கள் அவதரிப்பார்கள்.
வெவ்வேறு காலக் கட்டத்தில் பிரபந்தங்களைப் பாடிவிட்டுப் போய் விட்டார்கள் ஆழ்வார்கள். நம்மாழ்வார் அருள, நாத முனிகள் அவற்றைப் பெற்றாரே, அது எப்படி – என்பதும் இந்த அமைப்பில் தெரிகிறது. இன்றும் நாத முனிகள் அளவுக்கு ஒருவன் தியானம் செய்தால், அவனுக்கு முன் நம்மாழ்வார் தோன்ற முடியும். திவ்யப் பிரபந்தத்தை எடுத்துக் கொடுக்க முடியும்.
இதையெல்லாம் சொன்னோம் சரி, இந்த மும்மூர்த்திகள் தவிர வேறு தெய்வங்களைப் பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்காதா? பிரம்ம சூத்திரம் அதையும் சொல்கிறது.
பிற மதம், பிற தெய்வம் மூலம் முக்தி உண்டா?
ஒருவன் எதை உபாசிக்கிறானோ அதை அடைவான். இதை ‘தத்க்ரது’ என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. பரம் பொருள் என்னும் அந்த முழு முதற் கடவுளைத் தியானித்து மும்மூர்த்திகளில் ஒருவரை உபாசித்தால் முக்தி கிடைக்கும். வேத மதத்தில் பிற மூர்த்திகளை உபாசித்தாலும், முடிவில் இந்த மும்மூர்த்திகளுக்குத்தான் ஒருவன் செலுத்தப்படுவான். அவையெல்லாம் பரிவார தேவதைகள். சிவன் அல்லது விஷ்ணுவுடன் சேர்பவர்கள். அவர்கள் மூலம் முக்திக்கு வழி பிறக்கும்.
ஆனால் படைக்கப்பட்ட உலகில் தோன்றின உயிர்களை முழு முதற் கடவுளாக எண்ணுபவர்கள் அந்த உயிர்களையே அடைவார்கள். இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. அதனால் ஆசாரியனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முக்திக்குத் தேவையான தியானம் இல்லாவிட்டாலும்கூட, முக்தரான இராமானுஜரைத் தியானிப்பதால், முன் கூறிய ‘தத்க்ரது’ கோட்பாட்டின்படி, வைணவர்கள் இராமானுஜரை அடைந்து, தாமும் முக்தி அடைவர். தெய்வம் கொடுத்த உறுதிமொழி இப்படி நடைமுறைப்படுத்தப்படும்.
ஆனால் பிற மதங்களில் இவ்வாறு அல்ல. அம்மதங்களில் தெய்வம் என்று போற்றப்படுபவர்கள், ஆன்மிக விழிப்படைந்த உயிர்களாக இருந்தாலும், முழு முதற் கடவுளான பிரம்மத்தை உபாசிக்காமையால், முக்தி அடைந்தவர் இலர். எனவே அவர்களுக்கு மறு பிறவி உண்டு. அதுவரை அவர்களை உபாசித்த உயிர்களும் அவர்களிடமே நிலைத்து, மீண்டும் அவர்கள் பிறக்கும்போது பிறக்க வேண்டும். அல்லது ஒரு கல்பம் முடிந்து பிரளயம் வந்து படைக்கப்பட்ட எல்லாம் அழியும்பொழுது அவையும் அழிந்து மீண்டும் பிறக்க வேண்டும். இதை பிரம்ம சூத்திரம் வாயிலாக அறிகிறோம்.
இன்றைக்குப் பிற மதங்கள் இருக்கின்றனவே அவர்களுக்கு வேறு கதியில்லையா என்று கேட்டால், என்னிடம் இரண்டு பதில்கள் இருக்கின்றன.
ஒன்று ஜோதிடம் வாயிலாக அறிவது. நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல் இவை ஒருவனிடம் இருந்தால், அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.
மற்றொன்று, இந்து மதத்தைக் காப்பியடித்து இப்பொழுதெல்லாம் ‘முத்தொழிலோனே நமஸ்காரம்’ என்று கிறிஸ்துவுக்கு நமஸ்காரப் பாட்டு பாடுகிறார்களே, கிறிஸ்துவை வேத முதல்வன் என்றாக்கிக் கும்பிடுகிறார்களே, இது எங்கே கொண்டுபோய் விடும் என்று குழப்பமாக இருக்கிறது. இவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள். இவர்கள் கலைஞர்-புத்தாண்டு கொண்டாடினார்கள். பொங்கல் கொண்டாடினார்கள். இன்னும் விரதங்கள்தான் பாக்கி.
ஆனால் இங்கே இருப்பவர்கள், நம் விரத நாள்களில் வயிறு முட்ட உண்டுவிட்டு, அவர்கள் விரதத்தை முடித்துவைக்க, கஞ்சி குடிக்கிறார்கள்.
