மலேசியா: மாரியம்மன் கோயிலில் தீமிதித்து தான் இந்துப் பெண் என்று நிரூபித்து அரசுக்கு எதிராகப் போராடும் பங்காரம்மா! - குமரியில் பாரதிய தலித் மாநாடு: கல்விக் கடன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தீர்மானம் - இஸ்லாமால் சூறையாடப் படும் இந்து பூமி காஷ்மீர்: ஒரு வரலாற்றுப் பயணம் - சீமைக் கருவேல மரங்களைக் கண்ட இடங்களில் எல்லாம் வெட்டுங்கள்; வேப்ப மரம் வளருங்கள்! - டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பீமாயணம் என்ற சம்ஸ்கிருத காவியமாக எழுதும் 84 வயது பண்டிதர்!
முகப்பு » ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள்

வேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்

முந்தைய கட்டுரை: அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்

(தொடர்ச்சி…)

வேதம் கூறும் பிரபஞ்சவியலில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும், ஒன்றையடுத்து ஒன்றாகவும் முடிவில்லாமல் (infinity) பலப்பல உலகங்கள் (Universes) வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன என்று பார்த்தோம். இவற்றில் எப்பொழுதுமே கால் பங்கு, தோற்றம் கொண்டவையாகவும் (manifest) மீதி முக்கால் பங்கு, தோற்றம் இல்லா நிலையிலும் (unmanifest) இருப்பதை நடராஜரின் தாண்டவம் எப்படிக் காட்டுகிறது என்றும் பார்த்தோம்.

இந்த அமைப்பில் மும்மூர்த்திகளும் ஓய்வு ஒழிவில்லாது இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தையும் தாங்கியும், ஊடுருவியும் இருக்கும் முழு முதல் பரப் பிரம்மம் நாராயணன் எனப்படுகிறான் என்று பிரமாண நூல்கள் கூறுகின்றன என்றும் பார்த்தோம். இந்த நூல்கள் உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்பவை என்று அனைத்து ஆசார்ய புருஷர்களும் கூறியுள்ளனர். இவை constitution of India போன்றவை. இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் இந்து மதத்தின் எல்லா வழிகளும், வழக்கங்களும் எழுந்துள்ளன.

கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.

முக்தி பெற சிவனை வணங்கினால் என்ன, விஷ்ணுவை வணங்கினால் என்ன, இதில் என்ன பேதம் இருக்கிறது என்று எண்ணலாம். அப்படி அல்ல, இந்தக் கடவுளை வணங்கினால்தான் முக்தி, அந்தக் கடவுளை வணங்கினால் முக்தி கிடைக்காது என்றும் எண்ணலாம். இதன் விளைவாக எந்தக் கடவுள் பெரியவர் என்ற சர்ச்சையும் பல காலம் நடந்து வந்திருக்கிறது. பல காலம் என்றேன், அப்படி என்றால் பல காலத்துக்கு முன், அந்த நாளில் இந்தச் சர்ச்சை இல்லையா என்றால், இல்லை என்று சொல்லலாம். காரணம், இவை குறித்த கருத்துகளை அந்த நாளில் தெளிவாக அறிந்திருந்தனர். அதற்கும் காரணம், பிரமாண நூல்கள் சொல்லும் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தனர்.

எனவே பிரமாண நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

இந்த மூன்று நூல்களுள், பிரம்ம சூத்திரம் முழுவதுமே, பிறக்கும் உயிர்களின் நிலை, பரம் பொருள் என்னும் பரப் பிரம்மத்தின் நிலை, அந்தப் பரம் பொருளை அடையும் விதம் ஆகியவை பற்றி ரிஷிகள் கூறியுள்ள விஷயங்களை சூத்திரங்களாகக் கொண்டுள்ளது. அந்த நாளிலும் எழுந்துள்ள பல எதிர் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் அவை உள்ளன.

அவை கூறுவது என்னவென்றால், பரப் பிரம்மனையே தியானித்து வந்தால், அந்த பிரம்ம நிலையை ஒருவன் அடைவான். பிரம்மம் என்பதற்கு எளிமையான விளக்கம் ‘சத்யம், ஞானம் அனந்தம் (எல்லை இல்லாதவன்)’ என்பதே. இந்த மூன்று குணங்களைக் கொண்டவனாக இறைவனை எந்நேரமும் நினைத்து வந்தால், முக்தி கிடைக்கும்.

இவை எல்லாம் சொல்வதற்கு நன்றாக இருக்கும். பரப் பிரம்மனது ரூபம் என்ன? நான் சிவனை வாங்குகிறேன். அவனை பிரம்மமாக தியானித்தால், எனக்கு முக்தி கிடைக்காதா? அல்லது ராமனை வணங்கும் நான் அவனைப் பிரம்மமாக நினைத்து தியானம் செய்தால் முக்தி கிடைக்காதா? நாராயணனை மட்டுமே தியானம் செய்தால்தான் முக்தி கிடைக்குமா? அப்படி என்றால், சிவனடியார்கள் பலரும் முக்தி அடைந்ததாக நூல்கள் கூறியுள்ளனவே, அவை பொய் என்று ஆகாதா? மேலும் எந்த ஒரு தெய்வ உருவையும் அல்லாது ஞான வடிவாகப் பல சித்தர்கள் தியானித்து பரம நிலை அடைந்துள்ளனரே, அது எப்படி? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேரிடையான பதில் ஜோதிடத்தில் உள்ளது.

 

ஜோதிடம் காட்டும் முக்தி

ஜோதிடமா, அது புரட்டு, என்று சொல்லும் முன், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஜோதிடம் என்றால் ‘ஒளியியல்’ (Science of Light) - ஜ்யோதி-இஷா என்று அர்த்தம். அந்தப் பரம் பொருள் கோடி சூர்ய ஒளி உடையவன். விராட புருஷனாக பிரபஞ்சத்தில் வியாபித்துள்ள அவன் உருவம் நட்சத்திரங்களின் உருவம் - “நட்சத்த்ராணி ரூபம்’ என்று புருஷ சூக்தம் சொல்கிறது. அதாவது அந்தப் பரம புருஷன் நக்ஷத்திர ரூபத்தில் உள்ளான்.

‘நக்ஷ்’ என்னும் வடமொழி வேர்ச் சொல்லிலிருந்து நக்ஷத்ரம் என்னும் சொல் உண்டானது. நக்ஷ் என்றால் அடைதல் என்று பொருள். (to attain) எதை அடைய வேண்டுமோ அது நக்ஷத்ரம். மேலும் இது ‘ந- க்ஷீயதே’ - குறையாதது என்றும் பொருள்படும். குறையாததும், குறைவில்லாததும் அடையப்பட வேண்டியதும் பிரம்மம், எனவே நக்ஷத்ரம் அவன் ரூபமாகிறது.

அவனிலிருந்துதான் நாம் வந்தோம், அவனில்தான் முடிவில் ஐக்கியமாவோம் என்னும்படி, கண்ணுக்குத் தெரியும் நக்ஷத்திரமான சூரியனிலிருந்துதான் நம் பூமி வந்தது. முடிவில் சூரியனைத்தான் அது அடையப் போகிறது. ஒவ்வொரு நக்ஷத்திரமும் அது வந்த ஜ்யோதியில்தான் கடைசியில் ஐக்கியமாகப் போகின்றன.

நக்ஷத்ரங்களின் ஒளி இயல்தான் ஜ்யோதிஷம் - எவ்வாறு என்றால், சூரியன் காலை இதமாகக் காய்கிறான். மதியம் உஷ்ணமாகக் காய்கிறான். பின்மதியம், அவன் உக்ரம் தாங்க முடிவதில்லை. ஆனால் மாலை மிதமாகி, இரவில் நம் இயக்கத்தையே குறைத்து விடுகிறான். மேல்சொன்ன ஒவ்வொரு பொழுதிலும், கோடிக்கணக்கான விஷயங்கள் நடக்கின்றன. தாவரங்கள் உணவு உண்டாக்குவதிலிருந்து, கிருமிகள் அழிவதும், நீர் மேகம் உண்டாவதும், என்று பல செயல்களுக்கு அந்தச் சூரியன் காரணமாகிறான். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?

அவனா செய்கிறான்? அவன் எங்கோ நிலையாக இருக்கிறான். நாம்தான் - இந்த பூமிதான் சுழன்று சுழன்று, அவனிடமிருந்து வேறு வேறான பலனை, வேறு வேறான நிலையில், வேறு வேறான நேரத்தில் பெற்றுக் கொள்கிறோம். சூரியன் இருந்த இடத்தை விட்டு அசைவதில்லை. தனியாக ஒன்றும் செய்வதில்லை. அதே போல்தான் இந்த zodiac எனப்படும் வான் வெளி மண்டலத்தை நாம்தான் வெவ்வேறு நேர- கால- நிலையிலிருந்து பார்த்து, சூரியனிடமிருந்து வெவ்வேறான கிரணங்களை அனுபவித்தது போல, நம் நிலைக்கு ஏற்ப, வெவ்வேறான பலன்களை அனுபவிக்கிறோம். அவை என்னென்ன என்று சொல்வதுதான் ஒளியியல் எனப்படும் ஜ்யோதி- இஷம்.

இதைப் பற்றி முதன் முதலில் கூறியவர் நான்முகப் பிரமன். அவர் உபதேசித்த கருத்துகள் ‘பிரம்ம ரிஷி சம்வாதம்’ என்று சமஸ்க்ருதத்தில் இருக்கின்றது. சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு. ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் பெயரில் தற்சமயம் கிடைக்கிறது. அவரையும் சேர்த்து, 18 மகரிஷிகள் ‘ஜோதிட ப்ரவர்தகர்கள்’, (ஜோதிட சாத்திரத்தைத் தோற்றுவித்தவர்கள்) என்று சொல்லப்படுகிறார்கள். இவர்கள் தத்தமது பெயரால் உருவாக்கிய சமிஹிதைகளில் சொன்ன கருத்துகளைப் பல புராணங்களிலும் காணலாம்.

முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல பல கடவுளர்களும் தத்தமக்கென்று கொண்டுள்ள பணிகளை (jurisdiction or portfolio) தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஜோதிடம் உதவுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தையும், அதை இயக்கிக் கொண்டிருக்கும் கடவுளர்களைப் பற்றியும் சொல்வதாலும், ஜோதிடம் என்பது ‘வேத புருஷனின் கண்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஜோதிடத்தின் பயனைப் பற்றிய இந்த முன்னுரையுடன், நான்முகப் பிரமன் கூறும் முக்தி பற்றிய கருத்து என்ன என்று பார்ப்போம். அவர் தந்துள்ள ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் உபதேசத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், 73 யோகங்களைச் சொல்லி அவற்றுக்கான முன் பிறவிக் காரணத்தையும் கூறுகிறார். என்ன செயல் செய்தால் மறு பிறவியில் என்ன பயன் கிட்டும் என்று இவை தெளிவாக்குகின்றன. மும்மூர்த்திகள், அவர்தம் தேவியர் ஆகியோரை வணங்குவதால் என்ன பயன் என்றும் பிரம்மா சொல்கிறார்.

அவற்றுள் மும்மூர்த்தி பற்றிய குறிப்புகள், முக்தி பற்றி விவரிக்கின்றன. அவரது கூற்றுப்படி மும்மூர்த்திகளுமே முக்தியைத் தரக் கூடியவர்கள்.

 

மும்மூர்த்திகளும் முக்திக்கு சாதனம்

சீகண்ட யோகம் 

shivapadamஒருவன் சிவனடியார்களைத் துதித்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்து உபசாரங்களையும் செய்து வந்தால், மறு பிறவியில், சீகண்ட யோகத்தில் பிறந்து, ருத்ராக்ஷம் தரித்து, திருநீறு பூசி, அனவரதமும் சிவத் தியானத்தைச் செய்து, சைவ சித்தாந்தப்படி விரதங்களை அனுஷ்டித்து, சாதுக்களை உபசரித்து, சிவனையே முழுமுதல் கடவுளாகக் கொண்டு, மக்களால் மகாத்மா என்று துதிக்கப்பட்டு, மறு ஜன்மம் இல்லாத சிவபதம் அடைவான்.

லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது சீகண்ட யோகம் ஆகும்.

 

ஸ்ரீநாத யோகம் 

paramapadamஒருவன் நாராயணனையே முழு முதல் கடவுளாகக் கொண்டு, வைணவ அடியார்களை நன்கு உபசரித்து, அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்து வந்தால் மறு பிறவியில் ஸ்ரீ நாத யோகத்தில் பிறந்து, நாராயணின் திருச் சின்னங்களைத் தரித்து, நாராயணன் ஒருவனையே தியானித்து, நல்ல குடும்பம், மனைவி, மக்கள், செல்வம் பெற்று அனைவராலும் கொண்டாடப் பட்டு, மறு ஜன்மம் இல்லாத பரமபதம் அடைவான்.

களத்ரகாரகனான சுக்கிரனும், பாகியாதிபதியான 9 -ஆம் வீட்டு அதிபதியும், புத்திர காரனான புதனும் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது ஸ்ரீ நாத யோகம் ஆகும்.

 

விருஞ்சி யோகம் 

lord_brahmaஒருவன் வேதம் கற்ற பிராமணர்களைப் போஷித்து, வைதீக காரியங்களுக்கு உறுதுணையாக இருந்தால், மறு பிறவியில் விருஞ்சி யோகத்தில் பிறந்து, பிரம்ம ஞானமும், அறிவும் பெற்று, நல்ல குடும்பம், மனைவி, குழந்தைகளைப் பெற்று, சிறந்த சீடர்களைப் பெற்று, ச்ரேஷ்டன் என்று பெயர் பெற்று, பிரம்ம தேஜசுடன் ஜொலித்து, மறு ஜன்மம் இல்லாத பிரம்ம லோகம் அடைவான்.

குரு, சனி, லக்னாதிபதி ஆகியோர் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது விருஞ்சி யோகம் ஆகும்.

இந்த மூன்று யோகங்களும், மூன்று மூர்த்திகளைப் பரப் பிரம்மமாக வழிபடுவதால், அவ்வாறு வழிபட்டவர் பிறவாமை என்னும் முக்தி நிலையை அடைவர் என்று காட்டுகின்றன. இதைச் சொன்னவர் நான்முகப் பிரமனே.மேலும் முக்திக்கு சாதனமாக ஒருவன் செய்ய வேண்டியதையும் இந்த யோகங்கள் காட்டுகின்றன.

 

சிவன் - விஷ்ணுவில் யார் பெரியவர்?

இந்த யோகங்கள் காட்டும் மற்றொரு விளக்கம் யார் பெரியவர் என்ற பேதம் சிவன், விஷ்ணுவுக்கு இருக்கிறதா என்பது. அது எப்படி என்று பார்ப்போம்.

எந்தக் கடவுளைப் பரப் பிரம்மம் என்று வணங்குகிறோமோ, அந்தக் கடவுள் மீதே உடல், பொருள், ஆவி என்று அனைத்து செயல், எண்ணங்களைச் செலுத்த வேண்டும். அப்படி, இப்படி என்று கவனச் சிதறல் இல்லாமல், முழு முனைப்புடன், இரவு பகலாக தியானம் இருக்க வேண்டும். எனவே ஒரு கடவுளை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒருவன், வேறு கடவுள் என்று கவனம் சிதறாமல் இருக்க அந்தந்தக் கடவுளே முக்கியம், அவனே உயர்ந்தவன் என்றெல்லாம் சொல்லி கவனம் கொள்ள வைத்துக் கொள்ளும் பொருட்டு பெரியோர் கூறியிருக்கின்றனர்.

சிவனை வணங்குபவர்கள், அவனையே ஒரே கடவுள் என்று கவனம் செலுத்தி பரம்பொருளாக வணங்குங்கள் என்று ஊக்குவித்திருக்கிரார்கள். அதேபோல் விஷ்ணுவே ஒரே கடவுள் என்று அவனை வணங்குபவர்கள், வேறு கடவுளர் என்று கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். நடுவில் இந்தக் கடவுளை வேண்டிக்கொண்டேன், அந்தக் கடவுளை வேண்டிக் கொண்டேன் என்றால், அந்தந்தக் கடவுளர் தரும் நன்மைகளில் நாட்டம் வருகிறது என்றும் அல்லது, பரப் பிரம்மனையே அடைய வேண்டும் என்ற சிந்தையிலிருந்து விலகி, தோன்றும் உலகிலுள்ள பிற பயன்களை மனம் நாடுகிறது என்றும் ஆகி, தீவீர வழிபாட்டை நீர்க்கச் செய்து விடும். இந்தக் கோட்பாடுகள், முக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்குத் தேவை.

முக்தியில் நாட்டம் இல்லாதவர்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றபடி, எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த பலன்களுக்கு தேவதையோ, அந்தந்த தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம். அல்லது மனம் விரும்பும் தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம்.

இந்த விஷயத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ‘மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்’. அவர்கள் தீவீர முக்தி சிந்தனையைக் கொள்கையாகக் கொள்கிறவர்கள். இன்றைக்கு அவர்கள் எல்லோருமே அப்படி என்று சொல்ல முடியாது, ஆயினும், முக்தி மார்க்கத்தை நாடுபவர்கள், இன்னும் இருக்கிறார்கள். ‘நாராயணனே நமக்கு’ என்று தீவீர நாட்டம் கொள்வதால், அவர்கள் கொள்கை தவறல்ல. அவர்கள் பிற கோயில்களுக்குப் போகாததால், அவர்களுக்கு துவேஷம் என்று சொல்வது சரியல்ல. அதேபோல், ‘சர்வம் சிவ மயம்’ என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி பெற விரும்புகிறானோ, அவன் பிற தெய்வங்களை நாடக் கூடாது.

அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே? அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும்? அப்படி அவை குறைந்தவை என்று சொன்னால், இவன் முழு முதல் என்று வணங்கும் அந்தத் தெய்வமும் குறைந்தது என்றாகுமே?

இதைச் சுட்டிக் காட்டும் வண்ணம் கீதையில் கண்ணன் கூறுகிறான். (7-16).

நான்கு விதமானவர்கள் இறைவனை வழிபடுகின்றனர்.

  • செல்வத்தை வேண்டி வழிபடுகின்றனர்.
  • துன்பத்திலிருந்து விடுபடவேண்டி வழிபடுகின்றனர்.
  • வேறு சிலர் இந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்று ஆச்சர்யப்பட்டு அவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டு வழிபடுகின்றனர். (அப்படிப்பட்டவரை ஜின்ஞாசு என்பர்.)
  • மெய்ஞானம் பெற்ற ஞானியும் வழிபடுகிறான்.

 

இப்படிச் சொல்லிவிட்டு, கண்ணன் சொல்கிறான், இவர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் என்றாலும், இவர்களுள் ஞானிதான் எனக்குப் பிரியமானவன். ஏனென்றால், என்னுடைய உண்மையான சொரூபம் இவனுக்குத்தான் தெரியும். “வாசுதேவம் சர்வம் இதி’ - எல்லாவற்றுக்குள்ளும் வசிப்பவன் வாசுதேவன் என்னும் நானே என்று என் சுய ரூபத்தை இவன் அறிவான், அதனால் இவனும் என் ரூபத்தில் இருக்கிறான் என்று கண்ணன் சொல்லும் கீதை நமக்குப் பிரமாண நூல்.

எந்த ரூபத்தை ஒருவன் முக்தி மார்க்கத்தில் வணங்கினாலும், அந்த ரூபத்தில் உள்ள பரம் பொருள்தான் அனைத்து தெய்வங்களிலும், அண்ட சராசரங்களிலும் உள்ளான் என்று ஆத்ம பூர்வமாக உணர்வதே சரியான மார்க்கம். இந்த மார்க்கத்தில் ஒருவன் நிலைத்திருக்கும்போது, கவனச் சிதறல் கூடாது என்ற நோக்கத்தில் பெரியோர் சொன்னவை, சமயச் சண்டைகளுக்கு வழிகோலி விட்டன.

முக்தியில் நாட்டமுள்ளவர்களானாலும் சரி, அப்படிப்பட்ட நாட்டமில்லாதர்களும் சரி, பிற தெய்வங்களைக் குறைத்துச் சொல்லுதல் என்பது - ஜோதிட பாஷையில் சொல்வதானால் - பாவ கர்மாவை உண்டு பண்ணும். அப்படிப்பட்ட கதைகளைப் பற்றிப் பேச ஒருவர் விரும்பினால், கவனமாகக் கையாள வேண்டும். அதனால் வரக்கூடிய பிற தெய்வ நிந்தனையும், அதனால் புண்படும் பக்தனின் அவதியும், கர்மாவை உண்டு பண்ணக்கூடியவை. அன்றைக்கு அவர்கள் சொல்லவில்லையா என்றால், முக்தி மார்க்கத்திற்குச் சொன்னார்கள். முக்தியில் நிலை பெற்றவன் அப்படிப் பேசலாமே என்றால், உண்மையிலேயே முக்தியில் நிலைபெற்றவன், பரம் பொருளின் சொரூபத்தை உணர்ந்திருப்பான். அவன் அப்படிப் பேச மாட்டான்.

 

நான்முகப் பிரமன் தரும் முக்தி

veda-paadasaalaiமுக்தி மார்க்கத்திற்கு சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு கடவுளர்களையும் எவ்வாறு வழிபட வேண்டும் என்று மேற்சொன்ன யோகங்கள் காட்டுகின்றன. ஆனால் நான்முகப் பிரமன் விஷயம் அப்படிச் சொல்லப்படவில்லை. இருப்பதிலேயே, நான்முகன் பக்திதான் எளிதானது. வேதத்தைப் போற்றுதலும், வேதம் ஓதுதலை வளர்த்தலும், வேதம் ஒதுவோரை நன்முறையில் காத்தலும், அவர்களுக்குச் சேவை புரிதலும் பிரமனுக்குச் செய்யும் பக்தி என்று சொல்லப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்பத்திலும் வேதத்தை நினைவுக்குக் கொண்டு வந்து உலகைப் படைத்து, வேதத்தை நிலை நிறுத்துபவன், நான்முகப் பிரமனாக இருக்கவே, வேதத்தைப் போஷித்தலே முக்திக்கு வழி என்றாகிறது. நான்முகப் பிரமனே வேத உருக் கொண்டவன் என்றும் ஆகிறது. அதனாலும் அவனுக்கென்று தனிக் கோயில் இல்லாமல் இருக்கலாம். அதனாலும், ஒவ்வொரு உற்சவத்திலும், முதலில் வேத கோஷம் செய்துகொண்டு கற்றோர் செல்லவேண்டும். அவர்களைப் பின்தொடர்ந்து தான் மற்றோர் செல்வர்.
 
வேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரமனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ அவன் முக்தி அடைவான். வேதத்தையும், அது பரப்ப உதவும் சமஸ்க்ருதத்தையும் வெறுக்கும் திராவிடத் தலைவர்கள் எப்பேர்பட்ட அறிவிலிகள் என்று இதிலிருந்து தெரிகிறது. இவ்வளவு எளிய வழியை அழித்துவிட்டார்களே!

 

தோன்றும் பிரபஞ்சத்தில் முக்தன் நிலை

மும்மூர்த்திகள் மூலமும் முக்தி கிடைக்கும் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் பல முக்தர்கள், சித்தர்கள் வரலாறுகள் இருக்கின்றன.

 

முக்தி பெற்ற இவர்கள் எங்கே இருக்கிறார்கள்?

இதைப் பற்றி ஜைமினி, பாதராயணர் போன்றோர் விவாதித்த கருத்துகள் பிரம்ம சூத்திரங்களாக உள்ளன. மறு பிறவி என்னும் கர்மப் பிணைப்பிலிருந்து இந்த முக்தர்கள் விடுபட்டு விடுகிறார்கள். ஆனால் நான்முகப் பிரமனின் 100 வருட ஆயுளாக இருக்கும்  இந்தத் தோன்றும் பிரபஞ்சத்தின் கால் பகுதியைவிட்டு இவர்களால் வெளியேற முடியாது என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. நான்முகப் பிரமன் இருக்கும் பிரம்ம லோகத்தில் இவர்கள் நிலை பெற்று, அந்த நான்முகனின் ஆயுள் முடியும்போது அவனுடன், இந்தச் சக்கரத்தை விட்டு வெளியேறி, பிரபஞ்சத்தையே தன் கருவில் தாங்கும் பரம் பொருள் என்னும் அந்தப் பிரம்மனிடம் (Supreme Brahman) லயிப்பர்.

இந்தக் கால் பகுதி பிரபஞ்சத்தில் முக்தி அடைந்த உயிர்கள், எங்கு வேண்டுமானாலும் சஞ்சரிக்கலாம், எதை நினைத்தாலும் சாதிக்கலாம். படைத்தல் தொழில் தவிர, பரம் பொருள் செய்யும் எந்தச் செயலையும் செய்யக்கூடிய நிலையையும் ஆற்றலையும் அவர்கள் பெறுகிறார்கள்.

இதோ வேதம் காட்டும் பிரபஞ்சத்தைப்பாருங்கள்…
 

nataraja5-theory-of-creation2

 நாம் பயணிக்கும் பிரபஞ்சம் இது

 

முக்தர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றால் என்ன அர்த்தம்? பல்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய அகத்தியரால் எப்படி அப்படித் தோன்ற முடிந்தது என்று இது காட்டுகிறது அல்லவா? அவர் என்றோ முக்தி அல்லது சித்தி அடைந்திருப்பார். வெவ்வேறு யுகங்களில் தேவை ஏற்படும்போது, அப்பொழுதே அப்படியே அவரால் தோன்ற முடியும். கருவில் பிறந்து, வளர்ந்து வர வேண்டிய அவசியமில்லை. எங்கெங்கு தேவையோ, அங்கங்கு தோன்றி, செய்ய வந்த செயலைச் செய்திருப்பார். ஆனால் கர்மப் பிணைப்பு அவருக்கு ஏற்படாது. அதுதான் இந்த முக்தி தரும் விசேஷச் சலுகை.

இறைவன் திடீரென்று தோன்றி ஆட்கொண்டான் என்றெல்லாம் புராணங்கள் சொல்கின்றனவே, அவை கட்டுக்கதை அல்ல என்றும் இது காட்டுகிறது. முக்தர்களாலேயே, இஷ்டப்படி வந்து போக முடியும் என்றால், இறைவன் வருவதில் என்ன அதிசயம்? அது எப்படி கட்டுக் கதையாக இருக்கும்?

அவ்வாறே, நாரதரும் வந்து போய்க் கொண்டு இருக்கிறார். பல ரிஷிகளும், பெரியோரும் நம் கண்ணில் பட முடியும் - நாம் அந்த அளவு ஆத்ம சாதனை கொண்டிருந்தால். இதன்படி ஆதி சங்கரரோ, அல்லது இராமானுஜரோ மீண்டும் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. கர்ம வினையால் அவர்கள் பிறக்க மாட்டார்கள். உலக நன்மைக்காக, ஆண்டவன் ஆஞ்ஞையால் அவர்கள் அவதரிப்பார்கள்.

வெவ்வேறு காலக் கட்டத்தில் பிரபந்தங்களைப் பாடிவிட்டுப் போய் விட்டார்கள் ஆழ்வார்கள். நம்மாழ்வார் அருள, நாத முனிகள் அவற்றைப் பெற்றாரே, அது எப்படி - என்பதும் இந்த அமைப்பில் தெரிகிறது. இன்றும் நாத முனிகள் அளவுக்கு ஒருவன் தியானம் செய்தால், அவனுக்கு முன் நம்மாழ்வார் தோன்ற முடியும். திவ்யப் பிரபந்தத்தை எடுத்துக் கொடுக்க முடியும்.

இதையெல்லாம் சொன்னோம் சரி, இந்த மும்மூர்த்திகள் தவிர வேறு தெய்வங்களைப் பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்காதா? பிரம்ம சூத்திரம் அதையும் சொல்கிறது.

 

பிற மதம், பிற தெய்வம் மூலம் முக்தி உண்டா?

ஒருவன் எதை உபாசிக்கிறானோ அதை அடைவான். இதை ‘தத்க்ரது’ என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. பரம் பொருள் என்னும் அந்த முழு முதற் கடவுளைத் தியானித்து மும்மூர்த்திகளில் ஒருவரை உபாசித்தால் முக்தி கிடைக்கும். வேத மதத்தில் பிற மூர்த்திகளை உபாசித்தாலும், முடிவில் இந்த மும்மூர்த்திகளுக்குத்தான் ஒருவன் செலுத்தப்படுவான். அவையெல்லாம் பரிவார தேவதைகள். சிவன் அல்லது விஷ்ணுவுடன் சேர்பவர்கள். அவர்கள் மூலம் முக்திக்கு வழி பிறக்கும்.

sri-ramanujarஆனால் படைக்கப்பட்ட உலகில் தோன்றின உயிர்களை முழு முதற் கடவுளாக எண்ணுபவர்கள் அந்த உயிர்களையே அடைவார்கள். இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. அதனால் ஆசாரியனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முக்திக்குத் தேவையான தியானம் இல்லாவிட்டாலும்கூட, முக்தரான இராமானுஜரைத் தியானிப்பதால், முன் கூறிய ‘தத்க்ரது’ கோட்பாட்டின்படி, வைணவர்கள் இராமானுஜரை அடைந்து, தாமும் முக்தி அடைவர். தெய்வம் கொடுத்த உறுதிமொழி இப்படி நடைமுறைப்படுத்தப்படும்.

ஆனால் பிற மதங்களில் இவ்வாறு அல்ல. அம்மதங்களில் தெய்வம் என்று போற்றப்படுபவர்கள், ஆன்மிக விழிப்படைந்த உயிர்களாக இருந்தாலும், முழு முதற் கடவுளான பிரம்மத்தை உபாசிக்காமையால், முக்தி அடைந்தவர் இலர். எனவே அவர்களுக்கு மறு பிறவி உண்டு. அதுவரை அவர்களை உபாசித்த உயிர்களும் அவர்களிடமே நிலைத்து, மீண்டும் அவர்கள் பிறக்கும்போது பிறக்க வேண்டும். அல்லது ஒரு கல்பம் முடிந்து பிரளயம் வந்து படைக்கப்பட்ட எல்லாம் அழியும்பொழுது அவையும் அழிந்து மீண்டும் பிறக்க வேண்டும். இதை பிரம்ம சூத்திரம் வாயிலாக அறிகிறோம்.

இன்றைக்குப் பிற மதங்கள் இருக்கின்றனவே அவர்களுக்கு வேறு கதியில்லையா என்று கேட்டால், என்னிடம் இரண்டு பதில்கள் இருக்கின்றன.

ஒன்று ஜோதிடம் வாயிலாக அறிவது. நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல் இவை ஒருவனிடம் இருந்தால், அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.

மற்றொன்று, இந்து மதத்தைக் காப்பியடித்து இப்பொழுதெல்லாம் ‘முத்தொழிலோனே நமஸ்காரம்’ என்று கிறிஸ்துவுக்கு நமஸ்காரப் பாட்டு பாடுகிறார்களே, கிறிஸ்துவை வேத முதல்வன் என்றாக்கிக் கும்பிடுகிறார்களே, இது எங்கே கொண்டுபோய் விடும் என்று குழப்பமாக இருக்கிறது. இவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள். இவர்கள் கலைஞர்-புத்தாண்டு கொண்டாடினார்கள். பொங்கல் கொண்டாடினார்கள். இன்னும் விரதங்கள்தான் பாக்கி.

ஆனால் இங்கே இருப்பவர்கள், நம் விரத நாள்களில் வயிறு முட்ட உண்டுவிட்டு, அவர்கள் விரதத்தை முடித்துவைக்க, கஞ்சி குடிக்கிறார்கள்.
 
என்ன அபத்தம் இது?
 
இதற்கெல்லாம் எப்படி கர்ம பலன் சொல்வது?

ஒன்றுமே புரியவில்லையே?

எங்கே போனார்கள் இந்த ஜைமினியும், பாதராயணரும்? அவர்களைக் கேட்போமே ….

என்ன…… அவர்களைக் காணோமா…? எஸ்கேப் ஆயிட்டாங்களா ஆ ஆ ஆ ஆ ஆ …..

(தொடரும்…)

தொடர்புடைய பதிவுகள்


குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

374 மறுமொழிகள் »

  1. My heartfelt thanks for the great article.

  2. கீதை Chapter 12 Verses 13- 14

    அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

    சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

    நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

    ஸம - துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

    க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

    ஸ ந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

    யோகி (யோக நெறியில் நிற்பவன்)

    யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

    த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

    மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

    யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

    ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்)

    ——–
    தன்னை பக்திமான் என கருதிக் கொண்டு, தன்னுடைய தெய்வம் தான் உயர்ந்தது எனக் காட்ட ஆயிரக் கணக்கில் சுலோகங்களை மேற்கோள் காட்டும் சான்றோர்களே, பக்திக்கு இலக்கணத்தை பாருங்கள்!!

    ஆனால் நீங்கள் செய்வது என்ன?

    பிறர் தெய்வங்களாக வணங்குபவரை த்வேஷித்து, தூஷித்து, மனதிலே வெறுப்பு நிரம்பிய நிலையிலே,

    நான் வணங்கும் தெய்வம்தான் உண்மையானது, முழு முதற்கடவுள் என அகந்தையும், மமதையும் நிரம்பிய நிலையில் இருந்து கொண்டு, முக்கியமானதாக கூறப் பட்டுள்ள எல்லா பண்புகளையும் தூக்கி கடாசி விட்டு, பெரிய பக்திமான் போல எண்ணிக் கொள்கிறீர்கள். கிருட்டினரின் கொள்கைக்கு எதிராக செயல் படுகிறீர்கள்!

  3. அன்புள்ள ஜெயஸ்ரீ அவர்களுக்கு,

    முக்தி என்கிற ஒரு abstract கருத்தாக்கத்தை இப்படி ஒரு manual போட்டு விளக்கி விட முடியுமா? உங்களது அதீத்மான “பிரமாண நூல்”வாதம் நீங்கள் இங்கு எடுத்தோதுவதாகக் கூறும் வேதாந்த தத்துவத்தின் இயல்பு அல்லவே அல்ல. மாறாக, அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கி, தத்துவரீதியாக தோற்கடித்து விட்ட (ஆனால் சடங்குகள் மூலம் நடைமுறையில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும்) பூர்வமீமாம்சம் என்ற தரப்பின் இயல்பு என்பதை நினைவுறுத்துகிறேன். அந்த வகையில், நீங்கள் கூறும் ஒரு பார்வையும் இந்துமத நீரோட்டத்தில் இருக்கிறது, ஆனால் கண்டிப்பாக அது ஒரு குறுக்கல்வாத (reductionist) பார்வையே அன்றி வேதாந்தத்தின் முழுமைவாத (abolutist) பார்வை அல்ல.

    “ நசிகேதா, தெளிந்த நீரில் விடப்பட்ட தெளிந்த நீர் எவ்வாறு அதுவாகவே ஆகிறதோ அவ்வாறு உண்மையை உணர்கின்றவன் ஆன்ம வடிவாகவே ஆகிறான்” - கட உபநிஷதம் 2.1.15

    முக்தி என்ற கருத்தாக்கம் சமயம், சடங்குகள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்தது.. இதைச் செய்தால் இது கிடைக்கும் என்ற செயல் விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கருத்தாக்கம் அது.. அதை ஒரு ஜோதிட நூலைக் கொண்டு வரையறை செய்வது என்பதே பழுதுபட்டதாகவும், சிறுபிள்ளைத் தனமானதாகவும் தோன்றுகிறது..

    அது மட்டுமல்ல, முண்டக உபநிஷதத்தில், ”மற்ற எல்லா உலகியல் அறிவுத் துறைகளுக்கும் சற்று அடுத்தபடியில் தான் வேதம், வேதாந்த விசாரம் எல்லாமே கூட இருக்கிறது, மேலான ஞானம் இவைகளுக்கெல்லாம் கூட அப்பாற்பட்டதே” என்று கூறப்படுகிறது. இதன்மூலம் தங்கள் தத்துவ அறிவின் எல்லையத் தாங்களே உணர்த்தி, மனிதன் அவற்றையும் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற கருத்தையும் வேத ரிஷிகள் உணர்த்தினர். வேத இலக்கியத்தின் மாபெரும் உன்னதமாகவே சுவாமி விவேகானந்தர் இதைக் குறிப்பிடுகிறார்..

    தீவிர அகத்தரிசன தருணத்தில் வெளிப்படும் ஒரு பேரெழுச்சிக் கவிதையாகவே முக்தி பற்றிய அனுபவம் நம் மெய்ஞானிகளால் பாடப்பட்டுள்ளது.. அது அனைத்தையும் அணைக்கும் நிலையாகஇருக்கலாம் -

    காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
    கடலும் மலையும் எங்கள் கூட்டம்
    நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை
    நோக்க நோக்கக் களியாட்டம்
    (மகாகவி பாரதி)

    அல்லது, அனைத்தையும் துறக்கும் நிலையாக இருக்கலாம் -

    “நான் சைவமும் அல்ல, சாக்தமும் அல்ல,
    ஐந்து இரவுகள் திருமாலை வழிபடும் வைணவமும் அல்ல,
    எனக்கு வேதமும் இல்லை, வேள்வியும் இல்லை,
    ஆசாரமும் இல்லை, தவமும் இல்லை
    சிதானந்த ரூபம் சிவம் நான் சிவம் நான்”!
    (ஆத்ம ஷட்கம், ஆதிசங்கரர்)

    மற்றபடி முக்தியைப் பற்றிய பேச்செல்லாம் வெறும் பேச்சே என்கிறார்கள் ஞானிகள்.

    “விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்” - திருமூலர்

  4. // அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும். //

    இது வேதாந்தத்திற்கு முற்றிலும் மாறான கருத்து. முக்தி என்பது “நம்பிக்கையால்” வருவதல்ல. அது பந்தம் அல்ல, விடுதலை.

    மதம் என்பது எந்த விகாரங்களும் அற்ற ஆத்மாவின் இயல்பாக எப்படி இருக்க முடியும்? மதம் என்பது மனித பிரக்ஞையின் ஒரு அடுக்கில் ஒரு கட்டத்தில் மனிதனால் ஏற்கப் படுவது. அதை அந்தப் பிறவியிலேயே பலவிதமாக மாற்றிக் கொள்ளவும் முடியும், உதறித் தள்ளிவிடவும் முடியும். பெற்றோர்களது மொழி பிள்ளைகளுக்கு வருவது போலவே, மதமும் வருகிறது. அதற்குமேல் அதில் ஒன்றுமில்லை.

