முந்தைய கட்டுரை: அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
(தொடர்ச்சி…)
வேதம் கூறும் பிரபஞ்சவியலில் ஒன்றுக்கு மேல் ஒன்றாகவும், ஒன்றையடுத்து ஒன்றாகவும் முடிவில்லாமல் (infinity) பலப்பல உலகங்கள் (Universes) வட்டப்பாதையில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன என்று பார்த்தோம். இவற்றில் எப்பொழுதுமே கால் பங்கு, தோற்றம் கொண்டவையாகவும் (manifest) மீதி முக்கால் பங்கு, தோற்றம் இல்லா நிலையிலும் (unmanifest) இருப்பதை நடராஜரின் தாண்டவம் எப்படிக் காட்டுகிறது என்றும் பார்த்தோம்.
இந்த அமைப்பில் மும்மூர்த்திகளும் ஓய்வு ஒழிவில்லாது இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இவை அனைத்தையும் தாங்கியும், ஊடுருவியும் இருக்கும் முழு முதல் பரப் பிரம்மம் நாராயணன் எனப்படுகிறான் என்று பிரமாண நூல்கள் கூறுகின்றன என்றும் பார்த்தோம். இந்த நூல்கள் உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்பவை என்று அனைத்து ஆசார்ய புருஷர்களும் கூறியுள்ளனர். இவை constitution of India போன்றவை. இவற்றை ஆதாரமாகக் கொண்டுதான் இந்து மதத்தின் எல்லா வழிகளும், வழக்கங்களும் எழுந்துள்ளன.
கர்ம வினையால் பிறந்து, இறந்து, மீண்டும் மீண்டும் உழன்று கொண்டிருக்கும் உயிர்கள், இந்தப் பிரபஞ்சச் சக்கரத்தினின்று விடுதலை பெறுதலை ‘முக்தி’ என்கிறோம். விடுதலை என்பதால் அந்த நிலைக்கு வீடு என்னும் பெயர் ஏற்பட்டது. வீடு பேறு, முக்தி, மோக்ஷம் இவை எல்லாமே விடுதலை என்னும் பொருள் கொண்டவை.
முக்தி பெற சிவனை வணங்கினால் என்ன, விஷ்ணுவை வணங்கினால் என்ன, இதில் என்ன பேதம் இருக்கிறது என்று எண்ணலாம். அப்படி அல்ல, இந்தக் கடவுளை வணங்கினால்தான் முக்தி, அந்தக் கடவுளை வணங்கினால் முக்தி கிடைக்காது என்றும் எண்ணலாம். இதன் விளைவாக எந்தக் கடவுள் பெரியவர் என்ற சர்ச்சையும் பல காலம் நடந்து வந்திருக்கிறது. பல காலம் என்றேன், அப்படி என்றால் பல காலத்துக்கு முன், அந்த நாளில் இந்தச் சர்ச்சை இல்லையா என்றால், இல்லை என்று சொல்லலாம். காரணம், இவை குறித்த கருத்துகளை அந்த நாளில் தெளிவாக அறிந்திருந்தனர். அதற்கும் காரணம், பிரமாண நூல்கள் சொல்லும் கருத்துகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தனர்.
எனவே பிரமாண நூல்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.
இந்த மூன்று நூல்களுள், பிரம்ம சூத்திரம் முழுவதுமே, பிறக்கும் உயிர்களின் நிலை, பரம் பொருள் என்னும் பரப் பிரம்மத்தின் நிலை, அந்தப் பரம் பொருளை அடையும் விதம் ஆகியவை பற்றி ரிஷிகள் கூறியுள்ள விஷயங்களை சூத்திரங்களாகக் கொண்டுள்ளது. அந்த நாளிலும் எழுந்துள்ள பல எதிர் விவாதங்களுக்கு பதில் அளிக்கும் விதமாகவும் அவை உள்ளன.
அவை கூறுவது என்னவென்றால், பரப் பிரம்மனையே தியானித்து வந்தால், அந்த பிரம்ம நிலையை ஒருவன் அடைவான். பிரம்மம் என்பதற்கு எளிமையான விளக்கம் ‘சத்யம், ஞானம் அனந்தம் (எல்லை இல்லாதவன்)’ என்பதே. இந்த மூன்று குணங்களைக் கொண்டவனாக இறைவனை எந்நேரமும் நினைத்து வந்தால், முக்தி கிடைக்கும்.
இவை எல்லாம் சொல்வதற்கு நன்றாக இருக்கும். பரப் பிரம்மனது ரூபம் என்ன? நான் சிவனை வாங்குகிறேன். அவனை பிரம்மமாக தியானித்தால், எனக்கு முக்தி கிடைக்காதா? அல்லது ராமனை வணங்கும் நான் அவனைப் பிரம்மமாக நினைத்து தியானம் செய்தால் முக்தி கிடைக்காதா? நாராயணனை மட்டுமே தியானம் செய்தால்தான் முக்தி கிடைக்குமா? அப்படி என்றால், சிவனடியார்கள் பலரும் முக்தி அடைந்ததாக நூல்கள் கூறியுள்ளனவே, அவை பொய் என்று ஆகாதா? மேலும் எந்த ஒரு தெய்வ உருவையும் அல்லாது ஞான வடிவாகப் பல சித்தர்கள் தியானித்து பரம நிலை அடைந்துள்ளனரே, அது எப்படி? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நேரிடையான பதில் ஜோதிடத்தில் உள்ளது.
ஜோதிடம் காட்டும் முக்தி
ஜோதிடமா, அது புரட்டு, என்று சொல்லும் முன், இதைத் தெரிந்து கொள்ளவேண்டும். ஜோதிடம் என்றால் ‘ஒளியியல்’ (Science of Light) – ஜ்யோதி-இஷா என்று அர்த்தம். அந்தப் பரம் பொருள் கோடி சூர்ய ஒளி உடையவன். விராட புருஷனாக பிரபஞ்சத்தில் வியாபித்துள்ள அவன் உருவம் நட்சத்திரங்களின் உருவம் – “நட்சத்த்ராணி ரூபம்’ என்று புருஷ சூக்தம் சொல்கிறது. அதாவது அந்தப் பரம புருஷன் நக்ஷத்திர ரூபத்தில் உள்ளான்.
‘நக்ஷ்’ என்னும் வடமொழி வேர்ச் சொல்லிலிருந்து நக்ஷத்ரம் என்னும் சொல் உண்டானது. நக்ஷ் என்றால் அடைதல் என்று பொருள். (to attain) எதை அடைய வேண்டுமோ அது நக்ஷத்ரம். மேலும் இது ‘ந- க்ஷீயதே’ – குறையாதது என்றும் பொருள்படும். குறையாததும், குறைவில்லாததும் அடையப்பட வேண்டியதும் பிரம்மம், எனவே நக்ஷத்ரம் அவன் ரூபமாகிறது.
அவனிலிருந்துதான் நாம் வந்தோம், அவனில்தான் முடிவில் ஐக்கியமாவோம் என்னும்படி, கண்ணுக்குத் தெரியும் நக்ஷத்திரமான சூரியனிலிருந்துதான் நம் பூமி வந்தது. முடிவில் சூரியனைத்தான் அது அடையப் போகிறது. ஒவ்வொரு நக்ஷத்திரமும் அது வந்த ஜ்யோதியில்தான் கடைசியில் ஐக்கியமாகப் போகின்றன.
நக்ஷத்ரங்களின் ஒளி இயல்தான் ஜ்யோதிஷம் – எவ்வாறு என்றால், சூரியன் காலை இதமாகக் காய்கிறான். மதியம் உஷ்ணமாகக் காய்கிறான். பின்மதியம், அவன் உக்ரம் தாங்க முடிவதில்லை. ஆனால் மாலை மிதமாகி, இரவில் நம் இயக்கத்தையே குறைத்து விடுகிறான். மேல்சொன்ன ஒவ்வொரு பொழுதிலும், கோடிக்கணக்கான விஷயங்கள் நடக்கின்றன. தாவரங்கள் உணவு உண்டாக்குவதிலிருந்து, கிருமிகள் அழிவதும், நீர் மேகம் உண்டாவதும், என்று பல செயல்களுக்கு அந்தச் சூரியன் காரணமாகிறான். ஆனால் உண்மையில் நடப்பது என்ன?
அவனா செய்கிறான்? அவன் எங்கோ நிலையாக இருக்கிறான். நாம்தான் – இந்த பூமிதான் சுழன்று சுழன்று, அவனிடமிருந்து வேறு வேறான பலனை, வேறு வேறான நிலையில், வேறு வேறான நேரத்தில் பெற்றுக் கொள்கிறோம். சூரியன் இருந்த இடத்தை விட்டு அசைவதில்லை. தனியாக ஒன்றும் செய்வதில்லை. அதே போல்தான் இந்த zodiac எனப்படும் வான் வெளி மண்டலத்தை நாம்தான் வெவ்வேறு நேர- கால- நிலையிலிருந்து பார்த்து, சூரியனிடமிருந்து வெவ்வேறான கிரணங்களை அனுபவித்தது போல, நம் நிலைக்கு ஏற்ப, வெவ்வேறான பலன்களை அனுபவிக்கிறோம். அவை என்னென்ன என்று சொல்வதுதான் ஒளியியல் எனப்படும் ஜ்யோதி- இஷம்.
இதைப் பற்றி முதன் முதலில் கூறியவர் நான்முகப் பிரமன். அவர் உபதேசித்த கருத்துகள் ‘பிரம்ம ரிஷி சம்வாதம்’ என்று சமஸ்க்ருதத்தில் இருக்கின்றது. சமீபத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு. ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் பெயரில் தற்சமயம் கிடைக்கிறது. அவரையும் சேர்த்து, 18 மகரிஷிகள் ‘ஜோதிட ப்ரவர்தகர்கள்’, (ஜோதிட சாத்திரத்தைத் தோற்றுவித்தவர்கள்) என்று சொல்லப்படுகிறார்கள். இவர்கள் தத்தமது பெயரால் உருவாக்கிய சமிஹிதைகளில் சொன்ன கருத்துகளைப் பல புராணங்களிலும் காணலாம்.
முந்தைய கட்டுரையில் சொன்னதுபோல பல கடவுளர்களும் தத்தமக்கென்று கொண்டுள்ள பணிகளை (jurisdiction or portfolio) தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள ஜோதிடம் உதவுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தையும், அதை இயக்கிக் கொண்டிருக்கும் கடவுளர்களைப் பற்றியும் சொல்வதாலும், ஜோதிடம் என்பது ‘வேத புருஷனின் கண்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஜோதிடத்தின் பயனைப் பற்றிய இந்த முன்னுரையுடன், நான்முகப் பிரமன் கூறும் முக்தி பற்றிய கருத்து என்ன என்று பார்ப்போம். அவர் தந்துள்ள ‘பிரம்ம ரிஷி வாக்கியம்’ என்னும் உபதேசத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால், 73 யோகங்களைச் சொல்லி அவற்றுக்கான முன் பிறவிக் காரணத்தையும் கூறுகிறார். என்ன செயல் செய்தால் மறு பிறவியில் என்ன பயன் கிட்டும் என்று இவை தெளிவாக்குகின்றன. மும்மூர்த்திகள், அவர்தம் தேவியர் ஆகியோரை வணங்குவதால் என்ன பயன் என்றும் பிரம்மா சொல்கிறார்.
அவற்றுள் மும்மூர்த்தி பற்றிய குறிப்புகள், முக்தி பற்றி விவரிக்கின்றன. அவரது கூற்றுப்படி மும்மூர்த்திகளுமே முக்தியைத் தரக் கூடியவர்கள்.
மும்மூர்த்திகளும் முக்திக்கு சாதனம்
சீகண்ட யோகம்
ஒருவன் சிவனடியார்களைத் துதித்து, அவர்களுக்கு வேண்டிய அனைத்து உபசாரங்களையும் செய்து வந்தால், மறு பிறவியில், சீகண்ட யோகத்தில் பிறந்து, ருத்ராக்ஷம் தரித்து, திருநீறு பூசி, அனவரதமும் சிவத் தியானத்தைச் செய்து, சைவ சித்தாந்தப்படி விரதங்களை அனுஷ்டித்து, சாதுக்களை உபசரித்து, சிவனையே முழுமுதல் கடவுளாகக் கொண்டு, மக்களால் மகாத்மா என்று துதிக்கப்பட்டு, மறு ஜன்மம் இல்லாத சிவபதம் அடைவான்.
லக்னாதிபதி, சூரியன், சந்திரன் ஆகியோர் கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது சீகண்ட யோகம் ஆகும்.
ஸ்ரீநாத யோகம்
ஒருவன் நாராயணனையே முழு முதல் கடவுளாகக் கொண்டு, வைணவ அடியார்களை நன்கு உபசரித்து, அவர்களுக்குத் தேவையான சேவைகளைச் செய்து வந்தால் மறு பிறவியில் ஸ்ரீ நாத யோகத்தில் பிறந்து, நாராயணின் திருச் சின்னங்களைத் தரித்து, நாராயணன் ஒருவனையே தியானித்து, நல்ல குடும்பம், மனைவி, மக்கள், செல்வம் பெற்று அனைவராலும் கொண்டாடப் பட்டு, மறு ஜன்மம் இல்லாத பரமபதம் அடைவான்.
களத்ரகாரகனான சுக்கிரனும், பாகியாதிபதியான 9 -ஆம் வீட்டு அதிபதியும், புத்திர காரனான புதனும் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது ஸ்ரீ நாத யோகம் ஆகும்.
விருஞ்சி யோகம்
ஒருவன் வேதம் கற்ற பிராமணர்களைப் போஷித்து, வைதீக காரியங்களுக்கு உறுதுணையாக இருந்தால், மறு பிறவியில் விருஞ்சி யோகத்தில் பிறந்து, பிரம்ம ஞானமும், அறிவும் பெற்று, நல்ல குடும்பம், மனைவி, குழந்தைகளைப் பெற்று, சிறந்த சீடர்களைப் பெற்று, ச்ரேஷ்டன் என்று பெயர் பெற்று, பிரம்ம தேஜசுடன் ஜொலித்து, மறு ஜன்மம் இல்லாத பிரம்ம லோகம் அடைவான்.
குரு, சனி, லக்னாதிபதி ஆகியோர் லக்கினத்திற்கு கேந்திர, திரி கோணங்களில் ஆட்சி, உச்சம், நடப்பாக இருந்தால் அது விருஞ்சி யோகம் ஆகும்.
இந்த மூன்று யோகங்களும், மூன்று மூர்த்திகளைப் பரப் பிரம்மமாக வழிபடுவதால், அவ்வாறு வழிபட்டவர் பிறவாமை என்னும் முக்தி நிலையை அடைவர் என்று காட்டுகின்றன. இதைச் சொன்னவர் நான்முகப் பிரமனே.மேலும் முக்திக்கு சாதனமாக ஒருவன் செய்ய வேண்டியதையும் இந்த யோகங்கள் காட்டுகின்றன.
சிவன் – விஷ்ணுவில் யார் பெரியவர்?
இந்த யோகங்கள் காட்டும் மற்றொரு விளக்கம் யார் பெரியவர் என்ற பேதம் சிவன், விஷ்ணுவுக்கு இருக்கிறதா என்பது. அது எப்படி என்று பார்ப்போம்.
எந்தக் கடவுளைப் பரப் பிரம்மம் என்று வணங்குகிறோமோ, அந்தக் கடவுள் மீதே உடல், பொருள், ஆவி என்று அனைத்து செயல், எண்ணங்களைச் செலுத்த வேண்டும். அப்படி, இப்படி என்று கவனச் சிதறல் இல்லாமல், முழு முனைப்புடன், இரவு பகலாக தியானம் இருக்க வேண்டும். எனவே ஒரு கடவுளை மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட ஒருவன், வேறு கடவுள் என்று கவனம் சிதறாமல் இருக்க அந்தந்தக் கடவுளே முக்கியம், அவனே உயர்ந்தவன் என்றெல்லாம் சொல்லி கவனம் கொள்ள வைத்துக் கொள்ளும் பொருட்டு பெரியோர் கூறியிருக்கின்றனர்.