என்ன அபத்தம் இது?
இதற்கெல்லாம் எப்படி கர்ம பலன் சொல்வது?
ஒன்றுமே புரியவில்லையே?
எங்கே போனார்கள் இந்த ஜைமினியும், பாதராயணரும்? அவர்களைக் கேட்போமே ….
என்ன…… அவர்களைக் காணோமா…? எஸ்கேப் ஆயிட்டாங்களா ஆ ஆ ஆ ஆ ஆ …..
(தொடரும்…)

அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1
ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்
தலபுராணம் என்னும் கருவூலம் – 1
பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்
இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?![அமுதம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/nectar3.jpg)
அமுதம் [சிறுகதை]
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்![பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/thirugnana-sambandar1.jpg)
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2
தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2
ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு
பாரதியின் சாக்தம் – 4
பாரதியின் சாக்தம் – 3
போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்
பாரதியின் சாக்தம் – 2
பாரதியின் சாக்தம் – 1
சாதி எனப்படுவது யாதெனின்…
அருணாசலத்தில் ‘ம’கரத்தின் மகத்துவம்
வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்
தலபுராணம் என்னும் கருவூலம் – 6![மனமாற்றம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/manamaatram1.jpg)
மனமாற்றம் [சிறுகதை]
தலபுராணம் என்னும் கருவூலம் – 3
ஒரு பயணம் சில கோயில்கள்
கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு
பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்













My heartfelt thanks for the great article.
கீதை Chapter 12 Verses 13- 14
அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)
சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)
நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )
ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)
க்ஷமீ (பொறுமை உடையவனாய்)
ஸ ந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )
யோகி (யோக நெறியில் நிற்பவன்)
யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)
த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)
மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)
யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )
ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்)
——–
தன்னை பக்திமான் என கருதிக் கொண்டு, தன்னுடைய தெய்வம் தான் உயர்ந்தது எனக் காட்ட ஆயிரக் கணக்கில் சுலோகங்களை மேற்கோள் காட்டும் சான்றோர்களே, பக்திக்கு இலக்கணத்தை பாருங்கள்!!
ஆனால் நீங்கள் செய்வது என்ன?
பிறர் தெய்வங்களாக வணங்குபவரை த்வேஷித்து, தூஷித்து, மனதிலே வெறுப்பு நிரம்பிய நிலையிலே,
நான் வணங்கும் தெய்வம்தான் உண்மையானது, முழு முதற்கடவுள் என அகந்தையும், மமதையும் நிரம்பிய நிலையில் இருந்து கொண்டு, முக்கியமானதாக கூறப் பட்டுள்ள எல்லா பண்புகளையும் தூக்கி கடாசி விட்டு, பெரிய பக்திமான் போல எண்ணிக் கொள்கிறீர்கள். கிருட்டினரின் கொள்கைக்கு எதிராக செயல் படுகிறீர்கள்!
அன்புள்ள ஜெயஸ்ரீ அவர்களுக்கு,
முக்தி என்கிற ஒரு abstract கருத்தாக்கத்தை இப்படி ஒரு manual போட்டு விளக்கி விட முடியுமா? உங்களது அதீத்மான “பிரமாண நூல்”வாதம் நீங்கள் இங்கு எடுத்தோதுவதாகக் கூறும் வேதாந்த தத்துவத்தின் இயல்பு அல்லவே அல்ல. மாறாக, அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி, தத்துவரீதியாக தோற்கடித்து விட்ட (ஆனால் சடங்குகள் மூலம் நடைமுறையில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும்) பூர்வமீமாம்சம் என்ற தரப்பின் இயல்பு என்பதை நினைவுறுத்துகிறேன். அந்த வகையில், நீங்கள் கூறும் ஒரு பார்வையும் இந்துமத நீரோட்டத்தில் இருக்கிறது, ஆனால் கண்டிப்பாக அது ஒரு குறுக்கல்வாத (reductionist) பார்வையே அன்றி வேதாந்தத்தின் முழுமைவாத (abolutist) பார்வை அல்ல.
“ நசிகேதா, தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்றவன் ஆன்ம வடிவாகவே ஆகிறான்” – கட உபநிஷதம் 2.1.15
முக்தி என்ற கருத்தாக்கம் சமயம், சடங்குகள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்தது.. இதைச் செய்தால் இது கிடைக்கும் என்ற செயல் விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கருத்தாக்கம் அது.. அதை ஒரு ஜோதிட நூலைக் கொண்டு வரையறை செய்வது என்பதே பழுதுபட்டதாகவும், சிறுபிள்ளைத் தனமானதாகவும் தோன்றுகிறது..