    சைவராக இருந்து வைஷ்ணவரானார் திருமழிசையார். வைஷ்ணவராக இருந்து சைவரானார் ஹரதத்தர்.. சைவ, வைஷ்ணவ சமரசத்தைப் பாடிக் கொண்டே முருகபக்தராக இருந்தார் அருணகிரியார். சாக்த, சைவ, வைஷ்ணவ சாதனை முறைகளைப் பயின்று அவற்றில் இழையோடும் ஒருமையைக் கண்டுணர்ந்து அதைப் போதித்தார், நமக்கு மிக சமீபகாலத்தில் வாழ்ந்த ஸ்ரீராமகிருஷ்ணர்.

    வெளிநாட்டில் பிறந்து சிறந்த வேதாந்திகளாகவும், யோகிகளாகவும் ஆனவர்களில் சகோதரி நிவேதிதா, அரவிந்த ஆசிரம ஸ்ரீஅன்னை, ரமண மகரிஷியின் சீடர்கள் ஆகியவர்களைச் சொல்லலாம். நாம் அறியாமலேயும் பலர் இருக்கலாம். இவர்களது இறை அனுபவங்கள் எல்லாம் பொய்யா? ”Every soul is potentially divine. ஒவ்வொரு ஜீவனும் முக்திக்கு அதிகாரி தான். இதைத் தான் வேதாந்தம் அறைகூவுவதாக சுவாமிஜி உலகெங்கும் முரசறைந்தார் - இல்லையா?

    நம்மவர், அன்னியர் - நம்நாடு, வேறு தேசம் என்பதெல்லாம் உலகியலுக்கு உட்பட்ட சமூக, அரசியல் தளங்களில் மட்டுமே. ஆன்மிகத் தளத்தில் அல்ல.

  5. கட்டுரை ஏதோ எனக்கு புரிய வெச்சதுன்னு நெனச்சா ஜடாயுவோட மறுமொழி கொழப்பிடுச்சு! முக்தின்னா என்ன? கடவுளை அடைவதா? கடவுள் நிலையை அடைவதா?
    //வெளிநாட்டில் பிறந்து சிறந்த வேதாந்திகளாகவும், யோகிகளாகவும் ஆனவர்களில் சகோதரி நிவேதிதா, அரவிந்த ஆசிரம ஸ்ரீஅன்னை, ரமண மகரிஷியின் சீடர்கள் ஆகியவர்களைச் சொல்லலாம். நாம் அறியாமலேயும் பலர் இருக்கலாம். இவர்களது இறை அனுபவங்கள் எல்லாம் பொய்யா?//இதற்கு கட்டுரையிலேயே //அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும்// என்ற பதில் இருப்பது போல் இருக்கிறது.
    //நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல் இவை ஒருவனிடம் இருந்தால், அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.//இதில் கடைசி வரிக்கு ஜடாயு கண்டனம் தெரிவிக்கிறார். ஆனால் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் இந்த உலகின் முதல் மதம்/வழி இந்து மதம்/வழியாக இருப்பதால் பிறகு வந்த அனைத்து மதங்களும் அதைப் பின்பற்றுகின்றன என்று.

  6. //முக்தி என்ற கருத்தாக்கம் சமயம், சடங்குகள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்தது.. இதைச் செய்தால் இது கிடைக்கும் என்ற செயல் விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கருத்தாக்கம் அது.. அதை ஒரு ஜோதிட நூலைக் கொண்டு வரையறை செய்வது என்பதே பழுதுபட்டதாகவும், சிறுபிள்ளைத் தனமானதாகவும் தோன்றுகிறது.. //

    I think this is an important point. Astrology predicts what can happen to a man…. he will get good….. he will be in bad shape, getting sorrows… etc-( I am not getting into the arguement here whether Astrology is genuine or not ).

    But liberation is attaining a totally independent status, completely releived of any sorrows, totally liberated from the clutches of sorrow, nature, fate….. whatever it is.

    Even Buddha claimed that he attained liberation.

  7. //முக்தி என்ற கருத்தாக்கம் சமயம், சடங்குகள், நம்பிக்கைகள் அனைத்தையும் கடந்தது.. இதைச் செய்தால் இது கிடைக்கும் என்ற செயல் விதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட கருத்தாக்கம் அது.. அதை ஒரு ஜோதிட நூலைக் கொண்டு வரையறை செய்வது என்பதே பழுதுபட்டதாகவும், சிறுபிள்ளைத் தனமானதாகவும் தோன்றுகிறது..//

    சொற்பிரயோகம் தவறு ஜடாயு. ஜோதிஷம் உங்களுக்குப் பிடிக்காமலும் அதில் உங்களுக்கு நம்பிக்கையில்லாமலும் இருக்கலாம். அதற்காக அதைக் கற்றவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதைச் “சிறுபிள்ளைத்தனம்” என்று கூறுவது சரியில்லை. ஜெயஸ்ரீஜி அவர்கள் வயதிலும், அனுபவத்திலும், கல்வியிலும் மூத்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    //ஜோதிடமா, அது புரட்டு, என்று சொல்லும் முன், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஜோதிடம் என்றால் ‘ஒளியியல்’ (Science of Light) - ஜ்யோதி-இஷா என்று அர்த்தம்.//

    தமிழ் ஹிந்து வாசகர் கூட்டத்தில் யாரும் குருடர்கள் அல்ல ஜெயஸ்ரீஜி, இருட்டில் உள்ளவர்களும் ஒளி தேடுபவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஒளி பெற விருப்பம் உள்ளவர்கள் பெற்றுக் கொள்ளட்டும்.

    அன்புடன்

    ஹரன்

  8. வழக்கம்போல ஒரு நல்ல அறிவியல்பூர்வமான கட்டுரையை ஜெயஸ்ரீ மேடம் குடுத்துட்டாங்க! ஜோதிடம் வேதத்தின் ஒரு அங்கம், இன்று ஜோதிடர்கள் சரியில்லை என்பதற்காக ஜோதிடம் போய்யாகிவிடாதே…

    //இது வேதாந்தத்திற்கு முற்றிலும் மாறான கருத்து. முக்தி என்பது “நம்பிக்கையால்” வருவதல்ல. அது பந்தம் அல்ல, விடுதலை.//

    ஜடாயு சார், ஆசிரியர் எழுதியதை படியுங்கள்:-

    “இன்றைக்குப் பிற மதங்கள் இருக்கின்றனவே அவர்களுக்கு வேறு கதியில்லையா என்று கேட்டால், என்னிடம் இரண்டு பதில்கள் இருக்கின்றன.”

    அவங்ககிட்ட ரெண்டு பதிலிருக்குனுதான் சொல்றாங்களே தவிர “நான் சொல்றதுதான் உண்மை, மற்றவை பொய்” நு ஹிட்லர் போலவோ அபிரகாமீய மதத்தவர் போலவோ சொல்லலியே!

    ஆசிரியர்கு மீண்டும் நன்றி, தொடரட்டும் உங்கள் நற்பணி!

  9. //வெவ்வேறு காலக் கட்டத்தில் பிரபந்தங்களைப் பாடிவிட்டுப் போய் விட்டார்கள் ஆழ்வார்கள். நம்மாழ்வார் அருள, நாத முனிகள் அவற்றைப் பெற்றாரே, அது எப்படி - என்பதும் இந்த அமைப்பில் தெரிகிறது. இன்றும் நாத முனிகள் அளவுக்கு ஒருவன் தியானம் செய்தால், அவனுக்கு முன் நம்மாழ்வார் தோன்ற முடியும். திவ்யப் பிரபந்தத்தை எடுத்துக் கொடுக்க முடியும்.//

    இந்த கருத்துதான் இந்துமதத்தின் முக்கியமான ஒன்றாகும். இது சைவத்திலும் உள்ளது. 5, 6, 7- ஆம் நூற்றாண்டில் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் பிற நாயன்மார்கள் பாடிய தேவாரம், திருவாசகம் போன்றவற்றை 11- ஆம் நூற்றாண்டில் நம்பியாண்டார் நம்பிகள் கண்டெடுத்து ‘திருமுறை’ என்று தொகுத்தளிக்கிறார். அவருக்குமுன் 400 ஆண்டுகளுக்கு அவை எங்கு சென்றன என்றே எவருக்கும் தெரியவில்லை!

  10. // அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும். //

    இது சரியில்லை. கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப்படுபவர் என்று அர்த்தம் ஆகிறதே. தவறான வழியில் திசை மாற முயல்கிறீர்கள்.

  11. நாங்க எங்க பாட்டிகாலத்து ஆன்மீக கதைகள் அங்கங்க கேட்குற கதைகள் இதையெல்லாம் வச்சுகிட்டு நமக்கு ரொம்ப தெரிஞ்சு இருக்கு என எனக்கு நானே சபாஷ் சொல்லிக்கொள்வேன் .பார்கிறவங்க கிட்டேயெல்லாம் ஆன்மிக சம்பந்தமா படிக்கிறதெல்லாம் சொல்லி சந்தோசபட்டுக்குவேன்.ஆனால் உங்க கட்டுரைகளை படிக்கும்பொழுது தான் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதே என்று பிரமிப்பாக இருக்கிறது .”கற்றது கை அளவு கல்லாதது கடல் அளவு” என்பது எவ்வளவு உண்மை .இது போன்று பல கட்டுரைகள் எழுதி என் போன்றோரின் அக இருளை நீக்குங்கள்.தயை செய்து பெரிய எழுத்துக்களாக இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும் படிப்பதற்கு.மிகவும் அருமை உங்களுடைய கட்டுரை. .

  12. Astrology and spirituality are different concepts altogethet.

    Astrology, in the past i said to have predicted that an individula would become a great spiritualist.

    As an example, It was said that Astrologers predicted that buddha would be a great Spiritualist and Ilango would be a proper person. Besided that I cant say whether Astrology can help to uplift any one spiritually.

    It is also said that Iramakrishna Paramahams has told that Vivekananda amd other disciple would do wonders- but it was not part of Astrology, Ramakrishna was considered as a seer!

  13. //இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.//

    Sounds like abrahamaites

  14. அய்யா Jeevs

    இந்த வலைதளத்தின் முகவரி http://www.tamilHINDU.com - இங்கு வந்தே நீங்கள் ஏசுவையும், மோசசையும், மற்ற அன்பு தூதர்களையும், அல்லாவையும் கடவுளாக கொண்டே தீர வேண்டும், மொக்ஷித்திர்க்கு இவர்களே அதிகாரி என்று சொன்னால் அது எத்தை காட்டுகிறது - இதை தவிர வேறொன்றும் சொல்வதற்கு இல்லை

  15. //Jeevs
    5 February 2010 at 3:51 pm

    // அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும். //

    இது சரியில்லை. கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப்படுபவர் என்று அர்த்தம் ஆகிறதே. தவறான வழியில் திசை மாற முயல்கிறீர்கள்.//
    இந்து மதம் என்பதற்கும் இந்து மத வழி என்பதற்கும் வேறுபாடு உள்ளது நண்பரே.

  16. //armchaircritic
    5 February 2010 at 10:59 am
    முக்தின்னா என்ன? கடவுளை அடைவதா? கடவுள் நிலையை அடைவதா?//

    கடவுள் நிலையை அடைவதே! அது கூட நாம் கடவுள் நிலையை அடைந்து விட்டோம் என்பதெல்லாம் அடையும் பொழுது தெரியாது. கடவுள் நிலையை அடைவது என்பதை ஒரு உதாரணமாகச் சொன்னால் இரண்டு சொட்டு தண்ணீர் அருகருகே இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சொட்டு மற்றொரு சொட்டுடன் இணைந்து விட்டால் இரண்டும் ஒரே சொட்டுத் தண்ணீராகிறது. அப்படிப்பட்ட ஒரு நிலை தான் நமது ஆத்மா பரமாத்மாவுடன் இணையும் நிகழ்வு. இதையே முக்தி என்கிறோம். அதற்கு முதலில் பரமாத்மா வெளியில் இருக்கும் தண்ணீர் என்றும் நாம் உடலில் இருக்கும் தண்ணீர் என்பதையும் முதலில் முழுமையாக உணர வேண்டும். அப்படி உனர்ந்து கொள்ளும் பக்குவத்தையே “தத்வம் அஸி” அதாவது “அதுவே நீ” என்று புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதாவது தண்ணீர் இரண்டு தனித்தனி துளிகளாக இருந்தாலும் இரண்டும் அது ஒன்றே என்பது போல தான் இதுவும். ஆக இரண்டரக் கலந்து நாமே இறை நிலையை அவ்வாறு அடைவதே முக்தியாகும். அவ்வாறு இரண்டரக் கலக்கும் நிலை தான் “அஹம் ப்ரம்மாஸ்மி”…அங்கே உள்ளும் புறமும் ப்ரம்மமாகிய நானே என்றுணர்ந்து அதுவாகவே ஆவதாகும். நாமே அதுவாக ஆன பிறகு நாம் அதில் கலந்தோமா அல்லது அதுவாக ஆனோமா என்பதெல்லாம் நமக்கு தெரியாது. நாம் அப்படியே இருப்போம் அவ்வளவு தான். முக்தி பற்றி சந்தேகம் இருப்பவர்களுக்கு புரிந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஏதோ என்னாலான முயற்சி.

    அன்புடன்
    ராம்.

  17. அருமையான கட்டுரை ஜெயஸ்ரீ அவர்களே!

    //இவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள்.//

    கவலைப்படாதீர்கள். முடிவில் நம்மையே வந்தடைவார்கள்.

  18. //கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.//

    உங்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க வாழ்த்துகள்

  19. தங்கள் படைப்பு மிகவும் அருமை.வேதம் காட்டும் பிரபஞ்சத்தத்துவம் அறிவுப்பூர்வமாக உள்ளது.
    ஒரே ஒரு விசயத்தில் கருத்து வேறுபாடு உள்ளது என்றாலும் மொத்தத்தில் உங்கள் படைப்பு சிறப்பாக உள்ளது .

  20. // இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. //

    interesting. This sounds very much like a “prophet” idea rather than Hindu spirituality.

    In Hindu spiirituality, it is Guru’s guidance that kindles an aspirant towards self knowledge - but that is only the “inspiration” part. The Sadhaka also has to strive hard and peel of all his layers of “avidya” (ignorance) one by one.. and this may take one or many births… It is not said that just by mere association of a great sage, you are *guaranteed* of Mukthi.

    Plus, what Hindu spirituality insists on is “shraddha”. It does not directly translate as faith or belief as it is normally understood.

    It is *self knowledge* that is criteria for Mukthi - NOT “Belief in Vedas”, NOT “knowledge of Vedas”. Ramakrishna Paramahamsar, Sadasiva Brahmendrar, Vallalar, Ramana Maharishi - they were all Jeevan mukthas. But none of them had studied Vedic scriptures, they were not ritualistic at all.

    To say that such people attained Mukthi because they were destined for it (it was written in their horoscope) is way too much of a simplistic idea.. It is an insult on the greatness of human spirit. In that case, before starting any spiritual Sadhana, one can just consult the horoscope and find out if Mukthi is written for him or not.. If it says no, why to even waste time in pursuing spirituality?

    You see, mixing astrology with pure and prestine Hindu philosophical thought leads to such fallacies.

  21. //உங்கள் அனைவருக்கும் முக்தி கிடைக்க வாழ்த்துகள்//

    ****இஸ்ட் அவர்களே, உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் உண்மையான பகுத்தறிவு தருமாறு நீங்கள் வெறுக்கும், கேவலப்படுத்தும், இகழும் இந்து தெய்வங்கள் அனைவரிடமும் வேண்டுகிறேன்..

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!

  22. ஜெயஸ்ரீ அவர்களின் மற்றுமொரு சிறப்பான படைப்பு!.
    நான் கூற நினைத்த பெரும்பாலனவற்றை நமது நண்பர்கள் கூறிவிட்டனர். இருப்பினும் எனது கருத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.

    //மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்//

    உண்மை. புத்தர், மகாவீரர், இயேசு போன்ற பிற மதத்தவரும் நமது இந்து மத வழியில்தான் முக்தி பெற்றனர். இதை இன்று அவர்களை (இயேசு)பின்பற்றுவதாக கூறிக் கொள்ளும் பிரசங்கிகள் உணர வேண்டும்.

    //இவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள்.//
    //கவலைப்படாதீர்கள். முடிவில் நம்மையே வந்தடைவார்கள்.//
    நிச்சயம் அவர்கள் ஒரு வித விரக்தியில் இருக்கிறார்கள். அதனால்தான் வள்ளுவரை அவர்கள் பக்கம் சேர்த்துப் பார்த்தார்கள் (முடியவில்லை என்பது வேறு விஷயம்), பொங்கல் கொண்டாடுகிறார்கள், வாழை மரம் கட்டி விழா எடுக்கிறார்கள், வேளாங்கன்னிக்கு நடை பயணம் போகிறார்கள். இவர்களுகெல்லாம் நமது இந்து மதம் ஒன்றை மட்டும் எப்போதும் உரக்க சொல்லி கொண்டே இருக்கிறது. அது பாரதி தனது கவிதையில் கூறுவது போல்
    பல வேடிக்கை மனிதரை போலே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

  23. //****இஸ்ட் அவர்களே, உங்களுக்கும் உங்கள் சகாக்களுக்கும் உண்மையான பகுத்தறிவு தருமாறு நீங்கள் வெறுக்கும், கேவலப்படுத்தும், இகழும் இந்து தெய்வங்கள் அனைவரிடமும் வேண்டுகிறேன்..

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
    //
    நீங்கள் அனைவரும் முக்தி அடைந்துவிட்டாலே, எங்களுக்கு வேலை இல்லை

  24. Periyarist, do you want to talk about your great leader EVR and his marriage to a girl old enough to be his grand daughter? Waiting for your “pakitharuvu” pearls of wisdom on this. Do not trouble yourself reg our muthki, thank you.

  25. //நீங்கள் அனைவரும் முக்தி அடைந்துவிட்டாலே, எங்களுக்கு வேலை இல்லை//

    இப்பொழுது மட்டும் என்ன இருக்கிறது? பல ‘பெரியாரிஸ்டு’ களுடன் வாதிட்டுவிட்டேன்.. உங்களிடமும் வெட்டிவாதம் செய்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை! ஏனெனில் என்னசொன்னாலும் “நான் புடிச்ச முயலுக்கு மூணே கால்னு” சாதிக்கரவங்க நீங்க!
    அதனால், என் நேரத்தை வேஸ்ட் பண்ண விரும்பல, பிறகு சந்திப்போம்!

  26. ஜெயஸ்ரீ அவர்களுக்கு வணக்கம்.
    தங்கள் கட்டுரை மிக நன்றாக, பொருள் பொதிந்ததாக உள்ளது. மகிழ்ச்சி.
    நாம் கூறுவது எதிலும் உள்ள பொருள் காண்பது என்பது அவரவர் நிலைப்பாட்டில் இருந்துதான் என்பதை மறுக்க முடியாது. தாங்கள் மற்றும் பலரின் மொழிகளுக்குப் பதிலாகவும், மேலும் சிலவற்றை விளக்குவன ஆகவும் இருக்கலாம் என ஆன்றோர் கூறியவைகளை இங்கு சமர்ப்பிக்கிறேன்.

    “மும்முதலை எம்மதமும் முற்கொள்ளும் ஒர்முதலே
    மும்முதலாய் நிற்கும் என்றும் மும்முதலும் - மும்முதலே
    என்னல் அஹங்காரம் இருக்கும் மட்டே யான் கெட்டுத்
    தன்னிலையில் நிற்றல் தலை”
    - என்று குறிப்பிட்டுள்ளார் ரமணர் “உள்ளது நாற்பது” பாடலில்.

    பொழிப்புரை: எந்த மதமும் ஜக, ஜீவ, பரம் என்னும் மூன்று முதற்பொருள்களின் தோற்றத்தை முதலில், அதாவது விவகார (உலகியல்) தசையில் (நோக்கில்), ஒப்புக்கொள்ளும். அவ்வாறு ஒப்புக்கொண்டு, பிறகு அவற்றின் இயல்பை விசாரித்து, முடிவில் சில மதங்கள், ஓர் சத்திய வஸ்துவாயுள்ள முதல் பொருளே ஜக, ஜீவ, பரம் என்னும் மூன்று முதற்பொருள்களாக மித்தையாகத் தோன்றுகிறது என்று சொல்லுதலும், வேறு சில மாதங்கள் அம் மூன்று முதல் பொருட்களும் எக்காலத்திலும் சத்திய நித்தியத் தன்மை வாய்ந்தது, எவ்வாறு மூன்று முதற்பொருள்களாகவே உள்ளன என்று சொல்லுதலும் நானென்ற அகங்காரம் ஜீவித்திருக்குமட்டுமே நிகழும். உருவ நாசமுற்றுத் தனது பிறப்பிடமாகிய ஆன்ம சொரூபத்தில் தங்குதலே சிறப்பாகும்.

    “பத்தன் நான் என்னுமட்டே பந்த முக்தி சிந்தனைகள்
    பத்தன் யார் என்று தன்னை பார்க்குங்கால் - சித்தமாய்
    நித்த முக்தன் தான் நிற்க நிற்காதேர் பந்த சிந்தை
    முக்தி சிந்தை முன்னிற்குமோ?” - என்றும் கூறுவார்.

    பொழிப்புரை: நான் பந்தமுடையவன் என்று எண்ணுகிற மட்டுமே பந்த சிந்தனையும் முக்தி சிந்தனையும் உண்டாகும். பந்தமுடையவன் யாரென்று விசாரித்து தன்னை அறியுங்காலத்தில், நித்த முக்தனாகிய தான் ஒருவனே அபரோட்சமாய் விளங்குவதால், பந்த சிந்தனை அழியுமானால் முக்தி சிந்தனை மாத்திரம் அழியாமல் தன்முன் நிற்குமோ?

    இதுதான் முடிவு என்றால், அவரவர் வழியைத் தேர்ந்து செல்வது அவரவர் உள்ள நிலைப்பாடு அன்றி வேறு ஏது?

    S. Raman

  27. எனது மறுமொழியில் ” மாதங்கள்” என்று ஒரு இடத்தில் தவறு நேர்ந்து விட்டது. அதை “மதங்கள்” என்று திருத்திக் கொள்ளவும்.

  28. //In that case, before starting any spiritual Sadhana, one can just consult the horoscope and find out if Mukthi is written for him or not.. If it says no, why to even waste time in pursuing spirituality?

    You see, mixing astrology with pure and prestine Hindu philosophical thought leads to such fallacies.//
    You may not believe this. But one of my friends who went to Vaitheeswaran Koil and Nadi josyam was shocked when the person looking at her ‘chuvadi’ gave it to her to take home saying that this soul has no more births.
    As far as I know horoscope talks only of this birth and this life.
    //நீங்கள் அனைவரும் முக்தி அடைந்துவிட்டாலே, எங்களுக்கு வேலை இல்லை// உங்களுக்கு ரொம்ப bore அடிக்கும்.

  29. திரு., ஜெயஸ்ரீ சாரநாதன்.,
    தங்கள் கூற வருவது என்ன?..

  30. பெரியாரிஸ்டு அவர்களே,

    நீங்களும் உங்கள் ராமசாமி நாயக்கரும் தான் தமிழர்களின் விரோதிகள். சங்க இலக்கியங்களை வாசித்துப் பாருங்கள் - அப்பொழுது தெரியும், ராமாயண மகாபாரதக் கதைகளில் நம் சங்கத் தமிழர்கள் தொன்று தொட்டு எத்தனை ஈடுபாடு வைத்திருந்தனர் என்று. பரிபாடலைப் படித்துப் பாருங்கள் - அதில் வேதத்தின் புருஷ சூக்தமும், மாண்டுக்ய உபநிஷத்தும் அப்படியே தமிழாக்கப் பட்டிருக்கிறது. சங்க இலக்கியங்கள் முழுவதிலும் கோயில் வழிபாடுகள் நடந்து வந்ததை கண் திறந்து வாசியுங்கள். அப்பொழுது தான் அம்பலாகும் உங்களுடைய ரவுடித்தனமும் கயமையும். ஜைனராக இருந்தும் இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் அந்தணர்களை எப்படி வருணித்து உள்ளார்கள் என்று பாரும் - தைத்திரீய உபநிஷத்தின் ஒரு வாக்கியத்தை அவர் சமணராக இருந்தும் தமிழ்ப் படுத்தியுள்ளார். இதனால் தானோ என்னவோ, தமிழர் கலாச்சாரத்தை ‘காட்டுமிராண்டி கலாச்சாரம்’ என்று சொன்னாரோ தாடி வைத்த உங்கள் தலைவர்!

    உமது ஆரிய-திராவிட வரலாற்று கட்டுக்கதைக்கு நேர்முரணாக சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. வேதம், உபநிஷத்து, இதிகாசம், ஆகமம் இவற்றை ஒட்டியே எழுந்த சங்க நூல்களில் எங்குமே பௌத்தம், சமணம் ஆகிய மதங்களைப் பற்றி இல்லாமையே தமிழ் சங்க கலாச்சாரமும், இதிகாச புராணங்களும் அவ்விரண்டு மதங்களுக்கு முந்தையதே என்பது சான்று. இதனால் உங்கள் aryan-dravidian theory அடிபட்டுப் போய்விட்டதே! அந்தோ பரிதாபம்! இவ்விஷயம் இப்பொழுது அம்பலம் ஆனதற்கு, இனி என்ன செய்வீர்கள்?

    வேதத்தையும், இதிகாச புராணத்தையும் வெறுக்கும் உங்கள் பெரியார் கட்சிக்கு ‘தமிழ்க் கலாச்சாரத்தைப் பேண உழைக்கிறோம்’ என்று சொல்ல ஒரு அருகதையும் இல்லை. சங்க நூல்களையும், வேத-இதிகாச-புராண நூல்களையும் ஒழுங்காக வாசித்து ‘தவற்றினை ஒத்துக் கொண்டேன்’ என்று எழுத உங்களை வரவேற்கிறோம். அல்லது மரியாதையாக stop infesting the web with your filthy, obnoxious, and at best resource-wasting presence. மேலும் உங்களது கைவரிசையைக் காட்ட முற்படின் உமது வாயடைக்கச் செய்யுமாறு சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்து மறுக்க முடியாத ஆதாரங்களை வீச எம்க்கு சக்தி உண்டு.

    (edited and published)

  31. நல்ல முயற்சி
    தத்வமசி
    அஹம் பிரஹ்மாஸ்மி.

  32. பெரியாரிஸ்ட்டுகளைப் பார்த்து கோபப் படுவதை விட பரிதாபமே பட வேண்டும். பெரியார் இந்து மதத்தில் இருந்த நம்பிக்கைகளை கண்டித்து, அதை வைத்தே தன்னை பெரிய பகுத்தறிவாளர் போலக் காட்டிக் கொண்டார்.

    பெரியாருக்கு முன்பே, பாரதி, விவேகானந்தர் இப்படி பலரும் இந்து மதத்தின் மீது போடப்ப்பட்ட மூட நம்பிக்கைகளை கண்டித்து உள்ளனர்.
    “வஞ்சனைப் பேய்கள் என்பார், அந்த மரத்தில் என்பார், இந்தக் குளத்தில் என்பார், அஞ்சி பயப் படுவார், மிக துயர் படுவார்” என பாரதி பாடி இருக்கிறான்.

    பெரியார் உண்மையில் பகுத்து ஆராயும் செயல் எதையும் செய்யவேயில்லை. சும்மா உதார் விட்டே காலத்தைக் கழித்து விட்டார்.

    “மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா? மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது, தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

    அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக‌ இருந்தாரா?

    உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.

    ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு க‌ண்டிப்பாக‌ ‌ பதில் தேவை.

    இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்? ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்?

    அதாவது “உடலோடு சேர்ந்து தான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும், தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் - கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?

    ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?

    கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.

    ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.

    புத்தர் , ஆதி சங்கரர், விவேகானந்தர் இவர்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள்.

    புத்தர் மனிதர்களின் துன்பத்தை நீக்க வழி காண முயற்ச்சி செய்து , ஒரு வழியையும் காட்டினார். பெரியார் என்ன செய்தார்? பெரியார் புத்தரைப் போல மனக் குவிப்பு செய்தாரா, ஆராய்ச்சி செய்தாரா?

    பெரியார் காவிரிக் கரையில் இரவு நேரங்களில் நண்பர்களுடன், சேர்ந்து நடனமாடி செய்த ஆராய்ச்சிகள் எல்லாம் இதே தளத்திலே வெளியாகி இருக்கின்றன.

    //நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்ற மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுவதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற்காலத்தில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள்// Courtesy- tamilhindu.

    பெரியார் என்ன செய்தார்? பெரியார் தன்னை அரசியல், சமுதாய ரீதியில் உயர்த்திக் கொள்ள வள்ளுவர், கம்பர் முதல் எல்லோரையும் திட்டியே காசு சேர்த்தார்.

    சிக்கனமாகவும், கஞ்சத் தனமாகவும் சேர்த்த காசை காப்பாற்ற ராஜாஜியிடம் வழி கேட்டார். இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார்.

    அவ்வளவு கஷ்டப் பட்டு சேர்த்த சொத்துக்கள் இப்போது யாரால் அனுபவிக்கப் படுகின்றன?

    //பாடு பட்டு பணத்தை சேகரித்து, ….
    கூடு விட்டிங்கு ஆவிதான் போயின பின்
    யாரோ அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்//

    என்ற தமிழ் செய்யுளின் படி, பாவம் பெரியார் கஷ்டப் பட்டு சம்பாரிச்சு யாரோ அனுபவிக்க விட்டு விட்டு, அம்போன்னு போய் விட்டார்.

    ஆனாலும் பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்களினால் நமக்கு உபயோகமும் உண்டு. பெரியாரின் கருத்துக்களை இந்துக்கள் சரியாக உபயோகித்து கொள்ள வேண்டும்.

    பெரியாரே பரிதாபம் , அவர் சொன்னதுதான் பகுத்தறிவுனு நினைத்துக் கொண்டு, அப்பாவிகளின் கற்பனை சொர்க்கத்திலே மகிழும் பெரியாரிஸ்ட்டுகளோ அதை விடப் பரிதாபம்.

  33. ‘யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்’ என்றால் அது என்ன உலகம்?

  34. திரு கந்தர்வன் உங்கள் பின்னூட்டம் மிகவும் அருமை.

  35. இக்கட்டுரையைப் படித்த, மற்றும் மறுமொழி பதித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.
    பிரயாணத்தின் நடுவில், இப்பொழுதுதான் இந்தப் பதில்களைப் படித்தேன்.

    ஆனால், பலர் எழுப்பிய கேள்விகளுக்கு, கட்டுரையிலேயே பதில் இருக்கிறது. ‘தத்க்ரது’ என்பதிலும் பலரது கேள்விகளுக்கு விடை இருக்கிறது.- ஆபிரகாமிய மதத்தினர் பெறக்கூடிய நிலை குறித்தும் கூட.

    மேலும் வேத மதத்தின் முக்கிய இரு கருத்துக்கள் அந்த மூன்று ஜோதிட யோகங்களில் இருக்கின்றன. அவற்றை நான் விரிவுபடுத்தவில்லை. புரிந்து கொள்பவர்கள், புரிந்து கொள்ளட்டும் என்னும் காரணத்திற்காகவும், அதற்கு மேற்கொண்டு சொல்லப்பட்ட - கடவுளர்களில் பெரியவர் யார் என்ற தர்கத்தை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதையும், அகத்தியர் முதலானோர் குறித்த கதைகள் நடந்த சாத்தியக்கூறுகளையும் - எளிதில் புரியவைக்கக்கூடியது என்பதற்காகவும், ஜோதிட யோகங்கள் சொல்லப்பட்டன.

    வேத புருஷனின் கண் என்று ஜோதிடம் சொல்லப்படுவதின் காரணம் - ஜோதிடத்தின் மூலம் இந்தப் பிரபஞ்சத்தின், இயற்கையின், உலகியலின் எந்த ஒரு பரிமாணத்தையும், நிகழ்வையும் விளக்க முடியும் என்பதனாலே. வாசகர்கள் பலரும் நினைப்பதைப்போல ஜோதிடம் என்பது எதிர்காலம் பற்றி மட்டும் கூறுவது அல்ல. அப்படி என்றால் அது என்ன, என்று கூறுவதும் என் நோக்கம் அல்ல. எந்த அளவுக்கு, எந்த வகையில் அது தேவையோ, அந்த அளவுக்கே அதை கையாண்டுள்ளேன், கையாள்வேன். அந்தக் கடலின் கரையில் நின்றவர்களுக்குத்தான், அதன் வீச்சு புரியும்.

    சில விஷயங்களை இங்கே கூற விரும்புகிறேன்.

    # ப்ரமாண நூல்களே வேத மதத்தைப் புரிந்து கொள்ள உதவும் சாதனங்கள். அவை கூறுவது என்றென்றும் சாசுவதமான உண்மைகள். அவற்றை மீறியோ, அல்லது அவற்றைக் குறைத்து மதிப்பிட்டோ கூறப்படும் கருத்துக்கள் வேத மதக் கருத்துகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது. அப்படிக் கூறப்படும் கருத்துக்கள் சாசுவதமானவை அல்ல. இது ஒவ்வொரு இந்துவும் தெரிந்து கொள்ள வேண்டியது.

    # இந்தப் ப்ரமாண நூல்கள் பூர்வ மீமாம்சை சார்ந்தவை அல்ல. கீதாச்சரியனும் படிக்கச் சொல்லும் பிரம்ம சூத்திரம், சடங்கு சார்ந்த வேதக் கல்வி முடித்தவுடன், தத்துவ விசாரமாகச் செய்யப்படும் ஆன்மா பற்றிய விசாரணை. இதில்தான், ஆன்மாவைப்பற்றியும், பரம் பொருளை அடையும் மார்கங்களைப்பற்றியும், அவ்வாறு அடைந்தவுடன் இருக்கும் நிலையைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. உபநிடதங்களின் சாரம் பிரம்ம சூத்திரம்.

    # முக்தி என்பதன் அர்த்தத்தை இக்கட்டுரையில் கொடுத்துள்ளேன். முக்தி நிலையில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கூறும் ஒரு நூல் இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள், ‘முமுக்ஷுப் படி’ என்னும் அந்நூலை படித்து, விஞான ரீதியில் முக்தி அடையும் நிலை எவ்வாறு விளக்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

    # முக்தி பற்றிப் பேச முடியுமா? முடியும். பிரம்ம சூத்திரம் பேசுகிறது.
    ஆனால் முக்தி என்னும் அனுபவத்தைப் பேச முடியாது. அந்த அனுபவம் ஆனந்த நிலை என்று தைத்திரீயம் கூறுகிறது. அந்நிலையை அடைவதற்கு முன் வரை, ஜீவன் விஞான நிலை என்னும் அறிவார்த்த நிலையில் இருக்கிறது. அந்தப் பரம புருஷனே ஜீவனில் குடி கொண்டுள்ளதால், அவன் மூலமாக, அவன் நிலையான ஆனந்த நிலையைப் பற்றிப் பேச முடியும். ஆனால் ஆனந்த நிலையை எட்டினவுடன், அது வேறு பரிமாணம். விஞானம் கடந்த பரிமாணம். எனவே அந்த அனுபவத்தைப் பேச முடியாது. இதையே கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றனர். இதை மறுமொழியாக , முந்தின கட்டுரையில் விரிவாகக் கொடுத்துள்ளேன்.

    # முக்தி என்பது என்ன, சித்தி என்பது என்ன? இவை இரண்டும் ஒன்றா, அல்லது வேறு வேறா? தேடுங்கள், விடை கிடைக்கும். விடைக்குத் தேவையான ‘க்ளூக்கள்’ அந்த மூன்று யோகங்களில் உள்ளன - என்ன செய்வது!!! ;)

    # முக்தி என்பது செயலாக்கத்தினால் வருமா, இந்த ஜோதிட யோகங்கள் அவ்வாறு கூறுகின்றனவே என்றால், இந்த யோகங்கள், முக்தி அடைவதற்கு முந்தின இரு பிறவிகளைப் பற்றிக்கூறுகின்றன. அந்த அளவு சாதனம் செய்பவர் அந்தந்த யோகங்களில் பிறப்பர் என்பது பிரம்ம தேவன் கூற்று. அதன் விளக்கங்களைப் பாருங்கள். சர்வம் விஷ்ணு மயம் என்பவனும், சர்வம் சிவ மயம் என்பவனும் முக்திக்குத் தயாராகிறான். மறந்தும் புறம் தொழா விஷ்ணு பக்தனும், அவ்வாறேயான சிவ பக்தனும் முக்தி நிலைக்கு அருகில் வருகிறான் என்பது நோக்கத்தக்கது.

    # ஆனால் இந்த யோகங்கள் பங்கம் அடையாமல் இருக்க வேண்டும். பங்கம் அடையாத இந்த யோகங்களைக் காண்பது அரிது. பங்கப்பட்ட சீகண்ட யோகம் கொண்டவர் இன்றைய தமிழக முதல்வர்! ஏன் அந்த பங்கம் நேரிட்டது என்று ஜோதிடம்தான் விளக்குகிறது. அதன் காரணம் தான் அவர் அணியும் மஞ்சள் துண்டு!! பங்கப்பட்ட யோகத்தை அந்த மஞ்சள் துண்டு சீர் செய்யாது - செய்ய வில்லை. மாறாக, அப்படிப்பட்ட உயர்ந்த முக்தி மார்க்க, பக்தி நிலையில் இருக்கும் பொழுது கால் இடறினால், அடி அதிகம், சரிவு அதிகம். பரம பத விளையாட்டு காட்டும் - மேல் வரிசை யில் பாம்பின் வாயில் மாட்டிக்கொண்டு, அடி வரிசையில் தள்ளி விடப்பட்ட நிலை அது.
    பங்கப்பட்ட யோகம் அவருக்கு அளித்த வாழ்க்கையையும், ஜோதிடம் காட்டும் பாதையையும் உன்னிப்பாகக் கவனிக்கும் என் போன்றவர்களுக்கு, கர்ம சக்கரத்தை நினைத்து ஆச்சர்யம், பயம், பக்தி.. … என்னவென்று சொல்ல.