சிவனை வணங்குபவர்கள், அவனையே ஒரே கடவுள் என்று கவனம் செலுத்தி பரம்பொருளாக வணங்குங்கள் என்று ஊக்குவித்திருக்கிரார்கள். அதேபோல் விஷ்ணுவே ஒரே கடவுள் என்று அவனை வணங்குபவர்கள், வேறு கடவுளர் என்று கவனம் சிதறாமல் இருக்க வேண்டும். நடுவில் இந்தக் கடவுளை வேண்டிக்கொண்டேன், அந்தக் கடவுளை வேண்டிக் கொண்டேன் என்றால், அந்தந்தக் கடவுளர் தரும் நன்மைகளில் நாட்டம் வருகிறது என்றும் அல்லது, பரப் பிரம்மனையே அடைய வேண்டும் என்ற சிந்தையிலிருந்து விலகி, தோன்றும் உலகிலுள்ள பிற பயன்களை மனம் நாடுகிறது என்றும் ஆகி, தீவீர வழிபாட்டை நீர்க்கச் செய்து விடும். இந்தக் கோட்பாடுகள், முக்தி மார்க்கத்தில் செல்பவர்களுக்குத் தேவை.
முக்தியில் நாட்டம் இல்லாதவர்கள் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றபடி, எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த பலன்களுக்கு தேவதையோ, அந்தந்த தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம். அல்லது மனம் விரும்பும் தெய்வங்களை வணங்கிக் கொள்ளலாம்.
இந்த விஷயத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ‘மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்’. அவர்கள் தீவீர முக்தி சிந்தனையைக் கொள்கையாகக் கொள்கிறவர்கள். இன்றைக்கு அவர்கள் எல்லோருமே அப்படி என்று சொல்ல முடியாது, ஆயினும், முக்தி மார்க்கத்தை நாடுபவர்கள், இன்னும் இருக்கிறார்கள். ‘நாராயணனே நமக்கு’ என்று தீவீர நாட்டம் கொள்வதால், அவர்கள் கொள்கை தவறல்ல. அவர்கள் பிற கோயில்களுக்குப் போகாததால், அவர்களுக்கு துவேஷம் என்று சொல்வது சரியல்ல. அதேபோல், ‘சர்வம் சிவ மயம்’ என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி பெற விரும்புகிறானோ, அவன் பிற தெய்வங்களை நாடக் கூடாது.
அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே? அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும்? அப்படி அவை குறைந்தவை என்று சொன்னால், இவன் முழு முதல் என்று வணங்கும் அந்தத் தெய்வமும் குறைந்தது என்றாகுமே?
இதைச் சுட்டிக் காட்டும் வண்ணம் கீதையில் கண்ணன் கூறுகிறான். (7-16).
நான்கு விதமானவர்கள் இறைவனை வழிபடுகின்றனர்.
- செல்வத்தை வேண்டி வழிபடுகின்றனர்.
- துன்பத்திலிருந்து விடுபடவேண்டி வழிபடுகின்றனர்.
- வேறு சிலர் இந்த இறைவன் எப்படிப்பட்டவன் என்று ஆச்சர்யப்பட்டு அவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டு வழிபடுகின்றனர். (அப்படிப்பட்டவரை ஜின்ஞாசு என்பர்.)
- மெய்ஞானம் பெற்ற ஞானியும் வழிபடுகிறான்.
இப்படிச் சொல்லிவிட்டு, கண்ணன் சொல்கிறான், இவர்கள் எல்லாருமே சிறந்தவர்கள் என்றாலும், இவர்களுள் ஞானிதான் எனக்குப் பிரியமானவன். ஏனென்றால், என்னுடைய உண்மையான சொரூபம் இவனுக்குத்தான் தெரியும். “வாசுதேவம் சர்வம் இதி’ – எல்லாவற்றுக்குள்ளும் வசிப்பவன் வாசுதேவன் என்னும் நானே என்று என் சுய ரூபத்தை இவன் அறிவான், அதனால் இவனும் என் ரூபத்தில் இருக்கிறான் என்று கண்ணன் சொல்லும் கீதை நமக்குப் பிரமாண நூல்.
எந்த ரூபத்தை ஒருவன் முக்தி மார்க்கத்தில் வணங்கினாலும், அந்த ரூபத்தில் உள்ள பரம் பொருள்தான் அனைத்து தெய்வங்களிலும், அண்ட சராசரங்களிலும் உள்ளான் என்று ஆத்ம பூர்வமாக உணர்வதே சரியான மார்க்கம். இந்த மார்க்கத்தில் ஒருவன் நிலைத்திருக்கும்போது, கவனச் சிதறல் கூடாது என்ற நோக்கத்தில் பெரியோர் சொன்னவை, சமயச் சண்டைகளுக்கு வழிகோலி விட்டன.
முக்தியில் நாட்டமுள்ளவர்களானாலும் சரி, அப்படிப்பட்ட நாட்டமில்லாதர்களும் சரி, பிற தெய்வங்களைக் குறைத்துச் சொல்லுதல் என்பது – ஜோதிட பாஷையில் சொல்வதானால் – பாவ கர்மாவை உண்டு பண்ணும். அப்படிப்பட்ட கதைகளைப் பற்றிப் பேச ஒருவர் விரும்பினால், கவனமாகக் கையாள வேண்டும். அதனால் வரக்கூடிய பிற தெய்வ நிந்தனையும், அதனால் புண்படும் பக்தனின் அவதியும், கர்மாவை உண்டு பண்ணக்கூடியவை. அன்றைக்கு அவர்கள் சொல்லவில்லையா என்றால், முக்தி மார்க்கத்திற்குச் சொன்னார்கள். முக்தியில் நிலை பெற்றவன் அப்படிப் பேசலாமே என்றால், உண்மையிலேயே முக்தியில் நிலைபெற்றவன், பரம் பொருளின் சொரூபத்தை உணர்ந்திருப்பான். அவன் அப்படிப் பேச மாட்டான்.
நான்முகப் பிரமன் தரும் முக்தி
முக்தி மார்க்கத்திற்கு சிவன், விஷ்ணு ஆகிய இரண்டு கடவுளர்களையும் எவ்வாறு வழிபட வேண்டும் என்று மேற்சொன்ன யோகங்கள் காட்டுகின்றன. ஆனால் நான்முகப் பிரமன் விஷயம் அப்படிச் சொல்லப்படவில்லை. இருப்பதிலேயே, நான்முகன் பக்திதான் எளிதானது. வேதத்தைப் போற்றுதலும், வேதம் ஓதுதலை வளர்த்தலும், வேதம் ஒதுவோரை நன்முறையில் காத்தலும், அவர்களுக்குச் சேவை புரிதலும் பிரமனுக்குச் செய்யும் பக்தி என்று சொல்லப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்பத்திலும் வேதத்தை நினைவுக்குக் கொண்டு வந்து உலகைப் படைத்து, வேதத்தை நிலை நிறுத்துபவன், நான்முகப் பிரமனாக இருக்கவே, வேதத்தைப் போஷித்தலே முக்திக்கு வழி என்றாகிறது. நான்முகப் பிரமனே வேத உருக் கொண்டவன் என்றும் ஆகிறது. அதனாலும் அவனுக்கென்று தனிக் கோயில் இல்லாமல் இருக்கலாம். அதனாலும், ஒவ்வொரு உற்சவத்திலும், முதலில் வேத கோஷம் செய்துகொண்டு கற்றோர் செல்லவேண்டும். அவர்களைப் பின்தொடர்ந்து தான் மற்றோர் செல்வர்.
வேதத்திற்குத் தரும் முதல் மரியாதை, படைத்த பிரமனுக்குச் செய்யும் மரியாதை. அதுவே அவனை வணங்குதலுக்கு ஒப்பாகும். இடை விடாது அதைச் செய்துக் கொண்டு, வேதம் தழைக்க உதவுபவன், நான்முகப் பிரமனது அருளால் முக்தி அடைவான். இதில் தமிழன், வேறு நாட்டவன் என்றெல்லாம் இல்லை. எவனொருவன் வேதம் தழைக்க உதவுகிறானோ அவன் முக்தி அடைவான். வேதத்தையும், அது பரப்ப உதவும் சமஸ்க்ருதத்தையும் வெறுக்கும் திராவிடத் தலைவர்கள் எப்பேர்பட்ட அறிவிலிகள் என்று இதிலிருந்து தெரிகிறது. இவ்வளவு எளிய வழியை அழித்துவிட்டார்களே!
தோன்றும் பிரபஞ்சத்தில் முக்தன் நிலை
மும்மூர்த்திகள் மூலமும் முக்தி கிடைக்கும் என்ற கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் பல முக்தர்கள், சித்தர்கள் வரலாறுகள் இருக்கின்றன.
முக்தி பெற்ற இவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
இதைப் பற்றி ஜைமினி, பாதராயணர் போன்றோர் விவாதித்த கருத்துகள் பிரம்ம சூத்திரங்களாக உள்ளன. மறு பிறவி என்னும் கர்மப் பிணைப்பிலிருந்து இந்த முக்தர்கள் விடுபட்டு விடுகிறார்கள். ஆனால் நான்முகப் பிரமனின் 100 வருட ஆயுளாக இருக்கும் இந்தத் தோன்றும் பிரபஞ்சத்தின் கால் பகுதியைவிட்டு இவர்களால் வெளியேற முடியாது என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. நான்முகப் பிரமன் இருக்கும் பிரம்ம லோகத்தில் இவர்கள் நிலை பெற்று, அந்த நான்முகனின் ஆயுள் முடியும்போது அவனுடன், இந்தச் சக்கரத்தை விட்டு வெளியேறி, பிரபஞ்சத்தையே தன் கருவில் தாங்கும் பரம் பொருள் என்னும் அந்தப் பிரம்மனிடம் (Supreme Brahman) லயிப்பர்.
இந்தக் கால் பகுதி பிரபஞ்சத்தில் முக்தி அடைந்த உயிர்கள், எங்கு வேண்டுமானாலும் சஞ்சரிக்கலாம், எதை நினைத்தாலும் சாதிக்கலாம். படைத்தல் தொழில் தவிர, பரம் பொருள் செய்யும் எந்தச் செயலையும் செய்யக்கூடிய நிலையையும் ஆற்றலையும் அவர்கள் பெறுகிறார்கள்.
இதோ வேதம் காட்டும் பிரபஞ்சத்தைப்பாருங்கள்…

நாம் பயணிக்கும் பிரபஞ்சம் இது
முக்தர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றால் என்ன அர்த்தம்? பல்வேறு காலக் கட்டங்களில் தோன்றிய அகத்தியரால் எப்படி அப்படித் தோன்ற முடிந்தது என்று இது காட்டுகிறது அல்லவா? அவர் என்றோ முக்தி அல்லது சித்தி அடைந்திருப்பார். வெவ்வேறு யுகங்களில் தேவை ஏற்படும்போது, அப்பொழுதே அப்படியே அவரால் தோன்ற முடியும். கருவில் பிறந்து, வளர்ந்து வர வேண்டிய அவசியமில்லை. எங்கெங்கு தேவையோ, அங்கங்கு தோன்றி, செய்ய வந்த செயலைச் செய்திருப்பார். ஆனால் கர்மப் பிணைப்பு அவருக்கு ஏற்படாது. அதுதான் இந்த முக்தி தரும் விசேஷச் சலுகை.
இறைவன் திடீரென்று தோன்றி ஆட்கொண்டான் என்றெல்லாம் புராணங்கள் சொல்கின்றனவே, அவை கட்டுக்கதை அல்ல என்றும் இது காட்டுகிறது. முக்தர்களாலேயே, இஷ்டப்படி வந்து போக முடியும் என்றால், இறைவன் வருவதில் என்ன அதிசயம்? அது எப்படி கட்டுக் கதையாக இருக்கும்?
அவ்வாறே, நாரதரும் வந்து போய்க் கொண்டு இருக்கிறார். பல ரிஷிகளும், பெரியோரும் நம் கண்ணில் பட முடியும் – நாம் அந்த அளவு ஆத்ம சாதனை கொண்டிருந்தால். இதன்படி ஆதி சங்கரரோ, அல்லது இராமானுஜரோ மீண்டும் தோன்றுவதற்கு வாய்ப்புண்டு. கர்ம வினையால் அவர்கள் பிறக்க மாட்டார்கள். உலக நன்மைக்காக, ஆண்டவன் ஆஞ்ஞையால் அவர்கள் அவதரிப்பார்கள்.
வெவ்வேறு காலக் கட்டத்தில் பிரபந்தங்களைப் பாடிவிட்டுப் போய் விட்டார்கள் ஆழ்வார்கள். நம்மாழ்வார் அருள, நாத முனிகள் அவற்றைப் பெற்றாரே, அது எப்படி – என்பதும் இந்த அமைப்பில் தெரிகிறது. இன்றும் நாத முனிகள் அளவுக்கு ஒருவன் தியானம் செய்தால், அவனுக்கு முன் நம்மாழ்வார் தோன்ற முடியும். திவ்யப் பிரபந்தத்தை எடுத்துக் கொடுக்க முடியும்.
இதையெல்லாம் சொன்னோம் சரி, இந்த மும்மூர்த்திகள் தவிர வேறு தெய்வங்களைப் பூஜிப்பவர்களுக்கு முக்தி கிடைக்காதா? பிரம்ம சூத்திரம் அதையும் சொல்கிறது.
பிற மதம், பிற தெய்வம் மூலம் முக்தி உண்டா?
ஒருவன் எதை உபாசிக்கிறானோ அதை அடைவான். இதை ‘தத்க்ரது’ என்று பிரம்ம சூத்திரம் கூறுகிறது. பரம் பொருள் என்னும் அந்த முழு முதற் கடவுளைத் தியானித்து மும்மூர்த்திகளில் ஒருவரை உபாசித்தால் முக்தி கிடைக்கும். வேத மதத்தில் பிற மூர்த்திகளை உபாசித்தாலும், முடிவில் இந்த மும்மூர்த்திகளுக்குத்தான் ஒருவன் செலுத்தப்படுவான். அவையெல்லாம் பரிவார தேவதைகள். சிவன் அல்லது விஷ்ணுவுடன் சேர்பவர்கள். அவர்கள் மூலம் முக்திக்கு வழி பிறக்கும்.
ஆனால் படைக்கப்பட்ட உலகில் தோன்றின உயிர்களை முழு முதற் கடவுளாக எண்ணுபவர்கள் அந்த உயிர்களையே அடைவார்கள். இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. அதனால் ஆசாரியனுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முக்திக்குத் தேவையான தியானம் இல்லாவிட்டாலும்கூட, முக்தரான இராமானுஜரைத் தியானிப்பதால், முன் கூறிய ‘தத்க்ரது’ கோட்பாட்டின்படி, வைணவர்கள் இராமானுஜரை அடைந்து, தாமும் முக்தி அடைவர். தெய்வம் கொடுத்த உறுதிமொழி இப்படி நடைமுறைப்படுத்தப்படும்.
ஆனால் பிற மதங்களில் இவ்வாறு அல்ல. அம்மதங்களில் தெய்வம் என்று போற்றப்படுபவர்கள், ஆன்மிக விழிப்படைந்த உயிர்களாக இருந்தாலும், முழு முதற் கடவுளான பிரம்மத்தை உபாசிக்காமையால், முக்தி அடைந்தவர் இலர். எனவே அவர்களுக்கு மறு பிறவி உண்டு. அதுவரை அவர்களை உபாசித்த உயிர்களும் அவர்களிடமே நிலைத்து, மீண்டும் அவர்கள் பிறக்கும்போது பிறக்க வேண்டும். அல்லது ஒரு கல்பம் முடிந்து பிரளயம் வந்து படைக்கப்பட்ட எல்லாம் அழியும்பொழுது அவையும் அழிந்து மீண்டும் பிறக்க வேண்டும். இதை பிரம்ம சூத்திரம் வாயிலாக அறிகிறோம்.