அது மட்டுமல்ல, முண்டக உபநிஷதத்தில், ”மற்ற எல்லா உலகியல் அறிவுத் துறைகளுக்கும் சற்று அடுத்தபடியில் தான் வேதம், வேதாந்த விசாரம் எல்லாமே கூட இருக்கிறது, மேலான ஞானம் இவைகளுக்கெல்லாம் கூட அப்பாற்பட்டதே” என்று கூறப்படுகிறது. இதன்மூலம் தங்கள் தத்துவ அறிவின் எல்லையத் தாங்களே உணர்த்தி, மனிதன் அவற்றையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற கருத்தையும் வேத ரிஷிகள் உணர்த்தினர். வேத இலக்கியத்தின் மாபெரும் உன்னதமாகவே சுவாமி விவேகானந்தர் இதைக் குறிப்பிடுகிறார்..
தீவிர அகத்தரிசன தருணத்தில் வெளிப்படும் ஒரு பேரெழுச்சிக் கவிதையாகவே முக்தி பற்றிய அனுபவம் நம் மெய்ஞானிகளால் பாடப்பட்டுள்ளது.. அது அனைத்தையும் அணைக்கும் நிலையாகஇருக்கலாம் –
காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்
(மகாகவி பாரதி)
அல்லது, அனைத்தையும் துறக்கும் நிலையாக இருக்கலாம் –
“நான் சைவமும் அல்ல, சாக்தமும் அல்ல,
ஐந்து இரவுகள் திருமாலை வழிபடும் வைணவமும் அல்ல,
எனக்கு வேதமும் இல்லை, வேள்வியும் இல்லை,
ஆசாரமும் இல்லை, தவமும் இல்லை
சிதானந்த ரூபம் சிவம் நான் சிவம் நான்”!
(ஆத்ம ஷட்கம், ஆதிசங்கரர்)
மற்றபடி முக்தியைப் பற்றிய பேச்செல்லாம் வெறும் பேச்சே என்கிறார்கள் ஞானிகள்.
“விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்” – திருமூலர்
// அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும். //
இது வேதாந்தத்திற்கு முற்றிலும் மாறான கருத்து. முக்தி என்பது “நம்பிக்கையால்” வருவதல்ல. அது பந்தம் அல்ல, விடுதலை.
மதம் என்பது எந்த விகாரங்களும் அற்ற ஆத்மாவின் இயல்பாக எப்படி இருக்க முடியும்? மதம் என்பது மனித பிரக்ஞையின் ஒரு அடுக்கில் ஒரு கட்டத்தில் மனிதனால் ஏற்கப் படுவது. அதை அந்தப் பிறவியிலேயே பலவிதமாக மாற்றிக் கொள்ளவும் முடியும், உதறித் தள்ளிவிடவும் முடியும். பெற்றோர்களது மொழி பிள்ளைகளுக்கு வருவது போலவே, மதமும் வருகிறது. அதற்குமேல் அதில் ஒன்றுமில்லை.
சைவராக இருந்து வைஷ்ணவரானார் திருமழிசையார். வைஷ்ணவராக இருந்து சைவரானார் ஹரதத்தர்.. சைவ, வைஷ்ணவ சமரசத்தைப் பாடிக் கொண்டே முருகபக்தராக இருந்தார் அருணகிரியார். சாக்த, சைவ, வைஷ்ணவ சாதனை முறைகளைப் பயின்று அவற்றில் இழையோடும் ஒருமையைக் கண்டுணர்ந்து அதைப் போதித்தார், நமக்கு மிக சமீபகாலத்தில் வாழ்ந்த ஸ்ரீராமகிருஷ்ணர்.
வெளிநாட்டில் பிறந்து சிறந்த வேதாந்திகளாகவும், யோகிகளாகவும் ஆனவர்களில் சகோதரி நிவேதிதா, அரவிந்த ஆசிரம ஸ்ரீஅன்னை, ரமண மகரிஷியின் சீடர்கள் ஆகியவர்களைச் சொல்லலாம். நாம் அறியாமலேயும் பலர் இருக்கலாம். இவர்களது இறை அனுபவங்கள் எல்லாம் பொய்யா? ”Every soul is potentially divine. ஒவ்வொரு ஜீவனும் முக்திக்கு அதிகாரி தான். இதைத் தான் வேதாந்தம் அறைகூவுவதாக சுவாமிஜி உலகெங்கும் முரசறைந்தார் – இல்லையா?
நம்மவர், அன்னியர் – நம்நாடு, வேறு தேசம் என்பதெல்லாம் உலகியலுக்கு உட்பட்ட சமூக, அரசியல் தளங்களில் மட்டுமே. ஆன்மிகத் தளத்தில் அல்ல.
கட்டுரை ஏதோ எனக்கு புரிய வெச்சதுன்னு நெனச்சா ஜடாயுவோட மறுமொழி கொழப்பிடுச்சு! முக்தின்னா என்ன? கடவுளை அடைவதா? கடவுள் நிலையை அடைவதா?