  36. ம‌ன‌திலே வெறுப்பு க‌ருத்துக்க‌ள் உடைய‌ எவ‌ரும் முக்தியை அடைய‌ முடியாது. அந்த‌ வெறுப்பே அவ‌ருக்கு ப‌ற்றை உருவாக்கி அவ‌ரை சிக்க‌ வைத்து விடும். புற‌ம் தொழாமை என்னும் நிலைப் பாடு, பிற‌ரின் வ‌ழி பாட்டு முறைக‌ளை த‌ன்னை அறியாம‌லேயே வெறுக்கும் ப‌டி செய்து விடும். தான் க‌ட‌வுளாக‌ வ‌ண‌ங்குப‌வ‌ர் ம‌ட்டுமே முழு முத‌ல் க‌ட‌வுள் என்ப‌தும் அஹ‌ங்காரத்தை, துவேச‌த்தை உருவாக்கும் கோட்பாடே. முக்தி என்ப‌து ஆன்மீக‌ ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ விட‌ய‌ம்.

    ஒருவ‌ன் த‌ன் ம‌ன வ‌லிமையை, ம‌ன‌ நிலையை உய‌ர்த்திக் கொண்டே வ‌ந்து க‌டும் முய‌ற்சிக்குப் பிற‌கே முக்தி என்னும் நிலை அடைவ‌தாக‌ கூற‌ப் ப‌டுகிற‌து. முக்தி ப‌ற்றிய‌ க‌ருத்துக்கு மிக‌ சிற‌ந்த‌ நூல்க‌ளில் விவேக‌ சூடாம‌ணியும் ஒன்று.

  37. //கீதாச்சரியனும் படிக்கச் சொல்லும் பிரம்ம சூத்திரம், சடங்கு சார்ந்த வேதக் கல்வி முடித்தவுடன், தத்துவ விசாரமாகச் செய்யப்படும் ஆன்மா பற்றிய விசாரணை.,,

    கீதாசாரியான் எந்த‌ இட‌த்திலே பிர‌ம்ம‌ சூத்திர‌த்தை ப‌டிக்கும்ப‌டிக் கூறினான் என்ப‌தை மேற்கோள் காட்டினால் புரிந்து கொள்ள‌ ஏதுவாக இருக்கும்.

  38. //Sarang
    5 February 2010 at 6:46 pm
    //
    அய்யா சாரங் ?
    நான் இந்துவல்ல என்பது உமது துணிபோ ?. அது கிடக்கட்டும்.

    கடவுள் என்பதன் அர்த்தத்தையே அனர்த்தமாக்கி இருக்கும் இந்தக் கட்டுரை ஜாதியக் கூறுகளை மட்டுமேக் கொண்டிருக்கிறது.

    நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
    சுற்றி வந்து முனுமுனென்று சொல்லும் மந்த்ரம் ஏதடா
    நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்
    சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?
    - சிவவாக்கியர்

    சாத்திரங்கள் ஓதுகின்ற சட்ட நாதப் பட்டரே
    வேப்பிரைப்பு வந்த போதில் சாத்திரம் வந்துதவுமோ
    மாத்திரை யெப்போதுமுள்ளே அறிந்து கொள்ள தெக்கிறீல்
    சாத்திரப் பை நோய்களேது சத்தி மூர்த்தி சித்தியே..
    - சிவவாக்கியர்

    சாத்திரங்கள் நிலவைச் சுட்டிக் காட்ட உதவும் விரல் போல. நிலவை ஒருவன் தானாகவும் காணலாம் மற்றவர்கள் துணையின்றி. ஆனால் நாம் நிலவை விட்டு விடுகிறோம். விரலை மட்டுமே பற்றிக் கொள்கிறோம்.

    //# ப்ரமாண நூல்களே வேத மதத்தைப் புரிந்து கொள்ள உதவும் சாதனங்கள். //
    ப்ரமாண நூல்கள் என்பவை யாவை ?
    முதலில், யார் ப்ராமணன் ?
    இந்து என்பது மதத்தின் கூறுகள் கொண்டதா ?

    உங்களுடைய இந்த சாதீயக் குறுக்கல் கொண்ட கட்டுரைகள் பெரும்பாலும் பெரியாரிஸ்டுகளுக்கான தீனி மட்டுமே. இதில் உண்மையான ஆன்மீகம் கிஞ்சித்தும் கிட்டாது.

    (edited and published).

  39. //கீதாசாரியான் எந்த‌ இட‌த்திலே பிர‌ம்ம‌ சூத்திர‌த்தை ப‌டிக்கும்ப‌டிக் கூறினான் என்ப‌தை மேற்கோள் காட்டினால் புரிந்து கொள்ள‌ ஏதுவாக இருக்கும்.//
    internetல் தேடுவோம் என்று ‘brahma sutra in bhagavad gita’ என்ற கூகிள் search செய்தேன். Chapter 13 verse 5 கண்ணில் பட்டது. மேலும் ஏதாவது இருக்குமோ என்னவோ. இந்த தேடலில் ஒரு linkல் ‘Christianity and the Origin of Sanskrit’ என்ற ebook கண்ணில் பட்டது. யாராவது முடிந்தால் படியுங்கள்.

  40. //அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே? அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும்? அப்படி அவை குறைந்தவை என்று சொன்னால், இவன் முழு முதல் என்று வணங்கும் அந்தத் தெய்வமும் குறைந்தது என்றாகுமே?//
    கட்டுரையில் உள்ள இந்த வரிகள் அனைவரும் படித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை.

  41. //“மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா? மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது, தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”

    அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக‌ இருந்தாரா?
    //

    லூசுத்தனமான வாதம், அதான் உயிரும் உடலும் செத்தபிறகு இல்லைன்னு ஆகிவிடுது என்று நாத்திகன் சொல்கிறானே, இருக்குன்னு சொல்றவா தான் நிருபனம் செய்ய வேண்டும்.

    திருச்சிகாரனுக்கும் முக்தி கிட்ட வாழ்த்துகள்

    //மேலும் உங்களது கைவரிசையைக் காட்ட முற்படின் உமது வாயடைக்கச் செய்யுமாறு சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்து மறுக்க முடியாத ஆதாரங்களை வீச எம்க்கு சக்தி உண்டு.//

    அதைத்தான் சொல்கிறேன். எம்மைப் போன்றவர்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை விட்டு விட்டு விரைவாக உங்களுக்கு முக்தி கிட்ட வாழ்த்துகள். மற்றவர்களுக்கு முக்தி கிடைத்தால் கிடைக்காவிட்டால் என்ன ? அவர்களாவது நிம்பதியாக இருக்கட்டுமே.

  42. //இந்த விஷயத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ‘மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்’. அவர்கள் தீவீர முக்தி சிந்தனையைக் கொள்கையாகக் கொள்கிறவர்கள். இன்றைக்கு அவர்கள் எல்லோருமே அப்படி என்று சொல்ல முடியாது, ஆயினும், முக்தி மார்க்கத்தை நாடுபவர்கள், இன்னும் இருக்கிறார்கள். ‘நாராயணனே நமக்கு’ என்று தீவீர நாட்டம் கொள்வதால், அவர்கள் கொள்கை தவறல்ல. அவர்கள் பிற கோயில்களுக்குப் போகாததால், அவர்களுக்கு துவேஷம் என்று சொல்வது சரியல்ல. அதேபோல், ‘சர்வம் சிவ மயம்’ என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி பெற விரும்புகிறானோ, அவன் பிற தெய்வங்களை நாடக் கூடாது //

    //அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே?//

    “மறந்தும் புறம் தொழா” என்கிற‌ கோட்பாட்டில் இருப்ப‌வ‌ர் யாராவது “புற” தெய்வ‌ங்க‌ளையும் ப‌ர‌மாத்மா, முழு முத‌ற்க‌ட‌வுள் என‌ நினைக்கும் க‌ண்ணிய‌ம் உடைய‌வர்க‌ளாக‌ இருக்கின்ற‌ன‌ரா? அவ‌ர‌வ‌ர் ம‌ன‌சாட்சியை தொட்டு சொல்லுங்க‌ள். ம‌த‌ வாத‌த்தை நியாய‌ப் ப‌டுத்த‌ எப்ப‌டி எல்லாம் எழுதுகிரார்க‌ள்.

  43. தமிழ் பேச்சு இணையத்துக்கு எல்லா நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
    தமிழ்டாக்

  44. தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு கீழே உள்ளது என் நண்பனின் வெப் சைட்.இதில் இலவச பதிவிறக்கம் நிறைய உள்ளது.விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
    http://www.maransdog.org/iskcon_documents
    http://www.maransdog.com/JIGGI_JIGGI
    http://www.maransdog.com/document
    http://www.maransdog.com/2009_books
    http://www.maransdog.com/Ramanujan/
    http://www.maransdog.com/Mahabharat/

  45. அய்யா ஜீவ்ஸ்

    //
    //# ப்ரமாண நூல்களே வேத மதத்தைப் புரிந்து கொள்ள உதவும் சாதனங்கள். //
    ப்ரமாண நூல்கள் என்பவை யாவை ?
    முதலில், யார் ப்ராமணன் ?
    இந்து என்பது மதத்தின் கூறுகள் கொண்டதா ?
    //

    மறுபடியும் படியுங்கள் பிரமான நூல் என்பது தான் கட்டுரையில் ப்ரமான நூல் எண்டு ஒரு ப் சேர்த்து வந்துள்ளது - பிரமான நூல் என்பது பிராமன நூல் இல்லை “பிராமன” என்பது ஜாதி - பிரமான என்பது நாம் கடைசி அத்தாட்சியாக கருதும் மூன்று நூல்கள்

    //
    // அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும். //

    இது சரியில்லை. கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப்படுபவர் என்று அர்த்தம் ஆகிறதே. தவறான வழியில் திசை மாற முயல்கிறீர்கள்.

    //

    இங்கு ஆசிரியர் இந்து மதத்தை பற்றி பேசுகிறார் தாங்கள் அதை சரியல்ல என்கிறீர்கள் - மறு பிறவியில் கிறிஸ்தவராக பிறந்து முக்தி அடைவார் என்று கூற இது ஒரு கிறிஸ்தவ வலைதளமும் இல்லை கிறிஸ்தவத்தில் மறு பிறவி என்ற ஒரு கான்செப்டும் இல்லை

    நீங்கள் ஹிந்து அல்ல என்ற எண்ணம் இல்லை - இங்குமா இஸ்லாமையும் ,கிறிஸ்தவத்தையும் சேர்த்துக்கொண்டு செக்யுலர் காரர்களை போல் பேச வேண்டும் என்ற எண்ணமே

  46. //
    “மறந்தும் புறம் தொழா” என்கிற‌ கோட்பாட்டில் இருப்ப‌வ‌ர் யாராவது “புற” தெய்வ‌ங்க‌ளையும் ப‌ர‌மாத்மா, முழு முத‌ற்க‌ட‌வுள் என‌ நினைக்கும் க‌ண்ணிய‌ம் உடைய‌வர்க‌ளாக‌ இருக்கின்ற‌ன‌ரா? அவ‌ர‌வ‌ர் ம‌ன‌சாட்சியை தொட்டு சொல்லுங்க‌ள். ம‌த‌ வாத‌த்தை நியாய‌ப் ப‌டுத்த‌ எப்ப‌டி எல்லாம் எழுதுகிரார்க‌ள்.
    //

    அப்போ அல்லாவையும், ஏசுவையும், இல்லையேல் காட்டும் எத்தையும் பரமாத்மா என்று சொல்ல வேண்டியது தான் -
    இதெற்கெல்லாம் வேதம், புராணம், இதிகாசங்கள் எதற்கு அதென்ன சிவன் விஷ்ணு பிரம்ம, சக்தி, கந்தன் என்று ஒரு சில நாமங்களை மட்டும் பரமாத்வாடுன் ஒப்பிட வேண்டும் எல்லோரையும் பரமாத்மாவாக நினை எல்லோரையும் த்யானம் பண்ணு. எல்லோரையும் துதி பண்ணு என்பது தானே சர்வோத்தமமான நிலை - இது நடை முறைக்கு ஒவ்வாது என்பது தான் விஷயமே (இந்தியாவில் மட்டுமே நூறு கோடிக்கு மேல் மக்கள் எல்லோரையும் எப்படி த்யானம் பண்ணுவது)

    நீங்கள் சொல்லும் சில நாமங்களை மட்டும் பரமாத்மாவென கொண்டால் என்ன பயன், வேறொருவர் இன்னொரு லிஸ்ட் தருவார் - - பரமாத்மா ஸ்வரூபம் எங்கும் உள்ளது என்ற எண்ணம் வேண்டும் அதுவே நமது கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர எல்லோரையும் லிஸ்டில் வைத்தே ஆகா வேண்டும் என்பதல்ல

    அப்படியானால் நானும் கூட பரமாத்மா என்று கொள்ள வேண்டும் - இனியேனும் எனக்கு பதில் எழுதும் போது ஏக வசனத்தில் எழுதாதீர்கள் :-)

    நமக்கு பிடிக்காத கருத்தெல்லாம் மத வாதம் என்பது காங்கிரசாரின் செகுலர் கொள்கை போல தான்

    - புறம் தொழாதவர்கள் ஒருவரை பற்றி மட்டுமே சிந்தனையில் இருப்பர், இப்படி ஒருவர் பற்றியே த்யானத்தில் இருக்கும் அவர்களுக்கு பிற தெய்வங்களை நிந்திக்கவோ யோசிக்கவோ, பூசிக்கவோ வேணும் என்ற எண்ணம் எங்கனே வரும் - இது அத்வைதிகளிடம் போய் உங்களுக்கு பல ஆத்மா உள்ளது என்று ஒப்புக்கொள்ளும் கண்ணியம் இருக்கிறதா என்று கேட்பது போல் ஆகும், அல்லது த்வைதிகளிடம் போய் ஒரே ஆத்மாதான் என்று ஒப்பும் கண்ணியம் இருக்கிறதா என்று கேட்பது போலாகும்

    எனக்கு எந்த தெய்வத்தின் மீதும் த்வேஷம் இல்லை, எல்லோரின் மீதும் மரியாதையை உள்ளது ஆனால் ஈடுபாடு என்பது ஒன்றின் மேல் தான் உள்ளது.

  47. ஜெயஸ்ரீ அவர்களே

    நீங்கள் முந்தைய கட்டுரையில் எழுதியதை அப்படியே கும்பகோணம் சக்ரபாணி கோவிலில் நேரில் காண முடிந்தது

    - பிரபஞ்ச நிலையை குறிப்பதற்காக சக்கரத்தில் எழுந்தருளி இருக்கும் நாராயணனோ ருத்ராம்சம் பொருந்தியவராக முக்கண் உடையவராக உள்ளார் (முன்பு கூட இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன் - இந்த தடவை தான் மூன்றாவது நேத்ர தரிசனம் கிட்டியது)
    பிரம்மாவோ அங்கு சாக்ஷாத் எழுந்தருளி உள்ளார், விஷ்ணுவாகவும், ருத்ரனானகவும் தானே உள்ளார்

    - அவருக்கு நான்கு யுகங்களை குறிப்பது போல நான்கு திரவியங்களை கொண்டு [துளசி, குங்குமம், இரு மலர்கள் பெயர் நினைவில் இல்லை) அர்ச்சனை நடக்கிறது
    [தாயார், பிரம்மா, அக்னி, சூரியன் இவர்கள் அர்ச்சனை செய்கிறார்கள் ]

    - அவருக்கு காவேரி ஆற்றில் உள்ள ச்மசானத்திளிருந்து புகை வராமல் திருவாராதனம் நடப்பதில்லை என்று சொல்கிறார்கள் (ஜன்ம சுழலில் இருந்து ஒருவருக்கேனும் மோக்ஷம் அளித்த பிற்பாடே திருமஞ்சனம் காண்கிறார் என்பது போல)

  48. sarang !

    // மறுபடியும் படியுங்கள் பிரமான நூல் என்பது தான் கட்டுரையில் ப்ரமான நூல் எண்டு ஒரு ப் சேர்த்து வந்துள்ளது - பிரமான நூல் என்பது பிராமன நூல் இல்லை “பிராமன” என்பது ஜாதி - பிரமான என்பது நாம் கடைசி அத்தாட்சியாக கருதும் மூன்று நூல்கள் //

    Who authenticates it ? How does it differs from others saying ” இறுதி வேதம் ” இறுதி தூதர் ?
    மறுபடியும் சொல்கிறேன். இந்து மதத்தின் கூறுகள் கொண்டதாகத் தான் நீங்க வழிநடத்திச் செல்ல முயல்கிறீர்கள் என்பது என் கருத்து.
    கடவுள் இல்லை என்று சொல்லி, கர்ம யோகத்தில் இருப்பவனும் முக்தி அடைகிறான். அவனுக்கு so called “இந்து மதத்தில்” சத்தியமான இடம் உண்டு.

    ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை வழிபட நாம் வைத்துக் கொள்ளும் பெயர்களே சிவ விஷ்ணு பிரம்ம மற்றும் கோடானு கோடி பெயர்கள். பகவான் கிருஷ்ணனே விஷ்வரூபத்தின் போது சொல்வது என்ன என்பதை யோசிக்கவும்.

    //நீங்கள் ஹிந்து அல்ல என்ற எண்ணம் இல்லை - இங்குமா இஸ்லாமையும் ,கிறிஸ்தவத்தையும் சேர்த்துக்கொண்டு செக்யுலர் காரர்களை போல் பேச வேண்டும் என்ற எண்ணமே//

    can you point this out please ? :) கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப் படுபவர் என்பது தான் உங்கள் எண்ணம் என்றால் - எல்லாம் கடந்து உள்ளில் நிறைந்திருப்பவனை ஒரு கூட்டுக்குள் மட்டுமே காணவேண்டும் என்று வற்புறுத்துவீர்களானால் - உங்களின் ஆன்மீகப் பயணத்திற்கு வாழ்த்துச் சொல்லி நான் ஒதுங்கிக் கொள்கிறேன் :)

  49. அன்புள்ள பாலா மற்றும் முக்திக்கு நிஷ்டை தேவை என நினைப்பவர்க்கு

    //
    Bala
    5 February 2010 at 10:45 pm
    // இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. //

    interesting. This sounds very much like a “prophet” idea rather than Hindu spirituality.

    In Hindu spiirituality, it is Guru’s guidance that kindles an aspirant towards self knowledge - but that is only the “inspiration” part. The Sadhaka also has to strive hard and peel of all his layers of “avidya” (ignorance) one by one.. and this may take one or many births… It is not said that just by mere association of a great sage, you are *guaranteed* of Mukthi.

    //

    ஆப்ரஹாமிய மதத்தில் - இப்படி செய்தால் தான் சுவர்க்கம் அடையாளம் (ஜாலியாக இருக்கலாம்) என்பது திருஷ்டாந்தம் :-)

    ராமானுஜரை சரண் புகுந்தவர்களுக்கு அவர் முக்தி தருகிறேன் என்கிறார் சரண் புகவிடில் முக்தி இல்லை என்று சொல்லவில்லையே - ராமனுஜரின் உண்மையான பக்தனாக இருந்தால் அவர் சொல்படி கேட்பான் - அவர் சொல்படி கேட்பது என்பது தர்ம சாஸ்திரப்படி நடந்து பக்தியில் தெளிப்பதே ஆகும் - எப்படியும் நிஷ்டை வந்து விடுகிறது

    மேலும் ராமானுஜ சம்மந்தம் என்பது என்னவோ அவரது சொந்தக் காரர்களுக்கும் பூணுல் போட்டவர்க்கும் என்று நினைத்து விடாதீர் - சித்திரை மாதம் ஆதிரை நாள் பெரும்புதூர் வந்தீர்களானால் அங்கு பாகவதர் கூட்டமே நிரம்பி இருக்கும் - அவருக்கு பிராமணர் அல்லாத அடியார்வர்களே ஜாஸ்தி

    முக்திக்கு நிஷ்டை வேண்டும் என்பது ஒரு சரியான சிந்தனை அல்ல - அது என்னோமோ கடவுளிடம் போய் - நான் இவ்வளவு த்யானம் பண்ணேன், இவ்வளவு தானம் பண்ணேன், பக்கத்து வீட்டுக்காரரோட ஒரு நூறு மணி நேரம் அதிகமா உன்ன நினைத்தேன் அதனால எனக்கு கட்டாயம் முக்தி தா என்று கேட்பது போல் உள்ளது - அவனோ ச்வதன்த்திரன் என்று வேதம் கூறுகிறது - முக்தி அழிப்பது என்னவோ அவனது இஷ்டம் - அவனை எசினவருக்கும் முக்தி உண்டு (ராவணன், கம்சன், சிசுபாலன்), ஒரு பானைக்கே முக்தி அள்ளித்தான் என்பது ததி பாண்டன் கதையின் முலம் அறிகிறோம்

    //
    Plus, what Hindu spirituality insists on is “shraddha”. It does not directly translate as faith or belief as it is normally understood.

    It is *self knowledge* that is criteria for Mukthi - NOT “Belief in Vedas”, NOT “knowledge of Vedas”.
    //

    ஆன்ம ச்வபாவத்தை அறிந்து விட்டால் முக்தி என்று எப்படி கொள்வது - அது என்னமோ நீங்களே அடைந்தது போல் உள்ளது அதற்க்கு கடவுள் எதற்கு - அவன் மனம் வைக்காவிடில் என்ன பணியும் ஒரு பிரயோஜனமும் இல்லை - அவன் மனம் வைத்தால் எதுவும் பண்ணவே வேண்டாம்

    எதுவுமே வேண்டாம் என்னை பூரணமாக சரண் புகுந்தால் உனக்கு முக்தி தருகிறேன் கவலை படாதே என்று கடைசியாக சொல்கிறானே கண்ணன் அப்போ அது என்ன ஆபிரகாமிய கொள்கையா இல்லை அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லையா

  50. ஜீவ்ஸ்

    //
    ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை வழிபட நாம் வைத்துக் கொள்ளும் பெயர்களே சிவ விஷ்ணு பிரம்ம மற்றும் கோடானு கோடி பெயர்கள். பகவான் கிருஷ்ணனே விஷ்வரூபத்தின் போது சொல்வது என்ன என்பதை யோசிக்கவும்.
    //

    இங்கு ஏன் கிருஷ்ணனே சொன்னார் என்று சொல்கிறீர்கள் - உங்களுக்கு ஒரு வரையறை, கிருஷ்ணன் என்ற ஒரு கோட்பாடு தேவை படுகிறது - அது போல தான் மத கோட்பாடுகளும் - யாரும் கடவுளை மதத்தினுள் அடைக்கவில்லை - அந்த மூன்று பிரமாணங்களும் பரமாத்மாவை பற்றி பறக்க பேசுபவை - பரமாத்மா என்பது பொது தத்துவம் - நீங்களே அந்த பிரமானன்களுள் ஒன்றை தான் கூறுகிறீர்கள், இது பிரமாணம் ஆதலால் கேள் நம்பு என்கிறீர்கள்
    (இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்)

    //
    Who authenticates it ? How does it differs from others saying ” இறுதி வேதம் ” இறுதி தூதர் ?
    //

    தெளிவான வித்யாசம் உள்ளது

    வேதாந்த சனாதன தர்மத்தில் ஊறி திளைத்தவர்கள், ஜ்யானிகள், புத்தமும், சீனமும் சனாதன தர்மத்தை களவாடிய பொது அதை மீட்டுக்கொண்டு தந்தவர்கலான சங்கரர், ராமானுஜர், மத்வர் மற்ற ஜ்யானிகள் சனாதன தர்மத்தை தெரிந்து கொள்ள இந்த மூன்று நூல்கள் பிரமாணம் என்று கொண்டார்கள் - இல்லை என்று நீங்கள் சொன்னால் நீங்கள் போகும் வழி வேறு (அவர்களின் வேதாந்த வழி அல்ல) அவ்வளவே விஷயம்

    இங்கு இறுதியாக கொள்ளப்படுவது என்பது “the only and final” என்ற அர்த்தம் இல்லை - நீயே பார்த்து முடிவு செய், நீயே யோசித்து ஆராய்ந்து முடிவு செய், இதுவும் முடிவில்லையா அப்போது இந்த ப்ராமானதிர்க்கு வா - மேலும் உனது முடிவுகள் முன்னோர் கடும் தவம் செய்து உலக நன்மைக்காக தங்களையும் வருத்தி கொண்டு ஆராய்ந்து கொணர்ந்த அந்த பிராமணத்தின் படி உள்ளத என்று பார் என்பது தான் திருஷ்டாந்தம்

    இதை இறுதியாக கொள்ளாமல், ந்யாய, வைசேசிக, யோக, சங்க்ய மதங்கள் இருந்தனவே - அவைகளுக்கு இந்த மூன்றும் பிரமாணம் அல்லவே, இவையும் சனாதன தர்மத்தின் அங்கமாகி விட்டனவே?

    ஆகவே இங்கு கூறும் பிரமானமானது வேந்தாந்த விஷயத்தை அறியவே. இது தான் கடவுள் என்று அவரை கட்டுப்படுத்த அல்ல - வேதாந்த மார்கமாக எழுதும் பொது இவை மூன்றையும் பிரமாணமாக கொண்டே தீர வேண்டும் - தமிழில் பேசினால் தமிழ் இலக்கணம் இல்லாமல் எப்படி பேச முடியும் அது போலவே

    இறுதி நூல், இறுதி தூதர் என்பது வேறு - உலகத்தவரே (பாவிகளே) இதுக்கு முன் இருந்தவையும் பொய், பின் வரப்போவையும் பொய் இதுவே மெய் இது அல்லால் ஏதும் இல்லை ஜாக்கிரதை என்பது தான் இங்கு அறிகிறோம்

    பிரமாணமாக கொள்ளும் இறுதி நூலானது இலக்கணம் போல - இதற்க்கு மேல் எனக்கு சரியாக எழுதவரவில்லை

    //
    can you point this out please ? கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப் படுபவர் என்பது தான் உங்கள் எண்ணம் என்றால் - எல்லாம் கடந்து உள்ளில் நிறைந்திருப்பவனை ஒரு கூட்டுக்குள் மட்டுமே காணவேண்டும் என்று வற்புறுத்துவீர்களானால் - உங்களின் ஆன்மீகப் பயணத்திற்கு வாழ்த்துச் சொல்லி நான் ஒதுங்கிக் கொள்கிறேன்
    //

    ம்ம்ம் எனக்கு எழுதவரவில்லை என்பது மறுபடியும் நிரூபணம் - நான் சொன்னது இந்த தலத்தில் போட்துவாகவே எழுதுவது என்பது தேவை யற்றது - இது ராமாயணத்தில் ராமர் ராவணனை வதம் செய்தார், ராமர் சீதையை மணந்தார் என்று சொல்லாமல் - நமது நூலின் கதாநாயகன் எதிர் கதாநாயகனை கொன்றார், நமது நூலின் கதாநாயகன் கதாநாயகியை மணந்தார் என்பது போல் ஆகிவிடும் - இதை தான் நான் சொல்ல வந்தது

    ஒரு சிறிய விண்ணப்பம் - ஓரிரண்டு பதில்களை படித்து விட்டு இவன் இப்படிதான், இந்த கொள்கை உடையவன் நம் போல் பரந்த மனம் இல்லையே உனக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன் என்று முடிவு கட்டுவது சரியல்ல - பதில்களை “context” உடன் மட்டும் பார்த்து, வலை தளத்தில் எழுதும் பொது நமது கருத்தை முழுமையாக விளக்க இயலாமல் போகிவிடும் என்பதையும் மனதில் கொண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டுகிறேன்

  51. ///தனபால்
    8 February 2010 at 11:22 pm
    தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு கீழே உள்ளது என் நண்பனின் வெப் சைட்.///
    very thanks for this.

  52. Dear Thiru, Thiruchikkaran avarkale,

    May I have ur email id pls’

    regards,

    thamil

  53. ஜீவ்ஸ் அவர்களே

    //
    ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை வழிபட நாம் வைத்துக் கொள்ளும் பெயர்களே சிவ விஷ்ணு பிரம்ம மற்றும் கோடானு கோடி பெயர்கள். பகவான் கிருஷ்ணனே விஷ்வரூபத்தின் போது சொல்வது என்ன என்பதை யோசிக்கவும்.
    //

    மேலும் இங்கு ஹிந்து மதம் என்று தான் கூற வேண்டும், முக்தியை பற்றி வேறு யாரும் பேசவில்லை - மற்றவரெல்லாம் ஒரு நாலஞ்சு பேர சாத்திபுட்டு மேலே பொய் ஜாலியா இருக்கலாம் என்று தான் சொல்கிறார்கள் - உலகம் சக்கரம், வாழ்கை சக்கரம், மறுபிறவி, முக்தி இதெல்லாம் நீங்கள் வேண்டாம் என்றாலும் ஹிந்து என்ற மத நூல்களில் தான் உள்ளன - மதம் என்றாலே மோசம் என்பது அர்த்தம் அல்ல.

    அதாலால் முக்தியை பற்றி பேசும் பொது ஹிந்து மதத்தை பற்றி மட்டுமே சொல்ல வேண்டியாக உள்ளது அதாவது ஹிந்து மதத்தில் சொன்னது போல நடந்தால் முக்தி என்று ஹிந்து மதம் விவரிக்கும் ஒரு நிலை கிட்டும்

    இஸ்லாம் நூல் படி நடந்தால் முக்தி கிட்டும் என்று எங்கனே சொல்வது - அந்த மார்கத்திலோ மறு பிறவி என்பதோ நாம் கூறும் முக்தி என்பதோ இல்லையே - ஒரு இஸ்லாமியருக்கு முக்தி கிட்டியது என்று சொல்வோமாயின் அவர் ஹிந்து மதத்தில் சொன்னபடி (மதம் மாறாமலேயே) ஏதோ செய்துள்ளார் அதன் விளைவாக முக்தி கிட்டியது என்று தானே கொள்ள வேண்டும்

    அடிப்படையில் ஒரு நூலே இல்லாமல், மார்கமே இல்லாமல் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் எங்கும் செல்ல முடியாது - வேத நூலில் சொன்ன மார்க்கம் வேண்டுமானால் அதை அறிதலும் அதன் படி நடத்தலும் முக்கியமாகிறது அதற்க்கு வேதத்தையே பிரமாணமாக கொள்ள வேண்டியது உள்ளது

  54. // ஆன்ம ச்வபாவத்தை அறிந்து விட்டால் முக்தி என்று எப்படி கொள்வது - அது என்னமோ நீங்களே அடைந்தது போல் உள்ளது அதற்க்கு கடவுள் எதற்கு - அவன் மனம் வைக்காவிடில் என்ன பணியும் ஒரு பிரயோஜனமும் இல்லை - அவன் மனம் வைத்தால் எதுவும் பண்ணவே வேண்டாம் //

    அன்புள்ள சாரங்,

    பாலா நம்மாழ்வாரைப் படித்திருப்பார் போலும். நம்மாழ்வார் கூறுவதைப் பாருங்கள்:

    நன்றாய் ஞானம் கடந்துபோய்
    நல்லிந்திரிய மெல்லா மீர்த்து
    ஒன்றாய்க் கிடந்தவரும் பாழ்
    உலப்பிலதனை உணர்ந் துணர்ந்து,
    சென்றாங்கின்ப துன்பங்கள்
    செற்றும் களைந்து பசையற்றால்
    அன்றே அப்போதே வீடு
    அதுவே வீடு வீடாமே. (திருவாய்மொழி 8-8-6.)

    உரை: நம் ஸ்வரூபத்தை மறைக்கும் ப்ரக்ருதியின் ஸம்பந்தத்தை விலக்கி இந்திரியங்களை ஜெயித்து விஷயங்களோடு உள்ள ஸம்பந்தத்தையும் அதின் ருசி வாஸனைகளையும் விட்டால் ஆத்மாவின் மறைந்த ஸ்வரூபம் தோன்றும். அதுவே மோக்ஷம், மோக்ஷத்தின் ஆனந்தமும் அதுவே.

    இங்கும் முக்தி உன்னதக் கவிதையாகவே பாடப் பட்டுள்ளது, தன் தத்துவ வீச்சை முழுவதும் நிரப்பியபடி!

    // எதுவுமே வேண்டாம் என்னை பூரணமாக சரண் புகுந்தால் உனக்கு முக்தி தருகிறேன் கவலை படாதே என்று கடைசியாக சொல்கிறானே கண்ணன் அப்போ அது என்ன ஆபிரகாமிய கொள்கையா இல்லை அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லையா//

    மோஷ த்வாரத்தின் *ஒரே* கேட்-கீப்பர் போன்று ஒரே ஒரு சமயவாதக் கடவுளை (thiesitic deity) உருவகித்தால் தான் ”நம்பிக்கை” என்பதை இந்த அர்த்தத்தில் பார்க்கத் தோன்றும். the conception of Shiva/Vishnu/Shakthi as theistic deities is only in lower plane. In higher planes, at least for Vedantins, it is all manifestations of Brahman only.

    எதுவுமே வேண்டாம் என்றால் என்னத்திற்கு கீதை 18 யோகங்களை உபதேசிக்க வேண்டும்?? சரணாகதி பற்றி ஒரு சுலோகம் போதாதா? கீதையே யதேச்சஸி ததா குரு (எப்படி இஷ்டமோ அப்படிச் செய்) என்று பின்னர் கூறுவதைக் கவனியுங்கள்.

    முக்தி என்பது ஒரு “நிலை”. ஒரு செயல்பாடோ, அல்லது ஒரு இலக்கோ கூட அல்ல. தூய வேதாந்தத்தில் கட்டுகளற்ற விடுதலை என்றே அது பேசப்பட்டுள்ளது (”வீடு” என்ற தமிழ் சொல்லுக்கும் அதுவோ பொருள்). சரணாகதி தத்துவம் என்பது பக்தி மார்க்கத்தில் ஒரு உன்னத பாவனையாக சொல்லப் பட்டுள்ளது, அதுவே முக்தி அல்ல.

    மேலும், பக்தி/சரணாகதி என்பது ஒரு *மார்க்கம்* மட்டுமே. அது ஒரு *நிலை* அல்ல. ஆத்ம-ஸ்வரூப-தர்சனம் எனப்படும் தன்னிலை உணர்தலே முக்தி என்று வேதாந்தம் கூறுகிறது.

  55. ஜடாயு அவர்களே

    நம்மாழ்வாரின் ஒரு பாசுரத்தை கூறும் நீங்கள் அவர் மற்றவைகளில் சொன்னதை பார்க்கவில்லையே - அவர் ஆன்மாவிற்கு அடிமை ஸ்வபாவம் தான் காட்டினார் - ஆன்ம ஸ்வரூபம் என்று அவர் சொல்லுவது ஆன்மா செஷியின் செஷன் என்பதை அறிவதே

    உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே (கண்ணன் சொல்லும் சரணாகதி).

    நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் (ஒரு தகுதி இல்லாமலே முக்தி கிட்டும் என்று நாம் தெரிந்து கொள்ள)
    அடியேன் சிறிய ஞானத்தன் - [அடியேன் என்பதன் மூலம் அடிமை என்பது, சிறிய ஞானத்தன் என்பதன் மூலம் ஆன்மாவிற்கு ஞானம் அழகல்ல என்றது]

    தீர வினைகள் தீர என்னை ஆண்டாய் .. உனக்காட்பட்டும் அடியேன் இன்னும் உழல்வேனே - [வினைகள் தீர்ந்தாயிர்று (ஆன்ம நிலை அறிந்தாயிற்று) ஆனாலும் இன்னும் இங்கு உழல்கிரேனே எங்கே மோக்ஷம் என்னபாடு போலே]
    ஆவிக்கொர் பற்றுக்கொம்பு - ஆன்மாவை அறிந்தால் மட்டுமே ஏற்படுமா இந்த எண்ணம்

    அடியேன் ஆவி அகமே தித்திப்பாய், அமர அழும்ப துழாவி என் ஆவி அமர தழுவிற்று [ஆன்ம நிலையை நன்கு உணர்தல், பரிபாஷையே ஆண்மவிர்ற்கும் கன்னனுக்குமாய் இருத்தல் - இதன் பின்னும் பல பாசுரங்கள பண்ணி இந்த லோகத்தில் தானே இருந்தார் ஆழ்வார்]

    கண்ணிடம் போய் என் நெஞ்ஜாரை கேட்டதாக சொல் - கண்ணனிடம் என் நெஞ்சு உள்ளது அதில் அவன் உள்ளான் அதனால் நெஞ்சார் என்று மரியாதையுடன் சொன்னது [பக்தியின் உச்சம்]

    எனதாவி யார் நான் யார் தந்த நீ கொண்டாக்கினையே - நீயே அதிகாரி, நான் ஒன்னும் என்னை உன்னுள் செலுத்தவில்லை , நீயே எடுத்துக்கொண்டாய் என்றது]

    இப்படி பல இருக்க நமக்கு வேண்டிய பொருளை தரும் ஒரு பாசுரத்தை மட்டும் பார்த்தல் அது பூரணமாக ஆழ்வாரின் வாக்கை பிரதிபலிக்காது

    //
    // எதுவுமே வேண்டாம் என்னை பூரணமாக சரண் புகுந்தால் உனக்கு முக்தி தருகிறேன் கவலை படாதே என்று கடைசியாக சொல்கிறானே கண்ணன் அப்போ அது என்ன ஆபிரகாமிய கொள்கையா இல்லை அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லையா//

    மோஷ த்வாரத்தின் *ஒரே* கேட்-கீப்பர் போன்று ஒரே ஒரு சமயவாதக் கடவுளை (thiesitic deity) உருவகித்தால் தான் ”நம்பிக்கை” என்பதை இந்த அர்த்தத்தில் பார்க்கத் தோன்றும். the conception of Shiva/Vishnu/Shakthi as theistic deities is only in lower plane. In higher planes, at least for Vedantins, it is all manifestations of Brahman only.
    //

    பாலா குறிப்பிட்ட நிஷ்டைகள் எதுவும் தேவை இல்லை - கண்ணன் என்னிடம் சரண் என்றால் போதும் என்பதை விளக்குவதற்காக சொன்னேன் - இதயுமா சமயவாதம் என்று பார்க்கத் தோன்றுகிறது - கண்ணன் மாம் ஏகம் என்று தானே கூறினான் - பர பிரம்மம் ஏகம் என்று கூறவில்லை - அவர் சொன்னதை மாற்றி சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை

    இதே யக்ஞவல்கர் சொன்னதை சொல்வதேன்றானால் - எல்லாம் அந்த இஷ்வரன் தான், ஹிரண்ய கார்பன் தான் என்று சொல்லி இருப்பேன் அங்கு கண்ணன் என்று பிரயோகித்திருக்க மாட்டேன்

    //
    எதுவுமே வேண்டாம் என்றால் என்னத்திற்கு கீதை 18 யோகங்களை உபதேசிக்க வேண்டும்?? சரணாகதி பற்றி ஒரு சுலோகம் போதாதா? கீதையே யதேச்சஸி ததா குரு (எப்படி இஷ்டமோ அப்படிச் செய்) என்று பின்னர் கூறுவதைக் கவனியுங்கள்.
    //

    இதற்க்கு எனக்கு தெரிந்த இரண்டு பதில்கள்

    முதலாவது - இவ்வளவு சொன்னேன், இது எதுவுமே முடியலன்னா இத பண்ணு. எனக்கு துளசி தீர்த்மாவது கொடு என்று கடைசியாக சொல்லவில்லையா அது போல் தான்

    இரண்டாவது - இது வைஷ்ணவ ஆசிரியர்கள் கொள்ளும் நிலை - சரம ச்லோகமானது முமுக்ஷுவான வைஷ்ணவர்களுக்கு மூன்று ரஹச்யங்களில் ஒன்று [முமுக்ஷுவுக்கு அறியவேண்டிய ரஹச்யம் மூன்று] - கீதையில் இந்த சரம ஸ்லோகமே முக்கியமானது என்று கொள்வர் - அது பிரபத்தி மார்கத்தை விவரிப்பதனால். இப்படி இருக்கையால் - சரம ஸ்லோகமே முக்கியமான கீதா வாக்கியம், முன் உள்ளவை எல்லாம் வெறும் அவதாரிகை என்பது அவர்களின் நிலை பாடு

    //
    மேலும், பக்தி/சரணாகதி என்பது ஒரு *மார்க்கம்* மட்டுமே. அது ஒரு *நிலை* அல்ல. ஆத்ம-ஸ்வரூப-தர்சனம் எனப்படும் தன்னிலை உணர்தலே முக்தி என்று வேதாந்தம் கூறுகிறது.
    //

    நீங்கள் நான் எழுதியதை முழுவதும் மறுபடியும் படித்து பாருங்கள் - இதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்படி செய்தால் முக்தி நிச்சயம் என்ற எண்ணம் சரி அல்ல அது பகவாநிடதிளிருந்து அவனது உரிமையை பறிப்பது போலே என்பது தான் எனது அபிப்பிராயம் - [எனதாவி யார் நான் யார் தந்த நீ கொண்டாக்கினையே] - மேலும் ஆத்மா ஸ்வரூபத்தை உணர்தலே முக்தி என்றால் ஆத்மா ஸ்வரூபத்தை உணர்ந்தவர்கள் உணர்ந்த மாத்திரமே இவ்வுலகை விட்டு போய் விடுவர் (ஆன்ம போய் விடும்) - அப்படி நடப்பதில்லையே - சிவா பதமோ, பரம பதமோ அல்லது பர பிரம்ம பதமோ அடைவது தான் முக்தி என்றால் அதற்க்கு பர பிரம்மத்தின் ஒப்புதல் தேவை படுகிறது - கண்ணன் ஆன்ம நிலையை உணர்ந்தவர்களை தத்வதர்சி, முமுக்ஷு, ச்திதப்ரஞன் (மோக்ஷம் அடைய நினைப்பவர்கள், தகுதி உடையவர்கள்) என்று தான் சொல்கிறானே ஒழிய மோக்ஷம் அடைந்தவர்கள் என்று கூறவில்லையே

    இதை கொண்டே இஷ்வர இச்சை மோக்ஷத்திற்கு அவசியம் என்று சொன்னேன் - இஷ்வரன் பர பிரம்ம வடிவில் இருப்பினும் அந்த பிரம்மத்தின் இச்சை அவசியமாகிறது

    மேலும் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆன்மாவை த்யாநிப்பவன் கைவல்யம் என்ற இரண்டாம் தர மோக்ஷம் அடைகிறான் என்று கொள்கிறார்கள் (இது fyi - விவாதத்திற்காக அல்ல)

  56. அய்யா பெரியாரிஸ்ட்

    //
    நீங்கள் அனைவரும் முக்தி அடைந்துவிட்டாலே, எங்களுக்கு வேலை இல்லை
    //

    நீங்கள் பெரியாரை போல் இல்லாமல் உண்மையை ஒத்துக்கொள்கிறீர்கள்

    உங்களுக்கு வேலை இருக்காது
    நாங்கள் அனைவரும் முக்தி பெற்றுவிட்டால் - இங்கு கோவில்களே தேவை இல்லை (இருக்காது) அப்புறம் எந்த கோவிலின் முன்பு பெரியார் சிலையை திறப்பீர்கள் அதற்க்கு மாலை மரியாதை எல்லாம் செய்வீர்கள்

    உங்களுக்கு வேலை இருக்காது
    ஒவ்வொரு மைல் கல் பக்கத்திலும் “கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை” என்று எழுத வேண்டி இருக்காது

    உங்களுக்கு வேலை இருக்காது
    அஞ்சு ரூவா பிரியாணிக்காக எக்கக்செக்க வெயிலிலும் (பகுத்தறிவே இல்லாமல்) கருப்பு சட்டை கருப்பு பான்ட் போட்டுக்கொண்டு மைக் புடிச்சு இஷ்டப்படி சம்மந்த சம்மந்தமே இல்லாமல் கஷ்டப்பட்டு ஏதேதோ உவமானம் கூறி எதுகை மோனையுடன் சங்கராச்சர்யரையும், கோவில் அர்ச்சகர்களையும், பிராமணர்களையும் திட்ட வேண்டி இருக்காது - பாவம் பிரியாணி கிடைக்காதே :-(
    இப்பொழுதே முதல்வரிடம் சொல்லி திக காரர்களுக்கெல்லாம் வாழ்நாள் முழுவதும் இலவச பிரியாணி போட ஏற்பாடு செய்யுங்கள் - அதற்காக ஒரு ஆர்பாட்டம் வேண்டுமானாலும் செய்யுங்கள் அதில் தயிர் சாதத்தையும், சாம்பார் சாதத்தையும் இஷ்டப்படி வெய்யுங்கள்

    உங்களுக்கு வேலை இருக்காது
    வெறும் சர்சுக்களும், மசூதிகளும் தான் எஞ்சி இருக்கும் - அதை மறுப்பதற்கு வேறு ஒரு கூட்டம் இருக்கும் - உங்களுக்கு அதில் பங்கு இல்லை ஏன் என்றால் பெரியாருக்கு இந்து கடவுள் தான் கிடையாதே தவிர மற்றவை பற்றி ஆட்சேபனை ஏதும் இல்லை - தவறி நீங்கள் ஏதேனம் சில்மிஷம் செய்தாலும் உங்களுக்கு பேராபத்து வண்டு சேரும் என்ற பயம் இருக்கும் அதனால் வேலையே இல்லாமல் சும்மாவே தான் இருப்பீர்கள்

    பெரியாருக்கு கஷ்டமே இருக்காது - ஒரு பெரிய கூட்டத்தில் முட்டாள்கள் யார், அவர்களை கண்டு பிடித்து சீடர்களாக கொள்ள வேண்டும் என்ற சிரமம் பட நேராது - மேலே பார்பதுவெல்லாம் ஆகாசமாய் இருப்பது போலே

  57. திரு ஜடாயு அவர்களே,

    ‘சமயவாதம், சமயவாதம்’ என்று கூறுகிறீர்கள். உங்களுடைய தளத்தில் நீங்கள் ஆதி சங்கரரைப் புகழ்ந்துல்லீர்கள். நீங்கள் ஆதி சங்கரர் சூத்திர பாஷ்யத்தில் கூறியுள்ளதை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன் (பிரும்ம சூத்திர பாஷ்யம், 2.2.42): http://www.sacred-texts.com/hin/sbe34/sbe34218.htm

    “இந்த (பாகவத பாஞ்சராத்திர) மதத்தைப் பற்றி நாங்கள் (அத்வைத வேதாந்திகள்) கூறவேண்டியது: இம்மதத்தில் வேதாந்தத்துக்கு (எம்முடைய மதத்திற்கு) அனுகூலமான ஒரு பகுதி உள்ளது. அதை நாங்கள் நிராகரிக்கவில்லை - அதாவது, மூலப் பிரக்கிருத்திக்கும் அப்பால் உள்ள பரமாத்மாவான - சர்வாந்தர்யாமியான நாராயணனை, (பாகவத பாஞ்சராத்திர மதத்தில் சொல்லப்பட்டுள்ள) கோயில் வழிபாடு, திருவாராதனம், மற்றும் என்னேரமும் மறந்தும் புறந்தொழாமல் அவனையே நினைத்தல், முதலிய வழிகளில் அவனை வழிபடுவதை நாங்கள் நிராகரிக்கவில்லை. ஏனெனில், பகவானான அவனை வழிபட வேண்டும் என்று சுருதி-ஸ்மிருதி நூல்களில் இருந்து தெரிந்துக் கொள்கிறோம்.

    என்று கூறுகிறார். அதாவது, ஆதி சங்கரர் ‘மறந்தும் புறன்தொழாமை’ என்ற சித்தாந்தத்தை ஒரு பொழுதும் எதிர்க்கவில்லை. ஒரு பொழுதும் அதை ‘கீழான நிலை, குறுகிய மனப்பான்மை’ என்று கூறவே இல்லை. பிரும்ம சூத்திரத்திலும் இறுதி சூத்திரத்தில் அவர் “நிர்குண பிரம்ம நிலையை அடைந்து மோக்ஷம் பெறலாம். அல்லது, சகுண உபாசனை வழி சென்று விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடையலாம். இரண்டுமே புனராவிருத்தி (சம்சாரக் கடலில் மறுபடி பிறப்பு எடுத்தல்) அல்லாத இடங்கள். இவ்விரு வழிகளும் சம்சாரத்தில் இருந்து விடுதலை அளிக்கவல்லது.” என்றும் சொல்லியுள்ளார்.

    //
    the conception of Shiva/Vishnu/Shakthi as theistic deities is only in lower plane. In higher planes, at least for Vedantins, it is all manifestations of Brahman only.
    //

    அனைவரும் “higher plane (பரமார்த்திகம்)” என்றும் “lower plane (வியாவஹாரிகம்)” என்று ‘இரண்டு தத்துவ நிலைகள் உள்ளன’ எனும் அத்வைத வேதாந்தத்தை ஆதரிக்க வேண்டும் என்று தேவை இல்லை. வேதாந்தம் என்றாலே அத்வைதம் அல்ல; விஷிஷ்டாத்வைதமும் த்வைதமும் வேதாந்த மார்கங்களே என்பது அந்த அந்த மதத்தைப் பின்பற்றுவர்களுடைய நபர்களின் கோட்பாடு. மேலும், ஆதி சங்கரர் “சகுண மோக்ஷ லோகமும் (பரமபதமும்) புனர் ஆவிருத்தியற்றது” என்று சொல்லியுள்ளார். ஆகையால், ஸ்ரீவைஷ்ணவர்கள் காலங்காலமாக பின்பற்றி வரும் வழிபாட்டு வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அத்வைத மதத்தைப் பின்பற்றுவார்கள் கோருவது சரி அல்ல.

    அத்வைத மதத்தின் வியாவஹாரிக்க நிலையில் சர்வாந்தர்யாமியான, சர்வசக்தனான, சர்வஜ்ஞனான பகவான் ஒருவரே உண்டு. அந்த பகவான் உபாசனைக்காக சில உருவங்களை எடுத்துக் கொண்டு வருகிறான் என்பதும் சங்கரர் ஒத்துக் கொண்டுள்ளதே. ஆகையால் வியாவஹாரிக்க நிலையில் theism என்பதும் உண்டு. இதை ஆதி சங்கரர் பாஷ்யங்களில் நன்கு விளக்கியுள்ளார்.

  58. ஜீவ்ஸ்

    //
    இங்கு ஏன் கிருஷ்ணனே சொன்னார் என்று சொல்கிறீர்கள் - உங்களுக்கு ஒரு வரையறை, கிருஷ்ணன் என்ற ஒரு கோட்பாடு தேவை படுகிறது - அது போல தான் மத கோட்பாடுகளும் - யாரும் கடவுளை மதத்தினுள் அடைக்கவில்லை - அந்த மூன்று பிரமாணங்களும் பரமாத்மாவை பற்றி பறக்க பேசுபவை - பரமாத்மா என்பது பொது தத்துவம் - நீங்களே அந்த பிரமானன்களுள் ஒன்றை தான் கூறுகிறீர்கள், இது பிரமாணம் ஆதலால் கேள் நம்பு என்கிறீர்கள்
    (இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்)//

    கிருஷ்ணன் சொன்னதைச் சொன்னது விளங்கிக் கொள்ள அல்லது விளக்கிச் சொல்ல. மறுபடியும் நாம் விரல்களைப் பற்றிக் கொள்ளவே விரும்புகிறோம். நிலவை ஏன் நேரடியாக பார்க்கக் கூடாது ?. க்ருஷ்ணன் ஒரு பெயர். அது காட்டும் நிலவை நாம் விட்டுவிட்டு பெயரில் நிற்கிறோம். அதைத்தான் குறிப்பிடுகிறேன்.

    கிருஷ்ணன், சிவன், பிரமன், விஷ்ணு இந்தப் பெயர்கள் தெரியாத ஒருவன் வீடுபேறு அடைய முடியாதா ? முடியும். தன்னையறிந்து தன்னுள் தானறிந்து தன்னை விடுத்தல் நடக்கும் போது. சைக்கிள் பழக முதலில் துணை வேண்டும். அப்போது நம் கவணம் முழுதும் ஹாண்டில் பார், ரோடு என்று இருக்காது. சொல்லிக் கொடுப்பவர் பின்னாடி பிடித்திருக்கிறாரா என்ற கவனத்தில் தான் இருப்போம். அது தான் நீங்கள் சொல்லும் பிரமாணங்கள். அந்தப் பிரமாணங்கள் மட்டுமே போதுமானவையா ? நீங்கள் சைக்கிள் நன்றாகப் பழகியப் பின் உங்கள் கவனம் எங்கு சிதறி இருப்பினும், வண்டி சரியான பாதையில் ஓடும். அப்போது பிரமாணங்களைக் கொண்டுதான் வழித்தடத்தில் செல்லுவேன் என்பது அபத்தம்.

    அதே போல சிலர் தானே தத்தி தத்தி விழுந்து எழுந்து கற்றுக் கொள்வார்கள். அவர்கள் வண்டியே ஓட்டத் தெரியாதவர்களா ? இருவருக்குமே குறிக்கோள் ஒண்று தான். ஆனால் கடைசி வரை ஒருத்தர் என் வண்டியைப் பிடித்தால் தான் வண்டி ஓட்டுவேன் என்பது அபத்தத்திலும் அபத்தம் இல்லையா ?

    //
    வேதாந்த சனாதன தர்மத்தில் ஊறி திளைத்தவர்கள், ஜ்யானிகள், புத்தமும், சீனமும் சனாதன தர்மத்தை களவாடிய பொது அதை மீட்டுக்கொண்டு தந்தவர்கலான சங்கரர், ராமானுஜர், மத்வர் மற்ற ஜ்யானிகள் சனாதன தர்மத்தை தெரிந்து கொள்ள இந்த மூன்று நூல்கள் பிரமாணம் என்று கொண்டார்கள் - இல்லை என்று நீங்கள் சொன்னால் நீங்கள் போகும் வழி வேறு (அவர்களின் வேதாந்த வழி அல்ல) அவ்வளவே விஷயம்//

    எத்தனையோ மகா புருஷர்கள் உதித்த திருநாடு. மேலே நீங்கள் குறிப்பிட்டவர்கள் வணங்கத் தக்கவர்கள் அவர்கள் சொன்னது எல்லாம் அற்புதமானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர்கள் சொன்னது மட்டுமே சரி என்று சொல்ல வருவதைத் தான் சரியில்லை என்று சொல்ல வருகிறேன். எதையும் சோதித்து அறிந்துக் கொள் என்கிறதல்லவா நீங்கள் சொல்ல வரும் பிரமாணமும் ?

    // இங்கு இறுதியாக கொள்ளப்படுவது என்பது “the only and final” என்ற அர்த்தம் இல்லை - நீயே பார்த்து முடிவு செய், நீயே யோசித்து ஆராய்ந்து முடிவு செய், இதுவும் முடிவில்லையா அப்போது இந்த ப்ராமானதிர்க்கு வா - மேலும் உனது முடிவுகள் முன்னோர் கடும் தவம் செய்து உலக நன்மைக்காக தங்களையும் வருத்தி கொண்டு ஆராய்ந்து கொணர்ந்த அந்த பிராமணத்தின் படி உள்ளத என்று பார் என்பது தான் திருஷ்டாந்தம்
    //

    சரிதான். ஆனால் அதை ஏன் சில மூன்றுக்குள் அதுவும் சமஸ்கிருதத்தில் இருந்தால் தான் ஒப்புக்கொள்வேன் என்பதெல்லாம் ? இதைச் செய்யாதே இதை மட்டுமே செய் என்பது ஒடுக்குதல் மதத்தின் செயல். இந்துவாக இருப்பதற்கு ஒரு இப்படிச் செய் என்ற கட்டுப் பாடு வேண்டாம். வழிக்காட்டுதல் மட்டுமே போதும். அதன் படி நடப்பதும் வீழ்வதும் அவன் கர்மா ( அப்படி என்று ஒன்று இருந்தால் )

    சமஸ்கிருதம் தருவதே முக்தி காட்டும் நூல் என்பதெல்லாம் பம்மாத்து. மொழி ஒரு கருவி. அவ்வளவே. தமிழில் இல்லாதவையா ?

    வேதாந்த வழி / பக்தி வழி எனும்போது திருப்புகழின் திருவாசகத்தின் இனிமையும், தேவாரப் பதிகங்களும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் கூட பிரமாண நூல் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.

    அதி தீவிர வேதாந்த தத்துவங்கள் மட்டுமே என்றால் அற்புதமான சித்தர் பாடல்களையும் கொள்ளலாம். ஆகவே பிரமான நூல் “அவை மட்டுமே” என்று குறுக்குதல் ஏற்க முடியாது. பாரதியின் பல பாடல்கள் தரும் மெய் சிலிர்ப்பை சம்ஸ்கிருத ஒலிக் கோர்வை எனக்கு அளிக்க முடியாது.

    // இதை இறுதியாக கொள்ளாமல், ந்யாய, வைசேசிக, யோக, சங்க்ய மதங்கள் இருந்தனவே - அவைகளுக்கு இந்த மூன்றும் பிரமாணம் அல்லவே, இவையும் சனாதன தர்மத்தின் அங்கமாகி விட்டனவே?

    //
    ஆகவே இங்கு கூறும் பிரமானமானது வேந்தாந்த விஷயத்தை அறியவே. இது தான் கடவுள் என்று அவரை கட்டுப்படுத்த அல்ல - வேதாந்த மார்கமாக எழுதும் பொது இவை மூன்றையும் பிரமாணமாக கொண்டே தீர வேண்டும் - தமிழில் பேசினால் தமிழ் இலக்கணம் இல்லாமல் எப்படி பேச முடியும் அது போலவே

    இறுதி நூல், இறுதி தூதர் என்பது வேறு - உலகத்தவரே (பாவிகளே) இதுக்கு முன் இருந்தவையும் பொய், பின் வரப்போவையும் பொய் இதுவே மெய் இது அல்லால் ஏதும் இல்லை ஜாக்கிரதை என்பது தான் இங்கு அறிகிறோம்

    பிரமாணமாக கொள்ளும் இறுதி நூலானது இலக்கணம் போல - இதற்க்கு மேல் எனக்கு சரியாக எழுதவரவில்லை
    //

    இறைவனைப் பற்றிய அறிவை/ தெளிவை எந்த ஒரு நூலும் ஏற்படுத்த முடியாது. 100% தூரத்தில் ஒரு அடி எடுத்து வைக்கத் தூண்டும் தூண்டுகோல் என்ற அளவில் இருக்கலாமே தவிர அவையே பிரமாண நூல்கள் அவற்றைக் கொண்டே வீடுபேறு என்பது - என்னளவில் பேத்தலான விஷயம்.

    //
    தமிழ் இந்து என்ற போதில் அது மட்டுமே பேசவேண்டும் என்றில்லை. அக்கம் பக்கம் அறியாமல் நான் மட்டுமே சரி என்பதைப் போலவாகிவிடும்.

    ஒரு சிறிய விண்ணப்பம் - ஓரிரண்டு பதில்களை படித்து விட்டு இவன் இப்படிதான், இந்த கொள்கை உடையவன் நம் போல் பரந்த மனம் இல்லையே உனக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன் என்று முடிவு கட்டுவது சரியல்ல - பதில்களை “context” உடன் மட்டும் பார்த்து, வலை தளத்தில் எழுதும் பொது நமது கருத்தை முழுமையாக விளக்க இயலாமல் போகிவிடும் என்பதையும் மனதில் கொண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டுகிறேன் //

    Lets Discuss It :) ( No Arguments ;) only discussion )

  59. திரு ஹரன்

    // சொற்பிரயோகம் தவறு ஜடாயு. ஜோதிஷம் உங்களுக்குப் பிடிக்காமலும் அதில் உங்களுக்கு நம்பிக்கையில்லாமலும் இருக்கலாம். அதற்காக அதைக் கற்றவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதைச் “சிறுபிள்ளைத்தனம்” என்று கூறுவது சரியில்லை.//

    // தமிழ் ஹிந்து வாசகர் கூட்டத்தில் யாரும் குருடர்கள் அல்ல ஜெயஸ்ரீஜி, இருட்டில் உள்ளவர்களும் ஒளி தேடுபவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஒளி பெற விருப்பம் உள்ளவர்கள் பெற்றுக் கொள்ளட்டும்.//

    நன்றி ஹரன்ஜி.

    முன்பு, வருடப்பிறப்பு பற்றிய கட்டுரைக்கு மறு மொழி பகர்ந்த திரு தமிழ் செல்வன் அவர்கள், சங்கத் தமிழில் காணப்படும் ஜோதிடக்க்கருத்துக்களை எழுத ஊக்கமும், வரவேற்பும் கொடுத்ததையும் நினவு கூர்கிறேன். ஆனால், ஜோதிடம் என்றாலே முணுக் - என்று கோபமும், எரிச்சலும் கொண்டு ஜடாயு அவர்கள், மாண்டூகராக :-) மாறுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறதே அன்றி, வேறு எப்படியும் நான் இதைப் பார்க்கவில்லை.

    வேதாந்தமும், ஆயிரக்கணக்கானோரின் அவதிகளையும் தெரிந்து கொள்ள வழி செய்த ஜ்யோதிஷமும் அளிக்கும் விருப்பு வெறுப்பற்ற மனமும், சம நோக்கும் (ஸ்தித -ப்ரக்ய) தொற்றிக் கொள்வதால், புகழ்ந்தால் நான் புல்லரித்து விடுவதில்லை. இகழ்ந்தால் இறந்து விடுவதும் இல்லை. ஆனால் இகழப்படுவது “ஜ்யோதிஷமயனம் சக்ஷுஹு” எனபப்டும் வேத புருஷனின் கண் என்பதாலும், கண்ணெனப் படுவதால், வேதத்தை ஜ்யோதிஷதின் மூலமே அறிந்து கொள்ள முடியும் என்பதாலும், எவ்வாறு இதன் மூலம் வேத புருஷனை அறிந்து கொள்ளலாம் என்று சொல்ல வேண்டியது என் கடமை.

    இன்னும் சொல்லப்போனால், கட்டுக் கதை என்றும், myth என்றும் பலரும் நினைக்கும் புராணக் கூற்றுகள், உண்மை என்பதையும், அவை காட்டும் உள் அர்த்தத்தையும் ஜ்யோதிஷம் வாயிலாக மட்டுமே அறிய முடியும். பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக ஒரு விஷயத்தை இங்கே கூறுகிறேன்.

    மேரு மலையைப் பற்றி ஆங்காங்கே புராணங்களில் காணலாம். மந்தர மலை எனப்படும் மேரு மலையை ஆதாரமாகக் கொண்டு பாற் கடலைக் கடைந்த கதை பலருக்கும் தெரியும். இந்த மேரு மலை எங்குள்ளது என்பதற்கு புராணங்களிலேயே வேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஜ்யோதிஷம் மூலம் புரிந்து கொள்ளலாம்.

    விண் வெளியைத் துல்லியமாகக் கணிக்க அந்நாளில் கோள வடிவப் பந்தினைக் கொண்டு அறிவார்கள். ஜோதிட சாத்திரத்தில் விளக்கப்பட்டுள்ள இந்தப் பந்தின் நடுவே, வட, தென் துருவங்களை இணைக்கும் அச்சை ஜோதிடத்தில் மேரு என்பர். மேரு என்பது பூமியின் அச்சாக பொருள் கொள்ளப்பட்டு அது பல் வேறு காலக் கட்டங்களில் வேறு வேறு அளவில் சுழன்றது.

    மேருவை ஆதாரமாகக் கொண்டு பால் கடல் கடையப் பட்டது என்பது புராணக் கதை. கடைதல் என்றாலே. தயிர் கடைவது போல இப்படியும், அப்படியுமாக, இரு புறமும் மாறி மாறி சுழற்றுவது. 23 - 1/2 பாகை என்று தற் சமயம் ஒரு புறம் சாய்ந்த பூமி, முன்பு வேறு புறமும், வேறு பாகையிலும் சுழன்றது என்று இது காட்டுகிறது. இந்தக் கடைதலில், பூமியின் உள் புறத்தில் உள்ளவை மேல் புறமும், மேல் பாகத்தில் உள்ளவை உள்புறமும் உருட்டிப் போடப்படும். நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன் பூமி உருவாகிக் கொண்டிருந்த காலத்தில், இந்தக் கடைதல் அதிகமாக இருந்திருக்கும். அதன் விளைவாக, பூமி பகுதிகள் சிதறி கொண்டிருந்தன. இதை, மலைகள் இறக்கை கொண்டு பறந்தன என்று சொன்னார்கள். வால்மீகி ராமாயணத்தில், மைனாக மலை, தான் அப்படிப் பறந்ததாகச் சொல்கிறது. இந்திரன் வஜ்ராயுதத்தினால், தன இறக்கைகளை வெட்டிப் போடவே, கீழே விழுந்து, ஒரே இடமாக உட்கார்ந்து விட்டதாகச் சொல்கிறது. இந்திரனின் ஆயுதம் , இடி, மின்னல். எனவே, இடி விழுந்து, மலைகள் துண்டாகி ஆங்கங்கே விழுந்து அமர்ந்துவிட்டன என்று தெரிகிறது.

    மேலும் இந்தக் கடைதலில், பூமியின் உள்ளே உருவான விஷ வாயுக்களே முதலில் வெளி ஏறியிருக்கும். அதை உண்டவர் சிவபெருமான். பின்னால் வந்த நவ நிதிகளும், பலவித நவரத்தினங்கள். இன்றும் சிறந்த ரத்தினங்கள் எரிமலைப் படிமங்களிலிருந்து எடுக்கபடுகின்றன. இப்படியே பால் கடலைக் கடைந்த நிகழ்ச்சியை விவரிக்கலாம் - மேரு மலை என்பது எது என்று நமக்குத் தெரிந்தால்! அது பூமியின் அச்சு என்ற அறிவைத் தருவது ஜ்யோதிஷம்.

    அது அச்சு மட்டுமல்ல. பல் வேறு இடங்களில் வேறு பொருளிலும் மேரு வருகிறது. அதில் ஒன்று மேரு என்பது வட துருவம். சிவபெருமானின் ஆதிகால இருப்பிடம் வடதுருவப் பனி மண்டலம். விசுவ கர்மா அங்கே சிவனுக்கு மாளிகை அமைத்தான் என்றும், பின்னாளில் இமயத்தில் அமைத்தான் என்றும் புராணக் கதை உண்டு.
    பூமியின் அச்சின் உச்சி வட துருவம். பனிப் பகுதியாக இருந்த அந்த இடம் ஆதி நாளில் சிவனது இருப்பிடமாக இருந்தது. இது குறித்த பிற கருத்துக்களை, அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.

    மேருவைச் சுற்றி சூரியன் வலம் வரும். அச்சின் சாய்மானம் வேறாக இருக்கும் காலத்தில் சூரியன் வட துருவத்தை சுற்றும் கோணத்தில் இருந்திருக்க வேண்டும். ஒரு வித சாய்மானத்தில், பூமியின் வட பகுதி மட்டுமே சூரியனை ஆறு மாதம் கண்ட காலம் இருந்திருக்க வேண்டும். மீதி ஆறு மாதம் சூரியனைக் காணாது இருந்திருக்க வேண்டும். இவ்வாறு கூறும் கதைகள் புராணங்களில் மட்டுமல்ல, புற நானூறு 174 - லும் சொல்லப் படுகிறது.

    இங்கே சொல்லப்படும் விஸ்வகர்மா என்பவன் தேவ சிற்பி. சூரியக் குடும்பத்தை (கிரகங்கள்) அதனதன் நிலையில் வைத்த அந்த சூரியனே விஸ்வகர்மா என்பது வாஸ்து சாத்திரம் சொல்லும் விஷயம். சூரியனின் ஈர்ப்பு சக்தியால், கிரக மண்டலம் தங்கள் சம நிலை (equilibrium) அடைந்தன என்பது நாம் அறிந்த அறிவியல். இதை விஸ்வகர்மா அமைத்தான் என்று கதையாகக் கூறுவதன் பொருள் என்ன என்று காட்டுவது ஜ்யோதிஷமே.

    மேலும், மேரு மலை மற்றொரு பொருளிலும் வருகிறது. இதன் படி பார்த்தால், மேரு மலை என்பது பூ மத்திய ரேகைப் பகுதியில் இருக்க வேண்டும். ஒரு நட்சத்திரம், மேரு மலைக்குக் கிழக்கே உதிக்கும் பொழுது, அதே நட்சத்திரம் இலங்கைக்கு உச்சியில் இருக்கும் என்று பிரம்ம சித்தாந்தம் என்னும் ஜோதிட சித்தாந்தத்தில் பிரம்மகுப்தர் கூறுகிறார். அப்படி என்றால், மேருவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் 90 பாகைகள். இலங்கைக்கு மேற்கே 90 பாகைகள் தொலைவில் மேரு இருந்தால்தான் இது சாத்தியம். இலங்கைக்கு மேற்கே இந்தப் பகுதியில் தற்போது இருப்பது அட்லாண்டிக் பெரும் கடல்.

    சரி, நீருக்குள் ஏதேனும் இருக்குமா என்றால், இருக்கிறது mid-Atlantic ridge எனப்படும் நீண்ட மலை தொடர். சென்ற நூறு ஆண்டுகளே தெரிய வந்துள்ள இம்மலைத் தொடர் துருவப் பகுதி வரை செல்கிறது. இதன் அமைப்பும் முதலில் சொன்ன அச்சு போல துருவங்களை இணைக்கும் நடுப் பகுதி. இங்கு எந்நேரமும் கடைதல் நடந்து கொண்டு. பூமியின் mantle கொந்தளித்து வெளியேயும் உள்ளேயும் சென்று கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிகின்றன. (wikipedia - வில் படிக்கலாம்).
    இந்த மலைப் பகுதியில்தான் மேரு இன்னும் சிகரம், ஒரு காலத்தில் கடல் பரப்புக்கு மேலே உயர்ந்து இருந்திருக்க வேண்டும்.

    மேரு என்று பிரம்மகுப்தா சொல்லும் இடத்தில் ‘ரோமக தேசம்’ இருந்தது என்று சூரிய சித்தாந்தம் என்னும் இன்னொரு ஜோதிட நூல் சொல்கிறது. இன்றைய ரோம் வேறு, இந்த ரோமக தேசம் வேறு. மயன் என்னும் மிலேச்சன் சூரியனிடமிருந்து பெற்ற இந்த சித்தாந்தம் இன்றைக்கு நாம் பின் பற்றும் ஜோதிட நூல்களுள் ஒன்று. இன்று இந்த தேசம் இல்லை. கடலுள் மூழ்கிவிட்டது. ஆனால் இப்பகுதியில்தான் அட்லாண்டிஸ் என்று ஹோமர் எழுதிய நாடு இருந்தது. 10,000 வருடங்களுக்கு முன் முழுகிய அந்த நாடு ஏன் மிலேச்சம் என்று கூறப்பட்டது என்பதையும், அங்கே வழங்கிய ஜோதிடம் அ-வேத (வேதத்திற்குப் புறம்பானது ) சோதிடமாக இருப்பதையும், அதன் மூலம் வஷிச்டரிடமிருந்து பெறப்பட்டதையும் ஜோதிட நூல்கள் மூலமாகத்தான் அறிய முடியும்.

    அது மட்டுமல்ல, சமீபத்திய மரபணு ஆராய்ச்சியின்படி, வட இந்தியர்களுக்கும், இந்தியாவின் வடமேற்குத் திசையில் உள்ள ஐரோப்பிய மக்களுக்கும் உள்ள ஒற்றுமையையும், இந்தியாவிலிருந்து வெளியே சென்றதாக ஆராய்ச்சியாளர் கருத்துக்கும் ஒட்டியே, ராமரது முன்னோர் காலத்திலேயே வெளியேறிச் சென்றவர்கள் என்பதை வால்மீகி ராமாயணம் மூலமாகவும், ஜோதிட நூல்கள் மூலமாகவும் சுட்டிக்காட்டலாம். விளக்கங்களை இங்கே படிக்கலாம்.
    http://www.scribd.com/doc/22717150/Roots-of-Mlechcha-astrology

    ஜோதிடம் காட்டும் மேருவைக் கொண்டே, ராஹு, கேது என்னும் பூமி, சந்திரனின் சுழற்சிப் பாதை வெட்டும் புள்ளிகளைப் பற்றியும், அவை குறித்த புராணக் கதை கூறும் கருத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், அவை எப்பொழுதெல்லாம் மாறின என்பதன் அடிப்படையில், கடைதலினால் பூமியின் அச்சு எப்பொழுது நிலை மாறியது என்பதையும் சொல்ல முடியும்.

    இன்றைக்கு உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாமல், நம் நாட்டில்தான் பூர்வ வரலாறு கூறும் புத்தகங்கள், சங்கத் தமிழிலும், புராண இதிகாசங்களிலும் உள்ளன. படைப்பின் உயர்ந்த நிலையைக் காட்டும் வேதாந்தமும், பரம் பொருளின் இயல்பும் மூன்று ப்ரமாண நூலகளாக உள்ளன. உபநிடதங்களின் முடிபு பொருள், பிரம்ம சூத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள கீதை உதவுகிறது. இவை தரும் அடிப்படைக் கருத்துக்களை விவரிக்கும் programme -ஆக ஜோதிடமும் பரந்து கிடக்கிறது. இந்தப் பொக்கிஷங்கள் மேலை நாட்டினரிடையே இருந்திருந்தால், அவற்றின் அடிப்படையில் தங்களை நன்கு உயர்த்திக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.
    நம்மவர்கள்தாம் இவற்றை இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

    ஒருவர் முக்தி மார்கத்தில் எந்த நிலையில் இருக்கிறார் - அல்லது கொஞ்சமாவது முக்தி, பக்தி அல்லது, சித்தி நிலைக்கு அருகில் வருகிறாரா என்று நம் ரிஷி பராசரர் சொன்ன விம்சாம்சா என்னும் ஜோதிட வர்க்கத்தை ஆராய்ந்து வலைத் தளத்தில் பதிந்துள்ளவ்ர் ஒரு ஐரோப்பியர். எந்த நாட்டினரானாலும் வேத வழியில்தான் முக்தி என்பதை அறிந்தவர். இதில் அரசியல் கிடையாது. ஆனால் இந்திய அரசியல் வாதியின் செகுலர் கொள்கையை வேத மதத்திலும் புகுத்த முயல்பவர் ஆஸ்திகம் பேசும் நம் மக்கள்தான். இதற்குச் சான்றுகளை இங்கே நிறையவே படிக்கிறேன். ….

    அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அடிப்படை (basics) தெரிந்தால்தான் எந்த நிகழ்வையும் (phenomenon) விளக்க முடியும். மண்ணின் அடிப்படை விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் தான், அந்த மண்ணிலிருந்து உருவாக்கப்படும் பொம்மை முதல், பாண்டம் வரை, கண்ணாடி முதல் சிலிகான் சிப் வரை அனைத்தையும் விளக்க முடியும். அது போல பரப் பிரம்மத்தின் இயல்பை அறிந்தால் தான் அதனிடமிருந்து தோன்றின இந்தப் பிரபஞ்சம் முதல், முக்தி வரை அறிய முடியும். அது இல்லாமல், மேலோட்டமாகக் கண்ணுக்குத் தெரியும் விஷயங்களிலிருந்து, உள்ளிருப்பதை பார்க்கும் நோக்கு சரியல்ல. எந்த ஆச்சர்ய புருஷரும் அத்தகைய methodology - யைக் கொள்ளவில்லை. அடிப்படையைப் பிடியுங்கள். இந்து மதம் என்னும் இந்த ஆதி தர்மம் - சனாதன தர்மம் என்ன சொல்கிறது என்று புரியும்.

  60. Dear Brother Mr. Tamilvanam,

    My e mail id is

    thiruchchikkaaran@gmail.com

    I have a webblog also, you can just click on my name and reach my blog as well.

    Thank you brother, and look forward to receive your mail.

    Best Regards,

    Thiruchchikkaaran

  61. //Sarang
    9 February 2010 at 4:42 pm

    //
    அடிப்படையில் ஒரு நூலே இல்லாமல், மார்கமே இல்லாமல் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் எங்கும் செல்ல முடியாது - வேத நூலில் சொன்ன மார்க்கம் வேண்டுமானால் அதை அறிதலும் அதன் படி நடத்தலும் முக்கியமாகிறது அதற்க்கு வேதத்தையே பிரமாணமாக கொள்ள வேண்டியது உள்ளது
    //

    இல்லையே… அப்படி ஒரு கட்டுப்பாடும் கிடையாது. அப்படி ஒரு நூல் வழி காட்டவேண்டுமே யானாலும் எனக்குப் பிரியமான மொழியில், இதமாகச் சொல்லுபவற்றைத்தான் ஏற்க வேண்டியிருக்கிறது. வேத நூல்(கள்) “மட்டுமே” வீடுபேறுக்கு சாஸ்வதமான வழி என்பதை நான் ஏற்க மறுக்கிறேன்.

    சித்தர்கள் காட்டும் கோட்பாட்டில் என்ன தவறு ? பக்தி மார்கத்தில் தன்னை சேர்த்து அற்புதமான பாடல்களைக் கொண்டு கோவிந்தன் என்பான் ஓர் காளையிடம் அடைக்கலமான கோதையின் பாடல்களில் கிட்டாத இறையின்பம் உண்டா ? பாரதியின் பாடல்களில் கண்ணனையும் கண்ணம்மாவையும் படிக்கும் போது தனை மறந்த நிலையில் கண்களில் நீர்வழிய அந்தக் காட்சிகளைக் காண்கிறோமே.. அது கங்கைக்குப் போனாலோ அல்லது சமஸ்கிருத வேதங்களைப் படித்தாலோ தான் வரும் என்கிறீர்களா ?