இன்றைக்குப் பிற மதங்கள் இருக்கின்றனவே அவர்களுக்கு வேறு கதியில்லையா என்று கேட்டால், என்னிடம் இரண்டு பதில்கள் இருக்கின்றன.
ஒன்று ஜோதிடம் வாயிலாக அறிவது. நன்னடத்தை, ஒழுக்கம், தர்மத்தில் நிலைத்தல், முக்கியமாக ஆபத்தில் இருப்பவனுக்கு உதவுதல் அல்லது கருணையோடு இருத்தல் இவை ஒருவனிடம் இருந்தால், அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும்.
மற்றொன்று, இந்து மதத்தைக் காப்பியடித்து இப்பொழுதெல்லாம் ‘முத்தொழிலோனே நமஸ்காரம்’ என்று கிறிஸ்துவுக்கு நமஸ்காரப் பாட்டு பாடுகிறார்களே, கிறிஸ்துவை வேத முதல்வன் என்றாக்கிக் கும்பிடுகிறார்களே, இது எங்கே கொண்டுபோய் விடும் என்று குழப்பமாக இருக்கிறது. இவர்கள் நம்மைக் காப்பியடித்து நம்மைப் போல ஆக முயல்கிறார்கள். இவர்கள் கலைஞர்-புத்தாண்டு கொண்டாடினார்கள். பொங்கல் கொண்டாடினார்கள். இன்னும் விரதங்கள்தான் பாக்கி.
ஆனால் இங்கே இருப்பவர்கள், நம் விரத நாள்களில் வயிறு முட்ட உண்டுவிட்டு, அவர்கள் விரதத்தை முடித்துவைக்க, கஞ்சி குடிக்கிறார்கள்.
என்ன அபத்தம் இது?
இதற்கெல்லாம் எப்படி கர்ம பலன் சொல்வது?
ஒன்றுமே புரியவில்லையே?
எங்கே போனார்கள் இந்த ஜைமினியும், பாதராயணரும்? அவர்களைக் கேட்போமே ….
என்ன…… அவர்களைக் காணோமா…? எஸ்கேப் ஆயிட்டாங்களா ஆ ஆ ஆ ஆ ஆ …..
(தொடரும்…)

அடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 1
ஆறுமுக நாவலர் / ஈழத்துச் சிதம்பர புராணம்
தலபுராணம் என்னும் கருவூலம் – 1
பூமி செல்லும் திசையும், வைகுண்ட ஏகாதசியும், மகா சிவராத்திரியும்
இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?![அமுதம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/nectar3.jpg)
அமுதம் [சிறுகதை]
இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்![பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2 [நிறைவுப் பகுதி]](http://www.tamilhindu.com/wp-content/uploads/thirugnana-sambandar1.jpg)
பெரியபுராணம்: இளைஞர் வாழ்வியலுக்கான ஒரு சமுதாயக் காவியம் – 2
தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – 2
ஐயன்- ஐயனார்- ஐயப்பன் அருளாட்சி பற்றிய நோக்கு
பாரதியின் சாக்தம் – 4
பாரதியின் சாக்தம் – 3
போரின் பிடியிலிருந்து மீளப்புதுப்பிக்கப்பெறும் வட இலங்கையின் இருபெரும் ஆலயங்கள்
பாரதியின் சாக்தம் – 2
பாரதியின் சாக்தம் – 1
சாதி எனப்படுவது யாதெனின்…
அருணாசலத்தில் ‘ம’கரத்தின் மகத்துவம்
வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்
தலபுராணம் என்னும் கருவூலம் – 6![மனமாற்றம் [சிறுகதை]](http://www.tamilhindu.com/wp-content/uploads/manamaatram1.jpg)
மனமாற்றம் [சிறுகதை]
தலபுராணம் என்னும் கருவூலம் – 3
ஒரு பயணம் சில கோயில்கள்
கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு
பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்













நல்ல முயற்சி
தத்வமசி
அஹம் பிரஹ்மாஸ்மி.
பெரியாரிஸ்ட்டுகளைப் பார்த்து கோபப் படுவதை விட பரிதாபமே பட வேண்டும். பெரியார் இந்து மதத்தில் இருந்த நம்பிக்கைகளை கண்டித்து, அதை வைத்தே தன்னை பெரிய பகுத்தறிவாளர் போலக் காட்டிக் கொண்டார்.
பெரியாருக்கு முன்பே, பாரதி, விவேகானந்தர் இப்படி பலரும் இந்து மதத்தின் மீது போடப்ப்பட்ட மூட நம்பிக்கைகளை கண்டித்து உள்ளனர்.
“வஞ்சனைப் பேய்கள் என்பார், அந்த மரத்தில் என்பார், இந்தக் குளத்தில் என்பார், அஞ்சி பயப் படுவார், மிக துயர் படுவார்” என பாரதி பாடி இருக்கிறான்.
பெரியார் உண்மையில் பகுத்து ஆராயும் செயல் எதையும் செய்யவேயில்லை. சும்மா உதார் விட்டே காலத்தைக் கழித்து விட்டார்.
“மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா? மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது, தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”
அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக இருந்தாரா?
உடலோடு சேர்ந்து உயிரும் அழிந்து விட்டாதாக கொண்டால் பிரச்சினை சிறிது எளிதாக முடிந்து விடும். ஏதோ வந்தோம், ஓரளவு நியாயமாக வாழ்வோம், சாவோம் என்று முடிக்கலாம்.
ஆனால் அப்போது கூட சில கேள்விகளுக்கு கண்டிப்பாக பதில் தேவை.
இப்படி வெறும் நூறு ஆண்டு வாழ்க்கையில் கூட ஏன் பலர் ஏழையாக, சாமானியனாக, சிலர் குருடாக, முடமாக பிறக்க வேண்டும்? ஏன் சிலர் மட்டும் சிறப்பான வாழ்க்கைக்கான வாய்ப்புகளோடு பிறக்க வேண்டும்?
அதாவது “உடலோடு சேர்ந்து தான் உயிர், உடல் அழியும்போது உயிரும் அழியும், தொடர்ந்து வாழ்வதில்லை” என்ற ஒரு கோட்பாட்டின் படி கூட, நம்மால் நாம் விரும்பிய படியான வாழ்க்கையை எடுத்துக் கொள்ள முடியாமல் – கிடைத்தை எடுத்துக் கொள்ளும் அடிமை நிலையில் தான் இருக்கிறோம்- என்பதை மறுக்க முடியுமா?
ஆனால் “உடல் அழியும் போது உயிர் அழிவதில்லை, அது (உயிர்) வேறு எங்கோ போகிறது, அல்லது உயிர் மீண்டும் பிறக்கிறது” என்றால் அது நமக்கு மிகவும் சீரியசான பிரச்சினை யாகும். ஏனெனில் இப்படி- கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓட வேண்டிய அடிமை நிலை, தொடர்ந்து கொண்டே இருக்கப் போகிறது- என்ன வேதனையான அடிமை நிலை?
கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம், இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான்.
ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- புத்தரே அவ்வளவு தியானம், ஆரய்ச்ச்சி செய்து கடைசியில் உயிர் பல பிறவிகள் எடுத்து மேலும் மேலும் துன்ப சாகரத்தில் உழல்வதாக கூறுகிறார்.
புத்தர் , ஆதி சங்கரர், விவேகானந்தர் இவர்கள் தான் உண்மையான பகுத்தறிவாளர்கள்.
புத்தர் மனிதர்களின் துன்பத்தை நீக்க வழி காண முயற்ச்சி செய்து , ஒரு வழியையும் காட்டினார். பெரியார் என்ன செய்தார்? பெரியார் புத்தரைப் போல மனக் குவிப்பு செய்தாரா, ஆராய்ச்சி செய்தாரா?
பெரியார் காவிரிக் கரையில் இரவு நேரங்களில் நண்பர்களுடன், சேர்ந்து நடனமாடி செய்த ஆராய்ச்சிகள் எல்லாம் இதே தளத்திலே வெளியாகி இருக்கின்றன.
//நிலாக் காலங்களில் இராமசாமியும் அவர் கூட்டாளிகளும் விலைமாதர் கூட்டத்துடன் காவிரியாற்ற மணலுக்குச் செல்லுவார்கள். இரவு முழுவதும் ஆற்றுமணலில் கூத்தடித்துவிட்டு, விடியற்காலத்தில்தான் வீட்டிற்குத் திரும்புவார்கள்// Courtesy- tamilhindu.
பெரியார் என்ன செய்தார்? பெரியார் தன்னை அரசியல், சமுதாய ரீதியில் உயர்த்திக் கொள்ள வள்ளுவர், கம்பர் முதல் எல்லோரையும் திட்டியே காசு சேர்த்தார்.
சிக்கனமாகவும், கஞ்சத் தனமாகவும் சேர்த்த காசை காப்பாற்ற ராஜாஜியிடம் வழி கேட்டார். இரண்டாம் திருமணமும் செய்து கொண்டார்.
அவ்வளவு கஷ்டப் பட்டு சேர்த்த சொத்துக்கள் இப்போது யாரால் அனுபவிக்கப் படுகின்றன?
//பாடு பட்டு பணத்தை சேகரித்து, ….
கூடு விட்டிங்கு ஆவிதான் போயின பின்
யாரோ அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்//
என்ற தமிழ் செய்யுளின் படி, பாவம் பெரியார் கஷ்டப் பட்டு சம்பாரிச்சு யாரோ அனுபவிக்க விட்டு விட்டு, அம்போன்னு போய் விட்டார்.
ஆனாலும் பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்களினால் நமக்கு உபயோகமும் உண்டு. பெரியாரின் கருத்துக்களை இந்துக்கள் சரியாக உபயோகித்து கொள்ள வேண்டும்.
பெரியாரே பரிதாபம் , அவர் சொன்னதுதான் பகுத்தறிவுனு நினைத்துக் கொண்டு, அப்பாவிகளின் கற்பனை சொர்க்கத்திலே மகிழும் பெரியாரிஸ்ட்டுகளோ அதை விடப் பரிதாபம்.
‘யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கும் உயர்ந்த உலகம் புகும்’ என்றால் அது என்ன உலகம்?
திரு கந்தர்வன் உங்கள் பின்னூட்டம் மிகவும் அருமை.
இக்கட்டுரையைப் படித்த, மற்றும் மறுமொழி பதித்த அனைத்து அன்பர்களுக்கும் நன்றி.
பிரயாணத்தின் நடுவில், இப்பொழுதுதான் இந்தப் பதில்களைப் படித்தேன்.
ஆனால், பலர் எழுப்பிய கேள்விகளுக்கு, கட்டுரையிலேயே பதில் இருக்கிறது. ‘தத்க்ரது’ என்பதிலும் பலரது கேள்விகளுக்கு விடை இருக்கிறது.- ஆபிரகாமிய மதத்தினர் பெறக்கூடிய நிலை குறித்தும் கூட.
மேலும் வேத மதத்தின் முக்கிய இரு கருத்துக்கள் அந்த மூன்று ஜோதிட யோகங்களில் இருக்கின்றன. அவற்றை நான் விரிவுபடுத்தவில்லை. புரிந்து கொள்பவர்கள், புரிந்து கொள்ளட்டும் என்னும் காரணத்திற்காகவும், அதற்கு மேற்கொண்டு சொல்லப்பட்ட – கடவுளர்களில் பெரியவர் யார் என்ற தர்கத்தை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதையும், அகத்தியர் முதலானோர் குறித்த கதைகள் நடந்த சாத்தியக்கூறுகளையும் – எளிதில் புரியவைக்கக்கூடியது என்பதற்காகவும், ஜோதிட யோகங்கள் சொல்லப்பட்டன.
வேத புருஷனின் கண் என்று ஜோதிடம் சொல்லப்படுவதின் காரணம் – ஜோதிடத்தின் மூலம் இந்தப் பிரபஞ்சத்தின், இயற்கையின், உலகியலின் எந்த ஒரு பரிமாணத்தையும், நிகழ்வையும் விளக்க முடியும் என்பதனாலே. வாசகர்கள் பலரும் நினைப்பதைப்போல ஜோதிடம் என்பது எதிர்காலம் பற்றி மட்டும் கூறுவது அல்ல. அப்படி என்றால் அது என்ன, என்று கூறுவதும் என் நோக்கம் அல்ல. எந்த அளவுக்கு, எந்த வகையில் அது தேவையோ, அந்த அளவுக்கே அதை கையாண்டுள்ளேன், கையாள்வேன். அந்தக் கடலின் கரையில் நின்றவர்களுக்குத்தான், அதன் வீச்சு புரியும்.
சில விஷயங்களை இங்கே கூற விரும்புகிறேன்.
# ப்ரமாண நூல்களே வேத மதத்தைப் புரிந்து கொள்ள உதவும் சாதனங்கள். அவை கூறுவது என்றென்றும் சாசுவதமான உண்மைகள். அவற்றை மீறியோ, அல்லது அவற்றைக் குறைத்து மதிப்பிட்டோ கூறப்படும் கருத்துக்கள் வேத மதக் கருத்துகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட மாட்டது. அப்படிக் கூறப்படும் கருத்துக்கள் சாசுவதமானவை அல்ல. இது ஒவ்வொரு இந்துவும் தெரிந்து கொள்ள வேண்டியது.
# இந்தப் ப்ரமாண நூல்கள் பூர்வ மீமாம்சை சார்ந்தவை அல்ல. கீதாச்சரியனும் படிக்கச் சொல்லும் பிரம்ம சூத்திரம், சடங்கு சார்ந்த வேதக் கல்வி முடித்தவுடன், தத்துவ விசாரமாகச் செய்யப்படும் ஆன்மா பற்றிய விசாரணை. இதில்தான், ஆன்மாவைப்பற்றியும், பரம் பொருளை அடையும் மார்கங்களைப்பற்றியும், அவ்வாறு அடைந்தவுடன் இருக்கும் நிலையைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. உபநிடதங்களின் சாரம் பிரம்ம சூத்திரம்.
# முக்தி என்பதன் அர்த்தத்தை இக்கட்டுரையில் கொடுத்துள்ளேன். முக்தி நிலையில் நிகழும் நிகழ்ச்சிகளைக் கூறும் ஒரு நூல் இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள், ‘முமுக்ஷுப் படி’ என்னும் அந்நூலை படித்து, விஞான ரீதியில் முக்தி அடையும் நிலை எவ்வாறு விளக்கப்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
# முக்தி பற்றிப் பேச முடியுமா? முடியும். பிரம்ம சூத்திரம் பேசுகிறது.
ஆனால் முக்தி என்னும் அனுபவத்தைப் பேச முடியாது. அந்த அனுபவம் ஆனந்த நிலை என்று தைத்திரீயம் கூறுகிறது. அந்நிலையை அடைவதற்கு முன் வரை, ஜீவன் விஞான நிலை என்னும் அறிவார்த்த நிலையில் இருக்கிறது. அந்தப் பரம புருஷனே ஜீவனில் குடி கொண்டுள்ளதால், அவன் மூலமாக, அவன் நிலையான ஆனந்த நிலையைப் பற்றிப் பேச முடியும். ஆனால் ஆனந்த நிலையை எட்டினவுடன், அது வேறு பரிமாணம். விஞானம் கடந்த பரிமாணம். எனவே அந்த அனுபவத்தைப் பேச முடியாது. இதையே கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றனர். இதை மறுமொழியாக , முந்தின கட்டுரையில் விரிவாகக் கொடுத்துள்ளேன்.