//வெளிநாட்டில் பிறந்து சிறந்த வேதாந்திகளாகவும், யோகிகளாகவும் ஆனவர்களில் சகோதரி நிவேதிதா, அரவிந்த ஆசிரம ஸ்ரீஅன்னை, ரமண மகரிஷியின் சீடர்கள் ஆகியவர்களைச் சொல்லலாம். நாம் அறியாமலேயும் பலர் இருக்கலாம். இவர்களது இறை அனுபவங்கள் எல்லாம் பொய்யா?//இதற்கு கட்டுரையிலேயே //அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும்// என்ற பதில் இருப்பது போல் இருக்கிறது.
//நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல் இவை ஒருவனிடம் இருந்தால், அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.//இதில் கடைசி வரிக்கு ஜடாயு கண்டனம் தெரிவிக்கிறார். ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இந்த உலகின் முதல் மதம்/வழி இந்து மதம்/வழியாக இருப்பதால் பிறகு வந்த அனைத்து மதங்களும் அதைப் பின்பற்றுகின்றன என்று.
//முக்தி என்ற கருத்தாக்கம் சமயம், சடங்குகள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்தது.. இதைச் செய்தால் இது கிடைக்கும் என்ற செயல் விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கருத்தாக்கம் அது.. அதை ஒரு ஜோதிட நூலைக் கொண்டு வரையறை செய்வது என்பதே பழுதுபட்டதாகவும், சிறுபிள்ளைத் தனமானதாகவும் தோன்றுகிறது.. //
I think this is an important point. Astrology predicts what can happen to a man…. he will get good….. he will be in bad shape, getting sorrows… etc-( I am not getting into the arguement here whether Astrology is genuine or not ).
But liberation is attaining a totally independent status, completely releived of any sorrows, totally liberated from the clutches of sorrow, nature, fate….. whatever it is.
Even Buddha claimed that he attained liberation.
//முக்தி என்ற கருத்தாக்கம் சமயம், சடங்குகள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்தது.. இதைச் செய்தால் இது கிடைக்கும் என்ற செயல் விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கருத்தாக்கம் அது.. அதை ஒரு ஜோதிட நூலைக் கொண்டு வரையறை செய்வது என்பதே பழுதுபட்டதாகவும், சிறுபிள்ளைத் தனமானதாகவும் தோன்றுகிறது..//
சொற்பிரயோகம் தவறு ஜடாயு. ஜோதிஷம் உங்களுக்குப் பிடிக்காமலும் அதில் உங்களுக்கு நம்பிக்கையில்லாமலும் இருக்கலாம். அதற்காக அதைக் கற்றவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதைச் “சிறுபிள்ளைத்தனம்” என்று கூறுவது சரியில்லை. ஜெயஸ்ரீஜி அவர்கள் வயதிலும், அனுபவத்திலும், கல்வியிலும் மூத்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
//ஜோதிடமா, அது புரட்டு, என்று சொல்லும் முன், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஜோதிடம் என்றால் ‘ஒளியியல்’ (Science of Light) – ஜ்யோதி-இஷா என்று அர்த்தம்.//
தமிழ் ஹிந்து வாசகர் கூட்டத்தில் யாரும் குருடர்கள் அல்ல ஜெயஸ்ரீஜி, இருட்டில் உள்ளவர்களும் ஒளி தேடுபவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஒளி பெற விருப்பம் உள்ளவர்கள் பெற்றுக் கொள்ளட்டும்.
அன்புடன்
ஹரன்
வழக்கம்போல ஒரு நல்ல அறிவியல்பூர்வமான கட்டுரையை ஜெயஸ்ரீ மேடம் குடுத்துட்டாங்க! ஜோதிடம் வேதத்தின் ஒரு அங்கம், இன்று ஜோதிடர்கள் சரியில்லை என்பதற்காக ஜோதிடம் போய்யாகிவிடாதே…
//இது வேதாந்தத்திற்கு முற்றிலும் மாறான கருத்து. முக்தி என்பது “நம்பிக்கையால்” வருவதல்ல. அது பந்தம் அல்ல, விடுதலை.//
ஜடாயு சார், ஆசிரியர் எழுதியதை படியுங்கள்:-
“இன்றைக்குப் பிற மதங்கள் இருக்கின்றனவே அவர்களுக்கு வேறு கதியில்லையா என்று கேட்டால், என்னிடம் இரண்டு பதில்கள் இருக்கின்றன.”
அவங்ககிட்ட ரெண்டு பதிலிருக்குனுதான் சொல்றாங்களே தவிர “நான் சொல்றதுதான் உண்மை, மற்றவை பொய்” நு ஹிட்லர் போலவோ அபிரகாமீய மதத்தவர் போலவோ சொல்லலியே!