    தத்துவ மார்கம் மட்டும் தான் வீடு பேறுக்கு வழி வகுக்குமா ? ஏன் பக்தி மார்கம் வகுக்காதா ? ஊனுருகி உடலுருகி பாடி வீடு பேறு அடைந்த பல மகாத்மாக்களை நம் தமிழகம் கண்டிருக்கிறதே.

    நான் சொல்ல வருவது எல்லாம் இது தான்.

    நால்வகை வேதங்கள் பலவும் சொல்லி இருக்கிறது. நல்வழி காட்டுகிறது. எல்லாம் சரி. ஆனால் “அவை மட்டுமே” பிரமாண நூல்கள், ” அவை மட்டுமே” முக்திக்கு வழிக் காட்டும் என்பதெல்லாம் ஏற்க இயலாதவை.

  62. திரு சாரங் அவர்களது பதில்
    //
    மேலும், பக்தி/சரணாகதி என்பது ஒரு *மார்க்கம்* மட்டுமே. அது ஒரு *நிலை* அல்ல. ஆத்ம-ஸ்வரூப-தர்சனம் எனப்படும் தன்னிலை உணர்தலே முக்தி என்று வேதாந்தம் கூறுகிறது.
    //

    நீங்கள் நான் எழுதியதை முழுவதும் மறுபடியும் படித்து பாருங்கள் - இதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்படி செய்தால் முக்தி நிச்சயம் என்ற எண்ணம் சரி அல்ல அது பகவாநிடதிளிருந்து அவனது உரிமையை பறிப்பது போலே என்பது தான் எனது அபிப்பிராயம் - [எனதாவி யார் நான் யார் தந்த நீ கொண்டாக்கினையே] - மேலும் ஆத்மா ஸ்வரூபத்தை உணர்தலே முக்தி என்றால் ஆத்மா ஸ்வரூபத்தை உணர்ந்தவர்கள் உணர்ந்த மாத்திரமே இவ்வுலகை விட்டு போய் விடுவர் (ஆன்ம போய் விடும்) - அப்படி நடப்பதில்லையே - சிவா பதமோ, பரம பதமோ அல்லது பர பிரம்ம பதமோ அடைவது தான் முக்தி என்றால் அதற்க்கு பர பிரம்மத்தின் ஒப்புதல் தேவை படுகிறது - கண்ணன் ஆன்ம நிலையை உணர்ந்தவர்களை தத்வதர்சி, முமுக்ஷு, ச்திதப்ரஞன் (மோக்ஷம் அடைய நினைப்பவர்கள், தகுதி உடையவர்கள்) என்று தான் சொல்கிறானே ஒழிய மோக்ஷம் அடைந்தவர்கள் என்று கூறவில்லையே

    இதை கொண்டே இஷ்வர இச்சை மோக்ஷத்திற்கு அவசியம் என்று சொன்னேன் - இஷ்வரன் பர பிரம்ம வடிவில் இருப்பினும் அந்த பிரம்மத்தின் இச்சை அவசியமாகிறது

    ******
    திரு சாரங் அவர்களுக்கு,

    மிக அருமையாகச் சொன்னீர்கள்.
    என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    முதலில் எழுதின மறு மொழியில், ‘புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்’ என்று என்று இரண்டு விஷயங்களை விரிவு படுத்தாமல் விட்டதில் ஒன்றைப் பிடித்து விட்டீர்கள்:) .

    அவன்றி ஓரணுவும் அசையாது - என்பதை ஒப்புகொள்ளும் பட்சத்தில், அவன் மனம் வைக்காமல் முக்தி கிடையாது என்ற லாஜிக் வருகிறது. .
    எளிதாகச் சொல்ல வேண்டுமானால், ஜெயலலிதா, சோனியாவைப் பார்க்க என்ன முயற்சித்தாலும், சோனியா மனம் வைத்த பிறகுதான், பார்க்க முடிந்தது. அது போல எனலாம்:)

    பரம புருஷனும் மனம் வைத்தால்தான் அவனை நாம் அடைய முடியும்.
    “This Aathman is attained by one, whom he chooses” is the sruti.
    The clause ‘whom He chooses’ conveys the idea of the seeker becoming an object of choice of Bhagawan. (வேதார்த்த சங்ரஹா).

  63. அன்புள்ள கந்தர்வன், சாரங், உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.

    வேதாந்தம் என்றால் அத்வைதம் மட்டுமே அல்ல என்பதை அறிவேன் (ஆயினும் நடைமுறை வழக்கில் அப்படி ஆகி விட்டது - அல்லவா? .. மற்ற தரப்புக்கள் ஞானம்/தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இறையியலை அதிகம் வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம்). வழிபாட்டு முறைகளை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றெல்லாம் கூறப் படவேயில்லை!

    // இப்படி இருக்கையால் - சரம ஸ்லோகமே முக்கியமான கீதா வாக்கியம், முன் உள்ளவை எல்லாம் வெறும் அவதாரிகை என்பது அவர்களின் நிலை பாடு //

    இதுவும் ஒரு குறுக்கல்வாதம் என்பது என் தாழ்மையான எண்ணம். மிகையான எளிமைப் படுத்தலும் கூட. இன்றைக்கு கீதையை திறந்த மனதுடன் படிக்கும் எவரும் இத்தகைய ஒற்றைப் பார்வையை விமர்சிக்கவே செய்வார்கள்.

    குறிப்பிட்ட சித்தாந்தத்தின் கருத்தாக்கத்தை நீங்கள் எடுத்தோதுவதில் எனக்கு பிரசினை எதுவும் இல்லை. சமயத்தில், சமயவாதம் என்றாலும் கூட அது தனக்கே உரிய அழகுடனும், கம்பீரத்துடனும் வெளிப்படுகிறது.

    ஆனால், இது ஒன்று தான் இந்து தர்மத்தின் ஆதாரபூர்வமான கொள்கை, வேறெதுவும் இல்லை என்பது போன்ற நிலைப்பாடுகள் சரியல்ல (உதாரணமாக, பரம்பொருள் என்பதை நாராயணன் என்ற சொல்லால் மட்டுமே குறிக்க வேண்டும், வேதத்தில் “நம்பிக்கை” இல்லாவிட்டால் முக்தி கிடைக்காது, சரணாகதி மார்க்கம் மூலம் மட்டுமே மோட்சம் சாத்தியம்). அவற்றையே நான் விமர்சிக்கிறேன்.

    குறிப்பாக, கடந்த நூறாண்டுகளுக்கும் மேலாக இந்து மறுமலர்ச்சியின் நாயகர்கள் இதை எடுத்தோதி வந்திருக்கிறார்கள். உதாரணமாக. கீதை. மகாகவி பாரதி அதைத் தமிழில் ஆக்கியிருக்கிறார்; வங்கத்தின் புரட்சிவீரர்கள் அதில் தேசிய உத்வேகம் பெற்றிருக்கிறார்கள்; மகாத்மா காந்தி சத்தியாக்கிரகத்தின், சமூக சேவையின் பொறியைக் கண்டிருக்கிறார்; ஸ்ரீஅரவிந்தர் ஒருங்கிணைந்த யோகத்தின் சாஸ்திரமாக அதை விளக்கியிருக்கிறார். திலகர் அரசியல் செயலூக்கத்தின் உத்வேகத்தை அதில் கண்டிருக்கிறார். இவ்வளவு இருக்க, கீதையின் செய்தி வைஷ்ணவ இறையியல் மட்டுமே, சரணாகதி மார்க்கம் மட்டுமே என்று கச்சை கட்டி வாதம் செய்யும் போக்கு கண்டிப்பாக விமர்சிக்கப் பட்டே ஆகும் அல்லவா? நம் எதிரே எவ்வளவு பிரத்யட்ச உண்மைகள் உள்ளன!

    உபநிஷதங்களும் சரி, கீதையும் சரி, வேதாந்த தரிசனமும் சரி - ஒற்றைக் குரல்கள் அல்ல. அவை பன்முகப்பட்ட சிந்தனை வீச்சுகளின், ஆன்மிக பரிமாணங்களின் வெளிப்பாடுகள். அவற்றை அப்படிப் பட்ட அடிப்படைப் புரிதலுடன் கற்பது தான் சரியான வழி என்று எனக்குத் தோன்றுகிறது.

  64. பெரியாரிஸ்ட்டு அவ‌ர்க‌ளே,

    உட‌ல் இற‌ந்த‌ பின் உயிரும் அதோடு இற‌ந்து விடுகிர‌து என்று யாராவ‌து க‌ருதினால், அது ஒரு அனுமான‌மே, உண்மை என்று சொல்ல‌ முடியாது.

    உட‌ல் இற‌க்கும் போது , உயிர் அழிந்து விடுகிர‌தா என்ப‌தை நாம் இற‌ந்த‌த‌ற்க்குப் பிற‌குதான் அறிந்து கொள்ள‌ முடியும், அல்ல‌து இற‌ப்புக்கு முன்பே ஆழ்ந்த‌ ம‌ன‌க் குவிப்பின் மூல‌ம் இத‌ற்கான‌ விடையை அறிய‌ முடியுமா என்ப‌தையும் சிந்திக்க‌ வேண்டும். உயிரும் அழிந்து விடுகிறது என்ப‌தை இப்பொதே அறுதியிட்டு உறுதியாக‌க் கூற‌ முடியாது.
    இது ஆராய‌ப் ப‌ட‌ வேண்டிய‌ ஒன்று.

    கொச்சி க‌ட‌ற்க‌ரையில் நின்று, “எங்க‌ய்யா இருக்கு ஆப்பிரிக்க‌ க‌ண்டம், ந‌ல்லா பாரு… ஆப்பிரிக்க‌ க‌ண்ட‌ம் எங்க‌ இருக்கு, காட்டு ?” என்று கேட்ப‌து போல‌ இருக்கு. ஒரு போட்டில் ஏறி ஒரு ம‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌ம் செய்தாலும் ஆப்பிரிக்கா க‌ண்ட‌த்தை காண‌ முடியாது. நீண்ட‌ முய‌ற்சி தேவை.

    ஆனால் முய‌ற்சியே எடுக்காம‌ல் வெறும‌னே உண்டு இர‌வு தூங்கி காலையில் எழுந்து அடப் போய்யா, உட‌ல் சாகும் போது உயிரும் அழிந்து விடுகிற‌து என்று முடிவுக்கு வ‌ர‌ முடியுமா?

    இந்த‌ விட‌ய‌த்தில் சித்த‌ர்க‌ள்,புத்த‌ர், விவேகான‌ந்த‌ர் ஆகியோர் ம‌ன‌க் குவிப்பு செய்து ஆராய்ச்சி செய்து உள்ள‌ன‌ர். அதை அப்ப‌டியே ஒத்துக் கொள்ள‌ வேண்டும் என்று நான் கூற‌வில்லை. நாத்தீக‌ர்க‌ளும் இந்த‌ விடய‌த்தில் ஆராய்ச்சி இல்லாம‌ல் ஒரு க‌ருத்தை எடுத்து முடிவாக‌ அறிவிப்ப‌து நுனிப் புல் மேயும் செய‌லே.

    உட‌ல் இற‌ந்த‌ பின் உயிர் க‌ண்டிப்பாக‌ தொட‌ர்ந்து வாழ்கிற‌து என்று நான் உறுதியாக‌ சொல்ல‌வில்லை. நாம் ஆராய்ச்சி செய்வோம். உயிர் ஆராய்ச்சி ஆதிகால‌ முனிவ‌னுட‌னொ, சித்தனுட‌னோ புத்த‌னுட‌னோ, இயேசு கிறிஸ்துவிட‌னோ, முஹ‌ம‌து ந‌பியுட‌னோ ஆதி ச‌ங்க‌ர‌ருட‌னோ, விவேகான‌ந்த‌ருட‌னோ முற்றுப் பெற‌ வேண்டிய‌தில்லை.

    நீங்க‌ளும், நானும், இந்த‌ உல‌கில் யார் வேண்டுமானாலும் தொட‌ர்ந்து ஆராய்ச்சி செய்ய‌லாம். ஆராய்ச்சி செய்து விட்டு க‌ருத்தை சொல்லுங்க‌ள்.

    அவ‌ச‌ரப் ப‌ட்டு அறிக்கை விட்டால், லூசுத் த‌ன‌ம் என‌, சிந்திப்ப‌வ‌ர்க‌ள் க‌ருத‌ வாய்ப்பு உண்டு.

  65. ஜெயஸ்ரீ அவர்களே

    //என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

    இது உங்களது பெருந்தன்மையை காட்டினாலும், இதற்க்கு எனக்கு நிச்சயமாக அதிகாரம் கிடையாது - அனைத்திலும் மிக சிறியவன் நான்.

  66. //
    ஆயினும் நடைமுறை வழக்கில் அப்படி ஆகி விட்டது - அல்லவா? .. மற்ற தரப்புக்கள் ஞானம்/தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இறையியலை அதிகம் வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம்
    //

    சிறிதளவும் உண்மை அல்ல. இன்றளவும் ஸ்ரீவைஷ்ணவர்களும் மத்வர்களும் அவரவர் ஆசாரிய சூக்திகளை (நூல்களை) படித்துத் தான் வருகிறார்கள். பிள்ளை லோகசாரியார் பண்ணியுள்ள “தத்துவ த்ரயம்” நூலையும், ஆளவந்தாரின் “சித்தித் த்ரயத்தையும்” வாசித்து பாருங்கள். ஏன், ஆழ்வார்களின் பாடல்களிலேயே தெளிவாக பல உபநிஷத்து வாக்கியங்கள் தமிழாக்கப் பட்டுள்ளன. சரி, அத்வைதிகளில் எத்தனை பேர் இன்று ஆதி சங்கர பிரும்ம சூத்திர பாஷ்யத்தையும், கீதா பாஷ்யத்தையும், சுரேசுவரரின் நைஷ்கர்மியசித்தியையும் வாசிக்கிறார்கள்? ஆகையால், “தத்துவ ரீதியி விட்டு விலகி விட்டன” என்று வைனவத்தைச் சொல்வது சரி அன்று.

    நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஞான மார்க்கமே பக்தி மார்கத்திற்குப் பல படி உயர்ந்தது என்ற அபிப்பிராயம் எழுகிறது. ஆதி சங்கரர் பண்ணியுள்ளதாகப் படிக்கப்படும் “பஜ கோவிந்தத்தில்”, “மூட மதியே, சமஸ்கிருத இலக்கணத்தை வாசிப்பதால் ஒரு பயனும் இல்லை. கோவிந்தனை கும்பிடு! அப்பொழுது யமன் கூட உன் முக்திக்கு தடங்கல் ஆக மாட்டான்” என்று உள்ளதே? அப்படியானால், இதை ஆசிரயிப்பவர்கள், “ஞான மார்க்கம் முற்றித் தான் பக்தி மார்க்கம்” என்று கொள்ள வேண்டுமே!

  67. திரு சாரங்,

    மூத்தவன் இருப்பினும், அறிவுடயோனான இளையவன் பின்னே அரசும் செல்லும். நீங்கள் அள்ளிக் கொடுத்த பிரம்ம ஞானத்திற்கு என் வணக்கங்கள். இதில் வயது, பிற தகுதிகள் பார்ப்பது கிடையாது.

  68. ஜடாயு அவர்களே
    //
    மற்ற தரப்புக்கள் ஞானம்/தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இறையியலை அதிகம் வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம்//
    இது புதிதாக உள்ளது - மயர்வற மதின்னலம் அருளினான் யவன் அவன் என்று ஆழ்வார் நீங்கள் சொன்னதை முதல் பாசுரத்திலே போட்டு உடைத்துவிட்டாரே - ராஜாஜியின் பஜ கோவிந்தம் முன்னுரையில் “those who think gyana is different from bhakti are ignorant” என்று கூறி விட்டார் - இதிலிருந்து இரண்டு விஷயங்கள் திண்ணம் ஒன்று ஆதி சங்கரரும் அவருடைய இறுதி காலங்களில் பக்தியை முன் வைத்தார் என்பது, இரண்டு மற்ற தரிசனங்கள் மதின்னலமான ஞானாம் கூடிய பக்தியையே முன் வைத்தனர் என்று - ராமானுஜர் வேதாந்தமும் செய்தார் [ஸ்ரீ பாஷ்யம், வேதண்ட சங்கரம் ...] பக்தியும் செய்தார் [கத்ய த்ரயம்]. அவரது கீதா பாஷ்யத்தில் ஞானம் கலந்த பக்தியே வலியுறுத்தபடுகிறது
    //
    // இப்படி இருக்கையால் - சரம ஸ்லோகமே முக்கியமான கீதா வாக்கியம், முன் உள்ளவை எல்லாம் வெறும் அவதாரிகை என்பது அவர்களின் நிலை பாடு //
    இதுவும் ஒரு குறுக்கல்வாதம் என்பது என் தாழ்மையான எண்ணம். மிகையான எளிமைப் படுத்தலும் கூட. இன்றைக்கு கீதையை திறந்த மனதுடன் படிக்கும் எவரும் இத்தகைய ஒற்றைப் பார்வையை விமர்சிக்கவே செய்வார்கள்.
    //

    நமக்கு ஒவ்வாவதையும் புலப்படாதையும் குறுக்கல்வாதம் எனக்கொள்வது சரியல்ல என்பது எனது அபிப்ராயம்
    இது தத்துவ ஞானிகள் ஆராய்ந்து கூறியவை - சும்மா சொன்னது இல்லை
    சரம ஸ்லோக நிர்ணயமானது பிரசித்தம் - வேண்டுமானால் சரம ஸ்லோகத்தையும் கீதையில் உள்ள மற்ற ஸ்லோகங்களையும் நீங்களே நன்கு ஆராயுங்கள் - எல்லா இடத்திலும் சொன்னது சரம ஸ்லோகத்தில் அப்படியே பிரதிபலிக்கும் - சரம ச்லோக்மானது ஒரு “summary - முடிவுரை” போல. கீதையில் இரண்டாம் அத்யாயத்தில் உள்ளதை தான் நெடுக விரித்து கூறுகிறார் அதற்காக இரண்டாம் அத்யாயம் மட்டுமே போதுமே என்றால் எப்படி. இரண்டாம் அத்தியாயம் என்பது ஒரு “abstract - முகவுரை” மாதிரி. நாம் உதாரணத்திற்கு ஒன்று பாப்போம்

    சரம ஸ்லோகம் - சர்வ தர்மான்
    இதையே தான் இரண்டாம் அத்தியாயத்தில் 2-54 ஆவது ஸ்லோகம் தொடங்கி முடிவு வரை வலியுறுத்தப்படுகிறது
    2-57 - ய : சர்வத்ர அநமிஸ்நேஹ் : தத் தத் ப்ராப்ய ஷுபாஷுபம் ந அபிநந்ததி நத்வேஷ்டி தஸ்ய ப்ராஜ்ஞய ப்ரதிஷ்டிதா - யாரிடம் எதனிலும் ஈடுபாடு இல்லாமல் [தர்மமத்தில் ஈடுபாடு இல்லையோ] பற்றுதல் இல்லையோ ….

    சரம ஸ்லோகம் மாம் ஏகம் சரணம்
    — தானி சர்வாணி சம்யம்ய யுக்த ஆசித மத்பர:
    எல்லாவற்றையும் அடக்கி (எல்லாவற்றையும் விட்டு)மனதில் அசைவுகள் இல்லாமல் என்னையே பரமாத்வாக கருதி ….

    இப்படி நீங்கள் சரம ஸ்லோகத்தில் பார்ப்பது கீதை எங்கிலும் உள்ளது - கீதை எங்கிலும் உள்ளது சரம ஸ்லோகத்தில் உள்ளது [இதை இப்படியும் அர்த்தம் கொள்வதில் தவறில்லை சமயவாதும் இல்லை]

    பூர்வாச்சார்யர்கள் சும்மா அபிமானத்துடன் இதை கூறவில்லை - உங்களுக்கு இந்த ஆச்சர்யர்களை பற்றி தெரியுமோ தெரியாதோ எனக்கு தெரியாது - பிரமாணம் இல்லாததயும் அவர்களது பூர்வாச்சார்யர்கள் சொல்லாததையும் ஒருக்காலும் இவர்கள் சொல்ல மாட்டார்கள் [ராமானுஜ கீதா பாஷ்யம் அப்படியே ஆளவந்தார் செய்த கீதார்த்த சங்கரத்தை தழுவி இருக்கிறது]

    — முகுந்த மாலை என்பது குலசேகரர் செய்தது என்று உள்ளது - இதை விசேஷமாக குலேசேகர ஆழ்வாரே தான் பண்ணினார், வைஷ்ணவர்களுக்கு கிரு கண்களான உபய வேடாந்தைளும் திளைத்த ஆழ்வாரே நமக்கு முன்னோடி என்றெல்லாம் கொள்ளாமல் தீர ஆராய்ந்து இரு குலசெகரகளும் வேறு வேறு என்றே அறுதி இட்டுள்ளனர்

    - பேதை குழவி பிடித்து சுவைத்துன்னும் பாதக்கமலங்கள் காணீரே - இதற்க்கு இப்படியும் அர்த்தம் கொள்ளலாம் - கண்ணானது பாதங்கள் இனிமையானவை அதானால் தான் குழவிகள் உண்கின்றன என்று, இதை யாரும் ஏற்க மாட்டார்கள் ஏன் என்றால் பூர்வாச்சார்யர்கள் இப்படி அர்த்தம் கொள்ளவில்லை - இதற்க்கு சரியான அர்த்தமே கொண்டுள்ளனர்

    - சிற்றம் சிறு காலேவந்துன்னை சேவித்து - இதை கண்ணனின் சின்னன் சிறிய காலே நாங்கள் உன்னை செவிக்கிறோம் என்றும் அர்த்தம் கூறலாம் - ஆனால் பூர்வாசார்யர்கள் கருத்து இதற்க்கு ஒவ்வாததால் இப்படி ஒருவரும் கொள்ளுவதில்லை

    கூரத்தாழ்வான் ராமனுஜரின் மடத்து வாசலில் ஒரு மாத காலம் வெறும் நீர் மட்டும் உண்டு கற்றுக்கொண்டது சரம ஸ்லோக விவரணம் - இதை லேசாக கொள்பவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்கள் - இவ்வளவு முக்கியம் வாய்ந்த ஒன்றை குறுக்கல்வாதம் என்று கொள்வது தாழ்மையான கருத்தே என்பதில் ஐயம் இல்லை

    //
    குறிப்பிட்ட சித்தாந்தத்தின் கருத்தாக்கத்தை நீங்கள் எடுத்தோதுவதில் எனக்கு பிரசினை எதுவும் இல்லை. சமயத்தில், சமயவாதம் என்றாலும் கூட அது தனக்கே உரிய அழகுடனும், கம்பீரத்துடனும் வெளிப்படுகிறது.

    ஆனால், இது ஒன்று தான் இந்து தர்மத்தின் ஆதாரபூர்வமான கொள்கை, வேறெதுவும் இல்லை என்பது போன்ற நிலைப்பாடுகள் சரியல்ல (உதாரணமாக, பரம்பொருள் என்பதை நாராயணன் என்ற சொல்லால் மட்டுமே குறிக்க வேண்டும், வேதத்தில் “நம்பிக்கை” இல்லாவிட்டால் முக்தி கிடைக்காது, சரணாகதி மார்க்கம் மூலம் மட்டுமே மோட்சம் சாத்தியம்). அவற்றையே நான் விமர்சிக்கிறேன்.
    //

    பிரபத்தி என்ற ஒரு உயர்ந்த வழியானது உங்களுக்கு சமயவாதமாக படுகிறது - சரணாகதி மார்க்கம் மட்டுமே முக்தி அளிக்கும் என்பது வைஷ்ணவர்கள் தங்களுக்கு வேறு அதிகாரம் இல்லை (அடியேன் சிறிய ஞானத்தன் என்று ஆழ்வாரே கூறிய பின்) என்பதால் மட்டுமே. போவோர் வருவோரிடம் எல்லாம் இதை திணித்ததாக எனக்கு தெரிய வில்லை - எனக்கு இத்தை தவிர வேறு கதி இல்லை என்று இருந்தால் அது மற்றவரை ஏன் பாதிக்க வேண்டும். சரணாகதி மார்க்கமும் சும்மா பஞ்ச சம்ஸ்காரம் செய்துவிட்டு சும்மா இருப்பது இல்லை - அதுவும் சிரமமானதே. பலர் நாம்சன்கீதனம் தான் கலி யுகத்தில் முக்தி என்கிறார்கள் - இதையும் குறுக்கல்வாதம் என்பீர்களா

    //
    இவ்வளவு இருக்க, கீதையின் செய்தி வைஷ்ணவ இறையியல் மட்டுமே, சரணாகதி மார்க்கம் மட்டுமே என்று கச்சை கட்டி வாதம் செய்யும் போக்கு கண்டிப்பாக விமர்சிக்கப் பட்டே ஆகும் அல்லவா? நம் எதிரே எவ்வளவு பிரத்யட்ச உண்மைகள் உள்ளன!

    உபநிஷதங்களும் சரி, கீதையும் சரி, வேதாந்த தரிசனமும் சரி - ஒற்றைக் குரல்கள் அல்ல. அவை பன்முகப்பட்ட சிந்தனை வீச்சுகளின், ஆன்மிக பரிமாணங்களின் வெளிப்பாடுகள். அவற்றை அப்படிப் பட்ட அடிப்படைப் புரிதலுடன் கற்பது தான் சரியான வழி என்று எனக்குத் தோன்றுகிறது.
    //

    எங்கேயாவது இப்படி கூறினோமா நான் தான் தெளிவாக எனக்கு தெரிந்த இரண்டு பதில்கள் உண்டு ஒன்று பொதுவானது(முதலாவது - இவ்வளவு சொன்னேன், இது எதுவுமே முடியலன்னா இத பண்ணு. எனக்கு துளசி தீர்த்மாவது கொடு என்று கடைசியாக சொல்லவில்லையா அது போல் தான்) ஒன்று வைஷ்ணவர்கள் கொள்வது என்று சொன்னேனே (வைஷ்ணவர்கள் மற்றவரை ஏற்க வேண்டும் என்ற வற்புறுத்துவது அல்லது அறுதியானது என்று சொல்லவில்லையே)

    எவ்வளவோ கீதா பாஷ்யம் உள்ளது - சங்கருருக்கு முன்னும் இருந்தது - அவரே எக்கச்சக்கமாக உள்ளது பல அர்த்தங்கள் உள்ளது - மக்கள் குழம்பி உள்ளனர் அதற்காகவே நான் இந்த பாஷ்யம் செய்கிறேன் என்கிறார் - இன்றைக்கு பல்லாயிர பாஷ்யங்கள் உள்ளன - எல்லாமே நன்றாகவே உள்ளன [திலகர் கர்ம யோகமே முக்தி அதுவே கீதையின் சாரம் என்கிறார் - இதுவும் சிலருக்கு ஏற்புடையதே]

    நீங்கள் ஏனோ வைஷ்ணவர்கள் மட்டும் இப்படித்தான் என்று முடிவு கட்டிவிட்டு அதை சார்ந்தே பேசுவது போல் உள்ளது - நீங்கள் பார்த்து பழகிய சிலர் காழ்புணர்ச்சி கொண்டிருந்தால் எல்லாரையும் அந்த கட்டத்தினுள் கட்டுவது சரியல்ல என்று படுகிறது

  69. ஜெயஸ்ரீ அவர்களே

    //
    மூத்தவன் இருப்பினும், அறிவுடயோனான இளையவன் பின்னே அரசும் செல்லும். நீங்கள் அள்ளிக் கொடுத்த பிரம்ம ஞானத்திற்கு என் வணக்கங்கள். இதில் வயது, பிற தகுதிகள் பார்ப்பது கிடையாது.
    //

    அடியேன் சித்திரையில் சித்திரை - அந்த வாசனையோ என்னமோ, என்றும் சிறியவனாக இருப்பதே எனக்கு பொருந்தும்

  70. திருச்சிகாரரே

    இந்த உவமானம் மிக அருமை

    //
    கொச்சி க‌ட‌ற்க‌ரையில் நின்று, “எங்க‌ய்யா இருக்கு ஆப்பிரிக்க‌ க‌ண்டம், ந‌ல்லா பாரு… ஆப்பிரிக்க‌ க‌ண்ட‌ம் எங்க‌ இருக்கு, காட்டு ?” என்று கேட்ப‌து போல‌ இருக்கு. ஒரு போட்டில் ஏறி ஒரு ம‌ணி நேர‌ம் ப‌ய‌ண‌ம் செய்தாலும் ஆப்பிரிக்கா க‌ண்ட‌த்தை காண‌ முடியாது. நீண்ட‌ முய‌ற்சி தேவை.

    ஆனால் முய‌ற்சியே எடுக்காம‌ல் வெறும‌னே உண்டு இர‌வு தூங்கி காலையில் எழுந்து அடப் போய்யா, உட‌ல் சாகும் போது உயிரும் அழிந்து விடுகிற‌து என்று முடிவுக்கு வ‌ர‌ முடியுமா
    //

  71. ஞானம், பக்தி இவை எல்லாம் பற்றி நண்பர்கள் விவாதிக்கின்றனர். ஞான மார்க்கம் என்று ஒரு வழி இருப்பதாக சொல்லப் படுகிறது. உண்மையை தேடுதல், உண்மையை பற்றிய ஆராய்ச்சி இவை ஞான மார்க்கம் என கருதப் படலாம் என நினைக்கிறேன்.

    ஆனால் ஞானம் என்பது உயிரானது விடுதலை அடைந்த நிலையே. ஞானம் என்பது ஒரு நிலை. ஞானம் is a state of soul ( உயிர்). துன்பங்களில் இருந்து விடுதலை பெற்ற நிலையே ஞானம் எனக் கூறப் படுகிறது.

    ஒரு மனிதன் தன்னை மனிதனாக, உடல் உள்ளவனாக , அந்த உடல் சார்ந்தவனாக இருக்கும் வரை துன்பங்கள் தன்னை வந்து சேர்வதை, அதாவது அவன் துன்பங்களை அனுபவிப்பதை தடுக்க இயலாது, அவன் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், அரசனாக இருந்தாலும், பேரரசானாக இருந்தாலும், இதே நிலைதான். இந்த அடிமை நிலை தனக்கு இல்லை என்பதை அவன் எப்போது உணர்கிறானோ அப்போது அவன் உயிர், அவன் அறிவு ஞானம் பெற்ற நிலையை அடைகிறது என சொல்லப் படுகிறது.

    இந்த ஞான நிலையை அடைய கர்ம யோகம், தியானம், கர்ம பலத் தியாகம், பக்தி, ….. என பல வழிகள் சொல்லப் பட்டுள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒரு வழி பொருத்தமாக இருக்கலாம். பக்தி என்பது பெரும்பாலான மக்களால் எளிதில் பின்பற்றக் கூடிய வழியாக கருதப் படுகிறது.

    ஆனால் எந்த வழியில் வந்தாலும் கடைசியில் ஞானத்தை அடைந்து விடுதலை பெறுவதாக கூறப் படுகிறது.

    இதுவே இந்து மதம் பற்றி நாம் கற்ற வகையில் என்னுடைய புரிதல். இது தவறானது என யாராவது கருதினால் விளக்கம் அளிக்கலாம்.

  72. கந்தர்வன், சாரங்,

    நம்மாழ்வாரின் முக்தி பற்றிய அந்தப் பாடல் தன்னளவில் முழுமையானது. அதில் “நம்பிக்கை” பற்றி எதுவும் இல்லவும் இல்லை. வேதாந்தத்தின் மையமான தத்துவம் கவித்துவ உச்சம் கொள்ளும் தருணத்தில் விளைந்த ஒரு கவிதை அது, அதைச் சுட்டுவதற்காகவே குறிப்பிட்டேன்.. உடனே சுழன்றடித்து மேலும் மேலும் திருவாய்மொழி மேற்கோள்களை அள்ளி வீசுகிறீர்கள்! இத்தகைய விவாதங்களில் எனக்கு ஆர்வமில்லை என்றும் முன்பே கூறிவிட்டேன்.

    இரண்டு விளக்கங்கள் மட்டும் கொடுத்து விட்டு விடைபெறுகிறேன்… எனக்கு முக்கியமான வேலைகள் நிறைய உள்ளன..

    // ஆயினும் நடைமுறை வழக்கில் அப்படி ஆகி விட்டது - அல்லவா? .. மற்ற தரப்புக்கள் ஞானம்/தத்துவத்திலிருந்து விலகி பக்தி மார்க்க இறையியலை அதிகம் வலியுறுத்தியது காரணமாக இருக்கலாம் //

    சரியாகக் கவனியுங்கள் - “நடைமுறை வழக்கு” என்று தான் சொன்னேனே அன்றி எனது கருத்து என்று சொல்லவே இல்லை. உடனே refutation களை ஆரம்பித்து விட்டீர்களே! இன்றைக்கு வேதாந்தம் (Vedanta),வேதாந்தி (Vedanti) என்ற சொல்லாட்சியை அதிகம் புழங்குபவர்கள் அத்வைதிகள் மட்டுமே (அத்வைதி என்றால் சம்பிரதாய சங்கரமடங்கள் மட்டுமே என்று நினைத்துக் கொள்ளவேண்டாம் - அது தவறு. ஸ்ரீராமகிருஷ்ணரின், ஸ்ரீநாராயண குருவின், சட்டம்பி சுவாமிகளின், ரமண மகரிஷிகளின், சின்மயானந்தரின் மற்றும் பல யோகிகளின் பாரம்பரியத்தினர் எல்லாரும் கூட அத்வைதிகளே, தத்துவரீதியாக, அவர்களும் ஆதிசங்கரரைப் போன்றே மற்ற துவைதவாத வேதாந்தப் பிரிவுகளை நிராகரிக்கவில்லை, மாறாக படிநிலைகளாகக் கண்டார்கள்; சமயரீதியாக சமரசத்தை உபதேசித்தார்கள்).

    பக்தியை மையமாகக் கொண்ட வேதாந்தப் பிரிவினர் ஸ்ரீவைஷ்ணவம், மத்வ சித்தாந்தம் ஆகிய தனிப் பெயர்களால் தங்கள் தரப்பைத் *தாங்களே* அழைத்துக் கொண்டனர். கருத்தளவிலும் கூட தத்துவத்தையும், ஞானத் தேடலையும் பின்னால் நிறுத்தி பக்தி சார்ந்த, சமயம் சார்ந்த வழிபாட்டு முறைகளையே முன்வைத்தனர். எனவே காலப் போக்கில் வேதாந்தம் என்றால் அத்வைதம் மட்டுமே என்பதான ஒரு வெகுஜன புரிதல் ஏற்பட்டது, அது இன்றும் தொடர்கிறது.

    இதை சுவாமி விவேகானந்தரும் சுட்டிக் காட்டியுள்ளார். வேதாந்தம் என்பது அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம், த்வைதாத்வைதம் ஆகிய அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கியதே என்றும் ஆணித்தரமாக அவர் வலியுறுத்தியுள்ளார். அதுவே என் கருத்தும் ஆகும்.

    // நீங்கள் ஏனோ வைஷ்ணவர்கள் மட்டும் இப்படித்தான் என்று முடிவு கட்டிவிட்டு அதை சார்ந்தே பேசுவது போல் உள்ளது - நீங்கள் பார்த்து பழகிய சிலர் காழ்புணர்ச்சி கொண்டிருந்தால் எல்லாரையும் அந்த கட்டத்தினுள் கட்டுவது சரியல்ல என்று படுகிறது //

    இல்லை. தனிப்பட்ட சில அனுபவங்களை வைத்து ஒரு நிலைப்பாட்டைக் கொள்ளும் அளவுக்கு நான் முதிர்ச்சியற்றவன் அல்ல. சொல்லப் போனால், நான் கண்ட ஸ்ரீவைஷ்ணவ நண்பர்களில் பெரும்பாலர் முற்றாகவே சமய சமரசம் கொண்டவர்கள். 25 வருடங்களாக எல்லா சாதிக்காரர்களையும் சபரிமலைக்கு அழைத்துச் செல்லும் ஐயங்கார் குருசுவாமி நான் மிகவும் மதிக்கும் பெரியவர்களில் ஒருவர், இப்படிப் பலரைச் சொல்லலாம். எங்கள் வீட்டிலும் சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், விவேகானந்தர் என்று எல்லா மகானகளின் திருவுருவத்தையும் இணைத்து வைத்துப் போற்றுகிறோம்.

    இங்கு கூறியதெல்லாம் கருத்து ரீதியாக நீங்கள் இங்கு எழுதியவற்றின் மீதான விமர்சனம் மட்டுமே.