# முக்தி என்பது என்ன, சித்தி என்பது என்ன? இவை இரண்டும் ஒன்றா, அல்லது வேறு வேறா? தேடுங்கள், விடை கிடைக்கும். விடைக்குத் தேவையான ‘க்ளூக்கள்’ அந்த மூன்று யோகங்களில் உள்ளன – என்ன செய்வது!!!
# முக்தி என்பது செயலாக்கத்தினால் வருமா, இந்த ஜோதிட யோகங்கள் அவ்வாறு கூறுகின்றனவே என்றால், இந்த யோகங்கள், முக்தி அடைவதற்கு முந்தின இரு பிறவிகளைப் பற்றிக்கூறுகின்றன. அந்த அளவு சாதனம் செய்பவர் அந்தந்த யோகங்களில் பிறப்பர் என்பது பிரம்ம தேவன் கூற்று. அதன் விளக்கங்களைப் பாருங்கள். சர்வம் விஷ்ணு மயம் என்பவனும், சர்வம் சிவ மயம் என்பவனும் முக்திக்குத் தயாராகிறான். மறந்தும் புறம் தொழா விஷ்ணு பக்தனும், அவ்வாறேயான சிவ பக்தனும் முக்தி நிலைக்கு அருகில் வருகிறான் என்பது நோக்கத்தக்கது.
# ஆனால் இந்த யோகங்கள் பங்கம் அடையாமல் இருக்க வேண்டும். பங்கம் அடையாத இந்த யோகங்களைக் காண்பது அரிது. பங்கப்பட்ட சீகண்ட யோகம் கொண்டவர் இன்றைய தமிழக முதல்வர்! ஏன் அந்த பங்கம் நேரிட்டது என்று ஜோதிடம்தான் விளக்குகிறது. அதன் காரணம் தான் அவர் அணியும் மஞ்சள் துண்டு!! பங்கப்பட்ட யோகத்தை அந்த மஞ்சள் துண்டு சீர் செய்யாது – செய்ய வில்லை. மாறாக, அப்படிப்பட்ட உயர்ந்த முக்தி மார்க்க, பக்தி நிலையில் இருக்கும் பொழுது கால் இடறினால், அடி அதிகம், சரிவு அதிகம். பரம பத விளையாட்டு காட்டும் – மேல் வரிசை யில் பாம்பின் வாயில் மாட்டிக்கொண்டு, அடி வரிசையில் தள்ளி விடப்பட்ட நிலை அது.
பங்கப்பட்ட யோகம் அவருக்கு அளித்த வாழ்க்கையையும், ஜோதிடம் காட்டும் பாதையையும் உன்னிப்பாகக் கவனிக்கும் என் போன்றவர்களுக்கு, கர்ம சக்கரத்தை நினைத்து ஆச்சர்யம், பயம், பக்தி.. … என்னவென்று சொல்ல.
மனதிலே வெறுப்பு கருத்துக்கள் உடைய எவரும் முக்தியை அடைய முடியாது. அந்த வெறுப்பே அவருக்கு பற்றை உருவாக்கி அவரை சிக்க வைத்து விடும். புறம் தொழாமை என்னும் நிலைப் பாடு, பிறரின் வழி பாட்டு முறைகளை தன்னை அறியாமலேயே வெறுக்கும் படி செய்து விடும். தான் கடவுளாக வணங்குபவர் மட்டுமே முழு முதல் கடவுள் என்பதும் அஹங்காரத்தை, துவேசத்தை உருவாக்கும் கோட்பாடே. முக்தி என்பது ஆன்மீக சம்பந்தப் பட்ட விடயம்.
ஒருவன் தன் மன வலிமையை, மன நிலையை உயர்த்திக் கொண்டே வந்து கடும் முயற்சிக்குப் பிறகே முக்தி என்னும் நிலை அடைவதாக கூறப் படுகிறது. முக்தி பற்றிய கருத்துக்கு மிக சிறந்த நூல்களில் விவேக சூடாமணியும் ஒன்று.
//கீதாச்சரியனும் படிக்கச் சொல்லும் பிரம்ம சூத்திரம், சடங்கு சார்ந்த வேதக் கல்வி முடித்தவுடன், தத்துவ விசாரமாகச் செய்யப்படும் ஆன்மா பற்றிய விசாரணை.,,
கீதாசாரியான் எந்த இடத்திலே பிரம்ம சூத்திரத்தை படிக்கும்படிக் கூறினான் என்பதை மேற்கோள் காட்டினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
//Sarang
5 February 2010 at 6:46 pm
//
அய்யா சாரங் ?
நான் இந்துவல்ல என்பது உமது துணிபோ ?. அது கிடக்கட்டும்.
கடவுள் என்பதன் அர்த்தத்தையே அனர்த்தமாக்கி இருக்கும் இந்தக் கட்டுரை ஜாதியக் கூறுகளை மட்டுமேக் கொண்டிருக்கிறது.
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே
சுற்றி வந்து முனுமுனென்று சொல்லும் மந்த்ரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?
- சிவவாக்கியர்
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்ட நாதப் பட்டரே
வேப்பிரைப்பு வந்த போதில் சாத்திரம் வந்துதவுமோ
மாத்திரை யெப்போதுமுள்ளே அறிந்து கொள்ள தெக்கிறீல்
சாத்திரப் பை நோய்களேது சத்தி மூர்த்தி சித்தியே..
- சிவவாக்கியர்
சாத்திரங்கள் நிலவைச் சுட்டிக் காட்ட உதவும் விரல் போல. நிலவை ஒருவன் தானாகவும் காணலாம் மற்றவர்கள் துணையின்றி. ஆனால் நாம் நிலவை விட்டு விடுகிறோம். விரலை மட்டுமே பற்றிக் கொள்கிறோம்.
//# ப்ரமாண நூல்களே வேத மதத்தைப் புரிந்து கொள்ள உதவும் சாதனங்கள். //
ப்ரமாண நூல்கள் என்பவை யாவை ?
முதலில், யார் ப்ராமணன் ?
இந்து என்பது மதத்தின் கூறுகள் கொண்டதா ?
உங்களுடைய இந்த சாதீயக் குறுக்கல் கொண்ட கட்டுரைகள் பெரும்பாலும் பெரியாரிஸ்டுகளுக்கான தீனி மட்டுமே. இதில் உண்மையான ஆன்மீகம் கிஞ்சித்தும் கிட்டாது.
(edited and published).
//கீதாசாரியான் எந்த இடத்திலே பிரம்ம சூத்திரத்தை படிக்கும்படிக் கூறினான் என்பதை மேற்கோள் காட்டினால் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.//
internetல் தேடுவோம் என்று ‘brahma sutra in bhagavad gita’ என்ற கூகிள் search செய்தேன். Chapter 13 verse 5 கண்ணில் பட்டது. மேலும் ஏதாவது இருக்குமோ என்னவோ. இந்த தேடலில் ஒரு linkல் ‘Christianity and the Origin of Sanskrit’ என்ற ebook கண்ணில் பட்டது. யாராவது முடிந்தால் படியுங்கள்.
//அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே? அப்படி என்றால், பிற தெய்வங்கள் எப்படிக் குறைந்தவை ஆகும்? அப்படி அவை குறைந்தவை என்று சொன்னால், இவன் முழு முதல் என்று வணங்கும் அந்தத் தெய்வமும் குறைந்தது என்றாகுமே?//
கட்டுரையில் உள்ள இந்த வரிகள் அனைவரும் படித்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியவை.
//“மனிதனின் உடல் மரணம் அடையும் போது, அந்த நிலையில் அவனது உயிர் என்று கூறப் படுவது அந்த உடலோடு சேர்ந்து அழிந்து விடுகிறது என்பது தீர்மானமான உண்மையா? மனிதனுக்கு உயிர் என்று ஒன்று தனியாக இல்லை, உடல் அழிந்த பின் அவன் உயிர் என்று ஒன்று இல்லவே இல்லை என்பது, தெள்ளத் தெளிவாக வெப்ப இயக்க விதிகளைப் போலவோ, மின் காந்த விதிகளைப் போலவோ தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளதா? ”
அதற்க்குத் தயக்கமின்றி நிரூபிக்கப் பட்ட உண்மையை வழங்க நாத்தீக வாதி தயாராக இருந்தாரா?
//
லூசுத்தனமான வாதம், அதான் உயிரும் உடலும் செத்தபிறகு இல்லைன்னு ஆகிவிடுது என்று நாத்திகன் சொல்கிறானே, இருக்குன்னு சொல்றவா தான் நிருபனம் செய்ய வேண்டும்.
திருச்சிகாரனுக்கும் முக்தி கிட்ட வாழ்த்துகள்
//மேலும் உங்களது கைவரிசையைக் காட்ட முற்படின் உமது வாயடைக்கச் செய்யுமாறு சங்கத் தமிழ் இலக்கியங்களிலிருந்து மறுக்க முடியாத ஆதாரங்களை வீச எம்க்கு சக்தி உண்டு.//
அதைத்தான் சொல்கிறேன். எம்மைப் போன்றவர்கள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை விட்டு விட்டு விரைவாக உங்களுக்கு முக்தி கிட்ட வாழ்த்துகள். மற்றவர்களுக்கு முக்தி கிடைத்தால் கிடைக்காவிட்டால் என்ன ? அவர்களாவது நிம்பதியாக இருக்கட்டுமே.
//இந்த விஷயத்தில் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ‘மறந்தும் புறம் தொழா மாந்தர்கள்’. அவர்கள் தீவீர முக்தி சிந்தனையைக் கொள்கையாகக் கொள்கிறவர்கள். இன்றைக்கு அவர்கள் எல்லோருமே அப்படி என்று சொல்ல முடியாது, ஆயினும், முக்தி மார்க்கத்தை நாடுபவர்கள், இன்னும் இருக்கிறார்கள். ‘நாராயணனே நமக்கு’ என்று தீவீர நாட்டம் கொள்வதால், அவர்கள் கொள்கை தவறல்ல. அவர்கள் பிற கோயில்களுக்குப் போகாததால், அவர்களுக்கு துவேஷம் என்று சொல்வது சரியல்ல. அதேபோல், ‘சர்வம் சிவ மயம்’ என்று எவன் ஒருவன் சிவ பக்தியில் முக்தி பெற விரும்புகிறானோ, அவன் பிற தெய்வங்களை நாடக் கூடாது //
//அதேசமயம், பிற தெய்வங்களை துவேஷிக்கவும் கூடாது. பிற தெய்வங்கள், தான் வணங்கும் தெய்வத்திற்குக் குறைந்தவை என்றும் எண்ணக்கூடாது. அது ஏன் என்று உணர சாதாரண லாஜிக் போதும். அவனே எங்கும் பரவிய பரம் பொருள் என்றால், பிற தெய்வங்களிலும் இருப்பவன் அவன்தானே?//
“மறந்தும் புறம் தொழா” என்கிற கோட்பாட்டில் இருப்பவர் யாராவது “புற” தெய்வங்களையும் பரமாத்மா, முழு முதற்கடவுள் என நினைக்கும் கண்ணியம் உடையவர்களாக இருக்கின்றனரா? அவரவர் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். மத வாதத்தை நியாயப் படுத்த எப்படி எல்லாம் எழுதுகிரார்கள்.
தமிழ் பேச்சு இணையத்துக்கு எல்லா நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
தமிழ்டாக்
தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு கீழே உள்ளது என் நண்பனின் வெப் சைட்.இதில் இலவச பதிவிறக்கம் நிறைய உள்ளது.விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.
http://www.maransdog.org/iskcon_documents
http://www.maransdog.com/JIGGI_JIGGI
http://www.maransdog.com/document
http://www.maransdog.com/2009_books
http://www.maransdog.com/Ramanujan/
http://www.maransdog.com/Mahabharat/
அய்யா ஜீவ்ஸ்
//
//# ப்ரமாண நூல்களே வேத மதத்தைப் புரிந்து கொள்ள உதவும் சாதனங்கள். //
ப்ரமாண நூல்கள் என்பவை யாவை ?
முதலில், யார் ப்ராமணன் ?
இந்து என்பது மதத்தின் கூறுகள் கொண்டதா ?
//
மறுபடியும் படியுங்கள் பிரமான நூல் என்பது தான் கட்டுரையில் ப்ரமான நூல் எண்டு ஒரு ப் சேர்த்து வந்துள்ளது – பிரமான நூல் என்பது பிராமன நூல் இல்லை “பிராமன” என்பது ஜாதி – பிரமான என்பது நாம் கடைசி அத்தாட்சியாக கருதும் மூன்று நூல்கள்
//
// அவன் வேறு மதத்தினனாக இப்பிறவியில் இருந்தாலும், அவனை வேத மத நம்பிக்கை கொண்டவனாகவும் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்தவர் வீட்டில் பிறக்கும்படியும் அல்லது தானே ஆத்ம ஞானம் தேடி, கங்கையில் நீராடி, பிரம்மனைத் தேடும்படியாகவும் மறு பிறவி அமையும். இந்து மத வழியில்தான் முக்தி அடைய முடியும். //
இது சரியில்லை. கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப்படுபவர் என்று அர்த்தம் ஆகிறதே. தவறான வழியில் திசை மாற முயல்கிறீர்கள்.
//
இங்கு ஆசிரியர் இந்து மதத்தை பற்றி பேசுகிறார் தாங்கள் அதை சரியல்ல என்கிறீர்கள் – மறு பிறவியில் கிறிஸ்தவராக பிறந்து முக்தி அடைவார் என்று கூற இது ஒரு கிறிஸ்தவ வலைதளமும் இல்லை கிறிஸ்தவத்தில் மறு பிறவி என்ற ஒரு கான்செப்டும் இல்லை
நீங்கள் ஹிந்து அல்ல என்ற எண்ணம் இல்லை – இங்குமா இஸ்லாமையும் ,கிறிஸ்தவத்தையும் சேர்த்துக்கொண்டு செக்யுலர் காரர்களை போல் பேச வேண்டும் என்ற எண்ணமே
//
“மறந்தும் புறம் தொழா” என்கிற கோட்பாட்டில் இருப்பவர் யாராவது “புற” தெய்வங்களையும் பரமாத்மா, முழு முதற்கடவுள் என நினைக்கும் கண்ணியம் உடையவர்களாக இருக்கின்றனரா? அவரவர் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். மத வாதத்தை நியாயப் படுத்த எப்படி எல்லாம் எழுதுகிரார்கள்.
//
அப்போ அல்லாவையும், ஏசுவையும், இல்லையேல் காட்டும் எத்தையும் பரமாத்மா என்று சொல்ல வேண்டியது தான் –
இதெற்கெல்லாம் வேதம், புராணம், இதிகாசங்கள் எதற்கு அதென்ன சிவன் விஷ்ணு பிரம்ம, சக்தி, கந்தன் என்று ஒரு சில நாமங்களை மட்டும் பரமாத்வாடுன் ஒப்பிட வேண்டும் எல்லோரையும் பரமாத்மாவாக நினை எல்லோரையும் த்யானம் பண்ணு. எல்லோரையும் துதி பண்ணு என்பது தானே சர்வோத்தமமான நிலை – இது நடை முறைக்கு ஒவ்வாது என்பது தான் விஷயமே (இந்தியாவில் மட்டுமே நூறு கோடிக்கு மேல் மக்கள் எல்லோரையும் எப்படி த்யானம் பண்ணுவது)
நீங்கள் சொல்லும் சில நாமங்களை மட்டும் பரமாத்மாவென கொண்டால் என்ன பயன், வேறொருவர் இன்னொரு லிஸ்ட் தருவார் – - பரமாத்மா ஸ்வரூபம் எங்கும் உள்ளது என்ற எண்ணம் வேண்டும் அதுவே நமது கொள்கையாக இருக்க வேண்டுமே தவிர எல்லோரையும் லிஸ்டில் வைத்தே ஆகா வேண்டும் என்பதல்ல
அப்படியானால் நானும் கூட பரமாத்மா என்று கொள்ள வேண்டும் – இனியேனும் எனக்கு பதில் எழுதும் போது ஏக வசனத்தில் எழுதாதீர்கள்
நமக்கு பிடிக்காத கருத்தெல்லாம் மத வாதம் என்பது காங்கிரசாரின் செகுலர் கொள்கை போல தான்
- புறம் தொழாதவர்கள் ஒருவரை பற்றி மட்டுமே சிந்தனையில் இருப்பர், இப்படி ஒருவர் பற்றியே த்யானத்தில் இருக்கும் அவர்களுக்கு பிற தெய்வங்களை நிந்திக்கவோ யோசிக்கவோ, பூசிக்கவோ வேணும் என்ற எண்ணம் எங்கனே வரும் – இது அத்வைதிகளிடம் போய் உங்களுக்கு பல ஆத்மா உள்ளது என்று ஒப்புக்கொள்ளும் கண்ணியம் இருக்கிறதா என்று கேட்பது போல் ஆகும், அல்லது த்வைதிகளிடம் போய் ஒரே ஆத்மாதான் என்று ஒப்பும் கண்ணியம் இருக்கிறதா என்று கேட்பது போலாகும்
எனக்கு எந்த தெய்வத்தின் மீதும் த்வேஷம் இல்லை, எல்லோரின் மீதும் மரியாதையை உள்ளது ஆனால் ஈடுபாடு என்பது ஒன்றின் மேல் தான் உள்ளது.