ஆசிரியர்கு மீண்டும் நன்றி, தொடரட்டும் உங்கள் நற்பணி!
//வெவ்வேறு காலக் கட்டத்தில் பிரபந்தங்களைப் பாடிவிட்டுப் போய் விட்டார்கள் ஆழ்வார்கள். நம்மாழ்வார் அருள, நாத முனிகள் அவற்றைப் பெற்றாரே, அது எப்படி – என்பதும் இந்த அமைப்பில் தெரிகிறது. இன்றும் நாத முனிகள் அளவுக்கு ஒருவன் தியானம் செய்தால், அவனுக்கு முன் நம்மாழ்வார் தோன்ற முடியும். திவ்யப் பிரபந்தத்தை எடுத்துக் கொடுக்க முடியும்.//
இந்த கருத்துதான் இந்துமதத்தின் முக்கியமான ஒன்றாகும். இது சைவத்திலும் உள்ளது. 5, 6, 7- ஆம் நூற்றாண்டில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் பிற நாயன்மார்கள் பாடிய தேவாரம், திருவாசகம் போன்றவற்றை 11- ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பிகள் கண்டெடுத்து ‘திருமுறை’ என்று தொகுத்தளிக்கிறார். அவருக்குமுன் 400 ஆண்டுகளுக்கு அவை எங்கு சென்றன என்றே எவருக்கும் தெரியவில்லை!
// அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும். //
இது சரியில்லை. கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப்படுபவர் என்று அர்த்தம் ஆகிறதே. தவறான வழியில் திசை மாற முயல்கிறீர்கள்.
நாங்க எங்க பாட்டிகாலத்து ஆன்மீக கதைகள் அங்கங்க கேட்குற கதைகள் இதையெல்லாம் வச்சுகிட்டு நமக்கு ரொம்ப தெரிஞ்சு இருக்கு என எனக்கு நானே சபாஷ் சொல்லிக்கொள்வேன் .பார்கிறவங்க கிட்டேயெல்லாம் ஆன்மிக சம்பந்தமா படிக்கிறதெல்லாம் சொல்லி சந்தோசபட்டுக்குவேன்.ஆனால் உங்க கட்டுரைகளை படிக்கும்பொழுது தான் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதே என்று பிரமிப்பாக இருக்கிறது .”கற்றது கை அளவு கல்லாதது கடல் அளவு” என்பது எவ்வளவு உண்மை .இது போன்று பல கட்டுரைகள் எழுதி என் போன்றோரின் அக இருளை நீக்குங்கள்.தயை செய்து பெரிய எழுத்துக்களாக இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும் படிப்பதற்கு.மிகவும் அருமை உங்களுடைய கட்டுரை. .
Astrology and spirituality are different concepts altogethet.
Astrology, in the past i said to have predicted that an individula would become a great spiritualist.
As an example, It was said that Astrologers predicted that buddha would be a great Spiritualist and Ilango would be a proper person. Besided that I cant say whether Astrology can help to uplift any one spiritually.
It is also said that Iramakrishna Paramahams has told that Vivekananda amd other disciple would do wonders- but it was not part of Astrology, Ramakrishna was considered as a seer!
//இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.//
Sounds like abrahamaites
அய்யா Jeevs
இந்த வலைதளத்தின் முகவரி http://www.tamilHINDU.com – இங்கு வந்தே நீங்கள் ஏசுவையும், மோசசையும், மற்ற அன்பு தூதர்களையும், அல்லாவையும் கடவுளாக கொண்டே தீர வேண்டும், மொக்ஷித்திர்க்கு இவர்களே அதிகாரி என்று சொன்னால் அது எத்தை காட்டுகிறது – இதை தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை
//Jeevs
5 February 2010 at 3:51 pm
// அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும். //
இது சரியில்லை. கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப்படுபவர் என்று அர்த்தம் ஆகிறதே. தவறான வழியில் திசை மாற முயல்கிறீர்கள்.//
இந்து மதம் என்பதற்கும் இந்து மத வழி என்பதற்கும் வேறுபாடு உள்ளது நண்பரே.