  73. ஜடாயு அவர்களே

    //
    நம்மாழ்வாரின் முக்தி பற்றிய அந்தப் பாடல் தன்னளவில் முழுமையானது. அதில் “நம்பிக்கை” பற்றி எதுவும் இல்லவும் இல்லை. வேதாந்தத்தின் மையமான தத்துவம் கவித்துவ உச்சம் கொள்ளும் தருணத்தில் விளைந்த ஒரு கவிதை அது, அதைச் சுட்டுவதற்காகவே குறிப்பிட்டேன்.. உடனே சுழன்றடித்து மேலும் மேலும் திருவாய்மொழி மேற்கோள்களை அள்ளி வீசுகிறீர்கள்! இத்தகைய விவாதங்களில் எனக்கு ஆர்வமில்லை என்றும் முன்பே கூறிவிட்டேன்.
    //

    திருவைமொழியை இங்கு ஒப்பித்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லை - நீங்கள் பாலா கூறியதை நம்மாழ்வாரே கூறியுள்ளாரே பாருங்கள் என்பது போல் தான் உங்கள் பதிலில் எழுதி இருந்தீர்கள் - தன்னளவில் முழுமையானது என்பது மற்ற பாசுரங்களுக்கு விரோதம் இல்லாமல் அர்த்தம் கொள்ள வேண்டும் [நான் பாசுரத்தை பற்றி எதுவும் கூறவில்லை, நீங்கள் ஒரு தனி பொருள் கொண்டு அந்த பொருள் தான் பாலா சொன்னது என்று செர்துக்குரியத்தை தான் சுட்டிக்காட்டினேன்] - சும்மா ஆழ்வார் இஷ்டம் போல எல்லாத்தையும் சொன்னார் என்பது ஏற்புடையதல்ல - நீங்கள் குறிப்பிட்ட பாசுரத்தை மற்ற பாசுரங்களோடு சேர்த்து எவ்வண்ணம் பொருள் கொள்ள வேண்டும் என்பதற்காகவே எழுத முயற்சித்தேன்

    //
    சரியாகக் கவனியுங்கள் - “நடைமுறை வழக்கு” என்று தான் சொன்னேனே அன்றி எனது கருத்து என்று சொல்லவே இல்லை. உடனே refutation களை ஆரம்பித்து விட்டீர்களே
    //

    இப்படி யார் நினைத்து கொண்டிருந்தாலும் அது உண்மையில் தவறான கருத்தே என்பதை சொல்லவே எழுதியது - “refutation” இல்லை. வேதாந்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு பக்திக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றால் வேதாந்தத்தில் பக்தியே இல்லை என்றல்லவா ஆகிவிடும் - வேதாந்தம் ஞானம் மட்டும் அல்ல பக்தியும் சேர்ந்ததே - அதையே ராஜாஜி சுட்டிக்காட்டி உள்ளார்

    //
    இங்கு கூறியதெல்லாம் கருத்து ரீதியாக நீங்கள் இங்கு எழுதியவற்றின் மீதான விமர்சனம் மட்டுமே.
    //

    விமர்சிக்கும் முன் அது சரியானதா என்று எப்படி ஊர்ஜிதம் செய்வீர்கள் - பல முறை இது சமயவாத போக்கு இல்லை அது உங்களின் புரிதல் மட்டுமே என்று சொன்ன பின்பும் நீங்கள் அதையே மறுபடியும் அழுத்தி கூறியதால் உங்களுக்கு வைணவர்கள் மீது அப்படி ஒரு எண்ணம் உண்டோ என்று என்ன வேண்டியதாயிற்று - தவறான எண்ணம் எனில் மன்னியுங்கள் - சமரச கொள்கை உடையவர்கள் தான் சரி என்ற எண்ணமே சமரசமான எண்ணம் இல்லை [தர்க்க ரீதியில் அடிபட்டு போகிறது]

    நாம் விவாதத்தை வளர்க்க வேண்டாம் - உங்களின் கருத்துக்களின் மீது எனது அபிப்பிராயம் என்னது என்பதை மட்டுமே இங்கு எழுதியது

  74. ஜடாயு அவர்களே,

    ஒன்றே ஒன்றை மட்டும் கவனிக்குமாறு தாழ்வுடன் கேட்டுக்கொள்கிறேன்:

    //
    மற்ற துவைதவாத வேதாந்தப் பிரிவுகளை நிராகரிக்கவில்லை, மாறாக படிநிலைகளாகக் கண்டார்கள்; சமயரீதியாக சமரசத்தை உபதேசித்தார்கள்
    //

    நீங்கள் கூறும் சமரசமாவது “எல்லா சம்பிரதாயங்களும் சமம்” என்ற கருத்து தானே? “சமரசத்தை உபதேசித்தார்கள்” என்று கூறிவிட்டு, துவைதவாதத்தை “படிநிலைகள்” என்று சொன்னீர்கள். இது முன்னுக்குப் பின் முரணானது.

    அது போகட்டும். நீங்களோ, “த்வைதம் முற்றி, விஷிஷ்டாத்வைதத்திற்கு வந்து, அதற்கும் பின்பு மேலான அத்வைத நிலையை அடைகிறான் மனிதன்” என்று கூறுகிறீர்கள். அப்படி சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் அபிப்பிராயத்தைச் சொன்னதற்காக நாங்கள் (கந்தர்வன், சாரங் அவர்கள், போன்றோர்) உங்களை “சமயவாதி” என்று அழைக்கவில்லை.

    ஆனால் நாங்கள் மட்டும் “சௌர-காணாபத்திய-சைவ-சாக்த மதங்கள் படிநிளைகளே, வைணவம் கடைசி படி” என்று சொன்னதற்கு எங்களை “சமயவாதி” என்று அழைப்பது நியாயமா என்று ஆலோசிக்குமாறு உங்களையும் விவாதத்தில் கலந்துக் கொண்ட மற்றவர்களையும் கேட்டுக்கொண்டு தாழ்வுடன் இவ்விவாதத்தை முடித்துக் கொள்கிறேன்.

    நன்றி,

    கந்தர்வன்.

    PS: ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமும் அத்வைத தர்சனம் தான். [விசிஷ்ட + அத்வைதம் என்பதே, விசிஷ்ட+த்வைதம் என்பது அல்ல.]

  75. ஜீவ்ஸ் அவர்களே

    //
    இறைவனைப் பற்றிய அறிவை/ தெளிவை எந்த ஒரு நூலும் ஏற்படுத்த முடியாது. 100% தூரத்தில் ஒரு அடி எடுத்து வைக்கத் தூண்டும் தூண்டுகோல் என்ற அளவில் இருக்கலாமே தவிர அவையே பிரமாண நூல்கள் அவற்றைக் கொண்டே வீடுபேறு என்பது - என்னளவில் பேத்தலான விஷயம்.
    //

    இறைவனை அறிய என்று கூறவில்லையே - வேதாந்தத்தை அறியவே என்று கூறியுள்ளேன் - ஆதி சங்கரரும் அந்த வந்த இமே என்ற கீதையின் வ்யாக்யானத்தில் இதை தெளிவாகவே சொல்லி உள்ளார் - வேதாந்தம் ஆத்மா ஸ்வரூபத்தை அறிய ஒரு வழி காட்டி, ஆசார்யாரியம் சென்று வேதம் கற்றால் ஆத்மா சுத்தி உண்டாகி, வேதம் சொல்வது புரிந்து, அதனால் ஞானம் பிறந்து, பக்தி வளர்ந்து, முக்தி பெற்று இறை உள்ளில் ஆன்மா ஒடுங்குகிறது

    நாம் இங்கே ஆராய்வது வேந்தாந்தை பற்றி பேச வேதாந்தமே பிரமாணம் என்பதுவே. முக்திக்கு பிராமாணம் [முதல், இறுதி அதிகாரி ] பகவானே :-) எந்த நூலும் இல்லை

    //
    கிருஷ்ணன், சிவன், பிரமன், விஷ்ணு இந்தப் பெயர்கள் தெரியாத ஒருவன் வீடுபேறு அடைய முடியாதா ? முடியும். தன்னையறிந்து தன்னுள் தானறிந்து தன்னை விடுத்தல் நடக்கும் போது. சைக்கிள் பழக முதலில் துணை வேண்டும். அப்போது நம் கவணம் முழுதும் ஹாண்டில் பார், ரோடு என்று இருக்காது. சொல்லிக் கொடுப்பவர் பின்னாடி பிடித்திருக்கிறாரா என்ற கவனத்தில் தான் இருப்போம். அது தான் நீங்கள் சொல்லும் பிரமாணங்கள். அந்தப் பிரமாணங்கள் மட்டுமே போதுமானவையா ? நீங்கள் சைக்கிள் நன்றாகப் பழகியப் பின் உங்கள் கவனம் எங்கு சிதறி இருப்பினும், வண்டி சரியான பாதையில் ஓடும். அப்போது பிரமாணங்களைக் கொண்டுதான் வழித்தடத்தில் செல்லுவேன் என்பது அபத்தம்.
    //

    பரமாத்மா விருப்பமில்லையேல் யாருக்கும் எதுவும் கிடையாது (வீடு பேரு உட்பட)

    முதலில் சைக்கிள் ஓட்ட உதவுபவர் [வேதான்தாமோ, பக்தி நூலோ, யோகமோ, நாம சந்கீர்தனமோ சொல்லித்தரும்] ஆசார்யர் - கண்ணும் கருத்துமாக சைக்கிள் ஓட்டுபவர் முமுக்ஷு (மோக்ஷம் விரும்புபவர்) - ஆனால் ஒன்றை விட்டுவிட்டீர்கள் சைக்கிள் ஓட ரோடு வேண்டும், காந்த சக்தி வேண்டும், எதிரில் வருபவர் முட்டாமல் இருக்க வேண்டும், கடைசியாக நீங்கள் எவ்வளவு தூரம் சைக்கிள் ஓட்டினாலும் வீட்டுக்கதவு திறந்திருந்தால் தான் வீட்டிற்குள் செல்ல முடியும் இல்லை என்றால் குறுக்கு மறுக்கும் ஓட்டிக்கொண்டே தான் இருக்க வேண்டும் - அப்படி இல்லாமல் இருக்க அவனது கிருபை வேண்டும்

    //
    எத்தனையோ மகா புருஷர்கள் உதித்த திருநாடு. மேலே நீங்கள் குறிப்பிட்டவர்கள் வணங்கத் தக்கவர்கள் அவர்கள் சொன்னது எல்லாம் அற்புதமானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர்கள் சொன்னது மட்டுமே சரி என்று சொல்ல வருவதைத் தான் சரியில்லை என்று சொல்ல வருகிறேன். எதையும் சோதித்து அறிந்துக் கொள் என்கிறதல்லவா நீங்கள் சொல்ல வரும் பிரமாணமும் ?
    //

    இவர்கள் மட்டும் அல்ல, பல்லாயிரக்கனக்கான ஆஹா புருஷர்கள் வேதாந்தம் பற்றி பேச இம்மொன்றையும் பிரமாணமாக கொண்டனர் (நோக கடவுளை பற்றி பேச அல்ல]. ராமானுஜர் எங்காவது கடய த்ரயத்தில் ரங்கநாத உன்னை இந்த கேன உபநிஷட்டில் பிரமாணம் இப்படி கூறுகிறதே, ப்ரசன உபநிஷத்தில் இப்படி கூறுகிறதே அதையே பிரமாணமாக கொண்டு உன்னை துதிக்கிறேன், அதை பிரமாணமாக கொள்வதாலேயே எனக்கு முக்தி தா என்று சொல்லவில்லை, சங்கரரும் பஜ கோவிந்தத்தில் இப்படி சொல்லவில்லை

    விஷயத்தை சரியாக புரிந்து கொள்ளுங்கள் - மூன்று பிரமாணங்கள் வேந்தாந்தை அறிய இறுதி பிரமாணங்கள். பகவனை அறிய அவனே இறுதியானவன்

  76. ஜீவ்ஸ் அவர்களே

    மேலே சொன்னதன் தொடர்ச்சியாக

    இந்த பிரமாணங்கள் தான் முக்தி என்றில்லாமல், பராமாத்மவே முக்தி தர வல்லவன் என்பது தெளிவு - அவன் அதை யாருக்கும் விட்டுக்கொடுக்க வில்லை - அவனுக்கு சொந்தமான ஆன்மாவை [தந்த நீ கொண்டாக்கினையே ] அவனே உருக்கி பருக நினைக்கிறான், ஒரு நாள் நினைத்ததை சாதிதஊம் விடுவான் [வைகுந்தம் புகுவது மன்னவர்க்கு இயல்பே] - அவனது இந்த செயளிருந்து தப்ப ஒரே மற்று வழி ஆச்சர்யனை சரண் அடைந்து அவர் மூலமாக முக்தி பெறுவதே. ஆசிரியர் கூறியுள்ளதை போல, நாம் என்ன வேண்டும் [நல்ல விஷயங்கள்] என்று நினைக்கிறோமோ அதுவே ஆகிறோம் [சிவா சிந்தையில் இருப்போர் சிவா பதமும், நாராயணனை சரண் புகுந்தால் பரம பதமும் ....] ஆச்சார்யா சின்காயில் இருப்போர் ஆச்சர்யரின் நிலையை தானே அடைவார்கள். நாயன்மார்கள் சிவ பதத்தை அடைந்தனர், நாய்ன்மார்கலையே சரண் புகுந்தவரும் நாயன்மார்கள் அடைந்த அதே சிவ பதத்தை அடைவர்

  77. இந்த “மறந்தும் புறம் தொழா” என்னும் கோட்பாடு இந்திய சமுதாயத்துக்குள் எப்ப‌டி வ‌ந்த‌து ? இதன் மூலம் என்ன என என்று, நாம் இந்த‌ கோட்பாட்டின் அடி முடி தேடும் செய‌லில் இற‌ங்கினோம்.

    நான் பாம‌ர‌னேய‌ன்றி ப‌ண்டித‌ன‌ல்லன். எனினும் என‌க்கு எட்டிய‌ அளவுக்கு முண்ட‌க, க‌ட, தைத்திரிய‌, பிர‌ஹ‌தார‌ண்ய‌ உப‌ நிட‌த‌ங்க‌ளிலும், ப‌க‌வ‌த் கீதையிலும் தேடிப் பார்த்தேன், தென் ப‌ட‌வில்லை. அறிஞ‌ர்க‌ள் யாராவ‌து இது ப‌ற்றி தெரிந்து இருந்தால் விள‌க்க‌ம் த‌ர‌லாம். ஆனால் நான் தொட‌ர்ந்து இந்த‌ கோட்பாட்டின் மூல‌ம் எங்கே என்று தேடினேன், தேடினேன்…. வாழ‌க்கையின் ஓர‌த்துக்கே ஓட‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லாத‌ ப‌டிக்கு, என்னுடைய‌ நூல‌க‌த்திலேயே இத‌ற்க்கு ஒரு சான்று கிடைத்த‌து.

    //உன்னை உன் அடிமை வீடாகிய‌ எகிப்து நாட்டில் இருந்து மீட்ட‌வ‌னாகியே நானே உன் தேவ‌ன் (க‌ட‌வுள்).

    என்னைத் த‌விர‌ உன‌க்கு வேறு தேவ‌ர்க‌ள் ((க‌ட‌வுள்) வேண்டாம்.

    சொர்க்க‌த்திலும் பூமிக்கு மேலும், ச‌முத்திர‌த்துக்கு அடியிலும் உள்ள‌ யாதொரு சொரூப‌த்தையும் நீ தாழ‌ப் ப‌ணிய‌வோ, வ‌ணங்க‌வோ கூடாது.//

    யூத‌ர்க‌ளின் க‌டவுள் ஜேஹோவா என‌ப்ப‌டும் க‌ர்த்த‌ர், அவ‌ருடைய‌ தூத‌ராகிய‌ மோச‌ஸின் மூல‌ம் யூத‌ர்க‌ளுக்கு இட்ட‌ முத‌ல் க‌ட்ட‌ளை, இந்த மறந்தும் புற‌ம் தொழாமை க‌ட்ட‌ளை. “ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌”மாகிய‌ பைபிளில் இது தெளிவாக‌ உள்ள‌து.

    இந்த‌ கோட்பாடுதான் உல‌கிலே ம‌த‌ வெறியை, ம‌த துவேஷத்தை தூண்டி விட்டு, தொட‌ர்ச்சியான‌ போர்க‌ளை ந‌ட‌த்தி, இரண்டு உல‌க‌ப் போர்க‌ளில் இறந்த‌வ‌ர்க‌ளை விட‌ அதிக‌மான‌ பேரைக் கொன்று, இர‌த்த‌ ஆறை ஓட‌ விட்ட‌து.

    இந்துக்க‌ள் கட‌வுளாக‌ வ‌ழி ப‌ட்ட‌ யாருமே - நாராய‌ண‌னோ, சிவ‌னோ, வினாய‌க‌ரோ…. இப்ப‌டி “என்னைத் த‌விர‌ வேறு யாரையும் தொழ‌க் கூடாது” எனக் க‌ட்ட‌ளைக‌ள் எதுவும் போடாத‌ நிலையில்,

    இந்த‌ பால‌வ‌ன‌ ஆபிர‌காமிய‌க் க‌ட்டளையை இந்தியாவில் அதிக‌ செல்வாக்கு உள்ள‌தாக்கி, ச‌கிப்புத் த‌ன்மைக்கு ஆப்பு வைக்கும் காட்டு மிராண்டி நிலைக்கு ம‌க்களை அழைத்து செல்லும் அபாய‌ம் உள்ள‌ இந்த‌ கோட்பாட்டுக்கு, இங்கே இந்தியாவில் ப‌ட்டுக் குஞ்ச‌ல‌ம் க‌ட்ட‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌?

    அதுவும் எப்ப‌டி - முக்தி அடைவ‌த‌ற்க்காக‌ இதை ப‌ய‌ன் ப‌டுத்துவ‌தாக‌ -முலாம் பூசிப் பார்க்கிறார்க‌ள்!

  78. ஒரு வ‌குப்பில் முப்ப‌து பேர் ப‌டிக்கிறார்க‌ள். அந்த‌ வ‌குப்பிற்க்கு ஒரு கிளாஸ் டீச்ச‌ர் இருக்கிறார். அவ‌ர் ம‌ட்டும் அல்லாம‌ல், அந்த‌ வ‌குப்பிற்க்கு இன்னும் சில‌ டீச்ச‌ர்க‌ள்‍- கண‌க்கு டீச்ச‌ர், வ‌ரலாறு டீச்ச‌ர்- இவ‌ர்க‌ளும் அந்த‌ வ‌குப்பிற்க்கு வ‌ந்து பாட‌ம் எடுக்கிறார்க‌ள்.

    அந்த‌ வ‌குப்பில் ஒரு மாண‌வன், கிளாஸ் டீச்சர் அல்லாம‌ல் வேறு எந்த‌ டீச்ச‌ர் பாட‌ம் எடுக்க‌ வ‌குப்பில் நுழைந்தாலும், எழுந்து நிற்ப‌தோ, அவ‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்க‌ம் செலுத்துவ‌தோ கிடையாது. கேட்டால், என‌க்கு கிளாஸ் டீச்ச‌ரை ம‌ட்டுமே பிடிக்கும், அவ‌ங்க தானே கிளாஸ் டீச்ச‌ர், ம‌ற்ற‌ டீச்ச‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்க‌ம் செலுத்த‌ மாட்டேன் என்கிறான்.

    இதை க‌ண‌க்கு டீச்ச‌ர், கிளாஸ் டீச்ச‌ரிட‌ம் தெரிவிக்கும் போது, அந்த‌ நிலையில் கிளாஸ் டீச்ச‌ர் அந்த‌ மாண‌வ‌னைக் கூப்பிட்டு பாராட்டுவாரா? அவ‌னைக் கூப்பிட்டு ஏன் இப்ப‌டி அக‌ராதி செய்கிராய்? உன்னால் என‌க்கு ம‌ற்ற‌ டீச்ச‌ர்க‌ளுட‌ன் பொல்லாப்பு என்று அவ‌னைக் க‌டிந்து கொள்வார்.

    இந்த‌ மாண‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் தான் இந்த‌ ம‌ற‌ந்தும் புற‌ம் தொழா மாந்த‌ர்க‌ள்.

    இவ‌ர்க‌ளால் இவ‌ர்க‌ளின் த‌லைவ‌ர்க‌ளுக்கு தொல்லைதான். விஷ்ணுவும், சிவ‌னும் இவ‌ர்க‌ளின் கையில் சிக்கி ப‌டாத‌ பாடு ப‌ட‌ வேண்டியுள்ள‌து. எல்லோரையும் ம‌ன‌ப் பூர்வமாக‌ வ‌ண‌ங்கி , த‌ன்னிட‌ம் விசேஷ‌ ப‌க்தி செலுத்தும் “அத்வேஷ்டா” ப‌க்த‌னே விஷ்ணுவிற்க்கு மிக‌வும் பிரிய‌மான‌ ப‌க்த‌னாக இருப்பான் என‌ நான் தைரிய‌மாக‌ சொல்வேன்.

    உங்க‌ளை ம‌ட்டுமே வ‌ண‌ங்குவேன் என்று ச‌ண்டித் த‌ன‌ம் செய்யும் “ப‌க்த‌னு”க்கு சிவ‌னும் ச‌ரி, விஷ்ணுவும் ச‌ரி முக்தி வ‌ழ‌ங்க‌ மாட்டார்க‌ள் என‌வும் நான் வெளிப்ப‌டையாக‌ சொல்வேன்.

  79. //
    இந்த‌ கோட்பாடுதான் உல‌கிலே ம‌த‌ வெறியை, ம‌த துவேஷத்தை தூண்டி விட்டு, தொட‌ர்ச்சியான‌ போர்க‌ளை ந‌ட‌த்தி, இரண்டு உல‌க‌ப் போர்க‌ளில் இறந்த‌வ‌ர்க‌ளை விட‌ அதிக‌மான‌ பேரைக் கொன்று, இர‌த்த‌ ஆறை ஓட‌ விட்ட‌து.
    //

    பைபிள் மூலம் கூறும் கோட்பாடுகள் தான் ஜாஸ்தியாக உள்ளது - கொஞ்சம் நமது விஷயத்தையும் புரட்டிப் பார்த்தால் நல்லது

    பல ஆயிரம் ஆயிரம் வருடங்களாக[ நாம் இங்கு கூறும் ஆபிரகாமிய காலதிருக்கு முன்பிருந்தே] மறந்து புறம் தொழாமை இங்கு உள்ளது ஆனால் அதானால் ஒருவர் கூட ரத்தம் சிந்தியடாக தெரியவில்லை

    வித்தியாசம் என்னவென்றால் - நான் கும்பிடுவதே கடவுள் நீ கும்பிடுவது அல்ல அதனால ஒன்னு நான் கும்பிடுறத கும்பிடு இல்லாங்காட்டி நான் கொன்னுருவேன், நான் கும்பிடுறத கும்பிட்டா தான் நீ மனுஷன் இல்லாட்டி நீ காட்டு மிராண்டி என்பது அங்கே (இங்கேயும் இது போல் ஒரு புது வடிவில் தலை தூக்குகிறது)

    ஆனால் இங்கோ - இறைவா உன்னை என்னால் அறிவதே இயலாது - உன்னை ஒரு உருவில்லாவது உன்னுடன் இணக்கம் கொள்ள முயல்பிறேன் - பரமாத்மா ஸ்வரூபமாக இந்த உருவையே கொள்கிறேன் - உன்னையே தியானிக்கிறேன் - த்யானமானது ஒன்றில் ஆழ்வதே ஆகும் - நான் த்யானம் செய்யும் பொது round robin முறையில் புள்ளையார், முருகன், சிவன், பார்வதி, சூரியன், இயேசு, அல்லா, விஷ்ணு, அய்யனார், எனது அம்மா, பாட்டனார் இப்படி வந்து போனால் த்யானம் எப்படி நிலைக்கும் - சரி எனக்கு ஒரு ஆபத்து நேர்கிறது நான் புள்ளயாரே, முருகா, ஏசுவே, விஷ்ணுவே, சிவனே என்று தான் கூப்பிடனுமா - அப்படி கூப்பிட்டா அவர் வருவார் என்று ஒவ்வொருவரும் சும்மா இருந்துவிட்டால் - ஆபத்துக்கே இப்படின்னா, இந்த பிறவி என்ற பேராபத்தில் இருந்து மீள உன் ஒருவனை மட்டும் தியானித்தால் போதாத எல்லோரையும் கட்டாயம் சேத்துக்க் கொள்ளணுமா - இது என்னது புது விவகாரமா இருக்கு நான் பாட்டுக்கு நீயே எனக்கு கதி, வேறொன்றிலும் என் மனம் போகவில்லை என்று இருந்தால் புது வம்பு வந்து சேர்கிறதே -cbse யில் படிப்பவர் cbse முறையிலேயே படித்து 12th பாஸ் பண்ணக் கூடாத - state board, metic இப்படி எல்லாவற்றிலும் படித்தே தீர வேண்டுமா, சிலர் இப்படி கொஞ்ச காலம் மாறி மாறி படிக்கிறார்கள் அது சரியல்ல என்று நான் கூறவில்லை அது அவர் விருப்பம் ஒவ்வொரு திட்டத்திலும் உள்ள வேறுபாடுகளையும் அவர்கள் தெரிந்து கொண்டு ஒவ்வன்றின் பண்பையும் அறிந்து கொண்டும் அவர்களும் 12th பாஸ் செய்கிறார்கள் நானும் தானே பாஸ் செய்கிறேன் - நான் என்ன state board காரனை கிள்ளினேனா, அல்லது metric காரனை தள்ளினேனா

    பரமாத்மா மதத்தின் பால் சிலர் கொள்ளும் வெரியயும் உன்மெல் ச்லருக்கு இருக்கும் மீலாத மேலான அசயாத இடைவிடாத பற்றையும் வேருபடுத்தி காட்டும் வல்லமை தாராயோ

  80. //
    ஒரு வ‌குப்பில் முப்ப‌து பேர் ப‌டிக்கிறார்க‌ள். அந்த‌ வ‌குப்பிற்க்கு ஒரு கிளாஸ் டீச்ச‌ர் இருக்கிறார். அவ‌ர் ம‌ட்டும் அல்லாம‌ல், அந்த‌ வ‌குப்பிற்க்கு இன்னும் சில‌ டீச்ச‌ர்க‌ள்‍- கண‌க்கு டீச்ச‌ர், வ‌ரலாறு டீச்ச‌ர்- இவ‌ர்க‌ளும் அந்த‌ வ‌குப்பிற்க்கு வ‌ந்து பாட‌ம் எடுக்கிறார்க‌ள்.

    அந்த‌ வ‌குப்பில் ஒரு மாண‌வன், கிளாஸ் டீச்சர் அல்லாம‌ல் வேறு எந்த‌ டீச்ச‌ர் பாட‌ம் எடுக்க‌ வ‌குப்பில் நுழைந்தாலும், எழுந்து நிற்ப‌தோ, அவ‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்க‌ம் செலுத்துவ‌தோ கிடையாது. கேட்டால், என‌க்கு கிளாஸ் டீச்ச‌ரை ம‌ட்டுமே பிடிக்கும், அவ‌ங்க தானே கிளாஸ் டீச்ச‌ர், ம‌ற்ற‌ டீச்ச‌ர்க‌ளுக்கு வ‌ண‌க்க‌ம் செலுத்த‌ மாட்டேன் என்கிறான்.
    //

    பரமாத்மா நான் யார் வன்து படம் சொன்னாலும் பாடத்தின் மேது மட்டுமெ கவனம் கொல்ல நினைக்கிறேண், சிலர் கனக்கு வாத்தியார் என்ன செஞார் , ஆங்கில வாதியார் செஞார் என்ட்ரெல்லம் பார்க்க சொல்கிரார்கலே

    மேலும் அனைத்து வித்தைகலயும் தானே அறின்து அனைவர்க்கும் அன்பால் புகட்டும் இந்த மெட்ரிக் முரைக்கு முன் நமது பன்பாட்டில் இருந்த குருகுல வாசத்தயே என் மனம் விரும்புகிரது - ஒரு முழுமை பேற்ற ஆசான் எனது ஆருயிருக்கு காவல் இருப்பார் என்னை கடை தெர்துவது தான் அவரது பொருப்பு எண்று இருப்பார், அவரை விட்டால் எனக்கு வேரு கதி ஏது - இது கன்னு, இது பினக்கு என வித்யாசம் தெவை தான ஒவ்வொன்னுக்கும் ஒரு specialist tai நாடிதான் ஆகனுமா

  81. கணக்கு வாத்தியாருக்கோ, வரலாறு வாத்தியாருக்கோ கால் பிடிக்க வேண்டும் என்று நாம் சொல்லவில்லை.

    ஆசிரியர் என்றால் அவர் வரும் போது எழுந்து நிற்க வேண்டும் என்பது டீச்சருக்கு செலுத்த வேண்டிய மரியாதை. பள்ளி மாணவன் வகுப்பிற்கு செல்லும் முன் அசெம்பிளிக்கு செல்ல வேண்டும் என்பது பள்ளியின் நியமம்.

    நான் நேராக வகுப்புக்கு தான் செல்வேன், என் வேலை படிப்பது மட்டும் தான். கொடி வணக்கமும் செலுத்த முடியாது, எல்லா டீச்சருக்கும் வணக்கமும் சொல்ல முடியாது என்று அகராதி செய்யும் மாணவனை என்ன சொல்ல முடியும்? அவனால் டீச்சர்களுக்கு தான் தொல்லை. குறிப்பாக கிளாஸ் டீச்சருக்கு அவனால் அதிக தொல்லை.

  82. ஆபிரகாமிய மதத்தவர் எல்லோரும் (கிறிஸ்தவ, இசுலாமிய, யூத பிரிவினர்) மறந்தும் புறம் தொழாமை என்கிற அடிப்படை வாத, சமரச மறுப்பு, பிடிவாதக் கோட்பாட்டில் மிக உறுதியாக இருந்தவர்கள்.

    அதனால் அவர்கள் வாழ்ந்து வந்த மத்தியக் கிழக்கு & ஐரோப்பியப் பகுதியில் கிறிஸ்தவ, இசுலாமிய, யூத பிரிவினர் மூவரும் வாளை உருவி இரத்த ஆறு ஓட விட்டனர்.

    ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்களில் பெரும்பான்மையானவர்கள் அத்வேஷ்டா, சமரச, நல்லிணக்க, எல்லாக் கடவுள்களையும் மரியாதை செய்யும் நாகரீகப் போக்கை பின்பற்றியவர்கள்.

    எனவே ஒரு சிறு பிரிவினர் சானதன தர்மத்திலும் தங்களை அறியாமலேயே ஆபிரகாமிய கோட்பாட்டை புகுத்தி பின்பற்றியபோது - பெரும்பான்மையான மக்கள் அவர்களையும் சகித்துக் கொண்டு, இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்தல், என்ற வகையிலே அவர் நாணும் வகையிலே எல்லாக் கடவுள்களையும் மனப் பூர்வமாக வணங்கி நன்னயம் செய்து விட்டனர்.

    இதனால் தான் இந்து மதம் அமைதிப் பூங்காவாகவே இருந்து விட்டது.

    அப்படி அமைதிப் பூங்காவாகவே இருக்க வேண்டும்,

    இன்னும் “மறந்தும் புறம் தொழா” ஆபிரகாமிய, அடிப்படை வாத, சமரச மறுப்பு, பிடிவாதக் கருத்தை பரப்பி அமைதியை நல்லிணக்கம் கெடுக்கப் பட வேண்டாம் என்பதற்கு தான், இத்தனையும் எழுதுகிறோம்.

  83. சாரங் அவர்களே,

    //
    நான் கும்பிடுவதே கடவுள் நீ கும்பிடுவது அல்ல அதனால ஒன்னு நான் கும்பிடுறத கும்பிடு இல்லாங்காட்டி நான் கொன்னுருவேன், நான் கும்பிடுறத கும்பிட்டா தான் நீ மனுஷன் இல்லாட்டி நீ காட்டு மிராண்டி என்பது அங்கே (இங்கேயும் இது போல் ஒரு புது வடிவில் தலை தூக்குகிறது)
    //

    “இங்கேயும் இது போல் ஒரு புது வடிவில் தலை தூக்குகிறது” - இப்படி நீங்கள் சொன்னதன் அர்த்தம் எத்தனை பேருக்கு விளங்கியதோ?!! அனைவரும் மனம் திறந்து இதை எப்பொழுது புரிந்து கொள்வார்களோ?!!

  84. திருச்சிக் காரன் அவர்களே,

    அருமையான உவமை கூறியதற்கு நன்றி. இதை வைத்தே விளக்குகிறோம்:

    எந்த டீச்சர்-க்கும் வணக்கம் செலுத்துவதில் எமக்கு ஆட்சேபனம் இல்லை. கண்டிப்பாக விஷ் பண்ணுவோம். ஆனால், “எல்லா டீச்சரும் பிரின்சிபால் தான்” என்பதைத் தான் நாங்கள் ஏற்கவில்லை. அதற்காக, பக்கத்து பெஞ்ச் பையன் “கணக்கு டீச்சர் தான் பிரின்சிபால்” என்று சொன்னதற்கு அவனை கேலி பண்ண மாட்டோம், சாத்து சாத்த மாட்டோம்.

  85. //
    நான் நேராக வகுப்புக்கு தான் செல்வேன், என் வேலை படிப்பது மட்டும் தான். கொடி வணக்கமும் செலுத்த முடியாது, எல்லா டீச்சருக்கும் வணக்கமும் சொல்ல முடியாது என்று அகராதி செய்யும் மாணவனை என்ன சொல்ல முடியும்?
    //

    இதற்கு நேரான situation, “சந்த்யாவந்தன-விஷ்வேதேவா-அக்னிஹோத்ர-தர்பண-ச்ராத்த கர்மாக்களில் மற்ற தெய்வங்களின் வணக்கம் உள்ளது, ரிஷி-பித்ரு வணக்கம் உள்ளது, ஆகையால் வைணவனாகிய நான் அவற்றைச் செய்ய மாட்டேன்” என்று சொல்வதற்குச் சமம். இதைப் பற்றி பகவான் என்ன கூறுகிறான் என்றால், “சுருதி, ச்மிருதிகளில் சொல்லப்பட்ட அன்றாடம் செய்ய வேண்டிய கர்மாக்களை எவன் ஒருவன் விட்டு விடுகிறானோ, அவனை ஒருபொழுதும் நான் என் பக்தனாக ஏற்றுக் கொள்வதில்லை” (விஷ்ணு தர்மோத்தர புராணம்). மறந்தும் புறந்தொழாதவர்கள் இந்த கர்மாக்களை விடாமல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் சொல்லும் உவமையால் வரும் குற்றச்சாட்டு செல்லாது.

    நீங்கள் சொன்ன உவமையே எடுத்துக் கொள்வோம். மறந்தும் புறந்தொழாமையை விட்டு விலகச் சொல்வது, ஸ்கூல் படிக்கப் போகும் பையனிடம், “ஒருவர் மட்டும் பிரின்சிபால் அல்ல, ஸ்கூல் ஆயாவும் பிரின்சிபால், நாட்டுக் கொடியும் பிரின்சிபால், டங்கு டங்கு-ன்னு சத்தம் போடும் ஸ்கூல் மணியும் பிரின்சிபால், பீ.டீ. டீசெரும் பிரின்சிபால், பக்கத்துப் பையனும் பிரின்சிபால்” என்று சொல்வதற்குச் சமம்.

  86. கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு

    த‌ங்க‌ள் ஆராய்ச்சிப்ப‌ணி சீரிய‌து. ந‌ன்றி. அடிமுடி காணாத வரலாற்றைப் புனையப்பட்டது என்று காட்டுவதற்காக நமது அன்பர்கள் சிலர் சில வேத மேற்கோள்களையும் திரு கிருஷ்ணசாமி அய்யங்காரின் புத்தக மேற்கோள்களையும் காட்டி வாதிட்ட‌போது உங்க‌ள் க‌ட்டுரை ஆராய்ச்சிபூர்வ‌மாக‌ வ‌ந்து சிறிது மாற்றைத்த‌ந்தது. தங்களும் ச‌ம‌ர‌ச பாவ‌த்தில் சிவ‌ன், விஷ்ணு, பிர‌ம்மா மூவ‌ரையும் சிலாகித்து எழுதினீர்க‌ள். அதோடுகூட‌ வேத‌ப்பிர‌மாண‌ம் என்றும் எழுதிய‌போது அது எந்த‌க் க‌ட்டுரையாள‌ருக்கும் இருக்க‌வேண்டிய‌ உரிமை/ சலுகை (discretion) என்றே இருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் வேத‌ப்பிர‌மாணம் என்று விஷ‌ய‌த்தை அத‌ற்கே திசைதிருப்பி ந‌ம‌து அன்ப‌ர்க‌ள் சார‌ங் அவ‌ர்க‌ளும் க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளும் அதேசுழ‌லில் த‌ங்க‌ளையும் இழுத்துவிட்டார்க‌ளே!

    ஜோதிட‌ சாஸ்திர‌த்தில் உள்ள யோக‌ங்க‌ளைக் கூறியிருக்கிறீர்க‌ள்.

    அவ‌ற்றிலே,

    ///லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது சீகண்ட யோகம் ஆகும்.///

    ///களத்ரகாரகனான சுக்கிரனும், பாகியாதிபதியான 9 -ஆம் வீட்டு அதிபதியும், புத்திர காரனான புதனும் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது ஸ்ரீ நாத யோகம் ஆகும்.///

    ///குரு, சனி, லக்னாதிபதி ஆகியோர் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது விருஞ்சி யோகம் ஆகும்.///

    இங்கே எழுத்துப்பிழை உள்ள‌து. ‘ந‌ட்பு’ என்றே வ‌ர‌வேண்டும். ந‌ட‌ப்பு என்ப‌து த‌வ‌று. “ந‌ட‌ப்பு” என்ப‌து சில‌ ச‌மூக‌த்தின‌ரின் இறுதிச்ச‌டங்குக‌ளில் ஒன்று.

    அத்தியாய‌ம் 6 ஸ்லோக‌ம் 28 ‍ ப‌ல‌தீபிகை இந்த‌ யோக‌ங்க‌ளை விவ‌ரிக்கிற‌து. இந்த யோகங்களால் அவர்களுக்கு முறையே பரமசிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் அருள் பரிபுரணமாக இருப்பது தெரிகிறது அவர்கள் அந்தந்த மூர்த்திகளின் பக்தனாக இருப்பார்கள் என்றுதானிருக்கிறது. மேலும் இந்த‌ யோக‌ம் இத‌னால் என்றுதான் ஜோதிட‌ நூல்க‌ள் கூறுமே அல்லாது, த‌ங்க‌ள் கூறியுள்ள‌ப‌டி இந்த‌ யோக‌ம் இருந்்தால் அவ‌ர்க‌ள் முறையே சிவ‌ன் விஷ்ணு பிர‌ம்மாவைத்தான் வ‌ண‌ங்க‌வேண்டும் பிறதெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்க‌க்கூடாது என்று எந்த‌ ஜோதிட‌ நூலும் கூற‌வில்லை என்ப‌தே என‌து சிற்ற‌றிவுக்கு எட்டிய‌ விஷ‌ய‌ம். இவ‌ரை ம‌ட்டுமே வ‌ண‌ங்க‌வேண்டும் பிறிதொருவ‌ரை வ‌ண‌ங்க‌க் கூடாது என்ப‌த‌ற்கு எந்த‌வித‌மான‌ வேத‌ப்பிர‌மாண‌மும் இல்லை என்ப‌தும் தெளிவு.
    இன்னும் சொல்ல‌ப்போனால் ஒவ்வொரு யாக‌த்திலும் அனைத்து தேவ‌ர்க‌ளுக்கும் உரிய‌ அவிஸைக் கொடுக்க‌வேண்டும் என்றுதான் இருக்கிற‌து.

    ஸ்றீ ராம‌ர‌து ஜாத‌க‌த்தில் இந்த‌ மூன்று யோக‌ங்க‌ளும் இருந்த‌தாக‌ அறிகிறேன். (வால்மீகி ராமாய‌ண‌ம் பால‌காண்ட‌ம் ஜாத‌க‌த்தைப்ப‌ற்றிக்கூறுகிற‌து.) ஸ்றீகண்்ட‌ யோக‌த்தால்தானோ அவ‌ர் ராமேஸ்வ‌ர‌த்தில் ப‌ர‌ம‌சிவ‌னைப் பூஜித்த‌தாக ஐதீக‌ம் இருக்கிற‌து.