ஜெயஸ்ரீ அவர்களே
நீங்கள் முந்தைய கட்டுரையில் எழுதியதை அப்படியே கும்பகோணம் சக்ரபாணி கோவிலில் நேரில் காண முடிந்தது
- பிரபஞ்ச நிலையை குறிப்பதற்காக சக்கரத்தில் எழுந்தருளி இருக்கும் நாராயணனோ ருத்ராம்சம் பொருந்தியவராக முக்கண் உடையவராக உள்ளார் (முன்பு கூட இந்த கோவிலுக்கு சென்றிருக்கிறேன் – இந்த தடவை தான் மூன்றாவது நேத்ர தரிசனம் கிட்டியது)
பிரம்மாவோ அங்கு சாக்ஷாத் எழுந்தருளி உள்ளார், விஷ்ணுவாகவும், ருத்ரனானகவும் தானே உள்ளார்
- அவருக்கு நான்கு யுகங்களை குறிப்பது போல நான்கு திரவியங்களை கொண்டு [துளசி, குங்குமம், இரு மலர்கள் பெயர் நினைவில் இல்லை) அர்ச்சனை நடக்கிறது
[தாயார், பிரம்மா, அக்னி, சூரியன் இவர்கள் அர்ச்சனை செய்கிறார்கள் ]
- அவருக்கு காவேரி ஆற்றில் உள்ள ச்மசானத்திளிருந்து புகை வராமல் திருவாராதனம் நடப்பதில்லை என்று சொல்கிறார்கள் (ஜன்ம சுழலில் இருந்து ஒருவருக்கேனும் மோக்ஷம் அளித்த பிற்பாடே திருமஞ்சனம் காண்கிறார் என்பது போல)
sarang !
// மறுபடியும் படியுங்கள் பிரமான நூல் என்பது தான் கட்டுரையில் ப்ரமான நூல் எண்டு ஒரு ப் சேர்த்து வந்துள்ளது – பிரமான நூல் என்பது பிராமன நூல் இல்லை “பிராமன” என்பது ஜாதி – பிரமான என்பது நாம் கடைசி அத்தாட்சியாக கருதும் மூன்று நூல்கள் //
Who authenticates it ? How does it differs from others saying ” இறுதி வேதம் ” இறுதி தூதர் ?
மறுபடியும் சொல்கிறேன். இந்து மதத்தின் கூறுகள் கொண்டதாகத் தான் நீங்க வழிநடத்திச் செல்ல முயல்கிறீர்கள் என்பது என் கருத்து.
கடவுள் இல்லை என்று சொல்லி, கர்ம யோகத்தில் இருப்பவனும் முக்தி அடைகிறான். அவனுக்கு so called “இந்து மதத்தில்” சத்தியமான இடம் உண்டு.
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை வழிபட நாம் வைத்துக் கொள்ளும் பெயர்களே சிவ விஷ்ணு பிரம்ம மற்றும் கோடானு கோடி பெயர்கள். பகவான் கிருஷ்ணனே விஷ்வரூபத்தின் போது சொல்வது என்ன என்பதை யோசிக்கவும்.
//நீங்கள் ஹிந்து அல்ல என்ற எண்ணம் இல்லை – இங்குமா இஸ்லாமையும் ,கிறிஸ்தவத்தையும் சேர்த்துக்கொண்டு செக்யுலர் காரர்களை போல் பேச வேண்டும் என்ற எண்ணமே//
can you point this out please ?
கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப் படுபவர் என்பது தான் உங்கள் எண்ணம் என்றால் – எல்லாம் கடந்து உள்ளில் நிறைந்திருப்பவனை ஒரு கூட்டுக்குள் மட்டுமே காணவேண்டும் என்று வற்புறுத்துவீர்களானால் – உங்களின் ஆன்மீகப் பயணத்திற்கு வாழ்த்துச் சொல்லி நான் ஒதுங்கிக் கொள்கிறேன்
அன்புள்ள பாலா மற்றும் முக்திக்கு நிஷ்டை தேவை என நினைப்பவர்க்கு
//
Bala
5 February 2010 at 10:45 pm
// இங்கே வைணவ சம்பிரதாயத்தில் அனுசரிக்கப்படும் ஒரு நம்பிக்கையைச் சொல்ல வேண்டும். ஆசார்யர் இராமானுஜர் சம்பந்தம் இருப்பவர்கள் அனைவருக்குமே முக்தி உண்டு என்று கடவுளே கொடுத்த உறுதிமொழி இந்தச் சம்பிரதாயத்தில் உண்டு. //
interesting. This sounds very much like a “prophet” idea rather than Hindu spirituality.
In Hindu spiirituality, it is Guru’s guidance that kindles an aspirant towards self knowledge – but that is only the “inspiration” part. The Sadhaka also has to strive hard and peel of all his layers of “avidya” (ignorance) one by one.. and this may take one or many births… It is not said that just by mere association of a great sage, you are *guaranteed* of Mukthi.
//
ஆப்ரஹாமிய மதத்தில் – இப்படி செய்தால் தான் சுவர்க்கம் அடையாளம் (ஜாலியாக இருக்கலாம்) என்பது திருஷ்டாந்தம்
ராமானுஜரை சரண் புகுந்தவர்களுக்கு அவர் முக்தி தருகிறேன் என்கிறார் சரண் புகவிடில் முக்தி இல்லை என்று சொல்லவில்லையே – ராமனுஜரின் உண்மையான பக்தனாக இருந்தால் அவர் சொல்படி கேட்பான் – அவர் சொல்படி கேட்பது என்பது தர்ம சாஸ்திரப்படி நடந்து பக்தியில் தெளிப்பதே ஆகும் – எப்படியும் நிஷ்டை வந்து விடுகிறது
மேலும் ராமானுஜ சம்மந்தம் என்பது என்னவோ அவரது சொந்தக் காரர்களுக்கும் பூணுல் போட்டவர்க்கும் என்று நினைத்து விடாதீர் – சித்திரை மாதம் ஆதிரை நாள் பெரும்புதூர் வந்தீர்களானால் அங்கு பாகவதர் கூட்டமே நிரம்பி இருக்கும் – அவருக்கு பிராமணர் அல்லாத அடியார்வர்களே ஜாஸ்தி
முக்திக்கு நிஷ்டை வேண்டும் என்பது ஒரு சரியான சிந்தனை அல்ல – அது என்னோமோ கடவுளிடம் போய் – நான் இவ்வளவு த்யானம் பண்ணேன், இவ்வளவு தானம் பண்ணேன், பக்கத்து வீட்டுக்காரரோட ஒரு நூறு மணி நேரம் அதிகமா உன்ன நினைத்தேன் அதனால எனக்கு கட்டாயம் முக்தி தா என்று கேட்பது போல் உள்ளது – அவனோ ச்வதன்த்திரன் என்று வேதம் கூறுகிறது – முக்தி அழிப்பது என்னவோ அவனது இஷ்டம் – அவனை எசினவருக்கும் முக்தி உண்டு (ராவணன், கம்சன், சிசுபாலன்), ஒரு பானைக்கே முக்தி அள்ளித்தான் என்பது ததி பாண்டன் கதையின் முலம் அறிகிறோம்
//
Plus, what Hindu spirituality insists on is “shraddha”. It does not directly translate as faith or belief as it is normally understood.
It is *self knowledge* that is criteria for Mukthi – NOT “Belief in Vedas”, NOT “knowledge of Vedas”.
//
ஆன்ம ச்வபாவத்தை அறிந்து விட்டால் முக்தி என்று எப்படி கொள்வது – அது என்னமோ நீங்களே அடைந்தது போல் உள்ளது அதற்க்கு கடவுள் எதற்கு – அவன் மனம் வைக்காவிடில் என்ன பணியும் ஒரு பிரயோஜனமும் இல்லை – அவன் மனம் வைத்தால் எதுவும் பண்ணவே வேண்டாம்
எதுவுமே வேண்டாம் என்னை பூரணமாக சரண் புகுந்தால் உனக்கு முக்தி தருகிறேன் கவலை படாதே என்று கடைசியாக சொல்கிறானே கண்ணன் அப்போ அது என்ன ஆபிரகாமிய கொள்கையா இல்லை அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லையா
ஜீவ்ஸ்
//
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை வழிபட நாம் வைத்துக் கொள்ளும் பெயர்களே சிவ விஷ்ணு பிரம்ம மற்றும் கோடானு கோடி பெயர்கள். பகவான் கிருஷ்ணனே விஷ்வரூபத்தின் போது சொல்வது என்ன என்பதை யோசிக்கவும்.
//
இங்கு ஏன் கிருஷ்ணனே சொன்னார் என்று சொல்கிறீர்கள் – உங்களுக்கு ஒரு வரையறை, கிருஷ்ணன் என்ற ஒரு கோட்பாடு தேவை படுகிறது – அது போல தான் மத கோட்பாடுகளும் – யாரும் கடவுளை மதத்தினுள் அடைக்கவில்லை – அந்த மூன்று பிரமாணங்களும் பரமாத்மாவை பற்றி பறக்க பேசுபவை – பரமாத்மா என்பது பொது தத்துவம் – நீங்களே அந்த பிரமானன்களுள் ஒன்றை தான் கூறுகிறீர்கள், இது பிரமாணம் ஆதலால் கேள் நம்பு என்கிறீர்கள்
(இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்)
//
Who authenticates it ? How does it differs from others saying ” இறுதி வேதம் ” இறுதி தூதர் ?
//
தெளிவான வித்யாசம் உள்ளது
வேதாந்த சனாதன தர்மத்தில் ஊறி திளைத்தவர்கள், ஜ்யானிகள், புத்தமும், சீனமும் சனாதன தர்மத்தை களவாடிய பொது அதை மீட்டுக்கொண்டு தந்தவர்கலான சங்கரர், ராமானுஜர், மத்வர் மற்ற ஜ்யானிகள் சனாதன தர்மத்தை தெரிந்து கொள்ள இந்த மூன்று நூல்கள் பிரமாணம் என்று கொண்டார்கள் – இல்லை என்று நீங்கள் சொன்னால் நீங்கள் போகும் வழி வேறு (அவர்களின் வேதாந்த வழி அல்ல) அவ்வளவே விஷயம்
இங்கு இறுதியாக கொள்ளப்படுவது என்பது “the only and final” என்ற அர்த்தம் இல்லை – நீயே பார்த்து முடிவு செய், நீயே யோசித்து ஆராய்ந்து முடிவு செய், இதுவும் முடிவில்லையா அப்போது இந்த ப்ராமானதிர்க்கு வா – மேலும் உனது முடிவுகள் முன்னோர் கடும் தவம் செய்து உலக நன்மைக்காக தங்களையும் வருத்தி கொண்டு ஆராய்ந்து கொணர்ந்த அந்த பிராமணத்தின் படி உள்ளத என்று பார் என்பது தான் திருஷ்டாந்தம்
இதை இறுதியாக கொள்ளாமல், ந்யாய, வைசேசிக, யோக, சங்க்ய மதங்கள் இருந்தனவே – அவைகளுக்கு இந்த மூன்றும் பிரமாணம் அல்லவே, இவையும் சனாதன தர்மத்தின் அங்கமாகி விட்டனவே?
ஆகவே இங்கு கூறும் பிரமானமானது வேந்தாந்த விஷயத்தை அறியவே. இது தான் கடவுள் என்று அவரை கட்டுப்படுத்த அல்ல – வேதாந்த மார்கமாக எழுதும் பொது இவை மூன்றையும் பிரமாணமாக கொண்டே தீர வேண்டும் – தமிழில் பேசினால் தமிழ் இலக்கணம் இல்லாமல் எப்படி பேச முடியும் அது போலவே
இறுதி நூல், இறுதி தூதர் என்பது வேறு – உலகத்தவரே (பாவிகளே) இதுக்கு முன் இருந்தவையும் பொய், பின் வரப்போவையும் பொய் இதுவே மெய் இது அல்லால் ஏதும் இல்லை ஜாக்கிரதை என்பது தான் இங்கு அறிகிறோம்
பிரமாணமாக கொள்ளும் இறுதி நூலானது இலக்கணம் போல – இதற்க்கு மேல் எனக்கு சரியாக எழுதவரவில்லை
//
can you point this out please ? கடவுள் என்பவர் மதத்திற்குள் அடைக்கப் படுபவர் என்பது தான் உங்கள் எண்ணம் என்றால் – எல்லாம் கடந்து உள்ளில் நிறைந்திருப்பவனை ஒரு கூட்டுக்குள் மட்டுமே காணவேண்டும் என்று வற்புறுத்துவீர்களானால் – உங்களின் ஆன்மீகப் பயணத்திற்கு வாழ்த்துச் சொல்லி நான் ஒதுங்கிக் கொள்கிறேன்
//
ம்ம்ம் எனக்கு எழுதவரவில்லை என்பது மறுபடியும் நிரூபணம் – நான் சொன்னது இந்த தலத்தில் போட்துவாகவே எழுதுவது என்பது தேவை யற்றது – இது ராமாயணத்தில் ராமர் ராவணனை வதம் செய்தார், ராமர் சீதையை மணந்தார் என்று சொல்லாமல் – நமது நூலின் கதாநாயகன் எதிர் கதாநாயகனை கொன்றார், நமது நூலின் கதாநாயகன் கதாநாயகியை மணந்தார் என்பது போல் ஆகிவிடும் – இதை தான் நான் சொல்ல வந்தது
ஒரு சிறிய விண்ணப்பம் – ஓரிரண்டு பதில்களை படித்து விட்டு இவன் இப்படிதான், இந்த கொள்கை உடையவன் நம் போல் பரந்த மனம் இல்லையே உனக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன் என்று முடிவு கட்டுவது சரியல்ல – பதில்களை “context” உடன் மட்டும் பார்த்து, வலை தளத்தில் எழுதும் பொது நமது கருத்தை முழுமையாக விளக்க இயலாமல் போகிவிடும் என்பதையும் மனதில் கொண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டுகிறேன்
///தனபால்
8 February 2010 at 11:22 pm
தமிழ் ஹிந்து நண்பர்களுக்கு கீழே உள்ளது என் நண்பனின் வெப் சைட்.///
very thanks for this.
Dear Thiru, Thiruchikkaran avarkale,
May I have ur email id pls’
regards,
thamil
ஜீவ்ஸ் அவர்களே
//
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை வழிபட நாம் வைத்துக் கொள்ளும் பெயர்களே சிவ விஷ்ணு பிரம்ம மற்றும் கோடானு கோடி பெயர்கள். பகவான் கிருஷ்ணனே விஷ்வரூபத்தின் போது சொல்வது என்ன என்பதை யோசிக்கவும்.