//armchaircritic
5 February 2010 at 10:59 am
முக்தின்னா என்ன? கடவுளை அடைவதா? கடவுள் நிலையை அடைவதா?//
கடவுள் நிலையை அடைவதே! அது கூட நாம் கடவுள் நிலையை அடைந்து விட்டோம் என்பதெல்லாம் அடையும் பொழுது தெரியாது. கடவுள் நிலையை அடைவது என்பதை ஒரு உதாரணமாகச் சொன்னால் இரண்டு சொட்டு தண்ணீர் அருகருகே இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சொட்டு மற்றொரு சொட்டுடன் இணைந்து விட்டால் இரண்டும் ஒரே சொட்டுத் தண்ணீராகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலை தான் நமது ஆத்மா பரமாத்மாவுடன் இணையும் நிகழ்வு. இதையே முக்தி என்கிறோம். அதற்கு முதலில் பரமாத்மா வெளியில் இருக்கும் தண்ணீர் என்றும் நாம் உடலில் இருக்கும் தண்ணீர் என்பதையும் முதலில் முழுமையாக உணர வேண்டும். அப்படி உனர்ந்து கொள்ளும் பக்குவத்தையே “தத்வம் அஸி” அதாவது “அதுவே நீ” என்று புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதாவது தண்ணீர் இரண்டு தனித்தனி துளிகளாக இருந்தாலும் இரண்டும் அது ஒன்றே என்பது போல தான் இதுவும். ஆக இரண்டரக் கலந்து நாமே இறை நிலையை அவ்வாறு அடைவதே முக்தியாகும். அவ்வாறு இரண்டரக் கலக்கும் நிலை தான் “அஹம் ப்ரம்மாஸ்மி”…அங்கே உள்ளும் புறமும் ப்ரம்மமாகிய நானே என்றுணர்ந்து அதுவாகவே ஆவதாகும். நாமே அதுவாக ஆன பிறகு நாம் அதில் கலந்தோமா அல்லது அதுவாக ஆனோமா என்பதெல்லாம் நமக்கு தெரியாது. நாம் அப்படியே இருப்போம் அவ்வளவு தான். முக்தி பற்றி சந்தேகம் இருப்பவர்களுக்கு புரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏதோ என்னாலான முயற்சி.
அன்புடன்
ராம்.
அருமையான கட்டுரை ஜெயஸ்ரீ அவர்களே!
//இவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள்.//
கவலைப்படாதீர்கள். முடிவில் நம்மையே வந்தடைவார்கள்.
//கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.//
உங்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க வாழ்த்துகள்
தங்கள் படைப்பு மிகவும் அருமை.வேதம் காட்டும் பிரபஞ்சத்தத்துவம் அறிவுப்பூர்வமாக உள்ளது.
ஒரே ஒரு விசயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது என்றாலும் மொத்தத்தில் உங்கள் படைப்பு சிறப்பாக உள்ளது .
// இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. //
interesting. This sounds very much like a “prophet” idea rather than Hindu spirituality.
In Hindu spiirituality, it is Guru’s guidance that kindles an aspirant towards self knowledge – but that is only the “inspiration” part. The Sadhaka also has to strive hard and peel of all his layers of “avidya” (ignorance) one by one.. and this may take one or many births… It is not said that just by mere association of a great sage, you are *guaranteed* of Mukthi.
Plus, what Hindu spirituality insists on is “shraddha”. It does not directly translate as faith or belief as it is normally understood.
It is *self knowledge* that is criteria for Mukthi – NOT “Belief in Vedas”, NOT “knowledge of Vedas”. Ramakrishna Paramahamsar, Sadasiva Brahmendrar, Vallalar, Ramana Maharishi – they were all Jeevan mukthas. But none of them had studied Vedic scriptures, they were not ritualistic at all.
To say that such people attained Mukthi because they were destined for it (it was written in their horoscope) is way too much of a simplistic idea.. It is an insult on the greatness of human spirit. In that case, before starting any spiritual Sadhana, one can just consult the horoscope and find out if Mukthi is written for him or not.. If it says no, why to even waste time in pursuing spirituality?
You see, mixing astrology with pure and prestine Hindu philosophical thought leads to such fallacies.
//உங்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க வாழ்த்துகள்//
****இஸ்ட் அவர்களே, உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் உண்மையான பகுத்தறிவு தருமாறு நீங்கள் வெறுக்கும், கேவலப்படுத்தும், இகழும் இந்து தெய்வங்கள் அனைவரிடமும் வேண்டுகிறேன்..
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
ஜெயஸ்ரீ அவர்களின் மற்றுமொரு சிறப்பான படைப்பு!.
நான் கூற நினைத்த பெரும்பாலனவற்றை நமது நண்பர்கள் கூறிவிட்டனர். இருப்பினும் எனது கருத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.
//மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்//
உண்மை. புத்தர், மகாவீரர், இயேசு போன்ற பிற மதத்தவரும் நமது இந்து மத வழியில்தான் முக்தி பெற்றனர். இதை இன்று அவர்களை (இயேசு)பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் பிரசங்கிகள் உணர வேண்டும்.
//இவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள்.//
//கவலைப்படாதீர்கள். முடிவில் நம்மையே வந்தடைவார்கள்.//
நிச்சயம் அவர்கள் ஒரு வித விரக்தியில் இருக்கிறார்கள். அதனால்தான் வள்ளுவரை அவர்கள் பக்கம் சேர்த்துப் பார்த்தார்கள் (முடியவில்லை என்பது வேறு விஷயம்), பொங்கல் கொண்டாடுகிறார்கள், வாழை மரம் கட்டி விழா எடுக்கிறார்கள், வேளாங்கன்னிக்கு நடை பயணம் போகிறார்கள். இவர்களுகெல்லாம் நமது இந்து மதம் ஒன்றை மட்டும் எப்போதும் உரக்க சொல்லி கொண்டே இருக்கிறது. அது பாரதி தனது கவிதையில் கூறுவது போல்
பல வேடிக்கை மனிதரை போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?