    இவையெல்லாம் இருக்க, அடிமுடி காணாத வரலாற்றுக்குப் பிரபஞ்ச‌ அறிவியல் தொடர்பைச் சிந்தித்த தாங்கள், ஜோதிட சாஸ்திரத்தில் கிரக நிலைகள் வானவியலை ஒத்ததே என்றாலும், ஒருவரது பிறப்பின்போது இந்த இடத்தில் இந்த கிரகம் இருந்தால் இதுதான் பலன் என்று கூறுவதற்கு அதுபோல எதேனும் விஞ்ஞான அடிப்படை உள்ளதா என்று சிந்தித்ததுண்டா? எனது சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி எதுவும் இல்லை.

    என்னிடமும் பஞசபூதங்கள், பரமசிவன், சிதம்பர ரகசியம் பற்றி ஓர் விஞ்ஞானம் சார்ந்த‌ கருத்து உள்ளது. அது குறித்து விவரமாக பின்னர் ஒருசமயம் எழுதுகிறேன்.

  87. உமாசங்கர் அய்யா

    //
    அத்தியாய‌ம் 6 ஸ்லோக‌ம் 28 ‍ ப‌ல‌தீபிகை இந்த‌ யோக‌ங்க‌ளை விவ‌ரிக்கிற‌து. இந்த யோகங்களால் அவர்களுக்கு முறையே பரமசிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் அருள் பரிபுரணமாக இருப்பது தெரிகிறது அவர்கள் அந்தந்த மூர்த்திகளின் பக்தனாக இருப்பார்கள் என்றுதானிருக்கிறது. மேலும் இந்த‌ யோக‌ம் இத‌னால் என்றுதான் ஜோதிட‌ நூல்க‌ள் கூறுமே அல்லாது, த‌ங்க‌ள் கூறியுள்ள‌ப‌டி இந்த‌ யோக‌ம் இருந்்தால் அவ‌ர்க‌ள் முறையே சிவ‌ன் விஷ்ணு பிர‌ம்மாவைத்தான் வ‌ண‌ங்க‌வேண்டும் பிறதெய்வ‌ங்க‌ளை வ‌ண‌ங்க‌க்கூடாது என்று எந்த‌ ஜோதிட‌ நூலும் கூற‌வில்லை என்ப‌தே என‌து சிற்ற‌றிவுக்கு எட்டிய‌ விஷ‌ய‌ம். இவ‌ரை ம‌ட்டுமே வ‌ண‌ங்க‌வேண்டும் பிறிதொருவ‌ரை வ‌ண‌ங்க‌க் கூடாது என்ப‌த‌ற்கு எந்த‌வித‌மான‌ வேத‌ப்பிர‌மாண‌மும் இல்லை என்ப‌தும் தெளிவு.
    இன்னும் சொல்ல‌ப்போனால் ஒவ்வொரு யாக‌த்திலும் அனைத்து தேவ‌ர்க‌ளுக்கும் உரிய‌ அவிஸைக் கொடுக்க‌வேண்டும் என்றுதான் இருக்கிற‌து.
    //

    ஒரு உதாரணம் கூறுகிறேன் - இருவர் பேசிக்கொள்கிறார்கள் - முதலாமவர் கூறுகிறார் - அதோ போகிறாரே அவருக்கு கணக்கு நன்றாக வரும் அவர் கணிதத்தில் முதுநிலை பட்டம் வாங்கி உள்ளார் - இன்னொருவர் சொல்கிறார் ஓஹோ அப்போ அவருக்கு அறிவியல் சுத்தமா வராதா என்று.
    - நீங்கள் சொல்வது எனக்கு இப்படிதான் படுகிறது

    //
    க‌ட்டுரையாள‌ருக்கும் இருக்க‌வேண்டிய‌ உரிமை/ சலுகை (discretion) என்றே இருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் வேத‌ப்பிர‌மாணம் என்று விஷ‌ய‌த்தை அத‌ற்கே திசைதிருப்பி ந‌ம‌து அன்ப‌ர்க‌ள் சார‌ங் அவ‌ர்க‌ளும் க‌ந்த‌ர்வ‌ன் அவ‌ர்க‌ளும் அதேசுழ‌லில் த‌ங்க‌ளையும் இழுத்துவிட்டார்க‌ளே!
    //

    வேதாந்த சாயலாக வரும் விஷயத்திற்கு வேத பிராமாணம் பார்ப்பது இயல்பே - நான் ஒன்னும் அடுத்த அஜித் படம் என்ன என்பதற்கு பிராமாணம் கோரவில்லை

    ஒருவர் ராமாயணத்தில் நடந்திராத விஷயத்தை சொன்னார் அது இல்லை என்று வால்மீகி / கம்ப ராமயனததை சுட்டிக்காட்டி சொன்னேன்

    ஒருவர் ராமன் வேறொரு பெண் மீது ஆசை பட்டான் அது மனித இயல்பு தானே என்றார் - அதற்க்கு சரியான விளக்கம் தர வேண்டியாதாயிற்று

    மேலும் அவதாரம் எடுப்பவர் பரமாத்மா ஆகவே முடியாது என்று எந்த ஆதரமுமே இல்லாமல் தவறாக வேத பிரமாணம் காட்டி சொன்ன பொது அதற்கு சரியான பிரமாணங்கள் காட்டினேன் - தேவையே இல்லாமல் வேத பிராமணம் எங்குமே முவைக்க படவில்லை - இதெல்லாம் சரி வேதாந்த விஷயத்தை பேச வேத பிராமணம் இதோ என்று கூறினால் அதிலென்ன தவறு இருக்கிறது - வேதம் பிரமாணத்தை விட்டால் வேதாந்த மதம் இருக்காது.

    ஒன்றே ஒன்றை மட்டும் சொல்லிவிடுகிறேன் - வேதம் சார்ந்த, வேதாந்த விஷயங்களை பேச வேந்தாம் தான் பிரமாணம். ராமயனதிருக்கு வால்மீகி ராமாயணம் தான் பிரமாணம். பெரிய புராணத்தில் வருவதற்கு பெரிய புராணம் தான் பிரமாணம், நான் பெரிய புராணம் இன் இங்கிலீஷ் என்று எழுதினால் அது பிரமாணம் ஆகாது, ஆழ்வார் பாசுரங்களுக்கு ஆசார்யர்கள் எழுதின வ்யாக்யானமே பிரமாணம் அவ்வளவே விஷயம் - இதை சொல்லவந்தால் இல்லை இல்லை பிரமாணம் என்று ஒன்றே இருக்ககூடாது என்றால் இலக்கணம் இல்ல மொழி எப்படி இஷ்டம்போல அழகில்லாமல் இருக்குமோ அது போல ஒரு வராரையே இல்லாமல் போகி விடும்.

    பெரிய புராணத்தில் இருப்பது வேதத்தில் இல்லை, ஆழ்வாரின் இந்த பாசுரத்தில் இருப்பது வேதத்தில் இல்லை என்றெல்லாம் அதற்க்கு வேத பிரமாணம் தேடவில்லை

    //
    தங்களும் ச‌ம‌ர‌ச பாவ‌த்தில் சிவ‌ன், விஷ்ணு, பிர‌ம்மா மூவ‌ரையும் சிலாகித்து எழுதினீர்க‌ள்
    //

    இந்த சமரச பாவம் துளி கூட இல்லாமல் வந்தது தான் முதலில் வந்த தான் அடி முடி கானா கட்டுரை - அதில் வீணே சிலருக்கு அகம்பாவம் என்று கூறியதை சரியல்ல என்று மறுத்து மட்டுமே நான் எழுதினேன் - நீங்கள் ஏன் ஒரு முறை கூட அந்த கட்டுரை ஆசிரியரிடம் அந்த கட்டுரை சமரச பாவமாக இல்லை என்று கேட்கவில்லை - இப்படி நாம் சார்ந்து இருப்பது தவறென கூறவில்லை - ஆனால் மற்றவரை கூரை கூறுவது சரி என்று எனக்கு படவில்லை - எனக்கு தெரிந்து ஜடாயு அவர்கள் மட்டுமே சில சார்ந்த கருத்துக்களை பொதுவில் மறுத்தார்

  88. பரமாத்மாவே

    எனக்கொரு அம்மா இருக்கிறார், பெரியம்மாவும் இருக்கிறார் - நான் தாயின் மீது அதிக பக்தி கொண்டவன் - எனது தாய்க்கு தினமும் சிஸ்ருஷை செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறேன் - எனது பெரிம்மா பைய்யன் ஒருவர் இருக்கிறார் - அவர் என்னிடம் வந்து என் அம்மாவும் எனக்கு அம்மா தானே - நீ ஏன் பெரிய அம்மா என்று சொல்கிறாய் உன் அம்மாவுக்கு செய்வது போல என் அம்மாவான அம்மாவுக்கு ஏன் சிஸ்ருஷை செய்யவில்லை என்கிறார் - நான் சொன்னேன் உன் அம்மாவும் அம்மாதான், எனக்கு பெரிய அம்மா. என்னை பெற்று எனக்கு ஆருயிராய் இருந்து, என்னை பேணுவதிலேயே தன்னை அர்பணித்த எனது தாயே எனக்கு தாய், அதற்காக உனது அம்மாவை நான் தாய் இல்லை என்று கூறவில்லை - உனது தாயை பெனுவதர்காகதான் உன்னை படித்தான் இறைவன் - நான் எனது தாய்க்கு பணிவிடை செய்வதிலேயே காலத்தை செலவழிக்க வேண்டும் என நினைக்கிறேன், இரண்டு பேரையும் சேர்த்து பணிவிடை செய்ய வேண்டும் என்றால் எனது கவனம் சற்று சிதறக் கூடும் இருவருக்கும் செய்யும் பணிவிடையில் குறை ஏற்படக்கூடும் என நினைக்கிறேன். அதனால் உனக்கு எல்லா தாயையும் குறைவின்றி கவினிக்க முடியும் என்றால் நீ அப்படி இரு, எனக்கு அது சாத்தியமில்லை என்று படுவதனால் நான் இந்த வழியை தேர்ந்தெடுத்தேன்

    எனது பெரியம்மா பைய்யன் இப்படி நீ சொல்வது காட்டு மிராண்டி தனம் என்கிறார் எனக்கு என்ன சொல்வதென்றே தெரிய வில்லை

  89. நண்பரே

    உங்களுக்கு புறம் தொஜாமை என்றால் என்ன என்று புரியவில்லை என்பது திண்ணமாகிறது - காங்கிரசார் போல ஹிந்து என்று ஒருவர் ஒரு வார்த்தை சொன்னால் அவன் மத வெறியன் என்று அர்த்தம் கொள்ளாமல் ஹிந்து என்ற வார்த்தைக்கும் மத வெறிக்கும் முடிச்சு போடாமல் இருக்க வேணும் என்றார் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் - நீங்கள் என்ன தான் முயன்று ஆபிரஹாமிய மதத்தையும் புறம் தோழமை என்ற நல்ல கொள்கையையும் முடிச்சு போடா நினைத்தாலும் அது நிரவர்ற ஒரு பினக்காகவே இருக்கும் - ஏன் என்றால் உங்களின் கருத்து சரியாக புரிந்து கொண்டு வந்ததல்ல

    //
    ஆனால் இந்தியாவில் அவர்களுக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த சனாதன தர்மத்தைப் பின்பற்றியவர்களில் பெரும்பான்மையானவர்கள் அத்வேஷ்டா, சமரச, நல்லிணக்க, எல்லாக் கடவுள்களையும் மரியாதை செய்யும் நாகரீகப் போக்கை பின்பற்றியவர்கள்.
    //

    இந்த பல்லாயிரம் ஆண்டு முன்பே புறன் தொழாமை இருந்தது - நீங்கள் இதிஹாச புராணங்களையும், ரிஷிகளை பற்றியும், உபநிஷட்கலாயு நாராக ஒரு ஆச்சரரிடம் கற்குமாறு வேன்டுகிரேன்.
    இதற்க்கு நான் முன்னமெபல சான்றுகல் கொடுத்தாயிற்று

    //
    எனவே ஒரு சிறு பிரிவினர் சானதன தர்மத்திலும் தங்களை அறியாமலேயே ஆபிரகாமிய கோட்பாட்டை புகுத்தி பின்பற்றியபோது - பெரும்பான்மையான மக்கள் அவர்களையும் சகித்துக் கொண்டு, இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்தல், என்ற வகையிலே அவர் நாணும் வகையிலே எல்லாக் கடவுள்களையும் மனப் பூர்வமாக வணங்கி நன்னயம் செய்து விட்டனர்.
    //

    இதெல்லாம் உங்களின் திரிப்பு என்றே கொள்ள வேண்டும் - நாயன்மார்களையும், ஆழ்வார்களையும், வ்யாசருய்ம், பீஷ்மரையும் , பரசரரையும், ப்ரஹல்லாதனயும்,துருவனயும், ரிஷிகளையும் இதில் நீங்கள் சேர்த்தே சொல்கிறீர்கள் என்பதே உங்களுக்கு தெரியாமல் உள்ளது

    //
    இதனால் தான் இந்து மதம் அமைதிப் பூங்காவாகவே இருந்து விட்டது.

    அப்படி அமைதிப் பூங்காவாகவே இருக்க வேண்டும்,

    இன்னும் “மறந்தும் புறம் தொழா” ஆபிரகாமிய, அடிப்படை வாத, சமரச மறுப்பு, பிடிவாதக் கருத்தை பரப்பி அமைதியை நல்லிணக்கம் கெடுக்கப் பட வேண்டாம் என்பதற்கு தான், இத்தனையும் எழுதுகிறோம்.
    //
    எழுதுவதோடு நில்லாமல் - சற்றெ அழமாக நான் மெர்கோரிய்வற்கலின் வாழ்கையும், அவர்கள் சொன்னதயும் படியுங்கள்

    இஙு அடுத்தவரை காட்டு மிரான்டி எண்று நீங்கள் மட்டுமே கோரி வருவதால் பொருமை இன்மை எஙு உல்லது எண்று சற்றேக் ஆராயுங்கள்

    தொழுதல் என்பது இங்கு முழுமையாக சரனாகதி பன்னுவது எண்று அற்தம். பாற்த எல்லவற்றயும் சரன் புகுவது நம்பிக்கை இன்மயெ ஆகும். ஓன்றில் பூரன நம்பிக்கை வைப்பது தவரே இல்லை. புரம் தொழாதவர் யாரும் மர்ர தெவதாக்கலை மரியாதை இல்லாமல் கொள்வதில்லை, அவர்கலை குறைவாக நினைப்பதில்லை மாறக தங்களின் ஒரு நம்பிக்கயில் ச்திரமாக உல்லனர் எண்ற கருத்தின் படி வாழ்கின்றனர்

    புரம் தொழமை குரை கோரும் நீங்கள், முருகன், விஷ்னு, ப்ரம்ம, சிவன், ஹனுமன் … என்றோடு நில்லாமல் யெசு, ஜெஹொவா, அல்லா,குரு நானக், மஹவிரார், தலாய் லாம, டர்கவில் உல்ல பலர், சைன்ட் ஆன் பலர், இன்னும் கன்டுபிடிக்கபடாத பலர், செங்கிச் கான் (அவனை மொங்கொலியர் கடுவுலாக் கருதுவதாக கேள்வி)இப்படி எல்லவர்ரயும் செற்துக்கொன்டு தொழ அனைவரும் தாயாராக உல்லனரா எண்று சொல்லமுடியுமா இல்லை நம்மால் தான் அனைவரைபற்றியும் படிக்கவாவது முடியுமா - நமக்கு வேதம் கோரும் பிராயம் நூரே, இதில் நேரத்தை வேன் செய்யாமல் ஒன்றில் கவனம் கொள்ள நினைபது தவறென பட்டால் ஒன்னும் சொல்வதர்க்கில்லை.

    நெருப்பு எண்றால் சுடாது

    தலை கட்டுகிறேன்

  90. நாம் யாரையும் எதையும் வ‌ண‌ங்க‌ சொல்லிக் க‌ட்ட‌ய‌ப் ப‌டுத்த‌வில்லை. க‌ட்டா‌ய‌ப் ப‌டுத்துவ‌து என்ப‌து நாக‌ரீக‌த்துக்கு எதிரான‌து.

    எந்த‌ தெய்வ‌த்தையும் நாம் நிந்திக்க‌வில்லை. தெய்வ‌ங்க‌ளாக‌ க‌ருத‌ப் ப‌டும் எல்லாவ‌ற்றையும் ந‌ல்லிண‌க்க‌ அடைப்ப‌டையில் ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ வ‌ண‌‌ங்க‌ நாம் த‌யாராக‌ இருக்கிரொம். எல்லா ம‌னித‌ரையும் நேசிக்க‌வே செய்கிரொம்.

    அல்லாஹ் தான் ஒரெ க‌டவுள், க‌ர்த்த‌ர் ம‌ட்டுமே ஜீவ‌னுல்ல‌ க‌ட‌வுள் என்கிற‌ ரேஞ்சிலெ தான் இருக்கிர‌து, உங்க‌ளுடைய‌ “எங்க‌ள் கட‌வுள் தான் முழுமுத‌ல் க‌ட‌வுள்” கோட்பாடும்.

    உல‌கிலெ அடிப்ப‌டை வாத‌ ம‌த‌ங்க‌ளுக்கிடையே ச‌ம‌ர‌ச‌ம் உருவாக்க‌க் கூடிய‌, ச‌ம‌ர‌ச‌க் க‌ருத்துக்க‌ள் உள்ள‌ ஒரே ம‌த‌ம் இந்து ம‌த‌ம். அதிலும் வ‌ந்து ஆபிர‌காமிய‌ பிடிவாத‌க் க‌ருத்துக்க‌ளை புகுத்துவ‌து ச‌ரியா?

    இதை சொன்னால், நாங்க‌ள் க‌ட்ட‌ய‌ப் ப‌டுத்துவ‌து போல‌ போல்டு லெட்ட‌ரில் போட்டால் உண்மையாகி விடுமா?

    உல‌க‌ ம‌த‌ங்க‌ளுக்கிடையே ச‌ம‌ர‌ச‌த்தை உண்டாக்க‌ உல‌க‌த்தின் ஒரே, க‌டைசி ந‌ம்பிக்கை இந்து ம‌த‌ம் ம‌ட்டுமே.

    உல‌கின் எல்லா ம‌த‌க் க‌ட‌வுள்க‌ளையும் வ‌ண‌ங்க‌ த‌யாராக‌, எல்லா ம‌த‌ வ‌ழி பாட்டு த‌ள‌ங்க‌ளுக்கும் போக‌த் த‌யாராக‌ இருக்கும் ப‌டியான‌ ம‌னித‌ன் யாராவ‌து இருந்தால் அவ‌ன் இந்து தான்.

    இங்கும் வ‌ந்து பிடிவாத‌க் க‌ருத்துக்க‌ளை புகுத்த‌ வேண்டுமா?

    நாங்க‌ள் யாரையும் க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌வில்லை. இந்த “ம‌ற‌ந்தும்‌ புற‌ம் தொழாமை” க‌ருத்தான‌து, இந்து ம‌தத்திலேயே ப‌ல‌ர் முழுமுத‌ற் கடவுளாக‌ வ‌ண‌ங்கும் இன்னொரு தெய்வ‌த்தின் கோவிலின் கோபுர‌ம் கூட‌ க‌ண்ணில் ப‌ட‌க் கூடாது என்று நினைக்கும் அளவுக்கு வெறுப்புக் க‌ருத்துக்க‌ளை ம‌ன‌தில் உருவாக்க‌வில்லை? இது உங்க‌ளுக்கு தெரியாதா? ம‌ன‌சாட்சியை தொட்டு சொல்லுங்கள். இது உங்க‌ளுக்கு தெரியாதா?

    இத‌ற்க்கும் இசுலாத்திற்க்கும் என்ன‌ விதியாச‌ம் ‍- ஆயுத‌ம் எடுக்க‌வில்லை என‌ப‌தை த‌விர‌.

    ஆயுத‌ம் எடுக்காம‌லே க‌ருத்தினாலே வெறுப்பை ப‌ர‌ப்பி‍ - இன்னொரு தெய்வ‌த்தின் கோவிலின் கோபுர‌ம் கூட‌ க‌ண்ணில் ப‌ட‌க் கூடாது - என்ற‌ அளவுக்கு நிலையை உருவாக்கிய‌து இந்த‌ “ம‌ற‌ந்தும்‌ புற‌ம் தொழாமை” க‌ருத்து தானெ?

    கிருட்டிண‌ரின் “அத்வேஷ்டா” க‌ருத்து உங்க‌ளுக்கு முக்கியமாக‌த் தெரிய‌வில்லையா?

    உங்க‌ளைக் குறை சொல்லவோ, உங்க‌ளிட‌ம் குற்ற‌ம் க‌ண்டு பிடிக்க‌வோ இவ்வ‌ள‌வும் எழுத‌வில்லை. இந்த‌ விட‌ய‌ம் அவ்வ‌ள‌வு முக்கிய‌மான‌து என்ப‌தால் தான் எழுதுகிரோம்.

    ஆபிர‌காமிய‌ ம‌த‌க் கார‌ருக்கு கூட‌ ‌ ம‌த‌ ந‌ல்லிண‌க்கம்‌, ம‌த‌ ச‌கிப்புத் த‌ன்மை, ச‌க‌ஜ‌த் த‌ன்மை ஆகிய‌வ‌ற்றின் அவ‌சிய‌த்தை புரிய‌ வைத்து விட‌லாம் போல‌ இருக்கிர‌து.

  91. //எந்த‌ தெய்வ‌த்தையும் நாம் நிந்திக்க‌வில்லை. தெய்வ‌ங்க‌ளாக‌ க‌ருத‌ப் ப‌டும் எல்லாவ‌ற்றையும் ந‌ல்லிண‌க்க‌ அடைப்ப‌டையில் ம‌ன‌ப் பூர்வ‌மாக‌ வ‌ண‌‌ங்க‌ நாம் த‌யாராக‌ இருக்கிரொம். எல்லா ம‌னித‌ரையும் நேசிக்க‌வே செய்கிரொம்
    ///

    ஏன் மனிதனை நேசிக்க மட்டும் செய்கிறீர்கள், கடவுள் என்று சொல்பவரை கும்பிடுகிறீர்கள் - சகல ஜெஈனிலும் நான் உள்ளேன் என்றல்லவா சொன்னான் கண்ணன்

    அத்வேஷ்ட என்ற கீதையை எதற்கோ முடிச்சு போட்டால் அது பொருந்தாது - நீங்கள் கீதையை முழுவதுமாக பார்க்கவில்லையே - சரம ஸ்லோகம் தெரியாதா - யாரிடமும் வெறுப்பு வைக்காதே என்று சொன்ன அதே கண்ணன் - என்னையே பனி என்றானே - இதை இரண்டையும் சேர்த்து பார்த்தால் என்ன வரும் - நீ என்னை மட்டுமே த்யானம் செய் அதற்காக மற்றவரை வெறுக்காதே, சமமாக பாவி, நான் அவர் உள்ளும் உளேன், விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுத்தால் என் மீது உள்ள சிந்தனை பிசகும், பிசகினால் அது த்யானம் ஆகாது - நீ என்னை நம்பினால் போதுமானது அதற்காக மற்றவர் மீது அவநம்பிக்கை வேண்டாம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் [இந்த கருத்தை தான் புறம் தோழா மாந்தர் பூரணமாக பின் பற்றுகின்றனர் ]

    உங்களின் கூற்று படி கண்ணன் சரம ஸ்லோகத்தில் வெறுப்பு கருத்து சொல்கிறான் அப்படிதானே - ஒரு பூரண புரிதல் இல்லாத எவர்க்கும் இப்படிதான் தோன்றும் - அதற்காக தான் ஆச்சர்யரிடம் படி, முன்னோர் வகுத்த படி நட என்றார்கள்

    ஒரே ஒரு கீதையை மட்டும் படித்தால் பயன் அல்ல என்பதற்கு ஒரு உதாரணம் பாப்போம் - ந த்வேவாஹம் அச்ய ந அசம், ந த்வம் ந இமே ஜனாதிப, ந செய்வ பவ்ஷ்யாமஹா சர்வே வயமதா பரம் [இதற்க்கு முன்னால் நான் இல்லமால் இருந்ததில்லை, நீயும் இல்லாமல் இருந்ததில்லை, இங்கு இருக்கும் ராஜ்யர்களும் இல்லாமல் இருந்ததில்லை - நான் நீ அவர்கள் எல்லோரும் எப்போதும் உள்ளோம்] - போச்சு கண்ணன் எல்லாரும் எப்போதும் இருக்கோம் என்று சொல்லிவிட்டான் - அப்போ நானும் கண்ணனும், டெண்டுல்கரும், பெரியாரும், கருணாநிதியும், கனிமொழியும் சமம் தான் எல்லாம் ஒன்னு தான்

    இது போல் தான் நீங்கள் கூறும் பொருள் உள்ளது - கடல் நீரிலும் உப்பு உள்ளது சாம்பாரிலும் உப்பு உள்ளது அதற்காக சாம்பார்ல உப்பு போட்ட கடல் நீராகிடும் என்று சொல்ல முடியாது - இது போல் தான் உங்களின் காட்டு மிராண்டி இலக்கணம் உள்ளது

    the conept of unity has no place without diversity - இந்த எளிமையான கருத்தை புரிந்து கொள்ளாமல் (சமரசத்தின் உண்மையான கருத்தை கூட புரிந்து கொள்ளாமல்) எழுதிக்கொண்டே போனால் எப்படி - இது புலால் உன்னதவனை பார்த்து - என்னடா நீ உனக்கு சமரசமே இல்லையே - உஅலக மக்களில் பெரும்பான்மையோர் புலால் உண்கின்றனர் - நீ மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாயே என்பது போல் உள்ளது

    நானோ ஆரண்யத்தில் அமைதியாக ஏகாந்தத்தில் இறைவனை நினைத்து வாழ நினைக்கிறேன் என்னை வலுக்கட்டாயமாக கலைஞர் கட்டிய பெருந்தகயீர் ஸ்டாலின் திறந்து வைத்த சமத்துவ புறத்தில் தான் வசிக்க வேண்டும் - மூட்டைய கட்டு என்றால் எனக்கு கஷ்டமாக உள்ளது

    சமரசம் என்பது உலகனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவது இல்லை மாறாக உலகம் முழுவதிலும் பரமாத்மாவே வ்யாபிதுள்ளர் என்று அறிவதே - இந்த அறிவினால் நாம் இயற்கையாகட்டும், விலங்குகள் ஆகட்டும். மனிதர்கள் ஆகட்டும் எல்லோரிடமும் மரியாதையுடனும் அன்புடனும் இருக்க வேண்டும் என்பதே - அதற்காக என் பொண்ண உனக்கு தரேன் உன் பொண்ண அவனுக்கு தா - நீ ஏன் சாமிய கும்பிடு நான் ஒன சாமிய கும்பிடுறேன் என்பதனால் ஏற்படாது - சமரசம் என்பது ஒரு மன நிலையே - அதை நடை முறையில் நடக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும் கொண்டு வர முடியாது - என்னால் கோவிலில் ஒரு முறையும், சர்ச்சில் ஒரு முறையும், பள்ளி வாசலில் ஒரு முறையும் சமத்துவம் வளரனும் என்று திருமணம் செய்துகொள்ள முடியாது - காலை சாம்பார் சாதமும், மதியம் ரொட்டியும், இரவு பிரியாணியும் சாப்பிட முடியாது

    முஸ்லிமிற்கு ஒரு பெண்ணும், க்ரிச்துவன்க்கு ஒரு பெண்ணும், ஹிந்துவுக்கு ஒரு பெண்ணும் சமரசித்திர்காக கட்டிக்கொடுக்க வேண்டும் என்று ஓர் பத்து பதினைந்து மக்களை பெற்று கொள்ள முடியாது

    இதே போல் காலையில் கோவில் , மதியம் சர்ச்சுக்கும், இரவு பள்ளிவாசலுக்கும் போக முடியாது

    இப்படி எல்லாம் இருந்தால் தான் அவன் சமரசவாதி என்றால் அது என்னால் ஆகாத காரியம் - எனது வாழ்வு சில நாட்கள் கொண்டதே - அதை நான் இப்படி மனதை அலை பாயவிட்டு வீணடிக்க விரும்பவில்லை

    // இன்னொரு தெய்வ‌த்தின் கோவிலின் கோபுர‌ம் கூட‌ க‌ண்ணில் ப‌ட‌க் கூடாது - என்ற‌ அளவுக்கு நிலையை உருவாக்கிய‌து இந்த‌ “ம‌ற‌ந்தும்‌ புற‌ம் தொழாமை” க‌ருத்து தானெ?
    //

    இது தான் உங்களுக்கு விஷயம் சரியாக புரியவில்லை என்பதை தெளிவாக்குகிறது - இப்படி நினைப்பவர் யாரும் இன்னொரு கோபுரத்தை இடிக்க வில்லை - இப்படி சொன்னது ( பேரா) ஆசை கூடாது, ஸ்திரமான மனது வேண்டும் என்பதற்காகவே - இதற்க்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் - திவச காலத்தில், மூன்று அதிகாரிகளை [பாருங்கள் நான் எவ்வளவு சமரசமாக பேச நேர்கிறது என்று] அழைத்து உணவு உன்ன வைப்போம் - அவர்கள் உண்ணுவதை பார்க்காதே என்று சொல்லுவார்கள் - ஏன் என்றால் ஐயோ இவர் இவ்வளவு குறைவாக் உன்கிறாரே, அவர் இவ்வளோ பச்சடி சாபிடறாரே என்று நமது ஸ்திரமில்லாத மனதிற்கு தவறியும் தோன்ற கூடாது என்பதற்காகவே - அப்படி நம் மனம் சிந்த்தித்தால் பித்ரு காரியத்தில் குறை ஏற்படும் என்பதாலேயே

    தஞ்சை கோபுரத்தின் அழகினை பார்த்து - அடடா எவ்வளவு அழகாக உள்ளது - நம் கோவிந்தனுக்கு இப்படி ஒன்று இல்லையே என்று யோசிப்போமே அனால் அந்த எண்ணம் கோவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் பேராசை என்பதால்)

    ஆபிரஹாமிய மதமே ஒரு வன்முறையின் பால் தோன்றியதே ஆனால் வேத காலத்திலிருந்தே அமைதியாக ஒன்றிலே மனத்தை செலுத்தி வரும் நமது தர்மம் இதற்க்கு மாறாக ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளதே.

    ஆபிரஹாமிய மதத்தை பரப்பியவர்கள் மற்றவரை காட்டு மிராண்டி என்றே சொல்லி காட்டு மிராண்டி தனத்தை அவிழ்த்து விட்டனர் [அவர்கள் செய்தது பலவாக இருந்த ஒன்றை ஒன்றாக மாற்ற நினைத்தது என்று தவறாக அர்த்தம் கொள்ள வேண்டாம் - அது வெறும் அரசியல் சார்ந்த மக்களை கட்டுப்படுத்த நினைத்தான் விளைவால் வந்தது] - நீங்கள் செய்வது அவர்கள் செய்ததை அப்படியே உல்டாவாக செய்வது போல் உள்ளது

    நீங்கள் வீணே அதையும் இதையும் முடிச்சு போட்டுக் கொண்டு, நாமும் இப்படி கேட்டுவிட்வோம் என்றால் அது ஆடாரம்ற கவலை என்றே நான் சொல்வேன் - பல ஆயிரம் ஆண்டுகளாக [பக்தி அதன் உயரத்தில் இருந்த போதும்] இல்லாத சண்டை இப்போது வராது

    இந்த இரண்டுக்கும் வித்யாசம் பார்க்க உங்களுக்கு தெரியவில்லையே என்று எனக்கு வருத்தமாக உள்ளது

    //
    அல்லாஹ் தான் ஒரெ க‌டவுள், க‌ர்த்த‌ர் ம‌ட்டுமே ஜீவ‌னுல்ல‌ க‌ட‌வுள் என்கிற‌ ரேஞ்சிலெ தான் இருக்கிர‌து, உங்க‌ளுடைய‌ “எங்க‌ள் கட‌வுள் தான் முழுமுத‌ல் க‌ட‌வுள்” கோட்பாடும்.
    //

    இப்படி யாரும் சொல்லவில்லையே - உங்கள் மனதில் தொன்றினதேர்கேல்லாம் நாங்கள் பொறுப்பு இல்லை - தாங்கள் மட்டும் ஹிந்து தான் சிறந்தவன் போலே மேலே எழுதி உள்ளீர்களே அதை எங்கே சென்று சொல்ல - புறம் தொழாதவர் நாயன்மார்கலாகட்டும் ஆழ்வார்களாகட்டும் ரோட்டிலே போற வருபவனை பிடித்து இவர் தாநோசன்தவர் என்று பிரசாரம் செய்யவில்லை - இந்த புறம் தொழாமை என்பது பக்தியின் ஒரு உயர்ந்த நிலை தானே ஒழியே வேருஒன்றும் இல்லை . இப்படி சமரச வாதி தான் உலகில் உயன்தவர் மற்றவர் எல்லாம் காட்டுமிராண்டி என்று கூறுவதன் மூலம் நீங்கள் சொல்லும் விஷயத்திற்கு நீங்களே முதல் எடுத்துக்காட்டாக உள்ளீர் - இங்கு பிடிவாதமாக மற்றவரை கொஞ்சம் கூட யோசிக்காமல் காட்டு மிராண்டி என்று முத்திரை குத்துவது நீங்கள் மட்டுமே - இது தான் சமரச பாவமோ?

    //
    உல‌கின் எல்லா ம‌த‌க் க‌ட‌வுள்க‌ளையும் வ‌ண‌ங்க‌ த‌யாராக‌, எல்லா ம‌த‌ வ‌ழி பாட்டு த‌ள‌ங்க‌ளுக்கும் போக‌த் த‌யாராக‌ இருக்கும் ப‌டியான‌ ம‌னித‌ன் யாராவ‌து இருந்தால் அவ‌ன் இந்து தான்.
    //
    கொஞ்சம் எல்லா ஹிந்துக்களையும் கேட்டறிந்த பின்பு இதை கூறவும் - யார் யாரெல்லாம் தர்காவுக்கு வர ரெடி என்று - நாம் மட்டும் தான் அறியாமையால் திப்பு சுல்தான் தர்காவிற்க்கு (புதைத்த இடம்) சென்று விட்டு சாமுண்டேஸ்வரி கோவிலுக்கும், ஸ்ரீரங்கபட்டினம் கோவிலுக்கும் செல்கிறோம் [this is how karanataka tourism plans their ஓனே day bangalore to mysore trip].

    சமரசம் என்ற பேரில் நீங்கள் எல்லாவற்றையும் மூடி மறைத்துவிட முடியாது - தமிழனுக்கு பொங்கல் வடை தான் பிடிக்கும், குஜராத்திக்கு ரொட்டிதான் பிடிக்கும் - வித்யாசங்கள் உள்ளது - எல்லா வித்யாசமும் இயற்கையானதே - மல்லிகை பூக்கும் இதே பூமியில் தான் கல்லிச்செடியும் விளைகிறது, கஞ்சா செடியும் விளைகிறது - கண்ணை மூடிக்கொண்டு யாரும் இதை கள்ளி என்று சொல்லதீர்கள், மல்லி என்று சொல்லாதீர்கள் என்றால் என்ன செய்வது

    கற்பனையாகவே ஒரு விஷயத்தை கல்பித்துவிட்டு அதை தவறு என்று தம்பட்டம் அடித்தால் பயன் இல்லை -

  92. திரு உமா சங்கர்,

    //ச‌ம‌ர‌ச பாவ‌த்தில் சிவ‌ன், விஷ்ணு, பிர‌ம்மா மூவ‌ரையும் சிலாகித்து எழுதினீர்க‌ள்.//

    உள்ளதை எழுதினேன் .
    ச‌ம‌ர‌ச, சிலாகித்து - போன்ற வார்த்தைகள் இந்நாளைய secular influences.
    பிரம்ம வாதத்தில் இவை கிடையாது.

    இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது - இது போலவே பல இடங்களிலும் கருத்துக்களைப் படிக்கும்போது, வேத மதம் என்ன கூறுகிறது என்று எழுத இது இடமல்ல என்று புரிகிறது.

    ஆதார கோட்பாடுகளையே ஒத்துக் கொள்ள மாட்டேன் என்றால், நான் ஒன்றும் செய்ய முடியாது. ஒதுங்கிக் கொள்வதுதான் வழி. ஏனென்றால் நீங்கள் விரும்பும் வகையில் நான் எழுத வேண்டும் என்றால், அது வேதக் கோட்பாடு ஆகாது. அது வேறு ஏதோ.

    நீங்கள் நினைக்கும் ஒரு எண்ணம், வேதப் பிரமாணத்துக்குள் வரவில்லைஎன்றால், ஒரு ஆசார்யனை அணுகி முறைப்படி இந்தக் கோட்பாடுகளைத் தெரிந்து கொள்ளவும். அதன் படி உங்கள் எண்ணங்களை அலசவும்.

    ஜோதிடம் பற்றிய கேள்விகள் :-
    ‘பல’ தீபிகை போன்ற புத்தகங்களைப் படித்தவராக இருந்தால், அந்தக் கேள்விகள் வந்திருக்காது, நானும் பதில் சொல்ல வேண்டியிருக்காது. பலதீபிகை படித்தும் அக்கேள்விகள் வந்தால், நான் பதில் சொல்லியும் பயன் கிடையாது. எனவே ஜோதிடக் கருத்து பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கவில்லை.

    நண்பர் சுஜாதா தேசிகன், இந்தக் கட்டுரைகள் கொஞ்சம் high என்றார். அதனால், நானும் மெனக்கெடாமல், உங்களுக்கும் தொந்திரவு கொடுக்காமல் விட்டு விடுகிறேன்:)
    ஆன்மீகமும், பிரம்ம ஞானமும் அவரவர் விதிவழியே அடைவர். வாழ்கையும், காலமும் வழிப்படுத்தும். அப்பொழுது தாமே தேடி வரும்போது அவரவர்க்குக் கிடைக்கும். எல்லோருக்கும் கிடைக்கட்டும். கிடைக்கும்.

  93. கந்தர்வன் அவர்களே,

    முதல் பதிலில் கொஞ்சம் முன்னேற்றம் தெரிந்தது.