//
மேலும் இங்கு ஹிந்து மதம் என்று தான் கூற வேண்டும், முக்தியை பற்றி வேறு யாரும் பேசவில்லை – மற்றவரெல்லாம் ஒரு நாலஞ்சு பேர சாத்திபுட்டு மேலே பொய் ஜாலியா இருக்கலாம் என்று தான் சொல்கிறார்கள் – உலகம் சக்கரம், வாழ்கை சக்கரம், மறுபிறவி, முக்தி இதெல்லாம் நீங்கள் வேண்டாம் என்றாலும் ஹிந்து என்ற மத நூல்களில் தான் உள்ளன – மதம் என்றாலே மோசம் என்பது அர்த்தம் அல்ல.
அதாலால் முக்தியை பற்றி பேசும் பொது ஹிந்து மதத்தை பற்றி மட்டுமே சொல்ல வேண்டியாக உள்ளது அதாவது ஹிந்து மதத்தில் சொன்னது போல நடந்தால் முக்தி என்று ஹிந்து மதம் விவரிக்கும் ஒரு நிலை கிட்டும்
இஸ்லாம் நூல் படி நடந்தால் முக்தி கிட்டும் என்று எங்கனே சொல்வது – அந்த மார்கத்திலோ மறு பிறவி என்பதோ நாம் கூறும் முக்தி என்பதோ இல்லையே – ஒரு இஸ்லாமியருக்கு முக்தி கிட்டியது என்று சொல்வோமாயின் அவர் ஹிந்து மதத்தில் சொன்னபடி (மதம் மாறாமலேயே) ஏதோ செய்துள்ளார் அதன் விளைவாக முக்தி கிட்டியது என்று தானே கொள்ள வேண்டும்
அடிப்படையில் ஒரு நூலே இல்லாமல், மார்கமே இல்லாமல் எங்கு செல்கிறோம் என்றே தெரியாமல் எங்கும் செல்ல முடியாது – வேத நூலில் சொன்ன மார்க்கம் வேண்டுமானால் அதை அறிதலும் அதன் படி நடத்தலும் முக்கியமாகிறது அதற்க்கு வேதத்தையே பிரமாணமாக கொள்ள வேண்டியது உள்ளது
// ஆன்ம ச்வபாவத்தை அறிந்து விட்டால் முக்தி என்று எப்படி கொள்வது – அது என்னமோ நீங்களே அடைந்தது போல் உள்ளது அதற்க்கு கடவுள் எதற்கு – அவன் மனம் வைக்காவிடில் என்ன பணியும் ஒரு பிரயோஜனமும் இல்லை – அவன் மனம் வைத்தால் எதுவும் பண்ணவே வேண்டாம் //
அன்புள்ள சாரங்,
பாலா நம்மாழ்வாரைப் படித்திருப்பார் போலும். நம்மாழ்வார் கூறுவதைப் பாருங்கள்:
நன்றாய் ஞானம் கடந்துபோய்
நல்லிந்திரிய மெல்லா மீர்த்து
ஒன்றாய்க் கிடந்தவரும் பாழ்
உலப்பிலதனை உணர்ந் துணர்ந்து,
சென்றாங்கின்ப துன்பங்கள்
செற்றும் களைந்து பசையற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே. (திருவாய்மொழி 8-8-6.)
உரை: நம் ஸ்வரூபத்தை மறைக்கும் ப்ரக்ருதியின் ஸம்பந்தத்தை விலக்கி இந்திரியங்களை ஜெயித்து விஷயங்களோடு உள்ள ஸம்பந்தத்தையும் அதின் ருசி வாஸனைகளையும் விட்டால் ஆத்மாவின் மறைந்த ஸ்வரூபம் தோன்றும். அதுவே மோக்ஷம், மோக்ஷத்தின் ஆனந்தமும் அதுவே.
இங்கும் முக்தி உன்னதக் கவிதையாகவே பாடப் பட்டுள்ளது, தன் தத்துவ வீச்சை முழுவதும் நிரப்பியபடி!
// எதுவுமே வேண்டாம் என்னை பூரணமாக சரண் புகுந்தால் உனக்கு முக்தி தருகிறேன் கவலை படாதே என்று கடைசியாக சொல்கிறானே கண்ணன் அப்போ அது என்ன ஆபிரகாமிய கொள்கையா இல்லை அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லையா//
மோஷ த்வாரத்தின் *ஒரே* கேட்-கீப்பர் போன்று ஒரே ஒரு சமயவாதக் கடவுளை (thiesitic deity) உருவகித்தால் தான் ”நம்பிக்கை” என்பதை இந்த அர்த்தத்தில் பார்க்கத் தோன்றும். the conception of Shiva/Vishnu/Shakthi as theistic deities is only in lower plane. In higher planes, at least for Vedantins, it is all manifestations of Brahman only.
எதுவுமே வேண்டாம் என்றால் என்னத்திற்கு கீதை 18 யோகங்களை உபதேசிக்க வேண்டும்?? சரணாகதி பற்றி ஒரு சுலோகம் போதாதா? கீதையே யதேச்சஸி ததா குரு (எப்படி இஷ்டமோ அப்படிச் செய்) என்று பின்னர் கூறுவதைக் கவனியுங்கள்.
முக்தி என்பது ஒரு “நிலை”. ஒரு செயல்பாடோ, அல்லது ஒரு இலக்கோ கூட அல்ல. தூய வேதாந்தத்தில் கட்டுகளற்ற விடுதலை என்றே அது பேசப்பட்டுள்ளது (”வீடு” என்ற தமிழ் சொல்லுக்கும் அதுவோ பொருள்). சரணாகதி தத்துவம் என்பது பக்தி மார்க்கத்தில் ஒரு உன்னத பாவனையாக சொல்லப் பட்டுள்ளது, அதுவே முக்தி அல்ல.
மேலும், பக்தி/சரணாகதி என்பது ஒரு *மார்க்கம்* மட்டுமே. அது ஒரு *நிலை* அல்ல. ஆத்ம-ஸ்வரூப-தர்சனம் எனப்படும் தன்னிலை உணர்தலே முக்தி என்று வேதாந்தம் கூறுகிறது.
ஜடாயு அவர்களே
நம்மாழ்வாரின் ஒரு பாசுரத்தை கூறும் நீங்கள் அவர் மற்றவைகளில் சொன்னதை பார்க்கவில்லையே – அவர் ஆன்மாவிற்கு அடிமை ஸ்வபாவம் தான் காட்டினார் – ஆன்ம ஸ்வரூபம் என்று அவர் சொல்லுவது ஆன்மா செஷியின் செஷன் என்பதை அறிவதே
உன்னடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே (கண்ணன் சொல்லும் சரணாகதி).
நோற்ற நோன்பிலேன் நுண் அறிவிலேன் (ஒரு தகுதி இல்லாமலே முக்தி கிட்டும் என்று நாம் தெரிந்து கொள்ள)
அடியேன் சிறிய ஞானத்தன் – [அடியேன் என்பதன் மூலம் அடிமை என்பது, சிறிய ஞானத்தன் என்பதன் மூலம் ஆன்மாவிற்கு ஞானம் அழகல்ல என்றது]
தீர வினைகள் தீர என்னை ஆண்டாய் .. உனக்காட்பட்டும் அடியேன் இன்னும் உழல்வேனே – [வினைகள் தீர்ந்தாயிர்று (ஆன்ம நிலை அறிந்தாயிற்று) ஆனாலும் இன்னும் இங்கு உழல்கிரேனே எங்கே மோக்ஷம் என்னபாடு போலே]
ஆவிக்கொர் பற்றுக்கொம்பு – ஆன்மாவை அறிந்தால் மட்டுமே ஏற்படுமா இந்த எண்ணம்
அடியேன் ஆவி அகமே தித்திப்பாய், அமர அழும்ப துழாவி என் ஆவி அமர தழுவிற்று [ஆன்ம நிலையை நன்கு உணர்தல், பரிபாஷையே ஆண்மவிர்ற்கும் கன்னனுக்குமாய் இருத்தல் - இதன் பின்னும் பல பாசுரங்கள பண்ணி இந்த லோகத்தில் தானே இருந்தார் ஆழ்வார்]
கண்ணிடம் போய் என் நெஞ்ஜாரை கேட்டதாக சொல் – கண்ணனிடம் என் நெஞ்சு உள்ளது அதில் அவன் உள்ளான் அதனால் நெஞ்சார் என்று மரியாதையுடன் சொன்னது [பக்தியின் உச்சம்]
எனதாவி யார் நான் யார் தந்த நீ கொண்டாக்கினையே – நீயே அதிகாரி, நான் ஒன்னும் என்னை உன்னுள் செலுத்தவில்லை , நீயே எடுத்துக்கொண்டாய் என்றது]
இப்படி பல இருக்க நமக்கு வேண்டிய பொருளை தரும் ஒரு பாசுரத்தை மட்டும் பார்த்தல் அது பூரணமாக ஆழ்வாரின் வாக்கை பிரதிபலிக்காது
//
// எதுவுமே வேண்டாம் என்னை பூரணமாக சரண் புகுந்தால் உனக்கு முக்தி தருகிறேன் கவலை படாதே என்று கடைசியாக சொல்கிறானே கண்ணன் அப்போ அது என்ன ஆபிரகாமிய கொள்கையா இல்லை அவன் சொன்னதில் நம்பிக்கை இல்லையா//
மோஷ த்வாரத்தின் *ஒரே* கேட்-கீப்பர் போன்று ஒரே ஒரு சமயவாதக் கடவுளை (thiesitic deity) உருவகித்தால் தான் ”நம்பிக்கை” என்பதை இந்த அர்த்தத்தில் பார்க்கத் தோன்றும். the conception of Shiva/Vishnu/Shakthi as theistic deities is only in lower plane. In higher planes, at least for Vedantins, it is all manifestations of Brahman only.
//
பாலா குறிப்பிட்ட நிஷ்டைகள் எதுவும் தேவை இல்லை – கண்ணன் என்னிடம் சரண் என்றால் போதும் என்பதை விளக்குவதற்காக சொன்னேன் – இதயுமா சமயவாதம் என்று பார்க்கத் தோன்றுகிறது – கண்ணன் மாம் ஏகம் என்று தானே கூறினான் – பர பிரம்மம் ஏகம் என்று கூறவில்லை – அவர் சொன்னதை மாற்றி சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை
இதே யக்ஞவல்கர் சொன்னதை சொல்வதேன்றானால் – எல்லாம் அந்த இஷ்வரன் தான், ஹிரண்ய கார்பன் தான் என்று சொல்லி இருப்பேன் அங்கு கண்ணன் என்று பிரயோகித்திருக்க மாட்டேன்
//
எதுவுமே வேண்டாம் என்றால் என்னத்திற்கு கீதை 18 யோகங்களை உபதேசிக்க வேண்டும்?? சரணாகதி பற்றி ஒரு சுலோகம் போதாதா? கீதையே யதேச்சஸி ததா குரு (எப்படி இஷ்டமோ அப்படிச் செய்) என்று பின்னர் கூறுவதைக் கவனியுங்கள்.
//
இதற்க்கு எனக்கு தெரிந்த இரண்டு பதில்கள்
முதலாவது – இவ்வளவு சொன்னேன், இது எதுவுமே முடியலன்னா இத பண்ணு. எனக்கு துளசி தீர்த்மாவது கொடு என்று கடைசியாக சொல்லவில்லையா அது போல் தான்
இரண்டாவது – இது வைஷ்ணவ ஆசிரியர்கள் கொள்ளும் நிலை – சரம ச்லோகமானது முமுக்ஷுவான வைஷ்ணவர்களுக்கு மூன்று ரஹச்யங்களில் ஒன்று [முமுக்ஷுவுக்கு அறியவேண்டிய ரஹச்யம் மூன்று] – கீதையில் இந்த சரம ஸ்லோகமே முக்கியமானது என்று கொள்வர் – அது பிரபத்தி மார்கத்தை விவரிப்பதனால். இப்படி இருக்கையால் – சரம ஸ்லோகமே முக்கியமான கீதா வாக்கியம், முன் உள்ளவை எல்லாம் வெறும் அவதாரிகை என்பது அவர்களின் நிலை பாடு
//
மேலும், பக்தி/சரணாகதி என்பது ஒரு *மார்க்கம்* மட்டுமே. அது ஒரு *நிலை* அல்ல. ஆத்ம-ஸ்வரூப-தர்சனம் எனப்படும் தன்னிலை உணர்தலே முக்தி என்று வேதாந்தம் கூறுகிறது.