//****இஸ்ட் அவர்களே, உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் உண்மையான பகுத்தறிவு தருமாறு நீங்கள் வெறுக்கும், கேவலப்படுத்தும், இகழும் இந்து தெய்வங்கள் அனைவரிடமும் வேண்டுகிறேன்..
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
//
நீங்கள் அனைவரும் முக்தி அடைந்துவிட்டாலே, எங்களுக்கு வேலை இல்லை
Periyarist, do you want to talk about your great leader EVR and his marriage to a girl old enough to be his grand daughter? Waiting for your “pakitharuvu” pearls of wisdom on this. Do not trouble yourself reg our muthki, thank you.
//நீங்கள் அனைவரும் முக்தி அடைந்துவிட்டாலே, எங்களுக்கு வேலை இல்லை//
இப்பொழுது மட்டும் என்ன இருக்கிறது? பல ‘பெரியாரிஸ்டு’ களுடன் வாதிட்டுவிட்டேன்.. உங்களிடமும் வெட்டிவாதம் செய்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை! ஏனெனில் என்னசொன்னாலும் “நான் புடிச்ச முயலுக்கு மூணே கால்னு” சாதிக்கரவங்க நீங்க!
அதனால், என் நேரத்தை வேஸ்ட் பண்ண விரும்பல, பிறகு சந்திப்போம்!
ஜெயஸ்ரீ அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் கட்டுரை மிக நன்றாக, பொருள் பொதிந்ததாக உள்ளது. மகிழ்ச்சி.
நாம் கூறுவது எதிலும் உள்ள பொருள் காண்பது என்பது அவரவர் நிலைப்பாட்டில் இருந்துதான் என்பதை மறுக்க முடியாது. தாங்கள் மற்றும் பலரின் மொழிகளுக்குப் பதிலாகவும், மேலும் சிலவற்றை விளக்குவன ஆகவும் இருக்கலாம் என ஆன்றோர் கூறியவைகளை இங்கு சமர்ப்பிக்கிறேன்.
“மும்முதலை எம்மதமும் முற்கொள்ளும் ஒர்முதலே
மும்முதலாய் நிற்கும் என்றும் மும்முதலும் – மும்முதலே
என்னல் அஹங்காரம் இருக்கும் மட்டே யான் கெட்டுத்
தன்னிலையில் நிற்றல் தலை”
- என்று குறிப்பிட்டுள்ளார் ரமணர் “உள்ளது நாற்பது” பாடலில்.
பொழிப்புரை: எந்த மதமும் ஜக, ஜீவ, பரம் என்னும் மூன்று முதற்பொருள்களின் தோற்றத்தை முதலில், அதாவது விவகார (உலகியல்) தசையில் (நோக்கில்), ஒப்புக்கொள்ளும். அவ்வாறு ஒப்புக்கொண்டு, பிறகு அவற்றின் இயல்பை விசாரித்து, முடிவில் சில மதங்கள், ஓர் சத்திய வஸ்துவாயுள்ள முதல் பொருளே ஜக, ஜீவ, பரம் என்னும் மூன்று முதற்பொருள்களாக மித்தையாகத் தோன்றுகிறது என்று சொல்லுதலும், வேறு சில மாதங்கள் அம் மூன்று முதல் பொருட்களும் எக்காலத்திலும் சத்திய நித்தியத் தன்மை வாய்ந்தது, எவ்வாறு மூன்று முதற்பொருள்களாகவே உள்ளன என்று சொல்லுதலும் நானென்ற அகங்காரம் ஜீவித்திருக்குமட்டுமே நிகழும். உருவ நாசமுற்றுத் தனது பிறப்பிடமாகிய ஆன்ம சொரூபத்தில் தங்குதலே சிறப்பாகும்.
“பத்தன் நான் என்னுமட்டே பந்த முக்தி சிந்தனைகள்
பத்தன் யார் என்று தன்னை பார்க்குங்கால் – சித்தமாய்
நித்த முக்தன் தான் நிற்க நிற்காதேர் பந்த சிந்தை
முக்தி சிந்தை முன்னிற்குமோ?” – என்றும் கூறுவார்.
பொழிப்புரை: நான் பந்தமுடையவன் என்று எண்ணுகிற மட்டுமே பந்த சிந்தனையும் முக்தி சிந்தனையும் உண்டாகும். பந்தமுடையவன் யாரென்று விசாரித்து தன்னை அறியுங்காலத்தில், நித்த முக்தனாகிய தான் ஒருவனே அபரோட்சமாய் விளங்குவதால், பந்த சிந்தனை அழியுமானால் முக்தி சிந்தனை மாத்திரம் அழியாமல் தன்முன் நிற்குமோ?