    அதில் //எந்த டீச்சர்-க்கும் வணக்கம் செலுத்துவதில் எமக்கு ஆட்சேபனம் இல்லை. கண்டிப்பாக விஷ் பண்ணுவோம். ஆனால், “எல்லா டீச்சரும் பிரின்சிபால் தான்” என்பதைத் தான் நாங்கள் ஏற்கவில்லை. அதற்காக, பக்கத்து பெஞ்ச் பையன் “கணக்கு டீச்சர் தான் பிரின்சிபால்” என்று சொன்னதற்கு அவனை கேலி பண்ண மாட்டோம், சாத்து சாத்த மாட்டோம்//

    //எந்த டீச்சர்-க்கும் வணக்கம் செலுத்துவதில் எமக்கு ஆட்சேபனம் இல்லை. கண்டிப்பாக விஷ் பண்ணுவோம்.//

    இது சமரச கருத்தே.

    //ஆனால், “எல்லா டீச்சரும் பிரின்சிபால் தான்” என்பதைத் தான் நாங்கள் ஏற்கவில்லை//

    நீங்கள் யாரை ப்ரின்சிபிலாக , முதன்மையாக கருதுகிரீகளோ அது உங்கள் விருப்பம் , அது அவரவர் விருப்பம் அதில் நாங்கள் குறுக்கிடவில்லை.

    //இதைப் பற்றி பகவான் என்ன கூறுகிறான் என்றால், “சுருதி, ச்மிருதிகளில் சொல்லப்பட்ட அன்றாடம் செய்ய வேண்டிய கர்மாக்களை எவன் ஒருவன் விட்டு விடுகிறானோ, அவனை ஒருபொழுதும் நான் என் பக்தனாக ஏற்றுக் கொள்வதில்லை” (விஷ்ணு தர்மோத்தர புராணம்). மறந்தும் புறந்தொழாதவர்கள் இந்த கர்மாக்களை விடாமல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆகையால் நீங்கள் சொல்லும் உவமையால் வரும் குற்றச்சாட்டு செல்லாது.//

    இது பகவான் சொன்னாதா இல்லையா என்று பாருங்கள்:

    அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)

    சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)

    நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )

    ஸம - துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)

    க்ஷமீ (பொறுமை உடையவனாய்)

    ஸ ந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )

    யோகி (யோக நெறியில் நிற்பவன்)

    யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)

    த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)

    மய்யர்பித மனோ புத்திர் ( மனதையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பித்தவன்)

    யோ மத் பக்த ( எவன் என்னிடம் பக்தி செய்பவனாக )

    ஸ மே ப்ரிய (அவன் எனக்கு பிரியமானவன்)

    அன்றாடம் செய்ய வேண்டிய கர்மாக்களை செய்து கொண்டு மனதிலே வெறுப்புக் கருத்துக்களை வைத்து இருந்தால் அதனால் பலன் ஒன்றும் இல்லை.

    //ஸ்கூல் ஆயாவும் பிரின்சிபால், நாட்டுக் கொடியும் பிரின்சிபால், டங்கு டங்கு-ன்னு சத்தம் போடும் ஸ்கூல் மணியும் பிரின்சிபால், பீ.டீ. டீசெரும் பிரின்சிபால், பக்கத்துப் பையனும் பிரின்சிபால்” என்று சொல்வதற்குச் சமம்.//

    உங்களது கிளாஸ் டீச்சரை மட்டுமே உயர்ந்தவராகக் காட்ட கணக்கு டீச்சரை (அவரும் இன்னொரு வகுப்புக்கு கிளாஸ் டீச்சர் தான் - பியூன் , ஆயா என்று மட்டம் அதட்டும் அளவுக்கு துவேஷம், வெறுப்பு காட்டப் பட்டு உள்ளது.

    முதல பதிலில் இருந்த சமரசத்தை இரண்டாம பதிலில் துவேஷம் விரட்டி விட்டது.

  94. நாளென் செய்யும் ,

    வினை தானென் செய்யும் ,

    எனை நாடி வந்த கோளென் சேயும் என்றார் சான்றோர்.

    “நாமர்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம்” என்றார் அப்பர்.

    “கிரக பலமேதி” என்றார் தியாகராஜர். அஞ்சி அஞ்சி சாகும் வரைக்கும் பலரும் நம்மை ஆளுவர். விழித்து எழுந்தால், விடுதலை தான்.

  95. பிரஹலாதன், துருவன் ஆகியோரின் பக்தி எவ்வளவு சிறப்பானது! அவர்கள் எவ்வளவு நல்லவர்கள்!!

    உங்களது பிடிவாத, சகிப்புத்தன்மை மறுப்பு கொள்கைக்கு அவர்களை உபயோகப் படுத்த முடியாது!!!

    பிரஹலாதன் யாரயுமே வெறுக்கவில்லை. இரண்யகசிபு அவரைக் கொல்லக் கட்டளை இட்ட போது கூட இரண்ய கசிபுவை வெறுக்கவில்லை. விஷ்ணுவை தன்னுடைய முக்கிய எதிரி என்று இரண்யகசிபு கருதி வந்த நிலையிலும், அவருக்கு நல்ல புத்தி சொல்ல முயன்றாரே தவிர அவரை வெறுக்கவில்லை.

    இப்படி நடந்தது என்று வைத்துக் கொள்வோம் :

    இரண்யணைக் கொல்ல - உடல் பகுதி, கீழே இடுப்பு வரையிலும் சிம்மமாகவும், மேல் உடல் மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்த சிவன் உருவத்தில் - இரண்யணைக் கொல்ல வந்திருந்தால் பிரஹலாதன் அந்த நரசிம்ம மூர்த்தியை வணங்கியிருக்க மாட்டாரா?

    மறந்தும் புறம் தொழா மாட்டேன், நீ வந்த வேலையை முடித்து வீட்டுப் போ என்றும், நான் உன்னைத் தொழா வேண்டும் என்றால் இந்த சந்திர சேகர கங்காதர உருவத்தை விட்டு விட்டு வா எனவும் கண்டிசன் போட்டு இருப்பாரா?

    நண்பர்களே, முதலில் பிரஹலாதன், துருவன், மார்க்கண்டேயன் ஆகியவர்களின் மாசு மறுவற்ற அன்பு உள்ளத்தை, வெள்ளை உள்ளத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

    அப்படி உங்களால் புரிந்து கொள்ளக கூடுமானால், உங்களின் வெறுப்புக் கருத்துகளை தாங்கிப் பிடிக்க அவர்களை துணைக்கு அழைக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்வீர்கள். .

  96. அத்வேஷ்டா என்பதை முதல் வார்த்தையாக அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அறிவித்து, நிர்மமோ நிரஹங்கார என்று தெளிவாக சொல்லி, அகராதி தனம் இல்லாத அஹம்பாவம் இல்லாத நல்ல மனநிலையில் என்னை வணங்குபவன், எனக்குப் பிடித்தமானவன் என்று சொல்லியிருக்கிறார்.

    அதே கிருட்டிணர், விசுவ ரூப தரிசனம் காட்டியதான போது ருத்திரர், ஆதித்யர், பிரம்மா, வசுக்கள், எல்லாமுமாக தானே இருப்பதாக விசுவ ரூப தரிசனம் காட்டினால் அப்போது அர்ஜுனனைப் போல தொழாமல், மறந்தும் புறம் தொழா மாந்தர்கள் கண்ணை மூடிக் கொள்வார்களா?

    உன்னைத் தொழா முடியாது, எல்லா உருவமுமாக வந்து சேர்ந்து தொலைந்தாயே, என்று அவரையே கடுப்படிக்கும் நிலையை உருவாக்கக் கூடிய வெறுப்பை, துவேசத்தை உருவாக்கும் கோட்பாடு தான், மறந்தும் புறம் தொழா கோட்பாடு.

  97. //
    உல‌கின் எல்லா ம‌த‌க் க‌ட‌வுள்க‌ளையும் வ‌ண‌ங்க‌ த‌யாராக‌, எல்லா ம‌த‌ வ‌ழி பாட்டு த‌ள‌ங்க‌ளுக்கும் போக‌த் த‌யாராக‌ இருக்கும் ப‌டியான‌ ம‌னித‌ன் யாராவ‌து இருந்தால் அவ‌ன் இந்து தான்.
    //
    கொஞ்சம் எல்லா ஹிந்துக்களையும் கேட்டறிந்த பின்பு இதை கூறவும் - யார் யாரெல்லாம் தர்காவுக்கு வர ரெடி என்று - நாம் மட்டும் தான் அறியாமையால் திப்பு சுல்தான் தர்காவிற்க்கு (புதைத்த இடம்) சென்று விட்டு சாமுண்டேஸ்வரி கோவிலுக்கும், ஸ்ரீரங்கபட்டினம் கோவிலுக்கும் செல்கிறோம் [this is how karanataka tourism plans their ஓனே day bangalore to mysore trip].

    //அவதாரங்களில் மிகச் சிறந்தவராகிய ஸ்ரீ கிரிஷ்ணர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார்.

    “எந்த மனிதரிடமாவது அசாதாரண ஆன்மீக சக்தி வெளிப்படுமானால் அங்கே நான் இருக்கிறேன் என்பதை அறிந்து கொள்”.

    உலகம் முழுவதும் உள்ள அவதார புருஷர்களையும் இந்துக்கள் வணங்குவதற்கான கதவை இந்தக் கருத்து திறந்து விடுகிறது.

    எந்த நாட்டிலும் தோன்றிய எந்த மாகானையும் ஓர் இந்து வழி பட முடியும்.

    கிறிஸ்தவர்களின் சர்ச்சுக்கும் , முகமதியரின் மசசூதிக்கும் சென்று நம் வழி படுகிறோம். இது நல்லது. ஏன் வழி படக் கூடாது. நான் முன்பே சொல்லியது போல நம்முடைய மதம் உலகம் தழுவிய மதம்.

    எல்லாக் கருத்துக்களையும் தன்னுள் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு அது பரந்தது. //

    பக்கம் 77, 78
    தலைப்பு: இந்திய ரிஷிகள்
    நூல் : இளைய பாரதமே எழுக
    அச்சிட்டவர் : இராம கிருஷ்ண மடம்

    சொற்ப்பொழிவு நிகழ்த்தியவர்: சுவாமி விவேகானந்தர்

  98. // இன்னொரு தெய்வ‌த்தின் கோவிலின் கோபுர‌ம் கூட‌ க‌ண்ணில் ப‌ட‌க் கூடாது - என்ற‌ அளவுக்கு நிலையை உருவாக்கிய‌து இந்த‌ “ம‌ற‌ந்தும்‌ புற‌ம் தொழாமை” க‌ருத்து தானெ?
    //

    இது தான் உங்களுக்கு விஷயம் சரியாக புரியவில்லை என்பதை தெளிவாக்குகிறது - இப்படி நினைப்பவர் யாரும் இன்னொரு கோபுரத்தை இடிக்க வில்லை - இப்படி சொன்னது ( பேரா) ஆசை கூடாது, ஸ்திரமான மனது வேண்டும் என்பதற்காகவே -

    தஞ்சை கோபுரத்தின் அழகினை பார்த்து - அடடா எவ்வளவு அழகாக உள்ளது - நம் கோவிந்தனுக்கு இப்படி ஒன்று இல்லையே என்று யோசிப்போமே அனால் அந்த எண்ணம் கோவிந்தனுக்கு பிடிக்காமல் ஆகிவிடும் (இவரின் பேராசை என்பதால்) //

    ஒவ்வொரு முத்தாக உதிர்க்கிறார். எவ்வளவு நல்ல எண்ணம் பாருங்கள்.

    //தஞ்சை கோபுரத்தின் அழகினை பார்த்து - அடடா எவ்வளவு அழகாக உள்ளது - நம் கோவிந்தனுக்கு இப்படி ஒன்று இல்லையே என்று யோசிப்போமே//

    ஒவ்வொரு முத்தாக உதிர்க்கிறார். எவ்வளவு நல்ல எண்ணம் பாருங்கள்!

    ஆபிராகாமிய கடவுள், தான் பொறாமையுள்ள கடவுள் என்கிறார்.

    இங்கே மறந்தும் புறம் தொழாமை கோட்பாடு பக்தன் தான் பேராசைக் காரன் என்கிறார்.

    இங்கே மறந்தும் புறம் தொழாமை கோட்பாடு பக்தனை இன்னொரு இந்துக் கடவுளுக்கு கட்டப் பட்ட கோபுரத்தைப் பார்த்து வயிறு எரிச்சல் பட்டு பேராசை நிலையை அடைய வைப்பதால் பார்க்காமல் தவிர்ப்பதாக ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார். எப்படி ஒரு சின்னத் தனம். உங்களின் சின்னத்தனத்தால் கோவிந்தனுக்கே அவமானத்தை உண்டாக்குகிறீர்கள்.

    சரி போகட்டும். சிறிய கோபுரம் உடைய சிவன் கோவிலைக் கூட பார்க்காமல் போனார்களே, அப்படி சொல்லி விட்டுப் போனதை நானே கேட்டிருக்கிறேன். சிறிய கோபுரத்தைப் பார்த்தாலும் வயிர்றேரிச்சலா? .

  99. கட்டுரை ஆசிரியர் அவர்களுக்கு,

    மறுமொழிக்கு நன்றி.

    தாங்கள் ச‌ம‌ர‌ச பாவ‌த்தில் எழுதினீர்கள் என்று நான் நினைத்தது தவறுதான். தாங்களே தங்களுக்கு அவ்வாறு சமரச பாவம் இல்லை என்று சொல்லும்போது அதை நான் ஏற்கத்தான் வேண்டும். ஆனால் நான் எப்போதும் சமரச பாவத்துடன்தான் எழுதுகிறேன். இதைத் தாங்கள் செக்யூல‌ர் தாக்கம் என்கிறீர்கள். அப்படி அல்ல. சமரச பாவம் ஆதிசங்கரர் தாக்கம் என்கிறேன் நான். தங்களது கட்டுரையில் ஏற்கனவே தாங்கள் கூறியதை இங்கே நினைவு கொள்கிறேன்.

    ///இதன் விளைவாக எந்தக் கடவுள் பெரியவர் என்ற சர்ச்சையும் பல காலம் நடந்து வந்திருக்கிறது. பல காலம் என்றேன், அப்படி என்றால் பல காலத்துக்கு முன், அந்த நாளில் இந்தச் சர்ச்சை இல்லையா என்றால், இல்லை என்று சொல்லலாம். காரணம், இவை குறித்த கருத்துகளை அந்த நாளில் தெளிவாக அறிந்திருந்தனர். அதற்கும் காரணம், பிரமாண நூல்கள் சொல்லும் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தனர்.///

    ஆதிசங்கர பகவத்பாதர் சிவ, விஷ்ணு, சக்தி, கணபதி, சுப்ரமணிய, சூர்ய‌ பக்தர்களை ஒருங்கிணத்து தற்போதைய மதத்தை நிலைநிறுத்தும்போது சிலரை வாதத்தினால் வென்றும் சிலரை சமரசப்போக்கில் அரவணைத்தும் செய்தார் என்பது வரலாறு. இதனால்தான் அனைத்து மூர்த்தங்களையும் ஒருங்கே வழிபடும் மரபு நிலைபெற்றது. அவரும், சிவ, விஷ்ணு, சக்தி, கணபதி, சுப்ரமணிய, சூர்ய‌ ஸ்துதிமாலைகளை பக்தியுடன் சமரசப்போக்கில் எழுதி்னார் என்பதும் வரலாறு. அவர் காலத்திலேயே இப்படி விஷ்ணுபக்தர்கள் அவரிடம் கோபப்பட்டதும் அதற்கு பதிலாக அவர் பஜகோவிந்தம் அருளியதும் வரலாறு. பஜகோவிந்தம் 24ஆம் ஸ்லோகத்தைப் பாருங்கள்.

    த்வ‌ம‌யி சான்ய‌த்ரகோ விஷ்ணு:
    வ்ய‌ர்த்த‌ம் குப்ய‌ஸி ம‌ய்ய‌ஹிஷ்ணு;
    ஸ‌ர்வ‌ஸ்மின்ன‌பி ப‌ச்யாத்மான‌ம்
    ஸ‌ர்வ‌த்ரோத்ஸ்ருஜ பேத‌க்ஞான‌ம்

    இத‌ன் பொருள்:

    உன்னிட‌த்திலும் என்னிட‌த்திலும் ம‌ற்ற‌ இட‌த்திலும் விஷ்ணு ஒருவ‌ரே உள்ளார். அப்ப‌டியிருக்க‌ பொறுமைய‌ற்ற‌வ‌னாய், என்னிட‌த்தில் வீணாக‌க் கோப‌ம் கொள்கிறாயே, எல்லாப் பொருட்க‌ளிலும் த‌ன் ஸ்வ‌ரூப‌த்தையே பார். எவ்விட‌த்திலேயும் பேத‌த்தைத் தோற்றுவிக்கிற‌ அஞ்ஞான‌த்தை விடு.

    அவ‌ர் காலத்திலும் விஷ்ணு பக்த‌ர்க‌ள் கோபிப்ப‌தும், அவர்களை ச‌ம‌ர‌ச‌ப்போக்கில் அரவ‌ணைத்துச் செல்வ‌தும் இருந்தது என்ப‌தைத்த‌விர‌ வேறு என்ன‌ சொல்ல‌? அவ‌ர் ச‌ம‌ர‌ச‌ப்போக்கில் சொன்ன‌தை ஏற்கும்போது அவ‌ர் எழுதிய‌ பிற‌ ஸ்துதிக‌ளையும, அவர் சமரசமாக நடந்து காட்டியதையும் ஏற்க‌வேண்டும‌ல்ல‌வா?

    வேதம் பிர‌மாண‌ம் என்ப‌தை எங்கே எப்ப‌டி அவ‌ர் உப‌யோகித்தார் என்பதை‌யும் பார்க்க‌வேண்டும். (இது ஒரு உதாரணம்தான். விவேக சூடாமணியிருந்து)

    ச்ருதிப்ராமாணைக‌ம‌தே: ஸ்வ‌ர்த‌ர்ம‌நிஷ்டா த‌யைவாத்ம‌ விசுத்திர‌ஸ்ய‌
    விசுத்த‌புத்தே: ப‌ர‌மாத்ம‌வேத‌ன‌ம் தேனைவ‌ ஸ‌ம்ஸார‌ஸ்மூல‌நாச:

    இதன் பொருள்:

    “வேத‌ம்தான் பிர‌மாண‌ம் என்று ஒரே தீர்மான‌முள்ள‌வ‌னுக்கு த‌ன‌து த‌ர்ம‌த்தை மேற்கொள்வ‌திலே ஈடுபாடு ஏற்ப‌டும். அத‌னால் சித்த‌ம் ந‌ன்கு தெளிவ‌டையும். ந‌ன்கு தூய்மையான புத்தி உள்ள‌வ‌னுக்கு உத்த‌ம‌மான‌ ஆத்மாவின் ஸாக்ஷாத்கார‌ம் ஏற்ப‌டும். அத‌னால் ஸ‌ம்ஸார‌த்த‌ளை, அறியாமை முத‌லிய‌ன‌ அழியும்.”

    அதாவ‌து ஒருவ‌னை ந‌ன்னெறிப்ப‌டுத்த‌ த‌ன‌து த‌ர்ம‌த்தைக் க‌டைப்பிடிக்க‌ இந்த‌ ந‌ம்பிக்கை அவ‌சிய‌ம் என்றார். வேதம் பிரமாணம் என்பதை “அடிமுடி காணாத‌ வ‌ர‌லாற்றைப் புனைய‌ப்ப‌ட்டது” என்று சொல்வ‌த‌ற்கு உப‌யோகிப்ப‌தைத்தான் நான் ஏற்க‌வில்லை. நான் விரும்பும் வ‌கையில் நீங்கள் எழுத‌வேண்டும் என்று சொல்ல‌வில்லையே! வேதம் பிரமாணம் என்பதை நல்வழிப்படுத்தக் கையாண்டதை, வேறு பொருளில் கையாளலாமா? Quoting out of context will not help in reaching the ultimate truth.

    ஆர‌ம்ப‌முத‌லே நான் சொல்லிவ‌ந்த‌து இதுதான். வேத‌ப்பிர‌மாண‌ம் காட்டி வாத‌ம் செய்ய‌ வ‌லைத்த‌ள‌ம் இட‌ம‌ல்ல‌. அத‌ற்கு ச‌ங்க‌ர‌ம‌ட‌ம் போன்ற‌ ம‌ட‌ங்க‌ளிலோ ச‌ம்ஸ்கிருத‌க் க‌ல்லூரியிலோ, காஞ்சி விஸ்வ‌ம‌ஹா வித்யால‌யாவிலோ ந‌ட‌க்கும் வித்வ‌த் ஸ‌த‌ஸ்க‌ளே முறையான‌ இட‌ங்க‌ள்.

    ம‌ற‌ந்தும் புற‌ம்தொழா மாந்தர்க‌ள் என்ப‌த‌ற்கு ஆதிசங்கரரின் மேற்கூறிய பஜகோவிந்தத்தையும் சுட்டிக்காட்டி என‌து குருநாத‌ர் சொன்ன‌ விள‌க்க‌ம் இதோ.

    (உன‌க்குள்ளே இருக்கும் நாராய‌ண‌னைத் தொழ) ம‌ற‌ந்துவிட்டு உன் புறம் (உள்ள நாராயணனைத்) தொழாதே.
    அதாவ‌து நாராய‌ண‌னை உள்ள‌த்துக்குள்ளே இருத்தாம‌ல் வெளியில் ம‌ட்டும் தொழுவ‌தாக‌ இருந்தால், ம‌ன‌த்தூமை வ‌ராது, பொய்யொழுக்கம் வந்துவிடும். இறையுண‌ர்வில் ல‌யிக்காது என்ப‌தே அது.

    தொண்டர்த‌ம் தூய உள்ள‌த்தேதான் இறைவ‌னை நிறைக்க‌ முடியுமே அல்லாது பிர‌மாண‌ங்க‌ளில் அல்ல‌ என்ப‌தைத்தான் நான் சொன்னேன். அவ‌ன் அருள் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவ‌ன் காட்டும் இந்த‌ப் பேருண்மை புரியும். அப்ப‌டிப்ப‌ட்ட‌ அருள் இல்லாத‌வ‌ர்க‌ளுக்கும் அவ்வ‌ருளைத்த‌ர‌ இறைவ‌னை இறைஞ்சுவோம்.

  100. //
    பிரஹலாதன் யாரயுமே வெறுக்கவில்லை. இரண்யகசிபு அவரைக் கொல்லக் கட்டளை இட்ட போது கூட இரண்ய கசிபுவை வெறுக்கவில்லை. விஷ்ணுவை தன்னுடைய முக்கிய எதிரி என்று இரண்யகசிபு கருதி வந்த நிலையிலும், அவருக்கு நல்ல புத்தி சொல்ல முயன்றாரே தவிர அவரை வெறுக்கவில்லை.
    //

    யாரும் யாரையும் வெறுக்க வில்லை - புறம் தோழமை என்றால் வெறுப்பு என்றால் அது உங்களது மன நிலை - அதை மாற்ற நான் முயலமாட்டேன்

    உங்களுக்கு புறன் தோழா மாந்தர் ஒருவரின் கதை சொல்கிறேன் - அவர் பிறந்து ஆயிரன் வருடம் ஆகிறது

    ஸ்ரீவத்சங்கர் என்றொருவர் இருந்தார் அவர் ராமானுஜரை காப்பதற்காக ராமனுஜரின் வேடமே போட்டுக்கொண்டு அரசனிடம் செல்ல வேண்டியதாயிற்று - அந்த அரசவையில் நாளுறான் என்றொருவர் இவரை போட்டுக்கொடுத்து விட்டார் - இது ராமானுஜர் அல்ல அவரது சிஷ்யர் ஸ்ரீவத்சங்கர் என்று அரசன் அவரது கண்ணையும், உடன் சென்ற ராமனுஜரின் வயதான குருவின் கண்களையும் குத்த சொல்கிறான் - பார்வை இழந்த குரு ஊர் திரும்பும்முன் வலி பொறுக்கமாட்டாமல் மரித்துவிடுகிறார்
    ஸ்ரீவத்சங்கர் வலி ஆறும் வரை ஒரு ஊரில் இருந்து விட்டு திருவரங்கம் திரும்புகிறார் - அங்கே கோவிலுக்கு சென்றால் அவரை அரசனின் ஆட்கள் இவர் ராமனுஜரின் சிஷ்யர் உள்ளே போக அனுமதி இல்லை என்கிறார்கள் - இன்னொரு காவலாளி இவர் ராமனுஜரி சிஷ்யாரக இருந்தாலும் உத்தமர் அதனால் உள்ளே அனுப்பலாம் என்கிறார் - இதை கேட்ட ஸ்ரீவத்சங்கர், எனக்கு ராமனுஜரின் சிஷ்யன், அடிமை என்ற நிலையை கெடுத்துவிட்டு அரங்கனின் சேவை முக்கியமில்லை என்று ஊரை விட்டே மதுரை அருகே சென்று விடுகிறார் - நண்பரே இந்த நிலை தான் புறம் தொழாமை

    கொஞ்ச காலம் காலம் கடக்கிறது - அரசன் புற்றுநோய் வந்து மாண்டு விடுகிறான் - அரசனின் தொல்லை இல்லாததால் ஸ்ரீவத்சங்கர் ஊரு திரும்புகிறார், ராமானுஜரும் கர்நாடகத்தில் இருந்து ஊரு திரும்புகிறார் - கண்களை இழந்த ஸ்ரீவத்சன்கரை பார்த்து ராமானுஜர் துடிதுடிக்கிறார் - கஞ்சிக்கு அவரை அழைத்து சென்று வரதராஜரிடம் கண்கள் தரவேண்டி துதி பண்ண சொல்கிறார் (இதை ராமானுஜரே ஏன் துதிக்கவில்லை என்று கேள்வி கேட்காதீர்கள் - அதற்கெல்லாம் விளக்கம் இருக்கிறது) - ஸ்ரீவத்சங்கர் காஞ்சி பெருமானிடம் எனக்கு என்ன கதி(மோட்சம்) நீ தருவிருக்கியோ அதே நாளுரானுக்கும் தா என்கிறார் - தன கண் போனதற்கு காரணமாக இருந்த நாளுரானுக்கு, ஆச்சர்யரின் மரணத்துக்கு காரணமாக இருந்த மோட்ஷம் வேண்டிய இவரின் மனோபாவம் தான் மறந்தும் புறம் தொழமை காரர்கள் கொண்டது

    வேங்கடநாதன் என்று ஒரு புறம் தொழாதவர் இருந்தார் - இவர் ஒரு மாபெரும் ஞானி [ஒரே நாள் இரவில் அரங்கனின் பாதங்களை பற்றி மட்டும் 1008 பாடல்களை பாடினவர் - பஞ்ச பட்டினியில் வாழ்ந்தார் - அவரிடம் ஒரு கவி வந்து ஏன் இப்படி இன்னல் படுகிறீர் - என்னை போல் அரசவைக்கு வாரும் சௌக்கியமாக இருக்கலாம் நிறைய சொத்து கிடைக்கும் என்றார் - அதற்க்கு இவர் தேவராஜனே எனது சொத்து போய்விடும் என்று கூறி வைராக்ய பஞ்சசத் இயற்றினார் - நண்பரே பட்டினியில் vaadiya pothum வேறேதுவும் வேண்டாம் தேவராஜனே பொது என்று சொன்ன இவரின் மனோ பாவமே புறம் தொழாதவர் கொண்டது

    Ramaanujar என்று ஒரு புறம் தொழாதவர் இருந்தார் - இவர் பதினெட்டு முறை சுமார் என்பது கிலோ மீட்டர் மேலும் கீழும் நடையாய் நடந்து ஒரு மாதம் தண்ணீர் மட்டுமே உண்டு உபவாசம் இருந்து ஒரு பெரும் பேரு அளிக்கும் மந்தர அர்த்தத்தை அவரது குருவிடம் இருந்து பெற்றார் - குருவோ இது பரம ரஹசியம் யாருக்காவது சொன்னால் உனக்கு நரகம் என்றார் - இவர் மந்தரார்ததை கேட்டார் - ஜாதி மதம் வித்யாசம் இல்லாமல் ஆசை உடயோருக்கேல்லாம் சொன்னார் - தனது சிஷ்யர்களிடமும் ஆசை உடயவருக்கேல்லாம் சொல்ல சொன்னார்
    அவரது குரு என்ன இப்படி செய்தீர் நரகம் தான் உமக்கு என்றார் - அதற்க்கு ராமானுஜர் என் ஒருவனுக்கு நரகம் என்றால் பரவலில்லை இத்தனை பேர் நற்கதி அடைவார்களே என்றார் - நண்பரே எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கு நரகம் செல்ல துணிந்த இவரின் மனோ பாவமே புறம் தொழாதோர் கொண்டது

    இந்த புறம் தொழாதவர் தான் சமூக சீர்திருத்தம் செய்து எல்லோரையும் கோவிலுக்குள் அனுமதித்தார்

    ஒரு முறை இவரது சிஷ்யனான முதலி ஆண்டான் என்பர் ராமனுஜர் தீர்த்தம் கொண்ட பின் நான் தான் தீர்த்தம் சாப்பிடுவேன் என்று (உடனே இவருக்கு என்ன இப்படி ஒரு கருத்து என்று பாயவேண்டாம்) ஊர் மக்களிடம் வாதிட்டுக்கொண்டிருண்டார் - ஊர் மக்களோ [எல்லா ஜாதியினரும்] ராமானுஜர் முதல் தீர்த்தம் சாப்பிடலாம் இரண்டாம் தீர்த்தம் எங்களுக்கே என்றனர் - இதை பார்த்த ராமானுஜர் என்ற யதிராஜர் என்ற உடையவர் என்ற எம்பெருமானார் ஊர் மக்களின் பின் சென்று நின்றார் ஊர் மக்களுக்கு அப்புறம் தீர்த்தம் கொண்டார் அவர் பின்னே முதலியாண்டான் நின்று தீர்த்தம் கொண்டார் - இப்படி எதிராஜனாக இருந்தும் உயர்வு தாழ்வு பாராமல் வெறுப்பு இல்லாமல் நடந்து கொண்ட இவரே புறன் தொழா மாந்தரின் பாவம் எப்படி இருக்கும் என்பதற்கு சான்று

    மீரா புறம் தொழாதவர் - செய்யாத தவறுக்காக உயிரை நீத்தவர் -

    எனது பிரதம ஆச்சர்யரும் புறம் தொழாதவர் - அவர் எழுபத்தி அயிந்து வயதிலும் தினமும் எல்லா ஜாதி மக்களையும் திரட்டி நல்ல போதனைகள் சொல்லிவருகிறார், ஓர் மிக சிறியவன் கருத்து சொன்னாலும் பாராட்டுவர் கேட்டுக்கொள்வார் - எல்லா கடவுளை வணங்குவோருக்கும் அன்ன தானம் உண்டு, எல்லோரிடமும் மரியாதை undu ( குறிப்பு - யாரையும் மதம் மாற்றவில்லை )

    ப்ரஹள்ளதன், துருவன் அக்ரூரர், விதுரர், பீஷ்மர், வியாசர், சுகர் இப்படி புறம் தொழாத மஆகாங்கள் எத்தனையோ -

    ப்ரஹள்ளதன், துருவன்,நாயன்மார்கள், ஆதினங்கள், ஆழ்வார்கள், ஆசாரியர்கள் புறம் தொழாதவர் தான் அனால் அவர்கள் நல்லவர்தானே என்று சுட்டிக்காட்டினால் ஏதேதோ எழுதுகிறீர்கள் - இந்த விஷயம் கூடவா புரியவில்லை

    எந்த ஒரு ஆழ கருத்துமே இல்லாமல் ஒருவர் திரும்ப திரும்ப காடு மிராண்டி காட்டு மிராண்டி என்று சொன்னால் என்னார் அர்த்தம் உலகோர் தான் சொல்ல வேண்டும்

    இப்படி இத்தனை பேரையும் நீங்கள் காட்டு மிராண்டி கூட்டத்தில் சேர்த்தாயிற்று - கோவில் கோபுரம் நான் சொன்னதை ஒரு கீழ்மையாக அர்த்தம் செய்தாயிற்று

    பெண்களை தெய்வமாகவும் பார்ப்பவர் உண்டு, கீழ்தனமாகவும் பார்ப்பவர் உண்டு

    எந்த ஒரு விடயத்தையும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் - காமாலை காரனுக்கு தான் எல்லாம் மஞ்சளாக தெரியும்

    இப்படி அன்றோர்களையும், ஆச்சர்யர்களையும் இந்த விவாதத்தின் வாயிலாக மேலும் மேலும் உங்கள் வாயிலாக பழி சொல்லுக்கு ஆளாக்க இனியும் எனக்கு மனம் இல்லை - இத்துடன் முடித்துக்கொள்கிறேன்

    உங்களுக்கு ஆசார்யர் அனுகிரகம் கிடைக்கட்டுமாக

  101. திரு சாரங் அவர்களே,

    நானும், “உண்மையைச் சொன்னால் யாராவது கேட்பார்களா? ஒரு சிலராவது படித்து மகிழ்வார்களா? பெரும்பாலும் பரந்த மனப்பான்மையும் ஆராய்ச்சி-அறிவியல் நோக்கமும் கொண்ட இன்றைய இளைஞர்கள் வாசிக்கும் இணைய தளம் ஒன்றில் கண்டிப்பாக விஷயங்களை நன்கு தர்க்க ரீதியுடன் பிரமானங்களுடன் காட்டினால் படித்து மகிழ்வார்கள்; பலர் பயன் பெறுவார்கள்” - என்று மனப்பால் குடித்திருந்தேன். நானும் முடிவு கட்டி விட்டேன் - இங்கு எவருக்கும் இவ்விஷயங்களில் ஆர்வம் இல்லை என்று. “சமரசம், சமரசம்” என்னும் அர்த்தமில்லாத குழந்தைத்தனம் தான் இங்கு உள்ளது.

    எனக்குத் தெரிந்த ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட http://bhagavatas.blogspot.com என்ற தளத்திற்கு இனி தொண்டு புரிய அவகாசம் தேவை. ஆகையால், இனி இத்தளத்தை வாசிப்பதையோ, இங்கு மறுமொழி இடுவதையோ முற்றிலும் நிறுத்தி விடுகிறேன். இதனால் நேரம் தான் வீண் ஆகிறது.

    இருப்பினும், இங்குள்ள சஹோதரர்கள் அனைவருக்கும் நல்ல ஞானம் மலர வேண்டும், ஆச்சாரிய சம்பந்தம் ஏற்பட வேண்டும், இவர்களுள் எவரையும் கைவிட வேண்டாம் என்று மட்டும் பகவானைப் பிரார்த்திக்கிறேன்.

    என் மறுமொழிகளைப் பொறுத்ததற்கும் பதிப்பிட்டதற்கும் இத்தளத்தின் உரிமையாளர்களுக்கு நன்றி. என்னுடைய மறுமொழிகளைப் படித்த அனைவருக்கும் நன்றி. விடைபெறுகிறேன்.

    கந்தர்வன்.

  102. I am sorry Mr. Saarang. We cant categorise பிரஹலாதன், துருவன் & மார்க்கண்டேயன் in புறம் தொழா category. Ofcourse பிரஹலாதன் & துருவன் are devotees of Vishnu, that does not mean that they can be put into that புறம் தொழா category.

    Let me repeat this again, may be you can get out of illussion.

    இப்படி நடந்தது என்று வைத்துக் கொள்வோம் :

    இரண்யணைக் கொல்ல - உடல் பகுதி, கீழே இடுப்பு வரையிலும் சிம்மமாகவும், மேல் உடல் மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்த சிவன் உருவத்தில் - இரண்யணைக் கொல்ல வந்திருந்தால் பிரஹலாதன் அந்த நரசிம்ம மூர்த்தியை வணங்கியிருக்க மாட்டாரா?

    மறந்தும் புறம் தொழா மாட்டேன், நீ வந்த வேலையை முடித்து வீட்டுப் போ என்றும், நான் உன்னைத் தொழா வேண்டும் என்றால் இந்த சந்திர சேகர கங்காதர உருவத்தை விட்டு விட்டு வா எனவும் கண்டிசன் போட்டு இருப்பாரா?

    நண்பர்களே, முதலில் பிரஹலாதன், துருவன், மார்க்கண்டேயன் ஆகியவர்களின் மாசு மறுவற்ற அன்பு உள்ளத்தை, வெள்ளை உள்ளத்தைப் புரிந்து கொள்ளுங்கள்.

    அப்படி உங்களால் புரிந்து கொள்ளக கூடுமானால், உங்களின் வெறுப்புக் கருத்துகளை தாங்கிப் பிடிக்க அவர்களை துணைக்கு அழைக்க முடியாது என்பதையும் புரிந்து கொள்வீர்கள்.

  103. Dear Mr. Sarrang,

    //கோவில் கோபுரம் நான் சொன்னதை ஒரு கீழ்மையாக அர்த்தம் செய்தாயிற்று //

    Ok, Mr. Sarang, Let the readers read what you have written about your reaction on seeing the Vimaanaas of the Tanjore Temple and other similar temples , let them praise you…if they want to praise you!

    // இன்னொரு தெய்வ‌த்தின் கோவிலின் கோபுர‌ம் கூட‌ க‌ண்ணில் ப‌ட‌க் கூடாது - என்ற‌ அளவுக்கு நிலையை உருவாக்கிய‌து இந்த‌ “ம‌ற‌ந்தும்‌ புற‌ம் தொழாமை” க‌ருத்து தானெ?
    //

    இது தான் உங்களுக்கு விஷயம் சரியாக புரியவில்லை என்பதை தெளிவாக்குகிறது - இப்படி நினைப்பவர் யாரும் இன்னொரு கோபுரத்தை இடிக்க வில்லை - இப்படி சொன்னது ( பேரா) ஆசை கூடாது, ஸ்திரமான மனது வேண்டும் என்பதற்காகவே - இதற்க்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் - திவச காலத்தில், மூன்று அதிகாரிகளை [பாருங்கள் நான் எவ்வளவு சமரசமாக பேச நேர்கிறது என்று] அழைத்து உணவு உன்ன வைப்போம் - அவர்கள் உண்ணுவதை பார்க்காதே என்று சொல்லுவார்கள் - ஏன் என்றால் ஐயோ இவர் இவ்வளவு குறைவாக் உன்கிறாரே, அவர் இவ்வளோ பச்சடி சாபிடறாரே என்று நமது ஸ்திரமில்லாத மனதிற்கு தவறியும் தோன்ற