//
நீங்கள் நான் எழுதியதை முழுவதும் மறுபடியும் படித்து பாருங்கள் – இதை நான் மறுக்கவில்லை ஆனால் இப்படி செய்தால் முக்தி நிச்சயம் என்ற எண்ணம் சரி அல்ல அது பகவாநிடதிளிருந்து அவனது உரிமையை பறிப்பது போலே என்பது தான் எனது அபிப்பிராயம் – [எனதாவி யார் நான் யார் தந்த நீ கொண்டாக்கினையே] – மேலும் ஆத்மா ஸ்வரூபத்தை உணர்தலே முக்தி என்றால் ஆத்மா ஸ்வரூபத்தை உணர்ந்தவர்கள் உணர்ந்த மாத்திரமே இவ்வுலகை விட்டு போய் விடுவர் (ஆன்ம போய் விடும்) – அப்படி நடப்பதில்லையே – சிவா பதமோ, பரம பதமோ அல்லது பர பிரம்ம பதமோ அடைவது தான் முக்தி என்றால் அதற்க்கு பர பிரம்மத்தின் ஒப்புதல் தேவை படுகிறது – கண்ணன் ஆன்ம நிலையை உணர்ந்தவர்களை தத்வதர்சி, முமுக்ஷு, ச்திதப்ரஞன் (மோக்ஷம் அடைய நினைப்பவர்கள், தகுதி உடையவர்கள்) என்று தான் சொல்கிறானே ஒழிய மோக்ஷம் அடைந்தவர்கள் என்று கூறவில்லையே
இதை கொண்டே இஷ்வர இச்சை மோக்ஷத்திற்கு அவசியம் என்று சொன்னேன் – இஷ்வரன் பர பிரம்ம வடிவில் இருப்பினும் அந்த பிரம்மத்தின் இச்சை அவசியமாகிறது
மேலும் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆன்மாவை த்யாநிப்பவன் கைவல்யம் என்ற இரண்டாம் தர மோக்ஷம் அடைகிறான் என்று கொள்கிறார்கள் (இது fyi – விவாதத்திற்காக அல்ல)
அய்யா பெரியாரிஸ்ட்
//
நீங்கள் அனைவரும் முக்தி அடைந்துவிட்டாலே, எங்களுக்கு வேலை இல்லை
//
நீங்கள் பெரியாரை போல் இல்லாமல் உண்மையை ஒத்துக்கொள்கிறீர்கள்
உங்களுக்கு வேலை இருக்காது
நாங்கள் அனைவரும் முக்தி பெற்றுவிட்டால் – இங்கு கோவில்களே தேவை இல்லை (இருக்காது) அப்புறம் எந்த கோவிலின் முன்பு பெரியார் சிலையை திறப்பீர்கள் அதற்க்கு மாலை மரியாதை எல்லாம் செய்வீர்கள்
உங்களுக்கு வேலை இருக்காது
ஒவ்வொரு மைல் கல் பக்கத்திலும் “கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை” என்று எழுத வேண்டி இருக்காது
உங்களுக்கு வேலை இருக்காது
அஞ்சு ரூவா பிரியாணிக்காக எக்கக்செக்க வெயிலிலும் (பகுத்தறிவே இல்லாமல்) கருப்பு சட்டை கருப்பு பான்ட் போட்டுக்கொண்டு மைக் புடிச்சு இஷ்டப்படி சம்மந்த சம்மந்தமே இல்லாமல் கஷ்டப்பட்டு ஏதேதோ உவமானம் கூறி எதுகை மோனையுடன் சங்கராச்சர்யரையும், கோவில் அர்ச்சகர்களையும், பிராமணர்களையும் திட்ட வேண்டி இருக்காது – பாவம் பிரியாணி கிடைக்காதே
இப்பொழுதே முதல்வரிடம் சொல்லி திக காரர்களுக்கெல்லாம் வாழ்நாள் முழுவதும் இலவச பிரியாணி போட ஏற்பாடு செய்யுங்கள் – அதற்காக ஒரு ஆர்பாட்டம் வேண்டுமானாலும் செய்யுங்கள் அதில் தயிர் சாதத்தையும், சாம்பார் சாதத்தையும் இஷ்டப்படி வெய்யுங்கள்
உங்களுக்கு வேலை இருக்காது
வெறும் சர்சுக்களும், மசூதிகளும் தான் எஞ்சி இருக்கும் – அதை மறுப்பதற்கு வேறு ஒரு கூட்டம் இருக்கும் – உங்களுக்கு அதில் பங்கு இல்லை ஏன் என்றால் பெரியாருக்கு இந்து கடவுள் தான் கிடையாதே தவிர மற்றவை பற்றி ஆட்சேபனை ஏதும் இல்லை – தவறி நீங்கள் ஏதேனம் சில்மிஷம் செய்தாலும் உங்களுக்கு பேராபத்து வண்டு சேரும் என்ற பயம் இருக்கும் அதனால் வேலையே இல்லாமல் சும்மாவே தான் இருப்பீர்கள்
பெரியாருக்கு கஷ்டமே இருக்காது – ஒரு பெரிய கூட்டத்தில் முட்டாள்கள் யார், அவர்களை கண்டு பிடித்து சீடர்களாக கொள்ள வேண்டும் என்ற சிரமம் பட நேராது – மேலே பார்பதுவெல்லாம் ஆகாசமாய் இருப்பது போலே
திரு ஜடாயு அவர்களே,
‘சமயவாதம், சமயவாதம்’ என்று கூறுகிறீர்கள். உங்களுடைய தளத்தில் நீங்கள் ஆதி சங்கரரைப் புகழ்ந்துல்லீர்கள். நீங்கள் ஆதி சங்கரர் சூத்திர பாஷ்யத்தில் கூறியுள்ளதை ஏற்பீர்கள் என்று நம்புகிறேன் (பிரும்ம சூத்திர பாஷ்யம், 2.2.42): http://www.sacred-texts.com/hin/sbe34/sbe34218.htm
என்று கூறுகிறார். அதாவது, ஆதி சங்கரர் ‘மறந்தும் புறன்தொழாமை’ என்ற சித்தாந்தத்தை ஒரு பொழுதும் எதிர்க்கவில்லை. ஒரு பொழுதும் அதை ‘கீழான நிலை, குறுகிய மனப்பான்மை’ என்று கூறவே இல்லை. பிரும்ம சூத்திரத்திலும் இறுதி சூத்திரத்தில் அவர் “நிர்குண பிரம்ம நிலையை அடைந்து மோக்ஷம் பெறலாம். அல்லது, சகுண உபாசனை வழி சென்று விஷ்ணுவினுடைய பரமபதத்தை அடையலாம். இரண்டுமே புனராவிருத்தி (சம்சாரக் கடலில் மறுபடி பிறப்பு எடுத்தல்) அல்லாத இடங்கள். இவ்விரு வழிகளும் சம்சாரத்தில் இருந்து விடுதலை அளிக்கவல்லது.” என்றும் சொல்லியுள்ளார்.
//
the conception of Shiva/Vishnu/Shakthi as theistic deities is only in lower plane. In higher planes, at least for Vedantins, it is all manifestations of Brahman only.
//
அனைவரும் “higher plane (பரமார்த்திகம்)” என்றும் “lower plane (வியாவஹாரிகம்)” என்று ‘இரண்டு தத்துவ நிலைகள் உள்ளன’ எனும் அத்வைத வேதாந்தத்தை ஆதரிக்க வேண்டும் என்று தேவை இல்லை. வேதாந்தம் என்றாலே அத்வைதம் அல்ல; விஷிஷ்டாத்வைதமும் த்வைதமும் வேதாந்த மார்கங்களே என்பது அந்த அந்த மதத்தைப் பின்பற்றுவர்களுடைய நபர்களின் கோட்பாடு. மேலும், ஆதி சங்கரர் “சகுண மோக்ஷ லோகமும் (பரமபதமும்) புனர் ஆவிருத்தியற்றது” என்று சொல்லியுள்ளார். ஆகையால், ஸ்ரீவைஷ்ணவர்கள் காலங்காலமாக பின்பற்றி வரும் வழிபாட்டு வழிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அத்வைத மதத்தைப் பின்பற்றுவார்கள் கோருவது சரி அல்ல.
அத்வைத மதத்தின் வியாவஹாரிக்க நிலையில் சர்வாந்தர்யாமியான, சர்வசக்தனான, சர்வஜ்ஞனான பகவான் ஒருவரே உண்டு. அந்த பகவான் உபாசனைக்காக சில உருவங்களை எடுத்துக் கொண்டு வருகிறான் என்பதும் சங்கரர் ஒத்துக் கொண்டுள்ளதே. ஆகையால் வியாவஹாரிக்க நிலையில் theism என்பதும் உண்டு. இதை ஆதி சங்கரர் பாஷ்யங்களில் நன்கு விளக்கியுள்ளார்.
ஜீவ்ஸ்
//
இங்கு ஏன் கிருஷ்ணனே சொன்னார் என்று சொல்கிறீர்கள் – உங்களுக்கு ஒரு வரையறை, கிருஷ்ணன் என்ற ஒரு கோட்பாடு தேவை படுகிறது – அது போல தான் மத கோட்பாடுகளும் – யாரும் கடவுளை மதத்தினுள் அடைக்கவில்லை – அந்த மூன்று பிரமாணங்களும் பரமாத்மாவை பற்றி பறக்க பேசுபவை – பரமாத்மா என்பது பொது தத்துவம் – நீங்களே அந்த பிரமானன்களுள் ஒன்றை தான் கூறுகிறீர்கள், இது பிரமாணம் ஆதலால் கேள் நம்பு என்கிறீர்கள்
(இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன்)//
கிருஷ்ணன் சொன்னதைச் சொன்னது விளங்கிக் கொள்ள அல்லது விளக்கிச் சொல்ல. மறுபடியும் நாம் விரல்களைப் பற்றிக் கொள்ளவே விரும்புகிறோம். நிலவை ஏன் நேரடியாக பார்க்கக் கூடாது ?. க்ருஷ்ணன் ஒரு பெயர். அது காட்டும் நிலவை நாம் விட்டுவிட்டு பெயரில் நிற்கிறோம். அதைத்தான் குறிப்பிடுகிறேன்.
கிருஷ்ணன், சிவன், பிரமன், விஷ்ணு இந்தப் பெயர்கள் தெரியாத ஒருவன் வீடுபேறு அடைய முடியாதா ? முடியும். தன்னையறிந்து தன்னுள் தானறிந்து தன்னை விடுத்தல் நடக்கும் போது. சைக்கிள் பழக முதலில் துணை வேண்டும். அப்போது நம் கவணம் முழுதும் ஹாண்டில் பார், ரோடு என்று இருக்காது. சொல்லிக் கொடுப்பவர் பின்னாடி பிடித்திருக்கிறாரா என்ற கவனத்தில் தான் இருப்போம். அது தான் நீங்கள் சொல்லும் பிரமாணங்கள். அந்தப் பிரமாணங்கள் மட்டுமே போதுமானவையா ? நீங்கள் சைக்கிள் நன்றாகப் பழகியப் பின் உங்கள் கவனம் எங்கு சிதறி இருப்பினும், வண்டி சரியான பாதையில் ஓடும். அப்போது பிரமாணங்களைக் கொண்டுதான் வழித்தடத்தில் செல்லுவேன் என்பது அபத்தம்.
அதே போல சிலர் தானே தத்தி தத்தி விழுந்து எழுந்து கற்றுக் கொள்வார்கள். அவர்கள் வண்டியே ஓட்டத் தெரியாதவர்களா ? இருவருக்குமே குறிக்கோள் ஒண்று தான். ஆனால் கடைசி வரை ஒருத்தர் என் வண்டியைப் பிடித்தால் தான் வண்டி ஓட்டுவேன் என்பது அபத்தத்திலும் அபத்தம் இல்லையா ?
//
வேதாந்த சனாதன தர்மத்தில் ஊறி திளைத்தவர்கள், ஜ்யானிகள், புத்தமும், சீனமும் சனாதன தர்மத்தை களவாடிய பொது அதை மீட்டுக்கொண்டு தந்தவர்கலான சங்கரர், ராமானுஜர், மத்வர் மற்ற ஜ்யானிகள் சனாதன தர்மத்தை தெரிந்து கொள்ள இந்த மூன்று நூல்கள் பிரமாணம் என்று கொண்டார்கள் – இல்லை என்று நீங்கள் சொன்னால் நீங்கள் போகும் வழி வேறு (அவர்களின் வேதாந்த வழி அல்ல) அவ்வளவே விஷயம்//
எத்தனையோ மகா புருஷர்கள் உதித்த திருநாடு. மேலே நீங்கள் குறிப்பிட்டவர்கள் வணங்கத் தக்கவர்கள் அவர்கள் சொன்னது எல்லாம் அற்புதமானவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர்கள் சொன்னது மட்டுமே சரி என்று சொல்ல வருவதைத் தான் சரியில்லை என்று சொல்ல வருகிறேன். எதையும் சோதித்து அறிந்துக் கொள் என்கிறதல்லவா நீங்கள் சொல்ல வரும் பிரமாணமும் ?
// இங்கு இறுதியாக கொள்ளப்படுவது என்பது “the only and final” என்ற அர்த்தம் இல்லை – நீயே பார்த்து முடிவு செய், நீயே யோசித்து ஆராய்ந்து முடிவு செய், இதுவும் முடிவில்லையா அப்போது இந்த ப்ராமானதிர்க்கு வா – மேலும் உனது முடிவுகள் முன்னோர் கடும் தவம் செய்து உலக நன்மைக்காக தங்களையும் வருத்தி கொண்டு ஆராய்ந்து கொணர்ந்த அந்த பிராமணத்தின் படி உள்ளத என்று பார் என்பது தான் திருஷ்டாந்தம்
//
சரிதான். ஆனால் அதை ஏன் சில மூன்றுக்குள் அதுவும் சமஸ்கிருதத்தில் இருந்தால் தான் ஒப்புக்கொள்வேன் என்பதெல்லாம் ? இதைச் செய்யாதே இதை மட்டுமே செய் என்பது ஒடுக்குதல் மதத்தின் செயல். இந்துவாக இருப்பதற்கு ஒரு இப்படிச் செய் என்ற கட்டுப் பாடு வேண்டாம். வழிக்காட்டுதல் மட்டுமே போதும். அதன் படி நடப்பதும் வீழ்வதும் அவன் கர்மா ( அப்படி என்று ஒன்று இருந்தால் )
சமஸ்கிருதம் தருவதே முக்தி காட்டும் நூல் என்பதெல்லாம் பம்மாத்து. மொழி ஒரு கருவி. அவ்வளவே. தமிழில் இல்லாதவையா ?
வேதாந்த வழி / பக்தி வழி எனும்போது திருப்புகழின் திருவாசகத்தின் இனிமையும், தேவாரப் பதிகங்களும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களும் கூட பிரமாண நூல் வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம்.
அதி தீவிர வேதாந்த தத்துவங்கள் மட்டுமே என்றால் அற்புதமான சித்தர் பாடல்களையும் கொள்ளலாம். ஆகவே பிரமான நூல் “அவை மட்டுமே” என்று குறுக்குதல் ஏற்க முடியாது. பாரதியின் பல பாடல்கள் தரும் மெய் சிலிர்ப்பை சம்ஸ்கிருத ஒலிக் கோர்வை எனக்கு அளிக்க முடியாது.
// இதை இறுதியாக கொள்ளாமல், ந்யாய, வைசேசிக, யோக, சங்க்ய மதங்கள் இருந்தனவே – அவைகளுக்கு இந்த மூன்றும் பிரமாணம் அல்லவே, இவையும் சனாதன தர்மத்தின் அங்கமாகி விட்டனவே?
//
ஆகவே இங்கு கூறும் பிரமானமானது வேந்தாந்த விஷயத்தை அறியவே. இது தான் கடவுள் என்று அவரை கட்டுப்படுத்த அல்ல – வேதாந்த மார்கமாக எழுதும் பொது இவை மூன்றையும் பிரமாணமாக கொண்டே தீர வேண்டும் – தமிழில் பேசினால் தமிழ் இலக்கணம் இல்லாமல் எப்படி பேச முடியும் அது போலவே
இறுதி நூல், இறுதி தூதர் என்பது வேறு – உலகத்தவரே (பாவிகளே) இதுக்கு முன் இருந்தவையும் பொய், பின் வரப்போவையும் பொய் இதுவே மெய் இது அல்லால் ஏதும் இல்லை ஜாக்கிரதை என்பது தான் இங்கு அறிகிறோம்
பிரமாணமாக கொள்ளும் இறுதி நூலானது இலக்கணம் போல – இதற்க்கு மேல் எனக்கு சரியாக எழுதவரவில்லை
//
இறைவனைப் பற்றிய அறிவை/ தெளிவை எந்த ஒரு நூலும் ஏற்படுத்த முடியாது. 100% தூரத்தில் ஒரு அடி எடுத்து வைக்கத் தூண்டும் தூண்டுகோல் என்ற அளவில் இருக்கலாமே தவிர அவையே பிரமாண நூல்கள் அவற்றைக் கொண்டே வீடுபேறு என்பது – என்னளவில் பேத்தலான விஷயம்.
//
தமிழ் இந்து என்ற போதில் அது மட்டுமே பேசவேண்டும் என்றில்லை. அக்கம் பக்கம் அறியாமல் நான் மட்டுமே சரி என்பதைப் போலவாகிவிடும்.
ஒரு சிறிய விண்ணப்பம் – ஓரிரண்டு பதில்களை படித்து விட்டு இவன் இப்படிதான், இந்த கொள்கை உடையவன் நம் போல் பரந்த மனம் இல்லையே உனக்கு வாழ்த்துக்கள் கூறி விடை பெறுகிறேன் என்று முடிவு கட்டுவது சரியல்ல – பதில்களை “context” உடன் மட்டும் பார்த்து, வலை தளத்தில் எழுதும் பொது நமது கருத்தை முழுமையாக விளக்க இயலாமல் போகிவிடும் என்பதையும் மனதில் கொண்டு ஒரு முடிவுக்கு வர வேண்டுகிறேன் //
Lets Discuss It
( No Arguments
only discussion )
திரு ஹரன்
// சொற்பிரயோகம் தவறு ஜடாயு. ஜோதிஷம் உங்களுக்குப் பிடிக்காமலும் அதில் உங்களுக்கு நம்பிக்கையில்லாமலும் இருக்கலாம். அதற்காக அதைக் கற்றவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதைச் “சிறுபிள்ளைத்தனம்” என்று கூறுவது சரியில்லை.//
// தமிழ் ஹிந்து வாசகர் கூட்டத்தில் யாரும் குருடர்கள் அல்ல ஜெயஸ்ரீஜி, இருட்டில் உள்ளவர்களும் ஒளி தேடுபவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஒளி பெற விருப்பம் உள்ளவர்கள் பெற்றுக் கொள்ளட்டும்.//
நன்றி ஹரன்ஜி.