இதுதான் முடிவு என்றால், அவரவர் வழியைத் தேர்ந்து செல்வது அவரவர் உள்ள நிலைப்பாடு அன்றி வேறு ஏது?
S. Raman
எனது மறுமொழியில் ” மாதங்கள்” என்று ஒரு இடத்தில் தவறு நேர்ந்து விட்டது. அதை “மதங்கள்” என்று திருத்திக் கொள்ளவும்.
//In that case, before starting any spiritual Sadhana, one can just consult the horoscope and find out if Mukthi is written for him or not.. If it says no, why to even waste time in pursuing spirituality?
You see, mixing astrology with pure and prestine Hindu philosophical thought leads to such fallacies.//
You may not believe this. But one of my friends who went to Vaitheeswaran Koil and Nadi josyam was shocked when the person looking at her ‘chuvadi’ gave it to her to take home saying that this soul has no more births.
As far as I know horoscope talks only of this birth and this life.
//நீங்கள் அனைவரும் முக்தி அடைந்துவிட்டாலே, எங்களுக்கு வேலை இல்லை// உங்களுக்கு ரொம்ப bore அடிக்கும்.
திரு., ஜெயஸ்ரீ சாரநாதன்.,
தங்கள் கூற வருவது என்ன?..
பெரியாரிஸ்டு அவர்களே,
நீங்களும் உங்கள் ராமசாமி நாயக்கரும் தான் தமிழர்களின் விரோதிகள். சங்க இலக்கியங்களை வாசித்துப் பாருங்கள் – அப்பொழுது தெரியும், ராமாயண மகாபாரதக் கதைகளில் நம் சங்கத் தமிழர்கள் தொன்று தொட்டு எத்தனை ஈடுபாடு வைத்திருந்தனர் என்று. பரிபாடலைப் படித்துப் பாருங்கள் – அதில் வேதத்தின் புருஷ சூக்தமும், மாண்டுக்ய உபநிஷத்தும் அப்படியே தமிழாக்கப் பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்கள் முழுவதிலும் கோயில் வழிபாடுகள் நடந்து வந்ததை கண் திறந்து வாசியுங்கள். அப்பொழுது தான் அம்பலாகும் உங்களுடைய ரவுடித்தனமும் கயமையும். ஜைனராக இருந்தும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் அந்தணர்களை எப்படி வருணித்து உள்ளார்கள் என்று பாரும் – தைத்திரீய உபநிஷத்தின் ஒரு வாக்கியத்தை அவர் சமணராக இருந்தும் தமிழ்ப் படுத்தியுள்ளார். இதனால் தானோ என்னவோ, தமிழர் கலாச்சாரத்தை ‘காட்டுமிராண்டி கலாச்சாரம்’ என்று சொன்னாரோ தாடி வைத்த உங்கள் தலைவர்!
உமது ஆரிய-திராவிட வரலாற்று கட்டுக்கதைக்கு நேர்முரணாக சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. வேதம், உபநிஷத்து, இதிகாசம், ஆகமம் இவற்றை ஒட்டியே எழுந்த சங்க நூல்களில் எங்குமே பௌத்தம், சமணம் ஆகிய மதங்களைப் பற்றி இல்லாமையே தமிழ் சங்க கலாச்சாரமும், இதிகாச புராணங்களும் அவ்விரண்டு மதங்களுக்கு முந்தையதே என்பது சான்று. இதனால் உங்கள் aryan-dravidian theory அடிபட்டுப் போய்விட்டதே! அந்தோ பரிதாபம்! இவ்விஷயம் இப்பொழுது அம்பலம் ஆனதற்கு, இனி என்ன செய்வீர்கள்?
வேதத்தையும், இதிகாச புராணத்தையும் வெறுக்கும் உங்கள் பெரியார் கட்சிக்கு ‘தமிழ்க் கலாச்சாரத்தைப் பேண உழைக்கிறோம்’ என்று சொல்ல ஒரு அருகதையும் இல்லை. சங்க நூல்களையும், வேத-இதிகாச-புராண நூல்களையும் ஒழுங்காக வாசித்து ‘தவற்றினை ஒத்துக் கொண்டேன்’ என்று எழுத உங்களை வரவேற்கிறோம். அல்லது மரியாதையாக stop infesting the web with your filthy, obnoxious, and at best resource-wasting presence. மேலும் உங்களது கைவரிசையைக் காட்ட முற்படின் உமது வாயடைக்கச் செய்யுமாறு சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்து மறுக்க முடியாத ஆதாரங்களை வீச எம்க்கு சக்தி உண்டு.
(edited and published)