முன்பு, வருடப்பிறப்பு பற்றிய கட்டுரைக்கு மறு மொழி பகர்ந்த திரு தமிழ் செல்வன் அவர்கள், சங்கத் தமிழில் காணப்படும் ஜோதிடக்க்கருத்துக்களை எழுத ஊக்கமும், வரவேற்பும் கொடுத்ததையும் நினவு கூர்கிறேன். ஆனால், ஜோதிடம் என்றாலே முணுக் – என்று கோபமும், எரிச்சலும் கொண்டு ஜடாயு அவர்கள், மாண்டூகராக
மாறுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கிறதே அன்றி, வேறு எப்படியும் நான் இதைப் பார்க்கவில்லை.
வேதாந்தமும், ஆயிரக்கணக்கானோரின் அவதிகளையும் தெரிந்து கொள்ள வழி செய்த ஜ்யோதிஷமும் அளிக்கும் விருப்பு வெறுப்பற்ற மனமும், சம நோக்கும் (ஸ்தித -ப்ரக்ய) தொற்றிக் கொள்வதால், புகழ்ந்தால் நான் புல்லரித்து விடுவதில்லை. இகழ்ந்தால் இறந்து விடுவதும் இல்லை. ஆனால் இகழப்படுவது “ஜ்யோதிஷமயனம் சக்ஷுஹு” எனபப்டும் வேத புருஷனின் கண் என்பதாலும், கண்ணெனப் படுவதால், வேதத்தை ஜ்யோதிஷதின் மூலமே அறிந்து கொள்ள முடியும் என்பதாலும், எவ்வாறு இதன் மூலம் வேத புருஷனை அறிந்து கொள்ளலாம் என்று சொல்ல வேண்டியது என் கடமை.
இன்னும் சொல்லப்போனால், கட்டுக் கதை என்றும், myth என்றும் பலரும் நினைக்கும் புராணக் கூற்றுகள், உண்மை என்பதையும், அவை காட்டும் உள் அர்த்தத்தையும் ஜ்யோதிஷம் வாயிலாக மட்டுமே அறிய முடியும். பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதாக ஒரு விஷயத்தை இங்கே கூறுகிறேன்.
மேரு மலையைப் பற்றி ஆங்காங்கே புராணங்களில் காணலாம். மந்தர மலை எனப்படும் மேரு மலையை ஆதாரமாகக் கொண்டு பாற் கடலைக் கடைந்த கதை பலருக்கும் தெரியும். இந்த மேரு மலை எங்குள்ளது என்பதற்கு புராணங்களிலேயே வேறுபட்ட விளக்கங்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஜ்யோதிஷம் மூலம் புரிந்து கொள்ளலாம்.
விண் வெளியைத் துல்லியமாகக் கணிக்க அந்நாளில் கோள வடிவப் பந்தினைக் கொண்டு அறிவார்கள். ஜோதிட சாத்திரத்தில் விளக்கப்பட்டுள்ள இந்தப் பந்தின் நடுவே, வட, தென் துருவங்களை இணைக்கும் அச்சை ஜோதிடத்தில் மேரு என்பர். மேரு என்பது பூமியின் அச்சாக பொருள் கொள்ளப்பட்டு அது பல் வேறு காலக் கட்டங்களில் வேறு வேறு அளவில் சுழன்றது.
மேருவை ஆதாரமாகக் கொண்டு பால் கடல் கடையப் பட்டது என்பது புராணக் கதை. கடைதல் என்றாலே. தயிர் கடைவது போல இப்படியும், அப்படியுமாக, இரு புறமும் மாறி மாறி சுழற்றுவது. 23 – 1/2 பாகை என்று தற் சமயம் ஒரு புறம் சாய்ந்த பூமி, முன்பு வேறு புறமும், வேறு பாகையிலும் சுழன்றது என்று இது காட்டுகிறது. இந்தக் கடைதலில், பூமியின் உள் புறத்தில் உள்ளவை மேல் புறமும், மேல் பாகத்தில் உள்ளவை உள்புறமும் உருட்டிப் போடப்படும். நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன் பூமி உருவாகிக் கொண்டிருந்த காலத்தில், இந்தக் கடைதல் அதிகமாக இருந்திருக்கும். அதன் விளைவாக, பூமி பகுதிகள் சிதறி கொண்டிருந்தன. இதை, மலைகள் இறக்கை கொண்டு பறந்தன என்று சொன்னார்கள். வால்மீகி ராமாயணத்தில், மைனாக மலை, தான் அப்படிப் பறந்ததாகச் சொல்கிறது. இந்திரன் வஜ்ராயுதத்தினால், தன இறக்கைகளை வெட்டிப் போடவே, கீழே விழுந்து, ஒரே இடமாக உட்கார்ந்து விட்டதாகச் சொல்கிறது. இந்திரனின் ஆயுதம் , இடி, மின்னல். எனவே, இடி விழுந்து, மலைகள் துண்டாகி ஆங்கங்கே விழுந்து அமர்ந்துவிட்டன என்று தெரிகிறது.
மேலும் இந்தக் கடைதலில், பூமியின் உள்ளே உருவான விஷ வாயுக்களே முதலில் வெளி ஏறியிருக்கும். அதை உண்டவர் சிவபெருமான். பின்னால் வந்த நவ நிதிகளும், பலவித நவரத்தினங்கள். இன்றும் சிறந்த ரத்தினங்கள் எரிமலைப் படிமங்களிலிருந்து எடுக்கபடுகின்றன. இப்படியே பால் கடலைக் கடைந்த நிகழ்ச்சியை விவரிக்கலாம் – மேரு மலை என்பது எது என்று நமக்குத் தெரிந்தால்! அது பூமியின் அச்சு என்ற அறிவைத் தருவது ஜ்யோதிஷம்.
அது அச்சு மட்டுமல்ல. பல் வேறு இடங்களில் வேறு பொருளிலும் மேரு வருகிறது. அதில் ஒன்று மேரு என்பது வட துருவம். சிவபெருமானின் ஆதிகால இருப்பிடம் வடதுருவப் பனி மண்டலம். விசுவ கர்மா அங்கே சிவனுக்கு மாளிகை அமைத்தான் என்றும், பின்னாளில் இமயத்தில் அமைத்தான் என்றும் புராணக் கதை உண்டு.
பூமியின் அச்சின் உச்சி வட துருவம். பனிப் பகுதியாக இருந்த அந்த இடம் ஆதி நாளில் சிவனது இருப்பிடமாக இருந்தது. இது குறித்த பிற கருத்துக்களை, அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன்.
மேருவைச் சுற்றி சூரியன் வலம் வரும். அச்சின் சாய்மானம் வேறாக இருக்கும் காலத்தில் சூரியன் வட துருவத்தை சுற்றும் கோணத்தில் இருந்திருக்க வேண்டும். ஒரு வித சாய்மானத்தில், பூமியின் வட பகுதி மட்டுமே சூரியனை ஆறு மாதம் கண்ட காலம் இருந்திருக்க வேண்டும். மீதி ஆறு மாதம் சூரியனைக் காணாது இருந்திருக்க வேண்டும். இவ்வாறு கூறும் கதைகள் புராணங்களில் மட்டுமல்ல, புற நானூறு 174 – லும் சொல்லப் படுகிறது.
இங்கே சொல்லப்படும் விஸ்வகர்மா என்பவன் தேவ சிற்பி. சூரியக் குடும்பத்தை (கிரகங்கள்) அதனதன் நிலையில் வைத்த அந்த சூரியனே விஸ்வகர்மா என்பது வாஸ்து சாத்திரம் சொல்லும் விஷயம். சூரியனின் ஈர்ப்பு சக்தியால், கிரக மண்டலம் தங்கள் சம நிலை (equilibrium) அடைந்தன என்பது நாம் அறிந்த அறிவியல். இதை விஸ்வகர்மா அமைத்தான் என்று கதையாகக் கூறுவதன் பொருள் என்ன என்று காட்டுவது ஜ்யோதிஷமே.
மேலும், மேரு மலை மற்றொரு பொருளிலும் வருகிறது. இதன் படி பார்த்தால், மேரு மலை என்பது பூ மத்திய ரேகைப் பகுதியில் இருக்க வேண்டும். ஒரு நட்சத்திரம், மேரு மலைக்குக் கிழக்கே உதிக்கும் பொழுது, அதே நட்சத்திரம் இலங்கைக்கு உச்சியில் இருக்கும் என்று பிரம்ம சித்தாந்தம் என்னும் ஜோதிட சித்தாந்தத்தில் பிரம்மகுப்தர் கூறுகிறார். அப்படி என்றால், மேருவுக்கும், இலங்கைக்கும் இடையே உள்ள தூரம் 90 பாகைகள். இலங்கைக்கு மேற்கே 90 பாகைகள் தொலைவில் மேரு இருந்தால்தான் இது சாத்தியம். இலங்கைக்கு மேற்கே இந்தப் பகுதியில் தற்போது இருப்பது அட்லாண்டிக் பெரும் கடல்.
சரி, நீருக்குள் ஏதேனும் இருக்குமா என்றால், இருக்கிறது mid-Atlantic ridge எனப்படும் நீண்ட மலை தொடர். சென்ற நூறு ஆண்டுகளே தெரிய வந்துள்ள இம்மலைத் தொடர் துருவப் பகுதி வரை செல்கிறது. இதன் அமைப்பும் முதலில் சொன்ன அச்சு போல துருவங்களை இணைக்கும் நடுப் பகுதி. இங்கு எந்நேரமும் கடைதல் நடந்து கொண்டு. பூமியின் mantle கொந்தளித்து வெளியேயும் உள்ளேயும் சென்று கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிகின்றன. (wikipedia – வில் படிக்கலாம்).
இந்த மலைப் பகுதியில்தான் மேரு இன்னும் சிகரம், ஒரு காலத்தில் கடல் பரப்புக்கு மேலே உயர்ந்து இருந்திருக்க வேண்டும்.
மேரு என்று பிரம்மகுப்தா சொல்லும் இடத்தில் ‘ரோமக தேசம்’ இருந்தது என்று சூரிய சித்தாந்தம் என்னும் இன்னொரு ஜோதிட நூல் சொல்கிறது. இன்றைய ரோம் வேறு, இந்த ரோமக தேசம் வேறு. மயன் என்னும் மிலேச்சன் சூரியனிடமிருந்து பெற்ற இந்த சித்தாந்தம் இன்றைக்கு நாம் பின் பற்றும் ஜோதிட நூல்களுள் ஒன்று. இன்று இந்த தேசம் இல்லை. கடலுள் மூழ்கிவிட்டது. ஆனால் இப்பகுதியில்தான் அட்லாண்டிஸ் என்று ஹோமர் எழுதிய நாடு இருந்தது. 10,000 வருடங்களுக்கு முன் முழுகிய அந்த நாடு ஏன் மிலேச்சம் என்று கூறப்பட்டது என்பதையும், அங்கே வழங்கிய ஜோதிடம் அ-வேத (வேதத்திற்குப் புறம்பானது ) சோதிடமாக இருப்பதையும், அதன் மூலம் வஷிச்டரிடமிருந்து பெறப்பட்டதையும் ஜோதிட நூல்கள் மூலமாகத்தான் அறிய முடியும்.
அது மட்டுமல்ல, சமீபத்திய மரபணு ஆராய்ச்சியின்படி, வட இந்தியர்களுக்கும், இந்தியாவின் வடமேற்குத் திசையில் உள்ள ஐரோப்பிய மக்களுக்கும் உள்ள ஒற்றுமையையும், இந்தியாவிலிருந்து வெளியே சென்றதாக ஆராய்ச்சியாளர் கருத்துக்கும் ஒட்டியே, ராமரது முன்னோர் காலத்திலேயே வெளியேறிச் சென்றவர்கள் என்பதை வால்மீகி ராமாயணம் மூலமாகவும், ஜோதிட நூல்கள் மூலமாகவும் சுட்டிக்காட்டலாம். விளக்கங்களை இங்கே படிக்கலாம்.
http://www.scribd.com/doc/22717150/Roots-of-Mlechcha-astrology
ஜோதிடம் காட்டும் மேருவைக் கொண்டே, ராஹு, கேது என்னும் பூமி, சந்திரனின் சுழற்சிப் பாதை வெட்டும் புள்ளிகளைப் பற்றியும், அவை குறித்த புராணக் கதை கூறும் கருத்தை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும், அவை எப்பொழுதெல்லாம் மாறின என்பதன் அடிப்படையில், கடைதலினால் பூமியின் அச்சு எப்பொழுது நிலை மாறியது என்பதையும் சொல்ல முடியும்.
இன்றைக்கு உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாமல், நம் நாட்டில்தான் பூர்வ வரலாறு கூறும் புத்தகங்கள், சங்கத் தமிழிலும், புராண இதிகாசங்களிலும் உள்ளன. படைப்பின் உயர்ந்த நிலையைக் காட்டும் வேதாந்தமும், பரம் பொருளின் இயல்பும் மூன்று ப்ரமாண நூலகளாக உள்ளன. உபநிடதங்களின் முடிபு பொருள், பிரம்ம சூத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை எளிதாகப் புரிந்து கொள்ள கீதை உதவுகிறது. இவை தரும் அடிப்படைக் கருத்துக்களை விவரிக்கும் programme -ஆக ஜோதிடமும் பரந்து கிடக்கிறது. இந்தப் பொக்கிஷங்கள் மேலை நாட்டினரிடையே இருந்திருந்தால், அவற்றின் அடிப்படையில் தங்களை நன்கு உயர்த்திக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.
நம்மவர்கள்தாம் இவற்றை இன்னும் புரிந்து கொள்ளவில்லை.
ஒருவர் முக்தி மார்கத்தில் எந்த நிலையில் இருக்கிறார் – அல்லது கொஞ்சமாவது முக்தி, பக்தி அல்லது, சித்தி நிலைக்கு அருகில் வருகிறாரா என்று நம் ரிஷி பராசரர் சொன்ன விம்சாம்சா என்னும் ஜோதிட வர்க்கத்தை ஆராய்ந்து வலைத் தளத்தில் பதிந்துள்ளவ்ர் ஒரு ஐரோப்பியர். எந்த நாட்டினரானாலும் வேத வழியில்தான் முக்தி என்பதை அறிந்தவர். இதில் அரசியல் கிடையாது. ஆனால் இந்திய அரசியல் வாதியின் செகுலர் கொள்கையை வேத மதத்திலும் புகுத்த முயல்பவர் ஆஸ்திகம் பேசும் நம் மக்கள்தான். இதற்குச் சான்றுகளை இங்கே நிறையவே படிக்கிறேன். ….
அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அடிப்படை (basics) தெரிந்தால்தான் எந்த நிகழ்வையும் (phenomenon) விளக்க முடியும். மண்ணின் அடிப்படை விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் தான், அந்த மண்ணிலிருந்து உருவாக்கப்படும் பொம்மை முதல், பாண்டம் வரை, கண்ணாடி முதல் சிலிகான் சிப் வரை அனைத்தையும் விளக்க முடியும். அது போல பரப் பிரம்மத்தின் இயல்பை அறிந்தால் தான் அதனிடமிருந்து தோன்றின இந்தப் பிரபஞ்சம் முதல், முக்தி வரை அறிய முடியும். அது இல்லாமல், மேலோட்டமாகக் கண்ணுக்குத் தெரியும் விஷயங்களிலிருந்து, உள்ளிருப்பதை பார்க்கும் நோக்கு சரியல்ல. எந்த ஆச்சர்ய புருஷரும் அத்தகைய methodology – யைக் கொள்ளவில்லை. அடிப்படையைப் பிடியுங்கள். இந்து மதம் என்னும் இந்த ஆதி தர்மம் – சனாதன தர்மம் என்ன சொல்கிறது என்று புரியும்.
Dear Brother Mr. Tamilvanam,
My e mail id is
thiruchchikkaaran@gmail.com
I have a webblog also, you can just click on my name and reach my blog as well.
Thank you brother, and look forward to receive your mail.
Best Regards,
Thiruchchikkaaran